“ஏழை படும்பாடு” நாவல் புகழ் பிரெஞ்சு ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ (Post.9828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9828

Date uploaded in London –8 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டு புகழ்பெற்ற கதைகள் மூலம் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவல் ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ (VICTOR HUGO) ஆவார். அவருடைய கதை “லே மிஸராபிள் (Les Miserables) ஏழை படும்பாடு)” இன்றும் லண்டனில் நாடக அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது 1985-ல் முதலில் மேடை ஏறியது  இவருடைய மற்றோரு நாவல் ஹஞ்ச்பேக் ஆப் நாத்ர்தாம்  (Hunchback of Notre Dame) .

மிஸராபிள் MISERABLE – பரிதாபத்துக்குரியவர்கள் (ஏழை படும்பாடு)

ஹன்ச் பேக் HUNCHBACK- கூனி, கூன்முதுகு , கூனன்

நாத்ர்தாம் NOTRE DAME CATHEDRAL, PARIS- புகழ்பெற்ற சர்ச் ; பாரிஸ் நகரில் உள்ளது.

இந்த இரண்டு நாவல்களுமே சமுதாயத்தில் வறுமை, இன  வேற்றுமை, அறியாமை , தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. பல டெலிவிஷன் தொடர்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்களாக இவை உருவானதால் மேலை உலகில் விக்டர் ஹ்யுகோவை அறியாதார் எவருமிலர்.

பிரான்சில் பேசன்சோன் என்ற ஊரில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை நெப்போலியனின் ராணுவத்தில் ஒரு அதிகாரி .அவருக்கு இவர் மூன்றா வது பிள்ளை.அவருடைய தாய் கல்வி கற்ற பெண்மணி. அவரே ஹ்யூகோவுக்கு கல்வி கற்பித்தார். இதனால் 14 வயதிலேயே விக்டர் ஹ் யூகோ பாடல் இயற்றினார். பிரான்ஸ்வா ரெனே சோட்டர்பிரான் (Francois Rene  Chateaubriand) என்ற பிரபல ராஜ தந்திரியும், எழுத்தாளரும் ஆனவர் இவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.அவருடைய ஊற்றுணர்ச்சியால் நாடகங்கள், கவிதைகள், நாவல்களை எழுதி அச்சிட்டார்.

இவர் அடில் போச்சர் என்பவரை மணந்தார் ஐந்து குழந்தைகளுக்குத் தந்தை ஆனார்.

29 வயதில் அவர் எழுதி வெளியிட்ட THE HUNCHBACK OF THE NOTREDAME நாத்ர்தாம் கூன்முதுகன் நாவல் இவரை பிரெஞ்சு மக்களுக்கு வெளிச்சம் போ ட்டுக் காட்டியது.

விக்டர் ஹ்யூகோவின் வாழ்வு துயரம் மிக்கது. அவருடைய திருமண நாளன்று, சகோதரனுக்கு பைத்தியம் பிடித்தது. அது தீராத பைத்தியம். இதற்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வு அவரை வாழ்நாள் முழுதும் வாட்டிவதைத்தது .அதற்குப்பின்னர் அவர் அன்பைப் பொழிந்த மகள் , ஒரு விபத்தில் இறந்தாள் . இதனால் பத்து ஆண்டுகளுக்கு எழுதாமல் மௌனம் சாதித்தார் விக்டர் ஹ்யூகோ.

தனது பிற்கால வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு குடியரசு ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இரண்டாவது பிரெஞ்சு குடியரசு ஆட்சியை மூன்றாவது நெப்போலியன் 1851-ம் ஆண்டில் தூக்கி எறிந்தார். இதப்பினால் விக்டர் சானல் தீவுகளில் நாடுகடந்த வாழ்க்கை நடத்தினார். அப்போதுதான் புகழ்மிகு படைப்புகளை எழுதினார். தி லெஜண்ட் ஆப் தி செஞ்சசுரீஸ் THE LEGEND OF THE CENTURIES நூலை 57 வயதில் வெளியிட்டார். பின்னர் லே மிச்ராபிள் LES MISERABLES அச்சானது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் நிலவிய சமூக அநீதிகளை இதில் சித்தரித்தார்.

