பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ் (Post No.9939)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9939

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேய்க் கதைகள் (GHOST STORIES) , பயமுறுத்தும் ஆவிகள், துரத்தியடிக்கும் பிசாசுகள் பற்றி எழுதிப் புகழ்பெற்றவர்  பிரிட்டனின் அதி பயங்கர எழுத்தாளர் எம். ஆர். ஜேம்ஸ் M R JAMES . கல்யாணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இறந்தார். பெண்களையும் பேய் என்று நினைத்தாரோ!?!?

அவர் எழுதிய கதைகளைப் படித்தால், யாரும்  அந்தப் பேய்களை  மறக்க முடியாது.

மாண்டேகு ரோட்ஸ் ஜேம்ஸ் MONTAGUE RHODES JAMES , ஒரு கிறிஸ்தவ மதப் பிரசராகரின் மகன். அவர் அரச வம்சத்தினரும் பணக்கார்களும் கல்வி பயிலும் ஈடனில் ETON COLLEGE பயின்றார்.அங்கே ஐரிஷ் பேய்க்கதை எழுத்தாளர் ஷெரிடன் லே பானு SHERIDAN LE FANU எழுதிய பேய்கள் பற்றிய கதைகளை விரும்பிப் படித்தார். வாழ்நாள் முழுதும் அவரை மறக்காமல் பாராட்டியும் வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் படம் கற்றார். பழங்கால சுவடிகள் (ANCIENT MANUSCRIPTS), தஸ்தாவேஜுகளைப் படிப்பதில் தேர்ச்சியும் பெற்றார்.

கேம்பிரிட்ஜ்  நகரில் ஒரு கல்லூரிக்கும், ஈடன் கல்வி நிறுவனத்துக்கும் தலைமைப் பொறுப்பேற்று பணியாற்றினார்.ஆண்கள் சகவாசத்திலேயே வாழ்ந்த அவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

பழகுதற்கு இனியர் ஆயினும் ஒரு பயங்கொள்ளி. இரவு நேரத்தில் பயங்கரக் கனவுகள் வருவது அவருக்கு சர்வ சாதாரண நிகழ்வு. சின்னப்பையனாக இருக்கும்போது பஞ்ச் அன்ட் ஜூடி PUNH AND JUDY  பொம்மலாட்ட வடிவங்களை அட்டையில் வெட்டித் தயாரித்து விளையாடுவார். இதில் ஒன்றை பேய் GHOST என்று சொல்லி விளையாடுவார் . இது அவர் வாழ்நாள் முழுதும் சொப்பனங்களிலும் கதைகளிலும் கதாநாயகன் ஆகிவிட்டது.

குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விடுமுறைக்  காலத்திலும் ஒரு பேய், பிசாசுக் கதையை சொல்லுவது வழக்கம். இதை அவரே எழுதி உரத்த குரலில் படித்து நண்பர்ளை மகிழ்விப்பார் ; பயமுறுத்துவார் .ஒரு நடுத்தர வயது வரலாற்று அறிஞர் ஒரு வரலாற்றுப் புதியலைக் கண்டுபிடித்து தோண்டி எடுப்பதாகவும் அதில் ஒரு வரலாற்று கலைப்பொருளுடன் தொடர்புடைய பேயும் தோன்றுவதாகவும் அவர் கதைகளில் வரும். அந்தப் பேயை அதி பயங்கர உருவமாகக் காட்டி வருணிப்பார் . அதுமட்டுமல்ல. அது தோன்றும் நள்ளிரவு வேளை வருணனை, கேட்போரை புல்லரிக்கச் செய்யும்.

