ஞானப் படகு, ஞான விளக்கு,  ஞானத் தீ,  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் (Post.10,648)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,648

Date uploaded in London – –    10 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானப் படகு ஞான விளக்கு  ஞானத் தீ  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் 

பகவத் கீதையை ஆத்ம ஞானத்திற்காக படிப்பது அவசியம். அதற்குப் பின்னர் அதிலுள்ள இலக்கிய நயத்துக்காகவும் படிக்கலாம். கிருஷ்ணன் போர்க்களத்தில் பேசினாலும் தெளிவாக உவமைகளுடன் பேசுகிறார். ஆனால் போர் துவங்குவதற்கு முன்னர்தான் இந்த சம்பாஷணை நடந்தது .

நமக்கு ஒரு சந்தேகம் வரும். முதல் அத்தியாயத்திலேயே தாரை தம்பட்டைகள் முழங்கின ; போர் முரசுகள் ஒலித்தன. அவரவர் கையிலுள்ள சங்குகள் ஊதின . அதையும் கூட முதலில் செய்தவர்கள் துரியோதனாதிகள்தான். அப்படி இருக்க, 700 ஸ்லோகம் உடைய 1400 வரிகள் உடைய உரையாடல் நடந்திருக்குமா? அப்போது எதிர்த் தரப்பினர் என்ன செய்திருப்பார்கள் என்றெல்லாம் நாம் எண்ணலாம். உண்மையில் வருணனைகள்- குறிப்பாக விஸ்வரூப தரிசன வருணனைகள் –முதலியவற்றை நீக்கிவிட்டால் பேசிய பகுதி இன்னும் குறைவே. அதிலும் திரும்பத் திரும்ப சொன்ன கருத்துக்கள் எல்லாம் சஞ்சயன் வாயிலாக வந்து வியாசர் எழுத்தில் பொறிக்கப்பட்டபோது கொஞ்சம்  கூடுதலாகத்தான் வரும்.

உங்கள் நண்பர்களுடன் டெலிபோனில், WHATSAPP வாட்ஸப்பில் அரைமணி நேரம் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே ரிக்கார்ட் RECORD  செய்து எழுதிப்பாருங்கள். அரை மணி நேர பேச்சு அரை பகவத் கீதை அளவுக்கு வந்து விடும்!!!

ஞானம் என்னும் சொல்லுடன் பல சித்திரங்களை சேர்த்து, கிருஷ்ணன் விளக்குகிறார்.; இதோ ஒரு சின்ன பட்டியல் :-

பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும் பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

அது சரி போர் முழக்கம் செய்தாகிவிட்டது; இரு தரப்பும்; பின்னர் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொண்டு இருக்கையில் எதிர் தரப்பில், SUSPENSE சஸ்பென்ஸ் வந்திருக்காதா ? அல்லது SUSPICION ஸஸ்பிஷன் / சந்தேகம் ஆவது வந்திருக்காதா என்று நாம் எண்ணலாம். பழங்காலத்தில் நடந்தது தர்ம யுத்தம்; எதிரி கையில் ஆயுதம் எடுத்தால்தான் அவனுடன் சண்டை போடுவர்; அவர்கள் வேடிக்கை பார்க்கையிலோ, தண்ணீர் குடிக்கையிலோ தாக்க மாட்டார்கள். ஆக அர்ஜுனனும் அவனது சகோதரர் நால்வரும் ஆயுதம் எடுக்காதவரை துரோணரோ பீஷ்மரோ சண்டையை துவக்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கண்ணன் விடுவதாக இல்லை; நம்ம ஊரில் அரசியல் மேடைகளில் எவர் கையிலாவது MIKE மைக் கிடைத்தால் எப்படி அவர் முதுகைத் தட்டி உட்கார வைக்கும் வரை பேசுவாரோ அப்படி கிருஷ்ண பரமாத்மாவும் .வெட்டி முழக்கு கிறார் ; ஆயினும் கூட நம்மவூர் சிறந்த பேச்சாளர் போல சில, பல உவமைகளை உருவகங்களையும் அள்ளி  வீசுகிறார்.

பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும் பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் பார்ப்போம்

மனிதனும் கடவுள் ஆகலாம்.; ஆசை, பயம், கோபம் இல்லாமல் என்னைச் சரண் அடைந்தவர்கள் என் மயமாகி விடுவர் ;இந்தஞானத் தவத்தால் அவர்கள் பரிசுத்தமானவுடன் என்னை போல ஆகி விடுவார்கள் கோபமே இல்லாமல் வாழ்வது ஒரு தவம்; ஆசையே இல்லாமல் வாழ்வதும் ஒரு தவம்; பயமே இல்லாமல் வாழ்வதும் ஒரு தவம். இவைதான் ஞானத் தவம்; கையில் கால் பணம் தேவை இல்லை; இதை யாரும், எந்த ஜாதியினரும், மதத்தினரும், கடவுள் நம்பிக்கையே இல்லாதவரும் கூட இதைக் கடைப்பிடிக்கலாம். வள்ளுவனும் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்கிறார்.

