ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (Post No.9860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9860

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள்  அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.

ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின்  போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச்  சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.

இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.

***

முதல் கட்டம் கி.மு. 3000

ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

***

இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்

யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.

போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.

****

மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000

திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

****

நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-

பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல்  ஒரு படி செல்கிறார்.

நட = நடிகர்கள்

நர்த்தக – நடனம் ஆடுவோர்

காயக = பாடுவோர்

வாதக = வாத்தியம் வாசிப்போர்

வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்

குசி லவ = பாணர்கள்

ப்லவக = கழைக் கூத்தாடிகள்

செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்

சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்

இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.

சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு  மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .

இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.

உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட  திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.

அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.

****

கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.

கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும்  இந்து  மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர்  பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.

எல்லாக்  கலைகளும் வளர்ச்சி  அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை  மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..

–தொடரும்

–சுபம்—

TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

வேத காலத்தில் வாஸ்து சாஸ்திரம் (Post No.4363)

Written by London Swaminathan

 

Date: 3 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-20

 

 

Post No. 4363

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பிரபஞ்ச வாணி வானொலி நிலயம்!

 

செய்திகள் வாசிப்பது லண்டன் சுவாமிநாதன்!

முதலில் தலைப்புச் செய்திகள்:–

 

1.வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றம் வேத காலத்தில் இருப்பது சில மந்திரங்கள் மூலம் தெரிகிறது.

 

2.வேத கால ரிஷிகள் மந்திரங்களுக்குள்ள அபூர்வ சக்தி பற்றிப் பாடி இருப்பது ரிக் வேதத்தில் உள்ளது.

3.மூன்று முக்கிய மந்திரங்கள், வேத மந்திரங்களின் சக்தி — அபூர்வ சக்தி பற்றி,  ரிஷிகள், பாடியதைக் காட்டுகின்றன.

 

4.மந்திரங்களை ரஹசிய மொழியில் பாடுவது பற்றிய செய்தி ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் உள்ளது.

 

5.கடவுள்கள் கிழக்கு திசையில் இருந்து வந்ததாகவும், மேற்கு திசை மூலமாக கடவுளர் சொர்கத்துக்குச் சென்றதாகவும் பிராமண நூல்கள் சொல்கின்றன.

 

 

இதோ விரிவான செய்திகள்

விஸ்வாத்ரஸ்ய ரக்ஷதி ப்ரஹ்ம இதம் பாரதம் ஜனம் – ரிக் வேதம் 3-53-12

 

ஏவன் நு கம் தாசராக்ஞே சுதாசம் ப்ராவத் இந்த்ரோ ப்ரஹ்மணா வோ வசிஷ்டாஹா- 7-33-3

 

வசிஷ்டஸ்ய ஸ்துவதஹ இந்த்ரஹ அஸ்நோத் உரும் த்ருத்சுத்ய அக்ருணோத் லோகம் 7-33-5

 

மூன்று மந்திரங்களின் சுருக்கமான பொருள்:-

 

வானத்தையும் பூமியையும் தாங்கும் இந்திரனே உன் புகழ் பாடுகிறேன் நான்; விஸ்வாமித்ரரின் துதிகள் பரத இனத்தைக் காப்பாற்றும்

 

அவன் இதன் உதவியால் (யமுனை) ஆற்றைக் கடந்தான்; இவர்களின் உதவியுடன் அவன் பேதாவைக் கொன்றான்.

 

 

தாகம் எடுத்தவர் போல, அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தனர். பத்து அரசர் போரின்போது வசிஷ்டரின் துதிகளை இந்திரன் கேட்டான். த்ருத்சுக்களை வெல்ல வைத்தான்.

 

 

இதிலுள்ள சில விஷயங்கள் வெளிநாட்டினருக்கும் வியப்பை ஏற்படுத்தின; ரிக் வேதத்தின் பழைய மண்டலத்திலும் யமுனை நதி பற்றிப்பேசப்படுவது ஆரியர்கள் மேற்கிலிருந்து குடியேறினர் என்பதைப் பொய்மைப்படுத்துகிறது

