நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ் (Post No.9795)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9795

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்

நாற்பது நகைச்சுவை நாடகங்களை 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி ‘நகைச் சுவை நாடகங்களின்  தந்தை என்ற புகழுரை பெற்றவர் (Aristophanes) அரிஸ்டோபனிஸ் . ஆயினும் சாக்ரடீஸைக் குறை சொல்லி அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்ற இகழுரையும் இவருக்குண்டு. இவர் எழுதிய ஒரு கிண்டல் நாடகம் தவளைகள் பற்றியது . அதை கம்ப ராமாயண, ரிக்வேதத் தவளைப்பாட்டுட ன்   ஒப்பிட்டு முன்னரே எழுதினேன் இணைப்பை கட்டுரையின் இறுதியில் காண்க

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

இன்றைய தினம் நாம் டெலிவிஷனிலும் திரைப்படங்களிலும் நிறைய முழு நீள நகைச் சுவைப் படங்களை பார்க்கிறோம். இவைகளுக்கு வித்திட்டவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அரிஸ்டோபனீஸ் ஆவார். சம்ஸ்க்ருத நாடகங்களில் பிராமணர்களுக்கு விதூஷகன் (comedian)  என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தைக் கொடுப்பது 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்திய வழக்கம். காளிதாசனின் நாடகங்களில் இதைக்காணலாம். ஆகையால்தான் தற்கால திரைப்படங்களிலும் பிராமணரைக் கொண்டு பிராமணர்களைக் கிண்டல், கேலி, நக்கல், பகடி செய்யும் காட்சிகள் இடம்பெறுகின்றன.ஆனால் கிரேக்க நாட்டில் முழு நீள காமெடிக்கள்  (comedies) இருந்தன. சம்ஸ்க்ருதம் போல எல்லா நாடகங்களிலும் விதூஷகன் என்னும் கதாபாத்திரம் இருந்ததாக, அதுவும் ஜாதி அடிப்படையிலான நகைச் சுவை நடிகர் இருந்ததாகத் தெரியவில்லை.  சங்க இலக்கியத்திலும் கூட பிராமணர்தான் பிராமணர்களைக் கிண்டல் அடிக்கமுடியும். இதைக் கபிலர் என்னும் புலவர் செய்கிறார். காண்க- குறிஞ்சிக் கலி , கலித்தொகை.

அரிஸ்டோபனிஸ் எழுதிய சுமார் 40 நாடகங்களில் நமக்கு இப்போது 11 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஒன்று ‘மேகங்கள்’ (The Clouds) என்ற நாடகம் ஆகும். இதுதான் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ (Plato) குற்றம்சாட்டுகிறார்.

அரிஸ்டோபனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரமான ஏதன்ஸில் பிறந்தார்.  இருபது வயதுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம், கிரேக்க நாட்டில் எல்லாத் துறைகளிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்த காலம் ஆகும் .அப்போது (Athens) ஏதென்ஸ் நகரம் அதன் பரம வைரியான ஸ்பார்ட்டா (Sparta) நகர அரசு மீது போர் தொடுத்தது. இந்தப் போர் 27 ஆண்டுகளுக்கு நீடித்தது.