இவரது இரண்டு கீர்த்திமிக்க நாடகங்களும் இசை வடிவில் பாடல்களுடன் (Musicals) மேடை ஏறி இன்றும் உலகம் முழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வால் டிஸ்னி படைப்பும் இதில் அடக்கம்.

1870-ம் ஆண்டில் மூன்றாவது நெப்போலியன் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னர் விக்டர், பிரான்சுக்குத் திரும்பிவந்தார் . அவர் இறந்த நாளன்று 20 லட்சம் பேர் பாரிஸ் நகரில் நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பிறந்த தேதி – பிப்ரவரி 26, 1802

இறந்த தேதி – மே 22, 1885

வாழ்ந்த ஆண்டுகள் – 83

படைத்த இலக்கியங்கள் –

1826 – ODES AND BALLADS

1829- LES ORIENTALES

1830- HERNANI

1831 – THE HUNCHBACK OF NOTRE DAME

1859- THE LEGEND OF THE CENTURIES

1862 – LES MISERABLES

1869- BY ORDER OF THE KING

1872 – THE TERRIBLE YEAR

1874 – NINETY THREE

விக்டர் ஹ்யுகோ , ஆவி உலகத்தில் நம்பிக்கைகொண்டவர். இறந்தவர்களுடனும் பிற கிரகவாசிகளுடனும் பேசியதாகச் சொல்லிக்கொண்டவர் .

இவர் ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு ஓவியம் வரைவதில் ஈடுபட்டார். இவர் தேர்தலில் நின்று மக்கள் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் பத்திரிகை ஒன்றைத் துவக்கி அதில் தனது கவிதைகளையும் பிறரது படைப்புகளையும் வெளியிட்டார். இவரது எல்லா எழுத்துக்களிலும் மனித நேயமும், சமத்துவமும் தென்படும். இவரது பிரபல நாவல் ஆன “லே மிஸரபிள்” கதையை தமிழில் சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்தார். “ஏழைபடும் பாடு” என்னும் நூலாக அது வெளிவந்தது.

ஆயினும் விக்டர் ஹ்யூகோவின் பிரெஞ்சு மொழி ஒரிஜினலில் அது ஒரு பிராம்மாண்டமான நாவல். ஆறரை லட்சம் சொற்களுக்கு மேல் அதில் உள்ளன. சுமார் 2500 பக்கங்கள். நாற்பதுக்கும் மேலான நாடுகளில் இசை நாடகமாக (Musicals) இது நடைபெறுகிறது. அதை பார்த்து ரசித்தோரின் தொகை 2012ம் ஆண்டிலேயே ஆறு கோடி பேரைத் தாண்டிவிட்டது. இவருடைய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலமானவை. இவர் பிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர் . இதனால் இவரது புஸ்தகங்களுக்கு போப் Pope தலைமையிலான கிறிஸ்தவர்கள் தடைவிதித்தனர். இவர் கிறிஸ்தவ மத ஊழல்களை எதிர்த்தார். தன்னை சுதந்திர சிந்தனையாளர் என்று சொல்லிக்கொண்டார்.

–SUBHAM-

tags- ஏழை படும்பாடு”,  பிரெஞ்சு ஆசிரியர்,  விக்டர் ஹ்யூகோ, நெப்போலியன், Victor Hugo

நெப்போலியன் சிலை செய்ய மறுத்தது ஏன்? அபிமன்யு தோற்றது ஏன்? (Post No. 6535)

Paros Marble Quarry in Greece

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 12 June 2019


British Summer Time uploaded in London –  6-58 am

Post No. 6535

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

Chakra Vuha/ Lotus Formation and Abhimanyu
Napoleon Tomb in Paris

அயோடினும் நெப்போலியனும், அயோடினும் மருத்துவமும் (Post No.5668)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 November 2018

GMT Time uploaded in London –17-34
Post No. 5668

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அடடா, அடடா, அயோடின் -டா கட்டுரையின் இரண்டாம் பகுதி

நேற்று வெளியான முதல் பகுதியில் சில சுவையான சம்பவங்களைக் கொடுத்தேன். இதோ மேலும் சில சுவையான சம்பவங்கள்.

