தீமையை ஒழிக்க யுகம் தோறும் அவதரிப்பேன்! (Post No.7054)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 4 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 12-47

Post No. 7054

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

நவராத்திரி பிரார்த்தனை

தீமையை ஒழிக்க யுகம் தோறும் அவதரிப்பேன்!

ச.நாகராஜன்

அறம் வெல்லும்; பாவம் தோற்கும்  – கம்பர்

சத்யமேவ ஜயதே; நாந்ருதம் –  வேதம்

தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் ஊறு நேர்கிறதோ, அதர்மம் எப்போதெல்லாம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன் – கீதையில் கண்ணபிரான்

இது தான் மொத்த ஹிந்து  மதத்தின் சாரம்.

அதர்மம் மேலோங்கி இருந்ததையும் அது தலைவிரித்தாடிய விதத்தையும் புராணங்கள் கூறுகின்றன.

தெய்வீக சக்தி எப்படி தர்மத்தை நிலைநாட்டியது என்பதையும் அவை விரிவாக விளக்குகின்றன.

சிவன் திரிபுராசுரனை வதம் செய்தான்.

பார்வதி தேவி மஹிஷாசுரனை வதம் செய்தாள்.

விஷ்ணு மது கைடபரை வதம் செய்தார்

இந்திரன் விருத்திராசுரனை வதம் செய்தான்.

ராமர் விராதனை வதம் செய்தார்.

துர்கா தேவி ரக்தபீஜனை வதம் செய்தாள்.

துர்கா தேவி சும்பன் மற்றும் நிசும்பனை வதம் செய்தாள்.

சண்டமுண்டனை வதம் செய்ததால் தேவி சாமுண்டி என்ற பெயரைப் பெற்றாள்.

இந்திரன் புலோமாசுரனை வதம் செய்தான்.

தேவி தூம்ராக்ஷ ராக்ஷசனை வதம் செய்தாள்.

கார்த்திகேயன் தான் அவதரித்த ஆறாம் நாளிலேயே தாரகாசுரனை வதம் செய்தார்.

ராமர் வாலி, ராவணன், கர, தூஷணன் ஆகியோரை வதம் செய்தார்.

கிருஷ்ணர் கம்ஸனை வதம் செய்தார். பூதனையை வதம் செய்தார்.

சால்வ தேச ராஜா ப்ரஹ்மதத்த்னை கிருஷ்ணர் வதம் செய்தார்.

கிருஷ்ணர் மது என்ற அரக்கனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் பகாசுரன் மற்றும் காகாசுரனை பால்ய வயதிலேயே வதம் செய்தார்.

கணேசர் லோமாசுரனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் கேசி என்ற அரக்கனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் சிசுபாலனை வதம் செய்தார்.

சிவன் அந்தகாசுரனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்தார்.

ராமர் சம்பூகனை வதம் செய்தார்.

இந்திரன் ஜம்பாசுரனை வதம் செய்தான்.

இந்திரன் விஸ்வரூபனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் சங்கடாசுரனை வதம் செய்தார்.

பரசுராமர் சஹஸ்ரபாகுவை வதம் செய்தார்.

மஹிஷாசுரனின் சேனாதிபதியான சிக்ஷுரனை,  தேவி வதம் செய்தாள்.

விஷ்ணு க்ராஸன் என்ற அசுரனை வதம் செய்தார்.

அகஸ்தியர் வாதாபி என்ற அசுரனை வதம் செய்தார்.

வராஹ அவதாரத்தில் ஹிரண்யாக்ஷணை விஷ்ணு வதம் செய்தார்.

மத்ஸ்யாவதாரத்தில் சங்காசுரனை விஷ்ணு வதம் செய்தார்.

ஹனுமான் அக்ஷனை வதம் செய்தார்.

ராமர் துந்துபியை வதம் செய்தார்.

நரசிம்மாவதாரத்தில் ஹிரண்யகசிபுவை விஷ்ணு வதம் செய்தார்.

பொய்க்கும் கலியில் ஏராளமான ராக்ஷஸர்கள் உருவாகி விட்டனர்.

ஆகவே பாரதியார் பாடியது போல

“பொய்க்கும் கலியை நான் கொன்று

    பூலோகத்தார் கண்முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே

   கொணர்வேன் தெய்வ விதி இஃதே”

என்று ஒவ்வொருவரும்  தெய்வ சக்தி கொண்டு அதர்ம சக்திகளை அழிக்க முன் வர வேண்டும்.

தெய்வீக சக்தி வளர அன்னை பராசக்தி அருள் பாலிப்பாளாக!

நவராத்திரியில் நமது பிரார்த்தனை இதுவே!

விண்ணும் மண்ணும் தனி ஆளும்

   வீரை சக்தி நினதருளே – பாரதியார்.

***