விவேக சிந்தாமணி பொன்மொழிகள் (Post 10,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,498

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2022 நற்சிந்தனை காலண்டர்

31 விவேக சிந்தாமணி பொன்மொழிகள்

xxxx

பண்டிகை நாட்கள் – ஜனவரி 13 போகிப் பண்டிகை; 14- பொங்கல், மகர சங்கராந்தி; 15- மாட்டுப் பொங்கல்; 16- திருவள்ளுவர் தினம் ; 18 தைப்  பூசம், வடலூர் ஜோதி தரிசனம் ; 22- தியாகராஜ ஆராதனை ,23-சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி;26 குடியரசு தினம்; 31- தை  அமாவாசை.

அமாவாசை-ஜனவரி 2,31; பெளர்ணமி – 17, ஏகாதசி விரத நாட்கள் -13, 28;

சுபமுஹுர்த்த  நாட்கள் – ஜனவரி 20

XXXX

ஜனவரி 1 சனிக் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

xxx

ஜனவரி 2 ஞாயிற்றுக் கிழமை

கற்பூரப் பாத் திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு மதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்

Xxxx

ஜனவரி 3 திங்கட் கிழமை

நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாங் பெண்கொள்ள லாகாதே. (85)

Xxxx

ஜனவரி 4 செவ்வாய்க் கிழமை

மெய்யதைச் சொல்வ ராகில் விளங்கிடு மேலும் நன்மை
வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவ ராவார்

Xxx

ஜனவரி 5 புதன் கிழமை

நன்மனை தோறும் பெண்களைப் படைத்து நமனையு மென்செயப் படைத்தனையோ! (82)

Xxxx

ஜனவரி 6 வியாழக் கிழமை

பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
நொய்யரி சியர்க ளென்று நோக்கிடா ரறிவுள் ளாரே. (67)

xxxxx

ஜனவரி 7 வெள்ளிக் கிழமை

அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில் – 125

Xxx

ஜனவரி 8 சனிக் கிழமை

வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே

Xxxx

ஜனவரி 9 ஞாயிற்றுக் கிழமை

மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பு வோர்க்கே. (122)

Xxx

ஜனவரி 10 திங்கட் கிழமை

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ. (119)

Xxx

ஜனவரி 11 செவ்வாய்க் கிழமை

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல் ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்

xxxxx

ஜனவரி 12 புதன் கிழமை

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்

xxx

ஜனவரி 13 வியாழக் கிழமை

தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானு மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. (117)

xxxxx

ஜனவரி 14 வெள்ளிக் கிழமை

புலவர்கள் சபையில்கூடிப் புன்கவி யாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம். (102)

Xxx

ஜனவரி 15 சனிக் கிழமை

நலமிலாக் கயவன் றோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யுங் கோடரிக் காம்பு நேராம். (112)

xxxx

ஜனவரி 16 ஞாயிற்றுக் கிழமை

மின்னலைப்போல் மனையாளை வீட்டில்வைத்து வேசைசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரு மறிவிலாக் கசடராமே. (97)

Xxx

ஜனவரி 17 திங்கட் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

Xxxx

ஜனவரி 18 செவ்வாய்க் கிழமை

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64

Xxxx

ஜனவரி 19 புதன் கிழமை

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.–63

Xxx

ஜனவரி 20 வியாழக் கிழமை

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்-59

Xxx

ஜனவரி 21 வெள்ளிக் கிழமை

வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வேப்பிலை கசப்பு மாரா
தாம்பல நூல்கற் றாலுந் துர்ச்சனர் தக்கோ ராகார். (61)

Xxx

ஜனவரி 22 சனிக் கிழமை

பொல்லார்க்குக் கல்விவரில் கெருவமுண்டா மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்குஞ் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்- 99

Xxxx

ஜனவரி 23 ஞாயிற்றுக் கிழமை

சந்திர னில்லா வானந் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை

Xxx

ஜனவரி 24 திங்கட் கிழமை

சுந்தரபு புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் லாவாழ்வு
தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம். (57)

Xxxx

ஜனவரி 25 செவ்வாய்க் கிழமை

ஆசாரஞ் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்

xxxx

ஜனவரி 26 புதன் கிழமை

ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார். (50)

xxxxx

ஜனவரி 27 வியாழக் கிழமை

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தினாலு மிடரது வந்தே தீரும்– 47

xxxx

ஜனவரி 28 வெள்ளிக் கிழமை

பொருளிலார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்று
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை– 60