நெப்போலியன் பிரான்ஸ் நாட்டை ஆண்ட காலத்தில், பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு யுத்தம் நடந்தது. அப்பொழுது வெடிமருந்து, வெடிகுண்டு செய்யத் தேவையான பொட்டாஸியம் நை ட் ரே ட் பிரான்ஸுக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக பிரிட்டன் கடற்படையை வைத்து பிரான்ஸை முற்றுகையிட்டது. பிரெஞ்சுக்காரகள் வேறு எவ்வகையில் பொட்டாஸியம் நை ட் ரே ட் செய்யலாம் என்று ஆராயத் துவங்கினர். கடற் பாஸியில் உள்ள ரசாயனப் பொருளை பயன்படுத்தலாம் என்று அதோடு பொட்டாஸியம் உள்ள பல பொருட்களைச் சேர்த்தனர்.

அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பள பளப்பான கறுப்பு நிற படிகங்கள் குடுவையில் சேர்ந்தன .அதை சூடாக்கிப் பார்த்தபோது ஊதா நிற ஆவி வந்தது. பெர்னார்ட் கூர்த்வா என்பவர் இதைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் வேறு இருவரிடம் கொடுக்கவே அது ஜோசப் கே லுசக் என்பவர் கைக்கு வந்தது. அவர் இது ஒரு தனி மூலகம் என்பதை அறிந்து கிரேக்க மொழியில் ஐயோட்ஸ் என்று பெயரிட்டார். இதன் பொருள் ‘வயலெட் நிறம் போன்ற’– இதிருந்து பிறந்த சொல்தான்  அயோடின்.

இதை மேற்கொண்டு சோதனைக்காக பிரிட்டனை சேர்ந்த ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பினர். பிரான்ஸ்- பிரிட்டன் போரையும் பொருட்படுத்தாது அவரை பாரிஸ் நகருக்குள் நுழைய நெப்போலியன் அனுமத்தித்தான். அவர் ஹோட்டல் அறையில் தங்கியவாறே சோதனைகளைச் செய்து, இது தனி மூலகமே என்றார்.

வழக்கமாக மற்றவர்கள் செய்ததை  பிரிட்டிஷார் திருடி அதை தமது சாதனை போலக் காட்டுவர். ஆகையால் ஹம்ப்ரி டேவிதான்  (Humphrey Davy) அயோடினை கண்டுபிடித்தவர் என்று பறை அறிவித்தனர்.

இந்த சர்ச்சை 100 ஆண்டுகளுக்கு நீடித்தது. பிரெஞ்சுக்காரர்கள் விடவில்லை. அயோடின் கண்டுபிடித்த நூற்றாண்டு விழா என்று 1913ல் பாரீஸில் பெரிய விழா கொண்டாடிவிட்டனர்.

மருத்துவத்தில் அயோடின்

இப்படி அயோடின் பற்றிய சர்ச்சை ஒரு புறம் இருக்க, அனைவரும் அயோடினின் மருத்துவப் பயனைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினர். அந்தக் காலத்தில் முன்கழுத்துக் கழலை

நோய் என்பதற்கு (கழுத்தில் கட்டி) கடற்பாஸியைக் கொடுத்து கட்டுப்படுத்தினர். இதை உணர்ந்த டாக்டர் ஜீன் பிரான்ஸ்வா காயின்டே என்பவர் பொட்டாஸியம் அயோடைட் திரவத்தை  நோயாளிகளுக்குக் கொடுத்தார். ஆனால் அது கடுமையான வயிற்று நோவை உருவக்கியது. பின்னர் அது கைவிடப்பட்டது. ஆனால் இதன் மூலம் டிங்சர் அயோடின் என்ற கிருமி கொல்லும் மருந்து கிடைத்தது. இப்போதும் காயங்களுக்கு டிங்சர் அயோடின் போடுகின்றனர்.

மனிதர்களின் கழுத்தில் தைராய்ட் (Thyroid Glands) சுரப்பி உளது இது இரண்டு வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இது அதிகம் ஆனாலும் நோய் வரும். குறைந்தாலும் நோய் வரும் .இது குறைந்தால் முன்கழலை,உடலில் குளிர், மனத்தொய்வு, காய்ந்து போன சருமம், களைப்பு என்று பல பிரச்சினைகள் வரும் . அதிகம் ஆனாலோ அமைதியினமையும் அதிக அலட்டலும் உண்டாகும். ஆகையால் ரத்தத்தில் அயோடின் உள்ள அளவைக் கொண்டு  இதை தீர்மானித்து மருந்து கொடுக்கத் துவங்கினர்.

