WRITTEN BY S NAGARAJAN
Date: 23 March 2016
Post No. 2656
Time uploaded in London :– 8-17 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாராட்டு
பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை
ச.நாகராஜன்
நல்ல செய்திகளை அரிதாகவே கேட்க முடிகிறது. அதைப் பாராட்டுபவர்களையோ இன்னும் அரிதாகவே பார்க்க முடிகிறது.
நாம் நல்லதைப் பாராடுகின்ற அரியவர்கள் பட்டியலில் நம்மை இணைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரீடா ஜெஹ்ரா என்ற ஏழு வயது முஸ்லீம் சிறுமி கைகளைக் கூப்பியவாறே கீதை சொல்லும் அழகு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
மீரட்டில் வாழும் ரீடா கீதை நூலைக் கண்ணால் கண்டதில்லை. பிறக்கும் போதே 80 சதவிகிதம் பார்வையை இழந்த குழந்தை மூன்று வயதிலிருந்தே ஒரு பராமரிப்புப் பள்ளியில் இருந்து வருகிறாள். அவருடைய ஆசிரியர் அவளுக்கு கீதையைப் படித்துக் காண்பிக்க அவள் அதை மனதில் வாங்கிக் கொண்டு சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
இத்தனைக்கும் அவள் பார்வையற்றோருக்கான ப்ரெய்லி கூட கற்கவில்லை.
எந்தக் கடவுளாய் இருந்தால் என்ன, என்னால் பார்க்க முடியப் போவதில்லை. கீதையோ குர் ஆனோ அதைப் படித்து கடவுளை நான் துதிக்கிறேன்” என்று நம்மை நெகிழ வைக்கும் சொற்களைக் கூறும் ரீடா மீரட்டில் ஜாக்ரிதி விஹாரில் பார்வையற்றோருக்காக அமைந்துள்ள ப்ரிஜ் மோகன் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கிறாள். ரிடாவின் பெற்றோரும் உடன்பிறப்புகளும் லோஹியா நகரில் வசிக்கின்றனர். கோடை விடுமுறைக்கும் பண்டிகைகளுக்கும் தவறாமல் வீட்டுக்குச் சென்று விடுவாள் ரீடா.
அவளுடைய பள்ளி முதல்வர் ப்ரவீண் சர்மா, “2015ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான கீதை சொல்லும் போட்டி ஒன்று நடக்கவிருப்பது பற்றி அறிந்தேன். ஏன் நமது பள்ளிக் குழந்தைகளும் இதில் சேரக் கூடாது என்று நினைத்தேன். ரீடா கீதையை நன்கு கற்றுக் கொண்டாள்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
ரீடாவின் பெற்றோருக்கு பாராட்டு. ரீடாவின் பிரின்ஸிபாலுக்கும் கீதையைக் கற்றுத் தந்த ஆசிரியருக்கும் பாராட்டு.
ரீடாவுக்கு…
நமது பாராட்டோ பாராட்டு.
குழந்தைக்குக் கண்ணனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க கண்ணனை வேண்டுவோம்!
மரியம், என்ற பெண் கீதை போட்டியில் முதலாவது வந்தாள்.
**********
You must be logged in to post a comment.