பர்த்ருஹரி சொல்லும் விஞ்ஞான விஷயங்கள் (Post No.5685)

Himalaya pictures from Radhika Balakrishnan

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21 November 2018

GMT Time uploaded in London –10-34 am
Post No. 5685

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பர்த்ருஹரி இந்த ஸ்லோகங்களில் சொல்லும் அறிவியல் துளிகள்

1.மலைகள் பறந்தன;

2.சூரிய காந்தக் கல் நெருப்பைக் கக்கும்;

3.பூமியைப் பாம்பு தாங்குகிறது-

பர்த்ருஹரி நீதி சதகம் தொடர்ச்சி

ஸ்லோகங்கள் 31,32,33

 

 

‘பெருந்தன்மை கொண்டபெரியோர்கள், கொடையாளிகளின் சக்திக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. இந்த பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தாங்குகிறான். அந்த சேஷ நாகத்தை ஆமை தன் முதுகில் தாங்குகிறது. அநத ஆமையை கடல் தனது அடித்தளத்தில் தாங்கி நிற்கிறது’.—1-31

காளிதாஸன் போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களும் பூமியைப் பாம்பு தாங்குவதாகக் கருதினர். இதன் விஞ்ஞான விளக்கம் தெரியவில்லை. இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல் அதன் தாத்பர்யத்தை அறிய வேண்டும். உலகில் ஒவ்வொரு பழைய கலாசாரத்திலும் இப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தது. கிரேக்கர்கள அட்லஸ் (Atlas) என்பவன் தனது தோளில் பூமியைச் சுமப்பதாக நம்பினர். இதனால் தேசப்பட புத்தகத்துக்கு அட்லஸ் என்று பெயர் சொல்லுவர்.

வஹதி புவனேஸ்ரேணிம் சேஷஹ பணாபலகஸ்திதாம்

கமடபதினா மத்யே ப்ருஷ்டம் ஸதச தார்யதே

தமபி குருதே க்ரோடாதீனம் பயோதிரநாதராத்

தஹஹ மஹதாம் நிஸ்ஸீமாநஸ்சரித்ர விபூதயஹ – 31

वहति भुवनश्रेणिं शेषः फणाफलकस्थितां

कमठपतिना मध्येपृष्ठं सदा स च धार्यते ।

तम् अपि कुरुते क्रोडाधीनं पयोधिरनादराद्

अहह महतां निःसीमानश्चरित्रविभूतयः ॥ 1.31 ॥

XXX

‘தேவர்களின் தலைவனான இந்திரன் இமயமலை மீது தன் வஜ்ராயுதத்தை வீசித் தாக்கினான். அப்போது இமயத்தின் மகனான மைநாக பர்வதம் தந்தையை விட்டு ஓடிப்போய் கடலில் அடைக்கலம் புகுந்தது. இது சரியான செயலன்று. மகன் என்னும் பெயருக்கு ஏற்ற செயலுமன்று’ – 1-32

மலைகள் ஆதிகாலத்தில் பறந்தததாகவும் ,இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டியதாகவும் புராணங்கள் புகலும்.இந்த நிகழ்ச்சியை உவமையாகப் பயன்படுத்துவர் புலவர் பெருமக்கள்.

இதில் பெரிய அறிவியல் உண்மை இருப்பதாக நான் கருதுகிறேன். டைனோஸரஸ் போன்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழிய பெரிய விண்கற்களே காரணம் என்று விஞ்ஞானிகள் இப்போது பகர்வர். பூமியின் துவக்க கால சரிதத்தில் இத் தாக்குதல்கள் அதிகம் இருந்தன. இன்றும் ஒவ்வொரு நொடியும் பூமியில் விண்கற்கள் விழுந்தபோதும் அவை காற்றில் பஸ்மம் ஆகி சாம்பல மட்டுமே பூமியில் விழும். இரவு நேரத்தில் வானத்தை உற்று நோக்குவோர் நட்சத்திரங்கள் விழுவது போலக் காண்பது எல்லாம் இந்த விண்கற்களே. ஆயினும் துவக்க காலத்திலிவை அதிகம் இருந்தது.

இதை பாமர மக்களுக்கு விளக்க எழுந்த கதைதான் மலைகள் பறந்ததும் அதை இந்திரன் வெட்டி வீழ்த்தியதும்.

