எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை ! –ரிக்வேதம் ( Post No. 9474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9474

Date uploaded in London – –9  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை !

TRUE HINDUS AND TRUE TAMILS NEVER DELETE THE AUTHOR’S NAME AND BLOG’S NAME

BY LONDON SWAMINATHAN

உலகிலேயயே பழமையான நூல் ரிக்வேதம் ; ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்கா தர திலகரும் கி.மு 4500 க்கு முந்தையது என்று வான சாஸ்திர ரீதியில் காட்டினார்கள். வில்சன் முதலானோர் கி.மு.2000 என்றனர். மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று சொல்லி மற்ற அறிஞர்களிடம் செமை அடி வாங்கிய பின்னர் இது கி.மு. 1500 க்கு முந்தையது; எவரும் இதன் காலத்தைக் கணிக்கவே முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கொய்  (Bogazkoy Inscription) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் படிவ கியூனிபார்ம் கல்வெட்டும் ரிக் வேத தெய்வங்களை அதே வரிசையில் குறிப்பிடுவதால் தொல்பொருட் துறை ஆதாரமும் கிடைத்துவிட்டது. இப்போது சந்தேகப் பேர்வழிகளும் , இந்து மத விரோதிகளும் கூட  கி.மு 1700 என்று கதைக்கத் துவங்கியுள்ளனர்!

ரிக் வேதம் அற்புதமான கவிதைத் தொகுப்பு ஆகும். அதிகமான உவமைகள் தாய்க்கும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள அன்பு, பாசம், நேசம் குறித்துப்  பேசுகின்றன .

ஒரு சில உவமைகளை இப்போது படித்து ரசிப்போம்.

***

புலவர்/ ரிஷி காதினன் விசுவாமித்திரன் பாடுகிறார் :–

நதிகள் இடையே உரையாடலாகவும் , இந்திரன் மீதான துதியாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது

“ஏய் , புலவா ! மறந்துவிடாதே;, நீ எங்களுடன் நடத்திய உரையாடலை மறந்து விடாதே! வருங்கால சந்ததியினர் இதைப் போற்றி பாடப்போகிறார்கள் .

“புலவரே , கவிதைகள் /சூக்தங்கள் மீதுள்ள உன் ஆர்வத்தை எங்களுக்கும் சொல் ; மனிதர்களுக்கு இடையில் எங்களைத் தாழ்த்தி, மட்டம்தட்டிப் பாடி விடாதே ; உனக்கு வணக்கம்” . இவ்வாறு நதிகள் சொல்கின்றன.

உடனே விசுவாமித்திரர் பாடுகிறார் …

நதி சகோதரிகளே! உங்களைப் பாடுகிறேன் ; அன்போடு கேளுங்கள்; நான் தொலை தூரத்திலிருந்து தேரில் வந்து இருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து வணங்குங்கள்  சுலபமாய் உங்களைத் தாண்ட உதவுங்கள் . உங்கள் நீரோட்டம் என் தேர்ச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்கட்டும்.”

உடனே நதிகள் பதில் சொல்கின்றன

“புலவா , நீ சக்கரம் உடைய தேரோடு வந்திருப்பதை நாம் அறிவோம். . நீ தொலைவிலிருந்து வந்ததாகச் சொன்னதையும் நாங்கள் செவி மடுக்கிறோம்

நாங்கள் குழந்தைக்கு  பாலூட்டும் தாய் போலவும் , காதலன் கட்டி அணைக்க வசதியாக தாழத்தணியும் இளம் அழகி போலவும் உனக்கு உதவி செய்வோம்”.

ரிக் வேதம் 3-33-8/9

இப்படி உரையாடல் நீடிக்கிறது

இதுபற்றி வேதங்களுக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் ஒரு கதையும் சொல்கிறார் :-

இங்கே விபாஸா , கதுத்ரி என்ற இரண்டு நதிகள் பாடப்படுகின்றன. விசுவாமித்திரர் ஒரு மன்னர். அவர் நிறைய செல்வத்தை ஈட்டிக்கொண்டு இவ்விரு நதிகளும் கூடும்  இடத்திற்கு வந்தபோது இதைப் பாடினார் . இது கவிதை அழகு மிகவும் நிறைந்தது .

