நாடி ஜோதிடம் பலித்தது !!! (Post. 8569& 8570)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8569

Date uploaded in London – 25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(கத்துக்குட்டியின் சொந்த அனுபவம்)

சுமார் 40 வருடங்களுக்கு முன் நான் தொழிற்சாலையில்

வேலை செய்து கொண்டிருந்த போது எனது நெருங்கிய

நண்பர் என் வீட்டிற்கு வருகை தந்தார்.வரவேற்று காப்பி

கொடுத்து உபசாரம் எல்லாம் ஆன பிறகு நண்பர் சொன்னார்

அடுத்த ஞாயிறு எங்கேயும் அப்பாயிட்மெண்ட் (appointment) வைத்துக்

கொள்ளாதே…… ஒரு முக்கிய இடத்திற்கு போகிறோம்

என்ன இடம் ….எங்கே…..எதற்கு????

கவலைப்படதே சார், விருது நகர் பக்கத்தில் கவலூர்

என்றொரு கிராம ம் இருக்கிறது. அங்கே ஒருவர் நாடி

ஜோதிடம் பார்க்கிறாராம்.இன்னும் மூன்று பேரையும்

“செட்டப்”பண்ணியிருக்கிறேன்…….வா, ஜாலி ஆகப் போய்

வருவோம்.

நண்பர் சொல்லும் போது மறுப்பேது????

ஞாயிறு காலை 7 மணிக்கெல்லாம் மதுரை சென்ட்ரல்

பஸ் ஸாண்டில் அசெம்பிள் (assemble)ஆனோம். முதலில் டிபன்,காப்பி

பிறகு பயணம்…..மொத்தம் ஐந்து பேர்கள்.பஸ்ஸில் கூட்டமே இல்லை.

கண்டக்டரிடம் “ஐந்து கவலூர்”……கண்டக்டர்

எங்களைப் பார்த்து “எங்கே நாடி ஜோஸ்யர் வீட்டுக்கா???.”

நாங்கள் போவது இவருக்கு எப்படி தெரியும்???

அவரே பதில்சொன்னார் இன்னும் அடுத்த பஸ்ஸில் பாருங்கள்

இன்னும் கூட்டம் ஏறும் கவலூருக்கு……

கண்டக்டரே இறக்கி விட்டு வழியும் சொன்னார்……

ஹோ ,இவர் பிரபலமான ஜோதிடர் போலும்!!!!

நல்ல பெரிய வீடு. வாசலில் பெரிய பந்தல். உள்ளே 10

பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 60 வந்து மதிக்கத்குந்த

ஆசாமி நடுவில் . பக்கத்தில் ஒருவர் சாய்வு மேஜை கையில்

பேனா 10 நாற்பது பக்கம் நோட்டுகளுடன் ஒருவர்.

முதலில் வந்தது யாரு??? கணீரென்ற குரல்!!! கையில் உள்ள

ஏட்டைப் புரட்டினார்,கட்டை விரலைப் பார்தது ரேகை பெயரை

சொல்ல கட கட வென பாட்டு வடிவத்தில் சர மாரி

பாட , அருகில்  உள்ளவர் அதை எழுதிக் கொண்டே இருந்தார்

4 பேரைப்பார்ததும் கூட்டம் 20 பேராகி விட்டது………

.அங்குள்ள அனைவர் பெயர்களை தனித்தனி சீட்டில் எழுதச்

எழுதச் சொன்னார். யார் மகேந்திரன்??? கையை தூக்கினார்

அவர்……இன்று உங்கள் முறை . நீங்களதான் இன்று

எல்லோருக்கும் ஆமை வடை வாங்கித்தர வேண்டும்…….

மறுப்பே கிடையாது எனென்றால் நாடி பார்க்க வேண்டுமே??

( பிறகு தான் தெரிந்தது இது அவர் “சைடு” பிஸினஸ் என்று!!!! )

5 பேர்களை பார்த்த பின் என்முறை வந்தது. கட்டை விரல்

ரேகையைப் பார்த்து” கும்ப வெள்ளி முச்சுடர் ரேகை”……

உங்கள் பெயர்… கலியுகத்தோனின் நாமம்..சரி

உனக்கு இரண்டு கிரகம் உச்சம்….சரி

வாய்க்கப் போகும் மனைவியின் பெயரோ தாமரையின் வாசத்தாள்.

So far so good!

இதற்குப் பிறகு எல்லாம்…..flop……

கடைசியில் சொன்னாரே ஒரு வார்த்தை!!!! உனக்கு கூடிய

சீக்கிரம் “நாலு கால் ஊர்தி” கிடைக்கப் போகிறது!!!!