ரிக் வேதமும் கூட ‘வித்வான் அம்ருத இஹ பவதி’ என்று புருஷ சூக்தத்தில் சொல்கிறது .

பாரதி பாடல் நெடுகிலும் கீதையின் தாக்கத்தைக் காணலாம். அவரும் ‘ஞான வாள்’ முதலியன பற்றிப் பாடுவதோடு எல்லோரும் அமர நிலையை அடையும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று மூன்று முறை உறுதிபடக் கூறுகிறார்.

4-19ல் கண்ணன் ஞானத் தீயில் ஆசைகளைப் பொசுக்கினவனை மக்கள் பண்டிதர்கள்/ அறிவாளிகள் என்று அழைப்பர் என்கிறார்.

4-27ல் ஞான தீபம் பற்றி உவமிக்கையில் அறியாமை என்னும் இருள் அகன்றால் இந்திரியங்கள் செய்யும் தொழில்களை வேள்வியில் பொசுக்கலாம் என்று சொல்கிறார்.

தீயில் மந்திரம் சொல்லி ஆஹுதி கொடுப்பது மட்டுமே வேள்வி என்பதல்ல. குணங்களைக் கடைப்பிடிப்பதும் ஒரு வகை வேள்வியே.

இந்து மாதத்தில் பாவ மன்னிப்பு உண்டு. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இதற்கான மந்திரத்தை உச்சரிக்கிறார்கள்.; பாவிகளுக்குள் கொடும்பாவியாக ஒருவன் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் அந்த பாவ நதியைக் கடந்து விடலாம் என்று 4-36 ல் பகர்கிறார். ஆக ஒரே நாலாம் அத்தியாயத்தில் கண்ணன் ஞானம் என்னும் சொல்லை வைத்து சிலம்பம் ஆடுகிறார் என்றே சொல்லவேண்டும்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் கூட தங்கள் பாடல்களில் இறைவனை  ஞான விளக்கு, தீபம்  என்று பாடிப் பரவியுள்ளனர்!

(ஞான) சக்ஷு = கண், ப்லவ = படகு, தீப = விளக்கு, அக்கினி = தீ, தபஸ்= தவம்

–SUBHAM

tags- ஞானப் படகு, ஞான விளக்கு , ஞானத் தீ,  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் , பகவத் கீதை

பகவத் கீதையில் எந்திரங்கள் ! (Post No.9477)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9477

Date uploaded in London – –10  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பகவத் கீதையில் எந்திரங்கள் !

உபநிஷத காலம் முதலே நமக்கு எந்திரங்கள், உலோககங்களைப் பிரித்தெடுத்து ஆயுதங்கள் உபகரணங்கள் செய்தல் பற்றிய அறிவு மிகவும் இருந்துள்ளது.

முதலில் எது எது எந்தக் காலம் என்பது பற்றிய ஒரு சிறு குறிப்பு :காமாலைக் கண்களும், கோல் பார்வையுமுடைய……………………………………………..

tags — பகவத் கீதை, எந்திரங்கள், உபநிஷதங்கள்  , உலோககங்கள்

தமிழில் பகவத் கீதையை படிக்க எந்த நூல் சிறந்தது? (Post No.8810)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8810

Date uploaded in London – – 14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்களன்றும் லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சிக்கு (facebook.com/gnanamayam) அனைவரையும் அழைக்கிறோம். இதில் கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. 12-10-2020 திங்கள்கிழமையன்று நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் இங்கு தரப்படுகிறது.

பகவத் கீதையை தமிழில் படிக்க எந்த நூல் சிறந்தது?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பகவத் கீதையை தமிழில் படிக்க எந்த  நூல் சிறந்த நூல் என்பது கேள்வி.

தமிழில் பகவத்கீதையை விளக்க பல சிறந்த நூல்கள் உள்ளன.

மஹாகவி பாரதியார் பகவத் கீதையில் தோய்ந்தவர். அதன் முழு அர்த்தத்தையும் நன்கு கிரஹித்தவர்.

இதை அவரது பல பாடல்களிலும் காணலாம்.

பகவத் கீதையின் சாரத்தை அவர் இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்.

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்.

மாம் அனுஸ்மர ; மாம் ஏகம் சரணம் வ்ரஜ

PICTURE OF S NAGARAJAN

என்னையே தொடர்ந்து நினை; என் ஒருவனையே சரணமாக அடை என்பது கீதையில் கண்ணன் வாக்கு.

