நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ஆல்பர்ட் காமு (Post.9975)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9975

Date uploaded in London – 14 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸைச் சேர்ந்த ஆல்பர்ட் காமு ALBERT CAMUS . அவருக்கு 1957-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது .

வட ஆப்ரிக்காவிலுள்ள அல்ஜீரியா நாட்டில் ஒரு ஏழைத் தொழிலாளர் குடும்பத்தில் 1913-ல் காமு  CAMUS  பிறந்தார்.அக்காலத்தில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அல்ஜீரியா இருந்தது. இதுவே அவருடைய கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.

காமூவின் தந்தை முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார்.அதற்குப் பின்னர் அவரை தாயார் வளர்த்தார். அப்போது அவர்கள் அல்ஜீரிய தலைநகரான அல்ஜீயர்ஸில் வசித்தனர். அவர் க்ஷயரோகம் என்னும் காசநோய் கண்டும் கூட, அல்ஜீயர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கற்று, அதில் பட்டம் பெற்றார் .

1942ல் பிரான்சுக்குச் சென்று நாஜி ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் காமு சேர்ந்தார். பிரெஞ்சுப் படையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் கலந்துகொண்டார்.பின்னர் பத்திரிகையாளராகி நாவலும் எழுதத் துவங்கினார்.

29 வயதில் STRANGER ஸ்ட்ரேஞ்சர்/ அந்நியன்/வெளியாள்   என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.மனித வாழ்வின் பொருளற்ற , அவலம் நிறைந்த வாழ்வு பற்றிய கதை அது.

1934 ல் அவர் PLAGUE பிளேக்/ கொள்ளைநோய் என்னும் கதையைப் பதிப்பித்தார். அநீதிகளை எதிர்த்துப் போராடும்படி மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் கதை  அது.

ஷான் பால் சாத்ர JEAN PAUL SATRE போன்ற இடதுசாரி எழுத்தாளர்களைப் போல அவர் புரட்சி செய்யச் சொல்லவில்லை. தார்மீகப் புரட்சி வேண்டும் என்று வாதாடினார். அரசியல் புரட்சியைவிட இது முக்கியமானது என்றார் . புரட்சிக்காரன் என்ற நாவலில் மக்கள் அவர்கள் செய்யும் செயல்களுக்கன தார்மீகப் பொறுப்பை ஈக்கவேண்டும் என்று சொன்னார்.

43 வயதில் அவர் கடைசி நாவலான தி ஃ பால் / வீழ்ச்சி என்ற நாவலை எழுதினார். முயற்சி செய்து, நடத்தை மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். தனி மனித முயற்சியின்போதும், சமுதாயத்தின் ஒரு அங்கம் என்ற நினைவு வேண்டும் என்கிறார்.

அவர் நாடகங்களை எழுதியபோதும் அவைகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆல்பர்ட் காமு ஒரு விபத்தில் சிக்கி இறந்தார்.

பிறந்த தேதி – நவம்பர் 7, 1913

இறந்த தேதி – ஜனவரி 4, 1960

வாழ்ந்த ஆண்டுகள் – 46

அவர் எழுதிய நூல்கள்,

1938- CALIGULA

1942- THE STRANGER

1942- THE MYTH OF SISYPHUS

1944 – CROSS PURPOSE

1947 – THE PLAGUE

1948- STATE OF SIEGE

1951- THE REBEL

1956- THE FALL

1958- EXILE AND THE KINGDOM

–SUBHAM–

tags- நோபல் பரிசு, பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ,ஆல்பர்ட் காமு, Albert Camus

உபநிஷத் மொழிபெயர்த்த, நோபல் பரிசு வென்ற, கவிஞர் W B.யேட்ஸ் (Post.9955)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9955

Date uploaded in London – 9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS  ஆவார்.

புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தி ல்  மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டனர். ஆங்கிலப்புலவர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் வரிசையில் முதல் வரிசையில் நிற்பவர் யேட்ஸ் . அயர்லாந்தில் பிறந்து அயர்லாந்தில் வாழ்ந்து அயர்லாந்தின் பழமைக் காவியங்களைத் தொகுத்து அவற்றைப் போற்றியதால் ஐரிஷ் மக்களின் பெருமதிப்பையும் பெற்றார்.

டபிள்யூ .பி. யேட்ஸ் அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் DUBLIN, IRELAND பிறந்தார். அவர் இருபதாம் நூற்றாண்டின்  இணையற்ற ஆங்கில மொழி எழுத்தாளர் . தன்னுடைய காலத்தில் வாழும் மிகப்பெரிய கவிஞர் GREATEST POET  என்று T.S.. எலியட்டால் பாராட்டப்பட்டவர் . 1923-ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது லண்டனிலும் அயர்லாந்திலும் மாறி, மாறி வாழ்ந்தாலும் அயர்லாந்தையே தாய்வீடாகக் கொண்டவர்.லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்து மதம் , புத்த மதம் முதலிய ஆசிய சமயங்களில் ASIAN RELIGIONS  வேட்கை பிறந்தது. மனிதனுக்கு அப்பாற்பட்ட அதீத ஆற்றலில் SUPER NATURAL POWERS நம்பிக்கை ஏற்பட்டது . அயர்லாந்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்ததால் அயர்லாந்தின் நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கைகளையும் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.

24 வயதிலேயே இந்த நூல்கள் அச்சாகின. அவருடைய கவிதைகளில் பழங்காலம் பற்றிய ஏக்கம் இருக்கும். நாம் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துவிட்டு சோழர் காலத்தில்  வாழ மாட்டோமா என்று ஏங்குவது போல.

1936ம் ஆண்டில் புரோஹித் சுவாமி என்ற இந்தியருடன் மத்திய தரைக்கடல் பிரதேசம் மற்றும் மயோர்கா MAJORCA தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போதுதான் இந்து மத உபநிஷத்துகளில் மிகவும் முக்கியமான பத்து உபநிடதங்களை TEN PRINCIPLE UPANISHADS இருவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் .

1889-ல் மாட் கான் MAUD GONE  என்ற ஐரிஷ் நடிகையைக் கண்டு, காதல் கொண்டு, அவரைக் கல்யாணம் செய்துகொண்டார். மாட் கான்  அயர்லாந்தில் ஆங்கில ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப் போராடியர். இவரும் மனைவிக்கு ஆதரவாக  அயர்லாந்து அரசியலில் குதித்தார். இதன் தாக்கத்தை இவருடைய கவிதைகளில் காணலாம் .

எழுத்தின் ஆற்றலை, பேனா  முனையின் வலிமையை, ணர்ந்த அவர் தனது கவிதைகளையும், நாடகங்களையும் அயர்லாந்து ஓன்றுபட பயன்படுத்தினார். ஐரிஷ் புராணக் கதைகளையும் வாய் மொழி இலக்கியத்தையும் தொகுத்து இரண்டு நூல்களாக வெளியிட்டார். 1896-ல் அயர்லாந்துக்குத் திரும்பிய அவர் லேடி கிரிகரி LADY GREGORY என்ற பெண்மணியை , பணக்கார பிரபு வம்ச பெண்ணைச் சந்தித்தார். அவருக்கும் இவரைப் போலவே பழமையில் ஆர்வ இருந்ததால் 1904-ம் ஆண்டில் ABBEY THEATRE GROUP  அப்பி தியேட்டர் குரூப்பை நிறுவினார். இது மிகவும் பிரபலம் அடைந்தது . மக்களைக்  கவரும் நாடகங்களை இருவரும் மேடை ஏற்றினர்

எ விஷன் A VISION – ‘நான் காணும் காட்சி’ என்ற நூலில் இவர் தனது நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் வெளியிட்டார். வயது ஆக ஆக அவர் நம்பிக்கை ஆல் போல் தழைத்தது; அருகு போல வேரூன்றியது. இவருடைய நான்கு நாடகங்களையும் பல கவிதைகளையும் படிக்காத ஆங்கில இலக்கிய ரசிகர்கள் இல்லை.