இந்த பர்த்ருஹரி ஸ்லோகத்தில் சொல்லவரும் நீதி ஒருவருக்கு ஆபத்து ,, வருகையில் — குறிப்பாக தந்தைக்கு ஆபத்து வருகையில் — மகன் ஓடிப்போவது — உதவாமல் பயந்து ஒளிவது — முறையன்று– வீரமும் அன்று என்பதாகும்.

நீதியைப் புரிந்து கொண்டு விட்டோம். இதிலுள்ள அறிவியல் விஷயங்களை நுணுகி ஆராய்வோம்:

1.பூமியின் ஆரம்பகட்டத்தில் விண்கற்கள் (Meteorites) , நுண்கிரஹங்களின் (asteroids) தாக்குதல் அதிகம் இருந்ததை இந்துக்கள் அறிவர்.

  1. உலகில் கடலுக்கு அடியிலும் மலைகள் இருப்பது (Submarine mountains) இந்துக்களுக்கு நன்கு தெரியும். (சக்ரவாள மலை பற்றியஎனது கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்)

3.பிற்காலத்தில் இந்த விண்கல், நுண் கிரஹவீ ழ்ச்சி அறவே நின்றதையும் இந்துக்கள் அறிவர். ஆகையால்தான் இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டி அவற்றை கடலுக்குள் அனுப்பிய கதைகள் எழுந்தன.

கடலியலும் (Oceanography), பூகர்ப்ப இயலும் (Geology) வளந்த இந்த நாட்களில் நாம் படிப்பதை புராணங்கள் கதை ரூபத்தில் நமக்குக் கற்பித்தன.

அது மட்டுமல்ல; இந்திரன்தான் உலகின் முதல் சிவில் எஞ்சினீயர். அவன் மலைப் பாறைகளை அகற்றி தண்ணீரை விடுவித்த கதை உலகின் பழமையான் நூலான ரிக் வேதத்திலேயே உளது.

இதை அறியாத சிலர் இந்திரன் அரக்கனை வெட்டி வீழ்த்தியதாகவும் அவர்கள் பழங்குடி மக்கள் என்றும் பிதற்றினர். இந்திரன் என்பது தலைவன், மன்னன், முழுமுதற் சக்தி போன்ற பல பொருட்களில் ரிக் வேதத்தில் வருகிறது. ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் இந்திரன் பெயர் வநததை ‘ஒரு ஆள்’ என்று நினைத்து வெள்ளைக்காரர்கள் குழம்பிப் போய் நம்மவர்களையும் குழப்பிவிட்டனர்.

வரம் பக்ஷச்சேதஹ ஸமதம கவன்முக்தகுலிஸ

ப்ரஹாரைருத்ரச் சதூபஹலதஹனோத்ரார குரூபிஹி

துஷாரத்ரேஹ்ஹே ! பிதரி க்லேசவிவசே

ந சாசௌ ஸம்பாதஹ பயஸி பயஸாம் பத்யூருசிதஹ -32

वरं पक्षच्छेदः समदमघवन्मुक्तकुलिशप्रहारैर्
उद्गच्छद्बहुलदहनोद्गारगुरुभिः ।
तुषाराद्रेः सूनोरहह पितरि क्लेशविवशे
न चासौ सम्पातः पयसि पयसां पत्युरुचितः ॥ 1.32 ॥

XXX

சூர்யகாந்தக் கல், சூரிய ஒளியை நெருப்பாக கக்குவதை காளிதாஸன், தமிழில் திருமூலர் போன்ற ஏராளமான புலவர்கள் பயன்படுத்துவதால், லென்ஸ் (Lens), உருப்பெருக்கு ஆடி (Magnifying glass) பற்றி இந்துக்களுக்கு முன்னரே தெரிந்ததை நாம் அறிய முடிகிறது.

இதோ பாட்டின் பொருள்

சூரிய ஒளிபட்டவுடன் உயிரே இல்லாத ஜடப்பொருளான சூர்ய காந்த மணி கூடப் பிரகாஸிக்கிறது; நெருப்பை உமிழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியோர்களை யாரேனும் அவமதித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? 1-33

ஆக, பல விஞ்ஞான உண்மைகளை உவமையாகப் பயன்படுத்துவதால் இவைகளைப் பாமர மக்களும் அறிந்தது புலனாகிறது. நம்மில் பலர் எப்படி டெலிவிஷன், ரேடியோ, மொபைல் போன் பற்றிய விஞ்ஞான விஷயங்களை அறியாமலேயே அதை பயன்படுத்த மட்டுமே தெரிந்து கொண்டது போல பாமர மக்களுக்கு உவமை மட்டுமே தெரியும். அதன் பின்னுள்ள விஞ்ஞான விஷயங்கள் தெரியாது.

