லட்சாதிபதியாக 4 சுலபமான வழிகள் !!! (Post No. 8602)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8602

Date uploaded in London – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கால் காசுக்கு ஒரு குதிரை வேண்டும்……

அது கொள்ளும் திங்கக் கூடாது புல்லும் திங்கக் கூடாது

ஆனா காத்ததாகவும் பறக்கணும்…….

எலோருக்கும் பணக்காரனாக வேண்டும், ஆனால் ஒன்றுமே

செய்ய மாட்டேன்…..

சரி, சரி அதற்கும் ஒரு வழி இருக்கத்தான் இருக்கிறது…..

பணம் வேண்டும் , ஆனால் பணம் செலவழிக்க மாட்டேன்

வாங்க PLAN. “A”

நீங்க வைத்துஇருக்கும் சுவாமி ரூமை (room)  சுத்தமாக டெட்டால், சிறிதளவுஉப்பு, பசுஞ் சாணி, ஒரே ஒரு ஸ்பூன் டெட்டால் அல்லது

ஒரே ஒரு ரஸ்பூன் மஞ்சள் தூள் வாளித் தண்ணீரில்

நன்றாக கலந்து கீழே மெழுக வேண்டும் தினசரி……

வீட்டிற்கு விலக்கமான நாட்களில் சுவாமி அறைக்குள்

நீங்கள் செல்லாமல் பையனையோ, பெண்ணையோ

விளக்கேற்ற சொல்லி கொடுக்கவும்

சுமங்கலிகள், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நெற்றி வகிட்டில்  , குங்குமம்இட்டுக் கொண்டுதான் அடுப்பு ஏற்ற வேண்டும்

(குளிக்கவில்லை என்றாலும் சரி)

தினசரி வாசல் (பசுஞ்சாணத்துடன் )தெளித்து கோலமிட வேண்டும்

என்ன முனகல் சத்தம் கேட்குது????

பணம் வேண்டுமென்றால்,

இதையெல்லாம் செய்துதான ஆக வேண்டும்.

ஸ்வஸ்திக்கா (Swastika Sticker) ஸ்டிக்கர் இருந்தால் சுவாமி ரூம் வாசல் கதவிலோ

அல்லது வெளி வாயில் கதவு வெளிப்புறமாகவோ ஒட்ட வேண்டும்

குளித்து விட்டு தான் சுவாமி அறைக்குள் செல்ல வேண்டும்

உங்கள் குடும் த்தினர் அல்லாதவர்களை எந்தக் காரணம்

கொண்டும்   சுவாமி அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்

காலையிலேயும் மாலையிலேயும் (சந்தி காலத்தில்)பூ வைத்து

தீப விளக்கு ஏற்ற வேண்டும்.

தினசரி ஊதுபத்தி அல்லது கம்ப்யூட்டர்

சாம்மிபிராணி பத்தி ஏற்றவும்

வெள்ளியன்று ஐந்து முக விளக்கேற்றி உங்கள்

குல தெய்வத்தை வேண்டி, பின் லட்சுமி ஸ்தோஸ்திரம்

குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது சொல்ல வேண்டும்.

ஏதாவது கல்கண்டு, திராட்சை வைத்து நிவேதனம்

செய்யவும்.

தினசரி 5 நிமிடமாவது காலை அல்லது மாலை வெயில்

வீட்டிற்குள் வருமாறு பார்த்துக் கொள்ளவும். வாயில்

மூலமாகவோ, ஜன்னல் மூலமாவோ……

பாத்ரூம் கதவு எப்பொழுதும் தாழ்ப்பாளிட்டே

இருக்க வேண்டும். உள்ளே சென்றால் வெளியே வந்தால்

காலை அலம்பி விட்டுதான் வர வாண்டும்.

செருப்புகள் எப்பொழுதும் வாயில் படிக்கு வெளியில் தான்

வைக்க வேண்டும் ; வசதி இல்லாதவர்கள் உள்ளேயே

ஒரு மேடை அமைத்து அதன் மேல் வைக்க வேண்டும்்

பூனை, நாய் தூசுகள் எப்போது ம்  மேலே படக்கூடாது.

அப்படியே பட்டாலும் கை, கால் கழவி விட்டே சுவாமி

ரூமிற்குள் வர வேண்டும்

சரி சார்! கிட்டத்தட்ட முக்கால் வாசி நீங்க சொன்ன

மாதிரிதான் எங்க வீட்டில் நடக்குது. ஆனாலும்……

நாங்க கொஞ்சம் செலவானாலும் சரி இன்னும் கூட

கொஞ்சம் பணம் வந்தால் சரி….

xxxx

சரி. வாங்க PLAN “B” க்கு போவோம்

வெள்ளருக்கு வேரில் செய்த விநாயகரை வாங்கி வைத்து

பூஜை செய்யலாம்.

வெள்ளி விநாயகரை வைத்தும் பூஜை செய்யலாம்

வலம்புரி சங்கு பூஜை அறையில வைக்கலாம்

தினசரி தாமரை பூ வைத்து பூஜை செய்யலாம்

சுவாமி பாட்டு ரெகார்ட் செய்து ஸ்லோகங்கள் போடலாம்

வெள்ளி செவ்வாய் அன்று சுண்டல்

போட்டு நிவேதனம் செய்து எல்லோருக்கும் வினியோகிக்கலாம்.

