‘எல்லாம் நன்மைக்கே’ கதை (Post No.4676)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London – 7-22 am

 

Post No. 4676

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

ஒரு ராஜாவிடம் ஒரு மந்திரி பணியாற்றினார். நாட்டில் எது நடந்தாலும் ‘எல்லாம் இறைவன் செயல்- எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லி, சுருக்கமாகப் பேசி முடித்து விடுவார். ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை நறுக்கும்  போது    ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது. மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று கேட்டார். அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று பேச்சைத் துவங்கினார்.

அரசனுக்கு வந்ததே கோபம்! யார் அங்கே? இந்த அமைச்சரைக் கொண்டு சிறையில் அடையுங்கள் என்று உத்தவிட்டான். ராஜாவின் கட்டளைப்படி மந்திரியும் சிறையில் தள்ளப்பட்டார்.

வைத்யரை அழைத்தார். அவர் வந்து மூலிகைகளைக் கசக்கி சாறு பிழிந்து ஒரு கட்டும் போட்டார்.

 

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள்,  நாட்டு மக்கள் மன்னரைச் சந்தித்து முறையிட்டனர்:

“மன்னர், மன்னவா! எங்கள் கிராமங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து ஆடு, மாடுகளைக் கொன்று குவிக்கின்றன. தாங்கள் அவைகளை வேட்டையாடி எங்களைக் காப்பாற்ற வேண்டும்.”

 

இதைக் கேட்ட மன்னவன் புடை சூழ, படை சூழ வேட்டைக்குப் புறப்பட்டான். காட்டு விலங்குகளை வேட்டை ஆடினான். வழக்கமாக வரும் மந்திரியோ சிறையில் போடப்பட்டதால் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. எல்லோரையும் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில் போய்ப் படுத்தார். திடீரென்று ஒரு சிங்கம் அவர் மீது பாய்ந்தது. அவர் காயங்களின் மீதான கட்டுகளைக் குதறிவிட்டு, அவரைக் கொல்லாமல் போய் விட்டது. மன்னர் பயந்து நடுங்கி, தன் படை சூழ நாட்டுக்குத் திரும்பி வந்தான். சிறையில் அடைத்த அமைச்சரை அழைத்து இதற்கு என்ன விளக்கம் என்று கேட்டான்.

அவர் வழக்கமான பல்லவியை ஆரம்பித்தார்—“எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- ஆண்டவன் அருள்- நீங்கள் காயப்பட்டு இருந்ததால் சிங்கம் உங்களைச் சாப்பிடாமல் சென்றுவிட்டது. பொதுவாக சிங்கம்  இறந்த விலங்குகளையோ காயம் அடைந்த விலங்குகளையோ உண்ணாது. ஆகையால் அது உங்களை விட்டது அதான்! நான் நீங்கள் விரல் வெட்டப்பட்ட அன்றே சொன்னேனே- எல்லாம் நன்மைக்கே என்று”.

 

உடனே அரசன் கேட்டான்: “அது சரி; நான் உங்களை சிறையில் அடைத்தேனே.அதுவும் நன்மைக்கோ!” என்று சொல்லி நகைத்தான்.

 

மந்திரி சொன்னார்

 

“ஆமாம்; அன்று நீங்கள் வேட்டைக்குப் போனபோது நான் மட்டும் அருகில் இருந்து இருந்தால் என் உடலைக் குதறி இருக்கும்; என் உடம்பில் காயம் ஏதும் இல்லாததால் என்னைச் சாப்பீட்டிருக்கும்.”

 

இந்தக் கதையை கிருபானந்த வாரியாரும் உபந்யாசங்களில் சொல்லுவார் –கொஞ்சம் மாற்றங்களுடன்.

 

அமைச்சர் சிறையில் இருந்த போது அரசன் மட்டும் வேட்டைக்குச் சென்றதாகவும், அவரை நரபலி கொடுக்கும் காபாலிகர் கடத்திச் சென்று காளிக்குப் பலிகொடுக்கும் முன், அவர் கைகளில் காயம் இருப்பதைப் பார்த்து விடுதலை செய்ததாகவும் சொல்லுவார். ஏன் எனில் காளிக்குப் பலி கொடுக்கும் உடல் சிறிதும் காயம் இன்றி இருக்க வேண்டும் என்பது காபாலிகரின் நம்பிக்கை!

 

எல்லாம் இறைவன் செயல் என்பதற்கு இது போல ஏராளமான கதைகள் உண்டு.