கர்ப்பிணிகளுக்கு அயோடின்

கர்ப்பமான பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் தேவையான அளவுக்கு அயோடின் இருந்தால்தான் குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சி பெறும். இதனால் இப்போது கர்ப்பிணிப் பெண்களையும் இந்த கோணத்தில் அதிகம் கவனிக்கின்றனர்.

இயற்கையாக முட்டைக் கோசு, காளான், சூரிய காந்திச் செடி விதைகள், பல வகை மீன்கள் ஆய்ஸ்டர் (Oysters) எனப்படும் சிப்பியில் இருக்கும் பிராணி ஆகியவற்றில் இது அதிகம் இருக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அயோடின் அவஸியம்.

–subham–

நெப்போலியனைக் கொன்றது எப்படி? (Post No.5456)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22  September 2018

 

Time uploaded in London – 7-13 am (British Summer Time)

 

Post No. 5456

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பிரிட்டிஷாருக்கு நெப்போலியன் என்றால் சிம்ம சொப்பனம். நெப்போலியன் பிரெஞ்சுப் பேரரசர். ஏறத்தாழ ஐரோப்பா முழுதையும் வென்றவர். ஆனால் ஒரு தோல்வி ஏற்பட்டவுடன் எல்பா (Elba island )தீவில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய போது பிரிட்டிஷ்- பிரஷ்ய சூழ்ச்சிக்கு இரையாகி, வாட்டர்லூ என்னுமிடத்தில் தோல்வியைத் தழுவினார். மாவீரனாகிய நெப்போலியன் யாரும் அணுகமுடியாத செய்ன்ட் ஹெலினா (St Helena) தீவில் சிறை வைக்கப்பட்டார். அவரை மெதுவாகக் கொல்லும் ஆர்ஸெனிக் உப்புகளைக் கொடுத்து பிரிரிட்டிஷார் கொன்று விட்டனர். நீண்ட காலத்துக்குப்பின்னர் அவர் சடலம் பாரீஸ் மாநகருக்குக் கொண்டுவரப்பட்டு (Hotel des Invalides in Paris) அடக்கம் செய்யப்பட்டது.

 

 

இதை எப்படி கண்டுபிடித்தனர்?

ஆர்ஸெனிக் (Arsenic) என்பது 118-க்கும் மேலான மூலகங்களில் ஒன்று. இது மனிதனுக்குத் தேவைதான். ஆனால் மிக, மிகக் குறைவாகவே தேவை. இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டால் தலை முடியில் சேரும். இறந்த பின்னரும் ஒருவர் தலை மயிரை ஆராய்ந்து இதைக் கண்டு பிடித்துவிடலாம். நெப்போலியனின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட முடியை ஆராய்ந்ததில் இது அளவுக்கு அதிகமாக இருந்தது எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியானது.

 

ஆனால் ஒருவரின் தலை மயிரில் ஆர்ஸெனிக் மூலக உப்புகள் சேர வேறு சில வழிகளும் உண்டு. அந்தக் காலத்தில் சுவரில் ஒட்டும் வால் பேப்பர் (Wall Papers)களில் வர்ணம் உண்டாக்க ஆர்செனிக் பயன்படுத்தப்பட்டது. ஈரமான சூழ்நிலையில் இதன் மீது பூஞ்சக் காளான்(fungal gowth) வளர்ந்தால் அது ஆர்ஸெனிக் விஷத்தைக் காற்றில் கலக்கச் செய்யும். இது போல நெப்போலியன் இருந்த அறையிலும் சுவர்களில் பேப்பர் இருந்தது. திட்டமிட்டு நெப்போலியனை அந்த அறையில் அடைத்து சுவாஸிக்கச் செய்தனரா? அல்லது விதியின் வசமா? ஆண்டவனே அறிவான்.

வாரிசுப் பொடி மர்மம்!