கர்மண்யேவாதிகரஸ்தே மா ஃபலேஷு கதாசன – கர்மம் செய்வதிலே தான் உனக்கு அதிகாரம்; அதன் பயனில் ஒருபோதும் இல்லை என்பதும் கண்ணபிரானின் அருள்வாக்கு. இதையே மேலே கண்ட இரு வரிகளில் மஹாகவி தந்தார்.

அது மட்டுமல்ல.

செய்தல் உன் கடனே – அறம்

செய்தல் உன் கடனே – அதில்

எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே

என்று வேறு விளக்கமாக அவர் இன்னொரு பாடலில் எடுத்துரைத்திருக்கிறார்.

சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது என்ற நீண்ட பாடலில் பகவத்கீதையின் ஆரம்பத்தை அப்படியே இனிய சொற்களால் தரும் பாரதியார், “பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல்

ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக” என்ற கீதாசார்யனின் வரிகளை முன் வைக்கிறார். “க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த. உத்திஷ்ட பரந்தப” என்ற வார்த்தைகளை இப்படி மெய் சிலிர்க்கும் வண்ணம் தருகிறார் அவர்.

ஆக இப்படி பகவத் கீதையில் தோய்ந்த அவரது விளக்கவுரை படிக்கப் படிக்கத் திகட்டாதது. கீதைக்கு அவர் எழுதிய முன்னுரை அபாரமான, அற்புதமான முன்னுரை. ஆகவே பாரதியாரின் பகவத் கீதை நூலை முதலாவதாகப் படிக்கலாம்.

கீதா பிரஸ் கோரக்பூர் பகவத் கீதைக்கு ஆற்றி வரும் அரிய தொண்டு சொல்லில் விளக்க முடியாத ஒன்று.

பகவத் கீதை புத்தகத்தை பல லட்சம் பிரதிகள் அச்சடித்து விநியோகித்து அது ஆற்றி வரும் பணி மெய் சிலிர்க்க வைக்கும் அரும் பணி.

கீதா பிரஸை நிறுவிய ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா அவர்கள், பகவத்கீதைக்கு வழங்கியுள்ள சிறந்த ஆங்கில விளக்கவுரையின் சிறப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இவரது கீதை பற்றிய ஸ்ரீமத் பகவத் கீதை என்ற நூல் கீதை ஸ்லோகத்தின் மூலம், தமிழில் பதவுரை, பொழிப்புரை ஆகியவற்றுடன்   கீதா பிரஸ் வெளியீடாக கிடைக்கிறது. இதை உடனடியாக வாங்கிப் படிக்கலாம்.

அடுத்து காலத்திற்கேற்ப அற்புதமாக கீதையின் சாரத்தை மிக அழகாக விளக்கி சுவாமி சித்பவானந்தர் எழுதிய ஸ்ரீமத் பகவத் கீதை என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அருமையான விளக்கவுரை; எளிய அனைவருக்கும் புரியும்படியான தமிழ்.

திருச்சியை அடுத்துள்ள திருப்பராய்துறையில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடாக அமைந்துள்ள இந்த நூலை உடனடியாக வாங்கலாம்; ஏனெனில் இது ஒரு வாழ்க்கைத் துணைவன்.#

அடுத்து சென்னை ராமகிருஷ்ண மட வெளியீடாக அமைந்துள்ள அண்ணா அவர்களின் பகவத் கீதை புத்தகம் குறிப்பிடத் தகுந்தது. பாரம்பரியத்துடனான அர்த்தத்தை இதில் காணலாம். அண்ணா சுப்ரமண்ய ஐயர் அவர்களின் எந்த நூலும் நல்ல நூலே.

அடுத்து சென்னை லிப்கோ நிறுவனத்தார் வெளியிட்டுள்ள பகவத் கீதை நூலானது, மூல ஸ்லோகத்தையும அதன் கீழ் அர்த்தத்தையும் தரும் ஒரு நல்ல நூல். இதில் தமிழுரையைத் தருபவர் வித்வான் ஸ்ரீ உ.வே. கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள்.

பகவத் கீதை ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிப்பதால் ஏற்படும் பயன் என்ன என்பதை பத்ம புராணம் விளக்குகிறது. அதில் கூறப்படும் கதைகளும் இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.

    பகவத் கீதை பற்றி வினோபா பாவே அவர்களின் நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். 1932ஆம் ஆண்டு வினோபா பாவே மஹாராஷ்டிர மாநிலத்தில் தூலியா என்ற இடத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தனது சக அரசியல் கைதிகளுக்கு பகவத் கீதை என்ன சொல்கிறது என்பதை சொற்பொழிவுகள் மூலம் விளக்கி வந்தார். மராத்தி மொழியிலிருந்து இது தமிழாக்கம் செய்யப்பட்டு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த நூலில் அருமையான உதாரணங்களும், விளக்கங்களும் அடங்கியுள்ளன. இதுவும் படிக்க வேண்டிய ஒரு நல்ல நூலே.