 

–சுபம்—

TAGS– எல்லாம் நன்மைக்கே, இறைவன் செயல், மந்திரி,

காபாலிகர், நரபலி

இந்துக்களின் நரபலி யக்ஞம்! 179 பேர் ‘படுகொலை’? (Post No.4270)

Written by London Swaminathan

 

Date: 4 October 2017

 

Time uploaded in London- 11-07 am

 

Post No. 4270

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகில் ரிக் வேதத்தை அலசி ஆராய்ந்தது போல வேறு எந்த மத நூலையும் எந்த வெள்ளைக்காரர்களும் மார்கஸீய வாந்திகளும் ஆராய வில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி! இவர்கள் எல்லா சமய நூல்களையும் இப்படி அணுகி இருந்தால் இவர்கள் ‘யோக்கியர்’கள். ஆனால் மற்ற சமய நூல்களில் சொன்னவற்றை நியாயப்படுத்தி எழுதினார்கள் (குத்து, வெட்டு, கொலை செய், கற்பழி) அவைகளைக் குறைகூறவில்லை. சுமார் 50 வெள்ளைத் தோல்களும் , நூற்றுக்  கணக்கான மார்கஸீய வாந்திகளும் இந்திய வரலாறு பற்றி எழுதியதை இன்றுவரை பாட புத்தகத்தில் வைத்துள்ளனர். நான் மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சரித்திரப் பட்டம் வாங்கியவன். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவமிகளின் உபந்யாசங்களில் உள்ள சரித்திரம் எதுவும் அதில் இல்லை. மார்கஸீய, காங்கிரஸ் தில்லுமுல்லுகள் எழுதிய — வெள்ளைக்கார்கள் எழுதிய —-டல்ஹௌசி பிரபுவின் சீர்திருத்தம், ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றுவது ஏன்? என்று பல பாடங்களைப் படித்துதான் பட்டம் வாங்கினேன்.

ஆனால் 70 வருடங்களுக்கு முன் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் பேசிய உரைதனில் பேசிய போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மனின் நாலாவது நூற்றாண்டுக் கல்வெட்டு கண்டு  பிடிக்கப்பட்டதும், துருக்கியில் கி.மு 1380 ஆண்டு வேத கால தெய்வக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டதும் எந்த சரித்திரப் புத்தகத்திலும் இல்லை. மத் தியப்பிரதேசத்தில் தாரா என்னும் இடத்தில் மசூதிக்குள் சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் அவர்களுடைய சொற்பொழிவு மூலம் அறிந்ததே!

 

அயோக்கியர் எழுதிய வரலாற்றை விட்டு விட்டு வெள்ளைத் தோல் எழுதியவற்றுக்கு வருவோம். வேத கால இலக்கியங்களை சுமார் 50 வெள்ளையர்கள்– இல்லை இல்லை கொள்ளையர்கள்—- ஆராய்ந்து பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன் மொழிகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் நூற்றுக் கணக்கான நூல்களையும் எழுதிக் குவித்துள்ளனர். அவைகள் ஆங்கிலத்தில் உள்ளதால் அவை எல்லாம் பெரிய ஆராய்ச்சி நூல்கள் என்று அக்காலத்தவர் கருதினர் (ஆனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்; அவைதான் எனக்கும் பயன்படுகின்றன! அவற்றைப் படித்தபின்னர் அவர்களே அவர்களை முட்டாள் என்று காட்டிவிட்டனர் என்பதாவது எனக்குத் தெரிந்தது)

 

வேதங்கள் நான்கு: ரிக், யஜூர், சாமம், அதர்வணம்.

அவற்றை அடுத்து வந்தவை பிராமணங்கள் எனப்படும் உரைநடை இலக்கியம். இவை பிரம்மாண்ட அளவில் இருக்கின்றன. அப்போது மோசஸ் பிறக்கவில்லை . இதுவரை மோஸசுக்கு வரலாற்று ஆதாரம் தொல்பொருட்துறை ஆதாரம் கிடைக்கவில்லை ஆனால் அவர்தான் மூன்று மதங்களுக்குத் தலைவர்!!!

 

வெள்ளைக்கார  “யோக்கியர்” இதை எல்லாம் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். விக்கிபீடியாவைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மூர் திராவிட தத்துப் பித்துகளுக்கும் “கெக்கெப் பிக்கே”க்களுக்கும் இது புரியாது. அவ்வளவு மூளை!!!!

பிராமண்ட பிராமண நூல்களை அடுத்து வந்தவை ஆரண்யகங்கள் ( காட்டு நூல்கள்) அவற்றை அடுத்து வந்தவை உலகப் புகழ் பெற்ற உன்னத உபநிஷத்துகள்.

 

சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு வரலாற்று, தொல்பொருட்டுறை ஆதாரங்கள் இருக்கின்றன; கி.மு 1400 முதல்; சரஸ்வதி நதியின் விஞ்ஞானச் செய்திகள், வேதங்களை கி.மு 2000க்கு முந்தியவை என்று காட்டிவிட்டன. சுருங்கச் சொன்னால் வேதங்களோ பிராமணங்களோ தோன்றிய காலத்தே  உலகில் தமிழ் மொழி இல்லை, கிரேக்க மொழி இல்லை, லத்தீன் மொழி இல்லை; கொஞ்சம் சீன மொழியும், ஹீப்ரூ /எபிரேய மொழியும் இருந்தன. மற்ற மொழிகள் இன்று மியூசியங்களில் உள்ளன.