Xxx

ஜனவரி 29 சனிக் கிழமை

ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ. (41)

Xxxx

ஜனவரி 30 ஞாயிற்றுக் கிழமை

அத்தன்மால் பிர்ம தேவனா லளவிடப்பட் டாலுஞ்
சித்திர விழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லை கண்டீர்-44

Xxxxx

ஜனவரி 31 திங்கட் கிழமை

மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)

xxxx

Bonus quote

அற்பர்தம் பொருள்க டாமு மவரம ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வா ரிந்தப் பாரினி லுண்மை தானே—32

–SUBHAM—

TAGS –விவேக சிந்தாமணி, பொன்மொழிகள் , ஜனவரி 2022, நற்சிந்தனை ,காலண்டர்

மே மாத (2021) நற்சிந்தனை காலண்டர் (Post.9543)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9543

Date uploaded in London – –28 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ப்லவ வருஷம் சித்திரை/வைகாசி  மாதம்

31 நீதி வெண்பா மேற்கோள்கள் /பொன்மொழிகள்

பண்டிகை/ விடுமுறை தினங்கள் – மே 1- மே தினம் , 14- அட்சய திருதியை, பரசுராம ஜெயந்தி, ரம்ஜான் , 17-சங்கர ஜெயந்தி,

25-வைகாசி விசாகம், 26-புத்த பூர்ணிமா, காஞ்சி மஹா பெரியவா ஜெயந்தி, சந்திர கிரஹணம்  (அக்கினி நட்சத்திரம் ஆரம்பம்- மே 4, முடிவு-28)

XXXX

ஏகாதசி மே 7, 22/23; அமாவாசை மே 11; பெளர்ணமி 26;

முஹுர்த்த தினங்கள் – 9,14,17, 23,24,28

XxxX

xxx

மே 1 சனிக்கிழமை

மந்திரங்கள் ஐந்தெழுத்துக்கு ஓப்பாகா–

ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே

சோமசுந்த ரற்கு என்றே சொல்.

xxx

மே 2 ஞாயிற்று க்கிழமை

பெரியோரைச் சேரின் துன்பம் நீங்கும்; சத் சங்க மஹிமை-‘பெரியோ ரிடம்சேரில் அக்கணமே போமென்று அறி’

xxx

மே 3 திங்கட் கிழமை

நீற்றின் பெருமை-  சீராம் வெண்ணீற்றுத் திரிபுண்டரம் விடுத்தே

பேரான முத்தி பெறவிரும்பல்

xxx

மே 4 செவ்வாய் க்கிழமை

அடியார்கள் தியானத்தில் ஆண்டவர்களை எதிர்பார்ப்பர்–

கந்தமிகும் பூவலரப் பார்க்கும் பொறிவண்டு அரனன்பர்

தேவரவைப் பார்ப்பர் தௌிந்து.

xxx

மே 5 புதன் கிழமை

கற்றவர்க்கு நிகரில்லை–‘கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்

வல்லான் ஒருவனையே மானுவரோ’

xxx

மே 6 வியாழ க்கிழமை

சேர்ந்த இடத்தின் பயன்- ‘சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும்’

xxx

மே 7 வெள்ளி க்கிழமை

இனிய சொல்லே இன்பம் பயக்கும்–

அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்

இன்பமிகும் சீதள மாமே

xxx

xxx

மே 8 சனிக்கிழமை

. தீயோர் சொல் மிகவும் வருத்தம்- வெய்யகதிர்

எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார்

சொல்லே மிகவும் சுடும்.

xxx

மே 9 ஞாயிற்று க்கிழமை

தானம் மூவகை–

தானறிந்தோருக் குதவி தன்னால் அமையும்எனில்

தானுவந்து ஈதல் தலையாமே – ஆனதனால்

சொன்னால் புரிதலிடை சொல்லியும் பன்னாள்மறுத்துப்

பின்னாள் புரிவதுவே பின்.

xxx

மே 10 திங்கட் கிழமை

உயர்ந்தோர் கைம்மாறு கருதார்–

எல்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே

நல்லோர் தமக்குதவி நாடாரே

xxx

மே 11 செவ்வாய் க்கிழமை

நல்லோரை அறிய வாக்கு– வாக்குநயத் தாலன்றி கற்றவரை மற்றவரை

ஆக்கைநயத் தால்அறியல் ஆகாதே

xxx

மே 12 புதன் கிழமை

தீயோர் நண்ணிய நல்லோர்க்கும் தீமையே–

நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்க மில்லாச்சொல் நண்ணுமே

xxx

மே 13 வியாழ க்கிழமை

உண்மையை சிலரே விரும்புவர்–

சத்தி யம் எக்காலும் சனவிருத்த மாகுமே

எத்தயபொய் யார்க்கும் இதமாகும்

xxx

மே 14 வெள்ளி க்கிழமை

துயருண்டு இல்லத்தில்– மாசுபுரி

மாயா மனைவியராம் மாக்கள் மகவென்னும்

நாயால் கடிப்பித்தல் நாடு.

