நிலத்தடி நீரைச் சேமிப்போம்! (Post No.10,361)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,361

Date uploaded in London – –   21 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

15-11-2021 காலை ஒலிபரப்பான ஐந்தாவது உரை கீழே தரப்படுகிறது. 

நிலத்தடி நீரைச் சேமிப்போம்!

ச.நாகராஜன்

உலகில் உள்ள பாதி நாடுகளில் மக்கள் நிலத்தடி நீரையே அதிகம் பயன் படுத்துகின்றனர். ஆகவே கிணறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும். நிலத்தடி நீர் நிறைவாக வளமுடன் இருந்தால் மட்டுமே நீரோடை, நீரூற்றுகள், ஆறு, ஏரி, குளம் ஆகியவை நல்ல நீரைக் கொண்டிருக்கும். ஆகவே இந்த நிலத்தடி நீரை, சுத்தமாக இருக்கும் வண்ணம் எப்போதும் பாதுகாத்தல் வேண்டும். ஆறு, நீரோடை உள்ளிட்டவற்றில் காணப்படும் மணலைச் சுரண்டினால் நிலத்தடி நீரைச் சேமிக்க முடியாது.

நீங்கள் வாழும் பகுதிகளில் உள்ள திறந்த வெளி மைதானங்கள், பள்ளிக் கூட மைதானங்கள் ஆகியவற்றில் RAIN GARDEN எனப்படும் மழைத் தோட்டப் பகுதிகளை அமைப்பதன் மூலம் நீர் வளம் சிறக்கும். உங்கள் வீட்டில் உள்ள கிணற்றை அடிக்கடிச் சுத்தப்படுத்தல், நீரோடை, குளங்கள் ஆகியவற்றில் அவ்வப்பொழுது தூர் வாருதல் போன்ற செயல்கள் அந்த நீரைச் சுத்தமானதாக தக்க வைத்துக் கொள்வதற்கான வழிகளாகும்.

நிலத்தடி நீரானது கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் பாய்வதைப் பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகளைச் சேகரித்து உரிய அணுகுமுறை மூலம் அதைப் பாதுகாப்பதே சிறந்த வழியாகும். நீங்கள் வாழும் பகுதிக்கும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கும் தக்கபடியான செடிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உங்கள் இல்லத்தைச் சுற்றி வளர்க்கலாம். இரசாயன உரங்களை அறவே தவிர்க்க வேண்டும். முற்றிலும் தவிர்க்க இயலாதெனில் அதை முடிந்த அளவு குறைக்கலாம். மருந்துகள், பயன்படுத்தப்படாத ரசாயனப் பொருள்கள், பெயிண்ட், மோட்டார் ஆயில் போன்றவற்றை முறையாக உரிய முறைப்படி அப்புறப்படுத்தல் வேண்டும்.

ஒவ்வொரு சொட்டு நீரும் இன்றியமையாதது என்ற காலத்தில் வாழும் நாம், வீட்டில் குழாய்களில் நீர் ஒழுகல் ஏற்பட்டால் அதை உடனே சரி செய்து நமது நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். சிறப்பாகக் குளித்து முடிக்க குறைந்த பட்ச நீர் எவ்வளவு தேவை என்பதை குடும்ப உறுப்பினர்களுக்கு, குடும்பத் தலைவர் உணர்த்துதல் அவசியமான ஒன்று. குழாயைத் திறந்தவாறே பல் துலக்கல், குளித்தல் போன்ற செயல்களால் வீணாகும் நீரைத் தவிர்க்க வேண்டும்.

REDUCE – குறை – REUSE – மறுபடி பயன்படுத்து – RECYCLE – மறுசுழற்சிக்கு உள்ளாக்கு என்ற இந்த மூன்றையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளல் வேண்டும். இதை மனதில் கொண்டு பேப்பர், பிளாஸ்டிக், கார்ட்போர்ட், கண்ணாடி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் உரிய முறையில் பயன்படுத்தினால் சுற்றுப்புறச் சூழல் கேடு பெருமளவு குறையும். எலுமிச்சம்பழம், பேகிங் சோடா, வினிகர் ஆகியவற்றைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தினால் சுற்றுப்புறச் சூழலைக் காத்தவர்களாவோம்.

இப்படி அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் பல வழிகளைக் கடைப்பிடித்தால் உலகின் நீர் வளம் குன்றாது; குறையாது. சீரைத் தேடின் நீரைத் தேடு என்பது பழமொழி. நீர் வளம் காப்போம்; உலகைக் காப்போம்!

***

tags – நிலத்தடி , நீர் ,சீரைத் தேடின், 

தண்ணீர், தண்ணீர்- தமிழ்ப் பழமொழிகள் (Post No.3804)

Compiled by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 9-06 am

 

Post No. 3804

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

நீர் இன்று அமையாது உலகம் என்பது சங்க இலக்கிய நூலான நற்றிணையில் கபிலர் (பாடல் 1) உதிர்த்த பொன்மொழி. அவருக்குப் பின்னர் வந்த வள்ளுவனும் அதை வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தினான்.