பத்து அரசர்கள் போர் என்பது (தச ராஜ யுத்தம்) வேத கால இந்துக்கள் இடையே நடந்த சஹோதர யுத்தம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சஹோதர யுத்தம்  செய்தனர். உலகில் நீண்ட கால தொடர் யுத்தம் செய்தவர்கள் தமிழர்களே. நல்ல வேளை! வெள்ளைக்காரர்கள் தமிழைப் படிக்காததால் ஒரு மன்னரை ஆரியன் என்றும் மற்றவனை  திராவிடன், பழங்குடியினன் என்றும் முத்திரை குத்த வாய்ப்பிலாமல் போனது. வேதத்தில் யா ராவது இருவர் சண்டை பற்றி மந்திரம் வந்தால், ஒருவனை ஆரியன் என்றும் மற்றவனை திராவிடன் அல்லது பழங்குடி மன்னன் என்றும் முத்திரை குத்தி பிளவு படுத்துவது வெளிநாட்டினர் சூழ்ச்சி. கரிகால் சோழன் கூட 9 பேரின் முடிகளை (மணி முடி) வென்றான்; சேரன் செங்குட்டுவன் ஏழு பேரின் மணி முடிகளை வென்றான். இதே போல பத்து மன்னர் யுத்தம் நடந்தது. வெள்ளைக்கார சூழ்ச்சிவாதிகளும், மார்கஸீயங்களும் இதை எல்லாம் வர்கப் போராட்டம் என்றும் இரு வேறு இனங்களின் போராட்டம் என்றும் சித்தரித்து நாட்டைப் பிளவுபடுத்தினர்.

 

ரஹஸிய மொழி

ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் ரஹஸிய மொழியில் வேத கால ரிஷிகள் கவிபாடுவது வருகிறது:

” நான் ரஹஸிய மொழியில் பாடிய துதிகள், ஏ அக்னி தேவனே! உனக்குப் புரியும். என்னுடைய ஞான மொழிகளில் என் கருத்துகளையும் எண்ணங்களையும் உதிர்த்தேன்”

தமிழர்கள் ‘மறை’ என்று வேதங்களை அழைத்தது இந்த ரஹசிய மொழிகளால்தான்.

 

திசைகள் பற்றி பிராமண மந்திரங்கள்

 

கடவுள், கிழக்கு திசையில் இருந்து நகர்ந்து மேற்கு திசையிலுள்ள மனிதர்களை நோக்கி வந்தார். இதனால்தான் மனிதர்கள் கிழக்கு நோக்கி பிரார்த்தனை செய்கின்றனர்- சதபத பிராhமணம் 2-6-1-11

 

(இந்துக்கள் எப்போதும் கிழக்கு நோக்கியே வழிபாடு செய்வர்; இறந்தோருக்கான வழிபாடு மட்டும் தெற்கு திசையை நோக்கி இருக்கும்)

 

எவரும் மேற்கு திசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது; ஏனெ னில் கால்கள் இறைவனை நோக்கி அமைந்துவிடும்! தெற்கு திசை இறந்து போன முன்னோர்களுக்கும் (பிதுர்கள்) மேற்கு திசை நாகர்களுக்கும் உரித்தாகும். அங்கே கடவுளர் சொர்கத்துக்கு ஏகினர். வட திசை மனிதர்களுக்குச் சொந்தம்; அதனால்தான் வீடுகளில் தெற்கு வடக்காக உத்திரங்கள் அமைக்கபடுகின்றன. ஏனெனில் வடக்கு திசை மனிதர்களுடையது.  புனிதமற்ற இடங்களில் உத்திரம் , கிழக்கு மேற்காக இருக்கும். (சதபத பிராமணம் 3-1-1-7)

 

அவன் ஆட்டின் மயிரைக் கத்தரித்து, அவைகளை வடகிழக்கு நோக்கி அனுப்புகிறான்.; வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. அவன் ஆடுமாடுகளை அத்திசைக்கு அனுப்புவதால்தான் மனிதர்களும் கடவுளும் கால்நடைகள் மூலம் ஜீவிக்கின்றனர். (சதபத பிராமணம் 6-4-4-22)

 

வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா) உயிரினங்களைப் படைத்தார். மீண்டும் சொல்கிறேன். வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. சொர்கலோகக் கதவு அங்கேதான் இருக்கிறது. (6-6-2-4)

 

 

வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா), விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம், உயிரினங்களைப் படைத்தார். அவ்வாறே இப்போது யாகம் செய்பவன் வடகிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு, விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம்,   உயிரினங்களைப் படைக்கிறான். (6-7-2-12)

 

அவன் எந்த திசையில் செல்வதானாலும் முதலில் கிழக்கு நோக்கிச் செல்லட்டும்; ஏனெனில் கிழக்குதான் அக்னி தேவன் பிரதேசம் –(6-8-1-8)

 

அவர்களுடன் அவர்கள் தென் மேற்கு திசை நோக்கிச் செல்கின்றனர். ஏனெனில் அது நிருதி (தீய தேவதை) யின் திசை (7-2-18

 

கிழக்கு என்பது கடவுளை நோக்கிய திசை– அக்னியை நோக்கிய திசை- 7-3-2-1

திசைகள், உத்திரங்கள், திசைக்குரிய தெய்வங்களின் குறிப்புகள் ஆகியன வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன.

