அரக்கர்கள்,அசுரர்கள் யார்?

mask-dance,bhutan
Mask dance in the Himalayan kingdom Bhutan

Research paper written by London Swaminathan
Research article No.1395; Dated 7th November 2014

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? முடியும்!!
எங்கே? இந்துக்கள் எங்கெங்கே வசிக்கிறார்களோ அங்கே!!!!
அது என்ன கதை? என்று கேட்கிறீர்களா?

ஆரியர்கள் தேவர்களாம்; திராவிடர்கள் அரக்கர்களாம்; ராக்ஷசர்களாம். இப்படி ஒரு கட்டுக்கதையை எட்டுக்கட்டினான் வெளிநாட்டு “அறிஞன்”. அதை இந்துக்கள், அதிலும் குறிப்பாக தமிழ் இந்துக்கள் நம்பிவிட்டார்கள்

நமது வேத இதிஹாச புராணங்களில் ஆரிய என்ற வார்த்தை உள்ளது. திராவிட என்னும் சொல் வேத காலத்துக்கு மிகவும் பின்னால் காணப்படுகிறது. அந்த இரண்டு சொற்களும் இப்போது பயன்படுத்தப்படும் இனம் என்னும் பொருளில் பயனபடுத்தப் படவில்லை. பல லட்சம் பாடல்கள், துதிகள் கொண்ட இந்து மதக் கடலில் இருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக ஸ்லோகங்களைத் தெரிவு செய்து ஆங்கிலத்தில் தவறாக எழுதியதால் பலரும் நம்பிவிட்டனர்.

masks

இதோ சில உண்மைகள்:—-

1.புராண, இதிஹாசங்களில் வரும் ராக்ஷசர்கள் –( அரக்கர்), அசுரர்கள், தானவர்கள், தைத்யர்கள் ஆகிய அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள் என்று நமது நூல்கள் தெள்ளத் தெளிவாக இயம்புகின்றன.

2.ராக்ஷச ராவணன் முதல் சிவனை ஓட ஓட விரட்டிய பஸ்மாசுரன் வரை அனைவருக்கும் வரம் கொடுத்தவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவ பெருமான் தான். இவர்கள் நம்மவர்களாக இல்லாவிடில் அவர்கள் வரம் கொடுத்ததாக ஆயிரக் கணக்கான கதைகள் தோன்றி இருக்குமா?

3. தைத்யர்கள் யார்?
அசுரர், அரக்கர், தைத்யர், தானவர் ஆகியோரின் தந்தையர் பிரஜாபதி அல்லது அவரது புதல்வரான காஷ்யபர் என்றும் தாயார் தீதி என்றுமே நம் புராணங்கள் பகரும். ராவணன் என்பான் புலஸ்த்யர் என்னும் பிராமண ரிஷியின் பேரன். அவருடைய புதல்வர் விஸ்ரவசுக்கும் ராக்ஷச குலப் பெண் நிகஷாவுக்கும் பிறந்தவர். ராவணனின் மனைவியான மண்டோதரி யை மஹா உத்தமியாக எல்லா ராமாயணங்களும் சித்தரிக்கின்றன. அவர் மயன் என்னும் அசுரனின் மகள்.

அவளையும் மற்ற அசுரர்களையும் இந்துக்கள் தினமும் காலையில் வணங்கித்தான் மற்ற காரியங்களைச் செய்வர் ( பிராதஸ்மரணம் என்னும் பிரார்த்தனையில் மண்டோதரி, தாரா, பலி, விபீஷணன் முதலியோரை இந்துக்கள் வணங்குகின்றனர். எனது பாட்டி, அம்மா ஆகியோர் குளிக்கும் போதும், சில நேரங்களில் சமைக்கும் போதும் இந்த ஸ்லோகங்களை சொல்லுவர். ஆர். எஸ்.எஸ்.காரர்கள் நடத்தும் ஷாகாக்களில் இன்றும் பல லட்சம் பேர் இதை அனுதினமும் சொல்கிறார்கள்.

