வெளிநாட்டில் தமிழ் கற்பது தேவையா? (Post No.10096)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,096

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)

ஆங்கில  மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக்  காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில்  வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ  கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.

London University Tamil Department (SOAS)- dr Stuart Blacckburn, Dr John Marrin the Centre, London Swaminathan (Far right) Dr Singvi, High Commissioner (far left). Year 1996

முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!

இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .

ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club)  அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?

அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.

தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம்  தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.

மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.

சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.

பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!

வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?

தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.

ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில்,  எல்லோரையும்  அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று  எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!

குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.

ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.

முயற்சி திருவினை ஆக்கும்!

–subham–

tags –வெளிநாட்டில், தமிழ், கற்பது, தேவை, 

தங்கம் அல்ல, மனிதர்களே தேவை! (Post No.9491)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9491

Date uploaded in London – –  –14 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்கம் அல்ல, மனிதர்களே தேவை!

ச.நாகராஜன்

படகு /ப்லவ வருஷ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

XXX

பாழ்பட்டு வீழ்ந்திருக்கும் ஒரு உன்னதமான தேசத்தை உயர்த்தி மீண்டும் அந்த மகோன்னத நிலையை அடையச் செய்ய தங்கம் வேண்டாம். அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட தைரியமிக்க மனிதர்களே வேண்டும். இதை அழகுற எமர்ஸன் ஒரு கவிதை வாயிலாகத் தெரிவிக்கிறார்:

தங்கம் அல்ல, மனிதர்களே மக்களை மகத்தானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் உருவாக்க  முடியும்;

ஸத்தியத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் எவர்கள் துணிந்து நிற்கிறார்களோ நீடித்து துயர் உறுகிறார்களோ,

மற்றவர்கள் உறங்கும் போது எந்த தைரியமிக்க மனிதர்கள் விழித்திருக்கிறார்களோ,

மற்றவர்கள் பயந்து ஓடி ஒளியும் போது எவர்கள் துணிந்து எதிர் நிற்கிறார்களோ,

அவர்களே ஒரு தேசத்தின் அஸ்திவாரத்தை ஆழமானதாக ஆக்கி அந்த தேசத்தை விண்ணளவு உயர்த்துகிறார்கள்!

    – எமர்ஸன்

Not gold, but only men can make

     A people great and strong ;

Men who for truth and honour’s sake

     Stand fast and suffer long.

Brave men who work while others sleep,

    Who dare while others fly –

They build a nation’s pillars deep

    And lift them to the sky.

                          – Emerson

                                          *

 ஸ்வாமி விவேகானந்தர் தனது பல உரைகளிலும் அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட இளைஞர்களே வாருங்கள் எனக் கூறி பாரத தேச இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்.

சுதந்திரம் அடைந்து விட்டோம் என்றாலும் கூட நமது புகழோங்கிய பண்டைய நிலையை இன்னும் அடைந்த பாடில்லை. அதை அடைய அவர் காட்டிய வழியே இன்றைய இன்றியமையாத தேவை.

ஸ்வாமிஜியின் உரைகளில் சில பகுதிகளை இங்கே பார்ப்போம்:

Man-Making or Moulding of Workers

We want fiery young men – intelligent and  brave, who dare to go to the jaws of Death, and  are ready to swim the ocean across. We want  hundreds like that, both men and women. Try  your utmost for that end alone. Make converts

right and left, and put them into our purity- drilling machine. Start centres at places, go on always making converts.

A hundred thousand men and women, fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and nerved to lion’s courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go over the length and

breadth of the land, preaching the gospel of salvation, the gospel of help, the gospel of social raising -up – the gospel of equality.

*

The highest men are calm, silent, and unknown.

They are the men who really know the power of thought; they are sure that, even if they go into a cave and close the door and simply think five true

thoughts and then pass away, these five thoughts of theirs will live through eternity. Indeed such thoughts will penetrate through the mountains, cross the oceans, and travel through the world. They will enter deep into human hearts and brains and raise up men and women who will give them practical expression in the workings of human life.

