நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தெய்வாபிமானம் – பாபாவின் உரை! (6324)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 29 April 2019


British Summer Time uploaded in London – 13-09

Post No. 6324

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தேஷாபிமானம், தெய்வாபிமானம் – பாபாவின் உரை!

ச.நாகராஜன்

இடம் புட்டபர்த்தி -பிரசாந்தி நிலையம்.

21-7-2002 அன்று ஆரம்பிக்கவிருந்த பன்னாட்டு சேவா மாநாடுகளின் ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன.

அதைத் தொடக்கி வைக்க வேண்டியவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா.

ஆனால் அவரால் பேச முடியாதபடி அவரது தாடைகள் வீங்கி இருந்தன. உணவு உண்ண முடியாது, பேசவும் முடியாது.

நிகழ்ச்சியின் பொறுப்பாளரான திரு சீனிவாசனுக்கு பெரும் கவலை வந்து விட்டது.

ஆனால் பாபாவோ மாநாடு ஏற்பாட்டைத் தொடருமாறு கூறி விட்டார்.

மாநாட்டில் அவரது உரை பிரமாதமாக அமைந்தது. அதில் இறுதியில் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கிக் கூறினார்.

கழுத்து வீக்கத்தினால் ஒரு சிறுவன் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். தாங்க முடியாத வலி. டாக்டரோ அது தீர குறைந்த பட்சம் 20 முதல் 25 நாட்கள் ஆகும் என்று கூறி விட்டார்.

அவனை அழைத்த பாபா, ‘சாயி உன்னுடன் இருக்கையில் நீ ஏன் அழுகிறாய்’ என்று கூறி விட்டு ஒரு இனிப்பை தன் அங்கை அசைவினால் வரவழைத்தார். அதை அந்தப் பையன் வாங்கி உண்டான்.

வலியை பாபா ஏற்றுக் கொண்டார்.

சீனிவாசன் பாபாவை எப்படி நீங்கள் உரை ஆற்றப் போகிறீர்கள் என்று கேட்ட போது “இது உடல் என்ற உணர்வு இருந்தால் தானே வலியை நான் உணரப் போகிறேன். இது உனது உடல். அனைத்து உடல்களுமே என்னுடையவையே” என்று அருளினார்.

அவரது உரையின் ஒரு பகுதி இதோ:

திரு சீனிவாசனை நோக்கி அவர் கூறியது :“I feel the pain if I think that this is My body. But this is not My body, it is yours.”

பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டோரை நோக்கி அவர் கூறினார்:

“All your Bodies are mine. Hence I take your suffering upon Myself. That is My duty. THIS is not My body, so I do not care for it. Not only now, at any point of time, I do not care for any suffering. I practise whatever I preach. That is why I say, My Life is My message. It is not possible for all to understand and realise My Divinity. I do not want to say it in public. I do not indulge in advertisement. All that is Mine is yours and vice-versa. I have no desires at all. All My desires  are meant to give you happiness. Greatness does not lie in preaching, it lies in practice. A true acharya (preceptor) is one who practises and then preaches.  That is what I am doing.”

பாபாவின் இந்தச் சொற்களிலிருந்து அவரது தெய்வீகத் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவில் கருத்துக்கள் சொல் ஜாலத்துடன் வெளி வந்தன; அனைவரையும் மகிழ்வித்தன.

 “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உடல் உண்டு. இயற்கை ஒரு கண்ணாடி. நீங்கள் இதில் பார்ப்பது உங்களது பிரதிபலிப்பையே அன்றி வேறல்ல. இன்று மனிதன் சுயநலத்துடனும் சுய தேவையுடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். சுயநலம் சமூகத்தில் முற்றிலுமாகப் பரவி விட்டது. தேஹாபிமானம் அதிகமாகிக் கொண்டே போகிறது.  தேஷாபிமானம் குறைந்து கொண்டே வருகிறது. தேஹாபிமானத்தை ஒருவன் விடும் வரையில் அவன் தெய்வாபிமானத்தை விருத்தி செய்து கொள்ள முடியாது.” என்றார் அவர்.