இதே போல இந்திரன் ,அக்னி, வருணன் ஆகியோரை ரிக் வேதத்தின் மிகப் பழைய பகுதி அசுரன் என்றே பாராட்டி வருணிக்கிறது. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த ஒருவர், கோபித்துக் கொண்டு வேதக் கட்சியைப் பிளந்தார். பின்னர் பாரசீக (ஈரான்) நாட்டுக்கு ஓடிப்போனார். அவரை சௌராஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்பர். நம் ஊரில் தி.க. என்னும் கட்சி—— சுக்கு நூறாக உடைந்தவுடன் ஒவ்வொரு பிரிவும் ஒரு தலைவரைப் பாராட்டுவதையும் மற்றவரை இகழ்வதையும் பார்க்கிறோம். இதே போல வேதக் கட்சியை உடைத்த சௌராஷ்ட்ரார் இந்திரனைப் பாரட்டாமல் வருணனே மிக உயர்ந்த தெய்வம் என்பார். தேவர்கள் என்பவரைத் தீயோராகவும் அசுரர்கள் என்போரை நல்லவர்களாகவும் சித்தரிப்பார். அசல் தமிழ் “பாலிடிக்ஸ்!!! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆரை ஒரு கட்சி பாராட்டுவதையும் இன்னொரு கட்சி கிண்டல் செய்து சொற்பொழி வாற்றுவதையும் இன்றும் காணலாம். அப்படி ஓடிப்போன சௌராஷ்டிரர் சிஷ்யர்கள், ஈரானை முஸ்லீம்கள் பிடித்துக் கொடுமைப் படுத்தியவுடன் தாய்நாட்டுக்கே – அதே குஜராத்துக்கே – திரும்பி வந்தனர். இந்தியாவின் மிக உயர்ந்த அணுசக்தி விஞ்ஞானிகள், பெரும் தொழில் அதிபர்கள் இந்த வம்சத்தினரே!

அசுரர்கள் நம்மவர்கள் இல்லாவிடில் இன்றும் பல கோடி இந்துக்கள் அவர்களை வணங்குவார்களா?

Bhutan masked dancers  4

4.தானவர்கள் யார்?
தக்ஷப் பிரஜாபதியின் மகளான தனுவுக்கும் காஷ்யபருக்கும் பிறந்தவர்கள் தானவர்கள். இவர்களில் ஹயக்ரீவர், புலோமர், சம்பரன், வைஸ்வானர, விப்ராச்சி, விரூபாக்ஷ, விருஷபர்வா கதைகள் புராணங்களில் காணக் கிடக்கின்றன. இவர்கள் எல்லோர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன!!!

5.த, த, த — கதை (பிப்ரவரி 19, 2014-ல் நான் எழுதிய கதையின் பகுதி)–ஐ.நா. சபையில் திருமதி எம்.எஸ். பாடுவதற்காக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய பாடலில் வரும் “தாம்யத – தத்த – தயத்வம்” என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை:

ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர். ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார்.

இந்தக்கதை வரும் பிருஹத் ஆரண்யக (பெரிய காடு) உபநிஷத்தை வெள்ளைக்காரர் கூட கி.மு. 800 என்று தேதி குறித்துள்ளனர். இதில் அசுரர்களும் சம உரிமையுடம் பிரஜாபதியை அணுகியதும், அவர்களுக்கு ஏற்ற உபதேசத்தை அவர் அருளியதும் சமத்துவத்தைக் காட்டுகிறது. அசுரகளும் பிரஜாபதியிடம்தான் உபதேசம் பெறச் சென்றதும் அவர்களுக்கும் பிராமணரான சுக்ராச்சாரியார்தான் குரு என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.

