ஒலி(Noise Pollution)  மாசால் ஏற்படும் கேடுகள்! (Post No.10,382)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,382

Date uploaded in London – –   27 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வந்தன.

17-11-2021 காலை ஒலிபரப்பான ஏழாவது உரை கீழே தரப்படுகிறது. 

ஒலி மாசால் ஏற்படும் கேடுகள்!

                     ச.நாகராஜன்

தேவையற்ற அளவுக்கு அதிகமான சத்தம் அனைத்துமே ஒலி மாசு (NOISE POLLUTION) எனப்படும். பொதுவாக இந்த அதிக ஒலி தொழிற்சாலைகள், மற்றும் சில குறிப்பிட்ட தொழிலகங்கள் ஆகியவற்றிலிருந்து வருகிறது. இது மட்டுமின்றி சாலைகளில் செல்லும் அதிக வாகனப் போக்குவரத்து, புகைவண்டி, விமானம், ஆகியவற்றிலிருந்தும் எழுகிறது. கட்டிடங்கள் கட்டும் இடங்களிலிலிருந்தும் அதிக ஒலி எழுகிறது.

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த ஒலி மாசு பெரும் கேடாக இருப்பதில் வியப்பில்லை. பொதுவாக டெசிபல் என்ற அளவீட்டின் மூலம் ஒலி அளக்கப்படுகிறது.  சாதாரணமாக ஒரு மனிதன் 0 டெசிபலிலிருந்து 140 டெசிபல் வரை ஒலியைக் கேட்கமுடியும். 120 முதல் 140 டெசிபல் அளவு வரை உள்ள சத்தம் காதுக்கு வலியைத் தருகிறது. ஒரு நூலகத்தில் அனுமதிக்கப்படும் ஒலி 35 டெசிபல; ஒரு பேருந்தோ அல்லது நகர்ப்புற புகைவண்டியோ தரும் ஒலி 85 டெசிபல்; கட்டிட வேலையில் எழுப்பப்படும் ஒலி 105 டெசிபல்! தூரம் செல்லச் செல்ல ஒலி குறைவதையும் நாம் உணர்கிறோம்.

80 டெசிபலுக்கு அதிகமாக தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தத்தைக் கேட்கும் போது முதலில் செவிப்பறை பாதிக்கப்படுகிறது. பின்னர் காது, கேட்கும் சக்தியை இழக்க நேரிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாகிறது. மனச்சோர்வும், தூக்கமின்மையையும் ஏற்பட்டு மன நிம்மதியை இழக்க நேரிடுகிறது. ஒருவருக்கொருவர் பேசுவது கூட இயலாத நிலை ஏற்படுகிறது. அதீதமான ஒலி இதயக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் அதிகம் உள்ள இடங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் மிகக் குறைந்த ஒலி அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது.

வீடுகளில் வானொலி, டி.வி. உள்ளிட்ட சாதனங்களை கூட ஒலிக் கட்டுப்பாட்டை அனுசரித்துக் கேட்கும் பழக்கமானது ஆரோக்கியத்தையும் அண்டை அயலாரின் பாராட்டையும் தரும்.

இந்த ஒலி பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும் பெரும் ஆபத்தாக அமைகிறது. சத்தத்தை வைத்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இவை அப்படிச் செய்ய முடியாமல் தவிக்கின்றன. அதிக ஒலியின் காரணமாகச் சில சமயம் உயிரையும் இழக்கின்றன. சங்க இலக்கியங்களில் அசுணம் என்ற பறவை அதிக ஒலியைக் கேட்டால் உடனே இறந்து விடும் என்பதையும் நான் இங்கு நினைவு கூரலாம். 

இது மட்டுமல்ல, கடலில் ஏற்படும் பெரும் இரைச்சலால் ஒலிகளின் மூலமாக தகவலைப் பரிமாறிக் கொள்ளும் திமிங்கிலங்கள், டால்பின்கள் பெரிதும் சங்கடத்திற்கு உள்ளாகின்றன. கடலில் செல்லும் கப்பல்கள் எழுப்பும் இரைச்சல், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலை (OIL and GAS INDUSTRY) எழுப்பும் இரைச்சல் ஆகியவற்றால் இவை, தனக்கு இரை தேட முடியாமலும் சந்ததிப் பெருக்கத்திற்கு தகுந்த துணையிடம் நாட முடியாமலும் தவிக்கும் நிலைமையை ஏற்படுத்துகிறது.