இந்தப் போரில் மகத்தான ஏதென்ஸ் நகர அரசு தோல்வி அடைந்தது. இதனால் புகழோங்கிய கிரேக்க கலாசாரம் ஆட்டம் கண்டது. நாட்டில் அராஜகம் நிலவியது. ‘அ+ராஜகம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். ஆள்பவன் வலுவாக இல்லாவிடில் ‘தடி டுத்தவன் எல்லாம் தண்டல் நாயகம்’ ஆகிவிடுவான். இப்படி ஒரு நிலை ஏதன்ஸில் ஏற்படவே சர்வாதிகாரிகள் ஆட்சி உண்டாகியது . தன்னைச் சுற்றி ஏற்படும் நிகழ்ச்சிகளை நாடகமாக வடித்தார் அரிஸ்டோபனிஸ்;  அவர் எழுதிய நாடகங்களில் அரசியல்வாதியை முட்டாளாகவும் சாதாரண குடிமகனை அறிவாளியாகவும் சித்தரித்தார். அதாவது சாதராணக் குடிமகன் அரசியல் தலைவர்களைத் தோற்கடித்து விடுவான்.தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும் குறை சொன்னார். எல்லா இடங்களிலும் நிலவிய ஊழலை எடுத்துக் காட்டினார். இரு பொருள்படும்படி  (Satires) அங்கதங்களை இயற்றினார். இதில் அவர் மஹா மேதையான சாக்ரடீஸையும் விடவில்லை. சாக்ரடீஸுக்கு எதிரான குற்றம்சாட்டிய ஏதென்ஸ் அரசு அரிட்டாபனீசின் வசனங்களையும் பயன்படுத்தியது. சாக்ரடீசை அவர் பைத்தியக்காரன் என்றும் அவர் கிரேக்க (Greece)  நாட்டில் விஷ- விஷமக் கருத்துக்களை வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் சாக்ரடீஸ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .

ராமன் பெயர் உள்ளவரை ராவணன் பெயரும் இருக்கும். சாக்ரடீஸ் பெயர் உள்ளவரை அரிஸ்டோபனிஸ் பெயரும் நீடிக்கும்.

Publications

The Acharnians

The Knights

The Clouds

The Wasps

The Peace

The Birds

Lysistrata

Thesmophoriazusae

The Frogs

Plutus

xxxxxxxxxxxxxxxxx

ரிக்வேதத்திலும் கம்ப … – Tamil and Vedas

https://tamilandvedas.com › ரிக்…

  1.  

15 Dec 2016 — ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! … ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் பாடிய தவளைப் …

அரிஸ்டோபனிஸ் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

8 Aug 2017 — Written by London Swaminathan. Date: 8 August 2017. Time uploaded in London​- 20-46. Post No. 4140. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks …

Aristophanes | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › aristophanes

  1.  

15 Dec 2016 — Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies …


Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

https://tamilandvedas.com › 2016/12/15 › aristophanes-…

  1.  

15 Dec 2016 — 3452) | Tamil and Vedas …


Posts about Fish God on Tamil and Vedas | Ancient sumerian …

https://www.pinterest.es › pin

  1.  

Jun 5, 2016 – Posts about Fish God written by Tamil and Vedas. … In Plato’s Symposium (189–190 AD), Aristophanes displays knowledge of an ancient myth of …

Tags- அரிஸ்டோபனிஸ் , கிரேக்க , நாடகங்கள், நகைச்சுவை ,

சிறையில் மலர்ந்த நாடகங்கள்(Post No.5813)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 December 2018
GMT Time uploaded in London – 9-44 am
Post No. 5813


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வாரத்தில் மூன்று நாட்களாவது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கோ, லண்டன் யுனிவர்ஸிட்டி லைப்ரரிக்கோ சென்று புத்தக வேட்டை ஆடும்போது பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிறைச் சாலையில் இருக்கும்போது தினகரன்  மொழிபெயர்த்த வங்காளி நாடகம் மூலம் தினகரன் பற்றியும், அதை எழுதிய வங்காளி மொழி ஆசிரியர் பாபு துவிஜேந்திர லால் ராய் பற்றியும், அதை வெளியிட்ட உத்தமபாளையம் பாரதி புத்தக நிலையம் பற்றியும் அறிந்தேன். இதோ சில சுவையான விஷயங்கள்.

பாபு துவிஜேந்திர லால் ராய் என்பவர் வங்காளி மொழியில் பல  நாடககங்களை எழுதிப் புகழ்பெற்றவர். அவர் ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்றபோது ‘இந்திய கீதங்கள்’ Lyrics of Ind (லிரிக்ஸ் ஆஃப் இன்ட்) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதைக் கண்டோர் அவரை மெச்சினர். Light of Asia (லைட் ஆஃப்  ஏசியா) நூலின் புகழ்மிகு ஆசிரியர் ஸர் எட்வின் ஆர்னால்ட்வரை அனைவரும் அவரைப் புகழ்ந்தனர்.

