ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Post No.10,0057)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,057

Date uploaded in London – 5 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் தலைசிறந்த, புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் Oliver Goldsmith . அவர் எழுதிய Vicar of Wakefield  ‘விகார்  ஆப் வேக்பீல்ட்’ நாவலும் ‘ஷீ ஸ்டூப்ஸ் டு கான்கர்’ She Stoops to Conquer நகைச் சுவை நாடகமும் இன்றுவரை விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவர் முக்கியமான ஆங்கில நாடக ஆசிரியராகக் கருதப்படுகிறார்.

அயர்லாந்து நாட்டில் பாலிமஹோன் (Ballymahon)என்னும் ஊரில் கிறிஸ்தவ மதப்பிரசாரகரின் (Clergyman)  மகனாகப் பிறந்தார். தந்தை போலவே  தானும் கிறிஸ்தவ குருவாக எண்ணினார். ஆனால் சர்ச் இவரை ஏற்றுக் கொள்ள வில்லை.அதற்கு முன் அவர் 1755ம் ஆண்டில் டப்ளின் நகர ‘ட்ரீனிட்டி காலேஜில்’ (Trinity College, Dublin) படித்துப் பட்டமும் பெற்றார்.

பின்னர் ஸ்காட்லாந்தில் எடின்பரோ நகரில் மருத்துவப் படிப்பிற்காகச் சென்றார். ஆனால் அதைத் தொடர முடியாமல் பாதியில் விட்டார். 25 வயது வாக்கில் ஓராண்டுக்கு காலத்துக்கு ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்தார் .பாதிப்பயணத்தில்  பண முடை ஏற்பட்டது. தன்னுடைய சங்கீத ஞானத்தைப் பயன்படுத்தி வாத்தியங்களை வாசித்து, தெருவில் துண்டு விரித்து(Busker)  பாட்டுப்பாடி பணம் சேர்த்தார்; தன்னுடைய நகைச் சுவை ஞானத்தையும் பயன்படுத்தி பேசிக்காட்டி காசு வாங்கிப் பிழைத்தார்.

கையில் கால் காசு இல்லாமல் 1756-ம் ஆண்டில் லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார். டாக்டர் தொழில் நடத்தி பணம் சம்பாதிக்க முயன்றார். அதிக வெற்றி கிடைக்காததால் பத்திரிக்கையாளர் ஆனார்.புஸ்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதோடு பல பத்திரிகைகளுக்கு கட்டுரைகளையும் எழுதினார்.

1760-களில் ‘அகராதி புகழ்’ டாக்டர் ஜான்சனைச் சந்தித்தார். அவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்த்தின் திறமையை அறிந்து பாராட்டினார். 34 வயதில் அவர் எழுதிய ‘ட்ராவலர் / பயணி’ Traveller என்ற கவிதை அவருக்குப் புகழ் சேர்த்தது.அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவருடைய ஒரே நாவலான ‘விகார் ஆப் வேக்பீல்ட்’ அச்சானது  ஒரு சமயப் பிரசாகரின் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்ப, துன்பங்களை விவரிக்கும் நாவல் இது.

கோல்ட்ஸ்மித்துக்கு 43 வயதானபோது அவர் எழுதிய நாடகம்தான் (She Stoops to Conquer)  அவரை புகழேணியின் உச்சத்திற்குக் கொண்டுசென்றது .

ஒரு பணக்கார நிலச்சசுவாந்தார் தனது மகளுக்கு நல்ல கணவன் கிடைக்க, படித்த பையனுடன் ஒரு சந்திப்பை ஏற்பட்டு செய்கிறார். அந்த மாப்பிள்ளை மாமனாரின் மாளிகையை, மதுபான விடுதி என்று நினைக்கிறார். எதிர்கால மணப்பெண்ணும் மதுபான விடுதி வேலைக்காரி போல நடந்து கொள்கிறாள். தன் கணவன் தன்னை பணத்துக்காக அன்றி, உண்மைக் காதலின்பேரில் ஏற்றுக்கொள்கிறானா என்று அவள் சோதிக்கிறாள். இதில் நிறைய ‘காமெடி’ வருகிறது. ஏனெனில் பெண்ணின் தாயார் அவளை பணக்கார உறவினனுக்கு கல்யாணம் கட்ட முயற்சி செய்கிறாள். இந்த நாடகம் அந்தக் காலத்திலேயே லண்டனில் மேடை ஏறி வெற்றி நடை போட்டது.