 

வேத காலத்தில் துதிப்பாடல்கள் (சம்ஹிதை) தோன்றியவுடன் பிராமண நூல்கள் (கி.மு.1000 அல்லது அதற்கு முன்னர்) தோன்றின.

 

கிழக்கு திசை பறிய பிராமணக் குறிப்புகளும், வேதத்தில் கிழக்கு திசை இந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதும், ரிக் வேத நதிகள் துதி, கிழக்கிலுள்ள கங்கையிலிருந்து துவங்கி மேற்கிலுள்ள சரஸ்வதி செல்வதாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைச் சமவெளியில் புகழ் வாய்ந்த நாக ரீகம் மலர்ந்ததைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல, பகீரதன், சகரர் பற்றிய புராணக் குறிப்புகளும், உலகிலேயே பழமையான நகரமான காசி மாநகரம் கங்கையின் மீதமர்ந்ததும் கங்கைச் சமவெளியின் பழமையைக் காட்டுகின்றன; வெளி நாட்டுக்காரர்களின் வாதங்களில் உள்ள பொய்மைப் புனைந்துரையைக் காட்டுகின்றன.

 

ஆரியர் படை எடுப்பு பற்றிய கதைகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!

 

TAGS:–வாஸ்து சாஸ்திரம், தோற்றம், மறை மொழி, ரகசிய மொழி, கிழக்கு திசை, கடவுள் திசை

–சுமம், சுபம் —

ORIGIN OF PARIAHS (TAMIL Book from British Library, Year 1894)

IMG_6657 (2)

Article No. 2074

Written by London swaminathan

Date : 16  August  2015

Time uploaded in London :–  6-37 am

I have been publishing booklets that are over 100 years old in this blog for the benefit of future researchers. They are from the British Library, London. I have got one on Pariah caste and two booklets on Saurashtras (of Tamil Nadu). Here is the booklet on Origin of Pariahs in Tamil:–

IMG_3230 (2)

IMG_3231 (2)

IMG_3233 (2)

IMG_3234 (2)

IMG_3235 (2)

IMG_3236 (2)

IMG_3237 (2)

IMG_3238 (2)

IMG_3239

IMG_3241 (2)

IMG_3240 (3)

IMG_3244 (2)

IMG_3243

Published in 1894

வேதத்தில் பரத நாட்டியம்!

JR

Picture of Famous Bharata Natyam Dancer Dr Janaki Rengarajan

Research Article written by London swaminathan

Post No. 1777; Date 5th April 2015

Uploaded from London at  14-00

This is already published in English in two parts

உலகிலேயே மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அதிலுள்ள பல சம்ஸ்கிருதச் சொற்களை தமிழர்களாகிய நாம் இன்றும் அன்றாடம் பேசும் உரையாடலில் பயன்படுத்துகிறோம். இன்றும் அந்த வேதம் கோவில்களிலும் யாகங்களிலும், திருமணச் சடங்குகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் நாட்டியம் பற்றியும், சங்கீதம் பற்றியும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. வேதத்தில் வரும் இசைக் கருவிகள், ஆபரணங்கள், தங்க நகைகள், நாட்டியம் – சங்கீதம் ஆகிய எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கையில் அவர்கள் எவ்வளவு நாகரீகம் படைத்தவர்கள் என்பதை எண்ணி வியக்கிறோம்.

ஒரு நாட்டில், மக்களின் அடிப்படைத் தேவைகள் – உணவு, உடைகள், உறைவிடம் – ரோட்டி கப்டா அவர் மகான் – நிறைவடையும் போதுதான் கவலைகள் மறையும்; கலைகள் மலரும். அவைகள் பரிணமிக்க மேலும் சிறிது காலம் பிடிக்கும். ரிக் வேத காலத்தில் பெண்கள் நகை அணிந்து சபைகளுக்குச் செல்லும் மந்திரங்களைப் பார்க்கையில் அவர்கள் நாகரீகத்தில் மிகவும்  முன்னேறியவர்கள் என்று தெரிகிறது.

குஜராத்தி பெண்கள் இன்று ‘கர்பா’ நடனம் ஆடுவது போல— மேலை நாட்டில் கம்பத்தைச் சுற்றி ‘மே போல் டான்ஸ்’ ஆடியது போல— வேத காலப் பெண்கள் வட்டமாக நின்று ஆடிய குறிப்புகளும் உள.