You must be Rishis yourselves

*

Act on the educated young men, bring them together, and organise them. Great things can be done by great sacrifices only. No selfishness, no name, no fame, yours or mine, nor my Master’s even!

Work, work the idea, the plan, my boys, my brave, noble, good souls – to the wheel, to the wheel put your shoulders !

Stop not to look back for name, or fame, or any such nonsense. Throw self

overboard and work. Remember, “The grass when made into a rope by being joined together can even chain a mad elephant.”

*

Have that faith, each one of you, in yourself – that eternal power is lodged in every soul – and you will revive the whole of India.

Ay, we will then go to every country under the sun, and our ideas will before long be a component of the many forces that are working to make up every nation in the world.

We must enter into the life of every race in India and abroad; shall have to work to bring this about. Now for that, I want young men. “It is the young, the strong, and healthy, of sharp intellect that will reach the Lord”, say the Vedas.

*

Throughout the history of mankind, if any motive power has been more potent than another in the lives of all great men and women, it is that of faith in themselves. Born with the consciousness that they were to be great, they became great.

*

Religion in India must be made as free and as easy of access as is God’s air. And this

is the kind of work we have to bring about in India, but not by getting up little sects and fighting on points of difference. Let us preach where we all agree

Give the truth and the false much vanish

if there is the darkness of centuries in a room and we go into the room and begin to cry, “Oh, it is dark, it is dark!”, will the darkness go? Bring in the

light and the darkness will vanish at once. This is the secret of reforming men.

stand fast. If a hundred fall in the fight, seize the flag and carry it on. God is true for all that, no matter who fails. Let him who falls hand on the flag to another to carry on; it can never fall.

A hundred thousand men and women, fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and nerved to lion’s courage by their sympathy

for the poor and the fallen and the downtrodden, will go over the length and breadth of the land, preaching the gospel of salvation, the gospel of help,

the gospel of social raising-up – the gospel of equality.

Enter the arena as servants of the Lord

Again and again has our country fallen into a swoon, as it were, and again and again has India’s Lord, by the manifestation of Himself, revivified her.

***

Tags – எமர்ஸன் ,தங்கம், மனிதர்,  தேவை, விவேகானந்தர்,

உலக வளர்ச்சிக்கு 5 தேவை- மஹாபாரதம் (Post No.6662)

WRITTEN   by London swaminathan


swami_48@yahoo.com


Date: 22 JULY 2019


British Summer Time uploaded in London – 8-04 am

Post No. 6662


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தேவையும், பேராசையும்! (Post No.5462)

Written by S NAGARAJAN

Date: 24 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5462

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

1997ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த காட்வின் சமரரத்னே (தோற்றம் : 6-9-1932 மறைவு 22-3-2000) ஹாங்காங்கில் ஒரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். 6-10-1997இலிருந்து 11-10-1997 முடிய ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏழாவது நாள் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. முடிவுரையில் அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

 

 

முதலில் காட்வினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

காட்வின் இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நூலகராக கெகல்லே பொது நூலகத்தில் 1956ஆம் ஆண்டு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார். புத்தமதத்தில் ஆர்வம் ஏற்படவே அதைப் பற்றி நிறையப் படிக்கலானார்.

 

 

மறுபிறப்பு பற்றி ஆய்வு நடத்திய புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் இலங்கைக்கு வந்த போது அவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்ததோடு அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதீத உளவியல் பற்றி அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

புத்த தியான முறையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படவே, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு தியான பயிற்சிகள் நடத்துவதற்காக அழைப்புகள் வந்தன. அதையேற்றுப் பல நாடுகளுக்கும் அவர் சென்றார்.

