மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486)

#WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,486

Date uploaded in London – –   25 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன; மதுரையில் நடந்த மதுரமான நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் அப்படி நடக்கின்றனவா என்று தெரியவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே சீன வைரஸ் தாக்குதலில் இருப்பதால் இப்போது நடக்கவும் வாய்ப்புகள் குறைவு.

மதுரையில் எங்கள் காலத்தில் இருந்த பல நிறுவனங்கள் அழிந்து விட்டன.

முதலில் திருப்பாவையில் துவங்குகிறேன் .

மதுரையில் இருவர் தங்கள் வாழ்க்கையையே திருப்பாவையைப் பரப்புவதற்கு அர்ப்பணித்து இருந்தனர். ஒருவர் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன்; மற்றொருவர் திருமதி சீதாலெட்சுமி பாலகிருஷ்ண ஐயங்கார். .

ராஜம்மாள் சுந்தராஜன் மறைவுக்குப் பின்னர் அவரது வலது கையாக விளங்கிய விசாலாக்ஷி பாவைப் பாடல்களைப் பரப்பினார். அதே போல திருமதி சீதாலெட்சுமிக்குப் பிறகு அவருடைய புதல்வி பத்மாசனி திருப்பாவையைப் பரப்பினார்.

ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி சங்கராச்சாரியார் , திருப்பாவை முப்பதையும் ஒப்பிப்போருக்கு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தனுப்புவார். மாயவரத்தைச் சேர்ந்த திரு ராமமூர்த்தி, மடத்தின் பிரதிநிதி. அவர் எங்கள் வீட்டில் உணவருந்திவிட்டு திருப்பாவைப் பள்ளிகளுக்குச் செல்லுவார். நாங்கள் அந்த வெள்ளிக்காசுகளைக் காட்டச் சொல்லி வியப்புடன் பார்ப்போம். என் தங்கையும் எதாவது ஒரு திருப்பாவைப் பள்ளிக்கு 30 நாட்களும் செல்லுவார்.

திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் ஏராளமான கல்லூரி மாணவிகளையும் கவர்ந்து இழுத்தார். அவர் செய்த நாட்டிய நாடகங்கள் இதற்கு ஒரு கரணம். அந்தக்காலத்தில் வத்சலாபாய் என்ற பள்ளிக்கூட பஸ், பணக்கார வீட்டுப் பெண்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்லும். அந்த பஸ்ஸில் வார விடுமுறை நாட்களில்  பல ஊர்களுக்குச் சென்று அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை நாட்டிய நாடகமாக நடத்திக் காண்பித்தனர். எங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லுவார்கள். அவர்களுடைய  நாட்டிய நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பழனி, தாராபுரம், உடுமலைப் பேட்டை முதலிய இடங்களுக்குத் சென்ற பயணம் இன்றும் நினைவில் நிற்கிறது.

கட்டுரைக்குத் தலைப்பு “மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்” என்று கொடுத்தற்குக் காரணம் எல்லா நாட்களும் நெய் ஒழுகும் பொங்கல், தொன்னையில் கிடைக்கும். திருப்பா வைக்காக வராவிட்டாலும் பொங்கலுக்காக வரும் கூட்டம் கொஞ்சம் இருக்கும். கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – பாடல் அன்று ‘நெய்யில் மிதக்கும்’  சர்க்கரைப்  பொங்கலும் கிடைக்கும்.

மதுரை தானப்ப முதலீத் தெரு டிரஸ்ட் ஹவுஸில் பிரம்மாண்டமான அண்டாக்களில் பொங்கல் வடிப்பர்.

இது தவிர நாங்கள் வசித்த வடக்குமாசி வீதியில் யாதவர்கள் திறம்பட நிர்வகித்த கிருஷ்ணன் கோவில் இருந்தது. அதிகாலை 4-30 மணி முதல் திருப்பாவை மற்றும் பக்திப் பாடல்கள் ஒலி பெருக்கி மூலம் வரும். இந்தப் பாட்டு வந்தால் இத்தனை மணி என்று கடிகாரத்தைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளும் அளவுக்கு கண கச்சித ஒலிபரப்பு .

