நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

 

Written by London Swaminathan

 

Date: 21 May 2017

 

Time uploaded in London: 7-42 am

 

Post No. 3928

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017

 

தீயவை

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 

ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.

தம்மபதம் 1,2

 

xxx

 

வள்ளுவர் சொன்னார்,

 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் (குறள்-314)

 

ஒருவர் யாராவது நமக்குத் தீங்கு செய்தால் அவர் வெட்கப்படும்படி நாம் அவருக்கு நன்மை செய்ய வேண்டும்; பின்னர் அவர் செய்த தீமையையும் நாம் செய்த நல்லதையும் மறந்து விட வேண்டும்.

புத்தர் சொன்னார்,

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை தம்மபதம் (5)

xxx

 

மலையின் மீது இருந்து காணும் காட்சி

வள்ளுவர் சொன்னார்,

 

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை (திருக்குறள் 758)

 

தன் கையில் பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு கவலையில்லாமல், காரியத்தினைத் தொடங்குவது, மலையின் மீது நின்று கொண்டு கீழே நடக்கும் யானைகளின் சண்டையைக் காண்பது போன்றது.

புத்தர் சொன்னார்

புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால்  அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து  துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.

தம்மபதம் 28

xxx

 

இந்திரனே சான்று

வள்ளுவர் சொன்னார்,

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி (திருக்குறள் 25)

 

ஐம்புல ஆசைகளை ஒழித்த ஒருவனுக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதற்கு இந்திரனே சாட்சி.

((இந்தக் குறளுக்குப் பொருள் தருவதில் பரிமேல் அழகர்கூட தவறு செய்துவிட்டதை எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். அவர், இது இந்திரனைக் கிண்டல் செய்வது என்று நினைத்து விட்டார். உண்மையில் இந்திரன் புலனடக்கம் மிக்கவன். அகல்யை சம்பவம் உதாரணம் ஆகாது))

புத்தர் சொன்னார்

புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.

தம்மபதம் 30

அதர்வண வேதத்திலும் (11-5-19) இக் கருத்து உளது.

 

xxx

 

அருள் புரிக

வள்ளுவர் சொன்னார்,

 

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்

மெலியார் மேல் செல்லும் இடத்து (திருக்குறள் 250)

 

ஒருவன் தான் பலசாலியாக இருக்கும்போது மற்றவனைத் துன்புறுத்துவது சரியல்ல. அவன், தன்னைவிட பலசாலியான ஒருவன் தன்னை இப்படித் துன்புறுத்தினால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல் ( திருக்குறள் 318)

 

ஒருவன் தனக்குத் துன்பம் இழைக்கும்போது அதனால் ஏற்படும் கஷ்டத்தை அறிந்த மனிதன், பிற உயிர்களுக்கு துன்பம் இழைப்பது யாது கருதியோ?

புத்தர் சொன்னார்

 

பிறருடைய குற்றத்தைப் பற்றியோ, அவர்கள் என்ன செய்தார்கள் , என்ன செய்யவில்லை என்றோ எண்ணாதீர்கள். உங்களுடைய தவறுகளையும் நீங்கள் எதைச் செய்தீர்கள், எதைச் செய்யத் தவறினீர்கள் என்று சிந்தியுங்கள்

ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் தம்மபதம்-119

 

-Subaham-

 

 

3.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Third Part)

சிதம்பரத்தில்  பிறந்த பிள்ளைக்குத் திருவாசகம் கற்றுக் கொடுக்கவேண்டுமா?

Compiled by London swaminathan

Post No.2225

Date: 8  October 2015

Time uploaded in London: 17-10

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

Second part of Proverb book –Two was published yesterday. This is Third part of Book Two.

தனி மரம் காடாகாது  (தனி மரம் தோப்பு  ஆகாது)

துரும்பு நுழைய, இடம் கொடுத்தால் யானையைக் கட்டுவான் –(இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்)

நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்
நிழலின், அருமை வெயிலில் போனால்தான்   தெரியும்

பணம் பத்தும் செய்யும்

பார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி

தொடரும்………………………….

தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

ilaneer (2)

Written by S NAGARAJAN

Article No.1762;  Dated 31 March 2015.

Uploaded at London time 11-04 (GMT 10-04)

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

27. தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

नारीकेलफलांबुन्यायः

narikelaphalambu nyayah

நாரிகேள பலாம்பு நியாயம்

இளநீர் பற்றிய நியாயம் இது.