xxx  

மே 15 சனிக்கிழமை

விருப்பு பல்வகைத்தது–

கல்லார் பகைசேர் கலகம் விரும்புவர்

நல்லார் விரும்புவர் நட்பு.

xxx

மே 16 ஞாயிற்று க்கிழமை

. நீத்தார் நுகர்ப்பொருள் நண்ணலாகாது– கற்றருளை

வேட்ட பெரியோர்  பெருமையெலாம் வேறொன்றைக்

கேட்ட பொழுதே கெடும்.

xxx

மே 17 திங்கட் கிழமை

தீயொழுக்கம் தீமையே நல்கும்–

சீலம் குலம்அடியாள் தீண்டின்கெடும் கணிகை

ஆலிங்கனம் தனநா சமாகும்

xxx

மே 18 செவ்வாய் க்கிழமை

மணமகன் இவனாவான்-

பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே

எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் – நண்ணிடையில்

கூரியநல் சுற்றமும் குலம் விரும்பும் காந்தனது

பேரழுகு தான்விரும்பும் கண்.

xxx

மே 19 புதன் கிழமை

. அடிய வர்பொருள் கவர்தலாகாது–

அந்தோ புரமெரித்த அண்ணலடி யார்பொருள்கள்

செந்தீயினும் கொடிய தீக்கண்டாய்

xxx

மே 20 வியாழ க்கிழமை

தீயோர் கேண்மை தீயவே பயக்கும்–

நிந்தையிலாத் துயர் வரும் நிந்தையரைச் சேரிலவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே

xxx

மே 21 வெள்ளி க்கிழமை

தீயவர் நற்சொல் ஏற்கார்–

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்மநூல் புக்காலும் தங்காதே

xxx

மே 22 சனிக்கிழமை

நல்லோர் நண்ணம்பற்கு உயிருமளிப்பர்– நூலின் நெறி

உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே

மற்றோர் புகல மதித்து

xxx

மே 23 ஞாயிற்று க்கிழமை

இவர்களுக்கு இவையில்லை–

ஆசைக்கில்லையாம் மானம்.

xxx

மே 24 திங்கட் கிழமை

தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது–

நன்றறியாத் தீயோர்க் கிடமளித்த நல்லோர்க்கும்

துன்று கிளைக்கும் துயர்சேரும்

xxx

மே 25 செவ்வாய் க்கிழமை

இதற்கு இதுவழகு–

கண்ணுக்கு இனிய சபைக்குமணி கற்றோனே

xxx

மே 26 புதன் கிழமை

நல்லவர் தீயவர் கல்வியின் பயன் —

வல்லவர்பால் கல்வி மதம்ஆ ணவம்போக்கும்

அல்லவர்பால் கல்வி அவையாக்கும்

xxx

மே 27 வியாழ க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 28 வெள்ளி க்கிழமை

மூவகையினர் ஈகைத்தன்மை—

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே

மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே – முத்தலரும்

ஆம்கமுகு போல்வர் அதமர் அவர்களே

தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.

xxx

மே 29 சனிக்கிழமை

மூவகையார் தன்மைகள்—

உற்ற மறையகத்தின் உய்க்குமவன் உத்தமனே

மற்றம் மறைபகர்வோன் மத்திமனே – முற்றிழையே

அத்தம் உறலால் புகல்வான் அதமனென

வித்தக நூலோதும் விரித்து

மே 30 ஞாயிற்று க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 31 திங்கட் கிழமை

கற்றவராயினும் தீயோர் தீயவரே–

தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத்

துயவரேன்று எண்ணியே துன்னற்க

xxx

BONUS VERSES…………………………………..

அழகைக்கொடுப்பன—

அன்னமனையாய் குயிலுக்கு ஆனவழகு யின்னிசையே

கன்னல் மொழியார்க்கு கற்பாமே – மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம்.

xxx

துன்பத்திலும் நல்லவர் நல்லவராவார்–

 நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து

xxx

tags–  மே மாத,  நற்சிந்தனை,  காலண்டர்,