   இன்னும் பல ஆசாரியர்கள் தம் தம் கோணத்தில் கீதையை விளக்க எழுதியுள்ள நூல்களும் பல உள்ளன.

 ஸ்ரீ சத்யசாயிபாபா, ஸ்வாமி விவேகானந்தர், மஹரிஷி அரவிந்தர், சுவாமி சின்மயாநந்தர், சுவாமி ஸ்ரீ பிரபுபாதா உள்ளிட்ட ஏராளமானோரின் உரைகளும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றையும் அவரவர் தம்தம் வசதிக்குத் தக வாங்கி கீதை பற்றிய நூலகத்தையே வீட்டில் அமைத்து கீதையில் ஆழ்ந்து மூழ்கலாம்.

ஜய பகவத் கீதே ஜய பகவத் கீதே என்று பாடி கீதையை ஆராதித்து கீதை காட்டும் பாதையில் கண்ணனையே சரணாகதியாக அடையலாம்.

நன்றி, வணக்கம்.

tags – பகவத் கீதை, தமிழில், தமிழ்

***

கீதையைப் படிக்காத வாழ்வு வீணே! (Post No.2837)

Srimad_Bhagavad__gita

Article written by S.NAGARAJAN

 

Date: 25 May 2016

 

Post No. 2837

 

Time uploaded in London :–  5-52 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

 

கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

 

ச.நாகராஜன்

la bhagavad gita

ஹிந்து மதத்தின் உயரிய நூல் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. ஆதி சங்கரர் ‘பகவத் கீதா கிஞ்சித தீதா என்று கூறி பகவத் கீதையைக்  கொஞ்சமாவது படியுங்கள் என அருளுரை பகர்ந்துள்ளார்.

 

கீதையின் பெருமையைக் கூறும் சுலோகங்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் இரு சுபாஷித சுலோகங்களை இங்கு பார்ப்போம்.

 

கீதா சுகீதா கர்தவ்யா கிமன்யை: சாஸ்த்ரசிந்ததே:   I

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்யாத் வினி:ஸ்ருதா:  I I

 

இதன் பொருள்:- கீதை திருப்பித் திருப்பி ந்ன்றாகப் படிக்கப் பட வேண்டும். மற்ற சாஸ்திரங்களை எண்ணி என்ன பிரயோஜனம்? ஏனெனில் இது பதமநாபனின்  முக கமலத்தினின்றே வந்த ஒன்றல்லவா?

ஆக கண்ணனின் முகத்திலிருந்து வந்த அரிய நூலில் இல்லாத விஷயம் வேறு எதில் இருக்கப் போகிறது?

இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-

 

The Bhagavat Gita should be repeatedly recited well; of what use are thoughts about other scriptures? For, it has come out of the lotus-mouth of the Lord Krishna (the Lotus-navelled one) Himself. (Tranlation by S.B.Nair)

 

இன்னொரு ஸ்லோகம் மஹாபாரதத்தில் உள்ள அரிய விஷயங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அதில் முதலிடத்தைப் பிடிக்கிறது கீதை.

 

கீதா விதுரவாக்யானி தர்மா: ஷாந்தனவேரிதா:    I                 ந ஸ்ருதா பாரதே யேன: தஸ்ய ஜன்ம நிரர்த்தகம்  II

 

இதன் பொருள்:- எவன் ஒருவன் ம்ஹாபாரதத்தில் கீதையையோ , விதுரனின் வாக்கியங்களையோ, தர்மத்தைப் பற்றிய பீஷமரின் பொருளுரைகளையோ படிக்கவில்லையோ அவனது வாழ்வு பூமியில் வீணே!

கண்ணனின் கீதை

விதுரனின் அரத்தமுள்ள நீதி

பீஷ்மரின் தர்மோபதேசம்

ஆகிய இவை மஹாபாரதத்தின் சாரமாக அமைந்துள்ளதால் இவற்றைப் பட்டியலிட்ட கவிஞர் இதைப் படியுங்கள் என்று சொல்லி, இவற்றைப் படிக்காத வாழ்வு வீணே என்கிறார்  முத்தாய்ப்பாக!

 

இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-

 

He who has not listened to the Bhagavat Gita , the speeches of Vidura and the disquisitions on Dharma by Bhishma  in the Mahabharata has his birth on the earth in vain. (Tranlation by S.B.Nair)

 

 

கீதையைப் படிப்போம்;

வாழும் வழி அறிந்து அந்தப் பாதையில் செல்வோம்

உயர்வோம்!

*********

தோன்றிற் புகழொடு தோன்றுக! உத்திஷ்ட! யசோ லப !!