விபாஸ என்பது இப்போது பியாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை வியாஸ நதியின் மரூஉ என்றும் செப்புவர். கதுத்ரி என்பது அமிர்தசரஸ் நகரின் தெற்கில் பாயும் நதியாக இருக்கலாம் என்றும் யூகிப்பர்

கவிதையை முழுதும் படித்து அனுபவியுங்கள் !

***

என் கருத்துக்கள் :–

என்ன அற்புதமான கவிதை ! இயற்கை பற்றிய வருணனையும் காதலன்-காதலி அன்பும், தாய்ப்பால் ஊட்டும் தாயின் அன்பும் உவமைகளாக வருகின்றன. எந்த அளவுக்கு   வேத கால இந்துக்கள் பாசமும் நேசமும் கொண்டனர் என்பதை இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்ல; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று எழுதிய அழுக்கு மூஞ்சிகளின் முகத்தில் கரி பூசுகிறது . எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதையை “எதிர்கால மக்கள் பாடப்போகிறார்கள்” என்று நதியின் கூற்றாக புலவன் சொன்னது எவ்வளவு உண்மையாயிற்று! ஹெர்மன் ஜாகோபி, திலகர் கணக்குப்படி 6500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கட்டுரையை நாம் ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ‘பொய்யா நாவுடையோர் புலவர்’ என்பது மெய்யாகிப் போயிற்று . இதற்கு இணையான கவிதையை நான் எங்கும் படித்ததில்லை ( லண் டன் சாமிநாதனாகிய நான் 27,000+++ வரிக ளையுடைய 18 சங்க கால நூல்களையும், எட்டு ஆண்டுகளுக்கு, இரு முறை வாசித்துள்ளேன். அவற்றின் மீது நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதியுமுள்ளேன்)

‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்றும், ‘அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே’ என்றும் மாணிக்கவாசகர் பாடியது இந்த வேத மந்திரத்தைப் பயின்றதால் தானோ!

xxxx

ஐயோ ஐயோ எலி கடிக்குது நெசவு நூலை !

இன்னொரு கவிதையையும் பார்ப்போம். இது நெசவாளர் உவமையைத் தருகிறது. வேத கால இந்துக்கள் என்ன தொழில் செய்தனர் என்பது மிக நீண்ட பட்டியல். ஆனால் அவர்களை நாடோடி என்று சொன்னவர்களுக்கு ‘செமை அடி, மிதி அடி’ கொடுக்கும் பாடல் இது. கவலையில் வாடிய ஒரு புலவனின் புலம்பல். நம்மில் எவருக்கேனும் கவலை இல்லாத வாழ்வு இருந்து இருக்கிறதா ?

கவசன்  ஐலுசன் என்ற புலவர் விஸ்வே தேவர்களை — பல கடவுளரை — நோக்கிப் பாடுகிறார் …

ரிக் வேதம் 10-33-3

“என்னுடைய இருபுற விலா எலும்புகளும் சக்களத்திகளைப் போல ( இரட்டை மனைவி) நோவு கொடுக்கின்றன. என் மனமோ வேடனால் அச்சுறுத்தப்பட்ட பறவை போல படபடக்கிறது நோயும் பசியும், வெறுமையும் என்னை வாட்டுகின்றன.; கவலைகள் நூலைக் கடித்துக் குதறும் எலிகளைப் போல என்னை தின்கின்றன. இந்திரனே, மகவானே, சதக்ரதுவே! ; எங்களுக்கு நிறைய செல்வத்தைத் தந்து ஒரு தந்தை போல கவனித்துக்கொள்.” 