 

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைமை குருவான போப்பாண்டவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்தனர். இது போல பல பிரபுக்கள், அரசர்களும் மேலை நாடுகளில் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் ஆர்ஸெனிக் உள்ள சில விஷ உப்புகளே. இதனால் இவைகளுக்கு ‘வாரிசுப் பொடி’ (Succession Powder) என்ற கெட்ட பெயர் ஏற்பட்டது. அதாவது அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானிக்கும் கொலைகாரப் பொடியானது.

 

ஆனால் ஆர்ஸெனிக்குக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயர்களும் உண்டு. சிறிய அளவில் இது  உடலுக்குத் தேவை. இன்றும் சீன மருந்துகளில் வெகுவாகப் பயன்படுகிறது, குறிப்பிட்ட வகை ரத்த புற்று நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்த அமெரிக்க உணவு மருந்து இலாகாவும் அனுமதிக்கிறது. ஒரு காலத்தில் இதற்கு ஸகல ரோக நிவாரணி (Cure all) என்ற பெயரும் உண்டு. காரணம் என்னவென்றால் இதை சர்க்கரை வியாதி, க்ஷய ரோகமெனப்படும் காச நோய், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் கொடுத்தனர். காரணம் என்ன வென்றால் இதை மிக சொற்ப அளவில் உட்கொண்டால் ரத்தத்தில் சிவப்பு நிற செல்கள் (red Blood Corpuscles) பெருகி உத்வேகத்தைக் கொடுக்கும். இதை டாக்டர் பௌளர் என்பவர் கண்டு பிடித்ததால் அந்தக் காலத்தில் டாக்டர் பௌளர் திரவம் (Dr Fowlers Solution) மிகவும் பிரஸித்தம்.

 

 

பிரபல  ஆங்கிலக் கதாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் முதலியோரும் சாப்பிட்ட டானிக் அது.

 

சில இடங்களில் பூமியில் ஆர்ஸெனிக் அதிகம். அப்படிப்பட்ட ஓரிடம் மேறு வங்கம். அங்கே நிலத்தடி நீரில் இது அதிகம் இருந்ததால் அரசாங்கம் க்ளோரிம் மாத்திரைகளைக் கொடுத்தது. இது தண்ணீரில் கலக்கும் போது ஆர்ஸெனிக் விஷ உப்புகள் கீழே கசடாகப் படிந்து விடும்.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 6000 குடிகாரர்கள் இந்த மூலகத்தால் பாதிக்கப்பட்டனர். பீயர் குடிகாரர்களில் 70 பேர் இறந்தனர். இப்பொழுதும் பெயிண்ட், (weed killers) களைக் கொல்லி திரவங்களில் இது பயன்படுகிறது.

ஆர்ஸெனிக் 5000 ஆண்டு வரலாறு உடைய மூலகம். ரோமானிய சக்ரவர்த்தி காலிகுலா (Roman Emperor Caligula) இதைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் திட்டத்தைத் துவக்கினார் என்றும் ஆனால் மிகவும் சொற்ப அளவில் தங்கம் கிடைத்ததால் லாபமில்லை என்று அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ரோமானிய எழுத்தர் ப்ளினி (Pliny) சொல்கிறார்.

 

ஆர்செனிக் என்பது உலோகவகை மூலகம். இதன் அணு எண் 33.

 

இயற்கையில் எரிமலை வாயு முதலியவற்றின் மூலம் இது காற்றில் கலக்கிறது. பந்தயக் குதிரைகளைப் பழக்குவோர் ஆர்ஸெனிக் கலந்த உணவை அவைகளுக்குக் கொடுப்பதால் அவை ‘சிட்’டாகப் பறந்தன. ஆல்ப்ஸ் மலையில் உள்ளோர் இதை தோலில் நல்ல நிறத்தை உண்டாக்கும் என்றும் மலை உயரத்தில் வேலை செய்ய சக்தி கொடுக்கும் என்றும் நம்பினர். உடலில் 100 மில்லிகிராம் ஆர்ஸெனிக் இருந்தால் விஷம் என்று கருதப்படும் . ஆனால் ஆல்ப்ஸ் மலைவாசிகள் வாரத்துக்கு இரு முறை 250 மில்லிகிராம் சேர்த்தனர். இதை முதலில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. பின்னர் ஆராய்ச்சியாளர் முன்னிலையில் ஒரு குடியானவர் 400 மில்லி கிராம் ஆர்செனிக் உண்டும் பாதிக்கப்படாமல் இருந்ததைக் காட்டியவுடன் விஞ்ஞானிகள் கதையை மாற்றி எழுதினர்.