Srimad_Bhagavad__4c53e78e9a0a5

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1440; தேதி 27 நவம்பர், 2014.

பகவத் கீதையில் கண்ண பிரான் உலக மக்களுக்கு ஒரு கட்டளை இடுகிறான்:
உத்திஷ்ட ! யசோ லப !!
எழுந்திரு ! புகழ் அடை!! (பகவத் கீதை 11-33)

இதையே வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான்:

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236

பொருள்:- ஒருவன் பிறந்தால் புகழ் அடையவேண்டும் என்ற அவாவோடு – அதற்குரிய குண நலன்களுடன் பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதார் பிறக்காமல் இருத்தலே நல்லது.

கண்ணனும் இதே கருத்தையே வலியுறுத்துவான். அர்ஜுனன் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி யுத்தம் செய்யாமல் தப்பிக்கலாம் என்று பார்க்கிறான். கண்ணன் விடவில்லை. பலவிதமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லி வழிப்படுத்தப் பார்க்கிறான்.

பகவத் கீதையில் உத்திஷ்ட! (எழுந்திரு) என்று கண்ண பிரான் குறைந்தது நாலு முறையாவது கட்டளை இடுகிறான். அதாவது, நமது ஊரில் சண்டித்தனம் செய்யும் மாட்டை மாட்டு வண்டிக்காரன் விரட்டுவது போல எழுந்திரு என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கிறான்.
Srimad_Bhagavad__4bfd17abd98d4

இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குச் சண்டை போட நம் ஊர் உசிலம்பட்டி இளைஞரை அனுப்புகிறோம். அவர் முதல் நாள் இரவு மஹாத்மா காந்தி புத்தகத்தையும் புத்த பகவான் சரித்திரத்தையும் படித்துவிட்டு அடாடா! நாளைக்கு நாம் துப்பாக்கியே எடுக்கக்கூடாது என்று சண்டித்தனம் செய்தால் அவருடைய பாட்டாளத்தின் மேஜர் அவருக்குத் தக்க தண்டணை கொடுப்பார். அவர் அஹிம்சைக்காக ராணுவத்தில் சேரவில்லை. துஷ்டர்களுக்கு ஹிம்சை தருவதே அவர்தம் கடமை.

“சுடச் சுடரும் பொன் போல ஒளிவிடும்” — என்ற உவமையை வள்ளுவன் ஞானிகளுக்குப் பயன்படுத்துவான்.
உசிலம்பட்டி இளைஞருக்கும் அதே வரிகள் வேறு பொருள் தரும். அவர் ஆட்களைச் சுடச் சுட— (சுட்டுத் தள்ளத் தள்ள) — பொன்= தங்கப் பதக்கம் ஒளிரும். அதாவது நிறைய பேரைக் கொன்றால் அவருக்கு தங்கப் பதக்கம் மட்டுமா, ‘’பரமவீர சக்ரம்’’ கூடக் கிடைக்கும்.

AriseAwake_p
ராஜீவ் காந்தியையும் இந்திரா கந்தியையும் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை அளிக்க ஒரு நீதிபதி கருணையின் காரணமாகத் தவறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். ராணுவ வீரனானாலும் நீதிபதி யானாலும் அவரவர் சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். போர் வீரன் க்ஷத்ரிய தர்மத்தையும் நீதிபதி ஒரு சட்ட தர்ம (ஸ்மிருதி) நூலையும் பின்பற்ற வேண்டும்.

ஒருவனை ஒருவன் கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். அவனே போரில் பல ஆட்களைக் கொன்றால் அவனுக்கு மிகப்பெரிய ராணுவ விருது கிடைக்கும். அது க்ஷத்ரிய தர்மம். உலகம் முழுதுமுள்ள நடை முறை. அதே போல நாம் ஒருவரைக் கொன்றால் ஒரு புறம் சட்டம் நம்மை விரட்டும், மறுபுறம் பாவம் நம்மை விரட்டும். ஆனால் ஒரு நீதிபதி அவரது பதவிக் காலத்தில் நூறு பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவரைப் பாவம் ஒட்டாது. கடமையைச் செய்ததற்குப் புண்ணியமே கிடைக்கும். தூக்கு மேடைப் பொறுப்பாளன் எத்தனை பேர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினாலும் அவனை பாவம் ஒட்டாது. அவன் விருப்பு வெறுப்பின்றி தன் கடமையைச் செய்கிறான்.

