‘திராவிடர்கள்’ பிராமணர்களா ? கேள்வி -பதில் (Post No.10,542)

pictures are only representative; not related to the article below 
pictures are only representative; not related to the article below 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,542

Date uploaded in London – –    8 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Q & A ON ‘DRAVIDAS’ IN INSCRIPTION; ARE THEY BRAHMINS?

எனது பெயர் XYZ, நான் கன்னியாகுமரி மாவட்டம்… 

தமிழர் என்ற அடையாளம் இருக்க திராவிடர் என்ற வேற்று மொழிச் சொல்லின் அடையாளம் நமக்கு எதற்கு என்று தேடத் துவங்கியதில் முக்கியமாக உங்கள் பதிவு கிடைத்தது .. மட்டற்ற மகிழ்ச்சி!! 

திராவிடர் என்பவர்கள் பிராமணர்கள் என்பது தெளிவாகிறது! 

ஆனால், 

8ம் நூற்றாண்டு சஞ்சன் பட்டையம் சேரன்,சோழன்,பண்டிய மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிடுகிறது என்ற வாதம் வருகிறது!! 

அப்படி என்றால் நம் மன்னர்கள் பிராமணர்களா ? 

உங்கள் பதிலை ஆவலோடு காத்திருக்கிறேன்! 

நன்றி 

XXXXXXXX

கைபேசி : YYYYYYYYYYYYY

REPLY FROM LONDON SWAMINATHAN  , 5TH JANUARY 2022, LONDON, U.K.

அன்புடையீர் ,

கட்டுரைகளைப்   படித்தமைக்கு நன்றி.

திராவிட என்பது ‘தெற்கு’ என்று பொருள்படும்.

எங்கெங்கு எல்லாம் திராவிட என்று வருகிறதோ அங்கங்கு எல்லாம்  ‘தெற்கு’  என்று போட்டுப் பாருங்கள்  பொருள் மாறாது..

குமாரில பட்டர் என்பவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரும் திராவிட பாஷைகள் என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு, தமிழ்ச்  சொல்லான ‘சோறு’ என்பதை எடுத்துக் காட்டாகத் தருகிறார்.

2130 ஆண்டுகளுக்கு முன்னர் காரவேலன் என்ற கலிங்க மன்னன் வெளியிட்ட ஹத்தி கும்பா கல்வெட்டிலும் ‘த்ரமிள சங்கடன்’ – என்கிறான். ‘தமிழ்க் கூட்டணி’  அல்லது ‘திராவிட கூட்டணி’ என்று பொருள்படும்.

தமிழ்- த்ரமிள- ஆகி – த்ரவிட ஆனது என்பது ஒரு சாரார் வாதம்.

இல்லை , இல்லை தமிழ் என்பதே திராவிட- த்ரமிள- என்ற சொல்லில் இருந்து வந்தது என்பது இன்னொரு சாரார் வாதம். இவை எல்லாம் மிகவும் பிற்பட்ட சொற் பிரயோகம் .

எட்டாம் நூற்ராண்டு முதல்தான், திராவிட என்ற சொல்லைக் காண்கிறோம்.

நான் சொல்ல வந்தது வெள்ளைக்காரர்களும் , பிஷப் கால்டுவெல்களும்  கதைப்பது போல, இது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. பஞ்ச திராவிடர் என்று பிராமணர்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வட இந்தியாவைச் சேராத பிராமணர்கள். அங்கும் தெற்கு என்ற பொருளே பிரதானம்.

சுருங்கச் சொல்லின் ‘திராவிட’ என்றால் ‘தென்பகுதி’.

அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை பல கட்சிகள் வைத்திருப்பது வியப்பான விஷயம்.

திராவிட வேதம் (திவ்யப் பிரபந்தம்), திராவிடாசார்யா என்ற பெயர்களையும் ஒப்பிடுக.