என் கூட வந்த ஓவ்வொருவரும் சிரித்து விட்டனர் அவ்வளவு

தான் தட்சிணையை கொடுத்து விட்டு வெளியே வந்து

சிரிப்பாய் சிரித்தோம் . ஏய் , எங்களையும் உன் காரில்

ஏற்றி கொள்ளப்பா….. சிரிப்பு!!!!

வீட்டுக்கு வந்த 3 மாதம் ஆயிற்று. ஆபீஸில் என்னைப் பார்க்கும்

போதெல்லாம் நாலு கால் ஊர்தியில் எப்பொது எங்களை கூட்டிக்

கொண்டு போகப் போகிறாய்????

ஒரு ஞாயிற்றுக் கிழமை பாத்ரூமில் வழுக்கினது தான் தெரியும்

நான் கண்விழித்த போது ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலில்

துடை வரைக்கும் பெரிய மாவுக் கட்டு…….ஒரு மாதம் ரெஸ்ட்

என்று விட்டார் டாக்டர்……டிஸ்சார்ஜ் ஆகப்போகும் நான்எப்படி

வீட்டுக்கு போகப் போகிறேன் எப்படி வெளியில் வந்து பார்ப்பேன்??

என்றெல்லாம் மன ஓட்டம்…..ஆஸ்பத்திரி ரூம் வாசலில்

ஒரு “வீல் சேர்”. அன்று என்னுடன் வந்த 4 பேரும் சொந்த

பணத்தைப் போட்டு வாங்கி எனக்கு கொடுத்த” present”!,.,

அன்று சிரித்த அவர்கள் இன்றும் விட்டுக் கொடுக்க வில்லை.

அன்று நாடி ஜோஸ்யர் சொன்ன மாதிரியே உனக்கு நாலு கால்

ஊர்தி. உனக்கு வந்திருக்கிறது பார்!!,!

நாலு சக்கரமும் என்னைப் பார்த்து சிரித்தன!!!!

XXXXX

லண்டனில் நாடி ஜோதிடம் (Post No.8570)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8570

Date uploaded in London – 25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனில் நாடி ஜோதிடம்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நானும் என் மகனும் வாரம் தோறும் வேதம் கற்க ‘சிந்தி மந்திரு’ (Sindhi Mandir) க்குப் போவோம். அங்கு திருச்சி கல்யாண சுந்தர குருக்கள் எங்களுக்கு ருத்ரம், சமகம், சூக்தம் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஏர் இந்தியா Air India வெங்கடராமன் அல்லது இந்தியன் ரயில்வே India Railways ஏஜெண்ட் Mr.தண்ட பாணி எனக்கும் என் மகனுக்கும் காரில் லிப்ட் (Lift)  கொடுப்பார்கள். ஒரு நாள் Mr.வெங்கட்ராமன் என்னிடம், ஒரு உதவி கேட்டார். அவருடைய நண்பருக்கு தமிழ் செய்யுள் சிலவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்றார் . எனக்கோ தமிழ் என்றால் நெய் ஒழுகும் கோதுமை ஹல்வா சாப்பிட்டது போல. உடனே தயங்கமால் யெஸ் YES என்று சொன்னேன்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. வீட்டு வாசலில் கார் நின்றது. காரில் செல்லுகையில் வெங்கடராமனிடம் எங்கு போகிறோம், யாரைப் பார்க்கப் போகிறோம், என்ன செய்யுள்? அவர் இயற்றியதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.

திரு வெங்கடராமன் சொன்னார்: நாம் பார்க்கப்போகும் மனிதர் லண்டனில் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவர் இராமாயண உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா என்றார் . அவர் மகனைப்பற்றி ஒரு நாடி ஜோதிடர் எழுதிக் கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்க்கத்தான் உங்களை அழைத்தார்.

இதைக் கேட்டவுடன் எனக்கும் மகிழ்ச்சி. அட ஒருவர் தன் குடும்ப ரஹசியங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரது வீட்டில் அமர்ந்து நாடி ஜோதிடர் 40 பக்க நோட்டில் அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்த்து முடித்தேன். அவர் காதால் கேட்டாரே தவிர ஒன்றும் குறித்துக் கொள்ளவில்லை. எனக்கும் வியப்பு.! என்னடா இது. இவ்வளவு கஷ்டப்பட்டு மொழி பெயர்க்கிறோம்; கவனமாகக் கேட்கிறார். ஆனால் ஒன்றும் எழுதிக் கொள்ளவில்லையே என்று நினைத்தேன்.

