நோஞ்சான் குதிரை மூலம் லிங்கன் சொன்ன புத்திமதி! (Post No.3367)

Written by London Swaminathan

 

Date: 18 November 2016

 

Time uploaded in London: 9-38 am

 

Post No.3367

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு முன் ஆப்ரஹாம் லிங்கன் வக்கீல் தொழில் செய்துவந்தார். ஒரு நாள் வயதான, எலும்பும் தோலுமான தனது நோஞ்சான் குதிரை மீது லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் பயணமானார்.

 

அந்தக் குதிரை தெனாலிராமன் குதிரை போன்றது. முன்னே இரண்டு பேர் இழுக்க, பின்னே இரண்டு பேர் தள்ள, பத்து தப்பிடி நகரும். அவ்வளவுதான்.

 

அவர் குதிரை ஒரு வயக்காட்டு வழியே போன போது நடந்த சம்பாஷணை:-

 

ஏய் அபி (Abraham Lincoln) ! என்ன லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் போறியா?

 

ஆமாம், டாமி மாமா (Uncle Tommy). நீங்க சவுக்கியமா இருக்கீங்களா?

 

ம்ம்ம்ம்ம்……. இருக்கேன்……..

 

என்ன அங்கிள் டாமி? ஏதாவது பிரச்சனையா? இழுத்து…… இழுத்து …….. பேசுறீங்களே

 

இல்ல, நானும் லூயிஸ்டன் கோர்ட்டுக்கு வந்து உன்ன பாக்கறேன்.

 

என்ன மாமா. கோர்ட்டு, கீர்ட்டுன்னு பேசறீங்க !என்ன பிரச்சன?

 

ஒன்னுமில்ல. எல்லாம் நம்ம பக்கத்து நிலம் ஜிம்மிதான் — கொஞ்சம் அத்து மீறி போயிட்டிருக்கான்.

அவன கோர்ட்டுல ஒரு கை பாக்கனும்.

 

மாமா, இருங்க, பொறுங்க. நீங்களும் ஜிம்மியும் எத்தன வருஷம் பக்கத்துல பக்கத்துல வசிக்கிறீங்க.

என்ன ஒரு 25 வருஷம் இருக்கும்னு நினக்கிறேன்

என்ன மாமா இது? 25 வருஷமா சேர்ந்து வசித்துவிட்டு இப்ப கோர்ட் பத்திப் பேசறீங்க.

 

மாமா என் குதிரையை பாருங்க. இதுவும் 10, 15 வருஷமா இருக்கு. எப்படி நடக்குதுன்னு நீங்களே பாருங்க. முன்ன எல்லாம் ஒழுங்காத்தான் போச்சு. இப்ப அது மேல நான் கோபப்படுறேனா. இல்லையே.

 

அவ்வளவுதான்! அதோட “அட்ஜஸ்ட்” பண்ணி போறேன்.

 

நோஞ்சான், நொண்டி என்று தூக்கிப்போட முடியுமா?

 

அப்ப நீ சொல்ற. நானும், உன்னைப் போல பொறுமையாய் அட்ஜஸ்ட பண்ணிட்டு போனும்; வழக்கு வாய்தான்னு வம்பு வேண்டாங்கற.

 

பின்ன? அங்கிள் டாமி,  பழைய குதிரை போல நண்பரையும் பாருங்க.

 

சரீப்பா, அபி, நீ சொல்றதும் சரியாத்தான் படறது.

 

இதைக் கேட்டவுடன் ஆப்ரஹாம் லிங்கனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

 

கோர்ட்டுக்கு வரும் முன்னரே ஒரு வழக்கைத் தீர்த்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

அவரது நோஞ்சான் குதிரை முன்னைவிட சிறிது வேகமாக லூயிஸ்டன் நீதிமன்றத்தை நோக்கி நடைபோட்டது!

 

நாய் “வாலால்” கடிக்கட்டுமே!

 

அமெரிக்காவில் லாங் ஐலண்ட் (LONG ISLAND) ராணுவ முகாம் அருகில் ஒரு பெரிய எஸ்டேட் இருந்தது. அங்கே பாதுகாப்புக்காக நல்ல உயர்தர, விலை மதிப்புள்ள நாய்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தனர். ஒரு நாள், ஒரு நாய் ராணுவ முகாம் பாதுகாவலரைக் (Army Camp Sentry) கடித்துவிட்டது. அவர் கோபத்தால் துப்பாக்கி  சனியனால் (துப்பாக்கி  முனையில் சொருகப்பட்ட கத்தி Bayonet) நாயைக் கொன்றுவிட்டார்.

