பெண்கள் வாழ்க – பகுதி 1 (Post No.9410)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9410

Date uploaded in London – –22 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us

பெண்கள் வாழ்க – பகுதி 1 (Post No.9410)

.6-1-2002-ல் எழுதத் துவங்கிய நூல் . இந்த நூல் முடிவுபெறவில்லையாயினும் ஒவ்வொரு அத்தியாயமும் இன்றும் பொருத்தமானவையே . 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனிலுள்ள ஒரு மருத்துவ மனையில் (பிளாஸ்டோ ஹாஸ்பிடல் , கிழக்கு லண்டன் PLAISTOW HOSPITAL IN EAST LONDON) ) “குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவுகளும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளும் DOMESTIC VIOLENCE AND HEALTH PROBLEMS) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடந்தது. நானும் ஒரு பிரதிநிதியாகக்  கலந்துகொண்டேன். கருத்தரங்கு நடந்த இடத்தில் பல துண்டுப்  பிரசுரங்களைக் கொடுத்தனர்.உலகம் முழுவதும் புழங்கும் பெண்களை மட்டம்தட்டும் பழமொழிகள் அடங்கிய ஒரு துண்டுப்  பிரசுரமும் இருந்தது. இங்கு வந்துள்ள

tags– பெண்கள் வாழ்க,  பகுதி 1

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1 (Post No 2779)

hindu-zodiac

Date: 4 May 2016

 

Post No. 2779

 

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.ஆ

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1

 

.நாகராஜன்

star2

நட்சத்திர தலங்கள்

ஹிந்து அற நூல்கள் காட்டும் வழிகாட்டுதலின் படி 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே. அவரவரக்கு உரிய காலத்தில் உரிய பலனை வழங்கும் அற்புத ஆற்றலை அவை கொண்டிருக்கின்றன.

இந்த 27 நட்சத்திரங்களும் பூஜித்த தலங்கள் இந்தியாவெங்கும் உள்ளன. இவற்றைத் தனது இடையறாத ஆய்வால் கண்டு தமிழ்த்தாத்தா ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

அதிகாரபூர்வமான ஆய்வு என்பதால் இதில் உள்ள சிறப்பை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நட்சத்திரங்கள் பூஜித்த தலங்கள் வருமாறு:-

 

அசுவதி –  திருக்கடையூர்

மயிலாடுதுறைதரங்கம்பாடி இரயில் கிளைப்பாதையில் 22 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: அமிர்தகடேசர். இறைவி அபிராமி அம்மை. அமிர்த புஷ்கரணி உள்ள தலம். எம சம்ஹாரம் நடந்த தலம். சித்திரை மாதம் 18 நாட்கள் நடக்கும் விழாவில் மக நட்சத்திரத்தில் இத்திருவிழா சிறப்புற நடக்கும்.

 

பரணிஸ்ரீ வாஞ்சியம்

ஸ்ரீ வாஞ்சியம்: கங்கை குப்தமாக (மறைவாக) வசிக்கப்பெற்ற தலம்.சுவாமி சூலத்தால் குத்தி உண்டாக்கப்பெற்றது. சூலம் குத்திய அடையாளமாக மூன்று கிணறுகள் இங்கு உண்டு. யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். லட்சுமி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த தலம். சந்தன விருட்சம் பிரகாரத்தில் இருக்கிறது. கோவிலின் வடக்கில் உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்நானம் செய்வது விசேஷம். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு யம வாதனை இல்லை. கோவிலில் யமனுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சுவாமிக்கு யமவாகனம் உள்ளது.காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் தென்னாட்டுத் தலங்கள் ஆறினுள் ஒன்று. (இதர ஐந்து தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மாயூரம், திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு)

 

கார்த்திகைசரவணப் பொய்கை, காசி, அருணாசலம்

காசி:மோட்சபுரிகள் ஏழில் நடு நாயகமாக விளங்கும் தலம். இந்தப் பிறவியிலேயே முக்தி தரும் சிறப்புடைய தலம். பிரளய காலத்தில் மூலப் பொருள், அனைத்தையும் ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது. அதைப் பத்திரப்படுத்தும் இடம் காசி. சாலோக்யம், சாரூப்யம், சாந்நித்யம் சாயுஜ்யம் என்ற நான்கு வகை முக்திகளில் இறைவனே ஆதல் என்ற சாயுஜ்ய  முக்தி தரும் தலம். ஜைன மதத்தைத் தோற்றுவித்த பார்சுவநாதர் பிறந்த இடமும் இதுவே.