உரையின் ஆரம்பத்தில் பாபா மனித வாழ்க்கையின் அஸ்திவாரங்களை விளக்கினார்.

“மனித வாழ்க்கையானது சமதா (Samata -Euality),

சமைக்யதா(Samaikyata – Unity),

சௌப்ரத்ருத்வம் (Saubhratrutvam – Fraternity),

சௌஜன்யம் (Saujanyam – Nobility)

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வாழ்க்கை என்னும் மாளிகைக்கு இவையே அஸ்திவாரங்களாக அமைகின்றன. இதில் எந்த ஒன்று இல்லாத போனாலும் கூட வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். ஆகவே ஒவ்வொருவரும் இவற்றை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மனிதத் தன்மை என்றால் என்ன என்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.

சத்யம் நீதியை போஷிக்கிறது (Truth fosters Neethi – Morality)

தர்மம் க்யாதியைத் தருகிறது (Righteousness confers Kyati – Reputation)

தியாகமே ஜோதி ஆகிறது (Thyaga (sacrifice) is the Jyothi)

மானவ ஜாதி இந்த மூன்றின் சேர்க்கையாக இருக்கிறது. (Mana jathi – human race- is the combination of these three – neetim kyathi and Jyoti.”

தொடர்ந்து தனது உரையில் மனிதன் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சேவாதள மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவாதளத் தொண்டர்கள் பரவசமடைந்தனர்; பாபாவைத் தொழுதனர்.

நிகழ்ச்சி பெரும் வெற்றியுடன் முடிந்தது.

***

முழு உரையையும் ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் SATHYA SAI SPEAKS – Volume 35  உரை எண் 11ஐப் படிக்கலாம்.

நூல் கிடைக்குமிடம் : Sri Sathya Sai Books & Publications Trust Prasanthi Nilayam – 515 134, Ananthapuram District, Andhra Pradesh, India

xxxx

அஷ்டமி, நவமி பற்றி சத்ய சாய் பாபா

தொகுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1862; தேதி 13 மே 2015

லண்டன் நேரம்: 19-12

வளர்பிறையின் எட்டாவது, ஒன்பதாவது நாட்களாகிய அஷ்டமி, நவமி திதிகளை நல்லவை அல்ல என்று மக்கள் கருதுவது மிகவும் தவறாகும். ஏனெனில் உண்மை இதற்கு நேர் மாறானது. இவ்விரு நாட்களும் இவ்வுலகில் அவதாரங்கள் தோன்றிய திரு நாட்களைக் குறிப்பனவாகும். கண்ணன் எட்டாம் நாளாகிய அஷ்டமியிலும், ராமன் ஒன்பதாம் நாளாகிய நவமியிலும் தோன்றினர்.

கண்ணன் தோன்றிய ரோகிணி நட்சத்திரம் யோக ஆற்றலைப் பெறுவதோடு தொடர்புடையது. இராமர் தோன்றிய புனர்பூசம், சரணாகதி நெறியோடு தொடர்புடையது. அதாவது இந்த நட்சத்திரத்தில் தோன்றியவன் எளிதில் இரக்கம் கொண்டு, தன்னிடம் அடைக்கலமாக வந்த யாருக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்யும் இயல்பினன்.

சாதனையைத் தொடங்குவதற்கு இந்த நாட்களைத் தேர்ந்தெடுங்கள்; பூசை செய்யவும், வழிபாடு செய்யவும், நீங்களே தேர்ந்தெடுத்த கடவுள் வடிவத்தை நாடுவதற்கும் இந்நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இந்நாட்களுடனும், நட்சத்திரங்களுடனும் கெட்டவற்றைத் தொடர்பு படுத்தாதீர்கள். நீங்கள் இவற்றை மதித்து வழிபடுங்கள். இந்நாளில் இதுவே என் அறிவுரையாகும்

–பிரசாந்தி, அக்டோபர் ,1965

பில்லியன் டாலர் பிறந்த நாள் விழா: இந்துக்கள் கண்டுபிடிப்பு!

