செப்பு மொழி பத்து : பொன்னொளிர் பாரதம்! (Post No.9859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9859

Date uploaded in London – 17 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி பத்து : பொன்னொளிர் பாரதம்!

ச.நாகராஜன் 

01)   உலகின் ஆதி நூல் பிறந்த இடம் பாரதம் தான். இவை வேதங்கள் எனப் படுகின்றன. ஆச்சரியமான விஷயம், இவை அனைத்தும் என்று பிறந்ததோ அதே வடிவில், அதே உச்சரிப்புடன் , வாய் மொழியாகவே பரம்பரை பரம்பரையாக வந்து இன்றளவும் காக்கப்பட்டு வருகின்றன!

02)   உலகின் மாபெரும் இதிஹாஸங்கள் பாரதத்திலேயே தோன்றியுள்ளன. அவையாவன: 1) மஹாபாரதம் 2) ராமாயணம்.

கிரேக்க இதிஹாஸங்களான இலியட் மற்றும் ஒடிஸியை விடப் பெரியது மஹாபாரதம்!

03)   தேசம் என்ற கருத்தை மிகச் சாதாரணமாக நமது முன்னோர்கள் கூறி விட்டனர். “மாதா பூமிஹி, புத்ரோஹம் ப்ருதிவ்யாஹ” – “இந்த பூமியே நமது அன்னை; நான் இதன் புதல்வன்” – இந்தக் கருத்தை பன்னெடுங்காலம் முன்பே கூறிய பூமி பாரதமே!

04)   நமது பழம் பெரும் புராணமான பாகவதம் கூறுகிறது : “கோடிக்கணக்கான ஆண்டுகள் சுவர்க்கத்தில் வாழ்வதை விட ஒரு சில கணங்கள் பாரதத்தில் வாழ்வது சாலச் சிறந்தது”

05)   பல தத்துவங்கள், பல மொழிகளைப் பேசுவோர் இணக்கமாக வாழும் நம ஒருமைப் பாட்டை பழம் பெரும் வேதமான அதர்வண வேதம் கூறி இருக்கிறது :”நமது இந்த அன்னை பூமி பல மொழிகளைப் பேசுவோருக்கும், பல தத்துவங்களைப் பின்பற்றுவோருக்கும் சமமான புகலிடத்தைத் தருகிறது.”

ஜானம் பிப்ரத பஹுதா விவாசஸ்ம்

நானா தர்மாணம் ப்ரித்வி ய்தோகுசம்

06)   உலக அன்னை இந்தியா

நம் இனத்தின் தாயகம் பாரதம். ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய் சம்ஸ்கிருதம். நம் தத்துவ சாஸ்திரத்தின் தாய் இந்தியா. கிறிஸ்துவ சமய லட்சியங்களுக்கெல்லாம், புத்தரின் மூலம் உதவிய தாய் இந்தியா. சுய ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும், கிராம சமுதாயத்தின் மூலம் வழிகாட்டிய தாய் இந்தியா. இந்திய மாதா நம் அனைவருக்கும் அநேக வழிகளில் தாய்.

       -வில் டியூரண்ட், தத்துவ சாஸ்திர அறிஞர்

07)இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம்; இறைவனின் காரியம். இறைவனே நம் மாலுமி. நம் லட்சியத்தை நோக்கி நம்மை அவன் இட்டுச் செல்வான்.

       –  மஹரிஷி அரவிந்தர்

07)     ந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால்பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால்இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால்மனிதகுலம் அன்பின் சிகரத்தைபரந்த உள்ளத்தின் உச்ச நிலையைதூய்மையின் உயரத்தைஅமைதியின் எல்லையைஎல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.

08)      

– ஸ்வாமி விவேகானந்தர் (எழுமின், விழிமின் நூலிலிருந்து தொகுப்பு திரு ஏகாநாத்ஜி ரானடே தமிழில் ஆர். கோபாலன்)

09) புராதன இந்தியா அசாதாரணமான சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

                                 –   தார்ன்டன் (Mr Thornton)

10) எல்லா எழுத்தாளர்களின் ஒருமித்த கருத்துப்படி இந்தியா உலகில் அனைவரும் ஏற்கும் வசிப்பிடமாகும். உலகின் மிக இன்பமான ஒரு பகுதியாகும். அதன் புழுதி காற்றை விட சுத்தமானது. அதன் காற்றோ தூய்மையைக் காட்டிலும் தூய்மையானது

    அப்துல்லா வஸாஃப் – 14ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த வரலாற்று ஆசிரியர் ( Abdulla Wassaf – 14th Century Historian)