 

ரோஹிணி – ஆனைக்கா, எல்லா விஷ்ணு தலங்களும்

திரு ஆனைக்கா : காவிரியின் வடபுறம் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அப்புலிங்க தலம்.சுவாமி பெயர் – ஜம்புகேஸ்வரர். அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.இங்கு ஒரு யானையும் ஒரு சிலந்தியும் பூஜை செய்து கொண்டு வந்தன.வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேல் கூடு கட்டும். யானை தினமும் காவேரி ஸ்நானம் செய்து துதிக்கையில் காவேரி தீர்த்தம் ஏந்தி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும். சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். இதைக் கவனித்து வந்த சிலந்தி ஒரு நாள் கோபம் கொண்டு யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடிக்கவே  யானை வலி பொறுக்க முடியாமல் புரண்டு துடித்து மரணம் அடைந்ஹது. சிலந்தியும் மாய்ந்தது.இச்சிலந்தி மறு ஜன்மத்தில் கோச்செங்கணான் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை ஏறி வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

இங்கு தவம் செய்து வந்த ஜம்பு மஹரிஷி தலையில் நாக மரம் உண்டாயிற்று. தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்த படியால் இது ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. இந்த தலத்தை ஜம்புகேஸ்வரம் என்று அழைப்பர். பஞ்ச பிரகாரங்கள் உள்ள இந்தக் கோவிலில் அம்பாள் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இரண்டாம் பிரகாரத்தில் ராமபிரானால் கட்டப்பட்ட பெரிய மண்டபம் உள்ளது.

தொடரும்

உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 1 (Post No 2728)

todu spare1

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2728

 

Time uploaded in London :– 21-02

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

மொத்தம் 64 கட்டங்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு தொடலாம் அல்லது ஒரு சிறுவனைக் கொண்டு தொடச் சொல்லலாம். அல்லது ஜோதிடம் கேட்க வருவோரை 111 அல்லது அதற்கு மேலே ஒரு எண்ணைச் சொல்லும்படி கேட்கலாம். பின்னர் ஒவ்வொரு எண்ணுக்குமுள்ள பாடலைப் படிக்கவும். சுருக்கமான பொருளும் கொடுக்கப்பட்டுளது.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

toduspare2

 

toduspare3

 

toduspare4

 

todu5

 

todu6

 

todu7

 

todu8

 

todu9

 

todu10

 

todu11

 

todu12

 

 

தொடரும்………………….

இரண்டாம் பகுதிக்குச் செல்க.

–சுபம்–

 

 

ஆய கலைகள் 64 எவை? முழு விளக்கம், விவரங்கள் (Post No.2696)-1

chatus-shasti-kala

Compiled by london swaminathan

Date: 5 April, 2016

 

Post No. 2696

 

Time uploaded in London :–  14-58

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Previous articles on 64 Arts:

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !! ( 4 May 2014)

 

Wonderful Syllabus for Women (Posted on 4 May 2014)

பெண்களின் 64 கலைகள்! (29 May 2012)

Techniques of Secret Writing in India ( 19 March 2013)

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி ( 19 March 2013)

 

 

 

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே

இருப்பள் வாராதிங்கு இடர்.

 

அறுபத்து நான்கு கலைகள் எவை, என்ன என்பது பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிவிட்டன. ஆனால் இது வரை யாரும் முழு விவரங்களை வெளியிடவில்லை; வெறும் பட்டியலை மட்டுமே வெளியிட்டனர். எனது பிளாக்கிலும் ஐந்து ஆண்டுகளாக பல கட்டுரைகள் உள்ளன. இது தவிர பெர்fயூம் கட்டுரை, இந்திரஜால் என்னும் மாஜிக் பற்றிய கட்டுரை, அவதானம் பற்றிய கட்டுரைகளிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் முதல் தடவையாக 64 கலைகள் குறித்தும் 1918 ஆம் ஆண்டில் பி,வி,ஜகதீச ஐயர் எழுதிய நூலிலிருந்து முழு விவரங்களும் கிடைத்துள்ளன.  உ.வே.சாமிநாத அய்யர் எழுதிய கலைகள் என்ற கட்டுரையில் பல தமிழ் நூல் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மணிமேகலையில் ஆடலில் வல்ல பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய கலைகள் பற்றி வந்துள்ள பாடலை அவர் தந்துள்ளார். இதோ ஜகதீச அய்யர் நூல் தரும் தகவல்கள்; இது வேறு எந்த என்சைக்ளோபீடியாவிலும் இல்லாதவை:–