செய்யுட்களை மொழிபெயர்த்து முடித்ததுதான் தாமதம்.

EXACTLY SAME ! எக்ஸ்சாக்ட்லி சேம் ; ‘பில்குல் டீக் ஹை’ என்றார்

என்ன பொருள் என்று வினவினேன்.

ஏற்கனவே ஒருவர் அவ்வளவு செய்யுட்களையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார் என்றும் நான் அப்படியே அதை மொழி பெயர்த்தேன் என்றும் பாராட்டி நன்றி சொன்னார்.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

அட! பாவி மனுஷா! இதை முன் கூட்டியே சொல்லி இருக்கக் கூடாதா ? நான் இன்னும் கவனமாக பயந்து கொண்டே — பய பக்தியுடன் — மொழி பெயர்த்து இருப்பேனே! என்று மனதில் பொருமினேன் .

போகட்டும்; அவரிடம் போனபோது ஒரு புதிய விஷயம் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஒரு பிரபல நாடி ஜோதிடர் இருக்கிறார். நிறைய வெளி நாட்டுக்கார்கள் அவரை மொய்ப்பதால் அப்பாயிண்ட்மெண்ட் APPOINTMENT இல்லாமல் பார்க்க முடியாது ; இந்த ஹிந்திவாலாவும் ஒவ்வொரு முறையும் அவரைப்  பார்த்து  ஜோதிடம் கேட்பது வழக்கம். அவர் துல்லியமாக சொல்லுவார். அருகிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதிக் கொடுப்பார்கள் என்று.

நானும் நினைப்பேன்; அடுத்த முறை காஞ்சி செல்லும்போது இவரைப் பார்த்துவிடவேண்டும் என்று. ஆ னால் நான்  ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும்போதும். காஞ்சி மடத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவே நேரம் சரியாகப் போய்விடுகிறது.

2018ல் இந்தியாவுக்குச் சென்ற போது நிறைய நேரம் மரத்துக்கு அடியில் காரை நிறுத்தி 5 மணி நேரம் வீணடித்தேன் . காலை ரவுண்டு கோவில்களை ஒன்னரை மணிக்கு (1-30 PM) முடித்தோம். அடுத்த ரவுண்டு 5 PM அல்லது 6 PM மணிக்குத்தான் கோவில்கள் திறக்கும் என்றார்கள் . சகுந்தலா நினைவு மியூசியத்தைச் சுற்றிப்பார்த்தேன்; சமண காஞ்சிக்குப் போய் கொதிக்கும் வெயிலில் பாதி மலை ஏறி வி ட்டு குரங்குகள் மட்டும் இருப்பதைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டேன்; ஜன நடமாட்டமே இல்லை. அப்போது கூட இந்த நாடி ஜோதிடர் நினைவுக்கு வரவில்லை.

உண்மைதான் ; நாடி ஜோதிடரைப் பார்க்கப்போவதும் விதிப்படிதான் நடக்குமாம். நாம் போகும் போது நம்மைப் பற்றிய நாடி அவர் தொகுப்பில் இருக்குமாம். அவரிடம்  அந்த நாடி ஓலைகள் இல்லாவிடில் அவரிடம் செல்லாமல் நம்மை விதியே தடுக்குமாம்.

வாழ்க “நல்ல” நாடி ஜோதிடர்கள் !

TAGS —  நாடி ஜோதிடம், பலித்தது, லண்டன், காஞ்சிபுரம்

CHINESE ASTROLOGY; I TOOK THESE PICTURES IN HONG AND AUSTRALIA

–SUBHAM–

நாடி ஜோதிட ரகசியங்கள்: ‘நாஸா’ விஞ்ஞானிகள் கவனிக்க!

nadi 1

By London Swaminathan
Post No. 1021: Date 5th May 2014.

அமெரிக்க விண்வெளி (நாஸா) விஞ்ஞானிகளுக்கும் தெரியாத விஷயங்கள் நமக்குத் தெரியும்!!