***

INDEX

பாரதம், ஆதிநூல் வேதம், இன்றும் இருப்பவை;மஹாபாரதம், இராமாயணம்,

சுவர்க்க வாழ்வை விட பாரத வாழ்வு சிறந்தது, பல தத்துவங்களுக்கும் சமமான இடம்,சம்ஸ்கிருதம், புத்தர், அனைவருக்கும் தாய், இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம், அரவிந்தர், ஆன்மாவின் இறுதி வீடு, புனித புண்ணிய பூமி, விவேகானந்தர், எழுமின் விழிமின் நூல், ஏக்நாத்ஜி ரானடே, R. கோபாலன், தார்ன்டன், பாரத புழுதி காற்றை விட தூய்மை; காற்று தூய்மையை விட தூய்மை, அப்துல்லா வஸாஃப்

tags – பொன்னொளிர் ,பாரதம், 

நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது? புதிய விளக்கம் (Post No.6992)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 20 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-35

Post No. 6992

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

subham

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்! (Post No.6975)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


 Date: 4 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –7-11

Post No. 6975

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்திற்கு ச.நாகராஜன் அளித்த பேட்டி

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

ச.நாகராஜன்

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சுதந்திர தினத்தையொட்டி 14-8-2019 அன்று காலை 10 மணிக்கு ஒரு விசேஷ நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.

இந்தியா குறித்து பெருமிதம் கொள்ளக்கூடிய விஷயங்கள் யாவை என்று பேட்டி எடுத்தவர் கேட்க அதற்கு ச.நாகராஜன் அளித்த பதில் ஒலிபரப்பப்பட்டது.

அன்பர்களுடன் அந்த உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். 81.5 கோடி மக்கள் வாக்காளர்களாக இங்கு உள்ளனர்.

உலகின் அதி இளமையான நாடு இந்தியா தான். சுமார் 130 கோடி என்று உள்ள இன்றைய ஜனத்தொகையில் சுமார் 60 கோடி பேர்கள் 25 வயது முதல் 29 வயது வரை ஆன இளைஞர்களே. ஆக இளைஞர்கள் அதிகம் கொண்ட ஒரே நாடாக இந்தியா இலங்குகிறது.

இந்த இளமைத் துடிப்புடன் அறிவியலில் அது பாய்ச்சல் போட்டு முன்னேறுகிறது.

செவ்வாய் நோக்கிய பயணத்தில் தனது முதல் முயற்சியிலேயே அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒரு பெருமையான விஷயம்.

மங்கள்யான் -1 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ஆசியாவில் முதலாவதாக செவ்வாய்க்குக் கலம் அனுப்பிய நாடு; உலகில் நான்காவதாக அனுப்பிய நாடு என்ற பெருமை நம்மைச் சேர்கிறது.

5-11-2013 அன்று  செவ்வாயை நோக்கி நமது கலம் கிளம்பியது. சோவியத், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகளுடன் சேர்ந்து விட்டது இந்தியா இந்த செவ்வாய் பயணத்தின் மூலமாக.

அடுத்து சந்திரயான் – 1 22, அக்டோபர் 2008இல் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. முதன் முதலாக சந்திரனில் நீர் இருக்கிறது என்ற செய்தியை இந்தக் கலத்தின் மூலமா 2009ஆம் ஆண்டு கண்ட நமது விஞ்ஞானிகள் அதை உலகிற்கு அறிவித்தனர்.

இதைச் சரிபார்க்கத் தனது கலத்தை ஏவிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அது உண்மையே எனக் கண்டு வியந்து அதை உலகிற்கு அறிவித்தது.

சந்திரனுக்குக் கலம் அனுப்பியதன் மூலமாக அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா சேர்ந்து விட்டது.

இப்போது சந்திரயான் – 2 விண்ணில் 22 ஜூலை 2019 அன்று ஏவப்பட்டுள்ளது. இதில் உள்ள விக்ரம் என்ற லேண்டர் (Lander)  செப்டம்பர் முதல் வாரத்தையொட்டி தரை இறங்கி அனைத்தையும் சரிபார்த்த பின்னர் ப்ரக்யான் என்ற நமது ரோவர் சந்திரப் பரப்பில் ஊர்ந்து செல்லும்; ஆய்வுகளை நடத்தும். இது பெருமைக்குரிய ஒரு பெரிய விஷயம்.

விண்ணில் பறக்கும் ஒரு விண்கலத்தை மீண்டும் தேவையெனில் தரையிறக்கும் ஸ்பேஸ் காப்ஸ்யூல் ரிகவரி எக்ஸ்பெரிமெண்டையும் (Space Capsule Recovery Experiment) இந்தியா செய்து வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரே ராக்கெட்டில் 104 சாடலைட்டுகளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. பல நாடுகளும் தங்கள் சாடலைட்டுகளை விண்ணில் ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.

அடுத்து உலகின் பொறியியல் வல்லுநர்களில் அதிகமான பேரை உருவாக்குவது இந்தியாவே என்பது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.

அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் இவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.