இன்னும் பணம் வருவதற்கு வேறு எதாவது வழியிருந்தால் சொல்லுங்க சாமி!

xxx

சரி வா PLAN “C” க்கு போவோம்

“GARNET” அல்லது “கோமேதகம்” என்னும் கல்லை

வைத்துக். கொண்டால் பணம் வரும்

அல்லது 7 ரதி எடையுள்ள நல்ல வைரம் வாங்கி வைத்ததுக்

கொண்டால் போதும் பணம் நிறைய பணம் வரும்

சாமி இன்னும் நிறைய பணம் வர

Xxxx

280 KILO GOLDEN THROWN IN MYSORE PALACE; IT BELONGS TO PANCHA PANDAVAS.

PLAN. “D” ஏதாவது இருக்கா????

இருக்கடா ….இருக்கு…..துப்பாக்கிய எடுத்திட்டு போயி பேங்கில

காமி! நிறைய பணம் வருண்டா வரும்!!

ரத்தம்கொதிக்க ஜோதிடர் பாடிக் கொண்டே போகிறார்

அஎவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்

அவனும் திருடனும் ஒன்றாகும்

வரவுக்கு மேலே செலவு செய்தால்

அவனும் குருடனும் ஒன்றாகும்

களவுக்கு போகும் பொருளை எடுத்து

வறுமைக்கு தந்தால் தருமமடா

பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு

வைத்தால் அது கர்ம மடா

காசே தான் கடவுளடா

அந்த கடவுளுக்கும்அது தெரியுமடா

கைக்கு கை மாறும் பணமே

உன்னை கைப்பற்ற நினைக்கது மனமே!!!

நன்றி வணக்கம்.

Tags –

பணம், சுலப வழிகள் , குறுக்கு வழிகள்

—subham–

படித்தவனுக்கு பொறாமை, பணக்காரனுக்கு அகந்தை- பர்த்ருஹரி வருத்தம் (Post No.5436)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 September 2018

 

Time uploaded in London – 10-56 am (British Summer Time)

 

Post No. 5436

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பர்த்ருஹரி நீதி சதகம்- 2

 

இந்தப்பகுதியில் நீதி சதகம் பாடல் 2, 3 ஆகியவைகளை பிற நூல்களுடன் ஒப்பிடுவோம்.

 

बोद्धारो मत्सरग्रस्ताः
प्रभवः स्मयदूषिताः ।
अबोधोपहताः चान्ये
जीर्णम् अङ्गे सुभाषितम् ॥ 1.2 ॥

 

போத்தாரோ மத்சரக்ரஸ்தாஹா ப்ரபவஹ ஸ்மயதூஷிதாஹா

அபோதோபஹதாஸ்சான்யே ஜீர்ணமங்கே சுபாஷிதம்- 1-2

 

படித்தவர்களுக்கோ பொறாமை அதிகம்;

 

பணக்காரர்களோ அகந்தை  மிக்கவர்கள்;

ஆகையால் என் பொன்மொழிகள் பலமிழந்து விட்டன.

படித்தவர்களுக்கு கர்வமும் பொறாமையும் அதிகம்.

இதனால்தான் வள்ளுவர் சொன்னார்,

 

கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 130

 

கடும் சினத்தை விடுத்து, கற்பன கற்று அதற்குத் தக்க அடக்கமும் உடையவனை, அடைவதற்கு தரும தேவதை காத்திருப்பாளாம். அதாவது அவன் வழியில் நின்று கொண்டு காத்திருப்பாள் என்கிறார்.

 

‘வித்யா விநயன்ன சம்பதே’ என்று ஸம்ஸ்க்ருத்தில் சொல்லுவர். படித்தவர்களுக்கு அகந்தை வந்து விடும் என்பதால்தான் இதைச் சொல்லுகின்றனர்.

 

வள்ளுவர் வாழ்விலேயே இது நடந்தது. அவர் மீது பொறாமை கொண்டோர் அவருடைய திருக்குறளை ஏற்காமல் வாதாடியபோது சங்கப் பலகையானது பொறாமை கொண்ட புலவர் அத்தனை பேரையும் வெளியே தள்ளியது.

வில்லிப்புத்தூரார்க்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் வில்லிபுத்தூரார் தோற்றதை நாம் அறிவோம். அகந்தையாலும் பொறாமையாலும், போகும் வரும் புலவரை எல்லாம் வாதுக்கு அழைத்து அவர்கள் தோற்றுவிட்டதால் கையில் வைத்துள்ள குறடால் எதிரியின் காதுகளை அறுப்பது வில்லிப்புத்தூரார் வழக்கம். அருணகிரி நாதரிடமும் வாலாட்ட முயன்றபோது, அவருடைய கந்தரந்தாதிக்குப் பொருள் தெரியாமல் விழிக்கவே வில்லிப்புத்தூராரின் காதை அருணகிரி நாதர் அறுத்தார்.

 

இதே போல வட நாட்டிலும் பண்டி என்ற புலவர் செய்தார். மஹாபாரதத்தில் வன பர்வத்தில் ஒரு சம்பவம் உள்ளது. ஜனகரின் அவையிலிருந்த பண்டி என்ற புலவர் வாதத்தில் தோற்ற பிராஹ்மணர்களை எல்லாம் நதியில்  தூக்கி எறிந்தார். கஹோதர் என்பவருக்கும் இந்த கதி ஏற்பட்டது. அவருடைய புதல்வன் அஷ்டாவக்ரர் வந்து, பண்டியை வாதத்தில் தோற்கடித்து நதியில் வீசி எறிந்தார். படித்தவர்களின் பொறாமை பற்றி நமது நூல்களில் இது போலப் பல கதைகள் உண்டு.

 

பணக்காரர்களின் அகந்தை பற்றி பல கதைகள் உண்டு.

