தள்ளாடும் தமிழகம்! (Post No.10,008)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,008

Date uploaded in London –  23 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தள்ளாடும் தமிழகம்!

ச.நாகராஜன்

1  

தமிழகமே தள்ளாடுகிறது! ஆம், ஏராளமான ‘குடி மகன்களால்’ அது தள்ளாட்டம் போடுகிறது. சிந்திக்கும் திறனின்றி குடி நிறையப் பேரை ஆட்டிப் படைப்பதனால் அது தள்ளாடுவதில் வியப்பே இல்லை. தந்தையை விஞ்சிய விதத்தில் செயல்படும் மகனைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் “சாதனைகளில்” எதை முதல் சாதனையாக் முன் நிறுத்துவது என்பதில் அறிஞர் பெருமக்களுக்குள் ஒரே குழப்பம் என்பது உண்மை தான்! அத்துணை “சாதனைகள்!”

தாய்க்குலத்தோர் தவிக்க சம்பாதித்த அனைத்தையும் இழந்து தடுமாறும் எண்ணற்ற “குடி மகன்களுக்க்காக” இறைவனை பிரார்த்திப்போமாக!

போதையிலிருந்து விடுபட்டால் பாதை தடுமாறிய இவர்கள் வேதனை நீங்கி நல்வழிக்கு வரட்டும்!

2

அடுத்த சாதனை ஒவ்வொரு தமிழனையும் “கடன்காரனாக்கிய” சாதனை இன்னும் பெரிதோ?! தந்தை இலவச டிவியை வழங்கி அதன் மூலம் அதைப் பார்ப்பதற்கான விண்வழி இணைப்புகளுக்கு காசு வாங்கித் தன் குடும்பத்தைச் செழிக்க வைத்த உத்தி “சிறப்பானது” தான்!

இன்று ஒவ்வொருவனும் கடன்காரனாகித் தவிக்கும் நிலையை டபிள் வாட்ச் காரர் வெள்ளையறிக்கை மூலம் சுட்டிக் காட்டி சாதனை படைக்க உடனே ஒரு நல்ல தமிழர், ‘அய்யா நகைக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, விவசாயக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதால் வரும் தொகை இவ்வளவு, பஸ் இலவசப் பயணத்தால் வரும் தொகை இவ்வளவு’ என்று ஒரு நீண்ட கணக்கை விரைவாகப் போட்டு வெள்ளை போர்டில் அனைத்தையும் கூட்டி “அடடே! இது கடன் தொகையை விட அதிகமாகி விட்டதே! எங்களுக்கு இவ்வளவும் வேண்டாம், நீங்களே வைத்துக் கொண்டு கடன் தீர்ந்து விட்டது என்று பத்திரம் தந்து விடுங்கள் என்று பத்திரமாகச் சொல்லி விட்டார்.

இப்படிப்பட்ட புத்திசாலிகள் வேண்டாம் என்று தானே முதலில் சொன்னது போல குடிகாரக் கடைகளைத் திறந்து வைத்தோம், இவன் ஏன் அங்கு போகவில்லை என்று அவர்(கள்) கோபப்பட்டால் அதில் நியாயமே இல்லை!

3

அடுத்து ஒன்றியக் குழப்பத்தை திமுக முன் வைக்க, மத்திய வார்த்தையில் நிலையாக இருக்கும் நண்பர் “Take your seat” என்றால் நாற்காலியைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது அர்த்தம் இல்லை, நண்பரே. உட்காருவது தான் என்று சொல்ல, ஆங்கிலம் தெரியாத நிலையைக் கொண்ட அனைவரையும் மக்கள் இனம் காண முடிந்தது.

4

இரு வாரங்களுக்கு ஒரு குழப்பம் வைத்தால் தங்களின் மொத்த (505) வாக்குறுதியையும் மறந்து ஐந்து ஐம்பத்திரண்டு வாரங்களையும் கடந்து விடலாம் என்ற நிலையில் அடுத்ததாக கடவுள் மேலேயே கையை வைக்கும் விதமாக அர்ச்சனைக் குழப்பம்!

இதில் அறிஞர்களும் நல்லோரும் ஆவேசமாய்ப் பல கேள்விகளை வைத்துள்ளனர்.

இறைவனோ அல்லது பக்தர்களோ இதைக் கேட்டார்களா?

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற ஈவெராவின் சிலை முன்னே அர்ச்சகர் ஆணை கிடைத்தவர்கள் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டதிலிருந்தே இவர்கள் நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்களே தவிர நாவார தேவாரம் பாடும் கோஷ்டி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து விட்டனர்.

