சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது!(Post No.10,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,301

Date uploaded in London – –   5 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது. (Already posted in English)

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

உரைகாரர் விளக்கம் புள்ளிக் காளை = சூரியன்; அம்மா= உஷத் காலம் உதயத்துக்கு முன்னர் தோன்றும் ஒளி.  உரைகாரர்களே இங்கே குறிப்பிடப்படுவது சூரியன் (SPOTTED BULL= SUN) என்று தெளிவாக எழுதியுள்ளனர் .

கருப்புப் புள்ளிகள் என்பது காந்த மண்டல கொந்தளிப்பினால் (MAGNETIC FLUX) ஏற்படுகின்றன. அங்கு மற்ற இடத்தை வீட வெப்பம் 2000 டிகிரி குறைவு. அதன் நீள அகலத்துக்குள் பூமியை நுழைத்து விடலாம். நம்மைப் போல சூரியனும் தனக்குத் தானே தட்டாமாலை சுற்றுவதால் அவை நகர்வது போலத் தோன்றும். இவை தோன்றும் பொழுது பூமியில் தகவல் தொடர்பு பாதிக்கும்; தோல் புற்று நோய் அதிகரிக்கும் .

XXX

2.சூரியனும் விட்டமின் டி யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை 7 குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

VIBGYOR= VIOLET, INDIGO, BLUE, GREEN, YELLOW, ORANGE, RED,

சூரியனைக் கும்பிடுபவனுக்கு ஒரு குறையும் வராது என்கிறது அகஸ்தியரின் ‘ஆதித்ய ஹ்ருதய’ தோத்திரம் அவர் ரிக் வேத கால ரிஷி. சூரியனைப்பற்றிய ரிக் வேத துதிகளில் இந்தக் கருத்தைக் காணலாம். AV 2-67; RV1-191-8/9

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

அக்கினியே , ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் – 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்


Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature

https://tamilandvedas.com › tamil-arti…

·

29 Dec 2011 — … for my latest article on Solar eclipses in Tamil and Sanskrit Literature in Tamil. புறநானூற்றில் சூரியகிரஹணம் …


சூரிய கிரகணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

tamilandvedas.com, swamiindology.blogspot.com. ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு.

Here are the references:-

Sun spots in Sun—RV 10-189

Sun is a Star — RV 10- 156

Sun’s link with Eye- 10-90

உட்ஜட் கண் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › உ…

8 Oct 2021 — கண்ணை மூடினால் இருள்; சூரியன் … என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் …


கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன் …

https://tamilandvedas.com › கண்…

18 Jun 2016 — கண்களுக்கு சூரியன், மனதுக்கு … (for old articles go to tamilandvedas.com OR … கண் – சூரியன்.


சூரியன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

· 

28 Aug 2021 — சூரியன் என்பது ஒரு விளக்கம் . … வணங்கும் அனைவருக்கும் கண் முன் தெரியும் ஒரே …

My articles on the same subject:—

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …

https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…

8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …


Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature

https://tamilandvedas.com › tamil-arti…

29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … ‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179) …


Was Jayadratha killed by a Solar Eclipse? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/…/…

· 

3 Jan 2012 — The earliest reference to a solar eclipse occurs in the Rig Veda. Atri Maharishi speaks of the wonders of the solar eclipse (RV5-40-5).

TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS – Tamil and …

https://tamilandvedas.com › two-rare…

· Translate this page

4 Jan 2020 — TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS– Part 1(Post No.7418). Research article Written by London Swaminathan.


TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS

https://swamiindology.blogspot.com › 2020/01 › two-r…

4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …

TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) – Tamil …

https://tamilandvedas.com › 2020/01/05 › hydrotherap…

5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPYACUPRESSUREMONSOON IN THE RIG VEDATWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article …

photo therapy

AMAZING VEDIC EYE CONNETION WITH SUN, EGYPT AND …

https://tamilandvedas.com › 2021/10/07 › amazing-ved…

7 Oct 2021 — Thanks for your great pictures. tamilandvedas.com, … Here again the Hindus confirm the link between the Sun and Eye.


sun | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sun

7 Oct 2021 — Far seeing mother of the eyes”. Greek drama is full of allusions to the link between the eye and the sun. Aeschylus in Prometheus Bound refers …

–subham—

tags- சூரியன், 6 கண்டுபிடிப்புகள், ஒளிச் சிகிச்சை, வைட்டமின் டி , கறுப்புப் புள்ளிகள் , நட்சத்திரம்

விண்வெளியைக் கண்டு வியந்த வேதகால ரிஷிகள் (Post No.8933)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8933

Date uploaded in London – –15 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வானவெளியில் ஒளிரும் நக்ஷத்திரங்கள் மனித குலத்தின் கவனத்தை ஈர் த்ததில் வியப்பில்லை . இன்றுவரை உலகிலுள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வேதகால குறிப்புகளைப் பார்க்கையில் அதில் 25,000 ஆண்டுப் பழமையான குறிப்புகள் உள

. ஒருவேளை அவர்கள் ஆதிகால மனிதர்களின் குறிப்புகளை அப்படியே வழி வழியாக வாய் மொழியாகப் பரப்பி பாதுகாத்து வந்திருக்கலாம். அல்லது அவர்கள் உண்மையிலேயே 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் நான் முதலில் சொன்னதைத்தான்  ஏற்பேன். இன்றும் கூட விண்வெளி அறிஞர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நக்ஷத்ர வெடிப்புகள் பற்றிப் பேசுகின்றனர். உடனே அவர்களைப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள்  என்று சொல்லமாட்டோம்.

மஹாபாரதப் போரில் பிரம்மாண்டமான வியூகங்களை (ARMY FORMATIONS) பார்க்கிறோம். எப்படிச் செய்தனர்? மண்ணில் சிறிய  படங்களை கணிதரீதியில் வரைந்து அதைத் துல்லியமாகப் பெரிதாக்கினர். இப்படி தென் அமெரிக்காவில் பெரு (PERU IN SOUTH AMERICA) நாட்டில் 300 பிரம்மாணடமான வரைபடங்கள் 2000 ஆண்டுகளாக உள்ளன. அவர்களுக்கும் நாமே கணித ரீதியில் வரைபடங்களை மண்ணில் சிறிய அளவில் வரைந்து அதையே கணித அடிப்படையில் பெரிதாக்கக் கற்பித்தோம். அதனால் அந்த நாடே இன்று பெரு= பேர் உரு (PER+URU= PERU) என்று அழைக்கப்படுகிறது. உரு என்பது சம்ஸ்கிருதம். ‘ப்ருஹத் ரூப’ என்பது பேர் உரு ஆயிற்று. இதே போல இன்றைய வரைபடங்களைக் கொண்டு 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ரிஷிகளும் தற்கால விஞ்ஞானிகளும் அறிகின்றனர்.