தேங்காய்க்குள் இளநீர் எப்படி புகுந்தது என்பதை யாராலும் விளக்க முடியாது அல்லவா! இறைவனின் சித்தமும் அவனது வழிமுறைகளும் சாதாரணமாக யாருக்கும் புரியாது; அவற்றை விளக்கவும் முடியாது. இது தெய்வசித்தத்தையும் அதன் வழிகளையும் பற்றி விளக்க வந்த எளிமையான நியாயம்.

water_milk_021

नीरक्षीरविवेकन्यायः

niraksira viveka nyayah

நீர க்ஷீர விவேக நியாயம்

க்ஷீரம் – பால்

நீரில் கலந்த பால் பற்றிய நியாயம் இது.

அன்னத்திடம் நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அது நீரைப் பிரித்து பாலை மட்டுமே குடிக்கும்.  நல்ல புத்திசாலியான ஒருவர் இன்னொருவரை மதிப்பிடும் போது அவரது நற்குணங்களை மனதில் எடுத்துக் கொள்வர். சிறு சிறு குறைகளைப் பெரிது படுத்த மாட்டார்.

பெரியோரின் மதிப்பீட்டு முறைகளை அன்னத்தின் அரிய குணத்துடன் ஒப்பிடும் நியாயம் இது.

roadside barber

नृपनापितन्यायः

nrpanapitaputra nyayah

ந்ருபநாபித புத்ர நியாயம்

அரசரும் அவரது நாவிதரும் பற்றிய நியாயம் இது.

ஒருவனது சொந்த உறவின் மீது, அந்த உறவுக்காரர் எவ்வளவு அவலட்சணமாக மற்றவருக்குத் தோன்றினாலும் சரி, ஒருவனுக்குள்ள பற்றைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை இந்த நியாயம் நினைவு படுத்தும்.

இது தோன்றியதற்கு கதை ஒன்று உண்டு.

ஒரு அரசன் தனது நாவிதரை அழைத்து தனது ராஜ்யத்தில் உள்ள அழகிய சிறுவனைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு கூறினான். நாவிதனும் ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் அலைந்து திரிந்தான். ஆனால் அரசன் கேட்டுக் கொண்டபடி அழகிய சிறுவன் யாருமே அவன் கண்களுக்குத் தென்படவில்லை. பெரிதும் ஏமாற்றத்துடன் அவன் வீடு திரும்பினான். என்ன ஆச்சரியம், அவனது மகனைப் பார்த்தான். அழகு சொட்டும் முகமாக அவனுக்குத் தோன்றியது! ஆனால் உண்மையில் அவன் அஷ்டகோணலான உருவை உடையவன்! மிகவும் அவலட்சணமானவன்!

தன் மகனை அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்ற அவன் தன் மகனைக் காட்டி இவனே இந்த ராஜ்யத்தில் மிகவும் அழகான சிறுவன் என்றான்.

சிறுவனைப் பார்த்த அரசன் பெரும் கோபம் அடைந்தான். தன்னை நாவிதன் ஏமாற்றி விட்டான் என்று முதலில் அவனுக்கு கோபம் வந்தாலும் சற்று ஆலோசித்துப் பார்த்த பின்னர் அது தணிந்தது. அவனை அரசன் மன்னித்து விட்டான். தனது சொந்த மகனை ராஜ்யத்தில் உள்ள மற்ற சிறுவர்களைக் காட்டிலும் சிறந்த அழகன் என்று அவன் கூறுவது மனித மனத்தின் இயல்பே என அரசன் தெளிந்தான்.

அதிலிருந்து மனித மனத்தின் போக்கைச் சுட்டிக் காட்டும் இந்த நியாயம் எழுந்தது!

shadow

पराह्नछायान्यायः

parahnacchaya nyayah

பராஹ்னசாயா  நியாயம்

மத்தியான நிழல் பற்றிய நியாயம் இது.

மத்தியான நேரத்தில் ஒரு மரத்தின் நிழல் சிறிது நேரமே நீடித்திருப்பதைப் போல

அதிகாரமும் செல்வாக்கும் வாழ்க்கையின் இறுதி நாட்கள்

வரும் போது சிறிது காலமே நீடித்திருக்கும். இதைச் சுட்டிக்காட்டும் நியாயம் இது.

granite  bricks

पाषाणेष्टिकान्यायः

pasanestika nyayah

பாஷானேஷ்டிகா நியாயம்

கருங்கல்லையும் செங்கலையும் பற்றிய நியாயம் இது.

பெரிதான கருங்கல்லையும் சிறிதான செங்கலையும் வைத்து வீடு கட்டி முடிப்பதைப் போல ஒரு விஷயத்தை பெரிய மனிதர்கள் மற்றும் சிறிய மனிதர்கள் ஆகிய அனைவரின் ஒன்றுபட்ட முயற்சியால் முடிப்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. அனைவரது முயற்சியும் ஒரு காரியத்தை முடிக்கத் தேவை!

*****************