இது தவிர மீனாட்சி கோவிலில் திருவெம்பாவை, தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் பாடுவார்கள். நட ராஜர் முன்னிலையில் அதிகாலையில் ஞானப் பால் என்ற சுவைமிகு ஏலக்காய், கிராம்பு போட் பால் விநியோகிப்பர். ஆளுக்கு ஒரு உத்தரணி தான்; அதற்கு நீண்ட க்யூ வரிசை. ஆனால் என் தாய் தந்தையர் செய்த புண்ணியம் எங்களுக்கு மட்டும் கோவில் பேஷ்கார் ஒரு பாட்டிலில் தனியாகக் கொடுத்து விடுவார் . எனது தந்தை தினமணிப் பத்திரிகையில் விரிவான ஆன்மீகச் செய்திகளை வெளியிடுவதால் இந்த சிறப்புக் கவனிப்பு..

அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை வெளியிட்டால் அது இளப்பமான விஷயம். ஹிந்து என்ற பெயர்கொண்ட  பத்திரிகை கூட கடைசி பக்கத்தில் மூன்று அங்குலத்துக்கு செய்தி போடுவார்கள்; என் தந்தை வே. சந்தானம் அந்த மரபுகளை உடைத்து எறிந்து முதல் பக்கத்தில் தெய்வீக செய்தி வெளியிடுவார். தினமணியின் ‘இன்றைய நிகழ்ச்சி’யைப் பார்த்தால் அன்றைய தினம் மதுரையில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களும் கிடைத்துவிடும்.

இது தவிர மேலும் ஒரு நிகழ்ச்சி –அதி காலை 4 மணிக்கு பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு 4 மாசி வீதிகளும் மார்கழி மாதம் முழுதும் அன்பர்கள் வீதி உலா வருவர் . இவ்வாறு இரண்டு மூன்று குழுக்கள் செய்ததாக ஞாபகம். அதில் சில நாட்கள் தந்தையுடன் நானும் சகோதரர்களும் கலந்து கொண்டோம்.

மாதத்தில் ஒரு முறை திருப்பாவை ஊர்வலம்  பெரிய அளவில் நடத்தப்படும். இவை தவிர, ந. சீ. சுந்தரராமன் நடத்திய தேவாரப்பள்ளி , திருப்புகழ் தியாகராஜன் நடத்திய திருப்புகழ் சபை, வானமாமலை சகோதரர்கள் நடத்திய தெய்வ நெறிக் கழகம் , மொட்டைக் கோபுர பூசாரி யாழ்கீத சுந்தரம்பிள்ளை நடத்திய பூஜை, மற்றும் கார்த்திகை மாத சங்காபிஷேகம் ஆகியன மதுரையின் தெய்வீக மனத்தை அதிகரித்தன.

மதுரையில் இருந்த 3,4 வேத பாடசாலைகள், தமிழையுயும் ஸம்ஸ்க்ரு தத்தையும் இரு கண்களாகப் பரப்பி வந்த ராமேஸ்வரம் வேத பாடசாலை, வாரத்தில் இரு முறை திலகர் திடலில் நடந்த புகழ்மிகு பிரம்மாண்ட வார சந்தைகள் . புகழ் மிகு ‘பூ மார்க்கெட்’ ஆகியன எல்லாம் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. ‘பவதி பிட்சாம் தேஹி’ என்று வீட்டு வாசலில் உச்சுக் குடுமி தாங்கிய சிறுவர்கள் வந்து பிக்ஷை பெற் றதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழிய (ஆண்டாள்)

திருவெம்பாவை இருபதும் செப்பினார் வாழிய  (மாணிக்க வாசகர்).

