பாரதி பாட்டில், பகவத் கீதையில், சிலம்பில் சோம பானம் ! (Post.10,429)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,429
Date uploaded in London – – 10 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் முப்பது வெள்ளைக்காரர்கள் நமது நான்கு வேதங்களை மொழிபெயர்த்தனர் ; எல்லோரும் நவக்கிரகங்கள்; நல்ல கோமாளிகள் ; இரண்டு கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டாது என்ற பழமொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். ஒரே சொல்லுக்கு நாலு கோமாளிகள் நாலு விதமாகப் பொருள் சொன்னதோடு எ திரும் புதிருமாக அர்த்தம் செய்தார்கள் . ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தார்கள், பூர்வ குடிமக்களை விரட்டியடித்தார்கள் என்பதில் ஒற்றுமை!! ஏனெனில் உலகம் முழுதும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் குடியேறிய வெள்ளைக்காரர்கள் அங்குள்ள பூர்வ குடிமக்களை குருவி சுடுவது போலவும், வனவிலங்குகளை வேட்டையாடுவது போலவும் கொன்று குவித்து அந்த நாடுகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். இன்று ஆங்காங்கே பெயரளவுக்கு மட்டுமே அவர்கள் உள்ளனர் ; அதே கொள்கையை இந்தியா மீதும் திணித்து, சங்ககால இலக்கியத்தில் இல்லாத, புராண இதிஹாசங்களில் இல்லாத பொய்மைச் செய்திகளைப் பரப்பினார்கள்.

நல்ல வேளை , பாரதி போன்ற யுகபுருஷர்களும், மஹாத்மா காந்தி, அம்பேத்கார், சுவாமி விவேகானந்தர் போன்றோரும் ஆரிய திராவிட வாதத்துக்கு சாவு மணி அடித்தார்கள்


இந்த முப்பது வெள்ளைக்காரர்களும் ஒப்புக்கொண்ட இன்னொரு விஷயம் சோமபானம் என்பது போதைப்பொருள்; அது சாப்பிட்டவுடன் போதை தலைக்கேறும் என்று சொல்லி பல காளான் வகைத் தாவரங்களின் பெயர்களை எல்லாம் உளறிக் கொட்டினார்கள். இது 1895ம் ஆண்டு RALPH T H GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட வேத மொழி பெயர்ப்பிலேயே உள்ளது. மொத்தத்தில் மாக்ஸ் முல்லர் கும்பலும் தேச விரோத, இந்து விரோத மார்க்ஸீயக் கும்பலும் ஒத்துக்கொண்ட விஷயம் இது.

ஆனால் வேதம் முழுதும் சோமபானம் பற்றிவரும் அதிசயச் செய்திகளை மறைத்தோ அல்லது அவை செய்தியே அல்ல என்ற பாணியில் பாராமுகம் காட்டியோ இதைச் செய்தனர். இன்றுவரை அவர்கள் சோம பானத்தை பயன்படுத்தி, அவர்கள் சொன்னதை நிரூபிக்கவும் இல்லை !
XXX
சோமபானம் பற்றிய அதிசயச் செய்திகள்

4 வேதங்களிலும் சோம பானம் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன.

1.சோம லதா என்ற கொடியை அல்லது தாவரத்தை கழுகுகள் கொண்டுதரும்

  1. சோமம் என்னும் மூலிகை, மூலிகைகளின் அரசன்
  2. சோமத்தில் 15 வகைகள் உண்டு
  3. சோமம் என்பது சிவப்பு நிற மரம்
    5.சோமபானத்தைக் குடித்தால் பாவம் போகும்
  4. மனம் சுத்தம் ஆகும்
  5. சக்தி, வீரம் அளிக்கும்
    8.புளிப்பு, இனிப்பு சுவையுடன் இருக்கும்
    9அதைப் பிழியும் மரக் கரண்டிகள், கற்கள் ஆகியன தெய்வம் போன்றவை
    இவைகளை எல்லாம் விளக்காமல் சென்றுவிடுவார்கள்
    .தளவாய்புரம் செப்பேடுகள் 1200 ஆண்டு பழமையானவை. அது சோமயாகம் செய்து மனம் சுத்தமான காடக சோமயாஜியின் புகழைப் பாடுகின்றது . பகவத் கீதை, சிலப்பதிகாரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியன சோம யாகத்தைப் புகழ்கின்றன. ; உலக மகா கவி சுப்ரமணிய பாரதி, நம து நாட்டை ஆரிய நாடு என்று பல இடங்களில் புகழ்வதோடு ஆரிய என்பதை நல்ல பொருளில், உண்மைப் பொருளில், பயன்படுத்துகிறார்.
    இதே போல பாரதியார் சோம ரசத்தைப் புகழ்ந்தும் பாடுகிறார் ; இது பலருக்கும் தெரியாது

