வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!! (Post No.4683)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 7-17 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4683

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

ஷாக்கிங்! ஷாக்கிங்!!

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!!

 

ச.நாகராஜன்

 

1

நிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஆனால் ஷாக்கிங், ஷாக்கிங்! இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது!

ஆண்டாள் தமிழை ஆண்டாள்;

தமிழ் இதயங்களை ஆண்டாள்! உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.

போலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்!)

 

 

2

மனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.

ராங் டைடில்!

“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே!

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது!

என்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.

மனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று!

“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது…

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்

 

   _ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

 

அடடா, எவ்வளவு ‘இழிமொழி எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.

 

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து

அலகையா வைக்கப்படும்

 

ஆம் இவரை உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று!

சூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது!

 

 

3

இவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா! இல்லை என்று அல்லவா தோன்றுகிறது!!

இலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.

தமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது!

 

 

இவர் சேர்ந்த இடமே சரியில்லை.

போலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.

 

‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;

‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.

‘போதை முடிவுக்கு வந்து விட்டதா?

 

இப்போதைக்கு முடிவு தான்! (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்!)

இப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.

வேசி; தாசி! அடடா, என்ன தமிழ் அறிவு!

வேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர் தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

 

 

4

 

இல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை!

 

அதுவும் கிடைத்து விட்டது!

உலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.

காணாது.

 

 எட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.

ஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக!

இவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்! ஒரேயடியாக தமிழ் …. !!!!

 

 

5

அது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று!

(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா!)

 

ஐயகோ! கலியின் கொடுமையா? காலிகளின் சேர்க்கையா!

தினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே! தினமணிக்கு கிரகண காலம்!!

 

6

ஒரே ஒரு வழி தான்! இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று!

இவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பாருங்கள்!

“அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

என்று எழுதி இருக்கிறார் அல்லவா! (உலகம் கவிதை வரிகள்)

இப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று!

“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்

தரமும் தப்பு; தமிழும் தப்பு

 

 

7

குரைப்பது கடிக்காது!

தெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.

 

 

8

ஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்

    அன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு

நன்று செய்யாதார் நலிந்தே செத்தார்

    நாயகன் தோன்றுவான் யுகம் தோறும்!

 

இப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்

     போட்டாலும் பொட்டென வீ ழ்வார்

எப்போதைக்கும் வெல்வது அறம் தான்!

      ஆண்டாள் என்றுமே ஆள்வாள்!!

***

தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை! (Post No.3298)

18-05-1996_din_001_cty_mds

Written  by London Swaminathan

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 18-59

 

Post No.3298

 

Pictures are taken from various sources; thanks

 

திருடனுக்கு தேள் கொட்டினால் என்ன ஆகும்? சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. கூச்சல் போட முடியுமா? அப்படிப் போட்டால் ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போல, தேள் கொட்டிய கடுப்புடன், ஆட்கள் அடிக்கும் கடுப்பும் சேர்ந்து விடும்.

 

இதே போல பத்திரிக்கைகளில் தவறு நேர்ந்தால் சில விஷயங்களில் “திருத்தம்” என்று போடுவோம். இன்னும் சில விஷயங்களில் திருத்தம் போடாமலிருப்பதே மேல். அதாவது தேள் கொட்டிய திருடன் போல மௌனமாக இருந்து விடுவோம்.

நான் 16 ஆண்டுக்காலத்துக்கு மதுரை தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராகவும்(SENIOR SUB EDITOR)  5 ஆண்டுக் காலத்துக்கு மேல் பி பி சி தமிழோசையில் ப்ரொட்யூசராகவும் (PRODUCER,BBC WORLD SERVICE) வேலை பார்த்தபோது நிறைய சுவையான அனுபவங்கள் உண்டு. திடீர் திடீரென சில நினைவுகள் வரும்போதெல்லாம் அவைகளை எழுதுகிறேன். முன்னர் கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்,  A N சிவராமனின் லவ் லெட்டர் நோட்டு என்றெல்லாம் சில கட்டுரைகள் எழுதினேன். இந்த பிளாக்கில் நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள்

 

 

ஒரு முறை சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் என்பதற்குப் பதிலாக, கேஸ் காலி புரம்

 

என்று வெளியாகிவிட்டது. மறுநாள் எங்கள் சப் எடிட்டர்களில் ஒருவரே கண்டுபிடித்து செய்தி ஆசிரியர் வெ.சந் தானத்திடம் காட்டினார். பேசாமலிருப்பதே உத்தமம், திருத்தம் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

 

 

இன்னொரு தடவை இதைவிட மோசமான ஒரு தவறு நேர்ந்தது. குன்றக்குடி அடிகளார் என்பதற்குப் பதிலாக, குறக்குன்டி அடிகளார்

என்று அச்சாகிவிட்டது. அப்போதும் திருத்தம் வெளியிடக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. வெறும் இடமாறு தோற்றப் பிழைதான்! ஆயினும் அர்த்தம், அனர்த்தம் ஆகிவிட்டது.