 

64 art-1

64 art-2

64 art-3

64 art-4

 

64 art-5

64-art-6

 

64 art-7

 

64 art-8

64 art-9

 

64 art-10

64 art-11

64 art-12

தொடரும்—–

 

 

 

 

 

விவேகானந்தரின் அற்புத அனுபவங்கள் – பகுதி 1(Post No. 2525)

விவேகா-அனிடஸ் மரியா

Written by S Nagarajan

 

Date: 10 February 2016

 

Post No. 2525

 

Time uploaded in London :–  6-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)

 

ச.நாகராஜன்

 

 விவேகா

சித்திகளைக் கண்டு மயங்காதே!

 

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கை நெடுக தனது அற்புதமான தவ ஆற்றலால் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் உண்டு. அதீத உளவியல் சம்பந்தமாக அவர் அடைந்த அனுபவங்களும் ஏராளம் உண்டு. தனியே பெரிய நூலாகத் தொகுக்க வேண்டியவை இவை.

 

இந்த சிறு கட்டுரைத் தொடரில், ஒரு அறிமுகமாக, அவரது ஆற்றல்களையும அவர் அடைந்த அனுபவங்களையும் காணலாம். இதைப் படித்ததன் மூலம் அவரைப் பற்றி இன்னும் முற்றிலுமாக அறிய உத்வேகம் ஏற்பட்டால் அதுவே இந்த கட்டுரைத் தொடரின் பயனாக அமையும்.

முதலில் சித்திகள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியதை இங்கு நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

பரமஹம்ஸர் சித்திகளைக் கண்டு மயங்காதே என்று தெளிவாகப் பலமுறை கூறியுள்ளார். அதற்கு மதிப்புக் கொடுக்காதே; அதையும் தாண்டி உள்ள மஹாசக்தியை நாடு என்பதே அவரது அருளுரை.

 

இதையே ஸ்வாமிஜியும் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.

 

ஆனால் பெரும் அவதாரங்கள் தோன்றும் போது அளப்பரிய ஏராளமான ஆற்றல்கள் அவர்களுடன் இயல்பாகவே தோன்றும். இப்படி அற்புதங்களைத் தாம் ஆற்றியதாகவே அவர்கள் கூற மாட்டார்கள்; அவர்கள் இதை அறிவதும் இல்லை, போலும். மற்றவர்கள் கூறும் போது, அப்படியா என்று வியப்பது வழக்கம்!

இந்தக் கருத்தை பகவான் ரமண மஹரிஷியும் அழுத்தம் திருத்தமாக அடிக்கடி கூறியுள்ளார்.

 

லாஸ் ஏஞ்சல்ஸ் உரை ; நினைத்ததைச் சொல்பவர்!

ஸ்வாமிஜி கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி மனத்தின் சக்திகள் (The Powers of the Mind : Complete Works of Swami Vivekananda Volume II) என்று அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

அதில், “இயற்கைக்கு மீறிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. அதீதமான நிகழ்வுகளைப் பற்றி நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். சிலருக்கு சொந்த அனுபவங்களும் இதில் உண்டு. எனது சொந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அந்த உரையை அவர் ஆரம்பிக்கிறார்.

ஒரு சமயம் அவர் எந்தக் கேள்வியை மனதில் நினைத்தாலும் அதை அறிந்து கொண்டு அதற்கு உடனே விடை தரும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.  எதிர்காலத்தில் இனி நடக்கப் போகும் சம்பவங்களையும் கூற வல்லவர் அவர்.  ஆர்வம் உந்தவே, சில நண்பர்களுடன் அவரைச் சந்திக்க ஸ்வாமிஜி கிளம்பினார். ஒவ்வொருவரும் தன் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டனர். தவறு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நினைத்தது என்ன என்பதை ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி அதைத் தங்கள் பாக்கட்டில் போட்டுக் கொண்டனர். அந்த குழுவினரைப் பார்த்தவுடனேயே அந்த மனிதர் ஒவ்வொருவரும் என்ன கேள்வியை நினைத்திருக்கிறோம் என்பதைக் கூறி அதற்கான பதிலையும் கூறி விட்டார்.