இந்திய இலக்கியங்களில் எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்கள் உள்ளன. ஒருவர் கண்டுபிடித்த பின்னர் இது எங்கள் சமய நூல்களில் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனரே என்றால் நம்மைப் பார்த்து நகைப்போர் தொகையே அதிகம் இருக்கும். இதுவரை நாம் மட்டுமே அறிந்த பல விஷயங்களை நான் பட்டியலிட்டு எழுதிவிட்டேன். இதோ இன்னும் ஒரு ரகசியம். இதை உலக விஞ்ஞானிகள் அறிந்தால் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

nadi2

நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம் என்னும் துறையில் விஷயம் தெரிந்தவர்களைவிட போலிகளும் மோசடிக்காரர்களுமே அதிகம். ஆயினும் இத்துறையில் சில அபூர்வமான விஞ்ஞான விஷயங்கள் உள்ளன. ஒருவருடைய கைகளைப் பார்த்தே அவர்கள் பிறந்த நேரத்தில் வானத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தன என்பதை துல்லியமாகச் சொல்லி விடுகின்றனர். பின்னர் அவர்களுடைய எதிர்கால வாழ்வு பற்றி ஆரூடங்களும் சொல்லுவர்.

ஒருவர் பிறந்தபோது வானில் எந்த கிரகம் எந்த இடத்தில் (ராசியில்) இருந்தது என்பதைக் கூறுவது வான சாஸ்திரம். அதற்குப் பின் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன என்ன நேரிடும் என்று சொல்லுவது ஜோதிடம். இரண்டும் வெவ்வேறு துறைகள். என்னுடைய சகோதரர் இருவர் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரை அருகில் கவலூர் என்னும் கிராமத்தில் இருந்த நாடி சோதிடர்களைப் பார்க்கப் போயினர். கைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே கிரக நிலைகளை எழுதிக் கொடுத்துவிட்டனர். பின்னர் சோதிடமும் கூறினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது குடும்ப ஜோதிடர் ஏற்கனவே எழுதிக் கொடுத்த ஜாதகத்தில் இருந்த கிரக நிலைகளையே அந்த நாடி ஜோதிடர்களும் எழுதி இருந்தனர். இது பெரிய அதிசயம். வரப்போகும் மனைவியின் பெயரையும் கூறியிருந்தனர். அதுவரை எல்லாம் உண்மையாக இருந்தது. ஆனால் எதிர்காலம் பற்றிச் சொன்னது நடக்கவில்லை.

கைகளை மட்டும் பார்த்து ஒருவருடைய பிறந்த நாள் கிரக நிலைகளை சொல்லமுடிவது பல வகைகளில் விஞ்ஞானிகளுக்கு உதவும். இந்தக் கலை அழிவதற்கு முன் இதை விஞ்ஞானிகள் ஆராய்வது நம் கடமை. இந்த ரகசியத்தை அறிந்தால் பிரபஞசத்தின் புரியாத புதிர்களை விடுவிக்கமுடியும். இது இந்துக்கள் உலகிற்கு வழங்கும் ஒரு கொடையாக அமையும்!

nadi book

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்று ஒரு பழமொழி உண்டு. அண்டம், பிண்டம் ஆகிய இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள் அதாவது கோள (முட்டை) வடிவில் இருக்கும் பிரபஞ்சம் அல்லது பூமியைக் குறிக்கும். அதில் இருக்கும் மலைகள், ஆறுகள், தாவரங்கள் ஆகியன உடலில் ரத்த நாளங்கள், முடி முதலியன வடிவில் இருப்பதாகச் சொல்லுவர். இதற்கு மேலும் அழ்ந்த பொருள்களும் உண்டு. நம்முடைய மனமும் பிரபஞ்ச மனமும் ஒன்றாகும் போது காலத்தைக் கடந்து நின்று கடந்த கால, நிகழ் கால, வருங்கால நிகழ்ச்சிகாஇக் காணமுடியும்! மற்றொரு பொருள்: பிரபஞ்சத்தில் எத்தனை அண்டசரசரங்கள் இருக்கின்றனவோ அவைகள் நம்மில் உள்ளன. இமயமலையை பொருட்காட்சி சாலையில் மண்ணில் செய்துவைப்பது போல நம்மை இறைவன் ஒரு சின்ன பொம்மை (மாடல்) யாகப் படித்திருக்கிறான். (‘’பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்’’– என்ற கட்டுரைஅயில் முன்னர் இது விளக்கப்பட்டுள்ளது)

ரேகையைப் பார்த்து உருவத்தை வரையும் அபூர்வ கலை!