 

 

பாதிக்கப்பட்டவர்களும் திருத்தம் வெளியிடச் சொல்லி ஆட்சேபணை கிளப்பவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில் இந்த செய்தியை இப்படித் திருத்தி வாசியுங்கள் என்று வெளியிட்டால், அது “எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்று நாமே காட்டிக் கொடுத்ததாகிவிடும் என்பது தெரியும். ஆயினும் இந்தச் செய்தி, அதன் புரூப் PROOF ஆகியன யார் கையில் எல்லாம் போயிற்றோ அவர்கள் எல்லாருக்கும் திட்டும் வசையும் கிடைக்கும். அப்போதுதான் அடுத்த முறையாவது சரியாக படி (புரூப்) திருத்துவர் என்பது தாத்பர்யம்!!

 

இதுதான் திருடனுக்கு தேள் கொட்டிய கதை!

 

MOBILE TEXTS மொபைல் டெக்ஸ்ட்

 

இதெல்லாம் ஏன் திடீரென்று நினைவுக்கு வந்தது என்றால், தினமும் மொபைல் போனில் TEXT டெக்ஸ்ட் அனுப்பும்போது நாம் ஒன்று அடிக்க அதுவாக ஏற்கனவே இருக்கும் சொற்களில் ஒன்றைப் போட்டுவிடுகிறது அவசரத்தில் சரி பார்க்காமல் SEND அனுப்பு என்ற பட்டனை சொடுக்கினால் அது பெரிய தலைவலியாக முடியும். இப்படி நானே சிலருக்கு டெக்ஸ்ட் அனுப்புகையில் மிகவும் அபத்தமான MESSAGE மெஸ்ஸேஜ் போனதுண்டு. பின்னர் VERY SORRY வெரி ஸாரி சொல்லி தப்பித்துக் கொண்டேன்.

 

ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஸ்டைல் புக் STYLE BOOK என்று ஒன்று உண்டு. அதாவது அந்தப் பத்திரிக்கையில் ஊர்ப் பெயரையோ ஆட்கள் பெயரையோ எழுதும் போது இந்தமாதிரி SPELLING ஸ்பெல்லிங்தான் இருக்க

வேண்டும். சில சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பர்.

 

முஸ்லீம்களின் ஒரு பிரிவினர் பெயரை அப்படியே எழுதினால் தமிழில் அபஸ்வரமாக இருக்கும் என்பதால் சன்னிSUNNY முஸ்லீம் என்று எழுதுவோம். இதற்கு இடக்கர் அடக்கல் (EUPHEMISM என்று தமிழில் பெயர். டாய்லெட் போய் வந்தோம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, நாம் “கால் கழுவி வந்தோம்” என்போம்.

 

பி.பி சி. தமிழோசையில் நான் மயிரிழையில் தப்பித்தார் என்று எழுதியபோது என் ‘பாஸ்’ BOSS சங்கர் அண்ணா, “தம்பி அடுத்த முறை எழுதும் போது நூலிழையில் தப்பினார்” என்று சொல்லுங்கள் என்று சொல்லிக்கொடுத்தார்.

 

மற்றொரு இலங்கைப் பெண்மணி, துப்பாக்கி என்பதற்குப் பதிலாக துவக்கு என்று சொல்லும் போதும் திருத்துவார். பாரிய, பாரதூரமான, அங்குரார்ப்பணம் என்ற சொற்களைப் பயன்படுத்துகையிலும் நல்ல தமிழ்ச் சொற்களைத் தருவார்.

 

இன்னும் பல சுவையான விஷயங்களை நினைவுக்கு வருகையில் தருகிறேன்.

 

-சுபம்–

 

 

தினமணியில் ‘’லவ் லெட்டெர்’’ நோட்டுப் புத்தகம்

old dinamani1

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1359; தேதி அக்டோபர் 20, 2014.

எல்லோருக்கும் காதல் கடித நோட்டுப் புத்தகம் என்றால் ஏதோ சுவையான, ருசியான செய்தியாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் தினமணிப் பத்திரிக்கையில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ‘’காதல் கடித நோட்டுப் புத்தகம்’’ — அதாவது லவ் லெட்டர் LOVE LETTER NOTE BOOK நோட்டுப் புத்தகம் என்றால், என் உள்பட எல்லா சப் எடிட்டர்களுக்கும் (SUB EDITORS) குலை பதறும்.