பூமியின் அச்சு 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை (EARTH’S AXIS) பம்பரம் போல வட்டமடித்து  நிற்கும். அப்போது எந்தெந்த நக்ஷத்திரத்துக்கு மேல் பூமியின் அச்சு நிற்கிறதோ அந்தந்த நக்ஷத்ரத்தை துருவ நக்ஷத்ரம் (POLE STAR= DHRUVA) என்பர். துருவ என்றால் உறுதியான நிலையான என்று பொருள். த்ருவ (DHRUVA) என்ற சம்ஸ்கிருதத் சொல் உறுதி என்று தமிழில் மாறியது.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் துபன் (THUBAN) என்ற நக்ஷத்ரம் துருவ நக்ஷத்திரமாக  இருந்தது. இதைப் பற்றி கலைக் களஞ்சியங்களில் (ENCYCLOPAEDIAS)  பார்த்தால் தூ பன் (THUBAN) அல்லது துபன்  என்பது பாம்புத் தலை என்று பொருள்படும் என்றும் அது அராபியர் சூட்டிய பெயர் என்றும் எழுதியிருப்பார்கள். அத்தனையும் தவறு என்பது அந்த கலைக்களஞ்சியக் குறிப்புகளில் இருக்கும் முரண்பாடுகளைக் கொண்டே அறியலாம்.

ட்ராகன் (DRAGON = DRACON/LATIN) என்றால் ராட்சத மிருகம் என்று லத்தின் மொழியில் அர்த்தம் என்றும் எழுதியிருப்பர். நக்ஷத்ரக் கூ ட்டத்துக்கு பெயர் வைத்தது லத்தின் மொழியில்! அதன் தலைக்குப் பெயர்வைத்தது அரேபிய மொழியில் என்பதெல்லாம் தவறு!

இந்துக்கள் கண்டு  பிடித்த 1, 2, 3, 10 என்ற வரி வடிவங்களையே அராபிக் எண்கள் (ARABIC NUMERALS= HINDU NUMERALS) எழுதிவிட்டு  அவை உண்மையில் இந்துக்கள் கண்டுபிடித்த இந்து நியூமெரல்கள் (HINDU NUMERALS) என்று என்சைக்ளோபீடியாக்கள் எழுதும் அல்பெரூணி (ALBERUNI) போன்ற அரேபிய அறிஞர்களும் எழுதிவைத்துள்ளனர்.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர் பிரமிடுகள் கட்டினார்கள் என்றும் அப்போது தூபான் (THUBAN) துருவ நக்ஷத்ரமாக இருந்தது ; அதனால் எகிப்திய பிரமிட்டின் சாளரம் அந்த விண்மீனை நோக்கி இருந்தது என்றும் சொல்லி வியப்பர். உண்மையில் தூபன் என்பது துருவன் என்பதன் (THUBAAN= DRUVAN) திரிபே. . இடை விடாது தவம் செய்து இறைவனைக் கண்ட சிறுவன் துருவன் என்றும் அவனது பெயர் இந்த நக்ஷத்ரத்துக்குச் சூட்டப்பட்டது என்றும் புராணங்கள் விளம்பும். இதற்கு மற்றொரு

சான்று – இப்போதைய துருவ நடசத்திரத்தை நோக்கி நிற்கும் 7 நட்சத்ரங்களையும் இந்துக்கள் சப்த ரிஷிக்களின் பெயர் சூட்டி வணங்கி வருகின்றனர் (SAPTA RISHI CONSTELLATION = URSA MAJOR= GREAT/BIG DIPPER). இது 2000 ஆண்டுப் பழமையானது என்றும் அறிவோம்.

லத்தின் மொழியில் உள்ள ட்ராகனும் (APHA DRACONIS) துருவ என்பதன் திரிபே!  அது  திரிந்து துபன் ஆகியது  . சீன மொழியில் இதற்கு வேறு பெயர் இருப்பதும் குறிப்பிட்டது. ஆக முரண்பாடுகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.

இன்றும் கூட இலங்கை , மொரிஷியஸ் , மலேசிய தமிழர்களிடம் த்ருவ (DRUVA) என்று எழுத சொன்னால் அவர்கள் இந்தியத் தமிழர் மாதிரி எழுதாமல் இதே ஸ்பெல்லிங்கில்தான் (THURUVAN; V=B; THURBAN)எழுதுவார்கள்.

மற்றொரு சான்று தெற்கிலுள்ள பெரிய- பிரகாசமான நக்ஷத்திரங்களுக்கும் கூட அகஸ்தியர் (CANOPUS)  திரிசங்கு (SOUTHERN CROSS) பெயர்களை சூட்டியது ஆகும். இந்துக்களால் புகழடைந்த இந்த திரிசங்கு நக்ஷத்ரத்தை இன்றுவரை ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பசிபிக் தீவு கொடிகளிலும் அஞ் சல்தலைகளிலும் காணலாம்.

அக்கால இந்துக்களே முதலில் வான சாஸ்திரத்தையும் கணித சாஸ்திரத்தையும் உலகிற்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்பதே உண்மை.

TAGS  –   துருவன், நட்சத்திரம், துபன் , தூபன் , நக்ஷத்ரம்

—SUBHAM—-

புனர்வசு நட்சத்திர மஹிமை (Post No.8710)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8710

Date uploaded in London – – 20 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

YOU ARE INVITED TO LISTEN TO OUR QUESTION AND ANSWERS ON HINDUISM (in tamil) AND WEEKLY ROUND OF HINDU EVENTS AROUND THE WORLD (in Tamil)  VIA ZOOM OR FACEBOOK.COM/GNANAMAYAM

LIVE ON MONDAYS AT 14-00 HORS LONDON SUMMER TIME AND 18-30 IST. BUT YOU MAY SEE US 24 HOURS A DAY AT FACEBOOK.COM/GNANAYAMAYAM

14-9-2020 அன்று நடைபெற்ற facebook.com/gnanamayam கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் புனர்வசு பற்றிய கேள்விக்கு அளித்த பதில் இது. ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டன் நேரம் மதியம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. அன்பர்கள் தங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டுகிறோம்.

வணக்கம்!

சென்ற வாரம் திரு சீனிவாசன் அவர்கள் ராமனின் புனர்வசு நட்சத்திரம் பற்றிச் சொன்னார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நட்சத்திரங்களே கடவுளின் பெயர்களாக வருகின்றன. அதில் ஒன்று புனர்வசு. இது பற்றி உங்கள் கருத்து என்ன? புனர்வசு பற்றி புராணக் கதைகள் உண்டா?

