Post No. 9982
Date uploaded in London – 16 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நோபல் பரிசு வென்றவர். பிரெஞ்ச் மொழி எழுத்தாளர். நாவல்களையும், நாடகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர். காந்திஜியின் நண்பர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரைப் போற்றி புஸ்தகம் எழுதியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமைன் ரோலண்ட் ROMAIN ROLLAND (பிரெஞ்ச் மொழியில் இதை உச்சரிக்கும் போது ரொமான் ரோலான் என்ற ஒலியே வரும்); பிரான்ஸ் நாட்டின் அறிஞர்; ரஷ்யாவின் நண்பர் .
1915ம் ஆண்டில் ரொமான் லோனாவுக்கு / ரோமைன் ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் பலருடைய வாழ்க்கைச் சரிதங்களையும் இயற்றினார். அவருடைய நாவல்களின் தனிச் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனை பிறப்பு முதல் இறப்பு வரை — தொட்டில் முதல் சுடுகாடு வரை – காட்டுவதாகும்
பிரான்சில், க்ளமெசி CLAMECY என்ற ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். பாரிசிலும் ரோம் நகரிலும் பயின்ற அவருக்கு 1895ல் டாக்டர் பட்டம் Ph.D. கிடைத்தது. பாரிஸ் நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ECOLE NORMALE 29 வயதிலேயே கலைகளின் வரலாறு கற்பிக்கும் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புகழ்பெற்ற சார்போன் SORBONNE பல்கலைக் கழகத்தில் வேலை கிடைத்தது.
வேலையில் இருக்கும்போதே நாடகங்களை எழுதத் துவங்கினார் . பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவரெழுதிய நாடகங்கள் 1930ம் ஆண்டுகளில் புகழ்க் கொடி நாட்டின.
ரோமைன் ரோலண்ட் எழுதிய புகழ்பெற்ற புஸ்தகம் பல தொகுதிகளாக வெளிவந்த ஷான் கிறிஸ்டோப் JEAN CHRISTOPHE ஆகும். அவர் ஷான் JEAN என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்த கதாபாத்திரம் ஒரு இசை மேதை மட்டும் அல்ல; அறநெறி வாழ்க்கை வாழும் ஒரு புனிதரும் கூட. அந்த நாவலுக்கு வரவேற்பும் எதிர்தரப்பு விமர்சனங்களும் வந்தன . அதே நேரத்தில் அவர் புகழ்பெற்ற இசை உலக மேதை பீதோவன் BEETHOVEN போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி பதிப்பித்ததார்.
‘புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்ற கருத்துப்பட ABOVE THE BATTLE ‘அபவ் தி பேட்டில்’ என்ற நூலை எழுதினார். இதற்கு முதல் உலகப் போர் காலத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது. ரோமைன் ரோலண்டை சமாதான தூதுவராக அனைவரும் கண்டனர். ஆனால் சொந்த நாடான பிரான்சில் அது எதிர்ப்புப் புயலையும் தோற்றுவித்தது.
பின்னர் மீண்டும் பல தொகுதிகளாக வெளிவரும் THE ENCHANTED SOUL ‘தி என்சான்டட் சோல்’ என்ற நாவலை எழுதினார். இது கம்யூனிச சித்ததந்தத்தின் மீது அதிக ஆர்வம்/ கவர்ச்சி ஏற்படுவது பற்றிய நாவல். கதையில் ஒரு கதாநாயகி சுதந்திர சிந்தனை படைத்த பெண்மணி. அவருக்கு சொத்து உடைமைகளை வைத்துக் கொள்வதன் மீது வெறுப்பு வருகிறது.
இதற்குப் பின்னர் அவர் ஹிட்லர் தலைமையில் உருவான பாசிஸ கொள்கைகளை எதிர்த்தார். இரண்டாவது யுத்த காலத்தில் பாசிசத்தை எதிர்த்து எழுதினார். இவ்வாறு சமாதான ஆதரவு, பாசிஸ எதிர்ப்பு, ஆன்மீகத்துக்கு ஆதரவு என்ற பலவகை முகங்கள் அவருக்கு இருந்தன. இந்து மதத்தின் பேரில் பெரு மதிப்பு கொண்டிருந்த அவர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் , அவருடைய சீடரான சுவாமி விவேகானந்தர் மற்றும் மஹாத்மா காந்தி பற்றி நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். இதனால் அவருடைய பெயரும் புகழும் இந்தியாவிலும் பரவியது .
பிறந்த தேதி – ஜனவரி 29, 1866
இறந்த தேதி–டிசம்பர் 30, 1944
வாழ்ந்த ஆண்டுகள் – 78
எழுதிய நூல்கள் (நாவல் , நாடகம், வாழ்க்கை வரலாறு)
1900- DANTON
1902 – THE FORTEENTH OF JULY
1902 – LIFE OF BEETHOVEN
1904 – LIFE OF MICHELANGELO
1904- 1912 – JEAN CHRISTOPHE ; 10 VOLS
1910- HANDEL
1911 – LIFE OF TOLSTOY
1914-1919 – JOURNAL OF THE WAR YEARS
1915- ABOVE THE BATTLE
1922- 1933 – THE ENCHANTED SOUL; 6 VOLS
1924 – MAHATMA GANDHI
1929 – LIFE OF RAMAKRISHNA; ESSAYS
1930- LIFE OF VIVEKANANDA; ESSAYS
–SUBHAM–
tags -இந்து, பிரெஞ்சு, நாவல் ஆசிரியர் , ரோமைன் ரோலண்ட் , Romain Rolland,