ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 2 (Post No.10,472)

ALL PICTURES WERE TAKEN BY LONDON SWAMINATHAN DURING HIS VISIT TO NERUR IN 2019

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,472
Date uploaded in London – – 22 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 2
ச.நாகராஜன்

தஞ்சாவூரில் இரு முஸ்லீம் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் பெருமையை அறிந்து அவர் முகமது நபியால் அனுப்பப்பட்டவர் என்று கருதினர். அவரைச் சந்தித்து அவரது அருளாசியையும் அவர்கள் பெற்றனர். தங்களது மத வழக்கப்படி அல்லாவை எப்படித் தொழுவார்களோ அதே போலவே சதாசிவ ப்ரஹ்மேந்திராளையும் அவர்கள் தொழுவார்கள். அவருடனேயே அவர்கள் இருந்து காலத்தைக் கழித்தனர். அவரது அருளைப் பெற்றதால் பெரிய மகான்களாக அவர்கள் ஆனார்கள். அவர்களை இரட்டை மஸ்தான் என அனைவரும் அழைப்பர். அவர்கள் இறந்தபின் அவர்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் சமாதி எழுப்பப்பட்டது.. அது இரட்டை மஸ்தான் சமாதி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஒரே சமயத்தில் அவர் மூன்று இடங்களில் தோன்றிய சம்பவ்ம் ஒன்று உண்டு. திருச்செந்தூரில் பாம்பு கடித்து இறந்த மணப்பெண்ணை அவர் உயிர்ப்பித்தார்; அதே சமயம் தஞ்சாவூர் அருகே கொதித்துக் கொண்டிருந்த வெல்லப்பாகைத் தண்ணீர் அருந்துவது போல கையால் மொண்டு குடித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் சிதம்பரத்தில் தரபாடித் திருவிழாவில் ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்.

1712-1718இல் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அமைச்சரான மல்லாரி பண்டிட் அவரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்கவில்லை என்றும் அவரது அருளாசி வேண்டும் என்றும் வேண்ட அவர் ஆசி வழங்கி ஆத்ம வித்யாவிலாஸம் என்ற நூலையும் அவருக்கு அளித்தார்.

மௌனமாகவே தன் நாட்களைக் கழித்து வந்த போது ஒரு நாள் திருவிசைநல்லூர் ஐயாவாள் உங்கள் குரு பேசத்தானே கூடாது என்றிருக்கிறார், இறைவனைத் துதிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே என்றார். அந்தக் கணத்திலிருந்து இறைவன் மீது அற்புதமான பல கிருதிகளை சதாசிவர் இயற்றிப் பாடலானார். பிரபலமான அவரது பாடல்கள் ஏராளமான சங்கீத கச்சேரிகளில் இன்றும் இடம் பெற்று வருகின்றன. அவரது பாடல்கள் பரமஹம்ஸ அல்லது ஹம்ஸ என்ற முத்திரையைக் கொண்டிருக்கும். பஜரே யதுநாதம், பஜரே கோபாலம், ஸ்மர வாரம் சேதஹ போன்ற பாடல்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். சாமா ராகத்தில் அமைந்த மானஸ சஞ்சரரே மிகவும் பிரபலமான ஒரு பாடல்.

this picture is taken from public domain

ஏராளமான அபூர்வ நூல்களையும் அவர் இயற்றியுள்ளார். யோகசூத்திர விருத்தி, பிரும்ம சூத்திர விருத்தி, சித்தாந்த கல்பவல்லி, சிவமானஸ பூஜை, ஆகிய நூல்களைக் குறிப்பாகச் சொல்லலாம். குரு ரத்தினமாலிகை என்ற அவரது நூல் காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆசார்யர்களின் திவ்ய சரிதங்களையும் பாரத தேசத்தில் அவ்வப்பொழுது ஆண்ட மன்னர்களைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றிய செய்திகளையும் தருகிறது. நவ மணி மாலா என்ற நூல் அவரது குருவான பரமசிவேந்திர சரஸ்வதியைப் போற்றி எழுதப்பட்ட ஒன்றாகும். ஆத்ம வித்யா விலாஸம் என்ற நூல் 62 செய்யுள்களைக் கொண்டுள்ள ஒரு சம்ஸ்கிருத நூல்.

திருவிசைநல்லூரில் வாழ்ந்து வந்த சதாசிவர் அங்கிருந்து நெரூருக்குச் சென்றார். நெரூர் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தவம் செய்யவும் தனித்து வாழவும் உகந்த இடமாக அது அமைந்திருந்தது. அது மட்டுமின்றி அங்குள்ள ஆறு தெற்கு நோக்கிப் பாய்வதால் அது காசிக்குச் சமமாகக் கருதப்பட்டது.