அவருடைய தாய் மொழியான வங்காளியிலும் எழுத வேண்டும் என்று மக்கள் வேண்டிய பின்னர் 15 நூல்களை எழுதி வங்கத் தாயின் பாத கமலங்களில் சமர்ப்பித்தார். 1913-ம் ஆண்டில் உயிர்நீத்த அவரது கவிதைகளும் நாடகங்களும் இன்று வரை புகழ்மணம் பரப்பிக்கொண்டு இருக்கிறது. 500 பாடல்களுக்கு மேல் எழுதி இசைத் துறையில் தமக்குள்ள புலமையையும் நிலை நாட்டியவர்.

அவர் விவசாயத்தில் பட்டம் பெற்ற பின்னர் அரசாங்கத்தில் பல துறைகளில் அதிகாரியாகப் பணியாற்றினார். பெண்கள் விடுதலை, தேச விடுதலையில், குடியானவர் உரிமையில் ஆர்வம் காட்டினார்.

அவருடைய

மனைவி பெயர் பெயர் ஸுரபாலா தேவி

தந்தை பெயர் – கார்த்திகேய சந்திரவர்மா

பிறந்த தேதி — 19 ஜூலை 1863

இறந்த தேதி – 17 மே 1913

பிறந்த ஊர் – கிருஷ்ணா நகர்- மேற்கு வங்கம்

அவருடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் உயர்ந்த லட்சியத்தைப் போதித்தன. மனதில் தூய எண்ணங்களை உருவாக்கின. இயற்கையை வர்ணிப்பதில் அவர் வல்லவர். அவருடைய ‘பாஷாணி(அகல்யா) என்ற நாடகம் பிராமண தர்மங்கள் பற்றியது. ‘துர்காதாஸ்’ ஆண்மகனின் லக்ஷணங்கள் பற்றியது. ‘ராணா பிரதாப்’ க்ஷத்ரிய தர்மங்களைச் சிறப்பிக்கிறது .’சீதா’ நாடகம் பதி பக்தியையும், ‘மேவார் வீழ்ச்சி’,குடும்ப  அன்பையும் விளக்கும். இவை அனைத்தும் மனதை ஒரு அபூர்வமான உலகிற்கு இட்டுச் செல்லும்.

குறைவான  பெண் கதாபாத்திரங்களையே படைத்தபோதும், கிடைக்கும் போதெல்லாம், கதா பாத்திரங்கள் வாயிலாக பாரதப் பெண்களின் உயரிய லட்சியங்களைப் போற்றத் தவறியது இல்லை. 35 வயதிலேயே மனைவியை இழந்தார். எந்த நேயராவது நீங்கள் இரண்டாம் முறை ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டால் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும்; மனைவி மீது அவ்வளவு அன்பு; தனது தாயாருடன் மனைவி வசித்தபோது அவரிடம் கண்ட அற்புத குணங்கள், தியாகங்களை  நாடகக் கதைகள் வாயிலாக  வெளியிட்டு இருக்கிறார் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். இறுதிவரை மறுமணம் செய்யாது பிரம்மசர்யம் காத்தார்.

“இந்த மானிட மிருகங்களுடன் தெய்வீகப் பெண்களின் சம்பந்தம் எப்படி உண்டாயிற்று? நாற்றமெடுக்கும் சேற்றில் சந்திரப் பிரதிமை எப்படி தோன்றுகிறது? இந்த அடிமைகளிடம் விலைமதிக்க வொண்ணாத ரத்தினங்கள் எப்படி வந்தது?”—   என்றெலாம் வசனம் எழுதி பெண்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைப்பார்.

‘மேவார் வீழ்ச்சி’ என்னும் நாடகத்தில் தேச பக்தி, பதி பக்தி, தியாகம் முதலியன் கொழுந்துவிட்டு எரிவதைக் காணலாம்.