இவ்வளவு சின்ன விஷயத்தை அர்ஜுனனுக்குப் புரிய வைக்க, பாவம்! கிருஷ்ண பரமாத்மா படாதபாடு பட்டார். அர்ஜுனனைச் சமாதானப் படுத்த அவர் 1400 வரிகள் பேச வேண்டியதாயிற்று. அதுவும் நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இந்து மத தத்துவங்களை ஒட்டு மொத்தமாக ‘’ஜூஸ்’’ பிழிந்து, அதில் சர்க்கரையையும் தேனையும் சேர்த்து, வாசனைக்கு ரோஸ் எசன்ஸையும் விட்டது போன்ற பகவத் கீதை நமக்குக் கிடைத்திருக்குமா?

malaysia_stamp_vivekananda
கீதையில் இதற்கு முன் சொன்ன உத்திஷ்ட பகுதிகளும் சுவையானதே.
இரண்டாம் அத்தியாயத்தில் (2-3)

க்லைப்யம் மாஸ்மகமஹ = சீ ! சீ ! பேடித்தனத்தை விட்டு எழுந்திரு – என்று கொஞ்சம் அதட்டல் மிரட்டலாகவே பேசி விடுகிறார் கண்ணன்.

இன்னும் ஒரு இடத்தில் இதோ பார்! இந்த அத்தைப் பாட்டி கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லாதே. “போரில் இறந்தால் வீர சுவர்க்கம்- வெற்றி பெற்றாலோ மாபெரும் சாம்ராஜ்யம்! எழுந்திரு! நண்பா! (2-37) என்கிறார்.

4-41-ல் வரும் உத்திஷ்ட அஞ்ஞானத்தை ஞானம் என்னும் வாளால் வெட்டிவிட்டு என்று குறள் கொடுக்கும் ஆன்மீக உத்திஷ்ட ஆகும்.

பகவத் கீதை ஒரு அதிசயமான நூல். எல்லா இடங்களிலும் அர்ஜுனனுக்கு சுதத்திரம் தருகிறார் கண்ணன் —- கொஞ்சம் அதட்டுகிறார், மிரட்டுகிறார், உருட்டுகிறார் —- ஆயினும் இறுதியில் நண்பனே! உனக்கு எது நல்லதோ அதைச் சொல்லிவிட்டேன். ஆயினும் உன் இஷ்டம்!! என்று அவனையே முடிவு எடுக்க அனுமதிக்கிறார். அதாவது நம் வீட்டில் அப்பா அம்மா நமக்கு எப்படி அதட்டியும் உருட்டியும் மிரட்டியும் அன்பாகவும் பண்பாகவும் சொல்லுகிறார்களோ அதே ‘’டெக்னிக்’’கைத் தான் – உத்தியைத் தான் – கண்ணனும் பின்பற்றுகிறான்.

bhagavad-gita

எப்படி திருக்குறளை திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது பொருள் கிடைக்குமோ அப்படி — தொட்டனைத்தும் மணற்கேணி என — பகவத் கீதையை அதிகாலையில் படிக்கையில் புதுப்புது பொருள் தோன்றும். ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் எழுதிய பகவத் கீதை பேருரை அல்லது சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய உரை இருந்தால் போதும். ஆங்கிலத்தில் சின்மயானந்தா உரை போதும்.

புத்தகம் இருந்தாலே நீங்களும் ஞானம் என்னும் ஏணியில் முதல் படியில் கால் எடுத்து வைத்ததாகக் கருதலாம்.
–சுபம்—

பகவத்கீதையின் ஒரு பதம்!

 

Written By ச. நாகராஜன்

 

பாபாவின் கேள்வி! 

ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தரான என்.ஜி.சந்தோர்கர் (நானா) ஒரு முறை பாபா மசூதியில் இருக்கையில் அவர் கால்களை அமுக்கியவாறே ஸ்லோகம் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சந்தோர்கர் சங்கராசார்யரின் கீதை பாஷ்யத்தை நன்கு பயின்றவர். சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தெரிந்து கொண்டு அதில் நல்ல புலமை பெற்றவர்.

பாபா அவரிடம் கேட்டார்: “நானா! என்ன முனகுகிறாய்?”

நானா: ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம்

பாபா: என்ன ஸ்லோகம்?

நானா: பகவத்கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம்

பாபா: தெளிவாகக் கேட்கும்படி உரக்கச் சொல்லு

 

ஒரே ஒரு ஸ்லோகமும் அதன் உண்மையான விளக்கமும்

 

நானா பகவத்கீதையில் நான்காம் அத்தியாயத்திலிருந்து 34ஆம் ஸ்லோகத்தை உரக்கக் கூறினார்.

“தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்னேன ஸேவயா I

உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந:II”

 

பாபா; நானா, இதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?

நானா: புரிகிறது

பாபா; அப்படியானால் அதன் அர்த்தத்தைச் சொல்லு.

 

“சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவை புரிந்து ஞானம் என்பதைக் கற்றுக் கொள்.பிறகு உண்மை அல்லது சத்வஸ்துவைப் பற்றித் தத்துவம் அறிந்த  ஞானிகள்  உனக்கு உபதேசம் செய்வார்கள்” என்று நானா இவ்வாறு ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கூறினார்.