Maud Gone

பிறந்த தேதி – ஜூன் 13, 1865

இறந்த தேதி – ஜனவரி 28, 1939

வாழ்ந்த ஆண்டுகள் – 73

எழுதிய நூல்கள் –

1889- THE WANDERINGS OF OISIN AND OTHER POEMS

1893- THE CELTIC TWILIGHT

1894 – THE LAND OF HEART’S DESIRE

1897 – THE SECRET ROSE

1902 – CATHLEEN NI HOULIBAN

1925 – A VISION

1928- THE TOWER

1933- THE WINDING STAIR

1936- 39 THE LAST POEMS AND PLAYS

–SUBHAM–

tags- உபநிஷத், மொழிபெயர்த்த, நோபல் பரிசு , கவிஞர் W B.யேட்ஸ் , W B YEATS

இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில சிறுவர் கதை ஆசிரியர் (Post.9844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9844

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜங்கிள் புக் JUNGLE BOOK  என்ற கதையையும் அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கையும் RUDYARD KIPLING அறியாதோர் வெகு சிலரே. அவர் பம்பாயில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தார். ஐந்து வயதுக்குப் பின்னர் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியாவில் பல பதவிப் பொறுப்புகளில் இருந்தார்.

பிறந்த தேதி – டிசம்பர் 30, 1865

இறந்ததேதி – ஜனவரி 18, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 70

1907ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதிலிருந்தே அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர், இந்திய சுதந்திர எதிர்ப்பாளர் என்பது விளங்கும் . அதுமட்டுமல்ல கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் இந்தக் கருத்துக்களும் இனவேற்றுமையும் காணப்படும். ஆயினும் கதை சொல்லுவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்  காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தம்பதிகளுக்குப் பிறந்தார் என்பதால் இதில் வியப்புமில்லை. இந்தியா  பற்றி எழுதிய கதை, கவிதைகளில் தான் நேசித்த விஷயங்களையும் சொல்கிறார். 17 வயது வரை இங்கிலாந்தில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைக் துவக்கி தனது கதைகளையும், கவிதைகளையும் வெளியிடத் துவங்கியவுடன் புகழ் பரவியது. 29ஆவது வயதில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் ஜங்கிள் புக் JUNGLE BOOK என்னும் காட்டு மிருகங்கள் பற்றிய கதை எழுதினார். இது அவரது மகளுக்குச் சொல்லிய கதையின் அடிப்படையில் அமைந்தது.  காட்டு விலங்குகளிடையேயே வாழ்ந்த ஒரு சிறுவன் பற்றிய கதை இது . 1899ல் அவரது மகள் இறந்தவுடன் குடும்பம் இங்கிலாந்துக்கே திரும்பிவந்தது.

இந்தியாவில் நடக்கும் துணிகர, சாகசச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு கிம் KIM  என்ற நாவல் எழுதினார். இது நேருஜிக்கு மிகவும் பிடித்த  நாவல். ‘இப்போது’ மிருகங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதை 37 வயதில் நகைச் சுவையுடன் எழுதினார்.

வன விலங்குகள் பற்றி இவர் எழுதியதையே சிறியோரும் பெரியோரும் விரும்பிப் படித்தனர். ஆங்கிலேயர்கள் தொலைதூரப் பிரதேசங்களில் செய்த சாகசங்களை எழுதியதால் ஆங்கிலேயரும் விரும்பிப் படித்தனர். முதல் உலகப் போரில் கிப்ளிங்கின் 18 வயது மகன் இறந்தான். இதற்குப் பின்னர் அவர் எழுதியவற்றில் இந்த சோகம், துயரத்தின் தாக்கத்தை காணலாம்.

-சுபம்–

Publications

1888 – SOLDIERS THREE

1888 – BAA, BAA, BLACK SHEEP

1890 – WEE WILLIE WINKIE

1892- BARRACK ROOM BALLADS

1894- THE JUNGLE BOOK

1899- STALKY AND CO

1901- KIM

1902 – JUST SO STORIES

1906- PUCK OF POOK’S HILL

–SUBHAM—

tags- நோபல் பரிசு, ரட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக்  , ஆங்கில,  சிறுவர் கதை ஆசிரியர், Rudyard Kipling

நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் (Post No.7195)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 9  NOVEMBER 2019

Time  in London – 6-08 am

Post No. 7195

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பாக்யா 1-11-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 435

நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் விநாயக் பானர்ஜி!

ச.நாகராஜன்

இந்த ஆண்டில் (2019) அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்துள்ளன என்றால் அது மிகையல்ல.

இந்தியாவில் மும்பையில் பிறந்து கல்கத்தாவில் வளர்ந்து டெல்லியில் படித்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் விநாயக் பானர்ஜி பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைத் தன் மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் சக ஆய்வாளர் மைக்கேல் கிரெமர் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.

இந்தியாவின் பெருமிதத்திற்கான தருணம் இது.

ரபீந்திரநாத் தாகூர், சர் சி.வி.ராமன், ஹர் கோபிந்த் கொரானா, மதர் தெரஸா, எஸ். சந்திரசேகர், அமார்த்ய சென், வி.ராமகிருஷ்ணன், கைலாஷ் சத்யார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து ஒன்பதாவதாக இந்தப் பரிசை வென்றுள்ள இந்தியர் என்ற பெருமையைப் பெறுகிறார் அபிஜித்! (பிறப்பு : 1961 பிப்ரவரி 21- வயது 58)

அவர் பரிசு பெற்றதற்கான காரணம் இன்னும் அதிக பெருமையைத் தரும். உலகளாவிய விதத்தில் வறுமையைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய சோதனை பூர்வமான ஆய்வுக்காகவே அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பாக்யாவின் வாழ்த்துக்களை உளங்கனிய நோபல் பரிசை வென்ற அபிஜித் அவர்களுக்கு வழங்குகிறோம்.

அடுத்து, மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை வைத்துள்ளோர் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் லிதியம்-அயான் பேட்டரிகளைக் கண்டுபிடித்துள்ள மூன்று விஞ்ஞானிகளுக்கு இரசாயனத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பேராசிரியரான ஜான் குட்எனஃப் (John Goodenough)-க்கு வயது 97. நோபல் பரிசைப் பெற்றவர்களிலேயே மிக அதிக வயதுடையைவர் இவர் தான் என்ற சாதனையும் இவரைச் சேர்கிறது. நோபல் பரிசு பெற வயது ஒரு தடை இல்லை என்பதை இந்தப் பரிசு நிரூபிக்கிறது!