இதைப் படிக்கும்போது சங்க காலக் கவிதைகளில் வரும் வறுமையில் வாடிய பாணர்கள் நினைவுக்கு வரும். எல்லா காலங்களிலும் மனித குலத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன. கிருஷ்ண பரமாத்மா மாளிகையில் வசித்தபோது, அவருடைய கிளாஸ்மேட்  classmate குசேலர்/ சுதாமா குடிசையில் வறுமையில் சோற்றுக்கு ‘லாட்டரி அடித்ததை’ , ‘தாளம் போட்டதை’ நாம் அறிவோம். அதே போல இந்த நெசவாளர்  காலனி குடும்பமும் வறுமையில் வாடிற்று ; அப்பாவைப் போல  என்னைக் கவனித்துக் கொள் என்ற உவமை அக்கால குடும்பங்களில் நிலவிய  பாச பந்தங்களை எடுத்துக் காட்டுகிறது .

இப்படி எவ்வளவோ கவிதைகள் உள்ளன  கவிதை வேட்டையைத் தொடர்வோம் .

நெசவாளர் இடையே, வறுமையில் வடிய புலவர் போலும் அல்லது அவர்களுடைய வறுமையை பிரதிநிதித்வப் படுத்த(to represent the poor weavers)  பாடினார் போலும் !

கவலைங்களும் வறுமையும் மறையட்டும்!!

–subham–

TAGS- எலி, கடிக்குது ,நெசவு, கவலை ,ரிக்வேதம், நூல், மனது ,

பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம் !(Post No.8789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8789

Date uploaded in London – –8 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகின் முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’. இதன் பொருள் ‘எட்டு அத்தியாயம்’. இதை ‘அஷ்டகம்’ என்றும் அழைப்பர் . இதை பாணினி எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் அழைப்பர். இந்த இரண்டு உத்திகளையும் தமிழர்கள் கடைப்பிடித்தனர். ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்று சங்க நூல்களுக்கு ‘நம்பர்’ Numbers களை பயன்படுத்திப் பெயரிட்டனர். அஷ்டகம் போலவே எடுத்த தொகை என்ற தொகுப்பையும் உருவாக்கினார்கள் . பாணினீயம் போலவே தொல்காப்பியர் எழுதிய நூலுக்குத் தொல்காப்பியம் என்று பெயரிட்டனர்.

பாணினி எழுதியது வெறும் இலக்கண நூல்தான். அதிலுள்ள விஷயங்களையும் அதன் மீது எழுந்த வார்த்திகம் , மஹா  பாஷ்யம் , காசிகா ஆகிய உரைகளையும் படித்தால் இந்திய சரித்திரத்தையே அறியலாம். இலக்கணத்தில், மொழி இயலில், இவ்வளவு முன்னேற்றத்தை சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது. பாணினி தோன்றி 2700 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த கோல்ட்ஸ்டக்கரின் (Goldstucker)  வாதம் .

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள கபிஸ்தலம் போலவே பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஒரு கபிஸ்தலம் இருப்பது பற்றி சில தினங்களுக்கு முன்னர் எழுதினேன். இப்பொழுது இன்னும் ஒரு மர்மம் பற்றி துப்பு துலக்குவோம்.

ராமாயணத்தில் கிஷ்கிந்தா பெயரில் ஒரு காண்டமே இருப்பதால் உலகம் முழுதும் கிட்கிந்தையை அறியும். இந்தப் பெயரே ஒரு வினோதமான பெயர். சம்ஸ்க்ருதத்தில் இது போன்று ஒலிக்கும் பெயர்கள் அதிகம் இல்லை. .மேலும் கிஷ்கிந்தா என்பது கர்நாடகத்தில் ஹம்பி நகரம் இருந்த பகுதி என்பதே ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது . அவர் பாணினி நூலுக்கு உரை எழுதினார். அதன் பெயர் ‘பேருரை’  சம்ஸ்க்ருதத்தில் ‘மஹா பாஷ்யம்’ . பதஞ்சலியும் இந்த விநோதப் பெயரைக் குறிப்பிடுவதும் அதை நாட்டின் வடமேற்கு மூலையில் காட்டுவதும் வியப்பை ஏற்படுத்தும்.