ஆனால் வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில் என்ன எழுதினான்? இவர்கள் பழங்குடிமக்கள், ஆரியர்களால் விரட்டப்பட்ட திராவிடர்கள் என்று பொய்க் கதை கட்டி, திராவிடர்களை கோழைகளாகவும், முட்டாள்களாகவும் சித்தரித்தான்.
Jaws_
Jaws Villain in James Bod film

இன்று நம்மிடையேயும் அரக்கர், அசுரர், தைத்யர், தானவர் எல்லோரும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் கோர்ட்டுகளில் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தப்பட்டு சிறைத் தண்டனை பெறுவதையும் பார்க்கிறோம். விடுதலையான பின்னர் பலர் அதே குற்றத்தை மீண்டும் செய்து மீண்டும் சிறை செல்வதையும், சிலர் நல்லவர்களாகத் திருந்தி பெரிய பதவிகளை அடைவதையும் காண்கிறோம். இது போலவே அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி முறைகளை எதிர்த்தவர்கள், மீறியவர்கள், மற்றவர்கள் சுதந்திரத்தில் அல்லது உடைமைகளில் கை வைத்தவர்கள் முதலியோர் அரக்கர், அசுரர் எனப்பட்டனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் திரைப்படத்தில் கொடுமை செய்யும் வில்லன்களாக வரும் அனைவரும் அரக்கர்களைப் போன்றவர்களே!

அமரகோசம் என்னும் உலகின் முதல் அகராதி–நிகண்டு ராக்ஷசர்கள் என்பதற்கு 15 சம்ஸ்கிருத்ச் சொற்களைத் தருகிறது. இதில் எல்லாவற்றிலும், பச்சையாக மாமிசம் (சமைக்காமல்) சாப்பிடுவோர், நர மாமிசம் உண்ணுவோர், ரத்தம் குடிப்போர், இரவு நேரத்தில் சஞ்சரிப்போர், பயங்கரவாதிகள், மாயத் தோற்றம் உள்ளோர் என்றெல்லாம் வருணித்துள்ளனர்.

dracula
Bllod sucking Dracula

இதன் முழு விவரம் வேண்டுவோர் இதே தலைப்பில் வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் (எண் 1381 அக்டோபர் 31, 2014) காண்க.

வால்மீகி ராமாயணத்தில் அனுமன் கண்ட ராக்ஷசர்கள் பல்வேறு கோர உருவத்தில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் செய்வோர் மற்றவர்களை பயமுறுத்தவும், தனது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகவும் வேறு வேஷம் போடுவதை இன்றும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். நாங்கள் வாழும் லண்டன் மாநகரத்தில் தலைக்கு ஹூட் (முட்டாக்கு) போட்டுக்கொண்டு யாரும் கடைகளுக்குள் வரக்கூடாது என்று சட்டமே போட்டுவிட்டனர். ஏனெனில் கடைகளில் திருட வருபவர்களும் வங்கிகளைக் கொள்ளையடிக்க வந்தோரும் இப்படி தனது அடையாளத்தை மறைத்து வந்தனர்.

இதேபோல திருட்டுத் தனம் செய்யும் ராக்ஷசர்கள் எப்போதும் இரவு நேரத்தில் அட்டூழியம் செய்ததால் அவர்களுக்கு “இரவில் உலவுவோர்” என்றும் வடமொழியில் ஒரு பெயர் உண்டு. ஆக இராக்கதர்கள் குதிரை போலவும், யானை போலவும் உருவம் உடையோர் என்று எழுதி இருப்பதெல்லாம் அவர்கள் முகத்தில் வரைந்த சித்திரங்கள் அல்லது போட்டு வந்த முகமூடிகளையே குறிக்கும் என்க.

Kummatti-Kali-Onam-Dance
Masks in Kerala

இலங்கையில் இன்றும் கூட முகமூடி நடனம் உண்டு. பூதஸ்தான் என்னும் நாட்டில் (இமயமலையில் உள்ள பூட்டான்) இப்போதும் திருவிழாக்களில் முகமூடி டான்ஸ் உண்டு. இது நமது திருவிழாக்களில் சிலர் அனுமன், கருடன், அரக்கன் போல வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலத்தில் வருவது போன்றதாகும். இன்றும் கூட முகமூடி போட்டு ஆடும் வழக்கம் கேரளத்தில் கதகளி, கர்நாடகத்தில் யக்ஷகானம் முதலியவற்றில் உள்ளன. ஆக அரக்கர்களின் கோர உருவம் அவர்களின் உடலில் இல்லை. வேஷத்திலும் மன விஹாரங்களிலும் இருந்தது என்பதே பொருந்தும்.

