ஜராதுஷ்ட்ரர் வாழ்வில் நடந்த அற்புதங்களும் கந்த சஷ்டிக் கவசமும் (Post No.10508)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,508

Date uploaded in London – –   31 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜராதுஷ்ட்ரர் (ZOROASTER= ZARA THUSHTRA) யார்?

பார்ஸி (PARSI= PARSEE) மத ஸ்தாபகர் . அவர் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு குடியேறி ஒரு புது மதத்தை ஸ்தாபித்தார். அவர்களுக்கு முக்கிய வழிபாடு அக்னீ வளர்த்தல். (FIRE WORSHIP) எப்படி வேத கால பிராமணர்கள் வீட்டில் மூன்று வகை அணையாத அக்னீ இருந்ததோ அதஹி போல இவர்கள் எங்கு சென்றாலும் தீயுடன் செல்வர். அவர்களுடைய மதச் சின்னமே அக்கினி (FIRE ALTAR) குண்டம்தான்.

வேத கால சம்ஸ்க்ருதம் அறிந்தவர்களுக்கு பார்சி மத சொற்கள் அனைத்திலும் சம்ஸ்க்ருதம் கலந்திருப்பதைக் காணலாம்.

வெள்ளைக்காரர்கள் பார்ஸி மதம் அல்லது ஜொராஷ்ட்ரியன் மதம்  பற்றி எழுதிய எல்லாம் ஆயிரம் குழப்பம் உடையவை. அவர் பெயரில் குழப்பம், அவர் பிறந்த இடத்தில் குழப்பம்; அவர் சொன்ன சொற்களை வியாக்கியானம் செய்வதில் குழப்பம். அவர் வாழ்ந்த காலம் பற்றிக் குழப்பம். ஆயினும் வேதம் படித்தவர்கள் பல குழப்பங்களை எளிதில் தீர்க்கிறார்கள் ‘ போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற ப ழ  மொழிக்கு ஏற்ப கிரேக்கர்கள் பெயர்களிலும் அவர் வாழ்ந்த காலத்திலும் மகா குழப்பம் செய்தனர். ஜரா துஷ்ட்ரா என்பதை ஜொராஸ்டர் என்று மாற்றினார்கள். ஒரு கிரேக்கர், இவர் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று எழுதினார் . உடனே அத்தனை பேரும் அதைத் திருப்பி எழுதினர் . பிறந்த இடத்தையும் அவர்கள் குழப்பினர் . பிளினி (Pliny)  என்பவர் இரண்டு ஜொராஸ்டர் உண்டு என்று ஒரு வெடி குண்டையும் வீசினார்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் , ஜராதுஷ்ட்ரர் பற்றிச் சொன்ன உண்மைகளை எவரும் கண்டுகொள்ள வில்லை. நான் முன்னரே எழுதிய விஷயங்களை இணைப்பில் காண்க

இன்று பார்ஸி சமய மக்கள், குஜராத்திலும் பம்பாயிலும் வசிக்கக் காரணமே அவர்களின் மூதாதையர்கள் செளராஷ்டிர தேசத்தில் இருந்து சென்றதே . முஸ்லீம்கள் அவர்களை படுகொலை செய்தவுடன் அவர்கள் செளராஷ்டிரத்துக்கே திரும்பி வந்தனர். இன்று ஈரான் எனப்படும் பாரசீகம் (IRAN= PERSIA) வெறிபிடித்த முஸ்லீம்களலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஈரான் என்ற சொல்லே ஆர்யன் (ARYAN = IRAN) என்பதிலிருந்து வந்ததுதான்.

SOURASHTRA= ZORASHTRA

ஜராதுஷ்ட்ரா  என்றால் ஸெளராஷ்ட்ர என்பது காஞ்சி சுவாமிகள் சொன்னது ‘

ஜராத் + உஷ்ட்ர = ஹர + உஷ்ட்ர = ஒட்டகத்தை விரும்புவோர் LOVER OR RAISER OF CAMELS , வளர்ப்போர் என்பது வெள்ளக்கார மொழி ஆராய்சசியாளர் சொல்லுவது.. இது இரண்டும் ஸம்ஸ்க்ருதம் தான் . ஆகையால் வேத காலத்துக்கும் பாரசீக மதத்துக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அவர்களுடைய மத நூலுக்கு பெயர் செண்ட் அவஸ்த்தா ZEND AVESTA.

இதில் செண்ட் என்பது சந்தஸ் ZEND = CHANDAS ( வேத இலக்கணம் உடைய கவிதை) என்பதன் மருவு என்பது காஞ்சி சுவாமிகள் சொன்னது.