இவருடன் இந்தப் பரிசைப் பகிர்பவர்கள் ஸ்டான்லி விவ்விங்ஹாம் (வயது 77) என்ற பிரிட்டிஷ்-அமெரிக்க பேராசிரியரும், அகிரா யோஷினோ (வயது 71) என்ற ஜப்பானியப் பேராசிரியரும் ஆவர்.

படிம எரிபொருள் பயன்பாட்டை நீக்கி மறுசுழற்சிக்குள்ளாக்கும் ஆற்றலைக் கண்டுபிடித்ததே இவர்களின் சிறப்பு. நீடித்துழைக்கும் பேட்டரியினால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகிறது என்பதோடு எதிர்காலத்தில் இன்னும் அதிக ஆற்றலைச் சேமிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு இது அடித்தளமாக அமையும்.

அடுத்து இயற்பியலில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை புரிய வைக்கும் முயற்சிகளில் அரிய சேவை ஆற்றியதற்காகவும் பிரபஞ்சத்தில் பூமி எந்த இடத்தை வகிக்கிறது என்பதை அறிந்து கூறியதற்காகவும் மூவருக்கு அளிக்கப்படுகிறது.

பரிசில் பாதியை ஜேம்ஸ் பீபிள்ஸ் பெறுகிறார். மீதிப் பாதியை மிகேல் மேயரும் டிடியர் க்லாஸும் பெறுகின்றனர். சோலார் வகை நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு எக்ஸோ பிளானட் இருப்பதைக் கண்டு பிடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

(சூரிய மண்டலத்தில் அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றியே வருகின்றன. சூரிய மண்டலத்திற்கு அப்பால் இதர நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் எக்ஸோபிளானட் என்று குறிப்பிடப்படுகின்றன.)

 சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தை இவர்கள் சுட்டிக் காட்ட பால்வீதி மண்டலத்தில் சுமார் 4000 எக்ஸோபிளானட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகவே தான் இவர்களை நோபல் கமிட்டி பாராட்டி பரிசை அளித்துள்ளது.

அடுத்து சமாதானப் பரிசைப் பெறுபவர் எதியோப்பியாவின் பிரதம  மந்திரியான அபி அஹ்மத் அலி. எதியோப்பியாவுக்கும் அண்டை நாடான எரிட்ரியாவிற்கும் நடந்து வந்த மோசமான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இந்த சமாதானப் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் இவருக்கு வயது 43 தான்.

ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் எதியோப்பியா எரிட்ரியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆனால் எரிட்ரியா மக்கள் ஓட்டெடுப்பில் தனித்து இருப்பதை விரும்பவே அப்படியே இரு நாடுகளும் 1993இல் தனி நாடுகளாக ஆயின.  ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாட்மே என்ற எல்லை ஓர நகரின் உரிமை பற்றி கருத்து வேறுபாடு எழுந்தது. பெரும் வன்முறை எழுந்தது. 2000 முதல் 2002க்குள் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பன்னாட்டு எல்லை கமிஷன் பாட்மே நகரை எரிட்ரியாவிற்கு வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால் எதியோப்பியா அந்த நகரைத் தரவில்லை. ஆகவே ஒரு போர் சூழ்நிலை நிரந்தரமாக அங்கு உருவானது. எரிட்ரியாவை உலகினர் ‘ஆப்பிரிக்காவின் வடகொரியா’ என அழைக்க ஆரம்பித்தனர். எரிட்ரியாவில் நீடித்த எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. 18 வயது ஆனவுடன் தேசீய சேவைக்காக அனைத்து எரிட்ரியாவாசிகளும் அழைக்கப்பட்டனர். பெரும்பாலானோர் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் எதியோப்பியாவின் பிரதம மந்திரியாக அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்த அபி நூறு நாட்களுக்குள்ளாகவே பல்லாண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டார். முதலில் எதியோப்பியாவில் இருந்த எமர்ஜென்ஸியை ரத்து செய்தார். ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.

பன்னாட்டு எல்லை கமிஷன் கூறுவதை ஏற்பதாகவும் அவர் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை ஆரம்பமாயின.

அதிக உற்சாகத்துடன் இப்படி தீவிரமாக சமாதானத்திற்காகப் பாடுபட்ட, பாடுபட்டு வரும் அபியை ஊக்குவிக்கும் விதமாக இந்த சமாதானப் பரிசு தருவதாக நோபல் பரிசுக் கமிட்டி கூறி இருப்பதை உலகில் சமாதானத்தை நிலை நிறுத்த விரும்பும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

என்ற போதும் இந்த சின்ன வயதிலேயே இப்போது தான் பிரதம மந்திரியான ஒருவருக்கு சமாதான பரிசை அளிப்பது சரிதானா என்றும் சிலர் முணுமுணுக்கின்றனர். எரிட்ரியாவும் இந்த அளவிற்கு சமாதானத்தில் முனைப்பு காட்டவில்லையே என்பது தான அவர்களின் அங்கலாய்ப்பு.

ஆனால் போர் நிறுத்தப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டிருந்த ஊடகங்கள் தடை நீங்கிச் செயல்பட ஆரம்பித்து விட்டன.

நல்ல மாறுதலை உலகம் வரவேற்கும் இந்த நிலையில் அபி அஹ்மதுக்கு உலகமே வாழ்த்துத் தெரிவிக்கிறது – நாமும் தான்.

இன்னும் மருத்துவம் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசு பெற்ற அனைவருக்கும் நமது  வாழ்த்துக்கள்

அறிவியல் அறிஞர் வாழ்வில் :;

சோவியத் விண்வெளி வீரரான அலெக்ஸி லியனோவ் முதலில் விண்வெளியில் நடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். 1934ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி பிறந்த லியனோவ் தனது 85வது வயதில் அக்டோபர் 11ஆம் தேதி 2019இல் மரணமடைந்தார்.

1965ஆம் ஆண்டு துணிந்து விண்கலத்திலிருந்து வெளியே வந்து நடந்து அவர் சாதனை படைத்தார். மனிதனை சுமந்து சென்ற 17வது விண்கலத்தில் மார்ச் 1965இல் அவர் விண்வெளி ஏகினார். விண்கலத்திலிருந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே அவரது விண்வெளி உடை உப்ப ஆரம்பித்தது. அவரது சகாவான பவேல் பெலயாவாலாலும் உதவிக்கு வர முடியவில்லை. இப்படி உப்பிய நிலையில் அவரால் மீண்டும் விண்கலத்திற்குள் நுழையவே முடியாது. துணிந்து தன் விண்வெளி உடையின் அழுத்தத்தைக் குறைக்க அதிலிருந்து காற்றை வெளியேற்ற ஆரம்பித்தார். இதனால் விண்கலத்தை அடைவதற்குள் அவரது ரத்தத்தில் நைட்ரஜன் கொதிக்க ஆரம்பிக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஒரு வழியாக விண்கலத்திற்கு மீண்டார். 12 நிமிடம் 9 விநாடிகள் விண்கலத்திற்கு வெளியே இருந்து விண்வெளியில் மனிதன் இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார். பின்னர் மறுநாள் 19-3-1965 அன்று பூமி திரும்பினார். இதனால் சந்திரனில் மனிதன் இறங்க முடியும் என்பது நிரூபணமானது.

