மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்! (Post No.3020)

constituition

Article Written S NAGARAJAN

Date: 30 July 2016

Post No. 3020

Time uploaded in London :– 9-18 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

85 சதவிகிதம் ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா தன் பாரம்பரியத்தை அரசியல் சாஸனத்தில் ஏன் பிரதிபலிக்க வைக்கவில்லை என்பது புரியாத புதிர்!

 

எல்லா தேச அரசியல் சாஸனங்களையும் எடுத்துப் படித்துப் பார்த்தால் நமக்கு வியப்பு மேலிடும்.

 

அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் தங்கள் நம்பிக்கையையும் தெள்ளத் தெளிவாக அரசியல் சட்டத்தில்  முன்னுரையிலேயே (Preamble) புலப்படுத்தி விடுகிறார்கள்.

மூன்று நாடுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

 sl constitution.jpg

ஸ்ரீ லங்காவின் அரசியல் சட்ட முன்னுரை (Sri Lanka Preamble SLP) ஸ்வஸ்தி என்று ஆரம்பிக்கிறது. (நமது சோழர் கால கல்வெட்டுக்கள் உட்பட ஸ்வஸ்தி என்றா மங்களகர்மான சம்ஸ்கிருத வார்த்தையிலேயே ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூரலாம்)

 

தங்களது வீரம் கொண்ட போராட்டங்களை அது சொல்கிறது. பாரம்பரியப் பண்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்கிறது. புத்தமதத்தையும் புத்த சாஸனைத்தையும் 9ம்பிரிவில் கூறுகிறது. இப்படி புத்தமதத்தை அது ஏற்றுக் கொண்டதால் பெருமை அல்லவோ பெறுகிறது!

வாழ்க ஸ்ரீலங்கா!

 

அடுத்து அயர்லாந்து ஏசு கிறிஸ்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறது. தங்களது மூதாதையரின் தியாகங்களை அது நன்றியுடன் நினைவு கூர்கிறது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லிக் கொள்வதில் அது பெருமை கொள்கிறது!

வாழ்க அயர்லாந்து!

 

அடுத்தது நாம் வியக்கும் நேபாளம். ஹிந்து நாடு என்பதில் பெருமை கொள்ளும் ஒரே நாடு அது தான். உலகின் ஒரே ஹிந்து நாடு அது தான்!

 

அங்கு 2007இல் ஏற்பட்ட அரசியல் சட்டம் அதை செகுலர் நாடு என்று சொல்ல வைத்தாலும் அதனுடைய தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதன் தேசீய மிருகம் பசு! புனிதமான பசுவின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ!

 

ஹிந்து மதம் எதையெல்லாம் புனிதமாகக் கருதுகிறதோ அதையெல்லாம் நேபாளம் புனிதமாகக் கருதி அறிவிக்கிறது – அதிகார பூர்வமாக!

 

வாழ்க நேபாளம்!

 nepal-constitution

ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, அனைத்து நல்லனவற்றையும் தாயகமாகக் கொண்ட இந்தியா …  ??

 

ஹிந்து என்று சொல்லிக் கொள்ளத் தயங்கி விட்டது.

ஒரு ஹிந்து நாடு என்று சொல்லிக் கொண்டாலேயே மற்ற மதங்களை அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையாகி விடும்.

ஒரு ஹிந்து செகுலரை விட அதிகம் செகுலர் இல்லையா?

 

(More secular than the so called secular in real sense, is it not?)

 

மத வழிபாட்டில் சுதந்திரம் தரும் ஒரே மதம் ஹிந்து  மதம் தான், இல்லையா!

 

சிந்திக்க வேண்டும்!

**********

நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி

Pasupathinath Temple at Kathmandu, Nepal

எழுதியவர்: ச.நாகராஜன் 

 

வானவியல், கணித, ஜோதிட மேதை

 

ஸ்ரீபதி புதிய பாதையை ஜோதிடர்களுக்குக் காண்பித்த மகா மேதை! இவர் வாழ்ந்த காலம் கி.பி.1019 முதல் 1066 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீபதியின் தந்தையார் பெயர் நாகதேவர். நாகதேவரின் தந்தையாரான கேசவரும் ஒரு ஜோதிட மேதை தான். பிரபல ஜோதிட மேதையான லல்லரின் ஜோதிட நூல்களைக் கற்றுத் தேர்ந்த  ஸ்ரீபதி பெரும் வானவியல் நிபுணராகவும் கணித மேதையாகவும் ஜோதிடத்தில் புது நெறி காட்டும் புரவலராகவும் திகழ்ந்தார். கோளங்களைப் பற்றிய இவரது ஆராய்ச்சி குறிப்பிடத் தகுந்தது.