இதனால்தான் செல்வந்தர்களுக்கு அடக்கம் அவஸியம் என்று வள்ளுவர் மொழிந்தார்.

 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 125

 

பணிவும், அடக்கமும் எல்லோருக்கும் இருக்க வேண்டும்தான்; ஆயினும் பணம் படைத்தவர்கள் அகந்தையின்றி இருந்தால், அவருக்குக் கூடுதல் செல்வம் வந்தது போல ஆகும் என்பார் வள்ளுவர்.

 

xxxx

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  சொல்கிறார்:-

 

பணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.

ஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்க்த் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.

 

படகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,

‘என்ன, ஸ்வாமி, சௌக்கியமா? ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா? என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேலும் சொல்கிறார்:-

 

பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் நல்ல உண்மையான மனிதன். பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்

 

ஆக பணத்துக்கு அடிமையானவன் மிருகம்; பணம், ஒருவனுக்கு அடிமையாகிவிட்டால் அவன் நல்ல மனிதன்.

அந்தக் காலத்தில் வேதத்தைக் கற்கச் சென்ற மாணவர்களுக்கு மாடு மேய்த்தல், பிச்சை எடுத்தல்,குருவுக்கு துணி தோய்த்துப் போடல், கொட்டில்களில் உள்ள மாடுகளைக் கவனித்து கொட்டிலை சுத்தமாக வைத்தல், குரு உறங்கும் போது விசிறி வீசல், மிகவும் தஒண்டுக் கிழவனாக குரு இருந்தால் கை, கால் பிடித்து விடல் போன்ற பல செயல் முறைப் பயிற்சிகளால் அடக்கத்தைப் போதித்து, அகந்தையைக் களைந்தெடுத்து, மாணவனைப் பக்குவபடுத்தி கல்வி கற்பித்தது பயனளித்தது என்பதை உபநிஷத்துக்களிலிருந்து அறிகிறோம்.

 

பணமும் பதவியும் வந்த பின்னர் ஆட்டம் போட்ட துருபதன் போன்ற மாணவர்களை மன்னன் ஆனபிறகு, துரோணர் தண்டித்த கதையை நாம் அறிவோம். துரோணரும் துருபதனும் அக்னிவேஷ் என்ற ரிஷியின் மாணவர்கள். படிப்பு முடிந்த பின்னர் துரோணர் ஏழ்மையில் வாடினார். துருபதனோ பஞ்சால நாட்டின் மன்னன் ஆனான். துரோணர் அவனிடம் உதவி நாடிச் சென்ற போது அவரை உதாசீனப் படுத்தினான். அவமானம் தாங்காத துரோணர் வாய்ப்பு கிடைத்த போது அவனுடைய அகந்தைக்குப் பாடம் கற்பித்தார். பஞ்ச பாண்டவர்கள், வில்வித்தை கற்று முடிந்தவுடன் துரோணரிடம் என்ன குருதட்சிணை வேண்டுமென்று கேட்டனர். உடனே துரோணர், தன்னை அவமத்தித்த துருபதனை இழுத்துவரச் சொன்னவுடன் அதை அர்ஜுனன்  செய்து முடித்தான். தோற்றுப்ப்போன துருபதன், பாதி ராஜ்யத்தைத் துரோணருக்கு அளிக்க ஒப்புக் கொண்டவுடன் அவன் விடுதலை ஆனான்.

XXX

 

अज्ञः सुखम् आराध्यः
सुखतरम् आराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं
ब्रह्मापि तं नरं न रञ्जयति ॥ 1.3 ॥

 

 

 

அக்ஞஹ சுகமாராத்ய சுகதரமாராத்யதே விஷேஷக்ஞஹ

ஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி தம் நரம் ந ரஞ்சயதி- 2-3

 

அறியாதவனுக்குச் சொல்லிதருவது எளிது;

புத்திசாலிக்கும் விஷயம் தெரிந்தவனுக்கும் கற்பிப்பது மேலும் எளிது;

கொஞ்சம் படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல உலவுகிறானே அவனுக்கு பிரம்மாவும் கூட சொல்லித் தரமுடியாது; அவனை திருப்தி செய்யவும் முடியாது.

 

An ancient saying from the Middle East says:

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

 

 

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா- என்பது தமிழ்ப் பழமொழி. அதாவது அவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதிடுவர். எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ அதைப் போல அவர்கலைத் திருத்த முடியாது. இதையெல்லாம் கருதிதான் ஒரு அராபிய பழமொழியும் சொல்கிறது.

 

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.

He who knows not, and knows that he knows not, is simple. Teach him.

He who knows, and knows not he knows, is asleep. Wake him.

He who knows, and knows that he knows is wise. Follow him.

 

எவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியவில்லையோ அவன் முட்டாள்; அவனை ஒதுக்கி விடு

 

எவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரிந்திருக்கிறதோ அவன் எளியவன்; அவனுக்கு சொல்லிக்கொடு.

 

எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ ஆனால் அவனுக்கு தான் அறிந்தவன் என்பது தெரியாமல் இருக்கிறானே அவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பு.

 

 

எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ  அவனும் தனக்கு எல்லாம் தெரியும் என்று அறிந்திருக்கிறானோ  அவன் புத்திசாலி; அவனைப் பின்பற்று.