அவஸ்தா AVESTA என்பது பழங்க கால கிழக்கு ஈரானில் (பாரசீகரத்தில்) பேசப்பட்ட மொழி.

அவர்கள் பாடல்களை காதா GATHA  என்பர்; இதுவும் வேத காலம் முதல் இன்றுவரை புழக்கத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொல்.

பார்சி மதத்தினரின் மற்றோரு சொல் யாஸ்ன ; இது யக்ஞ (YASNA= YAGNA)  என்பதன் திரிபு.

அவர்கள் வணங்கும் பெரிய கடவுள் அசுர மஸ்தா AZURA MAZDA (MAHAT ASURA= BIG AND POWERFUL= SUPREME) .

அசுர என்பது சக்தி வாய்ந்த பலமான என்ற பொருளில் பயன்படும் ஸம்ஸ்க்ருதச் சொல். பல வேத கால கடவூரின் அடை மொழி அசுர ; பின்னர் இதை மற்ற எதிரிகளுக்கு பயன்படுத்தினர். அஸீரிய (AYYRIAN = ASURA DYNASTY) நாகரீகம் அசுரர் என்ற பெயரை பெருமையுடன் பயன்படுத்தியது. இன்றும் நாம் ஒரு கார் CAR  வெகு வேகத்தில் வந்தால் அது அசுர வேகத்தில் வந்தது என்கிறோம் .

அசுரர் என்பதை பார்சீ மக்களும் எதிரி/ கெட்டவன் என்றும் பயன்படுத்தினர் (E.G DORA ASURAN= ENEMY OF ZARA THUSHTRA).

ZORASHTRIAN MIRACLES AND KRISHNA MIRACLES AND TAMIL MIRACLES

இப்போது ஜராதுஷ்டிரர் வாழ்வில் நடந்த சுவை மிகு அற்புதங்களை தமிழ் அற்புதங்களுடன் ஒப்பிட்டுக் காண்போம்..

கிருஷ்ண பரமாத்மாவைக் கொல்ல வந்த அத்தனை எதிரிகளுக்கும் ஒவ்வொரு அசுரன் பெயர் கொடுத்தோம். அதே போல ஒட்டகம் வளர்த்த ஜராத் உஷ்ட்ரர் – ஐக் கொல்லவந்தவனும் ஒரு அசுரன்தான் . அவன் செய்த செயல்கள் கந்த சஷ்டிக் கவசத்தில் வருவது வியப்புக்குரியதாகும்

ஒட்டகம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வருகிறது; இது உஷ்டிர என்ற (USHTRA= OTTAKA IN TAMIL) ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு.

XXX

அற்புதம் 1

குழந்தைகள் பிறந்தவுடன் அழும் ; இதை எல்லா ஆஸ்பத்திரிகளில் இன்றும் காணலாம் . ஆனால் ஜராதுஷ்ட்ரர் பிறந்தவுடன் சிரித்தாராம் . அவர் பிறந்தவுடன் இயற்கையில் உள்ள செடி, கோடி, மரங்கள் ஆனந்தம் அடைந்தன அவருடைய தலை மிகவும் அதிர்ந்து ஆடியதால் யாரும் அவர் தலையைப் பிடிக்க முடியவில்லை என்று பிளினி ( PLINY 23-79 CE) கி.பி. 23- 79 — இயற்கை வரலாறு NATURAL HISTORY  என்னும் நூலில் எழுதியுள்ளார்.

XXX

அற்புதம் 2

துராஸுரன் என்ற மந்திரவாதியும் அவனுடைய அடியாட்களும் ஜராதுஷ்டிரரைக் கொல்ல  பல தாக்குதல்களை நடத்தினர்.இதை கிருஷ்ணர் மீது கம்சன் நடத்த்திய தாக்குதலுடன் ஒப்பிடலாம்

தராசுரன் அல்லது துர் அசுரன் (DORASURAN= DUR+ ASURA)  என்பதில் வரும் அசுரன் என்ற சொல் முக்கியமானது . அவனுடைய அடியாட்கள், குழந் தையாக இருந்த ஜராதுஷ்டிரரை மாடுகளுக்கு இடையே  மிதிபட்டு சாகட்டும் என்பதற்காக தூக்கி எறிந்தார்கள் . ஆனால் பலம் வாய்ந்த ஒரு பசுமாடு அந்தக் குழந்தைக்கு பாதுகாப்பாக அதன்மீதுகுடை போல நின்றது. பின்னர் குழந்தையைத் த்தேடி வந்த தாய் அதை மீட்டுச் சென்றாள்