baba-birthday-1

Sri Sathya Sai baba’s Sahasra Chandra Darsana Festival

Research paper No 1672; Dated 24th February 2015

Written by London swaminathan

நாகரீகம் வாய்ந்த ஒரு சமுதாயம்தான் “ரோட்டி, கப்டா, அவர் மகானு”க்கு (உணவு, உடை, உறைவிடம்) மேல் சிந்திக்க முடியும். 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேத இலக்கியங்களைப் படைத்து அவற்றை வாய்மொழி மூலமாகவே பாதுகாக்க வேண்டும் என்றால் அது எத்தகைய ஒரு உயரிய சிந்தனை உடைத்தாயிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ‘பெர்fயூம்’ செய்வது எப்படி என்று (வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா) நூல் எழுத வேண்டுமானால் அவர்கள் நாகரீகத்தில் எவ்வளவு முன்னேறி இருக்க வேண்டும்?

இதே இந்துக்கள்தான் பிறந்த நாள் கொண்டாடும் வழக்கத்தையும் உலகிற்குக் கற்பித்தார்கள். இன்றோ, அது மேல் நாட்டில் பில்லியன் டாலர் ‘பிஸினஸ்’ ஆகிவிட்டது. பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், பிறந்த நாள் ‘கேக்’, திடுக்கிடும் ‘சர்ப்ரைஸ் பார்ட்டி’கள், பிறந்த நாள் பலூன், உணவு படைப்பு என்று இப்படி எத்தனையோ தொழில்கள் வளர்ந்துவிட்டன. எப்படி ‘பெர்Fயூம்’ (ஸெண்ட்) செய்வது நம் நாட்டில் துவங்கி இன்று பிரான்ஸ் நாட்டில் பில்லியன் டாலர் வணிகம் ஆனதோ அதே போல இந்த பிறந்த நாள் வைபவ விஷயங்களும் மேலை நாடுகளில் பெரும் வணிகம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் மூல காரணம் இந்துக்கள் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

நாம் எப்படி துவக்கினோம்?

கிருஷ்ண ஜயந்தி

ராமர் ஜயந்தி (ராம நவமி)

ஹனுமன் ஜயந்தி

சங்கர ஜயந்தி, ராமானுஜ ஜயந்தி, ரமண ஜயந்தி, ராமகிருஷ்ண ஜயந்தி, மத்வ ஜயந்தி என்று ஆரம்பித்து வைத்தோம். மாற்று மதத்தினரும் இதைப் பிடித்துக் கொண்டார்கள்.

புத்த ஜயந்தி

ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)

முகமது ஜயந்தி (மிலாடி நபி)

என்று அவரவர் கொண்டாடத் துவங்கினர். நாம் இதற்கும் மேலாக ஒரு படி போனோம்:

(ஜயந்தி என்றால் பிறந்த நாள்)

தேவர் ஜயந்தி

காந்தி ஜயந்தி

நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)

ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)

என்று மனிதர்களுக்கும், புனித மகான்களுக்கும் கொண்டாடத் துவங்கினோம்.

Sahasra_Chandra_Darshanam_Yagnam_Mahotsavam

புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா!!!

பின்னர் இதற்கும் மேலாகப் போனோம்:

கீதா ஜயந்தி என்று பகவத் கீதை உலகில் தோன்றிய நாளையும் கொண்டாடத் துவங்கினோம். உலகில் புத்தகத்துக்கு ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடும் ஒரே இனம் இந்துக்கள்தான்!

பிறந்த நாள் கொண்டாடுவது 40 சம்ஸ்காரங்களில் ஒன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஆண்டு நிறைவில் ஆயுஷ் ஹோமம் என்று பெரிய ஹோமம் நடத்துவோம் அல்லது கோவிலுக்கு குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விசேட அபிஷேக ஆராதனைகளை செய்வோம். இப்போதெல்லாம் மேலை நாடுகள் போல ‘கேக்’கும் வெட்டத் துவக்கி விட்டோம்.