 

ஆக இவ்வளவு பழமையான பிராமண இலக்கியங்களில் என்சைக்ளோபீடியா போல பல விஷயங்கள் உள்ளன அவற்றின் சப்ஜெட்களை- பொருளடக்கம், இன்டெக்ஸ் போட்டாலே அவர்கள் பிரஸ்தாபிக்கும் விஷயங்களின் பட்டியல் கிடைத்துவிடும்! கணிதம், வான சாத்திரம், அரசனின் பட்டாபிஷேகம் முதலியன குறித்து அவர்கள் சிலாகிக்கும் விஷயங்களைக் கண்டால், வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் நல்ல ஜோக் புக்ஸ் JOKE BOOKS என்று நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; பசுமரத்தாணி போலப் பதியும்.

 

179 பேர் படுகொலை! நரபலி!!

பிராமண நூல்களில் அஸ்வமேத யாகம், ராஜ சூய யாகம், புருஷமேத யாகம் குறித்துப் படித்த வெள்ளைக் காரர் களுக்கு ஒரே குஷி; மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய கூலிகள், இது என்னத் தத்துப் பித்து உளறல் என்று பரிகசித்தனர். இதை வைத்தே இந்துமதத்தை கோழிகளைக் கூடைக்குள் அமுக்குவது போல ஒரே அமுக்காக அமுக்கிவிடுகிறேன் பார் என்று கொக்கரித்தார்கள்; மெக்காலே போன்றோர் இந்த வேகத்தில் ஆங்கில கல்வி பரவினால் இந்தியாவும் இராது; இந்துமதமும் இராது என்று எழுத்தில் வடித்தனர். நம்மூர் திராவிடங்களும் ஜஸ்டிஸ் கட்சிகளும் பலமாக மண்டையை ஆட்டின.பரிதபக் கேஸுகள்!!!

 

சோழன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் செய்தது புற நானூற்றில் உள்ளது. பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது புறநானூற்றிலும் காளிதாசனின் ரகுவம்சத்திலும் — குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சோழப் பேரசன் கரிகால் பெருவளத்தான் பருந்து வடிவ யாக குண்டம் நிறுவி வேள்வி வேட்டதும், ரிக் வேதம் சொல்லுவது போல எல்லோரையும் ஏழு அடி நடந்து வழியனுப்பியதையும் புற நானூறும் ஏனைய சங்க நூல்களும் செப்புகின்றன. வருணனையும், இந்திரனையும், விஷ்ணுவையும் தமிழ்க்கடவுள்கள் என்று ‘ஒல்காப்புகழ் தொல்காப்பிய’னும் செப்பி விட்டான். இந்த 2000 ஆண்டுக்கு முந்தைய விஷயங்கள் வெள்ளைக்காரர்

களுக்குத் தெரியாது!

 

கால்டுவெல் போன்றோர் உளறிய உளறல்களை மரத் (மறத்) தமிழர்கள் ஆங்காங்கே மறுத்து அடிக்குறிப்பு சேர்த்தனர்.

 

பிராமண நூல்களில் சதபத, ஐதரேய , தைத்ரீய பிராமணங்கள் யாக யக்ஞ்ங்களை விரிவாக எடுத்துரைக்கின்றன. அதில் தைத்ரீய பிராமணம் யஜூர் வேதத்தைச் சேர்ந்தது. அதில் புருஷமேத யக்ஞம் எனப்படும் நரபலி யக்ஞத்தில் 179 பேர் தீயில் ஆகுதி அளிக்கப்பட்டதாக பட்டியல் உள்ளது அதைப் அடித்த வெள்ளைகளுக்கு ஒரே ஆனந்தம்! இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்று போதுமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்!

 

மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற அரை வேக்காடுகள்– மான் தோல் போர்த்திய புலிகள்  — சாயனர் சொன்ன வியாக்கியானத்தைச் சொல்வதாக சொல்லி — அவர் சொல்லாத விஷயத்தையும் சேர்த்தனர்-

 

 

‘ஆரிய’ என்ற சொல்லின் பொருளை ‘ரிஷி முனிவர்கள்’, ‘வடக்கில் இமயத்தின் அடிவாரத்தில் வாழ்பவர்கள்’- ‘சம்ஸ்கிருத மந்திரங்களில் வல்லவர்கள்’- ‘பண்பாடு மிக்கவர்கள்’- ‘நாகரீகம் தெரிந்தவர்கள்’- ‘மாண்புமிகு’– என்ற உண்மைப் பொருளைப் பாரதி பாடல்களிலும் புற நானுற்றிலும் காணலாம்– மாக்ஸ்முலர் வகையறாக்கள் ஆரியர் என்பது ஒரு இனம் என்றும் அதில் தானும் ஒருவன் என்றும்- அவர்கள் ஜெர்மனி முதலிய இடங்களில் வாழ்ந்தனர் என்றும் இந்தியாவுக்குள் கி.மு 1500 வாக்கில் நுழைந்திருக்கலாம் என்றும் கதை கட்டினர். இவை எல்லாமின்று ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப்’ போய்விட்டன.

 

ஏனெனில் சரஸ்வதி நதியின் விஞ்ஞான ஆராய்ச்சியும் நாஸா NASA புகைப்படங்களும் வெள்ளைத் தோலை உரித்துவிட்டன.