ஷாஜஹான் நாடகத்தில் பெண்களின் நிர்வாகத்திறமையைக் காட்டியுள்ளார்.

தமிழில், தினகரன்  அவர்கள் மொழி பெயர்ப்பில் 1933ம் ஆண்டில் சில நாடகங்கள் வெளியாகின.

அவற்றை உத்தமபாளையம் பாரதிப் புத்தகாலயம் வெளியிட்டது.

துவிஜேந்தர்லால் ராயின் புதல்வர் திலீப் குமார் ராய் புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்கி புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ராட்டூர் வீரன் துர்காதாஸ்’ முதலிய

நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்த தினகரன் சொல்லும் சுவையான செய்தி:-

“மனிதனுக்கு பால்யத்திலே விளையாட்டு, வாலிபத்தில் காதல், முதுமையிலே பகவதா பக்தி என்று பருவ ரஸனைகள் உண்டு. இது எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் பொது விதி. ஆனால் ருஸிகரமான நூல்கள் தரும் இன்பத்தை எதற்கு ஈடு சொல்லலாம்?

‘சுக வெறியைப் பூரணமாக அனுபவிப்பதற்கு ஒரு கவள அன்னமும், ஒரு கலச மதுவும் (தேனும்), தலை சாய்க்க நிறிது நிழலும், ரஸமான காவியம் ஒன்றும், காலஹிதமான காந்தை ஒருத்தியும் இருந்தால் போதும் ; அப்போது வெறுமையான பாலைவனமும் ரமணீயமான உத்தியானம் ஆகிவிடுகிறது- என்று பாரசீக மஹா கவி உமர் கையம் தனது ரூபாயிற் கூறுகிறான்.

பாலைவனத்தைப் போல் வெறுமையும் வறுமையும்  நிறைந்த சிறைக் கம்பிகளுக்கிடையே சிந்தை புழுங்க, உடல் ஒடுங்க, தனிமைத் துயரத்தாலும் உற்றாரைப் பிரிந்த ஹிருதய கிரந்தியாலும் சிறையில் , நிறம்பிய துக்கச் சுமையைச் சுமந்து கொண்டு இராஜ மகேந்திரம் மத்திய சிறையில் ஓர் அறையில் கிடந்தபோது ஒரு நாள் இரவு

என் பக்கத்து அறையில் இருந்த நண்பரின் நெடு மூச்சும், நெட்டுயிர்ப்பும் எனக்,, நன்றாய்க் கேட்டது. ஒரே கப்பலில் துக்கிகளான இரண்டு யாத்ரீகர்கள் சம்பாஷித்துக் கொள்ளுவது போல, நண்பரும் நானும் உரையாடிக்  கொண்டிருந்தோம் .நண்பர் ஹிந்தியில் நல்ல பண்டிதர்; நல்ல பிரசாரகர். கதையாட்டிலேனும் கேட்டுக் களித்தும் கண்ணயரலாம் என்று அவரிடம் ஒரு கதை கேட்டேன். நண்பரும் கூறினார். ஹா! எவ்வவு ருசியான கதை! எவ்வளவு புளஹிதமான ரஸனை! எத்தனை வெற்றி தரும் மயிர் சிலிர்க்கும் செயல்கள்! சிறைத் துயர் சென்ற இடம் காணேன்.