ஆலிவர் கோல்ட்ஸ்மித்

பிறந்த தேதி – நவம்பர் 10, 1728 ( 1730??)

இறந்த தேதி – ஏப்ரல் 4, 1774

வாழ்ந்த ஆண்டுகள் – 45 (43??)

எழுதிய நூல்கள்:-

1764 – The Traveller

1766 – The Vicar of Wakefield

1768 – The Good Natured Man

1770- The Deserted Village

1773 – She Stoops to Conquer

1774 – Retaliation (unfinished work)

-subham-

tags- ஐரிஷ், நாடக ஆசிரியர், ஆலிவர் கோல்ட்ஸ்மித், Oliver Goldsmith

நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ஆல்பர்ட் காமு (Post.9975)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9975

Date uploaded in London – 14 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸைச் சேர்ந்த ஆல்பர்ட் காமு ALBERT CAMUS . அவருக்கு 1957-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது .

வட ஆப்ரிக்காவிலுள்ள அல்ஜீரியா நாட்டில் ஒரு ஏழைத் தொழிலாளர் குடும்பத்தில் 1913-ல் காமு  CAMUS  பிறந்தார்.அக்காலத்தில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அல்ஜீரியா இருந்தது. இதுவே அவருடைய கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.

காமூவின் தந்தை முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார்.அதற்குப் பின்னர் அவரை தாயார் வளர்த்தார். அப்போது அவர்கள் அல்ஜீரிய தலைநகரான அல்ஜீயர்ஸில் வசித்தனர். அவர் க்ஷயரோகம் என்னும் காசநோய் கண்டும் கூட, அல்ஜீயர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கற்று, அதில் பட்டம் பெற்றார் .

1942ல் பிரான்சுக்குச் சென்று நாஜி ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் காமு சேர்ந்தார். பிரெஞ்சுப் படையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் கலந்துகொண்டார்.பின்னர் பத்திரிகையாளராகி நாவலும் எழுதத் துவங்கினார்.

29 வயதில் STRANGER ஸ்ட்ரேஞ்சர்/ அந்நியன்/வெளியாள்   என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.மனித வாழ்வின் பொருளற்ற , அவலம் நிறைந்த வாழ்வு பற்றிய கதை அது.

1934 ல் அவர் PLAGUE பிளேக்/ கொள்ளைநோய் என்னும் கதையைப் பதிப்பித்தார். அநீதிகளை எதிர்த்துப் போராடும்படி மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் கதை  அது.

ஷான் பால் சாத்ர JEAN PAUL SATRE போன்ற இடதுசாரி எழுத்தாளர்களைப் போல அவர் புரட்சி செய்யச் சொல்லவில்லை. தார்மீகப் புரட்சி வேண்டும் என்று வாதாடினார். அரசியல் புரட்சியைவிட இது முக்கியமானது என்றார் . புரட்சிக்காரன் என்ற நாவலில் மக்கள் அவர்கள் செய்யும் செயல்களுக்கன தார்மீகப் பொறுப்பை ஈக்கவேண்டும் என்று சொன்னார்.

43 வயதில் அவர் கடைசி நாவலான தி ஃ பால் / வீழ்ச்சி என்ற நாவலை எழுதினார். முயற்சி செய்து, நடத்தை மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். தனி மனித முயற்சியின்போதும், சமுதாயத்தின் ஒரு அங்கம் என்ற நினைவு வேண்டும் என்கிறார்.

அவர் நாடகங்களை எழுதியபோதும் அவைகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆல்பர்ட் காமு ஒரு விபத்தில் சிக்கி இறந்தார்.