–subham–

PICTURES ARE FROM DIFFERENT PLACES; NOT MADURAI

tags- திருப்பாவை , திருவெம்பாவை, பொங்கல் , பஜனை, மதுரை, வெள்ளிக்காசு

கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்!(Post 9467)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9467

Date uploaded in London – –  –7 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்!

ச.நாகராஜன்

ஹஸ்தஸ்ய பூஷணம் தானம் ஸத்யம் கண்டஸ்ய பூஷணம் |

ஸ்ரோத்ரஸ்ய பூஷணம் சாஸ்த்ரம் பூஷணௌ: கிம் பிரயோஜனம் ||

கைகளுக்கு அழகு தானம் கொடுத்தல்; தொண்டைக்கு அழகு ஸத்யத்தையே பேசுதல்;  செவிக்கு அழகு சாஸ்திரங்களைக் கேட்டல்; இவை எல்லாம் இருக்கும் போது வேறு ஆபரணங்களைத் தேடி அலைவது ஏன்?

Charity is an adornment for the hand, speaking the truth is an adornment for the throat, listening of holy texts is an adornment for the ear, (when that exists) why search other ornaments?

 (Translation by Klayana-Kaplataru March 2018 issue)

*

ஆலஸ்யம் ஹி மனுஷ்யானாம் சரீரஸ்தோ மஹா ரிபு: |

நாஸ்த்யுத்யமஸமோ பந்து: க்ருத்வா யம் நாவஸீததி ||

மனிதர்களுக்கு உடலில் குடி கொண்டிருக்கும் சோம்பேறித்தனம் என்பது பெரிய எதிரி. திறனுள்ள வேலையைப் போல ஒரு நண்பனும் இல்லை, ஏனெனில் திறமையுடன் வேலை செய்யும் எவரும் மனச்சோர்வுக்கு உள்ளாவதில்லை.

Laziness indeed is the great enemy of men stationed in the body. There is no friend like diligent work, for who ever works diligently never sinks into depression.

(Translation by Klayana-Kaplataru April 2018 issue)

*

சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்நானமாசரேத் |

லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடி த்யக்த்வா ஹரி பஜேத் ||

நூறு விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் தன் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரம் விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் குளிக்க வேண்டும். லக்ஷம் விஷயங்களை விட்டு விட்டு தானம் கொடுக்கச் செல்ல வேண்டும். ஒரு கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்ல வேண்டும்.

Leaving aside a hundred things one should take his meals, leaving aside a thousand things one must have his bath, letting to a hundred thousand things one must do charity and foregoing a crore things one must worship God.

(Translation by Klayana-Kaplataru May 2018 issue)

*

சேவநீயம் ஸதா ஸத்யம் மனோவசனகர்மபி: |

ஸத்யே சம்சேவிதே ஸ்வர்கா: ப்ராதுர்பவந்தி பூதலே ||

எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் எப்போதும் ஸத்தியத்தையே கடைப்பிடி. ஸத்தியம் முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் போது பூமியிலேயே சொர்க்கம் உண்டாகும்.

Follow truth at all times in thought speech and deed. When truth is followed in its totality, the heavens manifest upon earth.

(Translation by Klayana-Kaplataru June 2018 issue)

*

ஸத்யானுசாரிணீ  லக்ஷ்மி: கீர்திஸ்த்யாகானுசாரிணீ  |

கர்மானுசாரிணீ  புத்திர் வித்யாப்யானுசாரிணீ  ||

ஸத்யத்தை அனுசரித்து லக்ஷ்மி வருவாள். தியாகம் செய்யும் போது கீர்த்தி வரும்; கர்மத்தை அனுசரித்து புத்தி செல்லும். படிப்பைத் தொடர்ந்து வித்யை வரும்.

The Goddess of Fortune comes in the wake of Truth, glory comes in the wake of renunciation, the turn of mind follows the working of Fate and learning is the consequence of studies.