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் 1755ஆம் ஆண்டு மக நக்ஷத்திரத்தன்று வைசாக சுக்ல தசமியில் சமாதி நிலை எய்தினார். தான் சமாதி அடைவதற்கு முன்னர் அங்கு சமாதியில் ஒரு வில்வ மரம் தழைக்கும் என்று அவர் கூறினார். காசியிலிருந்து ஒரு அந்தணர் லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார். அன்றே நமக்கு நிர்யாணம் ஏற்படும். அகண்ட காவிரியின் தென்கரையில் நெரூரில் சமாதி வைத்து வில்வ மரத்தையும் அங்கு வளரச் செய்யுங்கள் என்றார். அதே போலவே நடந்தது. அதே போல சமாதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த பாணலிங்கத்தை புதுக்கோட்டை விஜய ரகுநாத தொண்டைமான் ஸ்தாபித்தார். அங்கு ஒரு கோவிலும் அமைக்கப்பட்டது.
அவர் மூன்று இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் ஐந்து இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் கூறுவர்.

தமிழ் நாட்டில் உள்ள நெரூர், மதுரையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஆகிய மூன்று இடங்களில் அவர் சமாதி அடைந்தார்.

மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மானாமதுரை சிவன் கோவிலின் பின்புறம் ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் சமாதி உள்ளது. அதிஷ்டானத்தின் மீதுள்ள கல் சிற்பத்தில் காயத்ரி, காமதேனு, திரிசூலம் ஆகிய மூன்றும் செதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர நர்மதா நதிக்கரையில் உள்ள ஓங்காரம் என்ற இடத்தில் அவர் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காசியிலும் அவர் சமாதி அடைந்ததாகவும் அங்கும் பூஜைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

தான் வாழ்ந்த காலத்தில் அவர் பல இடங்களிலும் விக்ரஹங்கள் மற்றும் யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்து கொண்டிருந்தார். பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அவர் ஸ்ரீ சக்ரம் ஒன்றை ஸ்தாபித்தார்.

இவர் அருளிய கீர்த்தனைகள் மற்றும் நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கும் பிரும்ம லக்ஷணங்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட்டதால் அவர் சதாசிவ பிரம்மம் என்ற பெயரை அடைந்து போற்றப்படுகிறார்.
அவருடைய பாதுகைகள் மோஹனூர் அசல தீபேஸ்வரர் சிவாலயத்தில் உள்ளது. இது நெரூரிலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மிகப் பெரும் மகானான இவரைப் பற்றி ஆதார பூர்வமான வரலாற்றுக் குறிப்புகளுடனான சரித்திரம் முழுமையாக வெளிவரவில்லை என்பது ஒரு குறையே!

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளை போற்றுவோமாக! அவர் அருளைப் பெறுவோமாக!!

நன்றி வணக்கம்!


tags– நெரூர்,சதாசிவ , ப்ரஹ்மேந்திராள் -2,

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 1 (Post No.10469)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,469
Date uploaded in London – – 21 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 1
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

காவிரிக் கரை கண்ட மகான்களில் மிகப் பெரும் சித்திகளைப் பெற்று பகவன் நாமத்தை உச்சரித்து அனைவருக்கும் வழி காட்டிய மகான் ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திர ஸ்வாமிகள் ஆவார். இவர் திருவிசைநல்லூர் ஐயாவாளின் சமகாலத்தவர்.

இளமையிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேறிய இவர், பெரும் வித்வான்களுடன் வாதத்தில் இறங்கி ஜெயிப்பது வழக்கம். காஞ்சி காமகோடி பீடத்தில் 57வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி அவர்களை குருவாக வரித்தார் இவர்.

இளமைக்காலத்தில் சிவராமகிருஷ்ணன் என்ற பெயரைக் கொண்டிருந்த இவர் தனது உடன் பயிலும் தோழனாகத் திருவிசைநல்லூர் ஐயாவாளைக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் இவரது வாதத்தைப் பொறுக்கமாட்டாத வித்வான்கள் இவரது குருவிடம் இவரைப் பற்றி புகார் செய்யவே, அவர் இவரை அழைத்து, “அனைவரது வாயையும் அடைத்து மூடி விடுகிறாயே, நீ எப்போது உன் வாயை மூடப் போகிறாய்?” என்று கேட்டார்.

அந்த க்ஷணத்திலிருந்தே அவர் மௌனத்தை மேற்கொண்டார். இவருக்குத் இளமையிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆனால் வீட்டிலிருந்து வெளியேறி எல்லா இடங்களிலும் சுற்ற ஆரம்பித்தார். நாளடைவில் ஆடைகளையும் களைந்து திரிய ஆரம்பித்தார்.
பின்னர் பெரும் சித்திகளை அடைந்தார். இவரது அருள் விளையாடல்கள் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் பல உண்டு.

