
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9880
Date uploaded in London – 22 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி அரவிந்தரும் கூறியவை!
ச.நாகராஜன்
பாகிஸ்தான் உருவான விதத்தை பாரத தேச மக்கள் அனைவரும் அறிவோம்.
இப்படி ஒரு நாடு உருவாவதை மஹாத்மா காந்திஜி விரும்பவில்லை.
அவர் கூறிய சில சொற்கள் இவை:-
அதை அப்படியே ஆங்கிலத்தில் காணலாம்.
“I am firmly convinced that the Pakistan demand as put forth by the Muslim League is un-Islamic and I have not hesitated to call it sinful”.
– Harijan 6, October 1946
–
“முஸ்லீம் லீக் முன் வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கை இஸ்லாமுக்கு எதிரானது. அது பாவகரமானது என்று சொல்ல நான் தயங்க மாட்டேன்.”
இது தான் அவரது நிலைப்பாடாக 1946 அக்டோபரில் – அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் பாகிஸ்தான் உருவாவதற்கும் சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் – இருந்தது.
பாகிஸ்தான் அவரது விருப்பமில்லாத நிலையில் 1947 ஆகஸ்டில் உருவானது.
அவர் கூறினார் அடுத்து:-
“If Pakistan persists in wrong doing there is bound to be war between India and Pakistan.”
– Harijan 28, September 1947
பாகிஸ்தான் தவறு செய்வதைத் தொடர்ந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் உருவாகும். – இப்படி அவர் 1947 செப்டம்பரில் கூறினார் – அதாவது அவர் மறைவதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாக.
அஹிம்சையை வாழ்நாள் கொள்கையாக வலியுறுத்திய அவராலேயே பாகிஸ்தானின் தவறான போக்கும் செயலும் சரியில்லை என்பது கூறப்பட்டது. அது தொடர்ந்தால் போர் தவிர்க்க முடியாது போய் விடும் என்றார் அவர்.
போரை அவரால் என்றேனும் ஆதரிக்க முடியுமா?
அவர் அடுத்துக் கூறுவதைப் பார்ப்போம்:
“I have been an opponent of all warfare. But if there is no other way of securing justice from Pakistan, if Pakistan persistently refuses to see its proved error and continues to minimize it, the Indian Government will have to go to war against it. If there is a war, the Hindus in Pakistan cannot be fifth columnists there. No one will tolerate that. If their loyalty lies not with Pakistan they should leave it. Similarly the Muslims whose loyalty with Pakistan should not stay in the Indian Union.
– Harijan 6, October 1947
–
“எல்லாப் போரையும் எதிர்த்து வருபவன் நான். ஆனால் பாகிஸ்தானிலிருந்து நீதி கிடைக்காதிருக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் தொடர்ந்து தனது தவறுகளைச் செய்து கொண்டிருப்பதைக் காணாதிருப்பின், அதைக் குறைப்பதற்கு மறுப்பின், அதற்கு எதிராக இந்திய அரசு போருக்குச் செல்ல வேண்டியிருக்கும். போர் ஏற்படின் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் ஐந்தாம் படையாக அங்கு இருக்க முடியாது. அதை யாரும் பொறுக்க மாட்டார்கள். அவர்களின் விசுவாசம் பாகிஸ்தானிடம் இல்லையெனில் அவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். அதே போல பாகிஸ்தானுக்கு விஸ்வாசமாக உள்ள முஸ்லீம்கள் இந்திய யூனியனை விட்டு வெளியேற வேண்டும்.”
மிகத் தெளிவாக இப்படி 1947 அக்டோபரில் அவர் கூறினார்.
பாகிஸ்தானைப் பற்றிய மிகத் தெளிவான பார்வையை அவர் கொண்டிருப்பதை இதன் மூலம் அறியலாம்.
பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்பை 1947லிருந்து இன்றைய வரை இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஹிந்துக்களும் நன்கு உணர்வர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஓரிழையில் இணைந்து பாகிஸ்தானை நோக்கினால் பாகிஸ்தான் தனது வாலை ஆட்ட நினைத்தும் பார்க்காது.

இனி மஹரிஷி அரவிந்தர் பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிக் கூறியதைப் பார்ப்போம்.
திருச்சி வானொலி நிலையத்திற்கு ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு உரையை மஹரிஷி அரவிந்தர் தந்தார்.
அதில் “The Partition must go” – பிரிவினை போக வேண்டும் என்ற தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
“(பாகிஸ்தான்) பிரிவினை என்பது செயற்கையானது. அது போக வேண்டும். போய் விடும்” என்பது அவர் கருத்தாக இருந்தது.
எதிர்காலம் காணும் மஹரிஷியின் தீர்க்க தரிசனமாகவே இதைக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் பிரிவினை பற்றி மஹாத்மா காந்திஜி கூறிய கருத்துக்களும், அதே போல 1950 முடிய வாழ்ந்த மஹரிஷி அரவிந்தர் கூறிய கருத்துக்களும் தனியே தொகுக்கப் பட வேண்டும்.
அது ஒரு தெளிவான எதிர்காலத்தை பாரத தேச மக்களுக்குக் காட்டும்!

NDEX
Mahatma Gandhiji on Pakistan.
Aurobindo on Pakistan
The division is unnatural
War between India and Pakistan
Division will have to go; will go
tags- பாகிஸ்தான் ,காந்திஜி, அரவிந்தர்
You must be logged in to post a comment.