அவர் சொல்கிறார்.

பல வகை சூத்திரர்கள் ஆர்யவர்த்தத்துக்கு வெளியே வசித்தனர் . அவர்களில் கிஷ்கிந்த -காப்திகம் , சக-யவனம், சவுர்ய- க்ரவுஞ்சம் ஆகியோரை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.

இதை விளக்கும் அக்ரவாலா தனது புஸ்தகத்தில் சொல்கிறார் –

இவர்களில் கிஷ்கிந்தா என்பதை பாலி மொழியிலுள்ள குகுந்த்தோ என்று சொல்லலாம். அது கோரக்பூரில் உள்ளது. கோரக்பூர் என்பது தற்போதைய உத்தரபிரதேசத்தில் இருக்கிறது.அயோத்தி நகரிலிருந்து 135 கிலோமீட்டர்.

ராமாயண கிஷ்கிந்தையோ துங்கபத்ரா நதியின் வடகரையில் — கர்நாடகத்தில் இருக்கிறது. எப்படி தொ லை தூரத்தில் இப்படி அதிசய பெயர் வந்தது ? ராமாயணம், பாணினி காலத்திற்கு வெகு முன்னர் நடந்தது . பதஞ்சலியும் பிற்கால சமண சமய நூல்களும் செப்புவது போல வடக்கில் ஒரு கிஷ்கிந்தை இருந்ததா னால் அது வட-தென் நாட்டின் தொடர்பைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

சமண மத நூல்களிலும் கிஷ்கிந்தா இடம்பெறுகிறது ஒன்பதாவது தீர்த்தங்கரர் புஷ்பதந்த  ஆவார். அவர் பிறந்த ஊர் காகந்தி. ; இதன் மற்றோரு பெயர் கிஷ்கிந்தா. அவருடைய தந்தை பெயர் சுக்ரீவன் தாயார் பெயர் ராமா . இதிலும் ராமாயண கிஷ்கிந்தா தொடர்பு தெரிகிறது. சம்ஸ்க்ருதத்தில் ராம என்ற குறில் ஒலி இராம  பிரானைக் குறிக்கும்; ராமா என்று நெடில் ஒளி பெண்ணைக் குறிக்கும்.

இவையெல்லாம் ராமாயணத்துக்குப் பின்னர்தானே  ஏற்பட்டிருக்கவேண்டும்?

இதில் இன்னும் ஒரு சுவையான  விஷயமும் வருகிறது. காகந்திதான் கிஷ்கிந்தா என்று சமண நூல்கள் இயம்பும் தருணத்தில், அது பூம்புகார் நகரின் மற்றொரு பெயர் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்

இந்த மர்மத்துக்குச் சுலபமான விடை :–

மலைகள், ஆறுகள், நகரங்கள்  முதலிய பல இடங்கள் இந்தப் பெயரைக் கொண்டிருந்தன என்பதேயாம்.

Hampi

xxx

யவனர்கள் சூத்திரர்கள் !

யவனர்கள் என்பது எல்லா ‘வெள்ளைத்தோல் படைத்த’ வெளிநாட்டினரையும் குறிக்கும் என்பதை தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இத்தாலி நாட்டின் தலைநர் ரோம். அங்கிருந்து கப்பலில் வந்தவர்களை சங்கத் தமிழ் இலக்கியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களை வன்சொல் யவனர் என்றும் சாடுகிறது .அவர்கள் காமதேனுவின் ஆசன வாய்ப் பகுதியிருந்து வந்த பல இன  மக்களிலில் ஒரு இனம் என்று ராமாயண மஹாபாரத இதிகாசங்கள் வருணிக்கின்றன. இது பற்றி முன்னர் எல்லாக் குறிப்புகளையும் பல கட்டுரைகளில் தந்து விட்டேன். காளிதாசரோ பாரசீக ‘தாடிவாலா’க்களை யவனர்கள் என்று கூறுகிறார். சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த தமிழ் நூல்கள் ‘யவனத் தச்சர்’ என்று இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்  வசித்த கலைத்திறன் வல்ல தச்சர்களைக் குறிப்பிடுகிறது. ‘யவன, தச்ச’ ஆகியன எல்லாம் சம்ஸ்க்ருதம் சொற்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