 

 

ஆக முட்டாள்களுக்கு உபதேசம் செய்வது வீண்; அவர்களாக அடிபட்டு, அடிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்

 

–சுபம்–

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)


WRITTEN by London Swaminathan 

 

Date: 17 April 2018

 

Time uploaded in London –  13-53 (British Summer Time)

 

Post No. 4923

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ – என்பது தமிழ்ப் பழமொழி. ரிக் வேதமும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் பணத்தைப் போற்றுகின்றன. தமிழ் வேதம் என்று திருவள்ளுவமாலை போற்றும் திருக்குறளை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து ரிக் வேதம் . ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபி சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளை வைத்து மொழிந்தார். அவர் உரைத்ததை இன்று வரை தகர்த்தார் எவருமிலர். நிற்க

 

பணம் ஜிந்தாபாத்! பணம் வாழ்க! ஏன்? ஏன்?

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)

 

பொருள்

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.

 

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் அதி தீவிர இந்துக்கள். ஆர். எஸ். எஸ்.காரர்கள் தோற்றுப்போவார்கள்!!

 

ஸம்ஸ்க்ருதத்தில் சொன்ன தர்ம, அர்த்த , காம என்ற வரிசையில் தீவிர இந்துத்வவாதியான திருவள்ளுவர் திருக்குறளை அமைத்தார். த்ருண தூமாக்கினி என்னும் தொல்காப்பிய ரிஷியோ இதைப் பல இடங்களில் அதே வரிசையில் செப்பிச் சென்றார்.

 

ஆக பொருள் (பணம்) என்பதன் முக்கியத்துவத்தைத் தொல்காப்பிய ரிஷியும் வள்ளுவ முனியும் வலியுறுத்துவர்.

 

இன்னொரு குறளில் வள்ளுவன் விளம்புவது யாதெனின்,

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது (248)

 

உலகில் பணம் இல்லாதவர்களுக்கு திடீரென லாட்டரிப் பரிசு அடிக்க வாய்ப்பு உண்டு; ஆனால் கருணை இல்லாதவர்களுக்குப் பாவம் சேர்வதால் மீண்டும் வளம்பெறுவது கடினமே.

 

இவ்வாறு பல இடங்களில் வள்ளுவன் நுவல்வதோடு, வாணிகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை  அப்படியே வள்ளுவத்தில் கையாளுவதால் அவர் நல்ல பிஸினஸ்வாதி என்றும் தெளிவு பெறலாம்.

 

சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-

 

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

 

செல்வம்  என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை மேற்கூறிய (248) குறளில் கண்டோம்.

15-6

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

 

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

 

பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

இனி ரிக் வேதத்துக்குள் நுழைவோம்:-

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொடு; அதன் மூலம் தாக்கும் சக்தியையும் கொடு- என்று வேத மந்திரம் சொல்கிறது (ரிக் வேதம் 3-46)

 

பணம் இருந்தால்தான் எதிரிகளைத் தாக்கும் சக்தியும்  கிடைக்கும்.

 

ஆயினும் பணம் என்பது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு வழி இல்லை என்பதை பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு உபநிஷதம்) உபநிஷத் தெளிவுபடுத்தும்:-

‘செல்வம் மூலம் முக்தி பெற முடியாது’- நாலாவது அத்யாயம், ஐந்தாவது பிராஹ்மணம், பிரு. உபநிஷத்.

 

xxx

 

கவச ஐலூஷன் என்ற ரிஷி பாடுகிறார் (10-31-2)

மனிதர்கள் செல்வம் பற்றி சிந்திக்கட்டும்

சட்டபூர்வ வழிகளிலும் வழிபாட்டின் மூலமும் வெல்லட்டும்

நன்கு சிந்தித்து விவேகத்துடன் செயல்படட்டும்

சுய சிந்தனையால் திறமையுடன் செயல்படட்டும்.

 

க்ருத்ஸமடர் என்ற ரிஷியும் செல்வம் பற்றிப் பாடுகிறார் (2-21-6)

 

இந்திரா! எங்களுக்கு நல்ல புதையல்கள் கிடைக்கட்டும்

திறமையான சிந்தனையையும் பிரகாசமான புத்தியையும் கொடு

செல்வம் அதிகரிக்கட்டும், உடல் ஆரோக்கியம் பெருகட்டும்

இனிமையான பேச்சு அமையட்டும், நாட்கள் நல்லதாக இருக்கட்டும்.

 

ஆக செல்வத்திதை வேண்டுவது, உலகின் பழமையான புஸ்தகத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது. உலகில் இந்துக்கள் மட்டுமே இப்படி அறம்- பொருள்- இன்பம்- வீடு (மோக்ஷம்) என்று வாழ்க்க்கைக்கு நான்கு தூண்கள் நிறுவியவர்கள். வேறு எந்த ஒரு மதத்திலும் இவ்வாறான தெளிவான வரையறை இல்லை!

 

MY OLD ARTICLES ON THE SAME THEME

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் …

https://tamilandvedas.com/…/பண-மோசடி-பற்றி-வள…

Translate this page

1 Mar 2018 – அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே …

பாவங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாவங்கள்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

அஜீரணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அஜீரணம்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

குறள் உவமை | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/குறள்-உவமை/

Translate this page

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி. ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி.அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் …

 

–subham–

 

 

பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள் (Post No.3862)

மே மாத 2017 காலண்டர்

ஹேவிளம்பி சித்திரை- வைகாசி 2017

 

Written by London swaminathan

Date: 29 APRIL 2017

Time uploaded in London:- 8-12 am

Post No. 3862

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

Festival/ Holidays: மே 1- மே தினம், மே 10- சித்திரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா

 

ஏகாதசி— 6, 21

பௌர்ணமி- 10

அமாவாசை-  25

சுபமுகூர்த்த தினங்கள்-  7, 12, 17, 18, 29

 

மே 1 திங்கட் கிழமை

பணம் பத்தும் செய்யும்

 

மே 2 செவ்வாய்க்கிழமை

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247

 

மே 3 புதன்கிழமை

பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்

 

மே 4 வியாழக்கிழமை

பணமும் பத்தாயிருக்க வேணும், பெண்ணும் முத்தாயிருக்க வேணும் ,முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்

 

மே 5 வெள்ளிக்கிழமை

பணத்தைப் பார்க்கிறதா, பழமையைப் பார்க்கிறதா?