இதையெல்லாம் விட, மிக விந்தையான விஷயம்– திராவிடம் என்பது தமிழ் நாடு அல்ல. 56 தேசங்களில் சேர, சோழ , பாண்டிய நாடுகளை எல்லாம் சொல்லிவிட்டு அதற்கு வெளியே திராவிடத்தைக் காட்டி இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் கல்வெட்டிலும் தென் பகுதி என்று வாசியுங்கள்; அதற்குள் சேர சோழ பாண்டிய  நாடுகள் வந்து விடும் .

சுருங்கச் சொல்லின் திராவிட என்பது இனப் பெயர் அல்ல. “தெற்கு” என்பதே பொருள்.

DRAVIDA= SOUTH INDIA

இதே போல பாரதியார் பாடல் முழுதும் வரும் ‘ஆரிய’ (ARYA IN BHARATIYAR POEMS) என்பது இனப்பெயர் அல்ல. வடக்கிலுள்ள ‘படித்தவர்’, ‘நாகரீகமானவர்’, ‘பண்பாளர்’ (EDUCATED, CIVILIZED PEOPLE OF NORTH INDIA) என்பதே பொருள். புறநானூற்றிலும் வடக்கு வாழ் முனிவர்கள், மன்னர்களுக்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது . “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” என்றால் “வடக்கிலிருந்து படையெடுத்தவர்ளை” வென்றவன் என்பதே பொருள். ஆரிய மன்னர்களான  கனக விஜயன் தலையில் கல்லை ஏற்றி சுமந்து வரச்  சொன்னான் சேரன் செங்குட்டுவன் என்றால், அவர்கள் “வடக்கில் வாழ்ந்த” குறு நில மன்னர்கள் என்பதே பொருள்.

ARYA= NORTH INDIA (GEOGRAPHICAL AND NOT RACIAL)

‘திராவிட’ என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்குமே இல்லை. ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் சங்கத் தமிழ் காலத்திலேயே வழக்கில் உள்ளது.

நன்றி

Swami/ London swaminathan

XXXXXX

ஐயா, மன்னிக்கவும் , நான் குறிப்பிட்ட அந்த தகடு ஆதாரம் கிடைத்து விட்டது அதில் நான் சொல்வது போல் இல்லை !!

திராவிள என குறிப்பிட்டிருப்பது வேறு மன்னர்களை தான் ..

முகநூலில் ஒருவருடன் விவாதம் செய்யும் போது அவர் குறிப்பிட்டவை இது!!  சோழர்களை தான் பிற நாட்டில் உள்ளவர்கள் திராவிட என அழைத்தார்கள் என்று வாதிட்டார் !! அதற்கு சான்றாக இந்த தகடை காட்டினார்!! அவர் ஆயுதமே போலி (அட்டை கத்தி) 

உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ❤️

பின் நாட்களில் ஏதாவது சந்தேகங்கள் வந்தால் தொடர்பு கொள்கிறேன் …

 -ரெXXXXXXX

XXXXX

தமிழ் மன்னர்களை வேற்று மொழியின் குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டுகள் சான்றுகள் ஏதாவது உள்ளதா ? 

சோழ மன்னர்கள் , பாண்டிய மன்னர்கள் அல்லது தமிழ் மன்னர்கள் ? இப்படி ஏதாவது குறிப்புகள் காணக்கிடைக்கிறதா ? 

தமிழகத்திற்கு வெளியே ‌..

நன்றி

 RXXXXXXXXX

XXXXX

YES. THERE ARE INSCRIPTIONS OUTSIDE TAMIL NADU.

EARLIEST INSCRIPTIONAL EVIDENCE IS FROM ASOKA.

PERIOD OF EMPEROR ASOKA (304 TO 232 BCE)

HE DID NOT NAME THE KINGS BUT MENTIONED 

CODA, PANDIYA, SATIYAPUTO AND KELALAPUTO AS NEIGHBOURS TO HIS KINGDOM IN ROCK EDICT II

(CODA= CHOLZA; SATHYAPUTO= ATHIYAMAN; KELALAPUTO= CERALA = CHERAS)

AND AGAIN ,IN HIS EDICT XIII, ASOKA SAYS

CODA, PANDIYA AND AS FAR AS TAMBAPANNI, DHARMA IS SPREAD

(CHOZA, PANDYA AND TAMBRA PARANI;

BUT TAMBAPANNI IS SRI LANKA ACCORDING TO SOME SCHOLARS)

NEXT COMES FROM ORISSA……

KALINGA KING KHARAVELA  (170 BCE) SAYS

I  RECEIVED PEARLS AND ELEPHANTS FROM PANDYA KING THROUGH ELEPHANT SHIPS.

swami

XXXX

ஐயா,

இதற்கான சான்றுகள் உள்ளனவா ?