மாற்றான் மனைவி மீது கை வைத்த இராவணனை சொந்தம் கொண்டாடுவோரும் அரக்க வம்சத்தினரே என்பது அவர்கள் ஆதரிக்கும் கொள்கையில் இருந்து தெற்றென விளங்கும். இதற்குப் பின்னும் விளங்கிக் கொள்ளாதவர்கள் “விளங்காதவர்களே!” என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டி இருக்கிறது.
எல்லோரும் இன்புற்று இருப்பது அன்றி யாது ஒன்றும் அறியேன் பராபரமே—தாயுமானவர்.
லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து – வேத இலக்கியம்.

–சுபம்—

அசுரர்கள், அரக்கர்கள் அகராதி

krishna killing kesikasuran
Krishna killing Kesikasura

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.

‘’அசுரர்’’-கள் யார், ‘சுரர்’-கள் யார் என்று குணங்களின் அடிப்படையில் மனிதர்களை இந்துக்கள் தரம் பிரித்து வைத்தார்கள். இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? பகவத் கீதையில் 16 ஆவது அத்தியாயத்தில் (தைவ அசுர சம்பத் விபாக யோகம்) இருக்கிறது. அசுர குணங்கள் எவை? தெய்வீக உணங்கள் எவை என்று கிருஷ்ண பரமாத்மா மிகத் தெளிவாகவே கூறி இரிக்கிறார். அது மட்டுமல்ல. விபூதி யோகம் என்னும் பத்தாம் அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் தான் யார் என்று பறவை, மிருகங்களைக் கூட சேர்த்திருக்கிறார். அதில் தன்னை அசுரர்களில் பிரஹலாதன் என்கிறார். இது எதைக் கட்டுகிறது? எல்லோரும் கடவுளின் படைப்பே.

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – என்று பாரதி பாடியதற்கு இந்த பத்தாவது ( விபூதி யோகம்) அத்தியாயமே காரணம்.

நம் எல்லோருக்கும் அசுர குணங்களும் தெய்வீக குணங்களும் உண்டு. சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றிலும் தூயவர்களை – த்ரிகரணசுத்தி உடையவர்களை – நாம் மகான்கள் என்று போற்றுகிறோம். நம்மைப் போன்றவர்கள் அசுரர் அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை எனினும் அவ்வப்போது அசுர குணங்கள் தலை எடுப்பதால் நாம் இன்னும் சாதரண மனிதர்களாகவே இருக்கிறோம். ராவணன் போன்றோர் கலையிலும் கல்வியிலும், செல்வத்திலும் உயர்வு பெற்றும் ஒரு அசுர குணம் உச்சத்துக்குப் போனவுடன் அதன் காரணமாகவே இறக்க நேரிடுகிறது.

krishna throwing calf
Krishna killing Vatsasura

ஆக, சுருங்கச் சொல்லின் அசுர குணங்களில் ஏதேனும் ஒன்று ஒருவருக்கு, நூறு சதவிகிதம் மேலிடும்போது அவருக்கு அழிவு ஏற்படும் இது இந்து மதத்தில் பல்லாயிரக கணக்கான ஆண்டுகளாக உள்ள கொள்கை. இந்தக் கொள்கையில் வெள்ளைக்காரர் போன்ற சில வெளிநாட்டு “அறிஞர்கள்” அவர்களுடைய மதத்தைப் பரப்புவதற்காகவும் ஆட்சியை நிலை நாட்டுவதற்காகவும் ஆரிய—திராவிட வாதம் என்னும் விஷத் தூளைத் தூவினர். இது இந்திய வரலாற்றில் புரையோடிப் போய்விட்டது. இந்தியர்களை இரண்டாகப் பிரித்து, ஆரியர்கள் எல்லாம் தேவர்கள், திராவிடர்கள் எல்லாம் அசுரர்கள் என்று முத்திரை குத்தினர்.