விண்கலத்திலிருந்து வெளியே வந்தவுடன் தன் பார்வையை பிரபஞ்சத்தை நோக்கிச் செலுத்திய லியனோவ், “ஆஹா பூமி உருண்டையாக இருக்கிறது. மேலே நட்சத்திரங்கள். கீழே நட்சத்திரங்கள். இடப்புறமும் வலப்புறமும் நட்சத்திரங்கள்! சூரியனின் ஒளி என் முகத்தில் அடிக்கிறது” எனக் கூவினார்.

1975இல் மீண்டும் விண்வெளி சென்ற லியனோவ் அங்கு அபல்லோ விண்கலத்தில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சந்தித்தார்.

மொத்தத்தில் 113 முறை அவர் பூமியின் சுற்றுப்பாதையில் வலம் வந்தார். 7 நாட்கள் 32 நிமிடங்கள் அவர் மொத்தமாக விண்வெளியில் இருந்திருக்கிறார்.

அவரை கௌரவிக்கும் வண்ணம் ஏராளமான விருதுகள் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

அவரது மறைவு குறித்து விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

****

மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே! (Post No.4378)

Written by London Swaminathan 

 

Date: 8 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-23

 

 

Post No. 4378

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

மனு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்; இத்து தவறு; அவர் ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர். அவர் சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறார். இது கி.மு 2000ல் இருந்த நதி. பின்னர் மறைந்து போனது. மேலும் ரிக் வேதமும் மனு தர்ம சாஸ்திரமும் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவுமே சொல்லவில்லை. இது போன்ற பல விஷயங்களை  வைத்து கணக்கிட்டால் அவர், 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று நான் கருதுகிறேன். மேலும் மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ள 2000-க்கும் அதிகமான  ஸ்லோகங்களைப் படித்தால் அவர் சொன்ன விஷயங்களுக்கு நேர் மாறாக பல விஷயங்கள் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது தெள்ளிதின் விளங்கும்.

 

கி.மு முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க வம்சத்தினர் தீவிர பிராமணர்கள். அவர்களுடைய காலத்தில் தீவிரவாத பிராமணர்கள் சில விஷயங்களை சூத்திரர்களுக்கு எதிராகச் சேர்த்து இருக்கலாம். இந்துக்களின் எல்லா நூல்களும் அவ்வப்போது Update அப்டேட் செய்யப்படும் — புதுப்பிக்கப்படும் — வழக்கம் உண்டு. இதனால் கடைசி விஷயத்தை மட்டும் வைத்துக் காலக் கணக்கீடு செய்வர் வெளிநாட்டினர். ஆகவே மனுவின் தற்போதைய காலம் தவறு. மேலும் அவர் எழுதிய சாத்திரம் த்ருஷத்வதி– சரஸ்வதி நதிகளுக்கு இடைப்பட்ட மக்களுக்கானதே தவிர எல்லோருக்குமானதல்ல (அவர் எழுதிய காலத்தில்).  நிற்க.

 

சொல்ல வந்த விஷயம் மனுவுக்கு ஏன் நோபல் பரிசு தரக்கூடாது? என்பதே. மனு பேசாத பொருளல்ல; இதை சட்ட நூல் என்பதைவிட இந்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்லலாம். 2000 க்கும் மேலான ஸ்லோகங்களில் அவர் சொல்லாத, தொடாத விஷயமே இல்லை.

 

 

இப்பொழுது தாவரவியல் விஷயங்களை மட்டும் காண்போம்:

நாங்கள் எல்லாம் B.Sc. Botany பி. எ ஸ்சி. பாடனி (தாவரவியல் படித்தபோது லின்னேயஸ் என்பவர் வகுத்த தாவரப் பகுப்பைப் (Linnaeus Classification of Plants) படித்தோம். எனக்கு 100 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் வேறு Theory ‘தியரி’ படித்திருப்பார்கள். விஞ்ஞானம் என்பது மாறிக்கொண்டே வரும். ஆக மனு சொன்னதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள  வேண்டியதல்ல. ஆனால் சில அடிப்படை விஷயங்கள் மாறாது.

காதலி மீது பூவை எறியாதீர்கள்!

ஜகதீஷ் சந்திர போஸின் முக்கிய பொன்மொழி: உங்கள் காதலி மீதுகூட ரோஜாப் பூவைப் போட்டு விளையாடாதீர்கள்; ஏனெனில் ரோஜாப் பூவுக்கு வலிக்கும்!

 

 

சர் ஜகதீஷ் போஸ் என்ற இந்திய  விஞ்ஞானிதான் தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை விஞ்ஞான முறையில் கருவிகளைக் கொண்டு நிரூபித்தார். உண்மையில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் அந்தக் காலத்தில் உள்ள இன வேற்று மையில் அவர் அமுங்கிப் போனார். ஆனால் அதற்கெல்லாம் முன்னதாகவே மனு இது பற்றிப் பேசியுள்ளார்.

 

மனு, தாவரவியல் பகுப்பு பற்றிப் பேசுகிறார்; செடி, கொடி, மரங்கள், பூவாது காய்க்கும்  மரங்கள் பற்றிச் சொல்கிறார்.

தர்ப்பைப் புல் பாய், ஆசனம், மதச் சடங்குகளில் அதன் பயன்பாடு பற்றிப் பகர்கிறார்.

தாவரங்களின் உணர்ச்சி பற்றி அவர் சொல்லுவதாவது:-

அவைகள், சுபாவத்தின்படி செயல்படுகின்றன. அவைகளுக்கு உணர்ச்சி இருக்கிறது. இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன

 

வேதங்களிலேயே மூலிகைகள் பற்றியும் அதிசயக் குளிகைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது மனு இவ்வளவு சொல்லுவதில் வியப்பில்லை. மேலும் உபநிஷத காலத்திலேயே சிறிய ஆலம் விதையிலிருந்து பிரம்மாண்ட மரம் உருவாவதை உவமையாகச் சொல்லி பாடம் நடத்தினர். தலங்கள் தோறும் புனித மரங்கள் இருந்திருக்கின்றன. நம்மாழ்வாருக்கும் தான்சேன் என்ற கவிஞருக்கும் அருள்புரிந்த புளியமரம், கிருஷ்ணன் ஆலிலைக் கிருஷ்ணனாக மிதந்த ஆலமரம், சிவன் அடிமுடி காணும் விஷயத்தில் பொய் சொன்ன தாழம்பூ, புத்தருக்கு ஞானம் கொடுத்த அரச மரம், பிராமணர்களுக்கு ஸமித்து கொடுக்கும் அரச, பலாச மரங்கள், பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த வன்னி மரம் என்று நூற்றுக்கணக்கான மரங்கள் வில்வம், துளசி போன்ற புனித தாவரங்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே — முடிவு இல்லாமல் போகும்.

 

ஜகதீஷ் போசுக்கும் மனுவுக்கும் தாவரவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு கொடுக்கலாம்.

மரங்களையோ செடி கொடிகளையோ பிராமணர்கள் வெட்டினால் ஆயிரம் வேத மந்திரம் சொல்ல வேண்டும் என்று மனு விதிக்கிறார்.

 

புனித மரங்கள் பற்றிப் பேசும் மனு, என்ன மரங்களைக் கொண்டு (staff) தடிகள் செய்ய வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.

 

 

ஆங்கிலக் கட்டுரையில் ஸ்லோகங்களின் எண்களையும் கொடுத்து இருக்கிறேன்.