 

 

இந்தியாவில் கிராமப் புறங்களில் ஒரு சொல் உண்டு. தேள் விஷத்தையோ பாம்பு விஷத்தையோ உடலில் சிறுகச் சிறுக ஏற்றினால் , பின்னர் பாம்பு கடித்தாலும் அவரை பாதிக்காது என்று.

 

இதை ருசுப்பிக்கும் வகையில் மேலும் ஒரு செய்தி. ஆர்ஸெனிக் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களை அது அதிகம் பாதிப்பத்தில்லை. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டு கிராம மக்கள் 600 மில்லிகிராம் ஆர்ஸெனிக் சாப்பிட்டும் அது தொடர்பான விளைவுகள் எதுவுமின்றி சுகமாக வசிக்கின்றனர்!

 

படம்- நெப்போலியன் அடக்கம் செய்யப்பட்ட இடம், பாரீஸ்

ஆர்செனிக் அதிகம் உள்ள நிலங்களில் ஒரு வகை சீன தாவரத்தை வளர்த்தால் அவை ஆர்ஸெனிக்கை உறிஞ்சி அந்த நிலத்தைப் பாதுகாப்பானதாகச் செய்து விடும் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

 

வாழ்க வாரிசுப் பொடி!

 

–சுபம் —

 

நெப்போலியனின் வயது! (Post No 2560)

napole3

Written by S Nagarajan

 

Date: 21  February 2016

 

Post No. 2560

 

Time uploaded in London :–  6-28 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நெப்போலியனின் வயது!

ச.நாகராஜன்

milan

இத்தாலியில் உள்ள மிலான் நகரைப் பிடிக்க மாபெரும் போரில் நெப்போலியன் ஈடுபட்டிருந்த காலம் அது.

மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போர் நடக்க இருக்கிறது.

 

 

கமாண்டர் இன் சீஃப் ஆக இருந்த நெப்போலியனை கௌரவிக்கும் வண்ணம் இரவு நேர விருந்தை ஒரு பெரிய மாளிகையில் பணக்காரப் பெண்மணி ஒருவர் அளித்தார்.

 

 

அதில் கலந்து கொள்ள வந்திருந்த நெப்போலியனை கூரிய கேள்விகளால் தொளைத்து எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

மறு நாள் போரைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாவீரனோ கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக ஆனால் ஆழ்ந்த அர்த்தமுடைய வார்த்தைகளால் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

 

 

இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்தப் பெண்மணி குத்தலாக நெப்போலியனை நோக்கி, “அது சரி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு புகழ் பட்டங்களா உங்களுக்கு? உங்கள் வயது தான் என்ன?” என்று கேட்டாள்.

 

 

உடனே பளீரென்று சுருக்கமாக பதிலளித்தான் நெப்போலியன்: ”அதுவா, உண்மையில் என் வயது இன்று இருபத்தைந்து தான். ஆனால் நாளைக்கோ மி-லான்!” என்று பதிலளித்தான்.

 

 

மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றி விடுவேன் என்பதைக் தன்னம்பிக்கையுடன் குறிப்பிடுகையில் மி-லான் என்ற வார்த்தையை சிலேடையாக அவன் பயன்படுத்தினான் பிரெஞ்சு மொழியில். மில் என்றால் ஆயிரம் என்று பொருள். ஆன் என்றால் வருடங்கள் என்று பொருள். மிலான் என்ற வார்த்தைக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள். மிலான் நகரை வென்று விட்டால் ஆயிரம் ஆண்டு புகழைப் பெறுவேன் என்று கூறிய மாவீரன் மறு நாள் மிலான் நகரைக் கைப்பற்றி பெரும் புகழை அடைந்தான்.