ஆனால் இந்துக்கள் இத்தோடு நிற்கவில்லை. தினமும் பிராமணர்கள் சொல்லும் வேத மந்திரத்தில் நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், மோதாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்…..) என்று சொல்வதால் 100 ஆண்டுகள் வரை என்ன என்ன பிறந்த நாள் விழா என்று சாத்திரங்கள் பட்டியலே போட்டுக் கொடுத்துவிட்டன. உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய அதிசயத்தைக் காண இயலாது.

bday-cake1

ஜயந்தி நாட்கள்

கிருஷ்ண ஜயந்தி (ஸ்ரீ ஜயந்தி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி)— சிராவண மாத கிருஷ்ண பக்ஷ எட்டாம் நாள்(அஷ்டமி)

ராம ஜயந்தி (ராம நவமி)–சித்திரை மாத சுக்ல பக்ஷ ஒன்பதாம் நாள் (நவமி)

சங்கர  ஜயந்தி- வைகாசி மாதம் சுக்லபக்ஷ பஞ்சமி

கீதா ஜயந்தி- மார்கசீர்ஷ சுக்லபக்ஷ ஏகாதசி

ஹனுமன் ஜயந்தி – சித்திரை மாத பௌர்ணமி (சித்ரா பௌர்ணமி)

ராமானுஜ ஜயந்தி — சித்திரை திருவாதிரை நட்சத்திர நாள்

மத்வ ஜயந்தி —- விஜய தசமி நாள் (ஆஸ்வீன சுக்ல பக்ஷ தசமி)

புத்த ஜயந்தி – வைகாசி மாத பௌர்ணமி (வைகாசி விசாகம்)

ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)- டிசம்பர் 25

காந்தி ஜயந்தி- அக்டோபர் 2

நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)- நவம்பர் 14

ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)- செப்டம்பர் 5

முக்கியமான பெரியோர்கள் ஏப்ரல்/மே மதாம் வரும் (சித்திரை/வைகாசி) தேதிகளில் பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால் ஆங்கில தேதி மாறி மாறி வரும்)

card-display

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்

போன வாரம் லண்டன் முருகன் கோவிலில் நடந்த ஒரு சதாபிஷேகத்துக்குப் போனேன். அங்கு லண்டன் முருகன் கோவில் தலைமை குருக்கள் திரு.நாகநாத சிவம் நல்ல சொற்பொழிவு ஆற்றி ஒரு நூலையும் எல்லோருக்கும் கொடுத்தார். அது விக்ரமசிங்கபுரம் செல்ல மணி பட்டர் எழுதியது. அவர் சொல்லும் அபூர்வ விஷயங்களைக் காண்போம்:

61- ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி

70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி

81- ஆவது பிறந்த தினம் – சதாபிஷேகம்

100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம்

இது மட்டுமல்ல. இதற்கிடையில்

பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம்

உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம்

சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம்

பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம்

ரத சாந்தி – 72 – ஆவது பிறந்த தினம்

விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம்

ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர்.

சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர்

ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம்

100 வயது –பூர்ணாபிஷேகம்.

இதற்கான காரணம், முறைகள் ஆகியவற்றையும் செல்லமணி பட்டர் விளக்கி இருக்கிறார்.

Greetingcardsretaildisplay

சுருக்கமாக சதாபிஷேகம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். கிருஷ்ணர் வணங்கக் கூடிய ஆறு பேர் யார் யார் என்று நேற்று நான் எழுதிய கட்டுரையில் சஹஸ்ர சந்திர தர்ஸி என்பதை விளக்கி இருந்தேன். யார் ஒருவர் மூன்றாம் பிறை சந்திரனை ஆயிரம் முறை பார்க்கிறார்களோ அவர் கிருஷ்ணர் வணங்கக்கூடிய அளவுக்கு பெரிய மஹான். சத்ய சாய் பாபாவும் பெரிய அளவில் சஹ்ஸ்ர சந்திர தர்சன – சதா பிஷேக விழாவைக் கொண்டாடினார். அவர் நமக்கெல்லாம் இதன் அருமை பெருமை புரிய வேண்டும் என்று அதைச் செய்தார்.