இவர்களுக்கு ஆகம சிலபஸை யார் தந்தது? யார் தேர்வு வைத்தது? எவர் திருத்தினர்? எப்படி சர்டிபிகேட் வழங்கப்பட்டது? கேள்விகள் கணைகளாக வருகின்றன!

பிராமண – பிராமணர் அல்லாதவருக்கு இடையே ஒரு சண்டையையும் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சியும் கேள்விகளால் துவண்டு விட்டது.

40000 கோவில்களில் ஐந்து சதவிகிதமோ அல்லது அதிக பட்சமாக பத்து சதவிகிதமோ தான் பிராமண அர்ச்சகர்கள்! ஆகவே இதர கோவில்களில் ஆங்காங்கு உள்ள சம்பிரதாயப்படி பிராமணர் அல்லாதாரே முறைப்படி வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்தக் கோராத தமிழக அரசு, சர்ச்சுகளில் (AMEN) ஆமெனைக் கூட தமிழில் சொல்ல வேண்டுமென்று சொல்ல முன் வராத தமிழக அரசு ஹிந்துக் கோவில்களை மட்டும் குறி பார்த்து வழிபாடுகளை பக்தர்களின் இஷ்டப்படி நடத்த விடாமல் செய்ய ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்வது ஹிந்து மதத்திற்கே ஆபத்தானது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் கடவுள் நம்பிக்கை இல்லாத அர்ச்சகர்கள் கோவிலில் நுழைவது ஏன், இதற்குப் பின்னர் உள்ள சதித்திட்டம் என்ன என்று கேட்கின்றனர்.

40000 ஏக்கர் கோவில் நிலம் பறி போயிருக்கிறது. அங்கு பல்வேறு கட்டிடங்கள் எழுந்துள்ளன.

சில ஏக்கர் நிலங்களை மீட்டு விட்டோம் என்று கூறும் தமிழக அரசு அது யார்  வசம் இது வரை இருந்தது, ஏன், எப்படி இருந்தது என்று தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோருகின்றனர். இதுவரை நஷ்டத்தை ஏற்படுத்திய அவர்களிடமிருந்து கோவிலுக்குச் சேர வேண்டிய தொகை வசூலிக்கப்பட்டதா என்றும் கேட்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பானதும் முதலாவதுமான ஒரு விஷயம் இருக்கிறது.

இப்படிப்பட்ட அரசு ஆணை சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிரானது என்பது தான்!

இது contempt of the court ஆகுமா? அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று சுப்ரம்ண்யம் சுவாமி போன்ற மூத்த அறிவாளிகள் கூறுகின்றனர்.

ஆக நீதிக்குப் புறம்பானது, தர்மத்திற்குப் புறம்பானது, பழக்க வழக்க சம்பிரதாயங்களுக்குப் புறம்பானது, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தக் கூடியது, கோவில் சொத்துக்களுக்கும் நிலங்களுக்கும் நகை, சிலைகள் உள்ளனவற்றிற்கும் ஆபத்தை விளைவிப்பது, தாங்கள் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி மக்கள் தங்களைப் பல கேள்விகள் கேட்காமல் திசி திருப்புவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தச் சட்டம் தவறானதாகும்! இது தனது அதர்மச் சுமையால் சுமை அழுத்தம் தாங்காது தானே விழுந்து விடும்!

It will fall on its own deadweight!

இறுதியாக திருமூலரின் எச்சரிக்கை ஒன்றையும் கூறி இந்தக் கட்டுரையை  முடிக்கலாம்:-

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னவர்க்குத் தீங்குள வாரி வளம் குன்றும்

கன்னங் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுதுரைத் தானே (திருமந்திரம் இரண்டாம் தந்திரம் – திருக்கோயிலிழிவு அதிகாரத்தில் -பாடல் எண் 518)

***

INDEX

திமுக ஆட்சி, குடித்தல் அதிகரிப்பு, கடன் சுமையும் இலவசங்களும் அதிகரிப்பு, ஒன்றியம் உள்ளிட்ட வார்த்தைக் குழப்பம், வழிபாடு மாறுதல்கள், அறிஞர்களின் ஆதங்கமும், கேள்விகளும்,

திருமூலர் திருமந்திரத்தில் எச்சரிக்கை

LIQUOR SHOP Q

TAGS- திருமூலர் ,எச்சரிக்கை, திமுக ஆட்சி ,தள்ளாடும் ,தமிழகம்,

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?(Post No.8729)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8729

Date uploaded in London – – 24 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.