அலெக்ஸ்சாண்டர் படையெடுப்புக் காலத்திலிருந்து யவனர்கள் என்பது ‘கிரேக்கர்’களைக் குறித்தது. குதிரை விற்ற அராபியர்களை சில இடங்களில் யவன என்றும் பெரும்பாலான இடங்களில் யோன/ ஜோன என்றும் குறிப்பிட்டனர்.

பதஞ்சலி, கிஷ்கிந்தா, மர்மம்,யவனர்கள், சூத்திரர்,

—subham—

கைக்கு அழகு புத்தகம்! புஸ்தகம் ஹஸ்த லட்சணம் !!

books

Written by London swaminathan

Research Article No. 1681; Dated 28 February 2015.

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” – ஔவை

சம்ஸ்கிருதத்தில் அழகான ஒரு பொன் மொழி—“கைக்கு அழகு புத்தகம்!”– ஒருவன் படிக்கும் புத்தகத்தைக் கொண்டு அவன் யார் என்பதைக் கணித்து விடலாம். யாரையாவது ஒருவரின் ‘பெர்சனாலிட்டி’ என்ன என்று தெரிய வேண்டுமா? நீங்கள் நேரடியாக அவரைக் கேட்டால் அது இங்கிதமாக இருக்காது. பேச்சு வாக்கில் நீங்கள் படித்த ஏதாவது சில புத்தகங்களின் பெயரைச் சொல்லிவிட்டு, “உங்களுக்கு இது பிடிக்குமா? நீங்கள் கடைசியாக என்ன படித்தீர்கள்?”– என்று கேளுங்கள். அவருடைய குணநலன்களைக் கண்டுபிடித்து விடலாம்.

அவ்வையார் சொல்கிறார்:

நீரளவே யாகுமாம் நீராம்பல் தன் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (வாக்குண்டாம்)

ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது அவன் கற்ற நூல்கள்.

ஆயினும் வள்ளுவர் விட்ட எச்சரிக்கையையும் மனதிற் கொள்ளவேண்டும்: கற்றவர் எல்லோரும் நல்லவர் அல்ல. கற்கக் கசடற; கற்ற பின் நிற்க தற்குத் தக!

பெரிய பெரிய பேச்சாளர்களும், சாமியார்களும், அரசியல்வாதிகளும் நெய் ஒழுக , தேன் ஒழுக பேசுகிறார்கள். சுய வாழ்விலோ பெரிய பூஜ்யம்! ஊருக்குத் தாண்டி உபதேசம்; அது நமக்கல்ல – என்ற கதையாக இருக்கிறது!

girl-carrying-books-236x300

நூல் பற்றி மனு செப்பிய பொன்மொழி!

2000 ஆண்டுகளுக்கு முன் மனு ஸ்மிருதியில் ஒரு அழகான ஸ்லோகம் வருகிறது. மனுவின் பெயர் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே வருவதால் அவர் மிகவும் பழைய அறிஞர். ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் வடிவில் மனு ஸ்மிருதி 2300 ஆண்டு பழமை வாய்ந்தது. அவர் சொல்வதாவது:

புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களைவிட, அதைப் படிப்பவர்கள் மேல்;

படித்த விஷயங்களை நினைவிற் கொள்பவர்கள், புத்தத்தைப் படிப்பவர்களை விட மேலானவர்கள்;

நினைவு வைத்துக் கொள்பவர்களை விட, அதைப் புரிந்து கொண்டவர்கள் மேலானவர்கள்;

புரிந்து கொண்டவர்களை விட அதை வாழக்கையில் செயல்படுத்துவோர் மேலானவர்கள்!

என்ன அற்புதமான வரிகள்! கற்றால் மட்டும் போதுமா? அதைப் புரிந்து வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டுமல்லவா?