29 நாட்களுக்கு ஒரு முறையே பிறை தரிசனம் கிடைக்கும் ஆதலால் 1000 முறை தரிசிக்க 80 ஆண்டு எட்டு மாதம் ஆகிவிடும். இந்த பிறந்த நாள் விழாக்களில் சஷ்டிதம அப்த பூர்த்தியின் போது மீண்டும் ஒரு முறை மனைவிக்கு தாலி கட்டுவதும் உண்டு. இந்து முறைப்படி ஆண்டுகள் எண்ணிக்கை 60. இதற்குப் பின்னர் மீண்டும் 60 ஆண்டுகள் வாழ்வது லட்சியம். மஹாத்மா காந்தியும்கூட நா

ன் இந்து முறைப்படி 120 ஆண்டுகள் வாழ விருப்பம் என்று சொல்லி இருந்தார்.

ஆக எல்லா ஜயந்திகளையும் நாம் கொண்டாட முடியவிட்டாலும் 60, 80, 100 ஆகிய ஆண்டுகளில் கொண்டாடலாம். உலகம் இந்துக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. நாம் கற்பித்த இந்த விழாவை இன்று உலகில் உள்ள எல்லா மதத்தினரும் கொண்டாடுகிறார்கள்.

baba

நூறாண்டுக் காலம் வாழ்க!

நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ!

blessing baba

கலியுக அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஜயந்தி தினம் நவம்பர் 23ஆம் தேதி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது.
Post No. 1425 dated 21st November 2014
Written by S Nagarajan

உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ!

By ச.நாகராஜன்
கல்வி அனைத்தையும் ஒரே வார்த்தையில் சுருக்கி விடலாம்! அன்பு, அனைத்தையும் தழுவும் அன்பு!அன்பில்லாத வாழ்க்கை சாவை விடக் கொடியது! –பாபா

பாபாவின் உபதேச உரைகள்
ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதார தினமான நவம்பர் 23ஆம் தேதியன்று இறைவனின் சாந்நியத்தில் பல காலமாக புட்டபர்த்தி கோலாகலமாகத் திகழ்ந்து வந்ததை அணுக்க பக்தர்கள் அனைவரும் அறிவர்.

பகவானின் கையினாலேயே லட்டு பிரசாதத்தை ஏற்று மகிழ்ந்தோர் லட்சக் கணக்கில் உள்ளனர். அவர்கள் தங்களின் பாக்கியத்தை நினைந்து மகிழும் போதே இந்த அவதார தினத்தில் அவர் பூதவுடலுடன் நம்முடன் இல்லையே என்ற ஏக்கத்தையும் அடைவது இயல்பே!

ஆனால் பகவானின் கடந்த கால அருளுரைகளை நோக்கினால், அவர் தனது உபதேச உரைகளை பக்தர்கள் அனைவரும் திருப்பித் திருப்பி மனதில் ஏற்று கற்று அதன் படி நிற்பதையே விரும்பினார் என்பதை அறிவோம்.

சத்யம் சிவம் சுந்தரம் நான்கு பாகங்களில் அவர் வரலாற்றை விளக்கும் போது ‘சத்ய சாய் ஸ்பீக்ஸ்’ (சுமார் 42 தொகுதிகள்) அவரது உபதேச உரைகளை அள்ளித் தருகிறது.

baba and hanuman

புத்தி என்னும் பறவை
உபநிடதத்தை பாபா விளக்கும் பாங்கே தனி! அது இறைவனின் விளக்கமாயிற்றே!ஒரு உதாரண விளக்கத்தை மட்டும் இங்கே காணலாம்:

பத்து உபநிடதங்களில் ஒன்றான தைத்ரீய உபநிடதம் புத்தியைப் பறவையாக விவரிக்கிறது. ‘ச்ரத்தா’ அதனுடைய தலை. அதனுடைய வலது இறக்கை ‘ரிதம்’ – பிரபஞ்ச லயம். அதனுடைய இடது இறக்கை ‘சத்யம்’ – உண்மை. பறவையின் பிரதான உடல் ‘மஹத் தத்வம்’ – பேருண்மை. அதன் வால் யோகா. இப்படி ஐந்து பகுதிகளை அதன் முழு வடிவத்தில் கொண்டுள்ள புத்தி அசாதாரணமான சக்தியைக் கொண்டதாகும்.