பாபா: நானா! பொதுவான அர்த்தத்தை நான் கேட்கவில்லை. இலக்கணவிதிகளின் படி எச்சம்,வேற்றுமை,காலம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வார்த்தையாக விளக்கி அர்த்தத்தைக் கூறு,

பாபாவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணம் என்ன தெரியும் என்ற வியப்புடன் நானா அப்படியே விரிவாக விளக்கினார்.

 

பாபா:ப்ரணிபாதம் என்றால் என்ன?

நானா:நமஸ்காரம் செய்வது!

பாபா: பாதம் என்றால் என்ன?

நானா:அதே அர்த்தம் தான்!

பாபா; பாதத்திற்கும் ப்ரணிபாதத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்றால் வியாஸர் அனாவசியமாக  தேவையற்று (‘ப்ரணி’ என்று) இரண்டு எழுத்துக்களைச் சேர்த்திருப்பாரா?

நானா: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை!

 

பாபா:சரி,ப்ரஸ்ன என்றால் என்ன?

நானா:கேள்வி கேட்பது

பாபா: பரிப்ரஸ்ன என்றால் என்ன?

நானா: அதே அர்த்தம் தான்!

பாபா: இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தான் தருகின்றன என்றால் வியாஸருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது நீளமான வார்த்தையைப் போட?

நானா: எனக்கு என்னமோ இதற்கு மேல் என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று புரியவில்லை!

 

பாபா: சரி சேவா என்றால் என்ன?

நானா:சேவா என்றால் சேவை தான் இதோ கால் பிடிப்பதைப் போல!

பாபா:இதை விட வேறு ஒன்றும் இல்லையா?

நானா: இதற்கு மேல் இதில் என்ன அர்த்தம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை!

 

அந்த ஒரே ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலானார் –

ஞானமே ஒருவனது இயற்கை நிலை. அப்படிப்பட்ட இயற்கை நிலையான ஞானத்துடன் இருக்கும் ஜீவனான அர்ஜுனனுக்கு ஞானம் காட்டப்படும் என்று இரண்டாம் அடியில் ஏன் கிருஷ்ணர் சொல்ல வேண்டும்? என்று கேட்ட பாபா பின்னர் ஞானம் என்ற வார்த்தைக்கு முன்னால் ஒரு அவக்ரஹத்தைச்  (அதாவது ஒரு “அ” வைச்) சேர்க்கச் சொன்னார்

 

 

சங்கராசார்யர் பாஷ்யத்தில் இது இல்லையே என்றார் நானா பாபாவோ இப்போது பொருள் நன்றாகப் புரியும் பார் என்று விளக்கலானார்.அதிசயித்துப் போன சந்தோர்கர் ஒன்றும் தெரியாது என்று நினைத்த பாபாவின் விளக்கதைக் கேட்க ஆரம்பித்தார். அருகிலிருந்தோர் அனைவரும் பாபா அருகில் குழுமி விட்டனர்.

பாபா தொடர்ந்தார் :-

 

“இந்த ஸ்லோகம் எப்படி ஒரு சிஷ்யன் ‘மெய்யை” அனுபவத்தில் அறிய தன் குருவை அணுக வேண்டும் என்பதை விளக்குகிறது..ஒரு சிஷ்யன் தனது உடல்,மனம்,ஆன்மா ஆகிய மூன்றையும் முழுதுமாக அர்ப்பணித்து குருவை அணுக வேண்டும்.

இந்த முழு சமர்ப்பண நிலையுடன் நமஸ்காரம் செய்யப்பட வேண்டும். இதுவே ப்ரணிபாதம்!

 

 

அடுத்து குருவிடம் சாதாரணமாகக் கேள்வி கேட்பது மட்டும் போதாது.தேவையற்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது. வெறும் ஆர்வத்தினால் எழப்பட்ட கேள்விகளாக அவைகள் இருக்கக் கூடாது.தவறான அணுகுமுறை மூலம் அவை கேட்கப்படக் கூடாது. அவருடைய பதிலில் என்ன தவறுகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற முறையற்ற தூண்டுதல் இருக்கக் கூடாது. முன்னேற்றம் மற்றும் முக்தியை அடைவதற்காகக் கேள்வியின் நோக்கம் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும்.மேலும் கேள்விகள் மீண்டும் மீண்டும் முழுப் பொருளையும் உணரும் வரை கேட்கப்பட வேண்டும். (குடைந்து குடைந்து கேட்க வேண்டும்!) இதுவே பரிப்ரஸ்னம்!!