துர்காதாஸின் கதையைக் காதால் கேட்ட மாத்திரத்தில் அதை பாஷாந்தரத்திலேனும் (Translation) படிக்க வேண்டும் என்று ஹிந்தி பாஷையைப் படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே எனக்கு ஹிந்தி பாஷையில் பேசும் ஆற்றல் இருந்ததால் இரண்டொரு வாரத்தில் அட்சர சிட்சையும், அவற்றைக் கூட்டி வாசிக்கும் ஆற்றலும் எனக்கு ஏற்பட்டது. பின்னர் கோயமுத்தூர் சிறையில் அதை இன்னும் சிறிது வளர்க்க சந்தர்ப்பமும் ஸர்வ அவகாசமும் கிட்டியது. ஆனால் துர்காதசைப் படிக்கும் பாக்கியம் அல்லிப்புரம் சிறையிலேதான் பெற்றேன். படித்தேன் படித்தேன்; பன்முறை படித்தேன்; தெவிட்டவில்லை. எத்தனை முறை படித்தாலும் நூற்சுவை அதிகரித்ததேயன்றி குறைவு என்பது கிஞ்சிற்றும் கிடையாது. துவிஜேந்தர்லால் ராயின் நாடகப் பூங்காவிலே ‘மீவார் வீழ்ச்சீ’யைப் பார்த்தேன்; ராணா பிரதாபனை ரஸித்தேன்; நூர்ஜஹானை நுகர்ந்தேன்; ஷாஜஹானிற் சஞ்சரித்தேன்; ஸிம்ஹள விஜயத்தைச் சிந்திதேன்;எல்லாம் ஒன்றிற்கொன்று அதிகமான யாசனையையும் வானையயும் தந்தன.

தமிழ்  நாடக   பீடத்திலே இத்தகைய அபூர்வமான கதைகள் ஏன் அரங்கேற்றப்படலாகாது? வன்னியையும் அல்லியையும் நல்ல தங்காளையும் சதாரத்தையும் சாவித்திரியையும் அரிச்சந்திரனையும் கோவலனையும் சிறுத்தொண்டரையும் விட்டால் தமிழ் ஜாதிக்கு வேறு கெதி இல்லையா? காதல் பாகத்தை மற்றும்தானா  தமிழன் ரஸிக்கக் கற்ற்றிருக்கிறான்? வேறு ரஸனைகள் அவனுக்குத் தெரியாதா? துர்காதாஸின் தேசாவேசத்தையும், பிரபு பக்தியையும் , யுத்த கௌசல்யத்தையும் மனிதத்துவத்தையும் குறிக்கின்ற ஒரு நாடகத்தைக் காண்பி! மஹா மாயாவின் துணிச்சலையும் சாரணத் திறமையையும் பிரசாரத் திறமையயும் காட்டும் ஒரு கதையாவது சொல்லு! திலேர் கானுடைய ஸ்நேகத்துவத்தையும், வீரத்தையும்,சம தர்மத்தையும் உருவகப்படுத்துகிறதான சரித்திரம் ஒன்றைத்தானும் குறிப்பிடு! காதல் ரஸம் நமது நாடகங்களில் நிறைய  உண்டு; சோக ரசமும் இருக்கிறது; வீர ரஸம் இல்லை; மற்ற ரசங்களும் இல்லை; பூலோகம் போய்க்கொண்டிருக்கிற புரட்சி (மாறுதல்)ப் பிரக்ருதியில் இந்த தமிழ் நாடக அரங்கம் மாத்திரம் இன்னும் ஏனோ கர்நாடகத்திலேயே இருக்கிறது . ஜெகப்பிரியர் (ஷேக்ஸ்பியர்) செய்திருக்கிற நாடகங்களை ஒன்றுவிடாமற் பார்! கதேயயையும் ஷில்லரையும் நடி! பிளெச்சருடைய வீர விருந்தினனாய் இரு!மோலியரின் ஹாஸ்ட்ய ரசத்தைப் பாருங்கள். பெர்னாட்ஷாவின் பெருமையைப் படி! துவிஜேந்தர்லாலின் ஜீவ வேகத்தையும் சிந்தி! தமிழா! எனது பிரிய தமிழா! உனது தனிக் காதல் ருசியை நான் தடுக்கவில்லை. உனது பரமார்த்தீகமான நாடககக் கதைகளை நான் வெறுக்கவில்லை. ஆனால் அந்த ஒரே ரஸத்தாலே மாத்திரம் மனித மனது திருப்திகொண்டு விடாது. இதர ரசனைளையும் ரஸிப்பதற்காகத்தான் இவ்வளவையும் சொல்லுகிறேன் பார்!