(Translation by Klayana-Kaplataru July 2018 issue)

*

tags-  ஹரி, பஜனை,

பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

24 Bhajan groups in California (USA) joined together for a marathon Bhajan session.

பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

லண்டன் மெட்ரோ பத்திரிக்கையில் 2013 ஜூலை 9ஆம் தேதி ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. கூட்டுப் பிரார்த்தனை செய்வது உடலுக்கு நல்லது.சுவீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.

 

எல்லோரும் கூட்டாக சேர்ந்து உரத்த குரலில் பாடுவது இருதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் ஒழுங்குபடுத்துகிறது. பாடுவதே நல்லது. அதிலும் கூட்டாகப் பாடுவது இன்னும் நல்லது என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

Sri sathya Sai Baba who made Bhajan a household name.

விஞ்ஞானிகள் ஒரு தொண்டர் குழுவை அமைத்து மூன்று வகையான வெவ்வேறு பாடும் பணியைக் கொடுத்தனர். முதலில் தனித் தனியே வாயை மூடிக்கொண்டு குரல் எழுப்பச் சொன்னார்கள் (ஹம் செய்வது அல்லது ரீங்காரம் செய்வது). இதற்கு அடுத்த படியாக ஒரு துதிப் பாடலைப் பாடச் சொன்னார்கள். கடைசியாக ஒரு மந்திரத்தை மெதுவாகச் ஜெபிக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் குழுவின் நாடித் த்டிப்பும் இருதயத் துடிப்பும் கணக்கெடுக்கப்பட்டது.அப்போது இருதயத்தின் செயல் பாட்டூக்கும் பாடும் முறைக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

நீண்ட சொற்கள் கொண்ட பாட்டுக்களைப் பாடுகையில் மூச்சை அடக்கி யோகா செய்யும்போது என்ன பலன்கள் கிடைக்கிறதோ அந்த அளவுக்கு நற்பலன்கள் கிட்டுவதாக  டாக்டர் ஜான் விக்காப் கூறுகிறார்.

 

கூட்டாக சர்ச்சுகளில் பாடுவதோ, கால்பந்து போட்டிகளுக்குப் போகும் ரசிகர்கள் தங்கள் குழுவின் பாடல்களைப் பாடும்போதோ (இங்கிலாந்து போன்ற நடுகளில் கால்பந்து அணிகளுக்கு கீதங்கள் உண்டு) அவர்களுடைய இருதயத் துடிபு அமைதியாக சீராக இருப்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது

 

கோதன்பர்க் பல்கலைகழக ஆய்வுக்குழுத் தலைவர் டாக்டர் விக்காப் பேசுகையில் அடுத்தபடியாக இசை மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராயப்போவதாகக் கூறினார். மூச்சுவிடக் கஷ்டப்படுவோருக்கு பாட்டு சிகிச்சை கொடுத்தால் நால் குணம் கிடக்கும் என்று அவர் நம்புகிறார்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால் பஜனை செய்வது நல்லது, கூட்டுப் பிரார்த்தனை செய்வது நல்லது. சுவாமி சிவானந்தா முதல் சத்ய சாய் பாபா வரை பரப்பிய பஜனை புகழ் பெறும் காலம் வந்துவிட்டது. திருப்புகழ் பஜனையும், தேவாரக் கூட்டுப் பிரார்த்தனையும் பாட திட்டத்தில் இடம்பெறும் காலம் வந்துவிட்டது!


Amma in Houston (USA) doing Bhajan

அந்தக் கால சினிமாப் பாட்டில் சும்மாவா சொன்னார்கள்:

‘’பஜனை செய்தால் மழை பெய்யும்

பக்குவமாகவே, பஜனை செய்தால் மழை பெய்யும்

சுண்டல் வடையுடன், பஜனை செய்தால் மழை பெய்யும்’’

 

நமப் பார்வதி பதயே:— ஹர ஹர மஹாதேவா!

தென்னாட்டுடைய சிவனே போற்றி—

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா!

 

(இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுதுவோர் எழுதியது ‘’லண்டன் சுவாமிநாதன்’’ என்று வெளியிட அன்புடன் வேண்டுகிறேன். தமிழ் எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள்)