சிலவற்றைப் பார்ப்போம்.

காவேரிக் கரையில் அமைந்துள்ள மஹாதானபுரத்தில் ஒரு நாள் இவரைச் சுற்றி இருந்த சிறுவர்கள், பல மைல்கள் தள்ளி இருந்த மதுரையில் நடக்கும் ஒரு திருவிழாவைக் காண வேண்டுமென்று விரும்பினார்கள். அவர்களது விருப்பத்தைத் தெரிந்து கொண்ட சதாசிவர் அவர்களிடம் கண்களை மூடுங்கள் என்றார். சிறுவர்களும் கண்களை மூடினர். சில விநாடிகள் கழித்துக் கண்களைத் திறந்த போது அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தனர்.

ஒரு நாள் தானியக் குவியல் அருகே இவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நிலத்தின் சொந்தக்காரனான விவசாயி இவரைத் திருடன் என்று நினைத்து இவரை அடிக்கத் தன் கம்பை ஓங்கினான். ஆனால் அசையக் கூட முடியாமல் அப்படியே சிலையாக நின்றான். காலை வரை இந்த நிலை நீடித்தது. தனது தியானத்தை முடித்த சதாசிவர் அந்த விவசாயியைப் பார்த்து சிரித்தார். அவன் உடனே தன் சுயநிலைக்கு வந்தான். இவரைப் பெரிய மகான் என்று உணர்ந்த அவன் இவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.

தியானத்தில் தன்னை மறந்த நிலையில் இருப்பது இவர் வழக்கம். ஒரு முறை காவேரியில் அப்படி ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். வாரங்கள் சில கழிந்தன. கிராமத்தார் மண் குவியலைத் தோண்டிய போது இவர் அதிலிருந்து வெளிப்பட்டார். தன் நிலை உணர்ந்து நடக்கலானார்.

புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்தவர் மஹாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் (1730-1768). அவர் சதாசிவ பிரும்மத்தின் பெருமையைக் கேள்விப்பட்டு அவரை தனது அரண்மனைக்கு அழைத்து வருவதற்காக அவரிடம் சென்றார். மௌனத்தில் இருந்த சதாசிவர் தன் மௌனத்தைக் கலைக்கவில்லை. திருவரங்குளத்தில் முகாமிட்ட மன்னர் சதாசிவரை வணங்கி வந்தார். சதாசிவ ப்ரஹ்மேந்திரர் அவரை அழைத்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை மண்ணில் எழுதித் தந்தார். இது நடந்த வருடம் 1738ஆம் ஆண்டு.
அது மட்டுமின்றி பிக்ஷாண்டார் கோவிலைச் சேர்ந்த கோபால கிருஷ்ண சாஸ்திரி என்பவரை மந்திரியாக நியமித்துக் கொள்ளுமாறும் கூறினார்.
சதாசிவர் மந்திரம் எழுதிய மண்ணை தன் அங்கவஸ்திரத்தில் ஏந்திய மன்னர் அந்த மந்திர மண்ணைத் தன் பூஜையறையில் வைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சிவஞானபுரம் என்னும் ஊராகும். இன்று வரை இது புதுக்கோட்டை அரண்மனையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி கோவிலில் தொழப்பட்டு வருகிறது.

1732ஆம் ஆண்டு அவர் புதுக்கோட்டையைச் சுற்றி இருந்த காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது சில வீரர்கள் அவரைக் கண்டு அவரிடம் விறகுகளைச் சுமந்து வருமாறு கட்டளை இட்டனர். அவரும் சந்தோஷமாக விறகைச் சுமந்து சென்றார். அதை சமையலறையில் கொண்டு வைத்தவுடன் அவை எரிந்து விட்டன. இதைப் பார்த்துத் திகைத்துப் போன வீரர்கள் அவர் யார் என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டனர்.

ஊமையாக இருந்த ஒருவன் அவர் பால் அதீத பக்தி கொண்டான். ஒருநாள் அவன் தலைமேல் கைவைத்து சதாசிவர் ஆசீர்வதித்தார். அவ்வளவு தான், உடனே அவன் பேசத் தொடங்கினான். அவர் தான் பின்னால் மிகவும் பிரசித்தி பெற்ற அக்ஷபுராண ராமலிங்க சாஸ்திரி ஆவார். இந்த சம்பவம் ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவத்தில் 22 மற்றும் 26வது செய்யுள்களில் கூறப்பட்டிருக்கிறது.