 

 

பிறகு அவர் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை மடித்து அதில் ஸ்வாமிஜையைக் கையெழுத்திடுமாறு கூறி. “இதைப் பார்க்காதீர்கள். உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

 

பின்னர், “நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ, அது எந்த  மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்! , நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த மனிதருக்குத் தெரியாத சம்ஸ்கிருத மொழியில் ஒரு பெரிய வாக்கியத்தை ஸ்வாமிஜி நினைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த மனிதர், “இப்போது உங்கள் பையில் இருக்கும் பேப்பரை எடுத்துப் பாருங்கள்” என்றார். ஸ்வாமிஜி நினைத்த சம்ஸ்கிருத வாக்கியம் அந்தப் பேப்பரில் அப்படியே இருந்தது.

 

சிவாஜி, விவேகா, நேதாஜி

ஒரு மணி நேரம் முன்னர் அந்தப் பேப்பரில் அவர் எழுதியபோது, “நான் எழுதியதை உறுதி செய்து இவர் அதே வாக்கியத்தை நினைப்பார்” என்று சொல்லி இருந்தார். அது முற்றிலும் சரியாக ஆனது.

 

இதே போல இன்னொரு நண்பர் அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க சற்றும் வாய்ப்பே இல்லாத அராபிய மொழியில், குர் ஆனில் வரும்  ஒரு பகுதியை எழுதி இருந்தார். அது அப்படியே அவர் முன்னரே வைத்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

 

 

இன்னொரு நண்பரோ ஒரு வைத்தியர். அவர் ஜெர்மானிய மருத்துவ புத்தகத்தில் வரும் ஒரு வரியை நினைத்தார். அதுவும் அப்படியே பேப்பரில் எழுதப் பட்டிருந்தது.

 

 

சில நாட்கள் கழித்து  முந்தைய முறை எப்படியோ தான் மயக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்தவாறே ஸ்வாமிஜி மீண்டும் அந்த மனிதரிடம் சென்றார். ஆனால் என்ன ஆச்சரியம், இந்த முறையும் அவர் அப்படியே அந்த நிகழ்ச்சியை அதிசயமாக நடத்திக் காட்டினார்.

 

ஸ்வாமிஜியின் அனுபவங்கள் …       தொடரும்

 

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக ஸ்வாமிஜியின் மூலச் சொற்பொழிவுப் பகுதிகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன.

 

All over the world there has been the belief in the supernatural throughout the ages. All of us have heard of extraordinary happenings, and many of us have had some personal experience of them. I would rather introduce the subject by telling you certain facts which have come within my own experience.

 

I once heard of a man who, if any one went to him with questions in his mind, would answer them immediately; and I was also informed that he foretold events. I was curious and went to see him with a few friends. We each had something in our minds to ask, and, to avoid mistakes, we wrote down our questions and put them in our pockets. As soon as the man saw one of us, he repeated our questions and gave the answers to them. Then he wrote something on paper, which he folded up, asked me to sign on the back, and said, “Don’t look at it; put it in your pocket and keep it there till I ask for it again.” And so on to each one of us. He next told us about some events that would happen to us in the future. Then he said, “Now, think of a word or a sentence, from any language you like.” I thought of a long sentence from Sanskrit, a language of which he was entirely ignorant. “Now, take out the paper from your pocket,” he said. The Sanskrit sentence was written there! He had written it an hour before with the remark, “In confirmation of what I have written, this man will think of this sentence.” It was correct. Another of us who had been given a similar paper which he had signed and placed in his pocket, was also asked to think of a sentence. He thought of a sentence in Arabic, which it was still less possible for the man to know; it was some passage from the Koran. And my friend found this written down on the paper.
Another of us was a physician. He thought of a sentence from a German medical book. It was written on his paper.
Several days later I went to this man again, thinking possibly I had been deluded somehow before. I took other friends, and on this occasion also he came out wonderfully triumphant.

(To be Continued)