புராதன உலகில் அதிகமான புத்தகங்கள் உடைய நாடு இந்தியா? காகிதத்தின் நடுவில் கி.மு 1000 என்று எழுதி ஒரு கோடு போடுங்கள்! அதற்கு மேலாக எழுத வேண்டுமானால் வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் மட்டுமே இருக்கும். இப்போது நாம் பயன்படுத்தும் எந்த மொழி நூலும் அங்கே காணமாட்டாது! பைபிளின் பழைய ஏற்பாடு, மோசஸின் பத்து கட்டளைகள் முதலியன எழுத்து வடிவு பெற்றது கி.மு 945! கிரேக்க மொழியில் ஹோமர் ‘ஆடிஸி’, ‘இலியட்’ காவியங்களை எழுதியது கி.மு 800 ல்!. தமிழ் என்னும் குழந்தை, லத்தீன் என்னும் குழந்தை அப்போது பிறக்கக்கூட இல்லை!

ஜில்காமேஷ் போன்ற சுமேரியப் பிதற்றல்கள்—இப்போது பயன்பாட்டில் இல்லை; அவை ‘புத்தகம்’ என்னும் இலக்கண வரையரைக்குள் வாரா!

the_adi_granth_

வழிபடும் நூல் ஆதிக் கிரந்தம்

உலகில் புத்தகததை வழிபடும் ஒரே நாடு இந்தியாதான்! சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் போனால் அங்கே அவர்களுடைய புனித நூலான ஆதிக்கிரந்தம் வழிபடுவதைப் பார்ப்பீர்கள்! தென்னக கோவில்களில் உற்சவ மூர்த்திக்கு என்ன மரியாதை உண்டோ அததனையும் கொடுத்து குரு-வாக வழிபடுகின்றனர். பத்து சீக்கிய குருமார்களுக்கு மேல் இனி இந்தப் புத்தகமே குரு என்று அறிவித்துவிட்டார் கடைசி குருவான குரு கோவிந்த சிங் (1666—1708)!

வட இந்தியாவுக்குப் போனால் பலருடைய பூஜை அறைகளில் வால்மீகி ராமாயணமும், துளசி ராமாயணமும், பகவத் கீதையும் பூஜை அறையில் வழிபடும் இடத்தில் இருக்கும். தென் இந்தியாவில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தத்தைக் காலையில் குளித்து விட்டு ‘மடி’யாகப் படித்துப் பாராயணம் செய்வோரைக் காணலாம்.

Bhagavad_gita_As_It_Is_Books

நூலுக்குப் பிறந்த நாள் விழா

உலகில் ஒரு புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா கொண்டாடும் நாடும் இந்தியதான்! பகவத் கீதை என்னும் அற்புதமான நூலில் இந்து மதக் கருத்துகள் அனைத்தும் 700 ஸ்லோகங்களில் அடக்கப்பட்டு விட்டன. இது தோன்றிய மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதஸி ஆண்டுதோறும் பகவத் கீதையின் பிறந்த நாளாகக் (கீதா ஜயந்தி) கொண்டாடப்படுகிறது.

இப்படிப் பல்லாயிரம் புதுமைகள் இருப்பதால்தான் இன்றும் கூட இந்தியாவைப் பார்க்கும் வெளி நாட்டினர் வியக்கின்றனர்!

family-motorcycle-india

சூத்ரா = சுரா = தோரா

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்றும் — இவ்விரு மொழிகளும் பாரதீய சிந்தனையில்- இந்திய மண்ணில்- மலர்ந்த மலர்கள் என்றும் சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். நூல் தொடர்பான இன்னும் ஒரு விஷயத்தை இப்போது காண்போம்:

தமிழில்

நூல் = துணி நெய்யும் நூல்

நூல் = புத்தகம்

வடமொழியிலும்

சூத்ர = நூல் (தாலி=மங்கள சூத்ர)

சூத்ர = புத்தகம் ( பிரம்மசூத்திரம், பாணீனீய சூத்திரம், பதஞ்சலி யோக சூத்திரம், நாரத பக்தி சூத்திரம், தொல்காப்பிய சூத்திரம்)