இதோ பதில்:-

27 நட்சத்திரங்களும் அபூர்வமான வரலாறுகளைக் கொண்டவை. வானத்தில் திகழும் இவை பற்றிய ஆச்சரியகரமான உண்மைகள் புராணங்களில் கதை வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

புனர்வசு 27 நட்சத்திரங்களில் 7வது நட்சத்திரமாகத் திகழ்கிறது.

புனர்வசு தேவதையானவள் மஞ்சள் நிறமுள்ளவள். ஸ்ருக், ஸ்ருவம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் தரித்திருப்பவள். அதிதி இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை.

ஸ்ரீராமருடைய நட்சத்திரம் என்பதால் இது விசேஷ பெருமையைப் பெறுகிறது.

புனர்வசுவின் நான்காம் பாதத்தில் ராமர் பிறந்ததால் அவர் ராசி கடக ராசியாக அமைகிறது.

புனரர்வசு என்பது புனர் மற்றும் வசு ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.

புனர் என்றால் மறுபடி திருப்பி வருவது. வசு என்பது ஒளி, செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் குறிக்கிறது.

இந்த நட்சத்திர வடிவம் அம்புகள் அடங்கிய அம்பராவைக் கொண்டிருக்கிறது. இந்த அம்புகள் எல்லையற்ற ஆற்றல் கொண்டவை. யார் இதை உணர்ந்து ஆணயிடுகிறார்களோ அவர்களுக்கு இவை பலன் தரும்.

புராணத்திலே புனர்வசுவைப் பற்றி விளக்கமாகக் காண முடிகிறது. பிரம்மாவின் புதல்வர் மரீசி. அவரது புதல்வர் கஸ்யபர், அதாவது பிரம்மாவின் பேரர். தக்ஷ ப்ராஜாபதியின்  மகளான அதிதியை கஸ்யபர் மணந்தார். அதிதி என்றால் எல்லையற்றவள் என்று பொருள். அளப்பரிய ஆற்றல் கொண்டவள் அதிதி. அதிதிக்கு ஸத்யம், தயாளம், பெருந்தன்மை, தூய்மை, அழகு, ராஜ கம்பீரம் உள்ளிட்ட பல குண நலன்கள் உண்டு. அதிதிக்கு 12 ஆதித்யர்கள் பிறந்தனர். இந்திரன், பாகன், வாயு, த்வ்ஷ்டா, வருணர், ஆர்யமான், பூஷா, மித்ரா, அக்னி, பர்ஜன்யா, விவஸ்வான், தினகர் ஆகியோர் இந்த 12 ஆதித்யர்கள்.  

புனர்வசுவின் அதி தேவதையான அதிதியைப் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. அதிதியின் 12 சகோதரிகள், அதிதிக்கு மஹாவிஷ்ணு வாமனனாகப் பிறந்தது, நரகாசுரன் அதிதியின் காதணிகளைத் திருடியது, புதனிடம் அதிதி சாபம் பெற்றது என இப்படி பல சம்பவங்களைப் புராணங்களிலும் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் காணலாம்.

இழந்ததைப் பெறுவது, பிரிந்த கணவன் மனைவி திருப்பி ஒன்று சேர்வது, தூர தேசங்களில் பயணம் செய்தவர் திரும்பி வருவது இவை எல்லாம் புனர்வசு நட்சத்திரம் தரும் பலன்களாகும்.

ராமரின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு முறை பார்த்தால் இந்த நட்சத்திரத்தின் பலன்கள் நன்கு தெரியவரும்.

ஒரு முறை கேட்டால் மட்டும் போதாது, மறுமுறை கேட்டால் அடைய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது புனர்வசு. எல்லையற்ற தன்மையையும் -limitless abundance –  இது குறிக்கிறது.

மேலை நாட்டு வான சாஸ்திரத்தில் கேஸ்டர் மற்றும் போலக்ஸ் இந்த நட்சத்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.கேஸ்டர் ஒன்றை இழக்கச் செய்யும்; போலக்ஸ் அதை மீட்டுத் தரும்.

விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் 150வது நாமமாக வருவது புனர்வஸு என்ற நாமம்.

இதற்கு பாஷ்யம் அருளி இருக்கும் ஆதி சங்கரர்  திருப்பித் திருப்பி உடல்களில் க்ஷேத்ரக்ஞனாக உறைபவர் விஷ்ணு என்று கூறி அருளுகிறார்.

பராசர பட்டரோ தனது பாஷ்யத்தில் மற்ற மூர்த்திகளிலும் தேவதைகளிலும் அந்தராத்மாவாக உறைபவர் விஷ்ணு என அர்த்தம் விளக்குகிறார்.

இதற்கு அடுத்து வரும் நாமம் உபேந்திரன் என்பதாகும். புனர்வஸு ராமாவதாரத்தையும் உபேந்திர என்னும் நாமம் கிருஷ்ணாவதாரத்தையும் குறிக்கிறது.

புனர்வசுவின் பெருமை எல்லையற்றது, அனைத்தையும் அளிக்க வல்லது, வேண்டியதை உடனே  என்பதைக் காண்பிக்க புனர்வசு நட்சத்திரத்தில் ஜனித்த காமதேனுவைக் குறிப்பிடலாம்.

புனர்வசுவில் பிறந்த பெரும் மகான் பகவான் ரமண மஹரிஷி ஆவார். அப்பர் திருவாதிரைப் பதிகத்தைப் பாடி அருளியது போல, ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ‘புனர்வசு வண்ணம்’ என்ற ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.

ஆயுர்வேதத்தை அருளிய புனர்வசு ஆத்ரேயா அக்னிவேசதந்த்ரா என்ற நூலை இயற்றிய அக்னிதேவரின் குரு ஆவார்.

புனர்வசு நட்சத்திரத்தை வானில் எப்படிக் கண்டு வணங்கலாம்? ஓரியன் கூட்டத்திற்கு வடகிழக்காக வட வானத்தில் உயரத்தில் இரு நட்சத்திரங்களைக் காணலாம். இவற்றில் கிழக்காக ஒளிர்வது போலக்ஸ் (Polux) என்னும் நட்சத்திரம். அதற்கு சற்று வடமேற்காக உள்ளது காஸ்டர் (Castor) நட்சத்திரம். இந்த இரட்டை நட்சத்திரங்களே புனர்வசு கூட்டமாகும். இதே ஓரியன் கூட்டத்தில் ப்ராசியன், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்களும் உண்டு. இவை பிரமிக்க வைக்கும் சுவையான தகவல்களைத் தருபவை; பூமியில் மனித நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

புனர்வசு நட்சத்திரத்திற்கு இன்னும் ஒரு பெருமை உண்டு.

இந்த நட்சத்திரம் எந்தக் கிழமை, திதியில் வந்தாலும் அதற்கு மரண யோகம் இல்லை!