ச்ரத்தையே முக்கியம்

இப்படி உபநிடதத்தை விளக்கும் பாபா ஒரு சிறிய கதையையும் கூறுகிறார் இப்படி:
ஒரு முறை விக்கிரமாதித்த மஹாராஜா பண்டிதர் சபையைக் கூட்டி ச்ரத்தா, மேதா, புத்தி இந்த மூன்றில் எது மிகவும் முக்கியமானது என்று கேட்டான்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறவே குழப்பம் தான் நிலவியது. இறுதியில் ஒருவாறாக சமாதானம் அடைந்த அவர்கள் ஒரு மனதாக மேதா – அதாவது திறமை தான் மிக முக்கியமானது என்று தங்கள் முடிவைத் தெரிவித்தனர். ஆனால் விக்கிரமாதித்தனோ மிகவும் ஏமாற்றம் அடைந்தான்.

பண்டிதர்களை நோக்கி அவன், “ஓ! பண்டிதர்களே! ஆஸ்தா என்றால் ஆசக்தி . ச்ரத்தா என்றாலோ மிக்க உற்சாகம், நம்பிக்கை ஆகும். ஸ்வஸ்தா என்றால் ஸ்திரத்வம் அதாவது உறுதி. ஆசக்தியும் ஸ்திரத்வமும் இல்லாத மேதா பயனற்றது. தன்னுடைய திறமையையும் புத்திசாலித்தனத்தையும் மட்டுமே நம்பும் ஒருவனின் வாழ்க்கை குறிக்கோள் உடைய வாழ்க்கையாக அமையாது. அவன் மிக்க உற்சாகத்துடன் நம்பிக்கையையும் திட உறுதியுடன் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். ச்ரத்தை மிகவும் முக்கியமானது. அது இல்லாமல் எதையும் சாதிக்கவே முடியாது. ச்ரத்தை இருந்தது எனில் சிறு தீப்பொறி உங்களிடம் இருந்தாலும் அது ஊதி விடப்பட்டு பெரும் ஜுவாலையாக ஆகி விடும். ச்ரத்தை இல்லை எனில் தீ ஜுவாலையே உங்களிடம் இருந்தாலும் அது அணைந்து விடும். அதே போல ச்ரத்தை இருந்தால் ஒரு சிறிய விதையைக் கூட ஆலமரமாகப் பெரிதாக்க முடியும்.”

விக்கிரமாதித்தனின் இந்த விளக்கத்தால் பண்டிதர்கள் தெளிந்தனர். இதை விளக்கிய பாபா இன்றைய நாளில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிகவும் வளர்ந்து விட்டாலும் கூட ஆன்மீக முன்னேற்றமும் அதனுடன் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
baba stamps

உபநிடதம் விளக்கும் புத்தி

“புத்தி மேதாவை விட வலிமை வாய்ந்தது. புத்தி என்பது சாதாரணமாக விளக்கப்படும் புத்தி கூர்மை மட்டும் அல்ல. அது அமைதியுடன் கூடிய ஆஸக்தி (உற்சாகம், நம்பிக்கை) மற்றும் ஸ்வஸ்தாவைக் (ஸ்திரத்வம், உறுதி) கொண்டதாகும். இந்த புத்தியானது ரிதம், சத்யம்,யோகா, மற்றும் மஹத் தத்வத்தால் பெரிதும் வளமடைகிறது.”

இப்படி உபநிடத ரகசியத்தைக் காலத்திற்கேற்றவாறு எளிமையாக விளக்கி நம்மை “புத்திசாலியாக” ஆக்க பாபா விழைகிறார்.