பிறந்த தேதி – நவம்பர் 7, 1913

இறந்த தேதி – ஜனவரி 4, 1960

வாழ்ந்த ஆண்டுகள் – 46

அவர் எழுதிய நூல்கள்,

1938- CALIGULA

1942- THE STRANGER

1942- THE MYTH OF SISYPHUS

1944 – CROSS PURPOSE

1947 – THE PLAGUE

1948- STATE OF SIEGE

1951- THE REBEL

1956- THE FALL

1958- EXILE AND THE KINGDOM

–SUBHAM–

tags- நோபல் பரிசு, பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ,ஆல்பர்ட் காமு, Albert Camus

சிறை சென்ற ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆஸ்கர் வைல்ட் (Post No.9904)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9904

Date uploaded in London –28 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் நாடக ஆசிரியரும் கவிஞருமான ஆஸ்கர் வைல்ட் OSCAR WILDE ஹோமோசெக்ஸ் HOMOSEX – ஒரு பால் புணர்ச்சி– குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் அவரது படைப்புகள் இந்தக் குற்றத்துக்கு அப்பாற்பட்டவை . இன்றளவும் படிக்கப்படுபவை. நகைச் சுவை ததும்ப எழுதக்  கூடியவர் ஆஸ்கர் வைல்ட்.

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு டாக்டர்; தாயார் ஒரு கவிஞர். ஆஸ்கர் வைல்ட் பிறவியிலேயே ஒரு மேதை. டப்ளின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் சிறப்பாகத் தேறினார். கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர். படாடோப உடைகளை அணிபவர். இதனால் லண்டன் பிரமுகர் வட்டாரத்தில் எல்லோ ருக்கும்  அவரைத் தெரியும்

1884ல் அவர் கான்ஸ்டன்ஸ் லாயிட் என்பவரை மணந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனார்.

முதலில் பத்திரிகையில் சேர்ந்தார். 34 வயதில் சிறுவர்க்காக எழுதிய கதைப் புஸ்தகம் வெற்றி நடை போட்டது .ஒரே ஒரு நாவல் மட்டுமே எழுதினார்.அ து ஒரு அழகான இளைஞரின் கதை. கெட்ட வழக்கங்களால் அவருடைய அழகிய தோற்றம் எப்படி அவலம் அடைகிறது என்பதை வருணிக்கும் கதை.

1879 முதல் 1895க்குள் ஒன்பது நாடகங்களை எழுதினார். அவற்றில் THE IMPORTANCE OF BEING EARNEST ‘இம்பார்ட்டன்ஸ் ஆப் பீயிங் ஏர்னஸ்ட்’ என்ற நாடகம் நல்ல நகைச்சுவை உடையது இரண்டு  வருங்கால மாப்பிள்ளைகளின் இருவிதமான வாழ்க்கையை இது விளக்குகிறது .

இவ்வாறு நாடகங்களின் மூலம்  புகழ் சேரும் தருவாயில் அவருடைய சுய வாழ்வு பற்றிய ரகசியங்கள் அம்பலமாயிற்று .ஆல்ப்ரட் டக்ளஸ் என்ற பிரபுவுடன் அவர் கொண்ட தகாத உறவு வெளிச்சத்துக்கு வந்தது. அக்காலத்தில் ஆணுடன் ஆண் கொள்ளும் ஒரு பால் புணர்ச்சி பிரிட்டனில் சட்ட விரோதமானதாக இருந்தது. இதன் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலை

அனுபவங்களையும் கவிதையாக எழுதி வெளியிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை கிடைத்தது. பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டுக்குச்சென்று வசித்தார்.

அவருடைய உடல்நலமும் குன்றியது. விடு தலை அடைந்த மூன்றே ஆண்டுகளில் ஆஸ்கர் வைல்ட்  இறந்தார்.