பிராமண நூல்களில் புருஷமேத யக்ஞத்தில் பலியிடப்பட்ட, அல்லது பலியிடப்பட வேண்டிய 179 பேரின் பட்டியல் உள்ளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் — மூன்று கட்டுரைகளில் – 179 பேரின் பட்டியலையும் கொடுத்துவிட்டதால் இங்கே தரப்போவதில்லை..

 

அதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மைகளை மட்டும் விண்டுரைப்பேன்!

 

1.தீயில் தூக்கிப் போட வேண்டிய முதல் ஆள் பிராமணன் என்று பட்டியல்  துவங்குகிறது. இதைப் படித்தவுடன் வெள்ளைத்தோல்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. சூத்திரன், ராக்ஷசன், அசுரன் என்று சொல்லி இருந்தால் , பார்த்தீர்களா பிராமணர்களின் அட்டூழியங்களை என்று எழுத முடியும்.

2.இதற்குப் பின்னர் போர் வீரன், வணிகப் பெருமகன், சூத்திரன் ஆகியோர் வருகின்றனர்.

 

  1. இந்தப் பட்டியல் மறை மொழியில் உள்ளது. அதாவது ஒரு சமுதாயம் என்பது இவர்கள் இல் லாமல் இல்லை என்று உணர்த்த எழுதப்பட்டது போல உளது. காரணம் என்னவெனில் இப்படி ஒரு யாகம் நடந்ததாக எங்குமே தகவல் இல்லை. பல நூறு ராஜாக்களில் ஒருவரான ஹரிசந்திரன் காலத்தில் சுனஸ்சேபனைப் பலிகொடுக்க முயன்றபோது புரட்சித்தலைவர் விசுவாமித்ரர் தடுத்துவிட்டதாத இருக்கிறது. சிறுத்தொண்டர் (பெரிய புராண) ஆதி சங்கர நரபலி முயற்சிகளும் காபாலிகர்களால் முயலப்பட்டதே அன்றி புருஷ மேத யக்ஞத்தின் பகுதியாகாது. மேலும் சங்கரர், சிறுத்தொண்டர் கதைகளும் தமிழ்த் திரைப்படங்கள் போல இனிதே- சுபம் – என்றே முழுமை பெறுகின்றன.

 

  1. 179 பேர் பட்டியலில் பல சொற்களுக்கு வெள்ளைகளுக்கே அர்த்தம் புரியவில்லை; விளக்கம் இன்றி அப்படியே எழுதிவிட்டனர்.

 

  1. இந்தப்படியலில் டாக்டர், வான சாத்திர அறிஞன், பொற்கொல்லன் ரதகாரன், கொல்லன், இசை துறை கலைஞர்கள், நாட்டிய சிகாமணிகள், இசைக்கருவி வாசிப்போர், மன்னருக்கு வரிவசூல் செய்வோர், மன்னருக்குப் பட்டாபிஷேகம் செய்வோர் ஆகியோரும் உள்ளது. அதாவது, இவர்கள் ஒவ்வொருவராக தீயில் போடப்பட வேண்டும்

 

ஆக இந்தப் பட்டியலை இலக்கிய பூர்வமாக, எழுத்துக்கு எழுத்து அர்த்தம் செய்ய முடியாது என்று கண்ட வெள்ளைகளும்  மார்கஸீய வாந்திகளும் பேசாமடந்தை ஆகிவிட்டன. இதைப் பற்றி பிரஸ்தாப்பிபதைவிட இதை தொட்டும் தொடாமலும் பட்டும் படாம லும் சொல்லிவீட்டு அந்தக் காலத்தில் — ஆதிகாலத்தில் — இருந்த நரபலியின் எச்சம் -சொச்சம்- மிச்சம்- மீதி என்று ஒரு வரி எழுதி விட்டு ஓடிப்போய் விட்டார்கள்

 

வெடிகுண்டு வெடிக்கலாம் என்று வந்த பயங்கரவாதிகளுக்கு புஸ்வாணமே கிடைத்தது!!!!!

 

  1. இதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால் 50 வெள்ளைகளும் 100 மார்கஸீயங்களும் 1000 திராவிடங்களும் ஒரு மந்திரக் கருத்திலும் ஒருமித்த கருத்து கொள்ளவில்லை. ஆரியர் கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று மட்டும் சொன்னால் போதும்– காட்டினால் போதும்– 300 வருஷம் நம்மை ஆண்ட வெள் ளையன் தயவும் ரொட்டித் துண்டும் கிடைக்கும் என்று வா லாட்டின.

7. இதைவிடப் பெரிய விசயம் என்ன வென்றால், கி,மு.1200ல் படிப்பறிவற்ற –மாடு மேய்க்கும்—அநாகரீகக் கும்பல் கைபர் கணவாய் வழியாக நுழைந்தது என்று சொல்லிவிட்டு- கிமு. 1000ல் அவர்கள் பிராமணங்களில் சொன்ன விஷயங்களைப் பட்டியல் போடுவது – “சூடான ஐஸ்க்ரீம்” என்று சொல்லுவது போல இருந்தது. உலகில் எந்த நாகரீகமும் இப்படி வளர்ந்ததாக சாட்சியம் இல்லை. நாம் சுமேரிய, எகிப்திய நாகரீகம் பற்றிப் படிப்பதெல்லாம் 5000 ஆண்டு வரலாறு. ஆக அதே அளவுகோலை இந்துக்களுக்கும் வைத்தால் நாம் 10,000 ஆண்டு வரலாறு உடையவர் ஆகி விடுவோம். அது எப்படி?