பூமியின் சலனம் பற்றி முழுதும் அறியாவிட்டால் இந்துக்கள் கிரஹணத்தைக் கணக்கிட்டும் இருக்க முடியாது. ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கவும் முடியாது. சனிக் கிரஹம் குருக் கிரஹம் போன்றவற்றுக்கு விஞ்ஞானப் பெயர்களை சூட்டி இருக்கவும் முடியாது.

சனிக் கிரஹம் (சனை= மந்தம், மெதுவாக) சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆவதை அறிந்து சனைச் சரன் (மந்த கதியில் செல்வோன்) என்று பெயரிட்டனர்.

குரு என்றால் கனமான என்று பெயர்; கிரஹங்களில் பெரியது குரு (வியாழன்)) என்பதாலும், குருவைப் போல ஒருவரை உயர்த்தி, உந்தி விடுவதாலும் (Slingshot Gravity effect) அந்த கிரஹத்துக்கு குரு என்று பெயரிட்டனர், இந்த ‘ஸ்லிங் ஷாட் எப்பெக்ட்’ இப்பொதுதான் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இனி வரப் போகும் எதிர்காலக் கண்டு பிடிப்புகளை இந்துக்கள் முன்னரே அறிவித்துவிட்டதை  எனது முந்தைய  கட்டுரைகளில் பட்டியலிட்டு விட்டேன்.

யதசேதனோபி பாதைஹி ஸ்ப்ருஷ்டஹ ப்ரஜ்வலதி ஸவிதுரினகாந்தஹ

தேஜ்ஸ்வீ புருஷஹ பரக்ருதநிக்ருதிம் கதம் ஸஹதே – 33

Tags- நீதி சதகம், பர்த்ருஹரி, சூர்யகாந்த மணி, பறக்கும் மலைகள், பூமி பாம்பு, சேஷ நாகம்

–சுபம்—

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது-பர்த்ருஹரி (Post No.5623)

WRITTEN BY S  SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 4 November 2018

GMT Time uploaded in London – 6-09 am

Post No. 5623

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நீதி சதகத்தில் 23 ஸ்லோகங்களைக் கண்டோம். மேலும் தொடர்வோம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது தமிழ்ப் பழமொழி. சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது — என்பது  பர்த்ருஹரி மொழி!

பர்த்ருஹரி 24,25,26,27

இந்த நான்கு பாடல்களிலும் மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காட்டுகிறார். கீழ் மக்கள் நாய் போன்றவர்கள். மேல் மக்களோ சிங்கம் ,யானை போன்றோர். ஒரு லட்சியத்தை அடைய உயர்ந்த உத்திகளை மட்டுமே பயன்படுத்துவர். இதைத் தமிழ்ப் புலவர்களும் அழகாக பாடி வைத்துள்ளனர். அவைகளை ஒப்பிட்டுச் சுவைப்போம்.

ஜயந்தி தே ஸுக்ருதினோ ரஸஸித்தாஹா கவீஸ்வராஹா

நாஸ்தி யேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம்-1-24

ஆழ்ந்த கல்விகற்ற, நவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர்.

அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.

जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥

‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும்  நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும்  உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.

xxxxx

சிங்கம் புல்லைத் தின்னுமா?

க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா

மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி

மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ

கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25

சிங்கத்துக்கு பசியால் வாட்டம்; ஆனால் கிழடு; உடலில் பலம் குன்றிவிட்டது; உடல் ஊனம்; பலஹீனம்; மனத் தளர்ச்சி; காம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?

क्षुत्क्षामो‌உपि जराकृशो‌உपि शिथिलप्राणो‌உपि कष्टां दशाम्
आपन्नो‌உपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.29 ॥

xxx

 

ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ

ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய  க்ஷுதாசாந்தயே

ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி  த்யக்த்வா நிஹந்தி த்விபம்

ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26

சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்; ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.

கோப்பெருஞ்சோழன் செப்புவது

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….

–புறம் 214, கோப்பெருஞ்சோழன்

யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतो‌உपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ ॥

xxxxx

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்

பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச

ஸ்வாபிண்டதஸ்ய  குருதே கஜபுங்கவஸ்து

தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27

நாய் வாலை ஆட்டும்; எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லை; அதை ஏற்பதுமில்லை.

लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥

வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

xxxxx   subham   xxx

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 October 2018

Time uploaded in London – 8-33 AM

(British Summer Time)

Post No. 5574

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

உலகப் புகழ் பெற்றவன் தமிழ்ப் புலவன் வள்ளுவன். 2660 வரிகளில் 133 விஷயங்களை அலசி ஆராய்ந்து விட்டான்.  அவன் ‘பக்கா’ ஹிந்து என்பதால் தர்ம, அர்த்த, காம என்ற அதே வரிசையில் திருக்குறளை முப்பாலாக வகுத்தான். நாலாவது விஷயமான மோக்ஷம் என்பதை துறவறவியலில் வைத்துவிட்டான். அவன் இரண்டு அடிகளில் சொன்ன விஷயங்களை பர்த்ருஹரி ஒரே வரியில் சொல்கிறார்.

நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம், வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. வள்ளுவன் 1330 அருங்குறள்களில் செப்பியதை பர்த்ருஹரி 300 பாடல்களில் செப்பிவிட்டான்.  இருந்தபோதிலும் குறளுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

பர்த்ருஹரியின் மூன்று பாடல்களைக் குறளுடன் ஒப்பிடுவோம்

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் 21, 22, 23 பாடல்களைக் காண்போம்

பாடல் 21-ன் பொருள்

மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?

கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?

ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?

நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?

கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?

மன்னிக்கும் குணம்–

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்- 314

உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436

தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை

ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?

கோபம் பற்றி வள்ளுவன்

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்- 306

சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ

கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)

உண்மை நண்பன்

ஒருவன் ஆடை திடீரென நழுவினாலோ, காற்றில் பறந்தாலோ, கிழிந்தாலோ ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக உடற் பகுதிகளை மறைக்க தன்னிச்சையாகச் செல்லுமோ அவ்வளவு விரைவாக, கஷ்டகாலத்தில் உதவுபவனே உண்மை நண்பன் என்பதை வள்ளுவன் காட்டுவது போல வேறு எவரும் காட்டியதில்லை.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)

கெட்டவர்களும் பாம்பும் பற்றி வள்ளுவன்,

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந்தற்று- 890

ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்

எது செல்வம்?

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்-443

ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுள் தலையாய

செல்வம் அறிவில் சிறந்த பெரியார்கள் சூழ இருப்பதேயாகும்.

க்ஷாந்திஸ் சேத் கவசேன கிம் கிம் அரிபிஹி அஸ்தி சேத தேஹினாம்

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

கிம் ஸர்ப்பையதி  துர்ஜனாஹா கிம் உதனைர்வித்யா அனவத்யா யதி

வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21

क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌உस्ति चेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।
किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌உनवद्या यदि
व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

xxxx

 

பாடல் 22-ன் பொருள்

ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;

வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;

முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;

மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;

மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்

நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது

எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு- 80

அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா

யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி-1-22

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

xxxx

பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

FROM MY EARLIER POST……………………..

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

–subham–

வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 October 2018

 

Time uploaded in London –14-36 (British Summer Time)

 

Post No. 5528

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

 

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து 16, 17, 18, 19, 20 எண்ணிட்ட ஸ்லோகங்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

 

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं
येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

 

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

 

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

 

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

 

கொடுத்தாலும் நிறைவன்றிக்

குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி

உழல்வதென்னே

 

XXXX

 

 

இன்னுமொரு பாடல்

अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥

 

அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்

த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி

அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்

ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்

எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை

அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்

முகம் கருத்த யானைக ளை    தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?

 

 

xxx

 

இன்னுமொரு பாடல்

 

अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥

 

அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ

ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா

 

ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்

வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ

பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.

 

XXX

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

 

 

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு- நாலடியார்

 

சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

 

கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்

மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.

 

சொல் அழகு

 

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

XXXX

 

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

 

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு

 

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.

‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்;

கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

XXXX SUBHAM XXX

 

 

காதல் முக்கோணத்தில் சிக்கிய புலவன்/அரசன்! (Post No.5214)

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

Written by London swaminathan

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London – 7-42 am  (British Summer Time)

 

Post No. 5214

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?”– —பத்ரகிரியார் புலம்பல்

 

பர்த்ருஹரி என்ற பெயரில் புலவர்களும் அரசர்களும் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தனர். பத்ரகிரியார் என்ற தமிழ் சித்தரும் பர்த்ருஹரியும் ஒரே கதை உடையவர்கள் அவருடன் பட்டினத்தாரும் சம்பந்தப்படுத்தப் படுகிறார்; ஒரே குழப்பம்!!! ஆனால் இதற்குள் ஒரு சுவையான கதை இருக்கிறது!