திசை தெரியாமல் தடுமாறும் திமிங்கிலங்கள் பெரிய கப்பல்களின் மீது மோதி உயிரை இழக்கின்றன. ஆகவே அதிகம் திமிங்கிலங்கள் உள்ள இடங்களில் மிக மெதுவாகச் செல்லுமாறு கப்பல்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

ஆகவே நீரிலும் நிலத்திலும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒலி மாசு பற்றிய சரியான புரிதலைக் கொண்டு அதைக் கட்டுப்படுத்துவோம்; ஆரோக்கியத்தையும் இயற்கை உயிரினங்களையும் காப்போம்!

***

 tags-  ஒலி ,Noise Pollution, திமிங்கிலங்கள்  ,   மாசு,           

திமிங்கிலம் பற்றிய புதிய வியப்பான செய்தி (Post No.7316)


WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 8 DECEMBER 2019

 Time in London – 10-05 AM

Post No. 7316

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

my articles in Dinamani Newspaper
subham

கடலிடம் கற்போம்! (Post No4587)

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 6-35 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4587

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை

கடலிடம் கற்போம்!

ச.நாகராஜன்

 

“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை! இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது!” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்

2017ஆம் ஆண்டு  முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த  நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.

அவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும்! (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி;  ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.

இந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்!

அடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ்  (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன.  பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி! வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே!

அடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது.  நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை  மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.

அடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).

போகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்! கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம்! ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

london swaminathan in Greece

கடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.

2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள்  தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு  பிடித்துள்ளனர்.

கடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது!

கடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.

சரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம் என்றார்.

க்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து  கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

உலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.

மக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.

 

****

 

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி  கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 12 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-43 am

 

 

Post No. 4484

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புறச் சூழல் பாதுகாப்பு பற்றி வருணன் வாயிலாகவும் ராமனின் வாய் மொழி மூலமும் கம்பன் சொல்லும் செய்திகள் சிந்திக்க வைப்பவை.

 

யுத்த காண்டத்தில், ‘வருணனை வழிவிட வேண்டிய படல’த்தில், இந்தச் செய்திகள் வருகின்றன.கடலில் திமிங்கிலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன.இது பற்றிக் கம்பனும் பேசுகிறான்.

பூமிக்கடியிலிருந்து வரக்கூடிட்ய மின்காந்தலைகள் (magnetic waves) அல்லது பல நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வரும் சிக்னல்கள் SONAR SIGNALS (சமிக்ஞை ஒலிகளே) திமிங்கிலங்களை வழிதவறச் செய்வதாகவும் அல்லது அவைகளைக் குழப்புவதாகவும் இந்த திமிங்கிலத் தற்கொலைகளுக்கு (Mass Suicide of Whales) விளக்கம் தரப்படுகிறது. தமிழ் நாட்டின் கடல் ஓரங்களிலும் இது நிகழ்வதுண்டு என்பது அவனது பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

ராமன் விட்ட அம்புகள்,மலை போன்ற உடல் உடைய பெரிய மீன்களைக் கரையில் வந்து விழச் செய்ததாக ஒரு பாடலில் கூறுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கம்ப ராமாயணத்தை இயற்றினான். ஆனால் உவமை கூறும் விஷயங்களும், இது போன்ற நிகழ்வுகளும் உண்மையில் நடந்தால்தான் எழுத முடியும்; அவ்வாறு எழுதுவதை பாமர மக்களும் ரசிக்க முடியும்.