42 வயதில் அவர் முதல் பிசாசுக் கதைத் தொகுப்பை புஸ்தகமாக வெளியிட்டார். அது முதல் இவர் நன்றாக ‘கதை அடிப்பவர்’ என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இவர் அடித்த கதைகளில் ஒன்று:- ஒரு அறிஞர் பேய்களைப் பற்றிய சில காகிதங்கள், சுவடிகளைக் கண்டுபிடிக்கிறார். அதில் விசில்/ ஊதல்  பேய் சொல்கிறது. எப்போதாவது நீ விசில் அடித்தால் நான் வந்துவிடுவேன் என்று. கண்டுபிடித்த வரலாற்று அறிஞர் விசில் அடிக்கிறார். அவ்வளவுதான்! ஒரு பயங்கர ஆவி தோன்றி அவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறது . முடிவு என்ன ஆயிற்று – வெள்ளித் திரையில் காண்க!!! அல்லது புஸ்தகத்தில் கடைசி பக்கங்களில் காண்க!!!.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 1, 1862

இறந்த தேதி – ஜூன் 12, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 73

ஜேம்ஸ் எழுதிய கதைப் புஸ்தகங்கள் –

1904- GHOST STORIES OF AN ANTIQUARY

1911- MORE GHOST STORIES OF AN ANTIQUARY

1919- A THIN GHOST AND OTHERS

1922-  THE FIVE JARS

1922- MEDEVAL GHOST STORIES

1926 – A WARNING TO THE CURIOUS

1931- COLLECTED GHOST STORIES

அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும்  இருந்தார்; பல வரலாற்று நூல்களை எழுதினார். சுவடிகளின் அட்டவணை / கேட்டலாக் நூல்களை தொகுத்தார் . அவர் காலத்தில் அருங்காட்சியக ங்களுக்கு அரிய ஓவியங்களையும் கலைப் பொருட்களையும், சுவடிகளையும் சேகரித்துக் கொடுத்தார்.

ஜேம்ஸின் கதைகள் டெலிவிஷன் தொடராகவும், பிபிசி வானொலி ஒலி பரப்புகளாகவும் வந்தன.

–SUBHAM–

TAGS- பேய்க் கதைகள், எம்.ஆர்.ஜேம்ஸ், ஆவிகள், பிசாசுகள் , கதை, M R JAMES

Ghosts are Bound Souls பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்களே (Post. 7652)

WRITTEN BY S Nagarajan

Post No.7652

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Swami Ramathirtha’s Parables – 3

ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 3

ச.நாகராஜன்

குறிப்பு : – ராமதீர்த்தர் தன்னை எப்போதும் ராமா என்று அழைத்துக் கொண்டே பேசுவார். (நான் என்று ஒரு போதும் அவர் பேசுவதில்லை.) அதை மனதில் கொண்டு அவரது உரைகளைப் படிக்க வேண்டும்.

பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்களே -இமயமலையில் ஒரு குகை

ராமா ஒரு சமயம் இம்யமலையில் உள்ள ஒரு குகையில் வசித்து வpiந்தார். அது பிசாசுகள் நடமாடும் இடம். அதன் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வந்தோர் பல துறவிகள் அந்தக் குகையில் ஒரு இரவு இருந்தே இற்ந்து விட்டதாகச் சொன்னார்கள். அங்கு சென்றோர் பயந்து போய் மயக்கமடைந்ததாகச் சொன்னார்கள். ராமா அங்கு வசிக்க விரும்புவதாகச் சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ராமா அந்தக் குகையில் பல மாதம் வசித்தார். ஒரு பிசாசோ அதன் நிழலோ கூட அங்கு தெரியவில்லை. அவை எல்லாம் பறந்து போய் விட்டன போலும். அங்கு பாம்புகள், தேள்கள் குகையின் உள்ளே இருந்தன; புலிகள் குகைக்கு வெளியே இருந்தன. அங்கிருந்து அவை வெளியே கிளம்பவில்லை. ராமாவின் உடலுக்கு ஒரு தீங்கையும் அவை விளைவிக்கவில்லை. பற்றற்ற ஆன்மாக்கள் அல்லது ஜீவன் முக்தர்கள் மரணத்தையோ அல்லது பிசாசுகளையோ நினைத்து வாழ்வதில்லை என்பதை வேதாந்தம் நிரூபித்திருக்கிறது.