இந்திரனை நாட்டியக்காரன் என்று ரிக்வேத மந்திரங்கள் துதிபாடுகின்றன. இந்திரன் ஆடியதோடு மற்றவர்களை ஆடவைத்ததையும், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆடியதையும் காண்கிறோம்.

பிற்கால புராணக் கதைகளில் இதன் முழு விவரங்களும் கிடைக்கின்றன. தேவ லோகத்தில் அரம்பையர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா – ஆடியதை நாம் அறிவோம். கந்தர்வர்கள் என்பவர்களை இசையுடன் இணைத்து கந்தர்வ கானம் என்று புகழ்வதையும் நாம் கேட்கிறோம். இதற்கெல்லாம் வேதத்தில் மூலம் (வேர்) இருக்கிறது.

ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களில் இதுபற்றி கூடுதலாகத் தகவல் கிடைக்கிறது. அர்ஜுனன், அலி வேடம் தரித்து உத்தரை என்ற ராஜ குமாரிக்கு சங்கீதம் நடனம் பயிற்றுவித்ததை அறிவோம். தமிழில் சிலப்பதிகாரத்திலும் அதன் உரைகளிலும் நாட்டியம் பற்றிய முழு விவரங்களும் உள்ளன. (இது பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் காண்க). இந்தப் பிண்ணனியில்தான் சம்ஸ்கிருதத்தில் பரதர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரமும் புகழ் பெற்றது.

janki fb

வேதத்தில் வரும் நாட்டிய விஷயங்கள்

தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி 25-2-1989-ல் பம்பாய் ஷண்முகாநந்தா நுண்கலை – இசை சங்கத்திலும் 16-12-1989 ல் சென்னை நாரத கான சபையிலும் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவதாவது: ரிக் வேதத்தில் சரியான பாத அசைவுகளோடு ஆடும் மருத்துகளை ந்ருதவ: (நடனமாடுவோன்) என்று அழைக்கின்றனர்.

மார்பில் தங்க நகைகளோடு ஆடும் நடனக்காரர்களே! உங்கள் சகோதரத்துவத்தை நாடி மானுடப் பிறவிகளும் ஓடி வருகின்றனர். எங்களையும் பார்த்துக் கொள்வாயாக  – என்று ரிக் வேத துதி கூறுகிறது (8-20-22)

மருத்துக்கள் தாளத்துக் கேற்ப ஆடுவதோடு மட்டும் நில்லாமல், பாடவும் செய்கின்றனர். மருத்துக்கள் ஆண்கள். பெண்களில் மிகச் சிறந்த நடனம் ஆடும் உஷை (அதிகாலைப் பொழுது) பற்றிய அழகிய பாடலும் உண்டு. அவள் பகட்டான ஆடை அணிந்து வரும் காட்சியை ரிக் வேத ரிஷி வருணிக்கிறார்.

“அதிகாலைப் பொழுது — உஷா— கிழக்கு வானத்தில் அழகிய வண்ணங்களில் தோன்றிவிட்டாள். பறவைகள் சிறகடித்துப் பாடுகின்றன (புள்ளும் சிலம்பின காண் – ஆண்டாள் திருப்பாவை)). மனிதர்கள் எழுந்து சுறுசுறுப்பான வேலைகளில் இறங்கிவிட்டனர். உஷத் காலம், ஒரு நடனக்காரி போல, எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறாள்”.

உவமை பற்றிய விதிகள், மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களையே, உயர்ந்த விஷயங்களையே உவமைகளாக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வேத காலத்தில் நாட்டியம் என்பது மிகவும் பிரபலமாக இருந்ததால்தான் புலவர் இந்த உவமையைக் கையாளுகிறார்.

நாட்டியக் கலை மிகவும் உன்னத நிலைக்குச் சென்றதைக் காட்டும்  – மிகவும் வளர்ச்சி பெற்றதைக் காட்டும் — பல உவமானங்கள் ரிக் வேதத்தில் வருகின்றன. நாட்டியக்காரிகள், சமூகத்தில் முக்கிய இடம் பெறுகின்றனர். அவர்கள் இல்லாமல் எந்தப் புனிதச் சடங்கும் நடைபெறமுடியாது. புனிதத்துவத்துக்கும், பூரனத்துவத்துக்கும் சின்னமாக விளங்குவது பூரண கும்பம். “ஓ! அழகிய பெண்மணியே, நெய்யும் தேனும் நிறைந்த அந்த பூரண கும்பத்தை எடுத்து வா” என்று இன்னும் ஒரு துதி கூறும்.