 

 

மே 6 சனிக்கிழமை

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி, சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும், வட்டிக்கு ஈடல்ல

 

மே 7 ஞாயிற்றுக்கிழமை

பணமிருக்க வேணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கவேணும்

 

மே 8 திங்கட் கிழமை

முதலிலார்க்கு ஊதியம் இல்லை  – குறள் 449

 

மே 9 செவ்வாய்க்கிழமை

பணம் பார்த்துப் பண்டங் கொள், குணம் பார்த்துப் பெண் கொள்

 

மே 10 புதன்கிழமை

பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி

 

 

மே 11 வியாழக்கிழமை

காசேதான் கடவுளடா; பணம் இல்லாதவன் பிணம்

 

மே 12 வெள்ளிக்கிழமை

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

 

மே 13 சனிக்கிழமை

பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறது

 

மே 14 ஞாயிற்றுக்கிழமை

பணம் என்ன பாடாணம் சுகுணம் ஒன்றே போதும்

 

மே 15 திங்கட் கிழமை

காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன ?

 

மே 16 செவ்வாய்க்கிழமை

காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டார்கள்

 

மே 17 புதன்கிழமை

காசுக்கு ஒரு புடவை விற்றாலும், நாயின் சூத்து அம்மணம்

 

மே 18 வியாழக்கிழமை

காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் (கம்மாளன்)குஞ்சு ஆகாது

 

மே 19 வெள்ளிக்கிழமை

துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும், துலுக்கக்குட்டி மட்டும் ஆகாது

 

மே 20 சனிக்கிழமை

காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்களும் ஆத்தாளும் கூட வருவார்கள்

 

 

மே 21 ஞாயிற்றுக்கிழமை

கால் காசுக்கு குதிரையும் வேணும் கொள்ளும் தின்னக் கூடாது, சிட்டாவும் பறக்கனும்

 

மே 22 திங்கட் கிழமை

காசுக்கு இரண்டும் பிசுக்குக்கு (பீசுக்கு) ஒன்றும்

 

மே 23 செவ்வாய்க்கிழமை

துட்டுக்கு இரண்டு, துக்காணிக்கு மூன்று

 

மே 24 புதன்கிழமை

சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்

 

மே 25 வியாழக்கிழமை

செட்டி போன இடமெல்லாம் வட்டம் காற்பணம்

 

 

மே 26 வெள்ளிக்கிழமை

துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ , திட்டு வந்து விழுந்ததோ?

 

மே 27 சனிக்கிழமை

காசுக்கு லோபி கழுதையினிடத்திற் போனால் போல

 

மே 28 ஞாயிற்றுக்கிழமை

பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே

 

மே 29 திங்கட் கிழமை

செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் நூலைக் குறைத்தான்

 

மே 30 செவ்வாய்க்கிழமை

பணமிருந்தால் பத்தும் வந்து சேரும்

 

 

மே 31 புதன்கிழமை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)

 

xxxx

பணம் குலமாகும் ,பசி கறியாகும்

xxxxx

 

செட்டி வீட்டில் பணம் இருக்கிறது ஆலமரத்தில் பேய் இருக்கிறது.

 

–Subahm–

 

 

பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991)

new currency Re1

Written by London swaminathan

Date:21 July 2016

Post No. 2991

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பவிஷ்ய புராணம் என்றவுடன் , எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று அதில் கூறப்பட்ட செய்திகளே நம் மனக்கண்ணுக்கு முன் வரும். ஆனால்ல் அதில் வேறு பல சுவையான விஷயங்களும் உள.

 

அதில் ஒன்று பணம் பற்றிய ஸ்லோகம்:-

 

அர்த்தானாமார்ஜனே துக்கம் ஆர்ஜிதானாம் து ரக்ஷணே

நாஸேதுக்கம் வ்யயே துக்கம் கிமர்த்தம் துக்கபாஜனம்

 

பணத்தினால் எல்லா வகையிலும், எப்போதும் துக்கம்தான்;

பணத்தைச் சம்பாதிக்கும்போதும் துக்கம்;

காப்பாற்றுவதிலும் துக்கம்:

அதைச் செலவழித்தாலும் துக்கம்:

 

துக்கத்துக்கெல்லாம் உறைவிடம் பணம்தான்

 

(அர்த்த= செல்வம், பணம்)

 

எவ்வளவு அருமையான பாடல்; மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்; நகை, ஷேர் (பங்கு மார்க்கெட்), ரொக்கம் — எது இருந்தாலும் அதை ரக்ஷிப்பது அதைவிட துன்பம்;

 

லாக்கரில் நகைகளை வைத்தால் வைக்கப்போகும்போதும் எடுக்கப்போகும்போதும் திருடர் பயம்;

லாக்கர் வைத்திருப்பவனே ஓடிவிடுவானோ என்றபயம் (வெளிநாட்டில் பிரைவேட் லாக்கர்கள் உண்டு); சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு அரசாங்கம் மாறும் போது எல்லாம் பயம்; பங்கு மார்க்கெட்டில் போட்டவர்களுக்கு பங்கு மார்க்கெட் சரியும் போது பயம்; இவை அனைத்தும் துக்கத்தில் முடிகிறது. வெளி நாடுகளில் அண்மைக்கலத்தில் இரண்டு மூன்று வங்கிகள் திவால் ஆனபோது, பிரிட்டன், ஐஸ்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளில் பலர் சேமிப்பை இழந்தனர். துக்கம் அடைந்தனர்.