பிரம்மாண்டமான வேத இலக்கியமும் பிராமணங்களும் உருவான போது உலகில் வேறு எந்த இலக்கியமுமே இல்லை. எகிப்திய, பாபிலோனிய இலக்கியம் எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. ஆனால் ரிக்வேதச் சொற்களை, கொட்டாம் பட்டி காய்கறிக்கூடைக் கிழவி முதல் இமயமலை ரிஷிகேஷ் பண்டிதர்வரை இன்று வரைப் பேசி வருகின்றனர்; போற்றி வருகின்றனர். நமக்குத் தெரிந்த தமிழ், லத்தீன், கிரேக்கம் ஆகியவற்றுக்கு அப்போது இலக்கியமே இல்லை. ஹீப்ருவீல் அதற்குப் பின்னர்தான் மோசஸ் கதைக்கத் துவங்கினார். அவருக்கும் வரலாற்று ஆதாரம் இல்லை. இலக்கிய ஆதாரம் மட்டுமே உளது. சீன மொழிக் கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உளது. அழிந்து போன எகிப்திய, பாபிலோனிய  கவெட்டுகளும் ஜில்காமேஷ் போன்ற பிதற்றல்களும் உப்பு புளி எண்ணை விற்ற கணக்குகளுமாக உளது. 1,20,000 களிமண் கல்வெட்டுகள் கிடைத்தன. ஆயினும் ரிக்வேதம் போல ஒரு கவிதைத் தொகுப்பு கிடையாது. நாமோ அதை வியாசர் கி.மு 3102-க்கு முன் தொகுத்ததாகப் படிக்கிறோம்.

 

ஆக, நரபலி யாகம் நடக்கவில்லை. அதில் பிராமணன் முதலான 179 பேரைத் தீக்கிரையாக்கவும் இல்லை. அவர்கள் வேள்வி என்று சொன்ன சொல் பிறகாலத்தில் பகவத் கீதையில் வேள்வி என்ற சொல் பல விஷயங்களுடன் இணைக்கப்பட்டது போலப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

 

நானே வெள்ளைக்கரன் மொழிபெயர்ப்பை வைத்துதான் இவ்வளவையும் எழுதுகிறேன். அவன் எத்தனை தப்பு விட்டானோ? திரித்து எழுதினானோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்து அறிஞர்கள் மஹா நாடு கூட்டி ரிக் வேதத்தில் உள்ள 10,000 மதிரங்களுக்கும் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும் அல்லது கான்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற பெரியோர்கள் சொல்லுவது போல அவைகளை அர்த்தம் பாராமல் மந்திரங்களாக உச்சரிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் ஆதிசங்கரர்களும் வியாச மகரிஷிகளும் நமக்கு விளக்கம் தருவர் என்று நம்புவோமாக.

 

TAGS: இந்து, நரபலி, யக்ஞம், புருஷமேதம், 179 பேர் படுகொலை

 

-சுபம்—

 

எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657)

Written by London swaminathan

 

Date: 21 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 19-56

 

Post No. 3657

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் ஆரம்பகால மன்னர்கள் (பழைய ராஜ்யம் Old Kingdom) இறந்தபோது அவர்களுடன் நூற்றுக்கணக்கான அடியாட்கள், காமக்கிழத்தியர் (Concubines), குள்ளர்களும் (Dwarves) புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது.இவர்கள் தானாக உயிர்த் தியாகம் செய்தார்களா அல்லது பலவந்தமாக நரபலி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்வி.

 

வால்மீகி ராமாயணத்தில் ராமன் சரயு ஆற்றில் விழுந்து உயிர்த் தியாகம் (ஜல சமாதி) செய்தபோது அவரோடு ஏராளமான பொது மக்களும் தாமாக முன்வந்து  உயிர்த் தியாகம் செய்த செய்தி உள்ளது.

 

திருஞான சம்பந்தர் திருமண நாளன்று  மனைவியுடன் அக்கினியில் புகுந்தபோது அவர் ஏராளமானோரை அழைத்துச் சென்றார். இது போல மன்னர்களும், புனிதர்களும் இறக்கும்போது அவர்களுடன் சென்றால் சுவர்க்கத்துக்குள் எளிதாகப் போக முடியும்; இது சொர்க்கத்துக்கு ஒரு சுருக்குவழிப்பாதை (Short cut route) என்பது மக்களின் நம்பிக்கை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தபோது பிசிராந்தையார் முதலியோரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும் இந்தக் காரணத்தால்தான். வடக்கிருத்தல் என்பது ஒரு புனித நோன்பு.