தமிழில் தினமணிப் (DINAMANI) பத்திரிக்கையை அறியாதோர் யாரும் இருக்க முடியாது. அதில் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் (ஏ.என்.எஸ் A.N.S) என்ற பெயரும் பலருக்கும் நினைவிருக்கும். அரைகுறைப் பாமரன், கணக்கன் என்ற பல புனைப் பெயர்களில் பல கட்டுரைகளை எழுதி அவை நூலாக வெளிவந்து நன்றாக விற்பனையும் ஆனது.

நான் மதுரை தினமணியில் சீனியர் சப் எடிட்டராக (Senior Sub Editor) வேலை பார்த்தபோது, அவர் அடிக்கடி மதுரைக்கு வருவார். வேட்டி கட்டிக் கொண்டு, ஒரு கதர் ஜிப்பா அல்லது அதுவும் இல்லாமல் வெறும் மேல் துண்டுடன் காரில் அலுவலகத்துக்கு வந்து விடுவார்.— அன்று வெளியான தினமணிப் பத்திரிக்கையை ஒரு நோட்டம் விடுவார்.–உடனே “டேய் ராமா அல்லது ராமச்சந்திரா” (வேலைக்காரர்கள்) என்று கூவி, அந்த “லவ் லெட்டர்” நோட்டை இப்படி கொண்டுவா’’ என்பார்.

நாங்கள் ஆறு அல்லது ஏழு சப் எடிட்டர்கள் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துக் கொள்வோம். உடனே எங்களுக்கு எல்லாம் ‘’டென்ஷன்’’ (Tension) ஏறி விடும். நாங்கள் மொழி பெயர்த்த செய்தியில் ஏதாவது தவறு இருக்கும் அல்லது அதை எழுதிய விஷயம் தெளிவில்லாமல் இரு பொருள்பட எழுதப்பட்டிருக்கும். இனி மேல் அப்படி செய்யக் கூடாது என்பதற்காக அந்த தவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு குறிப்பு எழுதுவார். அதோடு நிற்காமல் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து “டேய், இதை யாரடா எழுதினீர்கள்?” — என்று ஏக வசனத்தில் கேட்பார். அந்த ‘’சிப்டில்’’ (SHIFT) உள்ள சப் எடிட்டர் என்றால் அவர் சப்தம் போடத் துவங்குவார். சொல்லியதையே பலவித கோணங்களில் சொல்லத் துவங்குவார்.

old dinamani 3

எங்கள் சப் எடீட்டர்களைத் தாண்டி ‘’ப்ரூப் ரீடர்’’ (PROOF READERS) ஒரு பத்துப் பேர் எதிரும் புதிருமாக உடகார்ந்திருப்பர். அதற்கு நேராக இந்தப் பக்கம் டெலிப்ரிண்டர் (TELE PRINTER) அறை இருக்கும். இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு நடந்து போய்விட்டு மீண்டும் வந்து திட்டுவார். பிறகு இந்தப் பக்கம் போய்விட்டு வந்து திட்டுவார். இப்படி ஒரு மணி நேரம் நடக்கும்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட சப் எடிட்டர் தவிர மற்ற எல்லோரும் குனிந்த தலை நிமிராமல் — கல்யாணப் பெண் போல அமர்ந்து — வேலை செய்வோம். இதற்குள் உள்ளே ‘’கம்பாசிட்டர் ரூம்’’ (COMPOSITORS ROOM) முதலிய அறைளுக்கும் செய்தி பரவிவிடும். அவர்கள் எல்லோரும் —நாங்கள் எழுதியதில் சந்தேகம் கேட்க வருவது போல— வந்து எங்களை வேடிக்கை பார்த்துவிட்டுப் போவர்.

மாலை ஐந்து மணிக்கு எல்லா சப்பெடிட்டர்களும், வழக்கமாக தனலெட்சுமி பவன் வரை நடந்து சென்று இட்லி தோசை காப்பி சாப்பிட்டு வருவோம். அப்போதுதான் எல்லோருக்கும் உயிர் வரும். சிரிப்பும் வந்துவிடும். குற்றவாளிக் கூண்டில் அன்று நின்ற சப் எடிட்டர் — ‘’இன்று நான் யார் முகத்தில் விழித்தேனோ?” —என்று அங்கலாய்ப்பார். நாங்கள் எல்லோரும் “கவலைப் படாதே இன்று உன் முறை, நாளை எங்கள் முறை” என்போம். அதே போல மறு நாள் வேறு ஒரு சப் எடிட்டர் சிக்கிவிடுவார்.