 

அடுத்து சேவை என்பது வெறும் தொண்டு மட்டுமல்ல. நல்ல விளைவை ஒருவன் பெற வேண்டுமானால் அவன் சேவையைச் செய்வதற்கும் அல்லது மறுப்பதற்கும் அலை பாயும் எண்ணத்துடன் இருக்கக் கூடாது.தனது உடலின் எஜமானன், தான் என்ற உணர்வு அவனுக்கு இருக்கக் கூடாது. அவனது உடல் குருவினுடையது. அவருக்குச் சேவை செய்வதற்கு மட்டுமே அது இருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு இருக்க வேண்டும்.

 

அடுத்து ஞானம் என்பது அனுபூதி பெறுதலாகும். அது சத் வஸ்து.அதை வாக்காலோ அல்லது மனதாலோ அடைய முடியாது.ஆகவே குருவின் உபதேசம் கூட அஞ்ஞானம் தான்! என்றாலும் கூட முள்ளை முள்ளால் எடுப்பது போல இந்த குருவின் உபதேசம் என்னும் அஞ்ஞானம்  மற்ற எல்லா அஞ்ஞானத்தையும் போக்கித் திரையைத் தூக்கி ஆன்மாவைக் காண்பிக்கும் இது இலேசில் நடக்கக் கூடிய காரியமல்ல. நீண்ட நெடுங்காலம் அஞ்ஞானத்தில் மூழ்கி இருந்ததால் ஜென்ம ஜென்மம் தோறும் தொடர்ந்து வந்த அது (மிக்க முயற்சியினாலேயே) நீக்கப்பட வேண்டும்.

 

நீண்ட விளக்கத்தைக் கூறிய பாபா நிறுத்தினார். நானாவும் அங்கிருந்த இதரரும் விக்கித்துப் பிரமித்தனர். இதைத் தொடர்ந்து தினம்தோறும் பாபா பகவத்கீதையை நானாவிற்கும் மற்றவருக்கும் விளக்கலானார்.

 

பாபா எப்படிப்பட்ட மகோன்னதமான ஞானஸ்தர்,சம்ஸ்கிருத பாஷா விற்பன்னர் என்பதை அனைவரும் உணரும் வாய்ப்பாக இந்த சம்பவம் அமைந்தது. அத்தோடு சுமார் இருபது லட்சம் வார்த்தைகளைக் கொண்டுள்ள மஹாபாரதத்தில் வியாஸர்  இரண்டு அட்சரங்களைக் கூட வீணாகச் சேர்க்க மாட்டார் என்ற நம்பிக்கையைக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு இந்தச் சம்பவம் விளக்கியது. கணபதியையே பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்று நிபந்தனை போட்ட வியாஸரின் சொற்கள் ஒவ்வொன்றும் ஆழமாயும் அர்த்தம் உள்ளதாயும் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள பாபா செய்த அருள் நிகழ்ச்சி இது.

 

ராமரும் கிருஷ்ணரும் உண்மையில் வாழ்ந்தவர்களா?

ஒரு சமயம் அப்பா குல்கர்ணி என்ற பக்தர் பாபாவை அணுகி புராணங்கள் உண்மை தானா என்று கேட்டார்.”ஆம்” என்றார் பாபா. ராமரும் கிருஷ்ணரும் கூட உண்மையில் வாழ்ந்தவர்களா என்று மேலும் கேட்டார் அவர். ஆமாம்.அவர்கள் பெரும் மஹாத்மாக்கள்.அவர்களே கடவுள்.!அவதாரங்கள்!” என்று பதில் கூறி பக்தர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஐயத்தையும் போக்கி அருளினார் அவர்.

 

விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமை

ஒரு முறை ஜுரத்தினால் பாபா அவஸ்தைப்படுவதைப் பார்த்த பக்தர்கள் திகைத்தனர்.விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தைக் கொண்டு வரச் சொல்லி அதைத் தன் மார்பின் மீது பாபா வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ஜூரம் போயிற்று. மஹாபாரதத்தில் இடம் பெறும் விஷ்ணுசஹஸ்ரநாம மஹிமையை உலகினருக்கு உணர்த்த அவர் செய்த அருள்விளையாடல் இது!

 

ப்ரணிபாதம், பரிப்ரஸ்னம், சேவை

ஒரே ஒரு கீதை வார்த்தைக்கே இப்படி ஆழ்ந்த பொருள் இருப்பதை மஹான்கள் விளக்கம் மூலமாக அறிய வேண்டி இருக்கிறது! முழு வேத,இதிஹாஸ புராணங்களையும் எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுவது இயல்பே!

 

இந்தக் கேள்விக்கு விடை இந்த ஸ்லோகத்திலேயே இருக்கிறது.

ப்ரணிபாதம், பரிப்ரஸ்னம், சேவை மூலமாகத் தான்!

****************

ஞான ஆலயம் மாத இதழில் வெளிவந்த கட்டுரை. Written my brother Santanam Nagarajan