 

Manu, not only a Law Maker but also a Great Botanist! (Post No.4375 …

https://tamilandvedas.com/…/manu-not-only-a-law-maker-but-also-a-great-botanist-p…

21 hours ago – Manu Smrti, law book written by Manu, talks about lot of subjects which makes it a Hindu Encyclopaedia. Manu was not only a law maker but …

 

‘Save the Trees’ and ‘Save the Forests’ in Manu Smrti! – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/save-the-trees-and-save-the-forests-in-…

7 Aug 2016 – ‘Save the Trees‘ and ‘Save the Forests’ in Manu Smrti!( … 255 Indian trees, herbs and flowers mentioned in Brhat Samhita Part-1, posted 21 …

 

 

–Subham–

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை (Post No.3500)

Written by S NAGARAJAN

 

Date: 31  December 2016

 

Time uploaded in London:-  11-40 AM

 

Post No.3500

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை   உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை

ச.நாகராஜன்

 

 

 

நோபல் பரிசு பெறுவது உலகின் மிகப் பெரிய கௌரவம். அங்கீகாரமும் கூட. இதைப் பெறுவோர் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஒரு உரை நிகழ்த்துவர். அது மிகவும் அற்புதமான உரையாக அமையும். ஆகவே ஒவ்வொரு துறையிலும் பரிசு பெற்றவர்கள் நிகழ்த்திய நோபல் பரிசு உரைகளைத் தொகுத்து தொகுதி தொகுதியாக வெளியிடப்படுகிறது.

 

அவற்றுள் டோனி மாரிஸனின் (Tony Marrison) உரையும் ஒன்று. அதன் சுருக்கத்தை இங்கே காணலாம்..

 

1993ஆம் ஆண்டு டோனி மாரிஸன் நோபல் பரிசை இலக்கியத்திற்காகப் பெற்றார். இப்படி நோபல் பரிசு பெறும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே என்ற புகழையும் கூடவே பெற்றார்.

 

 

அவர் தனது நாவல்களில் ஆழ்ந்த பார்வையுடனும் கவிதை ஆவேசத்துடனும் அமெரிக்க வாழ்வியல் உணமைக்கு உயிர் தருபவர் என்பது நோப்ல பரிசு பெறுவதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது.

 

டிசம்பர் 7ஆம் தேதி ஸ்வீடனின் பரிசு பெறும் மேடையில் ஏறி அவர் ஆற்றிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவு அனைவருக்கும்  மொழியைப் பயன்படுத்த வேண்டிய வழியைப் பற்றி உத்வேகமூட்டும் ஒரு உரையாக அமைந்தது. அவர் உரையின் சாரம்:

 

 

: முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் கண்பார்வையற்றவள். ஆனால் புத்திசாலி. அவள் ஒரு அடிமை. கறுப்பு இனத்தைச் சேர்ந்தவள். அமெரிக்க பிரஜை. தனியே ஒரு சிறிய வீட்டில் நகருக்கு வெளிப்புறத்தில் அவள் வாழ்ந்து வந்தாள்.

 

 

அவளது  புத்திகூர்மை அவள் அண்டை அய்லாரையும் தாண்டி நகரில் வசிப்போரையும் தாண்டி எங்கும் பரவியிருந்தது.

ஒரு நாள் சில இளைஞர்கள் அந்தப் பெண்மணி அப்படிப்பட்ட புகழுக்கு உரியவள் இல்லை என்று நிரூபிக்கும் கெட்ட எண்ணத்துடன் அவளை அணுகினர்.

 

ஒரே ஒரு கேள்வி கேட்போம். அதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால் அவள் மேதாவி தான் என்பதை ஒப்புக் கொள்வோம். இல்லையேல் அவள் ஒரு ஃப்ராடு என்று சொல்வோம் என்றனர்.

 

 

அவர்களில் ஒருவன் அந்தப் பெண்மணியை அணுகி, “அம்மணி, இதோ என் கையில் ஒரு சிறிய் பறவை இருக்கிரது. அது உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து விட்டதா?” என்று கேட்டான்.

 

 

பறவை உயிரோடு இருக்கிறது என்று அவள் கூறினால் கையை ஒரே ஒரு அமுக்கு அமுக்கி அந்தப் பறவையைக் கொன்று விடலாம். அவள் செத்து விட்டதாகச் சொன்னால் உயிரோடு இருக்கும் பறவையைக் காட்டி அவள் கூறியது தவறு என்று நிரூபிக்கலாம் என்பது அந்த இளைஞர் கூட்டத்தின் திட்டம்.

 

ஆனால் மகா புத்திசாலியான பார்வையற்ற அந்தக் கறுப்பு இனப் பெண்மணி அவர்களின் மோசமான திட்டத்தை அறிந்து கொண்டாள்.  சற்று பேசாமல் இருந்த அவளை அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

 

 

கடைசியில் அவள் பேசினாள்: “உங்கள் கையில் இருக்கும் பறவை உயிரோடு இருக்கிறதா செத்து விட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விடை உங்கள் கையில் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். விடை உங்கள் கையில் தான் இருக்கிறது!”

 

 

அதற்கான அர்த்தம் – ஒருவேளை அது இறந்து கிடந்த போது அதை எடுத்து வந்திருக்கலாம். அல்லது அதை நீங்களே சாகடித்திருக்கலாம். ஒருவேளை அது உயிரோடு இருந்தால் அதை நீங்கள் இப்போது நினைத்தாலும் சாக அடிக்கலாம். அது உயிரோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள்  முடிவைப் பொறுத்தது. பொறுப்பு உங்களுடையதே.

இந்த அதிரடி பதிலைக் கேட்டு திருதிருவென்று விழித்த இளைஞர்கள் மனம்  மாறி அவளிடம் தங்களின் உண்மையான திட்டத்தை எடுத்துரைத்து தங்கள் செய்கைக்கு வருந்தினர்.

பார்வையற்ற அந்தப் பெண்மணி அவர்கள் தங்கள் வலிமையை உறுதிப்படுத்துவதிலிருந்து தன் கவனத்தை அவர்கள் எந்தக் கருவியின் மூலம் அதை உறுதிப்படுத்த முயல்கிறார்கள்  அதற்கு மாற்றிக் கொண்டாள். பதிலைச் சொன்னாள்.

 

 

கையில் இருக்கும் பறவையைப் பற்றிய உண்மை நிலையப் பற்றிய ஹேஷ்யம் எனக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சியைத் தந்தது. ஆனால் இப்போது நினைக்கும் போது நான் செய்யும் எழுத்துப் பணியே என்னை இந்த நோபல் பரிசு பெறும் இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.

 

 

ஆகவே அந்தப் பறவையை மொழி என்றும் அந்தப் பெண்மணியை ஒரு எழுத்தாளர் என்றும் நான் காண்கிறேன். அவளுக்குப் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட  மொழியை – அது பல கொடிய காரணங்களுக்காகத் தடுக்கப்பட்ட போதிலும் கூட –  அதை எப்படி உரிய முறையில் கையாண்டு  சேவை செய்ய முடியும் என்று தான் அவள் கவலைப்பட்டாள்.

 

அவள் ஒரு எழுத்தாளர் என்பதால், மொழியை ஒரு அமைப்பாகவும் அத்துடன் கூட உயிர்ப்புடன் கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் அவள் நினைக்கிறாள்.