இப்படி புனர்வசுவின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தரும் நட்சத்திரம் புனர் வசு. இழந்தது கிடைக்கும்; எல்லையற்ற ஆற்றல் மிக்க பாணங்களை எடுத்து அவற்றை விடுத்து வெற்றி பெறலாம். மீண்டும் மறு ஒளியைத் தரும் புனர்வசுவைப் போற்றுவோம்; வணங்குவோம்! ஒளி பெறுவோம்! உயர்வோம்!

அடுத்து இன்னும் ஒரு நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

—subham—-

tags -புனர்வசு, நட்சத்திரம், மஹிமை,

கல்யாண சமையல் சாதம் , காய்கறிகளும் பிரமாதம்! (Post No.8518)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8518

Date uploaded in London – 16 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவிமார்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்!

kattukutty

என் மனைவி சமைச்ச சாதம்
சாப்பிட பிரமாதம் இந்த கவுரவ ப்ரசாதம்
இதுவே எனக்கு போதும்….
அ ஹ்ஹ ஹ்ஹஹ ஆஹ்ஹ ஹ்ஹா

என்றாவது ஒரு நாள் இந்த மாதிரி பாடி மனைவியை motivate
பண்ணியிருக்கிறீர்களா……..

சமையலறையில்,அல்லது டைனிங் டேபிளில்
என்ன நடக்குதுன்னு நான் சொல்றேன்



“என்ன (டி)பண்ணித் தொலைஞ்சிருக்கே???
ஏண்டா இந்த வீட்ல சாப்பிடறோம்ன்னு இருக்கு”

என்னோட ஆபீஸுல என் friend கோவிந்தன் அவன்
பொண்டாட்டி சமச்ச பிரியாணி ஒரு பிடி போட்டான்
பாரு….. என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட்…..ம்……அவன்
கொடுத்து வச்சவன்……..

‘ஜோக்’கும்   படித்திருக்கிறோம்
“நீ பண்ணின இத நம்ம நாய்க்கு போட்டிறாதே;
செத்து கித்து தொலைக்கப் போவுது;
ஆசையா வளர்த்த நாய்!”

சிலர் சாப்பிடும் போதே, “இத மனுஷன் சாப்புடுவான்?
நா ஒரு சொரணை கெட்டவன். தினம்,தினம் சாப்புடறேன்” என்பர்.
அதற்கு அவன் மனைவி, இந்த பேச்சுக்கொண்ணும் குறச்சலில்ல
தினம் தினம் மூணு வேளை தட்டு நிறையா கொட்டிக்கறதிலே
குறச்சலில்லே ,இதுலே பேச்சு வேற…….” என்று முணுமுணுப்பாள்.


என்னடி அங்க முணுமுணுப்பு…..
உங்களுக்கு பிடிக்லன்னா வைச்சுடுங்க குழந்தைங்க நல்லா
சாப்பிடுங்க…..

சரி, நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி  நடக்கப் போவதாவது நல்லனவைகளாக இருக்கட்டும்

****



முதலில் உங்கள் மனைவி என்ன நட்சத்திரம் என்று பாருங்கள்.


அது என்ன ராசி என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.


உங்கள் சமையலறையில் முடிந்த வரை என்னன்ன
‘Modification’ பண்ண முடியுமோ அதைப் பண்ணி
உங்கள் மனைவியை சமைக்கச் சொல்லுங்கள்



ஏ மேஷ ராசி பெண்களே


உங்களுக்கு கொஞ்சம் ‘ஸ்பீடு’ ஜாஸ்தி…..நீங்க கிழக்கு
பார்த்து தான் சமைக்கணும். உங்க இடதுபக்கம் தண்ணீரும்
வலது பக்கம் உங்க சமையல் பொருள்களை வையுங்க


மிதுன ராசி பெண்களே


துருவித் துருவி நல்ல பொருளைத் தான் எடுத்து சமைப்பீங்க
சிரிக்கப் பேசிக்கிட்டே சமைப்பீங்க…..


உங்க சமையலறை வடக்கு பக்கம் இருக்கணும்..முடியாத
பட்சத்தில் சமையல் அறை எந்த பக்கம் இருந்தாலும்
நீங்க வடக்கு பார்த்தாவது சமையல் செய்யுங்க…இடது புறம்
தண்ணீர் வலது பக்கம் உங்க சாப்பாடு…..



ஏ சிம்ம ராசி பெண்களே


சமையலில் புதுமை தேடும் நீங்கள் மனசு வைத்தால் விதம்
விதமாக சமைப்பீர்கள் இல்லேன்னா ஓட்டல் தான்….
சமையலறை கிழக்கில் அல்லது கிழக்கு பார்த்து சமைக்கவும்
உணவும் தண்ணீரும் வலது பக்கம் ஓ.கே ????

கடக ராசி பெண்களே


அறு சுவை உணவின் அரசியே!!! தென்மேற்கு திசை
அல்லது தெற்கு திசை நோக்கி சமைக்கவும். விதம் விதமாக
சமைக்க தெரியும் உங்களுக்கு. தென் மேற்கே தண்ணீர். தென்
கிழக்கில் உணவுப்பொருள்….



ஏ கன்னி ராசி பெண்களே


கோச்சுக்காதீங்க!  நீங்க ரொம்ப “செல்பிஷ்” உங்களுக்கு
மேற்கே சமையலறை இருந்தால் தான் நல்லது….நீங்க
அருமையா சமைத்த உணவு எல்லாம் இடது பக்கம், தண்ணீர்
வலது பக்கம் தண்ணீர்… சரியா???.?

துலாம் ராசி பெண்களே


மெழுகு போன்ற இளகிய மனம்  படைத்த நீங்க வடமேற்கு
திசையில் அல்லது வடக்கு பார்த்து நின்று வடக்கு பார்த்து
சமையல் செய்யணும். பட படன்னு வேலை செய்யக்கூடாது
மெதுவா பார்த்து சமைக்கணும்….சரியா???
இடது பக்கம் தண்ணீர், வலது பக்கம் உணவு.



ஏ விருச்சிக ராசி பெண்களே,


நம்ம ‘டேஸ்டே’ தனி என்று விதம் விதமாக சமைக்கும்
நீங்க தென்கிழக்கு பார்த்து அல்லது கிழக்கு பார்த்து சமைக்கணும்.


இந்த திசையை பார்த்து சமைத்தால சண்டை வராது!!!
உணவு காய் கறிகள் இடது பக்கம், தண்ணீர் வலது பக்கம்
என்ன ….புரிஞ்சதா???? ‘ஸ்டார்ட்…….’

