பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்) -Post No.10093

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,093

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)

அலெக்ஸாண்டர் தூமா(ஸ் ) ALEXANDRE DUMAS 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர். அவர் எழுதிய இரண்டு துணிகர நாவல்களைப் பலரும் படித்திருப்பார்கள் – த்ரீ மஸ்கிடீர்ஸ் THREE MUSKETEERS /மூன்று துப்பாக்கி வீரர்கள் ; THE COUNT OF MONTE CRISTO தி கவுன்ட் ஆப் மா ண்டி கிறிஸ்டோ

தூமா,  பிரான்ஸ் நாட்டில் கிராப்புறத்தில் பிறந்தார். தந்தை ஒரு ராணுவ அதிகாரி; தாய் சத்திரத்தை நடத்தும் ஒரு பெண்மணி.அவருடைய தந்தை நெப்போலியன் போனபர்ட் படையில் பணிபுரிந்தார். சண்டையில் உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி தூமா , தலைநகர் பாரிசுக்கு வந்தார். அப்போதுதான் எழுதத் துவங்கினார்.

27 வயதில் மூன்றாவது ஹென்றி Henry III என்ற வரலாற்று நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து, இடைவிடாது புதிய கதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதி வந்தார். எப்போதாவது ஒய்வு வேண்டுமென்றால் கிராப்புறத்திற்குச் சென்று ஓய்வு எடுப்பார்.

பிரான்ஸ் நாட்டின் முழு வரலாற்றையும் எழுத வேண்டும் எனது அவருடைய ஆசை. அதன் காரணமாக எழுந்ததுதான் முன்னர் குறிப்பிட்ட இரண்டு நாவல்கள் .

நாவல் , கதைகள் எழுதுவதில் எவ்வளவு வேகம் இருந்ததோ அவ்வளவு வேகம் செலவு செய்வதிலும் இருந்தது. இதனால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன்காரனானாகி விடுவார். மீண்டும் உழைத்து கடனை அடைப்பார்.

தூமாவுக்கும் அவருடைய காதலிக்கும் பிறந்த மகனின் பெயரும் அலெக்சாண்டர்தான் . அவரும் தந்தை போலவே நாவல் எழுதி புகழ் பெற்றார். அவர் எழுதிய கமீய் Camille என்ற சோகமான காதல்கதை அவரைப் புகழ் பெற வைத்தது. அது 1852-ம் ஆண்டிலேயே பிரான்சில் நடித்து காண்பிக்கப்பட்டது.

தூமா பிறந்த தேதி – ஜூலை 24, 1802

இறந்த தேதி – டிசம்பர் 5, 1870

வாழ்ந்த ஆண்டுகள் – 68

எழுதிய நாவல்கள், நாடகங்கள் –

1829 – HENRY III

1830- CHRISTINE

1831 – NAPOLEON BONAPARTE

1831 – ANTONY

1832 – THE TOWER OF NESLE

1836- KEAN

1844 – THE THREE MUSKETEERS

1844 – THE COUNT OF MONTE CRISTO

1845 – TWENTY YEARS AFTER

1850- THE BLACK TULIP

***

எனது பிளாக்கில் 2015 அக்டோபர் 9ம் தேதி எழுதியது இதோ:-

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–subham—

Tags –  பிரெஞ்சு, நாவல், ஆசிரியர், அலெக்ஸாண்டர் தூமா(ஸ்), Alexandre Dumas

சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Post. 9987)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9987

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் உலக யுத்தம் முடிந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. ALDOUS HUXLEY  அவருடைய கட்டுரைகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுவன.

பிரேவ் நியூ ஒர்ல்ட் BRAVE NEW WORLD என்ற அவருடைய புதினம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

ஹக்ஸ்லி மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தை நாடே அறியும். ஏனெனில் ஹக்ஸ்லியின் தாத்தா தாமஸ் ஹக்ஸ்லி ஒரு உயிரியல் விஞ்ஞானி. டார்வினின் பரிணாமக் கொள்கை THEORY OF EVOLUTION உருவாக அவரும் உதவி செய்தார். ஆகையால் அவருக்கும் ஈடன் கல்லூரியிலும் ETON COLLEGE  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் அவருக்கு 16 வயதில் ஏற்பட்ட ஒரு கண் நோய் அவரை ஏறத்தாழ குருடராக (nearly blind) ஆக்கிவிட்டது.

முதல் உலகப்  போரில் சண்டை போட வேண்டும் அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற அவருடைய ஆசை பொய்யாய் பழங் கனவாய்ப் போயிற்று. அதிலும் ஒரு நன்மை விளைந்தது. அவர் கவிதை எழுதுவதிலும் கதை எழுதுவதிலும் கவனத்தைச் செலுத்தினார். 27 வயதிலேயே  அவருடைய முதல் நாவல் க்ரோம் யெல்லோ CHROME YELLOW வெளியானது ; சமுதாயத்தின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும்  நக்கலும் நகைச் சுவையும் மிகுந்த நாவல் அது. அடுத்து வந்த 4 நாவல்களில் ஒன்றுதான் பிரேவ் நியூ வோர்ல்ட் . இது அவருக்கு இலக்கிய உலகிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது.