அவர்களது சொந்த உண்மையற்ற பூதத்தின் அடிமைகளே பிசாசாகவோ அல்லது ஆவிகளாகவோ உருவெடுக்கும். அந்த நிழலான வடிவங்களில் கட்டுப்பட ஆன்மாக்களே தளைப்படுத்தப்படுகின்றன.

நீதி : பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்கள், ஆகவே அவை ஜீவன் முகதரின் எத்ரில் நிற்க முடியாது, ஆகவே அவருக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவிக்க முடியாது.

தொகுதி 2 (பக்கம் 44-45)

ghosts in Indus Valley Seals

பெரிய வளைவுப்பாலம் பெரும் புயலைத் தன் அடியில் சீறிக் கொண்டு போக விடுகிறது. பல டன்கள் பாரமுள்ள  புகைவண்டிகளை ஓடச் செய்கிறது. அந்த வளைவு கீழே உள்ள காலியாக இருக்கும் பாகத்தால் வலிவுள்ளதாக ஆகிறது.

அதேபோல,

ஒரு பேரறிஞன் வலிமையுள்ளவனாக ஆகிறான்; தன்னைக் காலியாக்கிக் கொள்வதன் மூலம் வெல்ல முடியாதவனாக ஆகிறான்.

*

குரு கோவிந்தசிங்

அவர் ஒரு சிங்கத்தை வேட்டையாடுகிறார், அதன் தோலை உரிக்கிறார், ஒரு கழுதையின் மேல் அந்தத் தோலைப் போர்த்தித் தைக்கிறார். அதை நகர் நோக்கிச் செல்ல விடுகிறார். மக்கள் பயத்தால் பதறி ஓடுகின்றனர். கழுதை மற்ற கழுதைகளைப் பார்த்து காள், காள் என்று கத்துகிறது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை கண்டு பிடித்து அந்த கழுதையைக் கொல்கின்றனர்.

பாடம் : நீங்கள் சிங்கத்தின் தோலை அணிய விரும்பினால் நீங்கள் உங்களது பழைய ஜாதி மற்றும் சம்பிரதாயங்களை முழுதுமாக மறக்க வேண்டும், பழைய கழுதைக் கத்தல்களையும் மொத்தமாக விட்டு விட வேண்டும்.

*

1. ஒரு இரும்புத் துண்டானது வடக்கு-தெற்கு திசையை நோக்கி வைக்கப்படும் போது அந்த காந்தசக்தியை அடைகிறது. மனிதன் ஏன் ஸத்தியம் – அன்பு ஆகியவற்றை ஒருமிக்கும் போது அடையக் கூடாது?

2. நீராவியுடனான ஒரு பாய்லர் எஞ்சினை இயங்க வைக்கிறது, மனிதன் ஏன் உணர்ச்சிகளால் இயங்க வைக்க  முடியாது?

3. தகடு அதிர்வால் அதிரட்டும், மண் அற்புதமான உருவங்களாக உருவாகட்டும். அதே போல சித்தத்தின் அதிர்விற்கு விதிகள் கீழ்ப்படியும்.

*

ஆங்கில மூலம் :

Ghosts are Bound Souls (A cave in the Himalayas)

Rama lived at one time in a cave in the Himalayas, which was noted for being haunted by ghosts. The people who lived in the neighbouring villages spoke of several monks having died by remaining inside that cave for a night. Some of the visitors were said to have been frightened to swooning. When Rama expressed a desire to live in that cave, everybody was amazed. Rama lived in that cave, for several months, and not a single ghost or shade appeared. It seems that they all fled. There were snakes and scorpions inside the cave and tigers outside it. They did not leave the neighbourhood but never did any harm to Rama’s body.

It is proved by Vedanta that free souls or the jiwan-muktas never live after death as ghosts; it is only the slaves of their own phantoms that have to assume the garb of ghosts or spirits. It is only the bound souls that are enchained in those shadowy shapes.

MORAL:—Ghosts are bound souls, hence they 79

Parables of Rama

cannot withstand the presence of a free soul (jiwan-mukta) and can therefore cause him no harm. Vol. 2 (44-45)

*

The great arch lets storm rage under it and trains lead their heavy tonnage over it, and the arch is strong by virtue of the hollowness underneath, and a wise man becomes strong and invincible by emptying himself.