தனுசு ராசி பெண்களே


எனக்கு தெரிகிறது நீங்க ‘ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா’–
என்று பக்தியுடன் பாடிக்கொண்டே சமைப்பது. அப்படியே கொஞ்சம்
கிழக்கு பார்த்து சமைங்க பார்ப்போம். வலது பக்கம் தண்ணீர்
இடது பக்கம் உணவுப்பொருள்


ஏ மகர ராசி பெண்களே


நீங்க ரொம்ப ‘போல்டான’ மேடம்……உங்களுக்கு தென்மேற்கில்
சமைலறை இருக்க வேண்டும், இடது பக்கம் தண்ணீர், வலது பக்கம்
உணவு….. இனிப்பான நீங்கள் உங்கள் கணவர்,குழந்தைகள்
உங்களை புகழ வேண்டும் என நினைப்பீர்கள்.

கும்ப ராசி பெண்களே


சமைலறை பிரச்சினைகளை சாதுர்யமாக ‘அட்டாக்’ செய்யும்
நீங்கள் தென் கிழக்கு திசையை பார்த்து சமைக்கணும்.
இனிப்பு பண்டம் செய்வதில் வல்லவர் நீங்கள்….



ஏ மீன ராசி பெண்களே


குங்கும பொட்டும், குழந்தை மனமும் கொண்ட நீங்கள் கொஞ்சம்
அலட்சியம் தான் சமையலில்…தெற்கே சமையலறை இருக்க வேண்டும்.

புதுசு புதுசாக கசப்பு இனிப்பு வகைகள சமைத்து
வெற்றியும காண்பீர்கள்.

பொதுவாக வாஸ்து பிரகாரம் தென் கிழக்கு மூலையான அக்னி
மூலையில் தான் அமைய வேண்டும் சமையலறை. அப்படி முடியாத
பட்சம் வட மேற்கு மூலையில் அமைத்துக் கொள்ளலாம்.
என் அபிப்ராயம் வேறு விதம். ஒவ்வொரு ராசிக்கு தகுந்த மாதிரி
சமயலறை அமைத்து நன்றாக சமைத்து சாப்பிட்டு சிறப்பாக
வாழ்வதை கண்முன் கண்டேன்


அதற்காவே பெண்குலம் தழைக்கவே திரு சாமிநாதனை
கேட்டுக் கொண்டேன் எனது இந்த ஆராய்ச்சி முடிவுகளை
வெளியிட…….


எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றும் நினையேன் பராபரமே !!!

tags – ராசி,நட்சத்திரம், சமையலறை,கல்யாண சமையல் , சாதம் ,







திரிசங்கு நட்சத்திரம் பற்றிய புதிய விளக்கம்! (Post No.6962)

Research Article written by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 1 SEPTEMBER 2019


British Summer Time uploaded in London – 9-28 am

Post No. 6962

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

canopus/agastya

நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள் (Post No.3170)

rudraksah-mala-with-gold

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 September 2016

Time uploaded in London:5-42 AM

Post No.3170

Pictures are taken from various sources; thanks.

 

 

 

ருத்ராக்ஷ மஹிமை

நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள்

 

ச.நாகராஜன்

 stars4

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் தனித்தனியே உண்டு.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான அதிதேவதையும் உண்டு.

அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இதை அணிபவர்களுக்கான பலன்கள் மகத்தானவை.

 

எண்   நட்சத்திரம்         அதி தேவதை  அணிய வேண்டிய

                                          ருத்ராக்ஷம்

  • அசுவனி கேது           நவ முகம்
  • பரணி சுக்ரன்         ஷண்முகம்
  • கார்த்திகை சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ரோஹிணி சந்திரன்  த்வி முகம்
  • மிருகசீர்ஷம் செவ்வாய் த்ரி முகம்
  • திருவாதிரை ராகு       அஷ்ட முகம்
  • புனர்பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
  • பூசம் சனி          சப்த முகம்
  • ஆயில்யம் புதன்         சதுர் முகம்
  • மகம் கேது        நவ முகம்
  • பூரம் சுக்ரன்       ஷண்முகம்
  • உத்தரம் சூர்யன்      ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ஹஸ்தம் சந்திரன்    த்வி முகம்
  • சித்திரை செவ்வாய்  த்ரி முகம்
  • சுவாதி ராகு        அஷ்ட முகம்
  • விசாகம் ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • அனுஷ்ம் சனி          சப்த முகம்
  • கேட்டை புதன்          சதுர் முகம்
  • மூலம் கேது          நவ முகம்
  • பூராடம் சுகரன்         ஷண்முகம்
  • உத்தராடம் சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • திருவோணம் சந்திரன்    த்வி முகம்
  • அவிட்டம் செவ்வாய்   த்ரி முகம்
  • சதயம் ராகு         அஷ்ட முகம்
  • பூரட்டாதி ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • உத்தரட்டாதி சனி          சப்த முகம்
  • ரேவதி புதன்         சதுர் முகம்

 

ஒவ்வொரு முகத்திற்கான பலன்களையும் நமது நூல்கள் தந்துள்ளன. அவற்றை இனி காண்போம்.

*********

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5 (Post No.2791)

2srirangam

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8 May 2016

 

Post No. 2791

 

Time uploaded in London :–  5-36 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5

 

.நாகராஜன்

 

IMG_9630 (2)

ஏகாதசி –  சிந்தாமணி என்ற காவேரியில் ஏகாதசியில் ஸ்நானம்.

ஜம்புகேஸ்வரம், மாத்ருபூதம் ரங்கநாதர் இம்முவர்களுடைய வீக்ஷண்யம் இருப்பதால் சிந்தாமணி என்று பெயர் வந்தது. எல்லா ஏகாசதியும் விசேடமே. மார்கழி ஏகாதசி மிகவும் விசேடம். சிதம்பரம் வடமேற்கில் ஏகாதசி விசேடம்

 

துவாதசி – ஐம்பு தீர்த்தம்,  ஸ்ரீரங்கம் லட்சுமி ஸந்நிதானத்தில் உள்ள தீர்த்தம்

 

திரயோதசி – கோகர்ணம் கோடி தீர்த்தம்

 

சதுர்த்தசி – கோகர்ணம்,  ஸ்ரீகாளஹஸ்தி, கேதாரம்,காசி, மத்யார்ச்சுனம், திருவையாறு, மாயூரம் ஆகிய தலங்களில் சிவராத்திரி சதுர்த்தசி தவிர மாயூரத்திலும் கேதாரத்திலும் நாக சதுர்த்தசி விசேடம். தீபாவளியோடு கேதார பூஜை முடிவு பெறும்.