கம்பன் தனது பாடல்களில் ஜேம்ஸ், மேரி என்ற சொற்களைப் பயன்படுத்தமுடியாது நியூயார்க்கில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உவமை சொல்ல முடியாது. அந்த காலத்தில் உள்ள விஷயங்களைத்தான் சொல்ல முடியும். அவ்வாறே அவன்,சம காலத்திய நிகழ்வுகளையும், உவமைகளையும் நம் முன் வைக்கிறான்.

 

முதலில் கடற்கரையில் திமிங்கிலம் ஒதுங்கிய செய்திகளைக் கண்போம்:

 

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்

ஓரிடத்து உயிர்தரித்து ஒதுங்ககிற்றில

நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்

பாரிடைக் குதித்தன  பதைக்கும் மெய்யன்

 

பொருள்:

பெரிய மலை போலப் பெருத்த மீன்களும், ஓரிடத்தில் உயிரைத் தாங்கி நிற்க முடியாமல் தீயில் வேகும் இந்தக் கடல் நீரைவிட நல்லதாகும் என்று தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆகின.

 

இன்னொரு பாடலில் ராமனை சேது எனப்படும் பாலம் கட்டச் சொல்கிறான் வருணன்; கடலைக் குடித்து வற்றச் செய்வது காலம் பிடிக்கக்கூடிய செயல் என்றும் சக்தியை விரயம் செய்யும் செயல் என்றும் சொல்லிவிட்டு  அப்படிக் கடலை வற்றச் செய்தால் எவ்வளவு உயினங்கள் அழிந்து போகும் என்றும் நினைவிவு படுத்துகின்றான். ஆக, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் உணர்வும்  அக்காலத்தில் இருந்தது.

கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்

ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்

எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிந்தின் எந்தாய்

செல்லுதி சேது ஏன்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்

 

பொருள்:

 

என் தந்தை போன்றவனே! வற்றாமல் நீர் இறுகிக்   கல்லைப் போல ஆனால் உயிரினங்கள் மாண்டுவிடும் ஆகையால் என் முதுகின் மீது சேது என்னும் அணையைக் கட்டி அதன் மீது செல்வாயாக. இதனால் நீண்ட காலம் நான் நிலைத்து நிற்பேன்.

 

 

இதைவிட ராமன் சொல்லும் காரணம் இன்னும் நன்றாக இருக்கிறது

நன்று இது புரிதும் அன்றே நளிர்கடல் பெருமை நம்மால்

இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்

குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச்

சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளிச் சென்றான்

–யுத்த காண்டம், கம்பராமாயணம்

பொருள்:

இராமன், ‘வருணன் கூறும் இது நல்லது, இதையே செய்வோம்’ என்றான். மேலும் பெரிய ஆழம் உடைய கடலின் பெருமை என்னால் நீக்கப்பட்டால் மற்ற நான்கு பூதங்களான நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவும் பெருமை நீங்கி எளிமைப் பட்டுவிடும். ஆகையால்  மலைப் பாறைகளை அடுக்கி பாலம் கட்டும் பணியை துவக்குங்கள் என்று சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்றான். இராமனின் அருளுடன் வருணனும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றான்.

பஞ்ச பூதங்களில் ஒன்றை நான் அவமானப்படுத்தினால், பின்னர் மற்ற நான்கு பூதங்களும் கெட்டுப்போக, பெருமை இழக்க நேரிடும் என்ற இராமனின் வாதம் பொருளுடைத்து; நாள் தோறும்கடலில் சேரும் குப்பைகள், அசுத்தங்கள் பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஜிகினா பொட்டு முதலியன கடல் மீன்கள் வயிற்றில் சேர்ந்து அவைகளுக்குச் சொல்லொணாத் துயரம் தரும் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. நமது வீட்டு சாக்கடைகளில் தூக்கிப் போடும் சிறிய பிளாஸ்டிக் பொட்டுகளும் பாட்டரிகளும் கடல் வரை சென்று உலகைப் பாதிக்கின்றன; கடலை விஷமாக்குகின்றன.

 

நானே இன்று கடலை வற்றச் செய்து அவமானப் படுத்தினால், சிறுமைப் படுத்தினால், அது கெட்ட முன்னுதாரணமாகி மற்ற நான்கு பூதங்களையும் பாதிக்கும் எனும் ராமனின் வாதம் கம்பன் கால அறிவியல் கூற்று என்று கண்டு வியப்படைகிறோம்.