இதைத் தாங்கள் சொல்லவில்லை என்றும் இந்து மத நூல்கள் சொல்கின்றன என்றும் இங்கொரு செய்யுள் அங்கொரு செய்யுள் என்று எடுத்து மேற்கோள் காட்டினர். இந்துக்களில் நிறையப் பேர் சோம்பேறித் தடியர்கள், விதண்டாவாதிகள், குதர்க்க வாதிகள், புத்திசாலிப் போல பேசும் கோணங்கிகள், அரை வேக்காடுகள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஏனெனில் ராமாயணத்தையோ, மஹாபரதத்தையோ, கீதையையோ, குறளையோ, தேவார திவ்யப் பிரபந்ததையோ வாழ்நாளில் ஒரு முறையும் படிக்க முயற்சி கூட செய்யாமல் கேள்வி மட்டும் கேட்கவும், குதர்க்க வாதம் மட்டும் செய்யவும் மட்டும் கற்றுக் கொண்டு விட்டனர்.

ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால், இந்துக்களைக் குறை சொல்வதிலும் நியாயம் இல்லை. அவர்களுடைய நூல்களைப் படிக்க நூறு பிறவி எடுத்தாலும் போதாது. பைபிள், குரான், ஆதிக்கிரந்தம் போன்றவற்றை சில மணி நேரங்களில் படித்து விடலாம். ஆனால் இந்து மத வேத புராண, இதிஹாச, உபநிஷத, ஸ்மிருதிகள் இவைகளைப் படிக்க கோடி கோடி ஜன்மங்கள் வேண்டும். ஏனெனில் சம்ஸ்கிருத மொழியில் உள்ள புத்தகங்களின் பெயர்களைப் படிக்கவே ஒரு ஜன்மம் போதாது!!!

இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்பீர்கள். இப்பொழுதுதான் ஹாலந்து நாட்டுப் லெய்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து ஒவ்வொரு துறையில் உள்ள முக்கிய புத்தகங்கள் பற்றி எழுதி தனித்தனி பகுதிகளாக வெளியிட்டு வருகின்றனர்.

அதில் அகராதி என்று எடுத்தால் அதில் மட்டும் நூற்றுக் கணக்கான பெயர்களும் புத்தகங்களின் சுருக்கமும் இருக்கும். பாணினிக்கு முன் எத்தனை இலக்கண வித்தகர்கள் இருந்தனர் என்று படித்தால் வியப்பாக இருக்கும். அப்போது உலகில் யாருக்கும் இலக்கணம் என்ற வார்த்தையோ அகராதியோ என்ன என்று “ஸ்பெல்லிங்” கூடத் தெரியாது!!

Tarakasura
Tarakasura in Yakshagana, Mangalaore

மதம் என்று எடுத்துக் கொண்டால் இமய மலை அளவுக்கு நம்மிடம் புத்தகங்கள் உள. மற்றவர்களிடம் ஒரு உயர்ந்த மாடி வீட்டு அளவுக்குத்தான் புத்தகம். இதனால் அவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்து விடாதீர்கள். திருக்குறளில் உள்ள துறவறவியல் என்ற பகுதியில் மட்டும் கூட இந்துமதத்தை அடக்கிவிடலாம. அத்தனையும் அவ்வளவு அழகாக 130 குறள்களில் சொல்லிவிட்டார். 260 வரிகளில் இந்து மதத்தையே அடக்கிவிட்டார்.

கண்ண பிரான் 700 குறள்களில்– 1400 வரிகளில்– இந்து மத ‘’ஜூஸ் ‘’ பிழிந்து கொடுத்துவிட்டார் (குறள் ஈரடிச் செய்யுள். கண்ணனும் ஈரடியில் ஸ்லோக வடிவில் சொன்னான்). எதையும் படிக்காதது இந்துக்களின் குறையே.