 

முதலில் கதையைப் படித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

 

உஜ்ஜைனி நகரத்தில் பர்த்ருஹரி என்று ஒரு அரசர் இருந்தார். அவரை ஒரு பிராஹ்மணன் சந்தித்து ஒரு அற்புத பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுவோர் நீண்ட காலம் வாழ்வர் என்றார்.

 

பர்துருஹரியின் பல மனைவியரில் இளையவர்தான் அவரது மனதைக் கவர்ந்த பேரழகி; அவள் பெயர் பிங்களா. ஆகையால் அன்புக் காதலி பிங்களாவுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்து “அன்பே! ஆருயிரே! தேனே! கற்கண்டே! இதை சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று ஒரு பெரியவர் சொன்னார். என் இதய ராணியான உனக்காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பகர்ந்தார்.

அவர் நாதா! உங்கள் அன்பே உலகில் பெரியது என்று சொல்லி, அதை ஒளித்து வைத்து, அவளது கள்ளலக் காதலன் போலீஸ் அதிகாரி மஹிபாலனுக்கு அளித்தாள். அவனுக்கோ பிங்களாவை விட ஒரு பேரழகி காதலி இருந்தாள் அவள் பெயர் லாகா.

 

“உலகிலேயே நீதான் அழகி” என்று சொல்லி அவளை ஏமாற்றிவிட்டு, அதை லாகாவிடம் கொடுத்தான். அவளுக்கோ மன்னர் மீதூ தீராக் காதல்! ஆறாக் காதல்! ஆகையால் அந்தப் பழத்தைக் கொண்டு வந்து

பர்த்ருகிரியாரே நீர்தான் என் இதய ராஜா; இது ஒரு அற்புத பழம். இதை ஒரு பெரியவர் எனக்குக் கொடுத்தார். இதைச் சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று சொல்லி பர்த்ருஹரியிடம் கொடுத்தாள்.

 

அவர் நொந்து போனார்; வெந்து போனார்; உளவாளிகள் மூலம் முக்கோணக் காதலை அறிந்தார். இந்த உலகில் நிலைத்தது காமமும் அல்ல; நமது உயிரும் அல்ல என்ற ஞானோதயம் பிறந்தது; தனது

சஹோதரனான விக்ரமாதித்யனிடம்  ஆட்சியை ஒப்படைத்து துறவியானார்.

 

இவர்தான் புகழ் பெற்ற 300 ஸம்ஸ்க்ருதப் பாடல் இயற்றிய பர்த்ருஹரியா என்பது அறிஞர்கள் விவாதிக்கும் விஷயம் ஆகும். அந்த பர்த்ருஹரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் நீதி சதகம் 100, ச்ருங்கார சதகம் 100, வைராக்ய சதகம் 100 என்று 300 பாடல்களை ஸம்ஸ்க்ருதத்தில் மழைபோலப் பொழிந்து உலகப் புகழ் பெற்றவர்.

 

இது தவிர வாக்படீயம் முதலிய இலக்கண நூல்களை இயற்றிவர் ஒருவரும் உளர். ஆக  காலத்தால் வேறுபட்ட பர்த்ருஹரிக்கள் யார் யார், அவர்தான் பத்ர்கிரியார் எனப்படும் தமிழ் சித்தரா என்று காலாகாலமாக அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர்.பல விக்ரமாதித்யன்கள்; பல பர்த்ருஹரிக்கள்; கொஞ்சம் குழப்பம்தான்.

 

எது எப்படியாகிலும் சுவையான கதையுடன் ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிய செய்தியும் கிடைக்கிறது. ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரோ ஸம்ஸ்க்ருதப் புலவரோ இல்லை.

xxx

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

 

நாட்டுப் புற பாடல்களில் பர்த்ருஹரி

வட இந்தியா முழுதும், குறிப்பாக ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதலிய மாநிலங்களில் பிச்சை எடுக்கும் ஆண்டிப் பண்டாரங்கள் இந்த பர்த்ருஹரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவர். அவரது பெயர் துறவியானவுடன் கோபிசந்த் ஆனது. அவர் கோரக்நாதர் என்பவரின் சீடர் என்றும் செப்புவர்

 

தமிழ் பத்ர கிரியாருக்கு பட்டினத்தார் குரு; வட இந்திய பர்த்ருஹரிக்கு குரு– கோரக் நாத். 500 ஆண்டுக் கால இடைவெளியில் பல பர்த்ருஹரிக்கள் இருந்தாலும் சுவை குறையாமல் பாடிச் சென்றுவிட்டனர்.