இன்னொரு விஷயம் ஒருவருடைய கை ரேகைகளைப் பார்த்து உருவத்தையே வரையும் அல்லது சொல்லும் கலை. இந்த அபூர்வ கலை இப்பொழுது அழிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. குற்றவியல் விஞ்ஞானத்திலும் தடய அறிவியலிலும் கை விரல் ரேகைப்பதிவுகள் பயன் படுத்தப்படுகின்றன. இதுவும் முதலில் இந்தியாவில்தான் தோன்றியது.

nadi 3

பிருஹத் கதா என்னும் நூல் தமிழில் பெருங்கதை என்று கவிதை வடிவில் உள்ளது. அருமையான ஒரு இலக்கியம். இதில் ஒரு அபூர்வ காட்சி வருகிறது. மதன மஞ்சிகை என்ற பேரழகி மாடியில் (உப்பரிகையில்) தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறாள். அப்பொழுது அந்த வழியாக நரவாணன் என்பவன் யானை மீது பவனி வந்தான். அந்த நேரத்தில் பந்து தவறிப் போய் அவன் மீது விழுந்தது. பந்தை எடுக்க ஓடோடி வந்த ‘அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான்’. காதல் மலர்ந்தது. பந்தை எடுக்காமல் திரும்பி விடுகிறாள். ஆனால் யார் அந்த நங்கை? அவள் பெயர் என்ன? என்பதெல்லாம் நரவாணனுக்குத் தெரியாது.

நண்பன் கோமுகனிடம் பந்தைக் கொடுத்து இதை எறிந்தது யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லுகிறான். கோமுகனோ இருந்த இடத்திலேயே அமர்ந்து காரியத்தை முடித்துவிடுகிறான். சந்தனக் கையில் தோய்த்த கையுடன் மதனமஞ்சிகா பந்து விளையாடியதால் அவளுடைய விரல் ரேகைகள் அதில் பதிந்திருந்தன. அந்த சாத்திரத்தில் கோமுகன் வல்லவன். ஆதலால் ரேகையைக் கொண்டே அந்த அழகியின் அங்க அடையாளங் களை வருணிக்கிறான். அந்த அடையாளங்களை உடையவள் மதனா தான் என்பதையும் உறுதிபடக் கூறுகிறான். இதோ அந்த பெருங்கதைப் பாடல்:-

palm 1

“விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும்
அங்கைக்கு ஏற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக்கு ஏற்ற நன்கு அமைதோளும்
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும்
மாப்படு வடு உறழ் மலர் நெடுங் கண்ணும்
துப்பு அன வாயும் முத்துஒளி முறுவலும்
ஒழுகுகொடி மூக்கும் எழுதுநுண் புருவமும்
சேடு அமைசெவியும் சில் இருங்கூந்தலும்
ஒல்குமயிர் ஒழுக்கும் அல்குற்பரப்பும்
மருங்கின் நீளமும் நிறம்கிளர் சேவடித்
தன்மையும் எல்லாம் முன்முறை நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதி
பாவை இலக்கணம் பற்றி மற்று அதன்
நிறமும் நீளமும் பிறவும் தெரியாச்
செறிதாள் அண்ணலைச் செவ்வியின் வணங்கி
இதன் வடிவு ஒப்போள் இந்நகர் வரைப்பின்
மதனமஞ்சிகை ஆகும்!”

பெருங்கதை 5-8-100/116

nadi 4

இந்துமதம் வெளியிடும் விஞ்ஞான ரகசியங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகள்:
1.வடக்கே தலை வைக்காதே
2. Post No. 934.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி1 (Date 26-3-14)
3. Post No.935. மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி2 (Date 26-3-14)
4. Post No. 951.அபாயநோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர், நாகா, (Date 3-4-14)
5. Post No.1003. வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்! (Date 26th April), 2014.
6. அருகம்புல் ரகசியங்கள்
7.நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு
8.நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2
9. ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?
10. தக்காளி ரசத்தின் மகிமை
11. ஒரு வேளை உண்பான் யோகி
12.தீபாவளி ரகசியங்கள்
13.பஜனை செய்வது உடம்புக்கு நல்லது (10 ஜூலை 2013)

nadi book 2

Please read my Earlier Posts:
Is Brahmastra a Nuclear Weapon?
Time Travel by Two Tamil Saints
Hindu’s Future Predictions (Part 1 and art2)
Science Behind Deepavai (Part 1 and Part 2)
Great Engineers of Ancient India
Post No. 933. Medical Science solves Ten Mysteries in Maha Bharata 26-3-14
Head towards North is wrong
‘OM’ BOOSTS BRAIN POWER
Acoustic Marvel of Madurai Temple
Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin
Hindu God with “an IPod”
Power of Holy Durva Grass
Science Behind Deepavali-1
Science Behind Deepavali-2

Contact swami_48@yahoo.com