 

 

ஆகவே குழந்தைகள் அவளிடம் “அது உயிருட்ன்  இருக்கிறதா அல்லது செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பும் போது அவள் மொழி என்பது இறக்கக் கூடிய ஒன்றே. ஆனால் அதை உயிர்ப்புடன் தக்கவைக்க முயற்சியும் திட மனதும் வேண்டும்; கையில் இருக்கும் பறவை இறந்து விட்டது என்றால் அந்த சவத்திற்கு  காரணம் அதை வைத்திருந்தவர்களே என்று நம்புகிறாள்.

பேச்சு வழக்கொழிந்து, எழுதவும் முடியாமல் இறந்து போன ஒரு மொழி என்பது விளைச்சலைத் தராமல் தனக்குத் தானே முடக்கு வாதத்தை உருவாக்கிக் கொண்ட ஒன்றேயாகும்.

 

 

ஒரு மொழியின் செழுமை என்பது அதை கையாண்டு பேசுபவர்கள், படிப்பவர்கள், எழுதுபவர்கள் ஆகியவர்களிட்ம் அது வாழும் திறனைப் பொறுத்தே உள்ளது.

 

டோனி மாரிஸன் இப்படி அற்புதமாக மொழியின் ஆற்றலையும் அதைக் கட்டிக் காத்து வளர்கக் வேண்டிய கடமையையும் தன் உரையில்  எடுத்துரைத்தார்.  அவரது உரை எந்த ஒரு மொழிக்கும் பொருந்தக் கூடியதே!

 

 

டோனி மாரிஸனின் கருத்துப் படி ஒரு  மொழி அடிமைத் தனத்தையோ போரையோ அல்லது ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கோ ப்யன்படுத்தக்கூடாது. மாறாக ஒடுக்கப்பட்டவர்களை உயர்ததுவதற்காக மொழியின் வலிமை அவர்களைச் சென்று சேர வெண்டும்.

 

 

அறிவை நோக்கியே ஒரு  மொழி முன்னேற வேண்டும், அதன் அழிவை நோக்கி அல்ல.

 

 

நாம் இறக்கிறோம். அதுவே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கலாம். நாம் மொழியைப் பேசுகிறோம். அதுவே நமது வாழ்க்கையை அளக்கும் அளவுகோலாக இருக்கும்.

 

 

இப்படி, மொழியைப் பற்றி தனது ஆழ்ந்த கருத்தைக் கூறியுள்ள டோனி மாரிஸன் எந்த எழுத்தும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை  தன் நோபல் உரையில் உலக மக்களின் முன் வைக்கிறார்.

 

 

அவரது நெகிழ்வு தரும் இந்த உரை உலகில் அனைவராலும் அடிக்கடி பேசப்பட்டு அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது.

மொழிச் சண்டையை விடுத்து மொழியின் வலிமையை ஆக்க பூர்வமாக ஒடுக்கப்பட்டோரின் நலத்திற்காகப் பயன்படுத்தினால் உல்கம் ஒன்று படும்; மேம்படும்!

*******

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!(Post No.2930)

Article written by S NAGARAJAN

Post No.2930

Date: 30 June 2016

 

பாக்யா 1-7-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை 

 

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

ச.நாகராஜன்

 

“நகைச்சுவை இல்லாதவர் ஒரு நல்ல விஞ்ஞானியாக இருக்க முடியாது”;

– ஆண்ட்ரீ ஜிம்

நோபல் பரிசு என்றால் தெரியும், அது என்ன இக்நோபல் பரிசு என்று சிலர் குழப்பம் அடையலாம். சில வித்தியாசமான சோதனைகளை மேற்கொண்டு வெற்றி பெறும் விஞ்ஞானிகளுக்கும் சில குறிப்பிட்ட  நபர்களுக்கும் தரப்படும் பரிசு தான் இக்நோபல் பரிசு!

Ignoble – இக்நோபிள் என்ற ஆங்கில வார்த்தைக்கு அகௌரவமான என்று அர்த்தம். இந்த வார்த்தையின் ஒலி அமைப்பை ஒத்திருக்கும் இக்நோபல் பரிசு  இந்தப் பொருளில்  வழங்கப்படவில்லை.

இது விஞ்ஞானிகளையோ அல்லது அவர்களை மதிப்பவர்களையோ கேலி செய்யும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்படவில்லை.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சோதனைகளைச் செய்பவரை ஊக்குவிக்கவே இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு பத்து வித்தியாச்மான நபர்களுக்கு இது தரப்படுகிறது.

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதத் துவக்கத்தில் நடைபெறும் இந்தப் பரிசளிப்பு விழாவில் நோபல் பரிசு பெற்றோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பரிசு பெறத் தகுதியுள்ளவ்ர்களை ஒரு குழு தேர்ந்தெடுக்கிறது.

உங்களுக்குப் பரிசு பெறச் சம்மதமா என்று தேர்வு செய்யப்பட்டுள்ளவரின் சம்மதத்தையும்  முன்னதாகவே கேட்டுப் பெறப் படுகிறது. இந்தப் பரிசு வேண்டாம் என்று சொல்வோரின் பெயர்களைப் பெரும்பாலும் பட்டியலிலிருந்து நீக்கி விடுவர்.

இந்த இக்நோபல் பரிசு பெற்ற ஒரு இயற்பியல் விஞ்ஞானி நிஜ நோபல் பரிசையும் பெற்று விட்டார்.

அவர் பெயர் ஆண்ட்ரி ஜிம் (Andre Geim).

 

ரஷியாவிலே பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்ற அவர், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்.

தனது இயற்பியல் ஆராய்ச்சிகளைத் தவிர வெள்ளிக்கிழமை இரவு நேரங்களில் சில விசித்திர ஆராய்ச்சிகளைப் பொழுதுபோக்காக அவர் செய்வது உண்டு. இந்த ஆராய்ச்சிகளை ஃப்ரைடே நைட் எக்ஸ்பெரிமெண்ட்ஸ் என்று அவர் விளையாட்டாகச் சொல்வது வழக்கம்.

அவருக்கு காந்த சக்தியின் மீது சற்று ஆர்வம் உண்டு. நெதர்லாந்தில் ராட்பௌட் பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றுகையில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு விலை உயர்ந்த இயந்திரம் ஒன்றில். எலக்ட்ரோ மாக்னடிக் சக்தியை முழு அளவில் வைத்தார். அதில் செங்குத்தாக இருந்த துளையில் தண்ணீரைக் கொட்டினார். என்ன ஆச்சரியம், நீர் உள்ளே செல்வது தடைப்பட்டதோடு அதிலிருந்து சில குமிழிகள் தோன்றின.

உடனே ஆண்ட்ரீக்கு தண்ணீருக்கு காந்த சக்தி பாதிப்பு சிறிதளவு உண்டோ என்று சந்தேகம் வந்தது..

 

இதை எப்படி நிரூபிப்பது. அந்த சிக்கலான இயந்திரத்தின் துளையில் நீரை விட்டு ஒரு தவளையைப் போட்டார். காந்த சகதியை முழு அளவுக்குக் கொண்டு வந்த போது அந்த தவளள  மேலே மிதக்க ஆரம்பித்தது.