கல்மிஷம் இல்லாத எளிய சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட அவரைப் பார்த்தால் பெரிய அபிப்ராயம் ஒன்றும் தோன்றாது. ஆனால் அவரைச் சந்தித்துப் பழகிய சில நிமிடங்களிலேயே அவர் சற்று வித்தியாசமான மனிதர் என்று தோன்றி விடும்.

 

 

அவரது சொற்பொழிவில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும், உவமைகளும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.

தன்னைக் கேலி செய்யும் சம்பவங்களைக் கூட ஒளிக்காமல் அவர் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதில்  ஒரு சம்பவம் இது:

 

 

மேலை நாட்டில் நடந்த பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவு நாளன்று ஒரு பெண்மணி அந்த பயிற்சி முகாமில் அவர் கற்றதையெல்லாம் ஏற்கனவே அவரது நாயிடமிருந்து கற்று விட்டதாக கூறினார்.

 

 

இதைக் கேட்ட காட்வினுக்கு ஆவல் உந்தியது. “அப்படியா! அந்த நாய் பற்றி இன்னும் கொஞ்சம் விவரியுங்களேன்!” என்றார்.

அந்தப் பெண்மணி கூறினார்: “ நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் நாய் எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறது! நீங்கள் எப்போதும் நன்றி உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்; என் நாய் எப்போதுமே நன்றியுடன் இருக்கிறது! “ இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அவளுடைய நாயின் நடத்தையை இன்னும் விவரமாகக் கூறிக் கொண்டே போனாள்.

 

 

கடைசியில் அவள் நிறுத்தியவுடன் காட்வின் அவளை நோக்கி, “உங்கள் நாய்க்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன் இல்லை? நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். என் நாய் பேசவே பேசாது” என்றாள்.

இப்படி காட்வின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சுவைபடக் கூறினார்.

2

இனி அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையாடலில் கூறியதைப் பார்ப்போம்.

 

அவர் இலங்கையில் நடத்தி வந்த தியான மையத்தில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தார்.

 

அவரது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் கோவில் ஒன்றிற்குச் சென்றார். கோவிலின் வாயிலில் பிச்சைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனக்கு முன்னால் ஒரு சின்னத் துண்டை அவர் விரித்திருந்தார். அதில் பிச்சைக் காசு போடுவோர் போட்டுக் கொண்டிருந்தனர். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நண்பர் அவரது முகத்தில் இருந்த அமைதியையும் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்த பாங்கையும் பார்த்து ஒரு ஓரமாக நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

திடீரென்று அந்த பிச்சைக்காரர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். துண்டிலிருந்து சில காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தரையில் விட்டெறிந்தார்.அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றையும் குடிப்பதற்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கேயோ நடந்து சென்றார்.

 

தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரராக இருந்த போதிலும் மீதியை அங்கேயே விட்டு விட்ட அந்தச் சம்பவம் நண்பர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தியது.

 

உடனடியாக அவர் மனதில் ஒரு கவிதை தோன்றியது “

 

He who knows his need

And yet without greed

Whatever be his creed

He is a saint indeed.

 

இது தான் அந்தக் கவிதை!

 

எவனுக்குத் தன் தேவை தெரியுமோ

தெரிந்திருந்தும் பேராசைப் படவில்லையோ

அவன் எந்த சமய நம்பிக்கை கொண்டவனாகத் தான் இருக்கட்டுமே

உண்மையில் அவனே ஒரு மகான்!

 

இதை எழுதி சமையலறையில் அவர் மாட்டி வைத்தார்.

இதை காட்வின் கூறி விட்டு, “ நீங்கள் உங்கள் பணத்தை எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திருப்தியுடன் வாழுங்கள். இந்த ஆன்மீக குணம் தம்மத்தில் (புத்தமத தர்மத்தில்) அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. பாலி மொழியில் அருமையான ஒரு வார்த்தையால் இந்தக் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை சந்துத்தி (Santutthi).

 

திருப்தி என்பது ஒரு பெரிய செல்வம்” என்று  முடித்தார்.

***