நமது தமிழ் மன்னர்கள் காலத்திலே நிகழ்ந்ததான பல ரஸனைகளைப் புகுத்தி பல கதைகலை எழுதி நாடக மேடைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. பிறநாட்டு நாடக  ஆசிரியர்கள் செய்திருக்கிற நாடககங்களையும் தமிழில்

கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது.எவரேனும் கற்பானாசிரியர்கள் தமிழ் ஜாதியில் இருக்கமாட்டார்களா? எழுத மாட்டார்களா?  என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது,  நீயேதான் ஏன் எழுதக் கூடாது? என்கிற கேள்வியை என் மனதுக்குள் ஏதோ ஒரு இயந்திரம் கேட்டது. முயன்று பார் என்று மனோதர்மமும் சொல்லிற்று. தமிழகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் முயற்சித்திருக்கிறேன். அதன் முதல் தோற்றம் இது.

(இதற்குப் பின்னர் தினகரன் அக்காலத்திய நாடக அரங்குகளில் காணப்பட்ட விசித்திரங்களைக் கூறுகிறார்)

கடைசியாக அவர் சொல்லுவது

ஸ்வர்கீய த்விஜேந்தர்லால் செய்த ‘துர்காதாஸை’ நான் அப்படியே தமிழில் ஆக்கிவைக்கவில்லை. கதாசாரத்தில் ஒரு சிறு விஷயத்தையும் கூட மாற்றாமலுந் திருத்தாமலும் ஹிந்தி பாஷாந்தரத்தில் உள்ளவாறே கூறியிருக்கிறேன். ஆனால் கற்பனையிலும் வர்ணனையிலும் துவிஜேந்திரனை ஆங்காங்கு கடந்துவிட்டிருப்பதால் அநேகமாய் முதல் பார்வைக்கு இந் நூல் பாஷாந்திரமாகவே தோன்றாது; தழுவி எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றும்

சுத்தத் தமிழ் வளர்ப்பவர்கள் என் மீது ஒரு குறை கூறுவார்கள். எனது நடையிலே சம்ஸ்கிருத பதங்கள் விரவியிருப்பது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பிற பாஷையே கூடாதென்கிற இப் பாஷாபிமானிகள் பாஷையை வளர்க்கிறவர்கள் ஆக மாட்டார்கள். சம்ஸ்கிருதப் பதங்களைப் பெரும்பாலாகக் கொண்டிருக்கிற ஹிந்தி இந்தியாவின் ராஷ்டிரப் (பொது) பாஷையாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதே எனது வாசகத்தில் சம்ஸ்கிருத, ஹிந்தி, உர்து நான் சேர்த்திருப்பதற்கு மன்னிப்பாகும்.

அல்லிப்புறம் சிறை

15-12-1930                                     தினகரன்

TAGS– தினகரன்,  நாடகங்கள், துவிஜேந்திர லால் ராய்

1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்! (Post No.5200)

Compiled by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 15-08  (British Summer Time)

 

Post No. 5200

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மலேயாவிலிருந்து வந்த சகலகலாவல்லி பத்திரிக்கை விளம்பரப்படி 1916 ஆம் ஆண்டு வரை வந்த தமிழ் நாவல்கள், நாடகங்களின் பட்டியல் கீழே உள்ளது. அக்காலத்திலேயே இத்தனை புஸ்தகங்களை எழுதி தமிழ்  வளர்த்தோரை நினைவுகூறுவது நம் கடமை.

 

இந்த நாவல்களைப் படிக்கையில் அக்கால எழுத்து நடை, மக்களின் விருப்பம், கலாசார வழக்கங்கள் ஆகிய தெளிவாகத் தெரியும் குறிப்பாக ஒருவருக்குத் திருமணம் செய்ய முனையும்போது பெண் வீட்டார் என்ன நினைக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் இன்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.

இதோ பட்டியல்:-

 

 

 

–SUBHAM–