 

 

நேபாளத்தை சேர்ந்தவர்

துருவ மானஸம் (1056ல் எழுதியது) என்னும் நூலில் இவர் தன்னைப் பற்றிக் கூறுகையில்,”நேபாளத்தைச் சேர்ந்த கபிலவாஸ்துவில் ரோஹிணி நதி பாயும் ஊர் எங்களது ஊர்” எனக் குறிப்பிடுகிறார்.இந்த நூல் 105 செய்யுள்களைக் கொண்டது. இதில் கிரகங்களிருக்கும் நிலைகள், செல்லும் பாதை, கிரகணங்கள் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன.நாளுக்கு நாள் இவர் புகழ் பாரதமெங்கு பரவியது. மூன்று ஸ்கந்தங்களிலும் வல்லவரான இவர் பல அரிய நூல்களை இயற்றினார். ஆகவே இவரை மரியாதையாக அனைவரும் ஸ்ரீபதி பட்டர் என அழைக்கலாயினர்.

Another View of the Paupathinath Temple

ஸ்ரீபதி பத்ததி

ஜோதிடர்களுக்கு சவாலான ஒரு விஷயம் பாவம் மற்றும் ராசி சந்திகளில் இருக்கும் கிரகங்களின் பலத்தை நிர்ணயிப்பது தான். பராசரர் வழியிலிருந்து மாறி இவர் புது பத்ததியை உருவாக்கினார். இதன் படி பத்தாம் இடத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி அதையொட்டி பல புதிய பாதைகளை சுட்டிக் காட்டினார். இந்த பத்ததி (வழிமுறை) கற்பதற்கு மிகவும் கடினமானது. என்றாலும் கூட  மிகவும் பிரபலமானது.ஜாதக பத்ததி அல்லது ஸ்ரீபதிபத்ததி என்ற பெயரால் இது சிறப்புற அழைக்கப்பெற்று ஜோதிடர்களின் மனம் கவர்ந்த நூலாக இன்று விளங்குகிறது.

 

 

ஸ்ரீபதியின் இதர நூல்கள்

வராஹமிஹிரரின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. அவரை வியந்து போற்றி அவர் பாதையில் தான் ஒரு வழி நூலையும் இயற்றினார். இவரது சித்தாந்தசேகரம் என்ற அரிய வானவியல் நூல் 19 அத்தியாயங்களைக் கொண்டது. 125 செய்யுள்களைக் கொண்ட இவரது கணிததிலகா பூர்த்தியாகாத ஒரு நூல்.ஜோதிட மேதை ஸ்ரீதரரின் நூலை ஒட்டி அவர் இதை எழுதத் தொடங்கினார்.இதன் 14ம் அத்தியாயத்தில் அல்ஜீப்ராவின் பல்வேறு சமன்பாடுகளையும் சூத்திரங்களையும் அவர் அன்றே விளக்கி இருப்பதைக் காணும் மேலை நாட்டார் இன்று வியந்து அவரைப் போற்றுகின்றனர்.திக்கோதிதகரணம் (1039ல் எழுதியது) சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றி 20 செய்யுள்களில் விளக்குகிறது.20அத்தியாயங்கள் கொண்ட ஜ்யோதிஷ ரத்னமாலா லல்லரின் ஜ்யோதிஷரத்னகோசத்தைத் தழுவி இவரால் எழுதப்பட்டது. இந்த நூலுக்கு மராத்தியமொழியில் இவர் ஒரு விளக்க உரையையும் எழுதினார். மராத்திய மொழியின் புராதன நூலாக இது இலங்குகிறது.ரத்னமாலையில் இவர் மக்களைப் பரிவுடன் அழைக்கும் பாங்கு வியந்து போற்றுதற்கு உரியது.

 

 

மறைந்த நூல்கள் பல    

ஸ்ரீபதி எழுதிய பல நூல்கள் மறைந்து விட்டன. பீஜ கணிதம் போன்ற இவரது சிறந்த நூல்கள் இன்று காணக் கிடைக்கவில்லை.(என்றாலும் கூட கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்த கிருஷ்ணமிசிரர் என்னும் அந்தணர் இவரது அரிய நூலான சித்தாந்த சேகர விவரணத்தை வியாக்யானத்தோடு முதல் 4 அத்தியாயம் 75 சுலோகங்கள் வரை அச்சிட்டுள்ளார்.)

 

ஜோதிடத்தில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு பத்ததியை உருவாக்கி புது வழி காட்டியவர் ஸ்ரீபதி என்பதால் இவரது நூல்களை ஜோதிட ஆர்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேடிக் கற்று வருகின்றனர்.

******************

மஹா சிவராத்ரி மகிமை

 

மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் 13 அல்லது 14 ஆம் இரவில் சிவராத்ரி அனுஷ்டிக்கப்படுகிறது. சிலர் இதை பங்குனி மாதம் என்றும் கணக்கிடுவர்.

விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி எப்படி முக்கியமோ அப்படி சிவ பக்தர்களுக்கு சிவராத்திரி மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி கிடந்து உபவாசம் அனுசரித்து மறுநாள்தான் சாப்பிடுவர். உலகு எங்கிலும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுதும் பூஜை பாராயணம், அபிஷேகம் ஆகியன நடைபெறும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் அன்று சிவனைத் தரிசிக்க லட்சக் கணக்கான மக்கள் கூடுவர்.

பசுபதி நாதர் கோவில் கொண்டுள்ள நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இது பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உண்மையில் சிவராத்ரி நேபாள நாட்டின் தேசியத் திருவிழாவாகும். அன்று சிவனை அந்த நாட்டின் ராஜாவாக கருதி ராஜ மரியாதைகள் செய்வர். காசி எனப்படும் வாரணாசியிலோ மக்கள் கூடம் அலை மோதும்.

சிவராத்திரி தோன்றிய கதை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. ஒருவன் அறிந்தோ அறியாமலோ சிவலிங்கத்துக்குப் பூஜை செய்தாலும் அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதே அந்த செய்தி. சிவ ராத்திரி கதை மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது கூறப்படுகிறது.

சித்ரபானு என்ற மன்னன் உபவாசம் இருந்தபோது அஷ்டவக்ரர் அங்கே வருகிறார். மன்னன் உபவாசம் இருப்பதன் காரணத்தை வினவியபோது அம் மன்னன் தனக்கு பூர்வ ஜன்மத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாகக் கூறுகிறான். முன் ஜன்மத்தில் தான் ஒரு வேடன் என்றும் காட்டில் வேட்டையாடிய போது நேரம் ஆகிவிட்டதால் இரவுப் பொழுதை ஒரு மரத்தின் மீது கழித்ததாகவும் அதன் கீழே வந்து தங்கிய மானைக் கொன்று வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இலையாகப் பறித்து மானுக்குப் போட்டதாகவும் கூறுகிறான்.

காலையில் மானுடன் வீட்டுக்குச் சென்றபோது யாரோ ஒருவர் உணவு கேட்டு வந்ததால் அதைக் கொடுத்துவிட்டதாகவும் சிறிது காலத்துக்குப் பின் இறந்துவிட்டபோது சிவ தூதர்கள் இருவர் வந்து ராஜ உபசாரம் செய்து அழைத்துக் கொண்டு போனபோதுதான் முழு விஷயமும் தெரிய வந்ததாகவும் மன்னன் கூறுகிறான். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட மரம் சிவனுக்கு மிகவும் உகந்த வில்வ மரம் என்றும் மானுக்குப் போட்ட வில்வ இலைகள் அருகில் இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்ததால் எல்லா புண்யமும் வந்து சேர்ந்ததாகவும் மன்னன் கூறுகிறான்.

இந்தக் கதை நமக்குப் புகட்டுவது என்ன?

  1. சிவனுக்குப் பூஜை செய்கிறோம் என்று தெரியாமல் வில்வத்தைப் போட்டாலும் கூட முழு புண்ணியமும் கிட்டும்..
  2. வேடனாக இருந்து செய்த பாபங்கள் கூட மன்னிக்கப் படும்.
  3. அறியாமல் செய்த புஜையானாலும் அடுத்த ஜன்மத்தில் மன்னர் பதவி கிட்டும்

இந்தப் புனித நன்னாளில் நாம் என்ன செய்யலாம்?

பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவன் கோவில்களில் இரவில் நான்கு ஜாமங்களிலும் பூஜை அபிஷேகம் நடக்கும். அதை தரிசிக்கலாம். பூ,தேங்காய் பழம் கொண்டுபோய்க் கொடுக்கலாம்.

மறு நாள் அலுவலகம் இல்லாவிட்டால் இரவு முழுதும் விழித்திருந்து ருத்ர பாராயணம் செய்யலாம். அது முடியாதவர்கள் ஓம் திரயம்பகம் எனத் துவங்கும் ம்ருஞ்ஜய மந்திரத்தை இயன்றவரை ஜபிக்கலாம். அதுவும் முடியாதவர்கள் மஹா மந்திரமான ஒம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஜெபிக்கலாம்.

பட்டினி கிடக்க முடிந்தவர்கள் ஒரு நேரமாவது சிவனை நினைந்து உபவாசம் இருக்கலாம்.

வட இந்திய காய்கறிக் கடைகளில் (குறிப்பாக லண்டனில் வெம்பிளியில்) இலவசமாக வில்வ பத்திரம் கிடைக்கும். அதை சிவன் மீது அர்ச்சிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், நாள் முழுதும் “சிவனே” என்று கிடந்தால் போதும். 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் நம சிவாய.

*****************************