எதிர்காலத்தில் உருவாகும் கட்டுப்பாடு மிக்க, தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு சமுதாயத்தை வருணிக்கும் நாவல் அது. அதில் ரிக் வேத தாக்கத்தையும் காணலாம்.மக்களை எப்போதும் மகிழ்சசியில் திளைக்கச் செய்ய  ‘சோமா’ SOMA என்னும் ஒரு அபூர்வ  குளிகை உருவாக்கப்படுவது குறித்து அந்த நாவல் பேசுகிறது. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களிலும்  உள்ள பல்லாயிரம் மந்திரங்களில் அற்புதமான சோமரசம் பற்றி ரிஷிகள் பாடியுள்ளனர். (ஆனால் அந்தக் குளிகை இப்போது அழிந்து போயிற்று) ‘சோமா’ வுடன் ஹக்ஸ்லி  நிறுத்தவில்லை. எந்த வேலை பார்க்க என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டு குழந்தை பெறும்  அறிவியல் முன்னேற்றம் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆயினும் மக்கள் ஆன்மா ( SOULLESS, EMOTIONLESS) இல்லாதவர்களாக உணர்ச்சி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி மேலை நாட்டு நாகரீகத்தின் மீது கேள்விக்குறிகளைப் போடுகிறார் . அதாவது தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து நிற்கும் அதே நேரத்தில் மக்கள் அடிப்படை பண்புகளை இழப்பத்தைச் சித்தரிக்கும் நாவலே BRAVE NEW WORLD பிரேவ் நியூ வோர்ல்ட் / துணிச்சல் மிக்க புதிய உலகம்.

தீவு என்ற அவருடைய கடைசி  நாவலில் நிறைய இந்துமத குறிப்புகள் வருகின்றன . சிவ பெருமானுடைய ஆனந்த நடனம், மோக்ஷம், முருகன் மைலேந்திர என்ற தமிழ் கதாபாத்திரம், ராஜா, ராணி, மற்றும் நிறைய சம்ஸ்க்ருத சொற்கள் இடம்பெறுகின்றன . இது மத தாக்கத்தை இதில் அதிகம் காணலாம்.

பிரான்ஸ், இதாலி ஆகிய நாடுகளில் வசித்துவிட்டு ஹக்ஸ்லி, அமெரிக்காவுக்குச் சென்று ஹாலிவுட்டில் சினிமா கதை வசனம் எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை கலிபோர்னியாவில் இருந்து நாவல்கள், கவிதைகள், தத்துவம் பற்றிய கட்டுரைகள் , அரசியல் விஷயங்கள் ஆகியவற்றை  எழுதி வந்தார் . ரிக் வேத சோமா குளிகை பற்றிய அவருடைய சிந்தனை மனதை மாற்றக்கூடிய மருந்துகளை (MIND ALTERIG DRUGS) உருவாக்கும் விஷயம் பற்றியும் எழுதத்  தூண்டியது. இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகள் பற்றியும் இரண்டு புஸ்தகங்களை எழுதினார்.

பிறந்த தேதி – ஜூலை 26, 1894

இறந்த தேதி – நவம்பர் 22, 1963

வாழ்ந்த ஆண்டுகள் – 69

ஹக்ஸ்லி எழுதிய நூல்கள்:-

1921 – CHROME YELLOW

1923- ANTIC HAY

1928 – POINT COUNTER POINT

1932- BRAVE NEW WORLD

1936 – EYELESS IN GAZA

1939 – AFTER MANY A SUMMER

1944 – TIME MUST HAAVE A STOP

1948 – APE AND ESSENCE

1958 – BRAVE NEW WORLD REVISITED

1962- ISLAND.

–SUBHAM —

TAGS- சோம ரசம் , நாவல் ,ஆங்கில ,ஆசிரியர்,  ஆல்டஸ் ஹக்ஸ்லி, ALDOUS HUXLEY

‘மோபி டிக்’ நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில்(Post No.9646)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9646

Date uploaded in London – –25 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெர்மன் மெல்வில். HERMAN MELVILLE

(1819 – 1891)

அமெரிக்க இலக்கியத்தின் தூண்களில் ஒருவர் ஹெர்மன் மெல்வில். இவருடைய புதினமான (MOBY DICK) மோபி டிக் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகும்.

      நியூயார்க் (NEW YORK) நகரில் மெல்வில் பிறந்தார். அவருடைய தந்தை பெரிய வியாபாரி. ஆனால் மெல்விலுக்கு 15 வயதானபோது தந்தையின் வியாபாரம் படுத்தது. அவர் நொடித்துப் போனார். இதனால் மெல்வில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்குப் போக நேர்ந்தது.