நன்றி

RXXXXXXXXXXXX

XXXXX

YES. THERE IS AMPLE EVIDENCE.

ALL INFORMATION GIVEN ABOVE IS FROM RECORDED INSCRIPTIONS.

YOU HAVE TO GO TO BIG LIBRARY OR ARCHEOLOGICAL LIBRARY TO GET THEM.

HERE IN LONDON, I GET EVERYTHING FROM BRITISH LIBRARY AND LONDON UNIVERSITY LIBRARY. I WILL PHOTOCOPY THEM AND POST IT WHEN I GO TO LIBRARY NEXT TIME.

SWAMI (London swaminathan) 7th January 2022

xxxxx

tags  திராவிடர்கள்,  பிராமணர்களா ? , Dravidians, Brahmins 

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’

indra_main_2754_1_1

திராவிடர் கொலை வழக்கு

திராவிடர்கள் யார்?

brahmins 2

எழுதியவர்: சந்தானம் (லண்டன்) சுவாமிநாதன்

(இதுவரை எனது பிளாக்குகளுக்கு வருவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டிவிட்டது. நாள் தோறும் 1200 ‘’ஹிட்ஸ்’’ வருகின்றன. உங்கள் ஆதரவுக்கு நன்றி).

‘’ அன்பென்று கொட்டு முரசே — மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு

யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’ (பாரதி)

‘’யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘’ (உறவினர்) என்ற கொள்கையை உடையவன் நான். ஆயினும் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’(?!?!), உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன். ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்தபின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!

திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!

Rahul_Dravid

கிரிக்கெட் ஆடும் திராவிடன்

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஹுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது? ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்!.

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்!  அது சரியல்ல. உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

veda[atasala

திராவிடாசாரியா

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.:

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு  சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ:

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் ”மதறாசி” ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.

3_veddahs

Picture of Veddahs (classified as Dravidas)

தமிழ் நாடு — திராவிடம் அல்ல!!!!!

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!!

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்.

irula_snake_catching_thehindu_6-9-2009

Picture of Irulas (classified as Dravidas)

வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ மேலும் பல வியப்பான விஷயங்களைச் சொல்லி குழப்பத்தை உண்டக்கிப் ,பிளவை உண்டாக்கப் பார்க்கின்றனர். தமிழன் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்தவன். அவனுடைய மொழிக்கும் துருக்கிய மொழிக்கும், பின்லாந்துகாரர் மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதிக்கின்றனர். ஒருபக்கம் சிந்து வெளியில் இருந்து ஆரியர்கள் அடிக்குப் பயந்து ஓடிவந்தவன் என்றும் மறுபக்கம் எங்கோ உள்ள பின்லாந்துகாரனுடன் உறவு கொண்டவன் என்றும் சொல்லிக் குழப்புகின்றனர். தமிழர்களோ,  ”நாங்கள் குமரிக்கண்டவாசிகள்” — என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசிவருகின்றனர். இவை சரியில்லை என்பதையும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையேதான் நெருங்கிய தொடர்பு என்றும் என்னுடைய 575 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். சில கட்டுரைகளின் பெயர்களை மட்டும் கீழே காண்க:

விரிவஞ்சி இப்போதைக்கு இத்தோடு முடிக்கிறேன்.

சந்தானம் சுவாமிநாதனின் முந்தைய கட்டுரைகள்:

1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு

11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature

21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 550 கட்டுரைகள்.

Pictures are taken from various websites;thanks.

swami_48@yahoo.com