 

இதைத் தனித்துப் பார்க்காமல், முந்தைய பாட்டுகளில் கம்பன் சொன்ன கடலில் நடக்கும் சுறாமீன் சண்டைகள் (Shark Fights), திமிங்கிலங்களைத் தின்னும் திமிங்கிலங்கள் (Killer Whales) பற்றிய விஷயங்களையும் இணைத்துப் பார்த்தால் சோழர்கால கடல்  இயல் விஞ்ஞா ம் பற்றி அறிய முடியும்; Killer Whale கில்லர் வேல் என்று அழைக்கப்படும் திமிங்கிலங்கள் மற்ற சிறியவகை திமிங்கிலம், டால்பீன் (Dolphins), சுறாமீன்கள் ஆகியவற்றைக் கொல்லும் காட்சிகளை இன்று நாம் இயற்கை பற்றிய டெலிவிஷன் (T V Documentaries on Nature)  நிகழ்ச்சிகளில் காண முடிகிறது; இதைக் கம்பனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாட்டில் கூறுவதால் கடலோர மக்கள் சொல்லும்  அன்றாடக்கதைகளில் இவை இடம்பெற்றதை நாம் அறிகிறோம்.

இதற்கெல்லாம் கம்பனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசன் காவியத்திலேயே சான்று இருக்கிறது. அவன் திமிங்கிலங்கள் மூச்சு விடுகையில் தண்ணீர் ஊற்று போல மேலே பீய்ச்சி அடிப்பதையே குறிப்பிட்டுப் பாடுகிறான்.

 

கில்லர் வேல் எனப்படும் திமிங்கிலங்கள் பற்றிய பாடலுடன் கட்டுரையை முடிப்போம்:

 

நிமிர்ந்த செஞ்சரம் நிறத்தொறும்படுதலும் நெய்த்தோர்

உமிழ்ந்து உலந்தன மரங்கள் உலப்பு இல உருவத்

துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து

திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் சிதறி

பொருள்:

செஞ்சரமான அம்புகள் பட்டு சுறாமீன்கள் குருதி கக்கி இறந்தன. இராமன் தொடுத்த அம்புகள் தொடர்ந்து ஊடுருவியதால் திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தன.

TAGS:– திமிங்கிலம், திமிங்கிலங்கள், கடல், புறச்சூழல், கரை ஒதுங்கல், கம்பன் அறிவியல்

 

–சுபம்–

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)

Research Article Written by London swaminathan

 

Date: 7 December 2016

 

Time uploaded in London: 9-50 am

 

Post No.3426

 

 

Pictures are taken by Tamil Conference Booklet.

 

contact; swami_48@yahoo.com

 

(English version of this research article is also posted)

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசனும் சங்கப் புலவர்களும் கடலில் வாழும் திமிங்கிலங்கள் பற்றி அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அவ்வப்பொழுது நாடு முழுதும் உள்ள கடற்கரைகளில் இறந்துபோன திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதையும், சில நேரங்களில் உயிருடன் கரை ஒதுங்கி தத்தளிப்பதையும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் நம் நாட்டுக் கரை ஓரமுள்ள கடற் பகுதியில் வந்து சென்ற விஷயங்களைக் காளிதாசன் பாடலும் காளிதாசன் புலவர் பாடல்களும் காட்டுகின்றன.

 

இப்போது அவை நம் நாட்டுக் கடற்பகுதிகளில் வசிப்பதில்லை. நம்மவர்கள் வேட்டையாடி அழித்திருக்கலாம் அல்லது கடல் வெப்ப நிலை மாற்றத்தால் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.