திருகோகர்ணம் சிவன்கோவிலில் ப்ரஹதாம்பாள் சந்நிதிக்கு அருகே அவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது வழக்கம். அவர் தியானம் செய்த இடத்தை இன்றும் அனைவரும் தரிசிக்கின்றனர்.

ஒரு சமயம் கோவில் கர்பக்ருஹத்திற்கு வெளியில் நின்று கொண்டு சிவ நாமாவளி அர்ச்சனையைச் சொல்லிக் கொண்டிருக்க ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு புஷ்பம் மூல ஸ்தானத்தில் உதிர்ந்ததாம்.

நிர்வாணமாக அவர் தன்னை மறந்து அலைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் நவாபின் அந்தப்புரத்தில் செல்லலானார். இதனால் அதிர்ச்சியுற்ற நவாப் அவரைப் பிடிக்குமாறு கட்டளை இட்டான். வீரர்கள் அவரது இரு கைகளையும் வெட்டினர். ஆனால் எதுவுமே நிகழாதது போல அவர் சென்று கொண்டிருந்தார். இதனால் பிரமித்துப் போன முஸ்லீம் நவாப் வெட்டுப்பட்ட கைகளை எடுத்துக் கொண்டு அவர் முன்னால் சென்று மன்னிப்புக் கேட்டான். அந்தக் கைகள் முன் போல இருந்த இடத்தில் ஒட்டிக் கொண்டன. பேசாமல் தன் வழியில் சென்றார் சதாசிவர்.

தொடரும்

Old Articles in the Blog on Nerur

Nerur | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › nerur· Translate this page30 Apr 2019 — We went there around 11 am, right at the Puja time. Even the priest who did the Puja told us many people come at wrong time and see the Samadhi …You’ve visited this page 2 times. Last visit: 01/12/21

சதாசிவ பிரம்மேந்திராள் | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › ச…· Translate this page1 May 2019 — WRITTEN by London swaminathan. swami_48@yahoo.com. Date: 1 May 2019. British Summer Time uploaded in London – 6-59 am. Post No. 6329.

–subham—

tags- நெரூர் , சதாசிவ , பிரம்மேந்திராள்

நெரூர் மஹான் சதாசிவ பிரம்மேந்திராள் செய்த அற்புதங்கள்! (Post No.6329)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London –  6-59 am

Post No. 6329

Pictures shown here are taken by london swaminathan

 This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நெரூருக்குச் சென்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. அது மார்ச் 27ம் தேதி (2019) நிறைவேறியது.

1957ல் வெளியான ஜகத்குரு திவ்ய சரித்திரம் புத்தகத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் நடத்திய அற்புதங்களைப் படித்ததும், மாதம் தோறும் லண்டனில் நடக்கும் பஜனையில் சதாசிவரின் அற்புதமான பாடல்களைக் கேட்பதும் இதற்குக் காரணமாகும்.

நெருர் என்னும் கிராமம் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன் கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ சமாதி. அதாவது சமாதியின் கீழ் அவர் இன்னும் அப்படியே இருந்து அருள் புரிகிறார் என்பது பொருள்; ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே உடல் சமாதியில் இறக்கப்பட்டு மேலே அதிஷ்டானம் எழுப்பப்படும்.

அங்கே நாங்கள் காலை 11 மணி வாக்கில் சென்றதால் பூஜையையும் காண முடிந்தது. எனது சகோதரர் பேராசிரியர் சூரிய நாராயணன் உள்பட சுமார் 25 பேர் இருந்தோம். சமாதியை அடுத்த சிவன் கோவிலும் சிறியதுதான். இறுதியில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம்.

அங்குள்ள சிறிய கடையில் புஸ்தகங்கள், பாடல் தகடுகள் (CDs), படங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. இது வரை சதாசிவரின் அற்புதங்களை அறியாதோர் அறிய அவை உதவும்.

சதாசிவ பிரம்மேந்திரரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் மிகவும் சிறியவை. பல கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள் (பரம)ஹம்ஸ என்ற முத்திரையுடன் முடியும்.

சதாசிவ பிரம்மேந்திராள்

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இணைப்பையும் காஞ்சி பரமாசார்யாளின் விஜய இணைப்பையும் கீழே காண்க.

நீங்களும் அவருடைய பாடல்களைக் கச்சேரியிலோ பஜனைகளிலோ கேட்டிருப்பீர்கள்: இதோ சில முதல் வரிகள்:

பஜரே கோபாலம், மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

இன்னும் பல. இவைகள் அடங்கிய புஸ்தகங்கள் அதிஷ்டானத்தில் கிடைக்கும்

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

  1.  

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

–subham–

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …



https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…

3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …

6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…

1.      

 ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.

subham