21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் திருமூலர் யோகம் மற்றும் பதஞ்சலி முனிவர் யோகம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இப்போது நம் முன் இருக்கும் கேள்வி : யோகம் பற்றிய கேள்வி.

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

சுருக்கமான பதில், ஆம் ஒன்றே தான், ஆனால் அதில் சிறிய வேறுபாடும் உண்டு.

திருமூலர் பற்றி நாம் நன்கு அறிவோம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர்.

திருமந்திரம் என்ற நூலை உலகிற்குத் தந்தவர். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அருளியவர் அவர்.

ஒன்பது தந்திரங்களைக் கொண்ட நூல் திருமந்திரம்.

இதில் மூன்றாவது தந்திரத்தில் யோகம் பற்றிக் காணலாம்.

யோகம் என்ற சொல் மனதையும் ஆன்மாவையும் இணைப்பது என்ற பொருளைத் தருகிறது.

யோகத்திற்கு எட்டு உறுப்புகள் உண்டு. ஆகவே இதை அட்டாங்க யோகம் என்று கூறுகிறோம்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவதுமாமே (திருமந்திரம்)

என்று இந்த எட்டு உறுப்புகளைத் திருமூலர் விளக்குகிறார்.

பதஞ்சலி மாமுனிவர் யோக சூத்ரம் என்ற யோக நூலை உலகிற்கு அருளியவர்.

இதில் 194 சூத்திரங்கள் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரை அளித்துள்ளார். உலகம் முழுவதும் யோகா பிரபலமாக ஸ்வாமி விவேகானந்தர் முக்கிய காரணமாக அமைந்தார். தியாஸபிகல் சொஸைடியும் யோகாவில் ஆர்வம் காட்டியது.

யோக சூத்ரம் நான்கு பாகங்களைக் கொண்டது. சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் என்ற நான்கு பாதங்களில் சமாதி பாதத்தில் 51 சூத்திரங்களும் சாதனா பாதத்தில் 54 சூத்திரங்களும், விபூதி பாதத்தில் 56 சூத்திரங்களும் கைவல்ய பாதத்தில் 33 சூத்திரங்களும் உள்ளன.

அத யோகானுசாஸனம் என யோக சூத்ரம் ஆரம்பிக்கிறது.

Yogashchittavrittinirodhah -யோக சித்த விருத்தி நிரோத:

Yoga is restraining the mind-stuff (Chitta) from taking various forms (Vrttis)

யோகம் என்பது மனதை சித்த விருத்திகளிலிருந்து அடக்குவது தான்

என்பதை அடுத்த சூத்திரத்தில் இப்படிக் கூறி அருள்கிறார் பதஞ்சலி மாமுனிவர்.

இயமம் பற்றி பதஞ்சலி முனிவர் கூறும் போது கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, வெஃகாமை, புலன் அடக்கம் என்ற ஐந்தைக் கூறும் போது திருமூலரோ நடுநிலைமை, பகுத்துண்ணல், மாசற்ற தன்மை, கள் உண்ணாமை, காமம் இன்மை ஆகிய ஐந்தையும் சேர்த்து பத்து இயமங்களைச் சொல்கிறார்.

ஆசனங்கள் பற்றி பதஞ்சலி முனிவர் குறிப்பாகச் சொல்கிறார்.

ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.

வியாதி, யோகத்தில் வன்மை இன்மை,

இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு,

அலட்சியம், வைராக்கியம் இல்லாமை, திரிபுணர்ச்சி

சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல், கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பதஞ்சலி கூறுகிறார்.

திருமூலரோ 134 ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருமந்திரத்தில் 563வது பாடலாக மலர்வது இந்தப் பாடல்:

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்

உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.

அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள்

இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.

எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126.

இந்த 126 ஆசனங்கள் யாவை?

  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  1. சவாசனம்
  2. மச்சேந்திர சித்தாசனம்
  3. சித்தாசனம்
  4. வச்சிராசனம்
  5. பதுமாசனம்
  6. மச்சேந்திர பதுமாசனம்
  7. முக்த பதுமாசனம்
  8. சிம்மாசனம்
  9. பத்திராசனம்
  • வல்லரியாசனம், இப்படிப் போகிறது பெரும் பட்டியல்.

ஆக, மொத்த ஆசனங்கள் நூற்றி இருபத்தாறையும் எட்டையும் கூட்டினால் வருவது 134.

கேசரி ஆசனம் என்றால் வானத்தில் பறப்பது. இப்படி அபூர்வமான ஆசனங்களைச் செய்வதன் மூலம் சித்திகள் பல கிடைக்கின்றன.