 

செலவழித்தால், பிற்காலத்தைப் பற்றி பயம்; அதிகம் செலவழிதால் கடன் வாங்கும் துன்பம்; ஆக பணமே துன்பத்தின் உறைவிடம்!

 

யானை உண்ட விளங்கனி (விளாம்பழம்)

 

இன்னொரு ஸ்லோகம் சொல்கிறது:–

பணம் வரும் போது தேங்காயிலுள்ள நீர் (இளநீர்) போல வரும்; போகும் போது யானை உண்ட விளாம் பழம் போலவும் போய்விடும் (யானை, விளாம்பழத்தை ஓட்டோடு சாப்பிட்டுவிட்டு வெளியே கழிவாகத் தள்ளும்போதும் அது அப்படியே பழம்போலக் காட்சி தரும்; ஆனால் உள்ளே உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும்; சிலர் இது தவறு; ஒரு நோயின் பேர் யானை என்றும் அந்த நோய் கண்ட மரங்களின் பழங்களுக்குள் ஒன்றுமே இராது என்றும் சொல்லுவர்)

 

உண்மையில் பணம் வருவதும் போவதும் தெரியாது என்பதே பாட்டின் பொருள்:–

 

ஆஜகாம யதா லக்ஷ்மீர் நாரிகேல பலாம்புவத்

நிர்ஜகாம ததா லக்ஷ்மீர் கஜ புக்த கபித்தவத்

 

(கபித்த= விளாம்பழம், நாரிகேல = தேங்காய்)

KATTU KATTU CURRENCY

கவிஞர் ஹேமாத்ரி சொன்னது:–

ந்யாயார்ஜிதஸ்ய வித்தஸ்ய த்வ வனார்த்தௌ ப்ரகீர்த்திதௌ

அபாத்ரே ப்ரதிபத்திஸ்ச பாத்ரேர்தாபதிபாதனம்

 

பணம் என்பது தகுதியற்றவர்களுக்கே கிடைக்கும்; தகுதியுடையோருக்கு கிடைப்பதில்லை

 

பணமிருந்தால் குணமிருக்காது

குணம் இருந்தால் பணம் இருக்காது – என்ற தமிழ் வசனமும்

 

லெட்சுமி இருக்குமிடத்தில் சரஸ்வதி இருக்கமாட்டாள் என்ற பழமொழியும் இதனுடன் ஒட்டிவருவதைக் காண்க.

 

–Subham–

 

 

3.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Third Part)

சிதம்பரத்தில்  பிறந்த பிள்ளைக்குத் திருவாசகம் கற்றுக் கொடுக்கவேண்டுமா?

Compiled by London swaminathan

Post No.2225

Date: 8  October 2015

Time uploaded in London: 17-10

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

Second part of Proverb book –Two was published yesterday. This is Third part of Book Two.

தனி மரம் காடாகாது  (தனி மரம் தோப்பு  ஆகாது)

துரும்பு நுழைய, இடம் கொடுத்தால் யானையைக் கட்டுவான் –(இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்)

நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்
நிழலின், அருமை வெயிலில் போனால்தான்   தெரியும்

பணம் பத்தும் செய்யும்

பார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி

தொடரும்………………………….

ரிக் வேதத்திலிருந்து வந்தது “பணம்”!

dac86-baal012b18002bbce252c2blouvre2bmuseum252c2bparis

குழந்தைகளைப் பலி வாங்கும் பால் (வேதத்தில் வால என்னும்    அசுரன்)

Written by London swaminathan

Research Article No.1891

Date: 26 May 2015; London Time 14-59

ரிக் வேதத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன. அதில் சில பாணி, பண(ம்) என்ற சொற்களாகும். இந்தியா முழுவதும்  பணம் (காசு) என்ற சொல் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் புழக்கத்தில் உள்ளது. இதே போல ஆங்கிலத்தில் மணி என்ற சொல் இந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறது. இவை எல்லாம் ரிக் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்படும் “பாணி” என்ற இனத்திலிருந்து வந்த சொற்களாகும்.

பாணிக்கள், “பீனிஷியர்கள்” என்று அழைக்கப்படுவர். அவர்கள் கி.மு.2000 முதல் கார்த்தேஜ் (இப்பொழுது ஆப்பிரிக்காவில் உள்ள டுனீஷியா) மற்றும் மத்திய தரைக் கடல் நாடுகளான லெபனான், சிரியா போன்ற இடங்களில் காலனி வைத்து ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள்தான் உலகத்திற்கு அகரவரிசை எழுத்துக்களைக் கற்பித்தவர்கள் என்றும், பணம் என்பதைச் சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் அதற்கு முன் பண்ட மாற்று முறையே உலகெங்கிலும் இருந்தது என்றும் என்சைக்ளோபீடியாக்கள் (கலைக் களஞ்சியங்கள்) சொல்லும்.

பீனிஷியர்களின் ஆல்பபெட்/அகரவரிசைதான் பிராமி என்னும் இந்திய எழுத்து முறைக்கு மூலம். நம் மூலமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துக்கும் எழுத்து முறை ஏற்றுமதியானது என்று ஆராய்ச்சியாளர்கள் பகர்வர்.