இதைக் கன்ற்றால் விளா எறிந்த கிருஷ்ணனின் லீலையுடன் ஒப்பிடலாம்

ஜராதுஷ்ட்ரரின் தாயார் பெயர் பால்காரி; ஸம்ஸ்க்ருதத்தில் துக்தோவா. அவரை யசோதாவுடன் ஒப்பிடலாம்

XXX

அற்புதம் 3

பின்னர் தராசுரன் ஆட்கள், ஒரு ஓநாய் வசிக்கும் இடத்தில் இருந்த குட்டி ஓநாய்களைக் கொன்றுவிட்டு அதன் நடுவே குழந்தை ஜராதுஷ்ட்ரனை வைத்தனர். ஒநாய்க் குட்டிகளின் பெற்றோர்கள் திரும்பிவந்தவுடன் கோபத்தோடு குழந்தையை விழுங்க வாயைத் திறந்த பொழுது அவை அப்படியே அசைக்க முடியாதபடி ஸ்தம்பித்தது PARALYSED. பின்னர் அந்தப் பகுதியில் வந்த பெண் ஆடுகள் குழந்தையைத் தூக்கிச் சென்றன துக்தோவா தன மகனை மீட்டாள் .

XXXXX

அற்புதம் 4

கடைசி தாக்குதலில் துராசுரனே வருகிறான். ஜராதுஷ்ட்ரர் தூங்கிக்கொண்டு இருந்த படுக்கை அறைக்குள் குழந்தையைக் கொல்வதற்காக வேல் கம்புடன் நுழைகிறான். அவன் அதைத் தூக்கிய அடுத்த நொடியில் அவன் கைகள் பக்கவாதத்தால் தாக்குண்டு அசையாமல் நின்றன. ; கையில் இருந்த வேல்கம்பு  விழுந்து சப்தம் உண்டாக்கவே பயந்து ஓடிவிட்டான்.

அஸுர = சக்தி வாய்ந்த

மஸ்தா = மஹதா / பெரிய  MAHAT= MAZDA; ASURA= STRONG, BOLD

இருபது வயதான போது ஜராதுஷ்ட்ரர் ஒரு குகைக்குள் தியானம் செய்யச் சென்றார் . இது அவர் ஒரு இந்து என்பதைக் காட்டுகிறது . அங்கு ஒளி மிகுந்த ‘ஞான ஒளி’ அசுர மாஸ்தாவைக் கண்டார். அப்போது அவருக்கு வயது 30. மொத்தம் ஏழு முறை இப்படி தரிசனம் கிடைத்தது அவரிடமிருந்து ஆறு செய்திகள் கிடைத்தன  இதை அமேஷா ஸ்பென்ட என்பர்; இதன் மொழி பெயர்ப்பு  அமரத்துவம் மிக்க நன்மொழிகள்

அமேஷா என்பது அமிர்த என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல் போலும்.

AMESHA = AMIRTA IN TAMIL AMUTHA

அவருடைய முதல் சீடரின் பெயர் மைத்யோமாவோங்க

வைத்ய மஹாதுங்க அல்லது வித்யா மகத் துங்க = அறிவின் சிகரம் .

அவர்கள் இருவரும் கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர் எவரும் கேட்கவில்லை

அவர்களுடைய நல்லதிர்ஷ்டம் ஆப்கானிஸ்தானை ஆண்ட கவி விஸ்டாஸ்பா (SVASTI ASVA) அவர்களை அழைத்து உபதேச மொழிகளை    கேட்டான். மூன்று நாட்களுக்கு ஜராதுஷ்ட்ரர் உபதேசம் செய்தார் ; அரசவையில் இருந்த பொறாமைக்காரர்கள் ஒரு சதி செய்தனர் அவர்கள் எலும்பு, மனித முடி/ரோமம், மாமிசம், அழுகிய நகம்  ஆகியவற்றை ஜராதுஷ்ட்ரர் தங்கியிருந்த சத்திரத்தின் அறைக்குள் ரகசியமாக வைத்தனர் . வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று சத்திரக் காவலனை மிரட்டிவிட்டுச் சென்றனர் . பின்னர் அரசனிடம் சென்று, ஜராதுஷ்ட்ரர்  ஒரு ‘மந்திரவாதி’ ‘சூனியக்காரன்’ என்று குற்றம் சாட்டி சத்திர அறைக்குள் இருந்த பில்லி சூன்ய பொருட்களைக் காட்டினார்கள் . உடனே மன்னன் வெகுண்டு எழுந்து,  ஜராதுஷ்ட்ரரை பாதாள சிறைக்குள் அடைக்க உத்தரவிட்டான். அப்போது மன்னனின் அபிமான குதிரை அஸ்ப சீஹா ASVA SEEHA  , தரையில் விழுந்து வலி தாங்க முடியாமல் அலறியது. அதன் நான்கு கால்களும் வயிற்றை நோக்கி வளைந்தது. யார் வந்தும் அதை மீட்க முடியவில்லை. அப் போது கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக திருஞான சம்பந்தர் மாற்றியது போல ஒரு அற்புதம் நடந்தது