யோகத்தின் பயன்களாக சித்திகளை பதஞ்சலியும் விளக்குகிறார். திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் அஷ்டாங்க யோகத்துடன் அட்டமா சித்திகளையும் விளக்குகிறார்.

அணு மாதி சித்திகளானவை கூறில்

அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை

இணுகாத வேகார் பரகாய மேவல்

அணுமைத் தனையெங்குந் தானாத லென்றெட்டே (பாடல் 668)

என்று எட்டு சித்திகளை இப்படி விளக்குகிறார் திருமூலர்.

அணிமா என்பது அணுவைப் போல சிறிதான தேகத்தை அடைதல்; மகிமா என்பது பெரிய உருவத்தை அடைதல்; லகிமா என்பது காற்றைப் போல லேசாக ஆதல், கரிமா என்பது கனமாக ஆதல்; ப்ராப்தி என்பது அனைத்துப் பொருள்களையும் தன் வசப்படுத்தல், பிராகாமியம் என்பது பர காய பிரவேசம் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்; ஈசத்துவம் என்பது தேவர்களிடம் கூட ஆணை செலுத்துதல்; வசித்துவம் என்பது அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

பதஞ்சலி, யோகத்தின் உச்ச பயனாக கைவல்ய நிலையைக் கூறுகிறார்.

திருமூலரோ யோகத்தைச் சிவயோகமாகக் கூறுகிறார். யோகத்தின் உச்ச பயன் சிவனை அடைவதேயாம்.

பதஞ்சலி, யோகத்துடன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். திருமூலரோ ஒன்பது தந்திரத்தில் உலகியலையும் வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகளையும் புகல்கிறார்.

பதஞ்சலி சம்ஸ்கிருதத்தில் அற்புதமான சொற்றொடர்கள் அடங்கிய 194 சூத்திரங்களைத் தரும் போது திருமூலரோ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று தமிழுக்குப் பெருமை சேர்க்கிறார்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, பெரியாருடன் கூடல் பேரின்பமாமே, பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின், நல்லாரைக் காலன் நணுக நில்லானே, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை, யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என இப்படி வாழ்வின் ரகசியங்களைக் கொடுத்தருள்கிறார் திருமூலர்.

பதஞ்சலி சிதம்பர ஸ்தலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; ஆடல் வல்லானின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தவர்.

திருமூலரோ திருவாவடுதுறையில் அரச மர நீழலில் வெகு காலம் தவம் புரிந்தவர்.

இப்படி இருவரையும் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு.

மிக முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. இந்த யோகத்தைத் தகுந்த குரு மூலமாகவே கற்க வேண்டும். பிராணாயாமம் என்பது மூச்சுக் கலை. இதை முறையாக ஆசானிடமே கற்க வேண்டும். இல்லையேல் விபரீதமான பக்க விளைவுகள் ஏற்படும்.

இன்னொன்று, இன்றைய கால கட்டத்தில் யோகா என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல வேறெந்தச் சொல்லும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.

சிரிப்பு யோகா, அழுகை யோகா, நடக்கும் யோகா, ஓடும் யோகா என்று தமக்குத் தோன்றியபடி பெயரைக் கொடுத்து சுயநல நோக்குடன் பயிற்சிகளை அளிக்கின்றவரை இனம் கண்டு தவிர்த்து பாரம்பரியமாக பதஞ்சலி முனிவர், திருமூலர் ஆகியோர் கூறிய யோகத்தில் பயிற்சி அளிப்பவரையே குருவாகக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் போலிகள் கற்பிக்கும் யோகம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடும்.

ஸ்வாமி விவேகானந்தர் அருளிய பதஞ்சலி யோக சூத்ரத்தின் விளக்கவுரை, திருமூலரின் திருமந்திரம் ஆகியவை இணையதளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் – டவுன் லோட் – செய்து கொள்ளலாம்.

படிப்போம்; யோகா பயில்வோம். இரு உலகிற்கும் தேவையானதைப் பெறுவோமாக.

இந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும்  உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

tags– திருமூலர் ,யோகம், பதஞ்சலி ,

***

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

map Egypt Luxor

–லண்டன் சுவாமிநாதன்—

POST No. 716 dated 21 Novemeber 2013

“உன்னையே நீ அறிவாய்”, “உள்ளம் பெருங்கோயில்” என்ற கருத்துக்கள் இந்துக்களுக்குக் கரதலைப் பாடமாகத் தெரிந்தவை. ‘மனக் கோயில், மனமே கோயிலாகக் கொண்டவன்’ என்று இறைவனைப் பாராட்டும் வரிகள் தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருவாசகத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.