ரிக் வேத பாணிகளுக்கும், வட ஆப்பிரிக்க பீனிஷியர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கதைத்த வெளிநாட்டு அறிஞர்கள், பின்னர் அதைப் பூசி மெழுகி மழுப்பிவிட்டனர். எது எதெல்லாம் தாங்கள் கூறும் ஆரிய-திராவிட இனவெறிக்  கொள்கைகளுக்கு முரண்படுகிறதோ அதை எல்லாம் சத்தம் போடாமல் அமுக்கிவிடுவது அவர்கள் வழக்கம்.

உண்மையில் பாணீக்கள் பற்றி ரிக்வேதம், அதர்வ வேதம் சொல்லும் பல கருத்துக்கள், அவர்கள் பீனிஷியர்களே என்று காட்டுகின்றன. பாணி என்பது வணிக (வியாபாரிகள்) என்று மாறி இன்று இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உள்ளது.வணிக என்பதும் ரிக் வேதத்தில் வருகிறது.

ப=வ=ம ஆகிய மூன்று எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று இடம் மாறும் என்பது மொழி இயல் அறிஞர்களுக்குத் தெரியும். இது பற்றி ஒரு பட்டியலையே எனது மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன். நாம் வங்கம் என்று சொன்னால் அந்தப் பகுதி மக்கள் பெங்கால் என்பர். மற்ற சில சொற்கள்—மானம் = வானம், முழித்தான்=விழித்தான்.

85777-map2bof2bphoenicia

வட  ஆப்பிரிக்க கார்த்தேஜ் (டுனீசியா), மத்திய தரைக் கடல் நாடுகள்

ஆக இதே விதியை பாணி, வணிக ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்:-

பாணி=வாணிக=வணிஜ்= பண= மணி(ஆங்கிலச் சொல்)

இவர்கள் பற்றி உலகின் பழைய நூலான ரிக் வேதம் என்ன சொல்கிறது?

1.பாணீக்கள் பணக்காரர்கள், கஞ்சர்கள்

2.அவர்கள் திருடர்கள்; கொள்ளைக்காரர்கள். வேத கால இந்துக்களின் பசுக்களைத் திருடிச் சென்றனர்.

3.பேராசைக்காரர்கள்; செல்வத்தைக் குவிப்பவர்கள்

4.அவர்கள் வேதமுறைப்படி யாக யக்ஞங்கள் செய்ய மாட்டார்கள்; கடவுளைக் கும்பிட மாட்டார்கள்; ஐயர்களுக்கு தட்சிணை கொடுக்க மாட்டார்கள்.

5.அவர்கள் தஸ்யூக்கள்; தாசர்கள்

6.அவர்கள் க்ராதின் (இதற்கு எந்த அறிஞருக்கும் இது வரையும் பொருள் தெரியவில்லை).

7.இவர்கள் வட மொழி அல்லாத கொடுமையான ஒரு மொழி (ம்ருத்ரவாச) பேசினர். ஆனால் எப்பொழுதுமே வேற்று மொழி பேசுவோரை மற்ற மொழியினர் இப்படி மட்டம் தட்டுவது தெரிந்ததே. கிரேக்கர்கள், மற்ற நாட்டினரை காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றும் தமிழர்களைத் தெலுங்கர்கள் அரவா என்றும் பைபிளைப் பின்பற்றாதவர்கள் பேகன் என்றும் குரானைப் பின்பற்றாதாரை காபிர் என்றும் அவரவர் அழைப்பதும் தெரிந்ததே.

  1. அவர்களை வேதங்கள் சில இடங்களில் புராண கதா பாத்திரங்கள் போல வருணிக்கின்றன. அவர்களிடம் தூது செல்ல இந்திரன், சரமா என்ற பெண் நாயை அனுப்பியதாக பல இடங்களில் வேதம் சொல்லும். இந்த சரமா என்பது ,பாரசீகம் வழியாக கிரேக்க நாடு வரை சென்றுவிட்டது. பாரசீக கிரேக்க மொழிகளில் எஸ் என்பது கிடையாது ஆகவே அவர்கள் சரம என்பதை ஹர்ம என்று எழுதினர். இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருப்பதால் தனிக் கட்டுரையில் தருவேன். சிந்து நதி என்பதை இந்து என்று மாற்றியவர்களும் அவர்களே!!

ef545-leviticus-20-molech

குழந்தைகளைத் தீயில் வீசுவோர்!!

பாணீக்கள் பற்றி ரிக்வேதத்தில் காணப்படாத முக்கிய விஷயம் அவர்கள் குழந்தைகளைத் தீயில் பலி கொடுப்பவர்கள் என்பதாகும். பீனிஷியர்கள் வணங்கி வந்த இரண்டு தெய்வங்கள் பால் மற்றும் மாலிக் (மெலக்) என்பன ஆகும். இவ்விருவர் சிலைகள் முன்னாலும் எப்பொழுதும் தீ எரிந்து கொண்டே இருக்கும். ஜெரூசலத்தில் எரியும் தீயில் இப்படிப் பிள்ளைகளைப் பலி கொடுத்தது பைபிளில் இரண்டு மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாணீக்களின் குழந்தைப் பலி பற்றி ரிவேதத்தில் இல்லாவிட்டாலும் வால என்னும் அசுரனை இந்திரன் கொன்றது பற்றிய பாடல் வேதத்தில் வருகிறது வால என்பதே பால் என்னும் தெய்வத்தின் பெயர் என்று கொள்ள மொழியியல் வழிகாட்டுகிறது.