049-dinamani-sivaraman

இதற்கு ஏன் ‘’லவ் லெட்டர் நோட்டுப் புத்தகம்’’ என்று பெயர் வைத்ததையும் ஏ.என்.எஸ்.ஸே எங்களிடம் கூறியிருக்கிறார். அவர் போத்தன் ஜோசப் என்ற பிரபல பத்திரிக்கையாளரிடம் வேலை பார்த்தவர். அவர் இப்படித்தான் லவ் லெட்டர்— அதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டும் நோட்டு— எழுதுவாராம். இப்படிச் சில மாதங்கள் ஓடும். பின்னர் அவர் தலைமையகத்துக்கு (சென்னைக்கு) சென்றுவிடுவார். எங்கள் எல்லோருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும். “அட, பள்ளிக்கூட நாளில்தான் ஆசிரியருக்குப் பயந்தோம் என்றால் — எருமை மாடு வயதாகிக் கல்யாணமும் ஆகி குழந்தையையும் பெற்ற பின்னர் இவரிடம் திட்டு வேறா?” என்று சிரித்து மகிழ்வோம்.

ஆனால் அவர் பத்திரிகைத் துறையில் ‘’பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’’. செய்தியின் ஆங்கில வடிவைப் பார்க்காமலேயே, ஆங்கிலத்தில் என்ன வந்திருக்கும்? அதை சப் எடிட்டர் எப்படி தவறுதலாகப் புரிந்து கொண்டார் என்பதை துல்லியமாக ஊகித்தறிவார்.

ஒரு சப் எடிட்டர் டேராடூன் (Dehradun) என்பதை டெஹ்ராடன் என்று எழுதிவிட்டார். ஏனெனில் ஆங்கிலத்தில் அப்படித்தான் ஸ்பெல்லிங் (Spelling) இருக்கும். இன்னொருவர், திமிங்கிலம் என்பதற்குப் பதிலாக வேல் மீன் என்று எழுதிவிட்டார். திமிங்கிலத்துக்கு ஆங்கிலத்தில் ‘’வேல்’’ (WHALE) என்று பெயர். ஆனால் அது மீன் வகைப் பிராணி அல்ல. இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் மாட்டிக் கொள்வோம்.

old dinamani1.jpg2

எங்கள் காலத்தில் எல்லா செய்திகளும் ஆங்கிலத்தில் வரும். தமிழில் மொழி பெயர்ப்பது, எடிட் (editing) செய்வது, பேஜ் போடுவது (Page Makeup) முதலியன எங்கள் பணிகள். இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று நான்தான் சீனியர். –உடனே அன்றைய தலைப்புச் செய்தி — ((ஆங்கிலத்தில் பேனர் Banner Item ஐட்டம் என்றும் நாங்கள் எட்டுக் காலம் Eight Column என்றும் சொல்லுவோம்)) – எழுதும் பணி என் தலையில் விழுந்தது. உலகையே உலுக்கும் செய்தி என் கையில் வந்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆகையால் வளைத்து வளைத்து எழுதினேன். மறு நாளைக்கு ஒரே பாராட்டு!!

என்னுடைய சீனியரில் ஒருவர் என் காதருகே வந்து, “சாமிநாதா, மிகவும் அழகாக எழுதினாய், நேரடியாகப் பார்ப்பது போல நல்ல வருணனை — ஆனால்……………” என்று இழுத்தார். வயிற்றின் அடியில் இருந்ததெல்லாம் வாய்க்கு வந்துவிடுவது போல வயிற்றை ஒரு கலக்கு கலக்கியது. “ராஜீவ் காந்தி வலம் வந்து — பின்னர் இந்திரா காந்திஜி அமர் ரஹோ என்று விண்ணைப் பிளக்கும் கோஷத்துக்கிடையே சிதைக்கு ………………………………. என்று எழுதி இருக்கிறாய். சுடுகாட்டில் மட்டும் வலம் வர மாட்டார்கள் – இடம் வருவார்கள் என்றார். எனக்குத் தூக்கிவாரி போட்டது. ஏனெனில் ஆங்கிலத்தில் இடம் வலம் என்று வித்தியாசம் இல்லாமல் சொல் இருக்கும். இதற்கெல்லாம் அனுபவம் தேவை.

‘’முன்னப் பின்ன செத்தால்தானே சுடுகாடு தெரியும்’’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்போதுதான் அந்தப் பழமொழியின் முழுத் தாக்கமும் எனக்குத் தெரிந்தது!!! நல்ல வேளையாக பெரிய ஆசிரியர் (ஏ.என்.எஸ்) சென்னையில் இருந்தார். நான் பிழைத்தேன்.

இதே வரிசையில் நான் எழுதிய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.என் அப்பாவிடம் கற்றது
2.என் அம்மாவிடம் கற்றது
3.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்

Contact swami_48@yahoo.com