இதோ காளிதாசன் பாடல்:

 

காளிதாசன் கண்ட அற்புதக் காட்சி இது; திமிங்கிலங்கள் ஏராளமான மீன்களுடன் கூடிய தண்ணீரை உறிஞ்சி, மீன்களை வாயில் வைத்துக் கொண்டு, தலையிலுள்ள ஓட்டை வழியாக நீரைப் பாய்ச்சுவதைக் காளிதாசன் கண்டு மகிழ்ந்துள்ளான். இதை எல்லாம் விமானத்திலிருந்து இராமபிரான், சீதைக்குக் காட்டுவதாக கவி புனைந்துள்ளான் காளிதாசன்.

சசந்த்வமதாய நதீமுகாம்ப: சம்மீலயந்தோ விவ்ருதானனத்வாத்

அமீ சிரோபிஸ்திமய: சரங்ரைரூர்த்வம் விதன்வதி ஜலப்ரவாஹான்

ரகுவம்சம் 13-10

அமீ-இந்த, திமய: – திமிங்கிலங்கள்,  விவ்ருத் ஆனனத்வாத்- – திறந்த வாய்களை உடையதால், சமத்வம் – பிற கடல்வாழ் உயிரினங்களுடன் கூடிய, நதீமுகாம்ப:- ஆற்றின் முகத்வார நீரை,  ஆதாய- எடுத்து, சம்மீலயந்த: – வாய்களை மூடிக்கொள்கின்றன, சரங்க்ரை:- துளைகளுடன் கூடிய தலைகளின் வழியாக நீர்ப்பெருக்கை, ஊர்த்வம்- மேல் நோக்கி, விதன்வந்தி- விடுகின்றன.

(திமிங்கிலங்கள் உண்மையில் மூச்சுக் காற்றை வெளியேற்றவே கடலின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. அவை மேல் மட்டத்துக்கு வரும்போது வீசும் மூச்சுக் காற்று நீரில் குளிர்ந்து நீர்த்துளி ஆவதாலும், காற்றுடன் கடல் நீர் வீசுவதாலும் தண்ணீர் தெளித்தது போலாகிரறது. மேலும் திமிங்கிலங்களின் நீச்சலாலும் நீர்த்திவலைகள் வெளியே வரும். அதன் தலை ஓட்டையிலிருந்து வருவது மூச்சுக் காற்றுதான்; தண்ணீர் அல்ல என்பது விஞ்ஞான உண்மையாகும்)

தமிழ்க் கடலில் திமிங்கிலங்கள், Whales & Sperm Whale

Whales

இதோ சங்கப் புலவர்களின் திமிங்கிலப் பாடல்கள்:–

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக் கரை ஓரமாக திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் திமிங்கிலங்கள் தலையிலிருந்து உயரே பாய்ச்சும் நீரானது, காற்றினால் அடித்துவரப்பட்டு  மீனவர் குடிசைகள் மீது விழுந்ததாகத் தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். அது மட்டுமல்ல தலையில் அதிக எண்ணையுடன் வரும் SPERM WHALE ஸ்பேர்ம் வேல் – எனப்படும் திமிங்கிலம் பற்றியும் பாடுகின்றனர். இது தவிர சுறாமீன்கள் செய்யும் அட்டூழியங்கள், வலைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஆகியன பற்றியும் பாடியுள்ளனர். இப்பொழுது தமிழ்நாட்டின் கரை ஓரங்களில் திமிங்கிலங்களைக் காணமுடியாது. எப்போதாவது வழி தவறி, திசை மாறி அடித்துவரப்படும் திமிங்கிலங்களை மட்டுமே பார்க்கலாம்.

 

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;

திருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்

பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி

போர் அமை கதவப் புரைதொறும் தூவ,

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப்

…………………

நற்றிணைப் பாடல் 132

 

பெரிய ஊர் உறங்கும் வேளை; தூங்காதவர் யாரும் இல்லை; பெரிய வாயுடைய திமிங்கிலம் தண்ணீரைப் பாய்ச்சும். குளிர்ந்த காற்று ஒய்- என்ற ஒலியுடன் வீசும்;  அந்தக் காற்றில் திமிங்கிலத் தலையிருந்து பொங்கும் நீர் அடித்து வரப்படும். கடலோரமாகவுள்ள மீனவர் வீடுகளில் அது மழைபோலப் பெய்யும்; இரட்டைகதவுகளின் துவாரம் வழியாக அது வீட்டுக்குள்ளேயும் தெரிக்கும்.

