எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்! (Post No. 2662)

indra in thailand

Compiled by london swaminathan

 

Date: 25 March 2016

 

Post No. 2662

 

 

Time uploaded in London :–  12-10

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Already published in English; Tamil Translation: London swaminathan

 

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணல் வேண்டும் – மஹா கவி பாரதி

 

வேத மந்திரங்கள், பாரதி பாடல்கள் முதலியவற்றில், ஆக்கபூர்வமான சிந்தனைகள் இருப்பதால் அவைகளைக் கேட்பதாலும், படிப்பதாலும் பலனுண்டு. ‘’பாஸிட்டிவ் திங்கிங்’’- ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்று சிந்திப்பதும், மகிழ்ச்சியுடன் இருப்பதும் வெற்றியை ஈட்டித் தரும். இதோ ஒரு குட்டிக்கதை!

தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்

indra

இந்திரன், தேவ லோகத்திலிருந்து, பூமிக்கு வந்தான்; கொஞ்சம் வேடிக்கை பார்க்கத்தான்!

 

ஒரு காட்டின் வழியே செல்லுகையில், தனது தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்யும் ஒருவன் ஒரு மரத்தின் அடிப்பகுதியாக மாறிவிட்ட காட்சியைக் கண்டான். அவன் இன்னும் தவம் செய்துகொண்டிருந்தான். இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று சோகமாகக் கேட்டான். உடனே இந்திரன், இன்னும் பத்து ஆண்டுகள் ஆகுமென்றான். அவன், இன்னும் பத்து ஆண்டுகளா? என்று கேட்டான். கேட்ட மாத்திரத்தில் அவன் நரகத்துக்குப் பறந்து போய்விட்டான்.

 

இந்திரன், அதே காட்டில், தொடர்ந்து பயணம் செய்கையில் இன்னுமொரு காட்சியைக் கண்டான். தனது தவறுகளுக்காக வருந்தும் வேறு ஒருவன், ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஆன்மீக தாகம் இருந்தது. இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.

 

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தால் விடுதலை கிடைக்கும் என்று இந்திரன் சொன்னான்.

பூ! வெறும் ஆயிரம் ஆண்டுகள்தானா! என்று சொல்லிக்கொண்டே தாவிக்குதித்து மரத்தைச் சுற்றினான். அடுத்த நொடியில் அவன் ராக்கெட் வேகத்தில் சுவர்க்கத்துக்குப் போய்விட்டான்.

 

கண்ணன் கூறுவான்:–

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன (பகவத் கீதை 6-5)

தன்னைத்தானே ஒருவன் உயர்த்திக்கொள்ள வேண்டும்; தன்னையே தாழ்த்திக்கொள்ளக் கூடாது; நிச்சயமாக தானே ஒருவனுக்கு உறவினன்; தானே ஒருவனுக்குப் பகைவன் (பகவத் கீதை 6-5).

–சுபம்-