திருவையாறு: காவேரி வடகரையில் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இதற்கு தக்ஷிண கைலாஸம் என்று பெயர்.பஞ்சநத க்ஷேத்திரம். தர்மஸம்வர்த்தனி சமேத பஞ்சநாதேசுவரர் ஆலயம். அப்பருக்கு கைலாஸ தரிசனம் கொடுத்த தலம்.இந்திரன், வாலி ஆகியோரும் பூஜித்த தலம்.

 

 

மாயூரம்: காவேரி தென்கரையில் ஒரு மைல் தூரத்தில் உள்ள தலம். ஒரு அசுரன் காவேரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து, தான் அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். மயூர நாதர் கோவில் உள்ளது. தேவி மயில் ரூபம் எடுத்து ஈஸ்வரனை பூஜித்த தலம்.இந்திராணியும் இங்கு பூஜித்தாள்.

 

அமாவாசை, பௌர்ணமி – காளத்தி, மல்லிகார்ஜுனம் (சிவராத்திரி) அமாவாசை, பௌர்ணமி. ஸகலதீர்த்தம், மாயூரம், அர்த்தோதயம். மஹோதயம்.

 

 

வாரங்கள் பூஜித்த தலங்கள்

 

ஞாயிறு:  திருநாகேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருத்தானமுடையார் கோயில், சாயாவனம்

திங்கள்: திருக்கடையூர்,(திருக்கடவூர்), சிவபுரம், திருவாலவாய், காசி

1859 tiruvaiyaru ther

செவ்வாய்: வைத்தீசுவரன் கோவில், அத்திப்புலியூர், இலந்துறை

புதன்: வெண்காடு (சந்திர புஷ்கரணி)

 

வியாழன்: பெருஞ்சேரி, திருக்கொண்டீசுவரம், கச்சி, கழுக்குன்றம்

வெள்ளி: காஞ்சி (வாமதீர்த்தம்)

சனி: திருநள்ளாறு, ஆரூர்

 

மாதங்களும் பர்வங்களும் பூஜை செய்த இடங்களை ஆகமங்கள் மூலம் அறியலாம்.

 

மேலே கண்ட குறிப்புகளை ஆழ்ந்து ஊன்றி கவனித்து அவரவர்கள் தங்கள் தங்களுக்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

 

mahamakam tank view

தலங்கள் பற்றிய அபூர்வ புத்தகங்கள்

தல முறை பற்றி அபூர்வமான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியாகி உள்ளன.

 

 

திரு இராமசுவாமிப் பிள்ளை அவர்கள் தலமுறைப் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பயனபடுத்தியது போலவே  ஸ்ரீ உ.வே.சாவும் தொடர் எண்ணிட்டு தலங்கள், தீர்த்தங்கள், விமானங்கள் ஆகியவற்றின் சிறப்புகளைத் தொகுத்துள்ளார். 8135 என்ற தொடர் எண்ணை இவரது குறிப்புகளில் காணும் போது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எத்துணை விஷயங்களை இவர் சேர்த்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவை என்னவாயின?!! வருங்காலம் மீட்டுத் தருமா?

 

 

இது தவிர காசியைப் பற்றிய அபூர்வ விவரங்களை காஞ்சி பரமாசார்யாள் ஆசியுடன் தொகுத்துள்ளவர் திரு ரா.வீழிநாதன். (1987)

 

இன்னொரு தலங்களைப் பற்றிய குறிப்பிடத் தகுந்த அபூர்வமான புத்தகம்  ஸ்ரீகாவேரி ரஹஸ்யம் (1962) என்ற நூலாகும்.காஞ்சி பரமாசார்யாள், தமது தொடர்ச்சியான முயற்சியின் மூலம் பல பக்தர்களிடமும் அரிய தல விஷயங்களைச் சேகரிக்குமாறு ஆணையிட்டார். இந்த அபூர்வமான குறிப்புகள் அனைத்தும் ஓய்வு பெற்ற கல்வி இலாகா அதிகாரியான  ஸ்ரீ ஈ.வி. கோபாலையரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் காவேரி நதியை ஒட்டி உள்ள வடபுற க்ஷேத்திரங்கள், தென்புற க்ஷேத்திரங்கள், காவேரி வளர்த்த மகான்கள், காவேரி ப்ரதக்ஷிண விதி, ஸ்நான முறை, காவேரி பற்றிய இலக்கியக் குறிப்புகள், புராணக் குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைத் தொகுத்து காவேரி கலைக் களஞ்சியமாக ஒரு நூலை வெளியிட்டார்.

 

 

ஆன்மீக அன்பர்கள் தல விசேடங்களைப் பற்றிய உண்மையான தொன்மக் குறிப்புகளை அறிய வேண்டுமெனில் இது போன்ற புத்தங்களையும் இது பற்றி நன்கு அறிந்த வல்லாரையும் நாட வேண்டும்.

ganga-arati-modi-abe

Prime Minister of Japan Shinzo Abe and Indian Prime Minister Narendra Modi performing Ganga Arti at Dhashvmegh Ghat in Varanasi on saturday.Express photo by Vishal Srivastav 12.12.2015

வைக்கோல்போரில் ஊசியைக் கண்டெடுத்தவர்கள் நமது தேடலைச் சுலபமாக்கி விட்டார்கள். அவர்களுக்கு வரும் காலமெல்லாம் நன்றி சொல்லும்!

–Subham–

********

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4 (Post No 2788)

3 towers in kanchi

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 7 May 2016

 

Post No. 2788

 

 

Time uploaded in London :–  5-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4

 

.நாகராஜன்

 

 

திதிகள் பூஜித்த தலங்கள்

 

இதே போல 14 திதிகளும் பூஜித்த தலங்கள் வருமாறு:

 

பிரதமைகாஞ்சிபுரம் (காமாட்சி கோவிலுள் காம தீர்த்தம்,

 

புரட்டாசி நவராத்திரி பிரதமை)

காஞ்சிபுரம்: கல்வியிற் பெரிய காஞ்சி பழைய பல்லவ நாட்டின் தலை நகரம். காமாட்சி அம்மன் திருக்கோவிலைக் கொண்டுள்ள தலம். சக்திக்கான தனிப்பெரும் கோவில். ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம். அம்மன் இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரது ஒரு கையில் கரும்பு வில்லும் இன்னொரு கையில் தாமரை மற்றும் கிளியும் உள்ளது. தந்திர சூடாமணி நூலின் படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும்.  இங்குள்ள கைலாச நாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

 

 

துவிதியை – 1) கருவிலி என்கிற துர்க்குணேசுவரபுரம்

 

(யமதீர்த்தம் – யம துவிதியை; ஐப்பசி விசேடம்), 2) தாராசுரம், 3) திருச்செங்காட்டங்குடி

கருவிலி:  யமன், மஹாபலி, திருமால், சூரியன் பூஜித்த தலம். தக்ஷிணாமூர்த்தி விக்ரஹம் மஹாமண்டபத்தின் தெற்கில் உள்ளது. பரணி தீர்த்தம். மஹாமண்டபத்தின் கிழக்கே யமனுக்கு உபதேசம் ஆனது.