*

Guru Govind Singh

He hunts a lion, flays him, sews the skin on the body of an ass, and sends the donkey to the town. People run away in fear. The donkey brays on seeing other donkeys. People discovered the cheat, and killed the animal.

Lesson : If ye want to wear the sinha-garb (lion-skin) you must forget in toto all about your old castes and creeds, must give up entirely the previous braying habits.

*

1. When an iron-bar is kept North-South it is magnetized. Why not man when in unison with Truth and Love?

2. A boiler with steam works engines. Why not Man with Feeling?

3. Let the plate vibrate, and the sand shapes itself in fantastic figures. So the Laws obey the vibrations fo Chitha.

**

Tags  ராமதீர்த்தர் , குட்டிக் கதைகள் 3, குரு கோவிந்தசிங், பிசாசுகள்

தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!

ghost

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி நிறையவே செய்திகள் உள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயம் எப்படி இருக்க முடியுமோ அப்படித்தான் தமிழ் சமுதாயமும் இருந்ததது. கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை வேறுவதற்கு முன்னால் மறக்காமல் தனது மதக் காணிக்கையைச் செலுத்தும்படி உயிர்த் தோழனிடம் வேண்டிக்கொண்டார். ஒரு கோழி அடித்துக் கும்பிட அனுப்பினார் ஆருயிர்த் தோழனை!! சாக்ரடீஸ் பெயரில் அதிக அன்பு பூண்ட நமது பகுத்தறிவுகளும் திராவிடங்களும் கவனிக்க வேண்டிய விஷயம் இது!

 

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெருமளவு நேரத்தைச் செலவிட்டு செய்திகளைச் சேகரித்து எனது ஆரய்ச்சியையும் சேர்த்து வெளியிடும் கட்டுரைகளை வேறு இடத்தில் பயன் படுத்துவோர் எனது பெயரையும் சேர்த்துப் போட்டால் தமிழ் மொழி வளரும். தமிழ்த்தாய் உங்களை நெஞ்சார வாழ்த்துவாள்.))

 

**1.பேய்க்குப் பலியிடுதல்—

’பெருங் களிற்று யானையொடு அருங்கலம் தராஅர்

மெய்பனி கூரா அணங்கெனப் பராவலின்

பலிகொண்டு பெயரும் பாசம் போலத்’’–(பதிற்று.71-23);

பொருள்: தனக்கிடும் பலியினை ஏற்றுக்கொண்டு பலியிட்டவரின் உயிரைக் கவராது செல்லும் பேய் போல, நீயும் நினக்கிடும் திறையைப் பெற்றுக்கொண்டு பகைவரின் உயிரைக் கவராது செல்கிறாய். (பாசம்=பேய்)

 

 

**2.சுடுகாட்டில் கண்ணுக்குத் தெரியாத பேய்கள் உலவியதாக நம்பினர்:

வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்

பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு (புறம்.238)

நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களை உண்டன: (புறம்.373)

பிணம் தின்னும் பேய்கள்: (புறம்.369) பதிற்று.67

 

ghost 2

**3.போர்க்களத்தின் நடுவே சில பேய்கள் ஆட, அதனைக் காணும் பொருட்டுப் பல பேய்கள் ஆங்கே நிறைந்திருக்கும்– பதிற்று.35

 

**4. பேய் மகள்— (சிறுபாண்.196-197)

எரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக், கருமறிக்காதிற் கவையடிப் பேய்மக, ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப், பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா, ளண்ணல் யானை

பொருள்: மேல் நோக்கி எரிகின்ற நெருப்புச் சாய்ந்தாலொத்த நாவினையும், வெள்யாட்டுமறிகளை அணிந்த காதினையும், கவைத்த அடியினுமுடைய பேய்மகள்

 

**5.பேய் மகளிர்— (மதுரை.25-28, 162-163)

பலியை பேய் ஏற்றல்— மதுரை.க்க்காஞ்சி & மணி. 7-84

னிணம்வாய்ப்பெய்த பேய்மளி

ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்

பொருள்: பிணங்களையுடைய கொம்புகளையுடையனவாய்ப் பட்ட ஆனையினுடைய திரளின் நிணத்தைத்தின்ற பேய்மகளிருடைய துணங்கை

பொருள் : வரிகள் 161-163: சான்றோர் இருந்த பெரிய அம்பலங்களில் இரட்டையான அடிகளையும் கடிய பார்வைகளையும் உடைய பேயாகிய மகளிர் உலவியாட.