இப்பொழுது பஹ்ரைன், டுனீஷியா, மத்திய தரைக் கடல் நாடுகளில் பல்லாயிரக் கணக்கான புதைகுழிக்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை அத்தனையிலும் ஈமப் பானையில் குழந்தைகளின் கருகிய சாம்பலும், மிருகங்களின் சாம்பலும் கிடைத்துவருகின்றன. ஒரு வேளை இவர்களை வேத கால இந்துக்கள் வெறுத்து தஸ்யூ, தாசர் என்று திட்டியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். “மிலேச்ச” என்னும் சொல்லும் இவர்கள் வழிப்பட்ட மாலிக், மொலக், மிளக் என்னும் குழந்தைகளைப் பலி கேட்ட தெய்வத்தின் பெயரில் இருந்து வந்திருக்கும் என்பது நான் கண்ட முடிவு.

பாணீக்களின் மன்னர் பெயர் “ப்ருபு” என்று ரிக் வேதத்தில் இருக்கிறது. பீனிஷியர்களின் முக்கிய நகரான பிப்லோஸ் என்பது இதிலிருந்து வந்ததே.  “ர, ல” ஆகிய இரண்டு எழுத்துக்களும் இடம் மாறுவது பற்றி பாணினி கூட சூத்திரம் எழுதி இருக்கிறார்.

மேலும் விக்கிபீடியாவில் பீனிஷியர் காலனி என்ற பட்டியலில் பல சம்ஸ்கிருதப் பெயர்கள் உள்ளன ( சுந்தர, சூர்ய, சோபன,தாரா முதலியன)

பாணீக்கள் வேற்று மொழி பேசினாலும் எல்லா வணிகர்களையும் போல அவர்களுக்கு வேறு (சம்ஸ்கிருதம் போன்ற)  மொழிகளும் தெரிந்திருக்க நியாயம் உண்டு. பிப்ளோஸ் என்ற நகரம் 7000 ஆண்டு பழமையுடைத்து! வேத மந்திரங்கள் பல காலத்துக்குச் சொந்தமானவை. எல்லா மந்திரங்களும் உருப்பெற குறைந்தது 500 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் 450+ புலவர்கள் பெயர்கள் இருப்பது போலவே ரிக் வேதத்திலும் 450+ புலவர் பெயர்கள் உள. சங்கப் பாடல்கள் உருவாக குறைந்தது 300 ஆண்டுகள் ஆயின. ஆக பாணீக்கள் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் பெரும்பாலான மண்டலங்களில் வருவதால் இவர்களுடன் நீண்ட நெடுங்காலத்தில் சுமுக உறவு நிலவிய காலமும் இருந்திருக்கலாம்.

eb915-byblos

லெபனான் (சம்ஸ்கிருதத்தில் லவண/ வெள்ளை)

இவர்கள் பற்றி “வேத கால ஹரப்பா மக்கள்” என்ற நூலை எழுதிய ஆராய்ச்சியளர் பகவான் சிங் வேறு ஒரு தகவலையும் தருகிறார். சில வேத மந்திரங்கள், “பாறைகளுக்கு அடியே பாணீக்கள் மறைத்து வைத்த செல்வம்” பற்றிப் பாடுகின்றன. அவைகளைப் பெற இந்திரன் சரமாவை தூது அனுப்பிய செய்தியும் வருகிறது. பாறைக்கு அடியில் மறைத்த செல்வம் என்பது சுரங்கக் கனிவளம் என்றும் இவர்கள் உலகமெங்கும் லபிஸ் லசூலி என்ற கற்களை ஏற்றுமதி செய்தனர் என்றும் எழுதுகிறார். லாபிஸ் லசூலி பற்றிய எனது முந்தைய தனியான ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறைய விசயங்களைத் தந்திருக்கிறேன்.

பிற்காலத்தில் கிரேக்கர்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளில் ரோமானிய ராஜாக்களுக்கும், கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கும் தேவைப்பட்ட பிங்க் (இளம் சிவப்பு) சாயத்தை கடலில் கிடைக்கும் ஒரு வகைக் கிழிஞ்சல் பூச்சியில் இருந்து எடுத்து இவர்கள் ஏற்றுமதி செய்ததையும் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சாய ஏற்றுமதி இவர்கள் கையில் இருந்ததால் இவர்கள் மிகவும் பணக்காரர் ஆனார்கள்.

பாணீக்கள் என்போர் திசை மாறிப்போன, வழி தவறிய இந்துக்களே (விராத்யர்) என்று ஆர்ய தரங்கிணி என்ற நூலில் ஏ.கல்யாணராமன் எழுதுகிறார்.

கிரேக்க மொழியில் முதல் முதல் நூலை எழுதிய ஹோமரும் முதல் நூலான இலியட்டில் இவர்களைப் புகழ்ந்துவிட்டு, ஆடிஸி என்னும் அடுத்த நூலில் பீனிஷியர்களை அயோக்கியத் திருடர்கள் என்று திட்டுகிறார். ரிக்வேதக் கருத்துக்களை அப்படியே எதிரொலிக்கிறார்!

மேற்கூறிய எல்லாத் தகவல்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவர்கள் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த கிராதகர்கள் என்பது தெரிகிறது. வேதத்தில் இவர்கள் பற்றி இதுவரை பொருள் விளங்காமல் உள்ள “கிராதின்” என்பதற்குக் கிராதகர் என்று பொருள் கொண்டாலும் தவறில்லை!

(வேதங்களில் இவர்கள் பற்றிய குறிப்புகள் எங்கேயுள்ளன என்ற விவரங்களை நேற்று வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.)