Sperm whale

கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் 291-ல் எண்ணைத் தலையுடைய SPERM WHALE ஸ்பெர்ம் வேல் பற்றிப் பாடுகிறார்:-

 

நீர்பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்

நெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு

குப்பை வெண்மணல் ஏறி, அரைசர்

ஒண்படைத் தொஉகுதியின் இலங்கித் தோன்றும்

தண் பெரும் பௌவ நீர்த்துறைவற்கு

……………….

 

இது ஒரு கடற்கரைக் காட்சி; எண்ணைச் சத்தை அதிகமாகக் கொண்ட தலையையுடைய ஒரு திமிங்கிலம்  வழிதவறிப்போய் கடற்கரையோர சேற்றில் சிக்கிக் கொண்டது. அதைச் சாப்பிட பெரிய கொக்குக் கூட்டம் வெண்மணலில் குவிந்துவிட்டன. அது எப்படி இருக்கிறது என்றால் ஒரு அரசரின் படை போல உள்ளது.

 

நற்றிணைப் பாடல் 175-ல் மீன் எண்ணை பற்றிய குறிப்பு வருகிறது. மீன் பிடித்து வந்த பரதவர் (மீனவர்), மீன்களைக் கடற்கரையில் குவித்துவிட்டு பெரிய கிளிஞ்சல்களில் மீன் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுவர் என்று ஒரு புலவர் பாடி இருக்கிறார். இது சுறா போன்ற எண்ணைச் சத்துடைய மீன்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையாக இருக்கலாம். இதுதான் மீனவர்களின் எரிபொருள்.

Sperm Whale

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்

கொழுமீன் கொள்ளை அழி மணல் குவைஇ

மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும்……………

 

கம்பனும் கூட திமிங்கில எலும்புக்கூடு பற்றி ஒரு பாடலில் கூறுகிறான்

அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப்

பண்டு வெந்தென நெடும் பசை வறந்திடினும் வான்

மன்டலம் தொடுவது அம் மலையின் மேல் மலை எனக்

கண்டனன்  துந்துபி கடல்  அனான் உடல் அரோ

 

தென்புலக் கிழவன்  ஊர் மயிடமோ திசையின் வாழ்

வன்பு உலக்கரி மடிந்தது கொலோ மகரமீன்

என்பு உலப்புற உலர்ந்தது கொலோ இது எனா

அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் என அவன்

 

துந்துபிப் படலம் , கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

மிகுந்த ரத்தம் வற்றிப் போயிருந்தாலும், ஊழித்தீயில் வெந்தது போன்றும் வான மண்டலத்தைத் தொடுவது போன்றும், கடல் போலப் பரவிக் கிடக்கும் துந்துபி என்னும் அசுரனின் உடல் எலும்புக் குவியலை, ருசியமுக மலையில் கண்டான்; அது வேறு ஒரு மலைபோலக் காணப்பட்டது.

 

அதைப் பார்த்த ராமன் சொன்னான்:- இது என்ன தென் திக்கில் பயணம் செய்யும் எமதர்மனின் வாகனமான எருமைக் கடாவா? திக்குகள் தோறும் உள்ள யானைகள் இறந்து கல்லானதோ! மகரம் என்னும் பெரிய  மீன் இறந்தபின்னர் உலர்ந்து கிடக்கும் எலும்புக்கூடா? என்று வியந்து சுக்ரீவனை நோக்கி உனக்குத் தெரிந்ததைச் சொல் என்றான்.

Whale Bone

உடனே துந்துபி என்னும் அரக்கனை வாலி கொன்ற வரலாற்றைச் சுக்ரீவன் சொன்னான்.

இங்கு வருணிக்கப்படும் மகர மீன் சுறாமீன் அல்ல; பெரிய திமிங்கிலமாகும். மகர என்ற சொல்லை டால்பின், சுறாமீன், திமிங்கிலம் ஆகிய எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவர்.

 

—subham–