மஹா பத்தினியான சித்துர் ராணி பத்மினி , அலாவுதீன் கில்ஜியின் கரங்கள் தன் மீது பட்டுவிடக்கூடாதென்பதற்காக தீக்குளித்தபோது அவளுடன் நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வீராங்கனைகள் தீக்குள் பாய்ந்து உயிர் நீத்ததற்கும் இதுவே காரணம். போரில் இறப்பவர்களுக்கு வீர சுவர்க்கம் கிர்டைக்கும் என்பது பகவத்கீதையிலும் புறநானூற்றிலும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. போருக்கு முன்பாக தன்னைத்தானே பலிகொடுத்து வீரத்தைத் தூண்டிவிடும் வீரர்களின் சிலைகள் தமிழ்நாடு முழுதும் உள்ளன. இது  மஹாபாரத காலத்தில் துவங்கியது மஹாபாரதத்தில் வரையப்பட்டுள்ளது.

 

 

எகிப்தில் நடந்தது என்ன?

எகிப்திலும் தாமாக முன்வது இறந்தனரா என்பதே கேள்வி

பிளிண்டர்ஸ் பெற்றி Flinders Petrie என்பவர்தான் முதல் முதலில் எகிப்தில் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவர் ABYDOS அபிதோஸ் நகரில் 1900ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடத்தினார். முதல் அரச வம்சத்தைச் சேர்ந்த தஜெர் (Djer of First Dynasty) என்ற மன்னரின் புதைகுழிக்குப் பக்கத்தில் 317 துணைப் புதைகுழிகள் இருந்தன. இது தவிர நைல் நதி ஓரமாக ஏராளமான கல்லறைகள் இருந்தன.

 

முதல் அரச வம்சம் தொடர்பான சில விஷயங்கள் சின்னச் சின்ன கல்வெட்டு வில்லைகளாகக் கிடைத்தன. அதில் முக்கிய தர்பார் நிகழ்ச்சிகளும் சமயம் தொடர்பான சடங்குகளும் வரையப்பட்டுள்ளன.

 

இரண்டு வில்லைகளில் பயங்கரக் காட்சிகள் உள்ளன. உயிருடனுள்ள ஒரு கைதியின் நெஞ்சில் ஒருவன் கத்தியைப் பாய்ச்சுகிறான். அவனது ரத்தத்தைப் பிடிப்பதற்காக அருகிலேயே ஒரு கிண்னம் வைக்கப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் தெரியவில்லை. ஆனால் போர்க்கைதிகள், குற்றவாளிகளை சமயச் சடங்குகளில் பலி கொடுப்பது தெரியவந்த்துள்ளது.

 

ஆனால் ஒவ்வொரு மன்னர் இறந்தபோதும் ஏராளமானோர் பலிகொடுக்கப்பதற்கான ஆதாரஙள் எதுவும் இல்லை. ஆரம்ப கால கிசா பிரமிடுக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக கல்லறைகள் இருந்தபோதும் அவை எல்லாம் அரசாங்க திகாரிகள் இறந்தபின்னர் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டவையே. இது அவர்களுக்குக் கிடைத்த ஒரு சலுகை!

முதல் அரசவம்ச (First Dynasty) கால கல்லறைகளில் ஒரு முக்கிய வேறுபாடு காணப்படுகிறது. இறந்தவரின் பெயரும் அவர் பதவியும் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உயர் அதிகாரிகள் இல்லை. அரசரின் சேவகர்கள், காமக் கிழ்த்தியர், குள்ளர்கள் ஆகியோரின் கல்லறைகளாகும்.

 

இந்தியாவிலும் அரண்மனைகளில் குள்ளர்களை வேலைக்கு வைக்கவேண்டும் என்று நீதி சாத்திரம் கூறுகிறது. இந்தியாவிலும் அரசனின் அந்தப்புரத்தில் இதுபோல கள்ளக் காதலிகள் இருப்பர்.

 

அவர்களுடைய சடலம் உள்ள நிலை, எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டனர் என்பதை ஆராய முடியாதவாறு கல்லறைத் திருடர்கள் அவைகளைத் தோண்டி நிர்மூலம் செய்துவிட்டதால் முறையான ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போய்விட்டது.

 

சீனா, மெசபொடோமியா, பழைய நூபியா(Old Nubia) ஆகிய நாடுகளின் கல்லறைகளில் சடலமோ, எலும்புக்கூடோ உடகார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து அது உயிருடன் புதைக்கப்பட்ட ஆசாமி என்பதை அறிந்தோம். சில இடங்களில் ஒரே கல்லறையில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட தையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எகிப்தில் அப்படி இல்லாமல் இற   ந்தோருக்கு மரியாதை கொடுத்திருப்பதைக் காண முடிகிறது. தனித்தனி கல்லறைகளில் சடலங்கள் புதைக்கப் பட்டன. தலையைச் சீவி பலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு புரியாத விசித்திரப் புதிர் மட்டும் இருக்கிறது! ஆஹா (Aha) என்ற மன்னரின் (பாரோவின்) கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்ட எல்லோருடைய வயதும், 25-க்கும் குறைவு! அரசன் மறைவை அடுத்து அவர்களும் இறந்தது அல்லது இறக்கவைக்கப்பட்டது தெரிகிறது