 

திருதியை – 1) கேதாரம்அக்ஷய திருதியை, கனகல தீர்த்தம்; கேதார பூஜை ஆரம்பம் 2)சிந்தாமணி

 

சதுர்த்தி – 1) செங்காட்டங்குடி  சித்திரை சுக்கில பட்சம் சதுர்த்தி தீர்த்தம், சித்திரை சுக்கில பட்ச கணபதி பூஜை பண்ணிய தினமாகும்.  2) திருவலஞ்சுழி – சதுர்த்தி உற்சவம்

செங்கட்டாங்குடி : காவிரித் தென்கரைத் தலம்.இறைவன்: கணபதீச்சுரத்தார் இறைவி: திருக்குழல் நன்மாது. தலவிருட்சம் ஆத்தி. தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

chidambaram tower close

Chidambaram temple  tower

பஞ்சமிதவத்துறை (லால்குடி)

(ஏழு முனிவர்கள் பூஜித்து முக்தி பெற்றது ரிஷி பஞ்சமி)

 

லால்குடி

காவிரியின் வடபுறத்தில் இரண்டரை மைல் தூரத்தில் உள்ளது.

ஸ்வாமி: ஸப்தரிஷிநாதர்: ஸப்த ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட தலம். காயத்ரி என்ற சிறு ஆறும் ஓடுகிறது. சிவகாமி சமேத நடராஜர் சன்னதி பிரபலம். சன்னதியில் சிவகங்கை தீர்த்தம் விசேஷமானது. பைரவி வனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.மாணிக்கவாசகர் இயற்றிய புராணம் கொண்டது இத்தலம்.மழவராஜன் குஷ்டரோகம் நீங்கப் பெற்ற இடம். மாங்கல்ய ரிஷி பெருந்திருவாட்டி அம்மையை மணம் செய்து கொண்ட திருத்தலம். இக்கோயிலில் கமலகொத்த நாயனார், ஐயனார் சன்னதி பிரபலமானவை.

 

ஷஷ்டி – ஸ்கந்த ஷஷ்டி – சுப்பிரமணிய தலங்கள்

வெண்காட்டில் மாசி மாத ஷஷ்டியில் மணிகர்ணிகையில் அவபிருதம்; துவாதசியில் கொடியேற்றம். கிருஷ்ணபட்சம் ஷஷ்டி.

 

 

ஸப்தமி – 1) திருவாவடுதுறை 2) மீயச்சூர் 3) சிதம்பரம் ; ஆனித் திருமஞ்சனம் 4)திருவொற்றியூர்

 

திருவாவடுதுறை : காவேரி தென்கரைத் தலம். இறைவன்: மாசிலாம்ணியீசர் இறைவி: மங்கள நாயகி தீர்த்தம் பிரமதீர்த்தம்.இத்தலத்தில் தருமதேவதை தவம் செய்து இறைவனுக்கு வாகனமான விடை ஆயிற்று என்று தல புராணம் கூறுகிறது.

 

ஸப்தமி – 2 பட்ச உற்சவ தலங்கள்

 

சிதம்பரம், வெண்காடும் செங்காடு, மீயச்சூர், ஆவடுதுறை, ஆனைக்கா

 

மீயச்சூர்: காவேரி தென்கரைத் தலம். இறைவர்: முயற்சி நாதர், இறைவி சுந்தர நாயகி தல விருட்சம் வில்வம் தீர்த்தம்: சூரிய புஷ்கரணி

 

அஷ்டமி – பைரவ தீர்த்தம் (அஷ்டமி தீர்த்தம்) , காசி,  ஸ்ரீ சைலம் என்கிற நீலகிரி, ஐயாறும் மதுரை.

கார்த்திகை ம்கா காளாஷ்டமி, பைரவாஷ்டமி, ஆவணி முதல் பங்குனி வரை காளாஷ்டமி

8 பைரவர்கள் தோன்றிய தினம்: கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி மாத்திரம் மகா காளாஷ்டமி; மகா பைரவர் பிறந்த தினம்; கோடி சிவராத்திரி புண்ணியத்தையும் ஒருங்கே தர வல்லது.

 

 

நவமி  – காஞ்சீபுரம்; காமதீர்த்தம் நவமி சிதம்பரம் பரமாநத கூபம். திருவீழிமலை விஷ்ணு தீர்த்தம்; புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் நவமி

தசமி – திருவாரூர் விஜய தசமி தேவதீர்த்தம் என்ற கமலாலயம்; விஜயலக்ஷ்மி பூஜை பண்ணி கமலாம்பிகை பிரசாதத்தினால் விஜயத்தை அடைந்ந்தபடியால் விஜயதசமி என்று பெயர்; விஜயபுரம் என்று கிழக்கே இருக்கிறது.

 

-அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3 (Post No.2785)

meenakshi base view

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 6 May 2016

 

Post No. 2785

 

 

Time uploaded in London :–  5-51 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3

 

.நாகராஜன்

 

மூலம்மதுரை

மதுரை: தத்தன் என்னும் பாண்டியன் அரசாளுகையில் சமணர் அனுப்பிய நாகம் உமிழ்ந்த விஷத்தின் கொடுமை சிவபெருமானுடைய சடையில் இருந்த சந்திரனிடத்துள்ள அமுதத்துளியால் சமனதமுற்று மதுரமாயிற்று. அதனால் இந்தத் தலம் மதுரை என்ற பெயரைப் பெற்றது. திருவாலவாய், திரு நள்ளாறு, திரு முடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு மாடங்கள் கூடும் இடமாகையால் நான்மாடக் கூடல் என்ற பெயர் பெற்றது.சிவபெருமானின் அழகிய வடிவைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் சிவனுக்குச் சொக்கன் என்ற திருநாமம் சாத்தித் தொழுதான்.பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய திருவிளையாடல் உள்ளிட்ட 64 திருவிளையாடல்களின் அற்புதத் தலம்.