இதற்குச் சான்றாக மல்டி நேஷனல் கம்பெனிகளையும் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் தலை சிறந்த கம்பெனிகளையும் வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

Microsoft, Google,Pepsico,AdobeSystem, Mastercard உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்க்ள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.

இந்தியா உலகின் மூன்றாவது பலம் பொருந்திய இராணுவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் எந்த ஒரு நாட்டையும் அது தோன்றிய காலத்திலிருந்து தாக்கியதில்லை, ஆக்கிரமித்ததில்லை என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம்.

தற்காப்புக்கென இருக்கும் நமது ராணுவத்தை ஐ.நாவின் அமைதி காக்கும் படையிலும் நமது நாடு ஈடுபடுத்தியுள்ளது.

அதிக துருப்புகளை ஐ.நாவின் பணிக்கென அனுப்பிய இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இலங்குகிறது.

தகவல் தொடர்பில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதை நிரூபிப்பது நமது இன்ஸாட் அமைப்பு. (Insat System).

உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றனர்.

சர் சி.வி.இராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், சீனிவாச இராமானுஜன், எஸ்.சந்திரசேகர், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

இந்தியாவின் கும்பமேளா திருவிழா உலகின் ஒரு அதிசயம்.  குறிப்பிட்ட நாட்களில் தாமாகவே ஒருங்கு சேர்ந்து வழிபட்டு அமைதியாகத் தாமாகவே கலைந்து செல்லும் பெரும் மக்கள் திரளை இது போல உலகில் வேறெங்கும் காண முடியாது.

இது மட்டுமல்ல, பொழுது போக்குத் துறையில் உலகில் மிக அதிகமாக திரைப்படங்களைத் தயாரித்து வழங்குவது இந்தியாவே.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட நாடு வெகு விரைவில் வல்லரசாகத் திகழப்பொவது மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் நல்லரசாகவும் திகழப்போகிறது.

இதில் வாழ்வது பெருமைக்குரிய ஒரு விஷயம். வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!!

நன்றி, வணக்கம்.

***

–subham–

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்! (Post No.5101)

Written by S NAGARAJAN

 

Date: 12 JUNE 2018

 

Time uploaded in London –  6-18 am  (British Summer Time)

 

Post No. 5101

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!

 

.நாகராஜன்

 

மஹாபாரதத்தை அழகுறத் தமிழில் பாடியவர் வில்லிப்புத்தூரார்.

இவரை பாரதம் பாடச் செய்தவர் ஆட்கொண்டான்.

இவர் வக்கபாகையில் (சோழநாடு) வசித்தவர் என்று சொல்லப்பட்டாலும் கூட இவரது மரபு கொங்கு மரபே என்று சொல்ல வேண்டும்.

பாரதத்திலேயே கொங்கர்பிரான் ஆட்கொண்டான் என்று வருகிறது.

ஆகவே இவரது முன்னோர்கள் சோழ மன்னனின் அழைப்பின் பேரில் அங்கு சென்று காணி நிலம் பெற்று சோழனது சேனாதிபதியாக வக்க பாகையில் தங்கி இருந்திருக்க வேண்டும். வில்லிப்புத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவரே என்று கொங்கு மண்டலச்  சதகம் தனது 32ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது.

பாடல் இது தான்:

துன்னு மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து

பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னும் பாரதத்தைத்

தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்

மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்குமண்டலமே

  • கொங்கு மண்டலச் சதகம் பாடல் 32

 

பாடலின் பொருள் : வேதப் பொருள்கள் உள்ளமைந்தமையால்

ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் பாரதக் கதையைத் தமிழில் வில்லிப்புத்தூராரைக் கொண்டு பாடச் செய்த ஆட்கொண்டானது முன்னோரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே!

 

சோழியர் எங்கு வசித்தாலும் அவரைச் சோழியர்கள் என்றே அழைப்பர்; தொண்டைமண்டலத்தார் எந்த மண்டலத்தில் வசித்தாலும் அவரைத் தொண்டை மண்டலத்தார் என்றே அழைப்பர். அது போல ஆட்கொண்டான் வக்க பாகையில் வசித்தாலும் அவர் கொங்கர் ஆதலால் கொங்கர் எங்கு வசித்தாலும் கொங்கர் என்று சொல்லப்படுதல் போல கொங்கர் என்றே அழைக்கப்படுகிறார்.