உடனடியாக இந்தக் கண்டு பிடிப்பை 1997ஆம் ஆண்டு பிஸிக்ஸ் வோர்ல்ட் என்ற விஞ்ஞான இதழில் வெளியிட்டார். இது ஏப்ரல் மாதத்திய முட்டாள் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட கட்டுரை என்று பலரும் தமாஷாகச் சிரித்தனர். ஆனால் அவர் இது உண்மையான சோதனை தான் என்பதை விளக்கினார், இதற்காக   2000ஆம் ஆண்டு இக்நோப்ல பரிசு பெற அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது தான் அனைவரும் சோதனையைப் பற்றி நன்கு புரிந்து கொண்டனர்.

 

அவரது வெள்ளிக்கிழமை இரவு சோதனைகளில் தவளை சோதனனயைத் தவிர இன்னும் இரு சோதனைகளும் அவருக்கு வெற்றியைத் தந்து புகழையும் தந்தன.

 

இதில்  மூன்றாவது சோதனை தான் க்ராபீன் (graphene)என்ற உலோகத்தைப் பற்றியது. இதை அவர் ஆய்வுப் பேப்பராக வெளியிடுகையில் நேச்சர் பத்திரிகை  இரு முறை நிராகரித்து விட்டது.

ஆனால் 2010ஆம் ஆண்டில் க்ராபீன் ஆராய்ச்சிக்காகத் தான் அவர் நோபல் பரிசையும் பெற்றார்.

இந்த இக்நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிச் சற்று தெரிந்து கொண்டால் பரிசு அளிப்பதன் நோக்கம் நன்கு விளங்கிவிடும்.

வேறு துறைகளில் இக்நோபல் பரிசு பெற்ற இன்னும் இருவரைப் ப்ற்றிப் பார்ப்போம்.

பெலாரஸ் நாட்டின் அதிபரும் சர்வாதிகாரியுமான அலெக்ஸாண்டர் லுகாஷெங்கோவிற்கு 2013 இல் அமைதிக்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் அவர் பிறப்பித்த விசித்திரமான உத்தரவு தான் இதற்குக் காரணம். பொது இடங்களில் கை தட்டக் கூடாது என்று கைதட்டலுக்குத் தடை உத்தரவு பிறப்பித்தார் அவர்.

2012ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான இக்நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது தெரியுமா? அமெரிக்க அரசின் ஜெனரல் அக்கவுண்டபிலிடி அலுவலகத்திற்குத் தான். அந்த அலுவலகத்தின் இலக்கிய சாதனை என்ன? அது அறிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளுக்கான ஒரு அறிக்கையை பரிந்துரை செய்தது தான். அறிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளைப் பற்றி ஒரு அறிக்கை தயார் செய்யுமாறு அது உததரவிட்டதற்காக இந்த இலக்கிய இக்நோபல் பரிசு (The US Government General Accountability Office, for issuing a report about reports about reports that recommends the preparation of a report about the report about reports about reports.)

இக்நோபல் பரிசு பெற்றோரைப் பற்றியும் அதற்கான காரணங்களையும் பற்றிப் படித்தால் சிரிப்பு பொங்கி வரும். ஆனால் பின்னர் சிந்திக்கவும் செய்வோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

விஞ்ஞானிகளிலேயே சற்று குஷியான விஞ்ஞானி என்று சொல்லக் கூடியவர் நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானியான ஆர்தர் எல். ஷாலோ (Arthur L. Schawlow) என்பவர் தான்! (தோற்றம் 5-5-1921 மறைவு 29-4-1999)

தனது 78வது பிறந்தநாளுக்குச் சில நாட்களுக்கு முன்னர் மறைந்த அவர் தன்னைப் பற்றி “நீங்கள் சந்தித்தவர்களிலேயே போட்டியற்ற ஒரே மனிதர் நான் தான்!” என்று விளையாட்டாகக் கூறுவது வழக்கம். அனைவருடனும் மிகவும் இணக்கமாகச் செயல்படும் சந்தோஷமான மனிதர் அவர்.

அவருக்கு 1981ஆம் ஆண்டு நோபல் பரிசு  கிடைத்ததும் ஸ்வீடனுக்குப் பரிசைப் பெறச் சென்றார். சாதாரணமாக பரிசு பெறுவோர் ஸ்வீடன் மன்னரைப் பார்க்கும் போது அவருக்கு நினைவுப் பரிசாக ஏதேனும் ஒன்றை வழங்குவது மரியாதை நிமித்தமான ஒரு மரபாகும்.

மன்னருக்கு என்ன பரிசை  ஷாலோ வழங்கியிருப்பார்? வெள்ளித் தட்டா? தங்கக் கோப்பையா? எதுவுமில்லை.

60 வயது ஆன புரபஸர் ஷாலோ கலிபோர்னியாவிலிருந்து கொண்டு சென்று ஸ்வீடன் மன்னரான பதினாறாம் கார்ல் குஸ்டாஃபிற்கு கொடுத்தது ஒரு அளவு பார்க்கும் ஸ்கேல். அதாவது ஆங்கிலத்தில் ரூலர் என்று சொல்வோமே அது. ரூலருக்கு ஒரு ரூலர் என்றார் அவர். (A ruler for a ruler). ரூலர் என்றால் ஆட்சி புரிபவர் என்றும் அர்த்தம் உண்டல்லவா. ஆகவே ரூலருக்கு ஒரு ரூலர் என்று சொன்னதும் அனைவரும்  மகிழ்ந்தனர். மன்னரும் தான்!

அவரது கள்ளங்கபடில்லாத எளிய நகைச்சுவை உணர்வுடன் கூடிய படாடோபமற்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அனைவருமே ரசித்து வந்தனர்!

 

***********

 

 

விமானத்தில் பறக்கும்போது நோபல் பரிசு கிடைத்தது!(Post No.2797)

live science

Written  BY S NAGARAJAN
Date: 10 May 2016

 

Post No. 2797

 

 

Time uploaded in London :–  6-42 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 6-5-2016 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியான  கட்டுரை

பிரபல டைரக்டர் கே.பாக்யாராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரந்தோறும் வெளி வரும் சிறந்த பத்திரிகை பாக்யா.

சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி bhagyaweek@gmail.com

 

 

மன்னிக்க வேண்டுகிறேன்!

.நாகராஜன்

 

 sarh miller1

“வாழ்க்கையில் பிளவு பட்ட எதையும் ஒட்டிவிடும் சூப்பர் கோந்து மன்னிப்பு தான்! அது எதையும் ரிப்பேர் செய்து விடும்!” –லின் ஜான்ஸ்டன்

 

உலகின் பிரபல அறிவியல் இதழான லைவ் ஸயின்ஸ் (Live Science) உலகிலுள்ள அறிவியல் கட்டுரைகளிலெல்லாம் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் முத்திரைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்திய ஏப்ரல் 2016, இரண்டாவது வார இதழில் அது வெளியிட்டுள்ள கட்டுரை ‘சாரி ஸயின்ஸ்’ (Sorry Science) பற்றியது. அதாவது மன்னிப்பு பற்றிய அறிவியல் நோக்கிலான கட்டுரை தான் சாரி ஸயின்ஸ் கட்டுரை!. சாரா மில்லர் என்பவர் இதை எழுதியுள்ளார்.

 

 

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனக்கு அப்படி ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியவர் தன்னிடம் மன்னிப்பு கேட்பதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆனால், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த மன்னிப்பில் ஆறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்கிறது அறிவியல் ஆய்வு. அமெரிக்காவிலுள்ள ஓஹையோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராய் லெவிகி (Roy Lewicki),” மன்னிப்பு நிச்சயம் வேலை செய்யும் – அதில் ஆறு அம்சங்கள் இருந்தால்” என்கிறார். அவர் தான் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய குழுவின் தலைவர்.