அமரகோசம் என்னும் அற்புத சம்ஸ்கிருத நிகண்டில் நாட்டியம் பற்றிப் பல சொற்கள் இருப்பதையும் நாகசாமி எடுத்துரைத்தார்:

தாண்டவம் நடனம் நாட்யம் லாஸ்யம் ந்ருத்யம் ச நர்த்தனே

தன்யத்த்ரிகம் ந்ருத்ய கீத வாத்யம் நாட்யம் இதம் த்ரயம்

(ஆங்கிலச் சொற்பொழிவில் இருந்து நான் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்தால் அவை என்னுடையவை என்று அறிக)

இனி சந்திரா ராஜன் எழுதிய காளிதாசன் எற ஆங்கில நூலில் சொல்லும் சில கருத்துக்களைக் காண்போம்:–

பரத மாமுனி, சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்ற நூல்தான் உலகில் நாடகம், நாடகவியல் கோட்பாடுகள் பற்றிய மிகப் பழைய நூல் (பழங்காலத்தில் நாடகமும் நடனமும் இணைந்தே மக்கள் முன் வைக்கப்பட்டன).

வேத மந்திரங்களைப் பல்ர் பாடியதற்கான சான்றுகளைப் பார்க்கையில் அவை கோஷ்டி கானம் என்பது தெளிவாகிறது. மேலும் அதில் திரும்பத் திரும்ப வரும் பல்லவிகலையும் காண்கிறோம். மேலும் பெண்கள் அழகிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கைகளில் நீர்க்குடங்களுடன் யாக மேடைகளைச் சுற்றி ஆடிப் பாடி நடன மாடிய காட்சிகளும் மந்திரங்களில் வருகின்றன. இந்தப் பல்லவி, ஆடல், பாடல் ஆகியன அக்காலத்தில் நாடகத்தின் ஆதி வடிவம் ஆகும்.

எங்களுக்கு வரம்பிலா மகிழ்ச்சியை அருள்வாயாக என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-100); மாட்சிமை பொருந்திய அன்னை உன்னை ஈன்றெடுத்தாள். அருள் பெற்ற அன்னை உன்னைப் பெற்றெடுத்தாள்– என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-134).

இந்திரனை நாட்டியக் காரன் என்று சொல்லும் ரிக்வேத மந்திரங்கள் வசந்த காலத்தில் நடனமாடும் மருத்துக்கலைப் பற்றியும் பாடுகின்றன (ரிக். 5—52; 6—63). அஸ்வினி தேவர்களும் இவ்வாறு போற்றப்படுகின்றனர்.

jr natraj pose

காளிதாசனில் நாட்டியம்

உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வசித்தான் என்னும் பல அறிஞர்களின் கருதை சங்க காலப் பாடல்களும் உறுதி செய்வதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இதே பிளாக்கி- கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறேன். அவனும் பல இடங்களில் நாட்டியம் பற்றிக் குறிப்பிடுகிறான். அவனுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த வராஹமிகிரரும் பிருஹத் சம்ஹிதாவில் கிரகணமும், கிரகங்களும் நாட்டியப் பெண்களைப் பாதிப்பது பற்றி மூன்று இடங்களில் குறிப்பிடுவான்.

காளிதாசன் எழுதிய நடனக் குறிப்புகலைத் டனிக் கட்டுரையில் தருவேன்.

ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் நடனம் பற்றி வரும் இடங்கள் பின்வருமாறு:

ரி.வே.:–

1-130-7; 2—22-4; 5-52-12; 6-63-5; 7-33-9, 7-33-12, 7-10-95; 8-20-22, 8-24-9, 8-24-12, 8-92-2; 10-100, 10-123-5, 10-134, 10-132-6

அ.வே.

4-37-1, 4-37-4, 4-37-5, 7-12-2, 12-1-1, 12-1-41

ரிக் வேதத்தில் கந்தர்வர், அப்சரஸ் பற்றிய பாடல்களும் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை.

அதர்வவேதத்தில் பூமி பற்றிய பாடல் மக்கள் எப்படி ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று காட்டுகிறது.

இருபதுக்கும் மேலான இசைக் கருவிகள், இருபதுக்கும் மேலான ஆபரணங்கள், இருபதுக்கும் மேலான நடனக் குறிப்புகள் முதலியன் 3700 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது — ரோடி-கப்டா அவ்ர் மகான்—பற்றிய கவலையே இல்லாத ஒரு செழிப்பான நாகரீகத்தைக் காட்டுகிறது என்பதில் இனியும் ஐயம் உண்டோ!!

jan2 (2)