இந்த சூத்ர என்னும் சொல் எகிப்திய பிரமிடு கட்டுமானப் பணியில் பயன்படுத்தப் பட்டதால் எகிப்திய பிரமிடுகளைக் கட்டியோர் இந்தியர்களே என்று இதே பிளாக்–கில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டேன். அதாவது இந்து சமய பொறியியல் அறிஞர்கள், ஒரு கட்டிடம் நேராக செங்குத்தாக இருக்கிறதா என்பதைக் காண கையில் நூல் (சூத்ர) பிடித்துக் காண்பர். நிற்க!

இந்த சூத்ர என்னும் வடமொழிச் சொல் அராபிய மொழியில் ‘சுரா’ என்றும் ஹீப்ரூவில் (எபிரேயம்) ‘தோரா’ என்றும் மருவின. எப்படி நாம் பிரம்மசூத்திரத்திலும், பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்திலும் பயன் படுத்துகிறோமோ அப்படி குரானில் ‘சுரா’ என்பதை அத்தியாயம் என்னும் பொருளில் பயன் படுத்துவர். பைபிளின் பழைய ஏற்பாடு பகுதியை யூதமத அறிஞர்களின் வியாக்கியானங்களோடு பயன்படுத்தும் பகுதி –‘தோரா’.

மொழியியல் விதிகளின் படி ‘த’—வும் ‘ஸ’—வும் இடம் மாறும்! வித்தை என்பதை தமிழ் பாடல்களில் விச்சை என்பர். ஆங்கிலத்தில் டி. ஐ. ஓ. என். என்ற நான்கு எழுத்தில் முடியும் சொற்களை ‘ஷன்’ என்றே உச்சரிப்பர் (எ.கா. –எஜுகேஷன்)

ச/ஷ/ஸ = த/ ட

ramayan

ஆக செந்தமிழும், செம்மொழியும் (ஸம்ஸ்கிருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி = செம்மொழி= ஸம்ஸ்கிருதம்) ஒரே தாய்க்குப் பிறந்த இரு குழந்தைகள். ஸம்ஸ்கிருதம்- பெரிய அண்ணன், தமிழ்- சின்னத் தம்பி!

இதற்கு இன்னும் நூற்றுகணக்கான எடுத்துக் காட்டுகள் உள்ளன. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், புறநானூற்றிலும் பல இடங்களில் வரும் “அறம், பொருள், இன்பம்” என்பது பாரதீய சிந்தனையில் மலர்ந்த அரிய பூக்கள். இது இரு மொழியிலும் அப்படியே இருப்பது ஒரே தாய்க்குப் பிறந்த இரு மொழிகள் என்பதைத் தெள்ளிதின் விளக்கும்:

தர்ம அர்த்த காம மோக்ஷம்=

அறம் (தர்ம), பொருள் (அர்த்த), இன்பம் (காம), வீடு (விடுதல்) மோக்ஷம்.

தர்ம என்பது இந்தி மொழியில் ‘தரம்’ என மருவியது போல தமிழில் ‘அறம்’ என மருவியது!

பொருள் (அர்த்த) என்பது சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் இரு பொருளில் ( பணம், அர்த்தம்) என்றே பயன்படுத்தப் படுகின்றன.

காம என்ற சொல் சங்க இலக்கியம் முதல் இன்று வரை அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. சில இடங்களில் இன்பம் என்ற மொழிபெயர்ப்பும் உண்டு.

தொல்காப்பியம், திருக்குறள், புறநானூற்றில் காணப்படும் “தர்மார்த்காமமோக்ஷ” சம்ஸ்கிருத இலக்கியத்தில் பல்லாயிரம் இடங்களில் வருகிறது. ஆக, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை – சொல் ஆக்கத்தில் கூட – ஒரே சிந்தனை இருக்குமானால் இவர்கள் யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்கிருதம்!!

நூல் பல கல்: அவ்வையின் ஆத்திச் சூடி!