அவருடைய படலைப் பார்ப்பதற்கு முன்னர், கீதையும் சிலப்பதிகாரமும் எப்படிப் புகழ்கின்றன என்று பாருங் கள் !
பகவத் கீதை 9-20
“மூன்று வேதங்களையும் கற்றவர்கள் வேள்விகளால் என்னைப் பூஜித்து சோம பானத்தால் பாவம் தோய்ந்தவர்களாய் சுவர்கத்துக்குச் செல்லுவதை வேண்டுகின்றார்கள் .அவர்கள் புண்ய பலத்தின் உறைவிடமான தேவேந்திர உலகத்தை அடைந்து அவ்வானுலகில் ஒளி வீசுகின்ற தேவர்கள் அனுபவிக்கும் சுக போகங்களை அனுபவிக்கிறார்கள் “.

இந்த ஸ்லோகம், சோமபானம் அருந்துவதால் பாவம் போய், அவர்கள் சொர்கத்துக்குச் சென்று ஒளிமயம் ஆகிவிடுவார்கள் என்கிறது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அரசனுக்குரிய வெண் குடை சோமயாஜிகளுக்கு கிடைக்கும் என்கிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு உரை எழுதிய சங்கரரும் சோமபானம் என்பது கடவுளரின் ரத்தத்துக்குச் சமம் என்று ஹரிவம்ச ஸ்லோகத்தின் மூலம் காட்டுகிறார்.
இளங்கோ அடிகள்
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் சோமயாகம் செய்தது பற்றிப் பாடுகிறார் .

“இந்திரனுடைய அமராவதியிலிருந்து சதுக்க பூதங்களை வஞ்சி நகருக்குக் கொண்டுவந்து , மது அருந்துவதற்குரிய சோம வேள்விகளைச் செய்தவன் இன்று இல்லை” என்கிறார்

சதுக்கப்பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
— நடுகல் கதை, சிலப்பதிகாரம்

இதிலிருந்து ஒருகாலத்தில், ஒரு சேர மன்னன், சோம யாகம் செய்தது தெரிகிறது; மது என்னும் சொல் தேன், சோமம் ஆகிய இரண்டுக்கும் வேதத்தில் பயன்பட்டது சுரா பானம் என்பதை கள் , சாராயம் என்று சொல்லி வேதம் கண்டிக்கிறது .
பாரதி இரண்டு பாடல்களில் சோம ரசத்தைக் குறிப்பிடுகிறார்.

மது என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது போலவே சோமம் என்பதற்கு சந்திரன், சோமபானம் என்ற இரண்டு பொருள் உண்டு. அதற்கு உமையுடன் கூடிய சிவன் (ச+உமா=சோம )என்றும் சங்கரர், விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் விளம்புகிறார்.

ஜய ஸோம என்ற பாரதி பாட்டில் இந்திரனையும் சோமனையும் தொடர்பு படுத்திப் பாடுகினறார் .ரிக்வேதம் முழுதும் இந்திரனுடன் சோம ரசம்தான் சம்பந்தப்படுகிறது. அதனால்தான் இந்திரன் சக்தி பெற்று விருத்திரன் முதலியோரைக் கொன்றான் என்றும் வருகிறது.

இந்திர- சோமன் என்று ஜோடியாகப் பாடப்படும் ஓரிரு துதிகளிலும் சோமம் என்னும் மூலிகைப் பற்றித்தான் பேசுகின்றனர் உரைகாரர்கள் ; ஆகவே ஜய சோமம் பாடல் சோம மூலிகை பற்றிதே. ஒருவேளை வேத கால முனிவர் போலவே பாரதியும் இரட்டுற மொழிந்திருக்கலாம் .

சோம ரசம் பற்றிய பாடலைப் படிப்போருக்கு பாரதியின் கருத்து தெள்ளிதின் விளங்கும். அவர் அதன் சிறப்புகளை எடுத்து ஓதுகிறார்; குறை ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ பாரதியின் பாடல்கள்
XXX
சோமதேவன் புகழ் by Bharati
From http://www.lakshmansruthi.com
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய்
— பாரதியார் கவிதைகள்
xxx
சிவசக்தி by Bharati
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்‘ஓம்’என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய்
1

அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
2

உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்
3

தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்
4

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம்
5

கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்!
6

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம்.
7

எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்
From http://www.lakshmansruthi.com
–பாரதியார் கவிதைகள்


xxx SUBAHM xxxx

tags- சோமம், சோம ரசம், பானம் , பாரதி, இளங்கோ , கீதை