 

 

நாயின் சொந்தக்காரர் வழக்கு போட்டார். வழக்கு விசாரணை நாளும் வந்தது. நாயின் சொந்தக்காரர் , அந்தக் காவலரை தன்னுடைய நாய் அப்படி ஒன்றும் கடித்துக் குதறிவிடவில்லை என்று நிரூபித்தார்.

 

உடனே நீதிபதி கேட்டார்:

ஏம்பா. உன்னை நாய் ஒன்றும் அப்படிப் பெரிதாக கடிக்கவில்லையே! துப்பாக்கி முனை கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதன் பின்புறப்பகுதியால் (Rifle Butt) அடித்து விரட்டி இருக்கக் கூடாதா?

உடனே அந்தக் காவலர் பளிச்சென்று பதில் தந்தார்”

 

அது சரி கனம் நீதிபதி அவர்களே! அந்த நாயும் முன்பக்கத்தால் கடிக்காமல் அதன் பின்புற வாலால் என்னைக் கடிக்கக்கூடாதா?

 

நீதிபதி  இந்தப் பதிலைக் கேட்டு திகைத்துப் போனார்!

 

–Subham–

மெத்தக் கற்ற எத்தன் சிட்டாய்ப் பறந்துபோனான்! (Post No.2542)

rifle

Compiled by london swaminathan

Post No. 2542

Date: 15th February 2016

 

Time uploaded in London:- 9-07 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ஜோக்.

ஆதாரம்: விநோத விகட சிந்தாமணி;

அனுப்பியவர்: சென்னை ச. சீனிவாசன்

 

“சாமத்தில் வயிற்றுச் சாப்பாட்டுக்கு வழியின்றி, தந்திரம் ஒன்றும் தோன்றாமல்,சென்னையன் என்ற கருமான் பழைய துப்பாக்கி ஒன்றைச் சம்பாதித்து, கையிற்பிடித்து, அடர்ந்து படர்ந்த சாலையின்கண், துப்பாக்கியும் கையுமாய் உலவிக்கொண்டிருக்கையில், சங்கிலிபோல தங்கக் கொலுசு அரை ஞாணும்  நிறைய வெண்டயம் போல் வளைவுள்ள  விசிறிமுருகுகளையும் அணிந்து கையில் பணப்பையுடன் ஒரு செட்டியைக் கண்டு சந்தோஷத்துடன் கருமான், கையிலுள்ள துப்பாக்கியால் செட்டியைச் சுடுவது போலக் குறிவைத்து, “செட்டி மகனே! உன் கெட்டிக் கொலுசையும், வட்ட முருக்கையும், பொட்டிப் பணத்தையும் கொட்டிக்கொடுக்கிறாயா? சுட்டுப்போடட்டுமா? என்று பயமுறுத்திக்கேட்க, அதற்குச் செட்டி மகன், கெட்டியுக்தி பண்ணி, உன் துப்பாக்கியை எனக்குக் கொடுத்துவிட்டால், என் சொத்தனைத்தையும் உனக்குத் தருகிறேன் என்றான்.

(இதுவரை ஒரே வாக்கியம்; பழையகால நடை!!!!!!!!!!!!!!!!!)

 

கருமான் சம்மதித்து, சொத்தையெல்லாம்  பறித்துக்கொண்டு துப்பாக்கியைக் கொடுத்தான். அதைக் கையிற்பிடித்து, “பட்டி மகனே! என் சொத்து முழுவதையும் கட்டிவைக்கிறாயா? அல்லது உன்னைச் சுட்டுப் போடட்டுமா? என்று செட்டியார் கேட்க, அதற்குக் கருமான், “செட்டியாரே! சுட்டுப் போட அதில் மருந்திருந்தாலன்றோ? என்று சொல்லிக்கொண்டு வந்தவழியே ஓட்டமெடுத்தான். செட்டியார் ஏமாந்து, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தன் மதியீனத்தை நினைத்து துக்கித்தார்.

–சுபம்–