நரபலி தடயங்கள்

முதல் அரச வம்சத்தின் இரண்டு அரசர்களின் (பாரோக்கள்) கல்லறைகளில் நரபலிக்கான நல்ல தடயம் கிடைத்தன. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது மன்னரின் மீதுள்ள அபிமானத்தால் தற்கொலை செய்துகொண்டார்களா என்று சொல்ல முடியாது. சமர்கேட் Semerkhet (சமரகேது), கா (Qaa) (இந்துமதத்தில் கா என்றால் பிரம்மா என்று பொருள்) ஆகிய இருவரின் கல்லறைகளுக்கு அருகிலுள்ள சில கல்லறைகள் ஒரே நேரத்தில் மூடப்படுள்ளன. அவர்களாக உயிர்த் தியாகம் செய்திருக்கலாம். 1989ல் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ இறந்தவுடன் அவருடைய பழைய நன்றியுள்ள ஒரு சேவகன் தற்கொலை செய்துகொண்டான்; காரணம்- மன்னருக்கு மேலுலகத்திலும் சேவை செய்ய!

 

எகிப்திலும் மக்களின் சமய நம்பிக்கை காரணமாக இறந்திருக்கலாமே! நமது நாட்டிலேயே ராமாயண, புறநானூற்றுச் சான்றுகள் உளவே!

-சுபம்–

கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம் (Post No.3222)

pic-gaund

Written by London Swaminathan

 

Date: 6 October 2016

 

Time uploaded in London:5-45 AM

 

Post No.3222

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

 

கோண்ட் இன மக்களை திராவிடப் பழங்குடி என்றும் அவர்களுடைய “கோண்டி” மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் அவர்களை ஆதரிக்கும் திராவிடங்களும் மார்கஸீயங்களும் கதைக்கும்.

 

நேற்று,  முதல் பகுதியில் அவர்களுடைய விநோத வழக்கங்களைப் பட்டியலிட்டேன். சில வழக்கங்கள் பிராமணர்கள் வழக்கங்களை ஒத்திருக்கும். மற்ற பல காட்டுமிராண்டித் தனமான வழக்கங்களாக இருக்கும்.

 

கோண்ட் இன மக்களுக்கு மாய மந்திரங்களில் நம்பிக்கை உண்டு. விசாகப் பட்டிணம் பகுதியில் கோண்ட் இன மக்களிடையே நடந்த ஒரு படுகொலை சென்னை போலீஸ் ரிகார்டுகளில் இருக்கிறது.

 

மூன்று சகோதரர் உள்ள குடும்பத்தில் இளைய சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவரது சடலத்தை எரித்தபோது சடலத்தின் மேல்பகுதி எரியவில்லை. இது எதிரிகள் செய்த பில்லி சூனிய வேலை என்று 2 சகோதரர்கள் கருதினர். யார் மீது சந்தேகம் எழுந்ததோ அந்த கோண்ட் இன ஆளைக் கொன்று அவரது சடலத்தை வெட்டி மேல்பகுதியை, இளைய சகோதரர் சடலத்தின் மேல்பகுதி எரிய மறுத்த இடத்தில் வீசினர்.

 

இந்தக் குற்றத்துக்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலிஸ் குறிப்பேடுகளில் இருப்பதாக ஆர்தர் மைல்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளது.

 

ஒரு கிராமத்தில் காலரா நோய் பரவிவிட்டால் அவர்கள் பன்றிக் கொழுப்பை மேலே தடவிக்கொண்டு வளைய வருவர். காலரா நோய் ஒழியும் வரை இது நீடிக்கும். பன்றிக் கொழுப்பானது காலராவை உண்டாக்கும் தேவதையை விரட்டிவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

 

அந்த தேவதை கிராமத்துக்குள் நுழையாமல் இருக்க வழிகளில் பள்ளங்களைத் தோண்டி அதில் முட்களை நிரப்பி நாற்றம் வீசும் எண்ணையையும் ஊற்றி வைப்பர்.

 

கோண்ட் இன மக்கள் ஒரு நட்புறவு பிரமாணம் (உறுதி மொழி) எடுப்பர். புரி நகர ஜகந்நாதர் ஆலயத்து அட்சதை (புனித அரிசி) மீது சத்தியம் செய்வர். இந்துக்களின் ஏழு புனிதத் நகரங்களில் ஒன்றான புரி (ஒரிஸ்ஸா) ஆலயத்துக்குச் செல்லுவோர் இந்த அட்சதையை வாங்கி யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விநியோகிப்பர். அந்த புனித அட்சதை ஒருவர் கையில் இருக்கும்போது அவர்கள் பொய் சொல்லக்கூடாது. கிராமங்களில் உள்ள ஏழைக் குடியானவர்களுக்கும் நகர மாந்தர்களுக்கும் இடையே இப்படி நட்புறவு ஒப்பந்தம் செய்வதுண்டு. இப்படி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் திருவிழாக் காலங்களில் அவர்கள் பரிசுகளை ஒருவருக்கொருவர் கொடுப்பர். ஒருவர் வீட்டு விழாவுக்கு மற்றொருவரை அழைப்பர்.