பிறந்த தேதி – அக்டோபர்  16, 1854

இறந்த தேதி -நவம்பர் 30, 1900

வாந்தி ஆண்டுகள் – 46 ஆண்டுகள்

அவருடைய நாடகங்களும் கவிதை நூல்களும்

1890- THE PICTURE OF DORIAN GRAY

1891-  LORD ARTHUR SAVILE’S CRIME

1892- LADY WINDERMERE’S FAN

1893- A WOMAN OF NO IMPORTANCE

1895 – THE IMPORTANCE OF BEING EARNEST

1895- AN IDEAL HUSBAND

1896- SALOME

1898- THE BALLAD OF READING GAOL

DRAMA WAS A SUCCESS, BUT AUDIENCE WAS A FAILURE …

https://tamilandvedas.com › drama-w…

  1.  

5 Apr 2019 — ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). Playwright Anecdotes: –. SUCCESS AND FAILURE. Oscar Wilde arrived at his …

Rudeness anecdotes | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › rudeness-anecdotes

  1.  

21 Dec 2016 — Oscar Wilde indulged his penchant for baiting Yankees when he met Richard Harding Davis. “So you are from Philadelphia where Washington is …

–SUBHAM-

TAGS- சிறை , ஐரிஷ்,  நாடக ஆசிரியர்,  ஆஸ்கர் வைல்ட், OSCAR WILDE

நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன் (Post No.9755)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9755

Date uploaded in London – –20 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன் (RICHARD BRINSLEY SHERIDAN)  நகைச்சுவையுடன் எழுதும் நாடக ஆசிரியர் ஆவார்.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பிறந்தார். நடிப்பும் நாடகமும் அவர் ரத்தத்தத்தில் ஊறிப்போன விஷயங்கள் ஆகும். அவரின் தந்தை ஒரு நடிகர். தாயாரோ நாடகங்களையும் நாவல்களையும் எழுதியவர்.

ஆயினும் அவரது குடும்பம் வறுமையில் தவித்தது. வாங்கிய கடன்களைத் திரும்பிச் செலுத்த இயலவில்லை. ஆகவே ஷெரிடன் , கல்வி கற்பதற்காக இங்கிலத்துக்குச் சென்றபோது, குடும்பம் பிரான்ஸுக்கு  குடியேறியது .

பிறந்த தேதி –அக்டோபர்  31, 1751

இறந்த தேதி – ஜூலை 7, 1816

வாழ்ந்த ஆண்டுகள் – 64

PUBLICATIONS எழுதிய நூல்கள் –

1775- தி ரைவல்ஸ்  THE RIVALS

1775 – செயின்ட் பாட்ரிக் டே SAINT PATRICK’S DAY

1775 – தி டுவேன்னா THE DUENNA

1777- தி ஸ்கூல் பார் ஸ்கேண்டல் THE SCHOOL FOR SCANDAL

1779 – தி க்ரிட்டிக் THE CRITIC

ஷெரிடனுக்கு 19 வயதான போது , அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்கு வந்தது.அவர்கள் பாத் என்னும் நகரில் வசித்தனர்.

அங்கு ஷெரிடன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.எலிசபெத் அன் லின்லி என்பவருடன் அவர் காதல் விவகாரத்தில் சிக்கினார். அவர் சிறந்த பாடகி.அவருக்காக இரண்டு முறை மற்றவர்களுடன் மோதினார் .1773ல் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு லண்டனுக்கு வந்தனர்

லண்டனில் டாக்டர் ஜான்ஸன் , ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஆகிய பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. எலிசபெத்தின் பாடல் தொழில் மூலமே அவர்கள் காலம் தள்ளியிருக்க முடியும். ஆனால் ஷெரிடன் , எழுத்துமூலம் பிழைக்க எண்ணினார்.

23 வயதில்  தி ரைவல்ஸ் என்ற நாடகத்தை எழுதினார். அதே ஆண்டில் மேலும் இரண்டு நாடகங்களை எழுதி வெளியிட்டார். மூன்றும் வெற்றி அடைந்தன. உடனே பிரபல நாடக அரங்கு அவருக்கு நடிகர்/ மானேஜர் என்ற இரண்டு பணிகளை அளித்தது.