 

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு (Kural 20)

 

பொருள்:-

இந்தப் பூமியில் வாழும் எல்லா உ யிரினங்களும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது அது போலவே தர்மமும் மழை இல்லாமல் வாழ முடியாது.

 

 

மழை இல்லாவிடில் வறட்சி மிகும்; வறட்சி ஏற்பட்டால் பசிப்பிணி பெருகும்; பசி வந்தால் பத்தும் பறந்து போம் – என்பது பழமொழி. அதாவது மனிதனுடைய அடிப்படை நற்குணங்கள் அழிந்து, தர்மம் அழியும்.

 

இதை நன்கு அறிந்த இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் சதபத பிராமணத்தில் சொல்லிவைத்தனர்.

 

சதபத பிராமணம் (கி.மு.850) கூறுவதாவது:

“தண்ணீர் தான் சட்டம்/தர்மம். ஆகையால்தான் உலகிற்கு எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. எல்லாம் விதிகளின்படி நடக்கிறது. மழை தவறிவிட்டால் பலவீனமானவரை பலமுள்ளோர் தாக்குவர். ஏனெனில் தண்ணீர்தான் சட்டம்”.

இதையே வள்ளுவனும் கூறியிருப்பது (குறள்-20) கவனிக்கத்தக்கது.

 

மழையிலிருந்து உணவு உண்டாகிறது என்று கீதையில் பகவான் கிருஷ்ணனும் கூறுவார் (கீதை 3-14).

 

தமிழர்களின் தண்ணீர்ப் பழமொழிகளைப் படித்தால் அவர்களின் ஆழ்ந்த அனுபவ அறிவு புலனாகும்:–

 

1.நீரையும் சீராடு

2.நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?

3.நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ

 

4.நீராலே விலகினாய், நான் நெருப்பாலே விலகினேன்

5.நீரில் அமிழ்ந்த சுரைக்காய் போல

6.நீரில்லா நாடு நிலவில்லா முற்றம்

7.நீரும் கொல்லும், நெருப்பும் கொல்லும்

8.நீரும் பாசியும் கலந்தாற்போல

9.நீரை அடித்தால் நீர் விலகுமா?

10.நீரைக் கழுவி நிழலைப் புதைப்பதுபோல

11.நீரை அடித்தால் வேறாகுமா?

12.நீரோட்டத்தில் தெப்பம் செல்லும் தன்மை போல (புறம்.192 லும் உளது)

 

13.நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காணப்படாது

14.நீர் உயர நெல் உயரும்

15.நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்

16.நீர் உள்ள மட்டும் மீன் துள்ளும், நீர் போனால் மீன் என்ன துள்ளுமா?

17.நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது

18.நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும், சர்க்கரை என்று சொன்னதினால் வாய் இனிப்பதும் உண்டா?

19.நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?

 

20.நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்துவைத்தமட்டும் இருக்கும்

21.நீர்ச்சோறு தின்று நிழலுக்கு அடியில் நின்றால் மலடிக்கும் மசக்கை வரும்

22.நீர் போனால் மீன் துள்ளும்

23.நீர் மேல் எழுத்துபோல

24.நீர்மேல் குமிழி போல நிலையில்லாக் காயம்

 

 

25.தண்ணீரிலே அடி பிடிக்கிறது

26.தண்ணீரிலே தடம் பிடிப்பான்

27.தண்ணீரிலேயோ தன் பலம் காட்டுகிறது?

28.தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரைய வேண்டும்

29.தண்ணீரில் அமுக்கின முட்டை உப்பு போட கிளம்பும்

30.தண்ணீரில் இருக்கிற தவளை  நீர் குடித்ததைக் கண்டது யார்? குடியாததைக் கண்டது யார்?

31.தண்ணீரில் இருக்கிற தவளையை தரையில் விட்டாற் போல

 

32.தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்

 

33.தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்

 

34.தண்ணீரின்றினும் தண்மை பிரியுமோ, தீயினின்ன்றும் வெம்மை பிரியுமோ?

 

35.தண்ணீரின் கீழே குசு விட்டால் தலைக்கு மேலே

 

36.யாருக்கும் தெரியக்கூடாதென்று எண்ணி தண்ணீரின் கீழே குசு விட்டாற்போல

 

37.தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே

 

38.தண்ணீரும் பாசியும் கலந்தாற்போல

 

39.தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்

40.தண்ணீரயும் தாயையும் பழிக்கலாமா?

41.தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலையிட்ட காதும் சரி

42.தண்ணீர் குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க் குடம் உடைந்தாலும் ஐயோ!

43.தண்ணீர், வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்

 

நீர் என்றும் தண்ணீர் என்றும் துவங்கும் பழமொழிகளை மட்டும் கண்டோம். பழமொழிகளுக்கு இடையே இதே சொற்கள் வரும் பழமொழிகள் நிறைய உண்டு. அத்தனையையும் அர்த்தத்தோடு தொகுத்து வெளியிடுவது நலம் பயக்கும்.

 

தமிழ் வாழ்க! பழமொழிகள் பயன்பெறுக!!