 

XXXX

தமிழ் சித்தர் பத்ரகிரியார்

பத்ரகிரியார் ஒரு புகழ் பெற்ற சித்தர். அவர் ஒரு அரசனாக இருந்ததாகவும் பட்டினத்தார் அவரை துறவியாக மாற்றியதாகவும்

ஒரு வரலாறு உண்டு. அவர் எழுதியது பத்ரகிரியார் புலம்பல் எனப்படும்.  சில இடங்களில் திருமூலரின் தாக்கம் தெரியும். இது ஒரு தத்துவப் பாடல் ஆகும்.  இவரது பார்வை ஏனைய சித்தர்களைப் போலத்தான். இவர் சிவ வாக்கியர் போல ஜாதிகளில் நம்பிக்கை அற்றவர்.  சம்த்துவத்தைப் போற்றும், ஜாதிகளை  எதிர்க்கும் கபிலர் அகவலை பத்ரகிரியாரும் குறிப்பிடுவார். அதே போல பத்திரகிரியாரை பிற்காலத்தில், ராமலிங்க சுவாமிகள் முதலானோர் பாடல்களில் போற்றுவர்.

 

இவரது காலம் பட்டினத்தார் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

 

பத்ரகிரியார் பாடலில் சில சுவையான பகுதிகள்

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?

 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொல்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

 

ஆசாரம் நேயம் அநுஷ்டானமும் மறந்து

பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்?

 

மனத்தை வில்லாக்கி வான் பொறியை நாணாக்கி

எனது அறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

 

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?

 

–பத்ரகிரியார் புலம்பல்

ஓவியங்கள்

நாடுப்புறப் பாடல்களில் மட்டுமின்றி ஓவியங்களிலும் பர்த்ருஹரியின் தாக்கத்தைக் காணலாம்.

 

மொகலாயர் கால ஓவியங்களில் பர்த்ருஹரி பிச்சை எடுக்கும் காலத்தில் தனது பழைய மனைவியைச் சந்தித்த ஓவியமும் உளது.

 

-subham–

வேலைக்காரர் படும் பாடு! (Post No.4783)

Date: 25 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-19 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4783

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வேலைக்காரர் படும் பாடு!

 

ச.நாகராஜன்

 

உலகியல் வாழ்க்கையில் அனைவரது நிலையையும் மிகச் சரியாகக் கணித்து அனுதாபப்படுபவர் கவிஞர் பர்த்ருஹரியைப் போல இன்னொருவரைப் பார்ப்பது துர்லபம்.

வேலைக்காரர்களின் மனோபாவத்தையும் அவர்கள் படும் பாட்டையும் நீதி சதகத்தில் விளக்குகிறார். (பாடல் 47)

 

பாடலைப் பார்ப்போம்:

 

மௌநாத் முக:ப்ரவசந

படு வாசகோ ஜல்பகோவா

த்ருஷ்ட: பார்ச்வே பவதி ச

வஸந் தூரதோப்ய ப்ர கல்ப: |

க்ஷாந்த்யா பீருர்யதி

ந ஸஹ்தே ப்ராயசோ

நாபி ஜாத: ஸேவாதர்ம:

பரம கஹந; யோகிநாமப்ய கம்ய: ||

 

வேலக்காரன் (மௌநாத்) சற்றுத் தள்ளி ப்வ்யமாக இருந்தால் ஊமை எனப்படுகிறான்,

நன்றாகப் பேசினாலோ (ப்ரவசன ப்டு) அதிக ப்ரசங்கி எனப்படுகிறான்.

யஜமானன் பக்கத்தில் நின்றாலோ (பார்ச்வே பவதி) துணிச்சல்காரன் எனப்படுகிறான்.

தூரத்தில் (தூரத:) இருந்தாலோ தைரியமற்றவனாக நினைக்கப்படுகிறான்.

வசவு, திட்டுகளைப் பொறுத்தால் (க்ஷாந்த்யா) பயந்தாங்கொள்ளி எனப்படுகிறான்.

வார்த்தைகளைப் பொறுக்காவிட்டாலோ (யதி ந ஸஹதே) நல்ல குலத்தில் பிறந்தவன் இல்லை என்கிறார்கள்.