 

napole2

இத்தாலி போரில் படைவீரர்களை அணிவகுக்க வைத்த போது தனது தந்திரமான போர் முறையால் ஒவ்வொருவரும் எங்கிருந்து எப்படி தாக்குதலை நடத்த வேண்டும் என்று அவன் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குதிரைப்படை வீரன் ஒருவன், “மன்னரே! உங்களிடம் ஒரு நிமிடம் தனியாகப் பேச் அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினான்.

அவனை அருகில் அழைத்த மாவீரன் “என்ன விஷயம்?” என்று கேட்டான்.

 

 

அந்த வீரன் நெப்போலியனின் ஒவ்வொரு உத்தரவையும் சொல்லி அது எப்படி எதிரிகளை வீழ்த்தி வெற்றியைத் தரப் போகிறது என்பதை புத்திசாலித்தனத்துடன் விளக்கினான்.

“அடப் போக்கிரி! மேலே ஒரு வார்த்தையும் பேசாதே! என் இரகசியம் எல்லாவற்றையும் சொல்லி விடுவாய் போல இருக்கிறதே!” என்று கூறி விட்டு அன்புடன் அவன் உதடுகளில் தன் விரல்களை வைத்து அவனை பேசாமலிருக்கச் செய்தான்.

.

குதிரை வீரன் விடை பெற்றுக் கொண்டு போர்க்களம் சென்றான்.

போர் முடிந்தது, மாபெரும் வெற்றியைப் பெற்ற நெப்போலியன் தன் உதவி தளகர்த்தரிடம் அந்த குதிரை வீரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான்.

 

எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. போரிலே குண்டடி பட்டு அவன் மாண்டிருக்கக் கூடும்!

 

நெப்போலியன் பெரிதும் வருந்தினான் – மாபெரும் புத்திசாலி வீரனை இழந்து விட்டோமே என்று. அவன் கௌரவிக்கப்பட்டு பதவி உயர்வு பெறுவதற்கு பதில் இந்த பூமியிலிருந்து மேல் உலகத்திற்கு உயர்வு பெற்று விட்டான்!

 

Napoleon on Horseback at the St Bernard Pass by Jacques-Louis David

இத்தாலிய சேனையின் கமாண்டராக இருந்த நெப்போலியன் ஆஸ்திரிய படைகளுக்கு எதிராகக் கடும் போரைத் தொடுத்தான்.

கோரமான போர்! இரண்டு நாட்கள் இடைவிடாமல் கடுமையாகப் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களைப் பார்த்த அவன் சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரத்தில் தன் வீரர்களை நோக்கி, “இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு. நன்கு இளைப்பாறுங்கள்” என்று கட்டளையிடவே அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் தனது படை பாசறையின் எல்லையில் மட்டும் கூடாரங்களை அமைத்துக் காவல் காக்க உத்தரவிட்டான் அவன்.

இரவு நேரத்தில் எல்லையோரத்தில் இருந்த கூடாரக் காவல் வீரன் இடைவிடாத போரினால் ஏற்பட்ட களைப்பில் தன்னை மறந்து உறங்கி விட்டான்.

 

 

இரவு நேரச் சோதனைக்காக அங்கு வந்த நெப்போலியன் அந்தக் காவல் வீரன் தூங்குவதைப் பார்த்தான்.

 

பேசாமல் அவன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துத் தானே நின்றவாறு காவல் காக்க ஆரம்பித்தான்.

ஒரு மணி நேரம் கழிந்தது. மெதுவாகக் கண் முழித்த அந்த வீரன் அங்கு தன் துப்பாக்கியைக் கையில் ஏந்தி இருப்பது யார் என்று பார்த்தான்.

 

மாமன்னன் நெப்போலியன் காவல் வீரனாக அங்கு இருந்தான்.

“ஐயோ!” என்று அலறிய அவன், “நான் தொலைந்தேன்!” என்று புலம்பினான்.

 

“இல்லை, நண்பனே! உன் களைப்பால் நீ தூங்கி விட்டாய்; ஆனால் முக்கியமான வேலையில் நீ இருக்கிறாய். ஒரு கணம் அசந்தாலும் நாம் தோற்க நேரிடும். பிடி உன் துப்பாக்கியை. கவனமாகக் காவல் வேலையைப் பார்!” என்று சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்தான் நெப்போலியன்.

o-NAPOLEON-facebook

Napoleon Bonaparte

அந்தக் காவல் வீரனின் கண்கள் கசிந்தன.