பாபாவின் கணக்கு சற்று வித்தியாசமானது.

மனிதனின் அறிவு ஐந்து வகைப்படும் என்று கூறி அதை விளக்கும் பாபா ஒரு விசித்திரமான கணக்கையும் தருகிறார். மூன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வருவது ஒன்று என்பது தான் அது! (3-1=1 !!)

இன்றைய நாட்களில் எல்லோரிடமும் பெரிதும் காணப்படுவது புத்தக அறிவு (book knowldege). இதைப் பெறுவதற்காக அரிய வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்குகிறோம். இதைப் பெறவே நம் நேரத்தைச் செலவழிப்பதால் பொது அறிவும்(general knowledge) இயல்பான அறிவும் (common sense) இல்லாமல் போய் விடுகிறது. இவை இரண்டையும் சமூகத்தில் சேவை செய்வதால் மட்டுமே பெறலாம். விஷயத்தைப் பகுத்துப் பார்க்கும் (discrimination knowledge)அறிவு நான்காவதாகும். இதுவோ இன்றைய நாட்களில் சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக ஆகி விட்டது. சுய நலத்தை விட்டு விட்டு லோக க்ஷேமத்திற்காகப் பயன்படுத்தப் பட வேண்டிய அறிவு இது.

baba young

சாதாரண எண் கணிதத்தில் கூறப்படுவது போல் அல்லாது ஆன்மீக கணிதத்தின் படி மூன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வருவது ஒன்றாகும்! (3-1=1) கடவுள், மாயை, பிரபஞ்சம் ஆகிய மூன்றினுள் கடவுளே ‘இருக்கின்ற பொருள்’. மாயை கண்ணாடி. பிரபஞ்சம் கடவுளின் பிரதிபலிப்பு. கண்ணாடியை அகற்றி விட்டால் மாயையும் இல்லை, பிரபஞ்சமும் இல்லை. கடவுள் மட்டுமே இருக்கிறார். ஆகவே மூன்றிலிருந்து (கடவுள், மாயை, பிரபஞ்சம்) ஒன்றைக் (மாயையை) கழித்து விட்டால் மாயையும் பிரதிபலிப்பான பிரபஞ்சமும் போய், மிஞ்சுவது கடவுள் தான்!

இதை சுலபமாக அனைவராலும் அறிய முடியவில்லை. ஏனெனில் அவர்களிடம் ஐந்தாவது வகையான ப்ராக்டிகல் நாலெட்ஜ் எனப்படும் அனுபவ ஞானம் இல்லை. இதை ஒவ்வொருவனும் அடைவது அவசியம்.”

baba alert

பாபாவின் விளக்கம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
இப்படிப்பட்ட ச்ரத்தா, மேதா,புத்தி மற்றும் ஐந்து வகை அறிவினாலும் எதை அடைய வேண்டும்! இறைவனைத் தான்! இறைவனோ அன்பு மயம்!

எப்படி சூரியனையும் சூரிய கிரணங்களையும் பிரிக்க முடியாதோ, கடலையும் அதன் அலைகளையும் பிரிக்க முடியாதோ அதே போல கடவுளையும் அன்பையும் பிரிக்க முடியாது.

ஆகவே ஜகம் முழுதும் அன்பைச் செலுத்துங்கள். சாயி உங்கள் வயப்படுவான். ஏனெனில் சாயியும் ப்ரேமையும் ஒன்றே தான்!

சாயியின் மொத்த உரைகளின் சாரத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு நாளையும் “அன்பில் ஆரம்பி. அன்பில் வழி நடத்து; அன்பில் முடி” என்பது தான்!

இந்த அன்பு மந்திரமே சாயி மந்திரம்.
உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ என்று உளமார நினைந்து அன்புருவாம் சாயியை வணங்கிப் போற்றுவோம்! அவன் அருளைப் பெறுவோம்!!
baba smile

This is written by my elder brother S Nagarajan for the Tamil Magazine ஞான ஆலயம்- — London Swaminathan.

******************************
contact swami_48@yahoo.com