 

 

பூராடம்திருச்செந்தூர்

 

திருச்செந்தூர்: முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக அமைந்த கடற்கரைத் தலம். வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றிருக்கும் திருத்தலம். சூரபத்மனை போரில் வென்ற தலமும் இதுவே. ஐப்பசி மாதம் நடக்கும் சூரசம்ஹாரத் திருவிழா பிரபலமான ஒன்று. நாழிக் கிணறு தீர்த்தம் கடலின் அருகே இருந்த போதும் உப்புக் கரிக்காமல் சுவையாக இருப்பது விந்தைக்குரிய ஒன்று.

 murugan senthiandavan

 Tiruchendur Skanda

உத்திராடம்சஙகரநயினார் கோவில்

 

சங்கரநயினார் கோவில் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலம். இறைவன்: சங்கரலிங்க ஸ்வாமி இறைவி: கோமதி அம்மன் என்னும் ஆவுடையம்மன். உக்கிரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோவில். ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தவசு திருவிழா பிரபலமானது. அம்மன் சிவனை வேண்டி ஊசிமுனையின் மேலிருந்து தவம் புரியும் திருத்தலம். அம்மனின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுத்த திருத்தலம். உடம்பில் கட்டி உள்ளிட்ட நோய்களிலிருந்து காக்கும் அரும் தலம்.

திருவோணம் – அர்த்தோதயம், மகோதயம்

 

 

அவிட்டம், சதயம்காளஹஸ்தி, மல்லிகார்ஜுனம், கோகர்ணம் (சிவராத்திரி)

 

காளஹஸ்தி: இறைவன்: காளத்திநாதர் இறைவி: ஞானப் பூங்கோதை.கண்ணப்பர் அருள் பெற்ற தலம். சிலந்தி, பாம்பு, யானை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது சிறந்த ராகு- கேது க்ஷேத்திரமாகும்.

கோகர்ணம்: வடநாட்டில் அமைந்துள்ள தலம். இறைவன்: மஹாபல நாதர் இறைவி: கோகர்ண நாயகி தீர்த்தம்  :கோடி தீர்த்தம்

 

 

பூரட்டாதி, உத்திரட்டாதி – திருவாரூர் (தேவதீர்த்தம்)

 

ரேவதி – திருக்கடையூர் (அமிருத தீர்த்தம், திருவாவடுதுறை  (மாஸம் பூர்வ பட்சத்தில் ஆரம்பமாகி அமரபட்சத்தில் தீர்த்தம் – அமரபட்சம்.

 

-தொடரும்

 

 

 

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1 (Post No 2779)

hindu-zodiac

Date: 4 May 2016

 

Post No. 2779

 

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.ஆ

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1

 

.நாகராஜன்

star2

நட்சத்திர தலங்கள்

ஹிந்து அற நூல்கள் காட்டும் வழிகாட்டுதலின் படி 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே. அவரவரக்கு உரிய காலத்தில் உரிய பலனை வழங்கும் அற்புத ஆற்றலை அவை கொண்டிருக்கின்றன.

இந்த 27 நட்சத்திரங்களும் பூஜித்த தலங்கள் இந்தியாவெங்கும் உள்ளன. இவற்றைத் தனது இடையறாத ஆய்வால் கண்டு தமிழ்த்தாத்தா ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

அதிகாரபூர்வமான ஆய்வு என்பதால் இதில் உள்ள சிறப்பை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நட்சத்திரங்கள் பூஜித்த தலங்கள் வருமாறு:-

 

அசுவதி –  திருக்கடையூர்

மயிலாடுதுறைதரங்கம்பாடி இரயில் கிளைப்பாதையில் 22 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: அமிர்தகடேசர். இறைவி அபிராமி அம்மை. அமிர்த புஷ்கரணி உள்ள தலம். எம சம்ஹாரம் நடந்த தலம். சித்திரை மாதம் 18 நாட்கள் நடக்கும் விழாவில் மக நட்சத்திரத்தில் இத்திருவிழா சிறப்புற நடக்கும்.

 

பரணிஸ்ரீ வாஞ்சியம்

ஸ்ரீ வாஞ்சியம்: கங்கை குப்தமாக (மறைவாக) வசிக்கப்பெற்ற தலம்.சுவாமி சூலத்தால் குத்தி உண்டாக்கப்பெற்றது. சூலம் குத்திய அடையாளமாக மூன்று கிணறுகள் இங்கு உண்டு. யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். லட்சுமி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த தலம். சந்தன விருட்சம் பிரகாரத்தில் இருக்கிறது. கோவிலின் வடக்கில் உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்நானம் செய்வது விசேஷம். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு யம வாதனை இல்லை. கோவிலில் யமனுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சுவாமிக்கு யமவாகனம் உள்ளது.காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் தென்னாட்டுத் தலங்கள் ஆறினுள் ஒன்று. (இதர ஐந்து தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மாயூரம், திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு)

 

கார்த்திகைசரவணப் பொய்கை, காசி, அருணாசலம்

காசி:மோட்சபுரிகள் ஏழில் நடு நாயகமாக விளங்கும் தலம். இந்தப் பிறவியிலேயே முக்தி தரும் சிறப்புடைய தலம். பிரளய காலத்தில் மூலப் பொருள், அனைத்தையும் ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது. அதைப் பத்திரப்படுத்தும் இடம் காசி. சாலோக்யம், சாரூப்யம், சாந்நித்யம் சாயுஜ்யம் என்ற நான்கு வகை முக்திகளில் இறைவனே ஆதல் என்ற சாயுஜ்ய  முக்தி தரும் தலம். ஜைன மதத்தைத் தோற்றுவித்த பார்சுவநாதர் பிறந்த இடமும் இதுவே.

 

ரோஹிணி – ஆனைக்கா, எல்லா விஷ்ணு தலங்களும்

திரு ஆனைக்கா : காவிரியின் வடபுறம் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அப்புலிங்க தலம்.சுவாமி பெயர் – ஜம்புகேஸ்வரர். அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.இங்கு ஒரு யானையும் ஒரு சிலந்தியும் பூஜை செய்து கொண்டு வந்தன.வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேல் கூடு கட்டும். யானை தினமும் காவேரி ஸ்நானம் செய்து துதிக்கையில் காவேரி தீர்த்தம் ஏந்தி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும். சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். இதைக் கவனித்து வந்த சிலந்தி ஒரு நாள் கோபம் கொண்டு யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடிக்கவே  யானை வலி பொறுக்க முடியாமல் புரண்டு துடித்து மரணம் அடைந்ஹது. சிலந்தியும் மாய்ந்தது.இச்சிலந்தி மறு ஜன்மத்தில் கோச்செங்கணான் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை ஏறி வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

இங்கு தவம் செய்து வந்த ஜம்பு மஹரிஷி தலையில் நாக மரம் உண்டாயிற்று. தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்த படியால் இது ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. இந்த தலத்தை ஜம்புகேஸ்வரம் என்று அழைப்பர். பஞ்ச பிரகாரங்கள் உள்ள இந்தக் கோவிலில் அம்பாள் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இரண்டாம் பிரகாரத்தில் ராமபிரானால் கட்டப்பட்ட பெரிய மண்டபம் உள்ளது.

தொடரும்