ஒரு உண்மையான தலைவனாக இருந்ததாலேயே உலக்ப் புகழ் பெற்ற வீரனாக அவன் மிளிர்ந்தான் என்பதற்கு இதைப் போன்ற ஏராள்மான சம்பவங்கள் அவன் வாழ்வில் உள்ளன!

 

********

 

நெப்போலியன் தந்திரம்: உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவது எப்படி?

napo6

Article No. 2075

Written by London swaminathan

Date : 16  August  2015

Time uploaded in London :–  7-31 am

நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் மாபெரும் வீரன். இறுதியில் ஆங்கிலேயர்களிடம் தோற்று, சிறையில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டார். அதாவது ரத்தத்தில் மெதுவாகக் கலக்கும் விஷத்தை உணவில் சேர்த்துக் கொடுத்து அவரை ஆங்கிலேயர்கள் கொன்றதை, பிற்காலத்தில் அவரது சடலத்திலுள்ள தலை முடிகளை ஆராய்ந்ததில் தெரிய வந்தது. நிற்க.

நெபோலியன், தனது படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட பல தந்திரங்களைக் கையாள்வார். அவர் வழி … தனி வழி! படை வீரர்களைச் சந்திக்கும் முன்பு தனது மெய்க் காப்பாளர்களைக் கூப்பிட்டு, இந்தப் பட்டாளத்தில் உள்ள முக்கிய வீரர்களின் முழு விவரங்களையும் அறிந்து வா என்று சொல்லி அனுப்புவார். அவரிடம் கேட்ட விஷயங்களை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு பட்டாள அணிவகுப்பு மரியாதையை ஏற்கச் செல்வார்.

stamp napoleon bonaparte

stamp napoleon bonaparte

திடீரென்று ஒரு குறிப்பிட்ட படை வீரர் முன்பு நின்று, அவனது பெயரைச் சொல்லி அன்புடனும், அதிகாரத்துடனும் அழைத்து, “ ஆஹா, நீ இந்தப் பட்டாளத்தில் இருக்கிறாயா? நீ அந்த xxxxx போரில் போரிட்ட முறையை நான் மறக்கவே இல்லை. நீ பெரிய வீரன்தான். அது சரி, ஊருக்குப் போய் வந்தாயா? உனது தந்தை எப்படி இருக்கிறார்? —– இப்படி அன்பு மழை பொழிவார்.

திடீரென்று என்ன இது? உனக்கு இதுவரை ஒரு மெடல், விருது கூட கிடைக்கவில்லையா? இதோ இப்போதே உத்தரவு போடுகிறேன் – என்று சொல்லி அவருக்கு ஒரு விருதும் கொடுப்பார் (ராணுவ வீரர்கள் சிறப்பாகப் போர் புரிந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து முதலியன அவர்கள் உடையிலேயே குத்தப் பட்டிருக்கும்/ பொருத்தப்பட்டிருக்கும்)

இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் படை வீரனுக்கு ஒரு பட்டம் கொடுக்கப்பட்டவுடன் பட்டாளம் முழுதும் ஒரே பரபரப்பு ஏற்பட்டு விடும். எல்லோரும், “ கடவுளே! நம் தலைவருக்குத் தெரியாத விஷயமே உலகில் இல்லை போலும்!! நம்முடைய ஊர், குடும்பம், நாம் போரிட்ட முறை எல்லாவற்றையும் தலைவர் அறிந்திருக்கிறார். நமக்கும் விரைவில் பட்டங்கள், விருதுகள், மெடல்கள் ஏதேனும் கிடைக்கலாம்” என்று பேசிக் கொள்வர். அது மட்டுமல்ல. இது மற்ற பட்டாளங்களுக்கும் காட்டுத் தீ போல பரவிவிடும். படை வீரர்கள் முன்னைவிட பன் மடங்கு உற்சாகமாகப் போரிடுவர்.

ஒரு தலைவனுக்குரிய அததனை குணநலன்களையும் பெற்றவர் நெப்போலியன்!