ஆட்கொண்டான் என்னும் உபகாரி கொங்கன் என்பதை வில்லிப்புத்தூராரின் மகனான வரந்தருவார் பாரதச் சிறப்புப் பாயிரத்தில் இப்படிக் கூறுகிறார்:-

 

 

எங்குமிவ னிசைபரப்பி வருநாளில் யாமுரைத்த விந்த நாட்டிற்

கொங்கர்குல வரபதியாட் கொண்டானென் றொருவண்மைக் குரிசி றோன்றி

வெங்கலியின் மூழ்காமற் கருநடப்போர் வெள்ளத்து விழாம னான்காஞ்

சங்கமென முச்சங்கத் தண்டமிழ்நூல் கலங்காமற் றலைகண் டானே

 

ஆற்றியவிச் செல்வத்தா லளகையைவேன் றிருங்கவினா லமர ருரை

மாற்றியபொற் றடமதில்சூழ் வக்கபா கையினறத்தின் வடிவம் போலத்

தோற்றியவக் கொங்கர்பிரான் சூழ்தமிழா னாட்கொண்டான் சுற்றத் தோடு

போற்றியவிப் புவிமுழுதுந் தன்றிருப்பேர்  மொழிகொண்டே புரந்தா னம்மா

 

ஆட்கொண்டானைப் பற்றி இரட்டையர் பாடிய பாடல் ஒன்றும் உண்டு:

சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயகன் தமிழ்க்கொங்கர் கோன்

பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகராதி பக்கத்திலே

யூணுக்கு வாரா திருப்பாவி ருப்பாகி யுயர்வானிலே

வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வேண்டிங்களே.

 

 

ஆக தமிழில் பாரதம் உருவாகக் காரணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆட்கொண்டான் என்னும் உபகாரி என்பது இச்சதகத்தால் விளங்குகிறது.

***

பாரதத்தின் பெருமை! (Post No.2849)

IMG_3442

Article written by S.NAGARAJAN

 

Date: 29 May 2016

 

Post No. 2849

 

Time uploaded in London :–  5-53 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

பாரதத்தின் பெருமை!

ச.நாகராஜன்

 

பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்று ஆனந்தமாக இந்தியர்கள் பாடினால் அது பொருள் பொதிந்த ஒரு விஷயமாகும்.

 

ஏனெனில் உலகில் உள்ள நாகரிகங்களில் எல்லாம் பழமையான ஜீவனுள்ள ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் மட்டுமே தான்!

 

எகிப்திய, அஸிரிய, ரோமானிய நாகரிகங்கள் உள்ளிட்ட பல பழம் பெரும் நாகரிகங்கள் அழிந்து பட்ட போதிலும் இன்றும் தன் இளமை மணம் மாறா நாகரிகமாக உலகில் இருக்கும் ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் தான்!

 

பாரத தேசத்தின் பெருமையை விஷ்ணு புராணம் இப்படிச் சொல்கிறது:

 

1947_India_Flag_3½_annas

காயந்தி தேவா: கில கீதகானி

      தன்யாத் து தே பாரதபூமிபாகே

ஸ்வர்கார்பவர்காஸ்பதமார்கபூதே

      பவந்தி பூய: புருஷா: சுரத்வாத்

 

தேவர்களாயிருந்தும் கூட மனிதர்களாக பாரதவர்ஷத்தில் பிறந்தவர்கள் சந்தோஷமுள்ளவர்களே! ஏனெனில் கடவுளரும் அவ்ர்களது கீதத்தை இசைக்கின்றார்கள். ஏனெனில் அதுவே சொர்க்க இன்பங்களுக்கான நுழைவாயில் அல்லது முக்திக்கான பெரிய இன்ப வழியாகும்

தேவர்களும் கூட பாரதத்தில் பிறப்பு எடுக்க ஏங்குகின்றனராம்!

 

இதை ஹெச் ஹெச் வில்ஸன் ஆங்கிலத்தில் இப்படி மொழிபெயர்த்துள்ளார்:

 

 

Happy are those who are born, even from the conditions of gods as men in Bharatvarsha as the gods sings their songs and as that is the way to the pleasures of the paradise, or the greater blessing of final liberation . (H.H. Wilson)

 

பரம பூஜனீய குருஜி ஸ்ரீ எம். எஸ். கோல்வால்கர் தனது பஞ்ச் ஆஃப் தாட்ஸ்(Bunch of thoughts) என்ற நூலில் இந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியதோடு பாரதத்தின் அருமை  பெருமையை மிக நன்றாக  விளக்கியுள்ளார்.

 

 

ஸ்வாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பி தாயகம் வருகையில் 15-1-1897 அன்று கொழும்பில் அற்புதமான உரை ஒன்றை ஆற்றினார். அதில் பாரதத்தின் பெருமையைக் கூறும் போது,

 

 

 

“If there is any land on this earth that can lay claim to be the blessed Punya Bhumi, to be the land to which all souls on this earth must come to account for Karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, above all, the land of introspection and of spirituality — it is India. “

என்று உரைத்தார்.

 

பாரதத்தின் பெருமை உரைக்க ஒண்ணா ஒன்று. தேவர்களும் பிறக்க விரும்பும் புண்ணிய பூமி பாரதம்!

********