அதைப் பார்ப்பதற்கு முன்னர் ஒரு அற்புதமான ஒற்றுமையைக் கண்டேன். பில்லி சூனியம் வைப்போர் என்ன செய்வதாக தேவராய சுவாமிகள் கந்த சஷ்டிக் கவசத்தில் சொன்னாரோ அது ஜராதுஷ்ட்ரர் காலத்தில் ஆப்கானிஸ்தானத்தில் நடந்தது எனக்கு வியப்பைத் தந்தது

இதோ கந்த சஷ்டி வரிகள்

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

 தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

குதிரை அற்புதத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்

அஸ்வ என்ற சஸ்க்ருதச் சொல்லின் பொருள் குதிரை வ= ப (வங்கம் = பெங்கால்)

ASPA= ASVA

முதலில் அஸ்வ பின்னர் அதன் பெயர் வரும். இது ஜராதுஷ்ட்ரர்  கதை முழுதும் வருகிறது. அவருடைய தந்தை குடும்பப் பெயரில் வெள்ளைக் குதிரை உண்டு. ஸ்வேத அஸ்வ SPITASVA .

SVETA ASVA = SPITASPA

ஜொராஸ்டர் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஜ…

Tagged with ஜொராஸ்டர். அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post … https://tamilandvedas.com/…


அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் …

https://tamilandvedas.com › அல…

·

30 May 2018 — Written by London Swaminathan. Date: 30 May 2018. Time uploaded in London – 22-18. Post No. 5061. Pictures shown here are taken from various …

சடலங்களை உண்ண கழுகுகள் தேவை !! (Post No.7539)

https://tamilandvedas.com › சடலங…

· Translate this page

5 Feb 2020 — நான் தினமணிக் கதிரில் 1992ம் ஆண்டு டிசம்பரில் பார்சி மத மக்கள், இறந்த பின்னர் ..

Zoroaster | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › zoroaster

Posts about Zoroaster written by Tamil and Vedas. … We see some other Vedic concepts in the teachings of Zarathushtra (Zoroaster).

You’ve visited this page 2 times. Last visit: 23/05/21


MORE ABOUT ZOROASTER FROM RIG VEDA, VARAHA …

https://tamilandvedas.com › 2020/08/01 › more-about-…

1 Aug 2020 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com MORE ABOUT ZOROASTER FROM RIG VEDA, VARAHA MIHIRA AND KANCHI …

Who was Zoroaster? Why Did Parsees ‘Return’ to Gujarat?

https://tamilandvedas.files.wordpress.com › 2013/12

PDF

25 Dec 2013 — Kanchi Paramacharya (Shankaracharya). Swamikal said in one of his talks that Zoroaster was from Saurashtra. The reason for Parsees coming back …

8 pages


Parsee | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › parsee

19 Apr 2017 — Why did Parses Return to India, I gave 20 points listed by Dattopant Thengadi … The reason for Parsees coming back to Gujarat after the ..

தொடரும்

Tags–ஜராதுஷ்ட்ரர், ஜொராஸ்டர், பார்சி, பார்ஸி  அற்புதம், பில்லி சூனியம், செண்ட் அவஸ்தா

சடலங்களை உண்ண கழுகுகள் தேவை !! (Post No.7539)

Written  by London Swaminathan               

Post No.7539

Date uploaded in London – – 5 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நான் தினமணிக் கதிரில் 1992ம் ஆண்டு டிசம்பரில் பார்சி மத மக்கள், இறந்த பின்னர் சடலங்களை  கழுகுகளுக்கு இரை யாகப் போடுவது பற்றி எழுதிய கட்டுரை இது. மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதால் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கவில்லை.

Tags  -சடலங்கள், கழுகுகள், பார்சி, பம்பாய்