எகிப்து நாட்டில் தீப்ஸ் என்னுமிடத்தில் உள்ள லக்ஸார் கோவிலில் இந்த இந்து மதக் கருத்துக்கள் எழுத்தில் இருக்கின்றன. இந்தக் கோவில்கள் 3500 ஆண்டுகள் பழமையானவை. அப்போதே இந்துமதக் கருத்துக்கள் அங்கே பரவி இருந்தன. உபநிஷத் சொன்ன கருத்துக்களை பிற்காலத்தில் சாக்ரடீஸ் மேலை உலத்தில் பரப்பினார். அதற்குப் பின்னர் திருமூலர் அவைகளைத் தமிழில்—எளிய தமிழில்—எல்லோருக்கும் புரியும்படியாகப் பாடி வைத்தார்.

சாக்ரடீஸின் சீடர் பிளட்டோ இந்தக் கருத்துக்களை அவரது சீடர் அரிஸ்டாடிலுக்குச் சொன்னார். அவர் தனது சீடரான அலெக்ஸாண்டருக்குச் சொன்னார். இதைக் கேட்டுப் பிரமித்துப் போன மஹா அலெக்ஸாண்டர் எப்படியாவது இந்து மத சந்யாசிகளைக் கிரேக்க நாட்டுக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இதை “ஒரு யோகியின் சுயசரிதை” நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா போன்றோர் (நடிகர் ரஜினிகாந்தின் குருவின் வழிவந்தவர் பரமஹம்ச யோகாந்தா) கூறியுள்ளனர். எல்லா விவரங்களையும் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

court_ramesisluxor

கீழ்கண்ட பகுதியை விக்கிபீடியாவில் இருந்து எடுத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்:
“பழங்கால லக்ஸார் கோவிலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.முன் பகுதியில் ஆரம்ப உபதேசம் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். உள்ளே இருக்கும் பகுதிக்குத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உயரிய ஞானமும் அந்தர்முகமாகப் பார்க்கவல்லவர் மட்டுமே அங்கே பிரவேசிக்கலாம். வெளிப்புறக் கோவிலில் இருக்கும் பொன்மொழிகளில் ஒன்று “ உடலே இறைவனின் திருக்கோயில்”. இதனால்தான் உன்னையே நீ அறிவாய் என்று மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. உள்ளே உள்ள பொன்மொழிகளில் ,”மனிதனே , உன்னையே நீ அறிவாய். பின்னர் நீ கடவுளை அறிவாய்” என்று எழுதப்பட்டுள்ளது.

Ancient Egyptian
“There are two parts of the ancient Luxor temple: the outer temple where the beginning initiates are allowed to come, and the inner temple where one can enter only after proven worthy and ready to acquire the higher knowledge and insights. One of the proverbs in the Outer Temple is “The body is the house of God.” That is why it is said, “Man know thyself.”[20] In the Inner Temple, one of the many proverbs is “Man, know thyself … and thou shalt know the gods.”[21]”

large_5Luxor_Temp..__Egypt

ஏற்கனவே நான் எழுதிய எகிப்து தொடர்பான மூன்று, நான்கு கட்டுரைகளில் அதர்வண வேத மந்திரக் கருத்துக்கள் அங்கே இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். காஞ்சி மஹா பெரியவர் சென்னையில் 1930களில் நடத்திய சொற்பொழிவுகளில் உலகம் முழுதும் இந்துமதக் கருத்துக்கள் இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பின்னர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்: “இப்படி நான் சொன்னதால் இந்துக்கள் அங்கெல்லாம் போய் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் ஒரே மதம்தான் உலகம் முழுதும் இருந்தது. அதுதான் சநாதன தர்மம்” (இந்து மதத்தின் பழைய பெயர்) என்று சொல்லி இருக்கிறார்.

இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்:

1.”தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்”

2.”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(பாடல் 280)

3. “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”

கீதையில் கண்ண பிரானும் இதை வலியுறுத்துகிறான்:
எவன் தானே தன்னை வெல்கிறானோ அவனே அவனுக்கு உறவினன் (பந்து).தன்னை வெல்லாதவனுக்கு தானே பகைவன் (6-6)

‘திருமூலருடன் 60 வினாடி பேட்டி’ என்ற எனது முந்தைய கற்பனைப் பேட்டியில் மேல் விவரம் காண்க.

tutakhamun

Tutankhamun in Luxor