 

 

மன்னிப்பு கேட்பதில் முதலாவது அம்சம் தவறுக்கான பொறுப்பை தான் ஏற்பதாகும். “நான் தான் தவறு செய்தேன்.,” என்று ஒத்துக் கொள்ளும் போது பாதிக்கப்பட்டவரின் மனநிலை பெரிதும் மேம்படுகிறது; ஆறுதல் அடைகிறது.

அடுத்ததாக தவறினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முன்வருவது. ’ஏற்பட்ட ‘டாமேஜை’ சரி செய்கிறேன் என்று சொல்லும் போது எதிராளியின் மனம் மிகவும் சமாதானப்பட்டு விடும்.

 

 

மன்னிப்பு கேட்கும் போது கேட்பவருக்குப் புரியும் அதே மொழியில் கேட்க வேண்டும். உலகில் எந்த  மொழியினராக இருந்தாலும் அனைவருக்கும் பிடிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள், “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று சொல்வது தான்!

மன்னிப்பை முன் வைக்கும் போது ஒரு உணர்வு பூர்வமான தொடர்பை நீங்கள் பாதிக்கப்பட்டவருடன் கொள்ள வேண்டும். உங்களின் தவறினால் அவருக்கு எப்படிப்பட்ட வலி அல்லது வேதனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் வேதனைப்படுவதை அவர் உணர வேண்டும்,

 

 

அடுத்து பாதிக்கப்பட்டவர் சொல்வதை முழுதுமாக அமைதியாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

கடைசியான அம்சம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்பது தான்!

இந்த ஆய்வில் 755 பேர் பங்கேற்றனர்.

முதலாவது சோதனையில் 333 பேர்கள் பங்கேற்றனர். மன்னிப்பின் ஆறு அம்சங்களோ அல்லது அவற்றில் ஒன்றோ அல்லது இரண்டோ கொடுக்கப்பட்டு அதை எப்படி அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

இரண்டாவது சோதனையில் 422 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒன்று முதல் ஆறு வரையிலான மன்னிப்பு அம்சங்களை படிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு எப்படி அதை அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

முதல் சோதனையில் மன்னிப்பின் எத்தனை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று முன்னமேயே சொல்லப்பட்டது. ஆனால் இரண்டாம் சோதனையில் எத்தனை அம்சங்கள் மன்னிப்பு கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படவில்லை.

ஆறு அம்சங்களையும் கொண்ட மன்னிப்பே சிறந்த மன்னிப்பாக அனைவராலும் கருதப்பட்டதை சோதனை முடிவு தெரிவித்தது.

 

மன்னிக்க வேண்டுகிறேன் என்பதைச் சொல்லும் போது ஆறு அம்சங்களைச் சிந்திக்க வேண்டுகிறேன் என்று கூறிய ஆய்வின் தலைவர் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

இந்த ஆய்வின் குறையாக ஒன்றையும் இது பற்றி சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த சோதனையில் மன்னிப்பு என்பது எழுதிய வாசகங்களைப் படிப்பதாக மட்டும் அமைந்துள்ளது. நேரடியாக மன்னிப்பு கேட்பது போல அமையவில்லை.

 

 

நேருக்கு நேர் கண்ணொடு கண் பேசும் மொழி இதில் இல்லை. அந்த உணர்வு பூர்வமான வெளிப்பாடு மன்னிப்பு கேட்பதில் தலையாய அம்சமாகும் என்று அந்த ஆய்வாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்பதைப் பற்றி ஆய்வு நடத்திய இன்னொரு உளவியல் நிபுணரான ஃபெர் (Fehr) இது பற்றி ஏராளமான ஆய்வுப் பேப்பர்களை வெளியிட்டுள்ளார்.

 

 

அவர், “மன்னிப்பு என்பது ஒருவரின் செயலையும் அந்த நபரையும் இரண்டாக பிரிவு படுத்திக் காட்டும் ஒன்று” என்கிறார்.

“நான் செய்த செயல் மோசம் தான். ஆனால் நான் கெட்ட ஆள் இல்லை. இதை உளமாரச் சொல்கிறேன்.” என்று ஒருவர் சொல்லும் போது பாதிக்கப்பட்டவரின் மனம் சமனம் அடைந்து மன்னிப்பை நல்கும் மனப்பான்மையை அடைகிறது என்கிறார் அவர்.

 

 

மன்னிப்பைக் கேட்கும் சமயமும் முக்கியமான ஒன்று என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

ஆக மன்னிப்பு கேட்பதைக் கூட அறிவியல் ரீதியாகக் கேட்கலாம். மற்றவர்களைச் சுலபமாகச் சமாதானப்படுத்தலாம்!

200px-Jerome_Karle,_2009

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இரசாயனத்தில் 1985ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி டாக்டர் ஜெரோம் கார்லே (Dr Jerome Karle- தோற்றம் 18-6-1918 மறைவு 6-6-2013)

அவர் இஸபெல்லா லுகோஸ்கி என்ற இளம் பெண்ணை இரசாயன சோதனைக்கூடத்தில் 1940 ஆண்டு சந்தித்தார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக 1942இல் அவர் இஸபெல்லாவை மணந்தார். எக்ஸ் ரே கிறிஸ்டலோகிராபி துறையில் இருவரும் இரு வேறு ஆராய்ச்சிகளைச் செய்தனர்.

 

 

நோபல் பரிசு பெற்ற போது அதில் தன் மனைவிக்கு உரிய கௌரவம் தரப்படவில்லையே என்று வருத்தமுற்றார் அவர்.

நோபல் பரிசு பெற்ற செய்தி அவருக்கு ஒரு பெரும் ஆச்சரியமூட்டும் செய்தியாகவே அமைந்தது.

அந்தச் செய்தி அவருக்குக் கிடைத்த போது அவர் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.

 

திடீரென்று விமான பைலட் ஒரு செய்தியை மைக்கில் அறிவித்தார்.

“நாம் இந்த தருணத்தில் மிகவும் கௌரவப்படுத்தப்பட்டுள்ளோம். நம்முடன் இப்போது தான் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்முடன் இதோ இந்த விமானத்தில் இருக்கிறார். அவருக்கே தனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பது இதுவரை தெரியாது”

விமானிக்குக் கிடைத்த செய்தியை அவர் சுடச்சுடச் சொல்ல அனைவரும் பரபரப்புடன் ஆரவாரித்தனர்.

 

 

விமானி தொடர்ந்தார்: “உண்மையில் இந்த நோபல் பரிசு 29-சி சீட்டில் அமர்ந்திருக்கும் டாக்டர் ஜெரோம் கார்லேக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ள செய்தியை அவர் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர் மூனிச்சிலிருந்து இன்று காலை  கிளம்பி விட்டார். ஆகவே இப்போது இந்த நல்ல செய்தியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”

 

 

பயணிகள் எல்லோரும் குதூகலப்பட ஜெரோமுக்கு விமானி சாம்பெய்ன் கொடுத்து விசேஷமாக கௌரவித்தார்.
உயரத்தில் பறந்தவருக்கு உயரிய விருது கிடைத்த செய்தியை உரிய விதத்தில் அளித்தார் விமானி!

*************