 

xxxx

எனது பழைய கட்டுரைகள்:-

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Research Article No. 1685; Dated– 2 March 2015.

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

Research Article No.1656; Dated 17th February 2015.

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்: ஆரோக்கியம் தொடர்பான பொன்மொழிகள்

 

–subham–

 

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

swan1

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

Written  by London swaminathan

Date: 2 November 2015.

Post No:2294

Time uploaded in London :–  7-41 (காலை)

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1).சர்வாரம்பா தண்டுலப்ரஸ்த மூலா:

எல்லாவற்றிற்கும் மூல காரணம் (அரிசிச்) சோறு!

ஒப்பிடுக:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது— அவ்வையார்.

xxxx

2).சா சபா யத்ர சப்யோஸ்தி (கதா சரித்சாகரம்)

எங்கு அவை ஒழுக்கமுடையோர்

இருக்கிறார்களோ அதுவே சபை!

ஒப்பிடுக: மாநில சட்டசபைகள், லோக் சபை உறுப்பினர்களின் நடத்தை!!

xxx

3).ஸா சேவா யா ப்ரபுஹிதா– (பஞ்ச தந்திரம்)

முதலாளிக்கு (தலைவருக்கு/ எஜமானனுக்கு) இதம் தருவதே சேவை

xxx

4).சூர்ய ஏகாகி சரதி (யஜூர் வேதம்)

சூரியன் தன்னதனியனாகச் சொல்கிறான்

xxx

5).ஸ்வஜாதிர் துரதிக்ரமா (பஞ்ச தந்திரம்)

எங்கும் தனது இனத்தை (ஜாதியை) விட்டுக்கொடுக்க முடியாது

xxx

6).ஸ்வதேச ஜாதஸ்ய நரஸ்ய நூனம் குணாதிகஸ்யாபி பவேதவக்ஞா

சொந்த நாட்டுக்காரர்களுக்கு எவ்வளவு பெருமை/திறமை இருந்தாலும் அவனுக்கு அவமதிப்பே மிஞ்சுகிறது (இக்கரைக்கு அக்கரை பச்சை)

ஹிந்தி: கர் கா ஜோகீ ஜோக்டா ஆன் காவ்ன் கா சித்த

xxx

7).ஸ்வாத்யாய  ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம் (தைத்ரீய உபநிஷத்)

வேதங்களைக் கற்பதையும், கற்பிப்பதையும் புறக்கணிக்காதீர்கள்

xxx

swan2

8).ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப:  – (சாகுந்தலம் நாடகம்)

அன்னப் பறவையானது பாலை மட்டும் எடுத்துக் கொண்டு தண்ணீரை விட்டுவிடும்

Xxxx

9).ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:

நீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அன்னப் பறவையும் வெள்ளை; கொக்கும் வெள்ளை! பின்னர் என்ன வேறுபாடு?

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்! அன்னம், அன்னப் பறவைதான்!

xxx

crane

10).ஹிமவதி திவ்ய ஔஷதய: சீர்ஷே சர்ப: சமாவிஷ்ட: (முத்ராராக்ஷசம் நாடகம்)

தலைக்கு மேலே பாம்பு! இமய மலையில் மூலிகைகள்!

(தொலைவில் தீர்வு/ மருந்து இருந்தால் என்ன பயன்?)

ஹிந்தி: ஜப் தக் ஹிமாலய் சே சஞ்சீவனீ ஆயே, பீமார் மர் ஜாயே.

சாம்ப் தோ சிர் பர், பூடி பஹாட் பர்

–சுபம்–

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!

Compiled by London swaminathan

Post No.2214

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 13-30

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு” (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–

காலையில் நீர், பகலில் மோர், இரவில் பால்!

0-2neermor

Article No.1970

Date: 3 July 2015

Written by London swaminathan

Uploaded from London at காலை 9-20

1.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:

நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே

சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.

2.பிப்பலீ மரீச ஸ்ருங்கவேராணி இதி த்ரிகடுகம்—சுஸ்ருத சம்ஹிதா-38-58

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் உணவில் சேர்ப்போருக்கு நோய்கள் வாரா.

Dairy products

Dairy products

3.ஹரிதக்யாமலகபிபீதகானிதி த்ரிபலா — சுஸ்ருத சம்ஹிதா- 38-56

ஹரிதகி (கடுக்காய்) ஆமலக (நெல்லிக்காய்), பிபீடகா (தான்றிக்காய்) ஆகிய மூன்றையும் காயவைத்து சூரணமாக சாப்பிடுவோரை நோய் அண்டா.

4.த்ரிமது

க்ருதம் குடம் மாக்ஷிகம் ச விக்ஞேயம் மதுரத்ரயம்

க்ருதம் (நெய்) குடம் (வெல்லம்) மாக்ஷிகம் (தேன்) ஆகிய மூன்றும் மதுரம் (இனியவை) எனப்படும். இவை மூன்றும் மருந்துடன் கலந்து சாப்பிட உதவும்.

த்ரிபலா

படங்களுக்கு நன்றி.