ஷெரிடன் எழுதிய நாடகங்களில் மிகவும் நகைச்சுவை ததும்பியது ஸ்கூல் ஃ பார் ஸ்கே ண்டல் என்ற நாடகம்தான். 18ம் நூற்றா ண்டின் நாடகங்களில் மிகவும் பிரபலமானது . முட்டாள்தனமும், கொடூரமும், சுய விளம்பரமும் கொண்ட மனிதர்களைக் கிண்டல் செய்யும் நாடகம் இது .

நாடகத்தில் பேசிப் பேசி நல்ல பேச்சாளராக உருவானார். இதன் மூலம் பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியையும் வகித்தார்.

XXX

old article

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post …

https://tamilandvedas.com › ஷெர…

1.     

Translate this page

13 Aug 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ஐரிஷ் கவிஞர், நாடக ஆசிரியர், அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த …

—subham—

tags- நகைச்சுவை, நாடக ஆசிரியர்,  ஷெரிடன்

நார்வே நாடக ஆசிரியர் இப்சென் (Post No.9642)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9642

Date uploaded in London – –24 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IBSEN

(1828 – 1906)

ஹென்ரிக் ஜோஹன் இப்சென் (HENRIK JOHAN IBSEN) நார்வே நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் ஒரு நாடக ஆசிரியர்.

      தெற்கு நார்வேயில் ஸ்கீய்ன் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பணக்கார வர்த்தகர். ஆனால் 1836-இல் அவர் செல்வம் அனைத்தையும் இழந்து ஏழையானார்.

      இப்சென் ஒரு மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய நாட்டம் முழுவதும் எழுத்திலேயே இருந்தது. கடையில் வேலைபார்த்துக் கொண்டே கவிதைகளை எழுதத் தொடங்கினார். ஆனால் அவை பாராட்டும்படியாக இல்லை. இதற்குப் பின்

நார்வே நாட்டின் தலை நகரான ஆஸ்லோ நகருக்குச் (OSLO) சென்று பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட பலருடன் டொடர்பு ஏற்பட்டது. படிப்பில் கூட கவனம் செலுத்தாது  நாடகக் கலைஞர்களுடன் நேரத்தை செலவிட்டார். இறுதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடகம் எழுதத் துவங்கினார்.

       1859-ஆம் ஆண்டில் ஆஸ்லோ நகரில் அவருடைய முதலாவது நாடகம் மேடை ஏறியது. இதைத் தொடர்ந்து BERGEN நகரில் நாடக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கு ஏழாண்டுகளுக்குப் பிறகு அவருடைய புகழ்பெற்ற முதல் நாடகம் “LOVE’S COMEDY” வெளியானது. காதல் – திருமணம் பற்றிய இந்த நாடகம் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் நாடகக் கொட்டகையை நாட மறுத்து விட்டார்கள்.

      இதற்கடுத்த 30 ஆண்டுகள் இப்சென் அவர்கள் இதாலியிலும் ஜெர்மனியிலும் காலந் தள்ளினார். அப்போதுதான் அவர் மிகவும் சிறந்த நாடகங்களைப் படைத்தார். “GHOSTS”, THE MASTER BUILDER, A DOLL’S HOUSE (பொம்மை வீடு), ROSMERSHOLM, THE WILD DUCK ஆகிய நாடகங்கள் வெளியிடப்பட்டன.

      கடின உழைப்பு இன்சென் அவர்களைப் பாதித்தது. 74-ஆவது வயதுவரை வாழ்ந்தாலும் கடைசி 4 ஆண்டுகள் மனநிலை பாதிக்கப் பட்டநிலையில் வாழ நேரிட்டது.

xxxxxxxxxxxxxxxxx

tags- பொம்மை வீடு, நார்வே ,நாடக ஆசிரியர், இப்சென்,Ibsen

ஜெர்மானிய நாடக ஆசிரியர் பிரெடெரிக் ஷில்லர் (Post No.9636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9636

Date uploaded in London – –23 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெடெரிக் ஷில்லர்

FRIEDRICK SCHILLER

(1759 – 1805)

பிரெடெரிக் ஷில்லர் FRIEDRICK SCHILLER ஒரு ஜெர்மானிய நாடக ஆசிரியர். ஏழாண்டுப் போர் (SEVEN YEARS WAR) காலத்தில் அவர் WüRTTEMBERG-இல் பிறந்தார்.