 

நட்புறவு சத்தியப் பிரமாணம் செய்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவர். இதற்கு “சொங்காதோ” என்று பெயர் (சங்காத்தம்) பழங்குடி மக்களிடையே பல தலைமுறையினருக்கு இடையேகூட இப்படிப்பட்ட நட்புறவு நீடிக்கும்.

 

மற்றொரு பழங்குடி இனம் சிறுத்தைப் புலியின் தோல் மீது நின்றோ அல்லது மயில் இறகைக் கையில் வைத்துக்கொண்டோ சத்தியப் பிரமாணம் செய்வர்.

pic-gond

வாக்குறுதியின் பெயரில் இப்படிப்பட்ட நட்புறவு, பல தலை முறைகளுக்கு நீடிப்பது சத்தியத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. எவ்வளவுதான் வன்முறை, மூட நம்பிக்கை இருந்தாலும் சங்க இலக்கியம் குறிப்பிடும் “வாய்மொழிக் கோசர்” (Truthful Kosas of Sangam Tamil Literature)  போல கோண்ட் இன மக்களும் ‘சத்திய கோண்ட்’ இனத்தினரே.

 

கோண்ட் இனம் உருவானது பற்றி ஒரு நரபலிக் கதையும் இருக்கிறது. பூமியில் முதலில் இரண்டே பெண்கள்தான் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பூமிக்கடியிலிருந்து புதல்வர் இருவர் கிடைத்தனர். ஒரு பெண்மணி செடிகொடிகளை வெட்டும் போது கை விரலில் கத்தி படவே ரத்தம் வழிந்தோடி தரையில் விழுந்தது. அந்த இடம் காய்ந்து அதிலிருந்து மரம் செடி கொடிகள் உருவாயின. அதைச் சமைத்தபோது சுவையாக  இருந்தது. அவளுடைய மகன் காரணம் கேட்டான். உடனே அவள் தன் மகனை அழைத்து என்னைத் தாயென்று எண்ணித் தயங்காதே. என் முதுகை வெட்டிப் புதை என்றாள். அவனும் அப்படியே செய்தான். உலகில் ஜீவ ராசிகள் உண்டாயின. அதிருந்து அவர்கள் ஆண்டுக்கு ஒரு சிறுவனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தனர். போரா பெண்ணு என்ற கடவுளுக்கு இப்படி நரபலி கொடுக்கப்படும்.

 

இப்போது நரபலிக்குப் பதிலாக எருமை பலி தரப்படுகிறது. ஆனால் கோண்ட் இன பூசாரி சொல்லும் உச்சாடனம் நரபலி உச்சாடனமே: “ஆண் அடிமையே வா, பெண் அடிமையே வா; நீ என்ன சொல்லுகிறாய்? ஹட்டியினால் நீ சிறைப் பிடிக்கப்பட்டய். டொம்பாவினாவால் நீ சிறைப் பிடிக்கப்பட்டாய். நீ எனது குழந்தையாகவே இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்?  ஒரு பானைச் சோற்றுக்கு நீ விற்கப்பட்டுவிட்டாய்”.

 

தமிழ்க் கடவுள்களா?

 

கோண்ட் இன நரபலியில் தொடர்புடைய இரண்டு கடவுளரும் தமிழ்ப் பெயர்கள் உடைய கடவுளர். போரா பெண்ணு,  தரைப் பெண்ணு; இந்தச் சடங்கிற்கு மறியா (மறித்தல்=இறத்தல்) என்று பெயர். மரியா என்பது “ம்ருத்” என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. தீவிரமாக ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூலமான வேர்ச் சொல் கிடைக்கும். பெண் என்பதும் அந்த மூலச் சொல்லில் இருந்தே வந்தது என்பது புரியும். தரை என்பது “தரணி” என்ற சம்ச்கிருத சொல்லில் இருந்து வந்தது. மற்ற மொழிகளில் இது டெர்ரா TERRA என மருவி வரும்.

 

 

சிந்து சமவெளியிலும் நரபலி காட்சி இருக்கிறது. சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே என்று வாதிடுவோர் இந்த நரபலிக் காட்சியை கோண்ட் இன திராவிடக் குடிகளுடன் ஒப்பிடுவர். உலகில் நரபலி இல்லாத நாகரீகமே கிடையாது. வேதத்திலும் “புருஷ மேத யக்ஞம்” இருக்கிறது. ஆனால் இது நடந்ததற்கான சான்று வேதத்தில் கிடையாது. கம்பத்தில் நரபலிக்காகக் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனையும் புரட்சிக் கவிஞன் விஸ்வாமித்திரன் விடுதலை செய்ததாகவே இருக்கிறது. ஆதி சங்கரரை நரபலி கொடுக்க காபாலிகர் முயன்றபோது அவரது சீடர்களில் ஒருவரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காபாலிகனை துவம்சம் செய்ததாகவே இருக்கிறது.

 

 

-subham–