மேலும் அசுரர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள் ஆகிய அனைவரும் ரிஷிகளுக்குப் பிறந்தவர்களே என்றும் புராண, இதிஹாசங்களில் மிக மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

ஆகவே அசுரர்கள் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதைப் புரிந்து கொண்டு கீழே உள்ள பட்டியலைப் படியுங்கள்:

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
பூதனா, சகடாசுரன், த்ரினாவர்த்தா, வத்சாசுரா, பகாசுரா, அகாசுரா, தேனுகாசுரா, காளீயன், ப்ராலம்பாசுரா, அரிஷ்டாசுர, கேசி அசுரா, சங்கசூடா, கம்ச, சாணூர, வ்யோமசுரா, மது, நரகாசுரா
அஹீ, விருத்திர

bhasmasura_mohini
Bhasmasura killing himself

இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
அஹீ, விருத்திர பிராமண அசுரன்), திரிசிரஸ் (பிராமண அசுரன்),சம்பரன், அராரு, சுஸ்ன, குயவ, இலிபிஷ, உரன, ஸ்வர்பானு, அஹிசுவ, கரஞ்ச, பர்நாய, வாங்த்ர, அற்புத, ஔர்ணவாப, வ்ருகத்வார, பிப்ரு, சுமுரி, நமுசி, ரிதிக்ர, ஸ்ரீபிந்த, அனார்சனி, துனி, வல, ம்ரிக்ய, த்ர்பிக, துக்ர, வேடசு
இவர்கள் எல்லோருடைய பெயர்களும் அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதால் இவை அனைத்தும் சம்ஸ்கிருத பெயர்களே. வெளி இனத்தாரோ, வெளி நாட்டாரோ இல்லை.

இந்திர, மித்ர, வருண, வாயு, அக்னி, அர்க, வாகீச, நாசத்ய, வாசஸ்பதி, பிருஹஸ்பதி என்ற வேதக் கடவுளர் பெயர்களும் இதே போல அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதைக் காண்க.

அசுரர்களைக் கொன்ற கடவுளர்கள்
மது கைடப – ஹயக்ரீவ (விஷ்ணு)
ஹிரண்யகசிபு – நரசிம்ம
பலி – வாமன/த்ரிவிக்ரம
ராவண ( 50% பிராமண அசுரன்) – ராமன்
இந்திரஜித், கும்பகர்ண, மாரீச – ராமன்
கர, தூஷண, கபந்த, தாடகா- ராமன்
வாதாபி – அகஸ்தியர்
ஜடாசுர, பகாசுர – பீமன்
அந்தகாசுர, முயலக- சிவன்
பஸ்மாசுர – தன் வரத்தினாலேயே மரணம்
கஜமுகாசுரா- கணபதி
தாரக, சூரபத்ம- முருகன்
மஹிசாசுர,சும்ப, நிசும்ப, சுந்த, உபசுந்த—தேவி.
ராஹு, கேது ஆகியோர் அசுரர்களாகவும், கிரகங்களாகவும் கருதப்படுவர்.
durga2

Mahisasura was killed by Devi

இறுதியாக, புராண காலத்தில் அசுரர்கள் கூடுதலாகவும், இதிஹாச காலத்தில் குறைவாகவும் இருப்பதைக் காண்க. அதிலும் ராமாய ணத்தில் கூடுதலாகவும் மஹாபாரதத்தில் குறைவாகவும் இருப்பதையும் கவனிக்க — அதாவது, தீய குணங்களை உடையோர் அசுரர்கள் — புராண காலத்தில் வாழ்ந்திருந்தால் துரியோதணனைக் கூட அசுரர் என்று சொல்லி இருப்பர்!!. ரிக் வேத துவக்க காலத்தில் அசுரர் என்னும் சொல், நல்ல பொருளில் மட்டும் பயன்படுத்த ப்பட்டது. இந்திரனையும் அசுரன் என்றே போற்றுகிறது. பின்னர் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. சங்க காலத்தில் நாற்றம் என்றால் நல்ல (வாசனை) பொருள். இப்போது அதைக் கெட்ட பொருளில் (துர் நாற்றம்) பயன்படுத்துகிறோம். அதுபோலத் தான் அசுர என்ற சொல்லும் பொருள் மாறிப்போனது.

நம் எல்லோருக்கும் ‘’அசுர’’ பலம் கிடைக்கட்டும்!!
‘’சுர’’ குணமும் கிடைக்கட்டும்!

contact swami_48@yahoo.com

Andhakasura
Shiva killing Andhakasura