      அவருடைய தந்தை ராணுவத்தில் மருத்துவராக (SURGEON) பணிபுரிந்ததால் படைகள் செல்லுமிடத்திற்கு அவரும் செல்ல வேண்டியிருந்தது. இதனால் பிரெடெரிக் ஷில்லர் அவர்களுக்கு நிரந்தர வீடு என்று எதுவுமில்லை.

      அவர் பெரியவராகியவுடன் சமய பரப்புரையாளராக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவருடைய நகரில் வாழ்ந்த இளைஞர்கள் அனைவரைப் போலவே இவரையும் ராணுவத்தில் சேரக் கட்டாயப்படுத்தினர். ராணுவக் கழகத்தில் சேர்ந்த அவர் சட்டம் பயில அனுப்பப்பட்டார். ஆனால் சட்டக்கல்வி அவருக்குப் பிடிக்கவில்லை. பின்னர் வேறொரு ராணுவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.

அவர் 22 வயதில் முதல் நாடகத்தை வெளியிட்டார். ஜெர்மனியில் இதுவரை தோன்றாத புதுப்பாணியில் நாடகம் இருந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் வூர்ட்டன்பர்க் (WüRTTEMBERG) ஆட்சியாளருக்கு அது பிடிக்காததால் இனி நாடகம் எழுதக்கூடாதென்று பிரெடெரிக் ஷில்லர்க்கு தடைவிதிக்கப்பட்டது.

உடனே அவர் ஊரைக்காலி செய்து பல நகரங்களுக்குச் சென்றுவந்தார். பின்னர் ஜெர்மனியின் கலைக்கேந்திரமான WEIMARக்குச் சென்றார். அங்கு புகழ் பெற்ற கவிஞர் கெதே (GOETHE)யைச் சந்தித்து அவரது நட்பைப் பெற்றார். அவர் மூலமாக அருகிலுள்ள JENA பல்கலைகழகத்தில் பேராசிரியர் வேலை கிடைத்தது.

வெய்மார் (WEIMAR) அரசவையில் பணிபுரிந்த ஒரு பெண்ணை மணம் முடித்தார். இதற்கு ஓராண்டுக்குப் பிறகு கடும் நோய்வாய்பட்டதால் பேராசிரியர் பணியை துறக்க நேரிட்டது. டேனிஷ் ஆதரவாளர் (DANISH ADMIRERS) அவருக்கு ஓய்வூதியம் அளிக்கவே முப்பதாண்டுப் போர் (THIRTY YEARS WAR) என்ற நூலை எழுதி முடித்தார்.

      அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவரது சிறந்த நாடகங்கள் வெளிவரத் துவங்கின. அதில் முதல் நாடகம் WALLEN STEIN இதனைத் தொடர்ந்து எழுதப்பட்டது MARIA STUART. இது ஸ்காட்லாந்து மஹாராணி மேரியை பற்றிய நாடகம். அவர் கடைசியாக எழுதிய WILHELM TELL அவருடைய மிகச்சிறந்த நாடகமாகும்.

xxxxxxxx subham xxxx

 tags – ஜெர்மனி, நாடக ஆசிரியர், பிரெடெரிக் ஷில்லர் , schiller

நாடக ஆசிரியர் ஜான் ரஸின் (9633)

நாடக ஆசிரியர் ஜான் ரஸின் (Post.9633)

JEAN RACINE (1639 – 1699)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9633

Date uploaded in London – –22 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பிரான்ஸின் மிகப்பெரிய நாடக ஆசிரியர் ஜான் ரஸின் (JOHN RACINE)       இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து ஆதரவற்று நின்ற ஜான் ரஸின் (RACINE) ஐ அவருடைய தாத்தாதான் வளர்த்து வந்தார். அவர்

tags- நாடக ஆசிரியர், ஜான் ரஸின், John Racine