      எழுத்தாளராகவும் பண்ணைப் பணியாளராகவும் ஆசிரியராகவும் பல தொழில்களுக்கு மாறிய அவர் இறுதியில் திரைகடல் ஓடித் திரவியம் தேடப் புறப்பட்டார்.

      1839-இல் அமெரிக்காவிலிருந்து லிவர்பூல் நகரத்திற்கு (பிரிட்டன்) வந்தார். இந்த கடற்பயண அனுபவமே அவரது நாவல் RED BURN-க்கு கருப்பொருளாக அமைந்தது.

      இரண்டாவது முறையாக அவர் கடற்பயணம் சென்றது ஒரு திமிங்கில வேட்டைக் கப்பலில். இதை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டதுதான் MOBY DICK

      இதற்கடுத்த கடற்பயணத்தின்போது ஒரு தீவில் மனிதர்களை உண்ணும் காட்டு மனிதர்களிடத்தில் (CANNIBALS) இவர் மாட்டிக்கொண்டு விட்டார். அந்த தீவின் பெயர் MARQUESAS ISLANDS. காட்டு மனிதர்களுடன் தான் வாழ்ந்ததையே கதையாக எழுதினார். இதுதான் இவருடைய முதல் வெளியீடு (அச்சான முதல் நூல்)

      அந்தத் தீவுகளிலிருந்து இவரை ஒரு ஆஸ்திரேலிய கப்பல் மீட்டது. ஆனால் கப்பலுக்குள் கலகம் வெடிக்கவே இவரையும் கலகக்காரர்களையும் பசிபிக் கடல் நாடான TAHITI-யில் இறக்கிவிட்டு கப்பல் சென்றுவிட்டது. பின்னர் ஒரு அமெரிக்கக் கப்பலைப் பிடித்து ஹானலூலு (HONOLULU) தீவு வழியாக அமெரிக்கவுக்குச் சென்றார்.

      நியூயார்க்கில் வாழத்துவங்கிய அவர் 1847இல் திருமணம் செய்து கொண்டார். 1850இல் மாஸசூசட்ஸில் பிட்ஸ்பர்க் என்னும் இடத்தில் நிலம் வாங்கினார். அவருக்கு அருகிலேயே நத்தேனியல் ஹாதோர்ன் (NATHANIEL HAWTHORNE) என்ற புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் வாழ்ந்தார். MOBY DICK நாவலை எழுதமாறு இவரைத் தூண்டியது நத்தேனியல்தான்.

      ஒரு திமிங்கில வேட்டைக் கப்பலில் வேட்டைக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை MOBY DICK நாவல் விளக்குகிறது. மோபி டிக் என்னும் வெள்ளைத் திமிங்கிலத்தை (White Whale) அவர்கள் தேடுவதாக கதை அமைந்துள்ளது. இது திமிங்கில வேட்டைக் கதைபோலத் தோன்றினாலும் உண்மையில் இங்கு உருவகப்படுத்திய விஷயம் மனிதனின் வாழ்க்கைதான். தீயசக்திகள் எப்படி மனிதர்களைக் கவர்ந்து இழுக்கிறது – அவை எவ்வளவு கொடியவை என்பதை ஆசிரியர் சித்தரிக்கிறார். முதலில் இந்தப் புத்தகத்தைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. அரைகுறையான பாராட்டுகளே கிடைத்தன.

      மெல்வில் தனது கடைசி 35 ஆண்டுகால வாழ்வில் எழுதியது மிகமிகக் குறைவே.

–subham–

மோபி டிக் , நாவல், ஹெர்மன் மெல்வில்,Herman Melville

ஜேம்ஸ் ஜாய்ஸ் – ஒரு நாவல் எழுத 17 ஆண்டுகள் ! (Post No.9289)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9289

Date uploaded in London – –21 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U NEED THE MATTER IN WORD FORMAT, PLEASE WRTE TO US

லண்டனில் பி.பி.சி. தமிழோசையில் நான் வாரம் தோறும் புதன் கிழமை ஒலி பரப்பாகும் கதம்பமாலை நிகழ்ச்சியில் சுவையான செய்திகளை வழங்குவது வழக்கம். 8-7-1991 புதன் கிழமை நான் ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) என்னும் அற்புத நாவலாசிரியர் பற்றி சொன்ன விஷயங்கள் இதோ :-

ஜேம்ஸ் ஜாய்ஸ் – 1882-1941

ஜேம்ஸ் ஜாய்ஸ் JAMES AUGUSTINE ALOYSIUS  JOYCE ஒரு ஐரிஷ் நாவல் ஆசிரியர். யுலிஸிஸ் (ULYSSES) என்ற நாவலை எழுதி உலகப் புகழ் பெற்றவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புதினம் (novel) இது என்று கொண்டாடப்படுகிறது

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளி னில் ஜேம்ஸ் ஜாய்ஸ் பிறந்தார். அவருடைய தந்தை வரிவசூல் அதிகாரி.

tags–ஜேம்ஸ் ஜாய்ஸ் , நாவல்,  17 ஆண்டுகள், யுலிஸிஸ்