பிறரிடம்  ஊழியம் செய்யும் காரியமானது (ஸேவா தர்மம்) பெரும்பாலும் மிகவும் கடினமானது. (பரம கஹன)

மூன்று காலமறிந்த யோகிகளுக்கும் கூட புலப்படாதது. ( யோகிநாமபி அகம்ய)

 

ஒரு நல்ல வேலைக்காரன் எப்படி ஊழியம் செய்தாலும் விமரிசிக்கப்படுகிறான்.

 

அவனால் என்ன தான் செய்ய முடியும்?

 

ஆகவே தான் வாழ்நாள் முழுவதும் ஊழி யம் செய்வதில் மாட்டிக் கொண்ட ஒருவன் இருந்தும் இறந்தவனே என்று பெரியோர் சொல்கின்றனர்.

 

(இருந்தும் இறந்தவர் யார் யார் கட்டுரையைப் பார்க்கவும்)

 

நன்றி: எஸ்.கல்யாணசுந்தரம் 11-2-1949, கும்பகோணம்

பிரசுரகர்த்தா & மானேஜர்

ஸ்ரீ ஜனார்த்தனா பிரிண்டிங் பிரஸ்

***

கருமமே கண்ணாயினார்!

kumaragurupara

16.சம்ஸ்கிருதச் செல்வம்

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்ற மாபெரும் கவிஞரான பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலை முன்பு பார்த்தோம்.(அத்தியாயம் 9). இன்னொரு பாடலை இப்போது பார்க்கலாம்.

ஒரு தீரனான மனிதன் கார்ய சித்தியைப் பெறுவது பற்றி அழகுற நீதி சதகத்தில் 73ஆம் பாடலில் கூறுகிறார் அவர். பாடல் இதோ:

க்வசித் ப்ருத்வீசய்ய: க்வசிதபி பர்யங்க ஸயக:
க்வசித் சாகாஹார: க்வசிதபிச ஸால்யோ தன ருசி: I
க்வசித் கந்தாதாரீ க்வசிதபிச திவ்யாம்பரதர:
மநஸ்வீ கார்யார்த்தி ந கணயதி துக்கம் ந ச சுகம் II

கார்யார்த்தி : கார்யசித்தி பெற விரும்பும் (ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும்)
மநஸ்வீ : தீரனான ஒரு மனிதன்
துக்கம் : துக்கத்தையோ
சுகம் : சுகத்தையோ
ந கணயதி : பாராட்ட மாட்டான்
க்வசித் ப்ருத்வீசய்ய: : சில சந்தர்ப்பங்களில் வெறும் பூமியில் படுப்பான்
க்வசிதபி பர்யங்க ஸயக: : வேறு சந்தர்ப்பத்தில் உயர்ந்த கட்டிலிலும் படுப்பான்
க்வசித் சாகாஹார: : ஒரு சமயம் வெறும் காய் கிழங்குகளையே புசிப்பான்
க்வசித் ஸால்யோ தன ருசி: : இன்னொரு சமயம் உயர்ந்த சம்பா அரிசி சாதத்தைப் புசிப்பதில் ருசி கொள்வான்
க்வசித் கந்தாதாரீ : ஒரு சமயம் கந்தை ஆடையை அணிவான்
க்வசிதபிச திவ்யாம்பரதர: : இன்னொரு சமயமோ திவ்யமான ஆடையை அணிவான்

ஆக வெற்றியை விரும்பும் ஒரு மனிதன் சுக துக்கங்களைப் பொருட்படுத்தமாட்டான். இப்படி வெற்றி பெற இலக்கணம் வகுக்கிறார் பர்த்ருஹரி.

இந்தப் பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.

எடுத்த காரியத்திற்குத் தடைகள் செய்வோர் ஏராளம். அதை விட்டு விடுமாறு கூறுவதோடு அவமதிப்பைச் செய்வோரும் ஏராளம்.ஆனால் அதையெல்லாம் மீறி தனது உறுதியை விடாமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுபவனே உண்மையில் தீரன் ஆவான்.

புராணங்களில் புகழுடன் திகழும் துருவன், நசிகேதன், பகீரதன் என ஏராளமானோர் நமக்கு உத்வேகம் ஊட்டுகின்றனர்.
நல்ல காரியத்தை லட்சியமாகக் கொள்வோம்; அதை முடித்து வெற்றியும் பெறுவோம்!

நாகராஜன் எழுதிய 60 கட்டுரைகளும் லண்டன் சுவாமிநாதன் 600 (60+600=660) கட்டுரைகளும் இந்த பிளாக்கில் கிடைக்கும். படித்து மகிழ்க.

இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்

Picture : courtesy of  The Hindu

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா—நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால் ( வாக்குண்டாம் )

பொருள்: தென்னை மரம் நிலத்திலிருந்து குடித்த தண்ணீரை சுவையுடைய இளநீராக தலை வழியாகத் தருதல் போல, ஒருவர்க்கு உதவி செய்தால் தருணம் வரும்போது மிகுதியாகத் திருப்பிச் செய்வார். ஆகையால் ஒருவர்க்குச் செய்த உதவி எப்போது திருப்பிக் கிடைக்கும் என்று எண்ணத் தேவையே இல்லை.

இந்த அருமையான கருத்தை 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நீதிசதகம் (ஸ்லோகம் : ப்ரதம வயசி ப்லுதம் தோயம்——) எழுதிய பர்த்ருஹரி என்ற புகழ்மிகு கவிஞனும் அழகாகப் பாடிவிட்டான்:

பொருள்: மரம் நட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீர் பாய்ச்சுகிறோம். அதற்கு நன்றிக் கடனாக வாழ் நாள் முழுதும் தன் தலையில் பெரிய பாரத்தைச் சுமந்து கொண்டு சுவையான இளநீரைத் தருகிறது தென்னை.

தென்னை மரத்துக்கும் இளநீருக்கும் இப்படி அறிமுகம் தேவை இல்லை. தேங்காய் என்பது கோவில்களிலும் பூஜைகளிலும் உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்று. இலை முதல் நார் வரை எல்லா பகுதிகளும் பயன் படுவதால் இந்த மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுவோரும் உண்டு.

தமிழ்நாட்டில் திருத் தெங்கூர், வட குரங்காடு துறை முதலிய கோவில்களில் தல விருட்சமாக விளங்குகிறது. சித்த, ஆயுர்வேத வைத்தியத்தில் தேங்காய் எண்ணை முதல் மரத்தின் பல பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கள், சர்க்கரை, கயிறு, கூடை, விசிறி, கட்டில், உத்தரம் என எல்லாம் தந்து மனிதனின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து விட்டது.

இளநீர் சூட்டைத் தவிர்க்கும் என்பது உலகறிந்த உண்மை. கோடை காலம் வந்து விட்டால் சாலை ஓரம் முழுதும் மலை போலக் குவித்து, பொழுது சாயும் வரை விறுவிறுப்பாக விற்கின்றனர். இதெல்லாம் பழைய கதை.

Picture: Coconut Tree in Hawai,USA

புதிய கதை என்னவென்றால் இதை அட்டை டப்பாவில் ( carton) அடைத்து ஜூஸ் போல அமெரிக்கவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விற்கத் துவங்கி விட்டார்கள். இதன் காரணமாக இதற்கு புது கிராக்கி வந்துவிட்டது. கோகோஸ் ந்யூசிபெரா (cocos nucifera) என்ற தாவரவியல் பெயருடன் உலகின் பெரும்பாலான கடற்கரைகளை அழகுபடுத்தும் மரம் இது.

வெளிநாடுகளில் ஒரு பொருளை விற்கவேண்டும் என்றால் அதன் எடை, அது தயாரிக்கப்பட்ட நாள், எத்தனை நாள் வரை அதைப் பயன்படுத்தலாம், அதில் என்ன என்ன சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன என்று எல்லா வற்றையும்  எழுத வேண்டும். இப்படி எழுதிய உடனே இளநீருக்கு புது “மவுசு” வந்து விட்டது.

இளநீரில் பொட்டாசியம் மக்னிசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், தாமிர, கந்தக, இரும்புச் சத்து, வைட்டமின்கள் உண்டு. வாழைப்பழத்தைப் போல இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து அறவே இல்லை. சர்க்கரைச் சத்தோ ஆரஞ்சு பழரசம் போன்ற பழ ரசங்களை விட மிகக் குறைவு. வயிற்றிலுள்ள புழுக்களைக் கொல்லும். சிறு நீரகத்தைப் பாதுகாக்கும். சில வகை புரதச் சத்து பசும்பாலை விட அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை யாருக்கும் கொடுக்கலாம். சிறு நீரக, குடல் தொற்று நோய்கள், வயிற்றுப் போக்கு எல்லாவற்றுக்கும் மருந்தும் ஆகும்.

தென்னை 5, 6 ஆண்டுகளில் பலன் தரும். பனை மரமோ பலன் தர 30 ஆண்டுகள் ஆகும்.