 

**6. இறந்த வீரரின் குருதியைத் தலையில் தடவித் தலைவாரும் பேய்: புறம்.62

‘’பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு,

குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,

நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்’’

 

**7. பேய்கள் சவாரி: பேய் மகள் கழுதூர்தல்— பதிற்று.13-15— கழுது என்னும் வகைப்பேய் மீது இன்னொரு பெண் பேய் சவாரி செய்யும்—பேயின் தலை முடி பிளவு பட்டிருக்கும்—தலை விரித்தாடும் பேய்கள்

கவைத் தலை பேய்மகள் கழுதூர்ந்து இயங்க

ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை

 

ghost_council_of_orzhova_by_velinov-d5moyq4

**8.கொல்லன் பட்டறையில்/தெருவில் ஊசி விற்றது போல என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு (To carry coals to Newcastle). இதற்கு இணையாக பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்று ஒரு பழமொழியும் உண்டு. அதாவது எல்லாம் தெரிந்த காட்டில் இருக்கும் தெய்வமான கொற்றவைக்கு பேய் என்ன சொல்லிக் கொடுக்க முடியும்? இந்த பேய் பற்றிய பழமொழியை கலித்தொகையில் காணலாம்.

பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.86-8)

**9. சங்க இலக்கிய கலைக்களஞ்சியம் புறநானூறு. பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நூல். இதில் பேய் பற்றி 62-4, 238-4, 356-3, 359-4, 369-15, 370-25, 371-26 பாடல்களில் வருகிறது.

 

**10.சங்க இலக்கிய காலத்துக்குப் பின் வந்த மணிமேகலையில் ஆறு வகை உயிரினங்களில் ஒன்றாக பேயும் கூறப்படுகிறது.

 

**11. நற்றிணையில் பேய்கள்: போரில் பெரும் புண்ணுற்று இறவாது கிடப்போரை நரி முதலியன தீண்டாவண்ணம் பேய் காத்து நிற்றலாகிய  புறப்பொருட் கருத்தும் நற்றிணை உவமையில் வைதுக் கூறப்பட்டுள்ளது.

நள்ளிரவில் பேய்கள் உலாவும் என்ற தமிழர் நம்பிக்கையை பாடல்கள்  319, 255 ல் படிக்கலாம்:

கழுதுகால் கிளர ஊர்மடிந்தற்றே (255)

அணங்கு கால் கிளறும் (319)

கழுது, அணங்கு=பேய்

 

 

**12.நள்ளிரவில் பேய்கூடத் தூங்கும் என்ற கருத்து பிற்காகால இலக்கியமான திருவிளையாடல் புராணத்திலும் நளவெண்பாவில் வருகிறது.

அணங்கு என்பதை பேய் என்பதைவிட மரம், நீர்நிலைகள், மலை ஆகியவற்றில் உறையும் பெண் தேவதை (யக்ஷி) என்றே சொல்லவேண்டும்.

 

**13.Ghost , Ghoul என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்களுக்கு மிகவும் நெருங்கியவை. கூளி= ஆங்கிலம் Ghoul , கழுது= ஆங்கிலம் Ghost

 

**13. ஐயவி என்னும் வெண் கடுகை புகைத்தால் பேய் முதலிய தீய சக்திகள் நெருங்கா என்ற கருத்து நாடு முழுதும் இருந்ததை அறிகிறோம் ( ஐயவி புகைத்தல் புறம் 98-15, 281-4, 296-2,342-9.இந்தக் கருத்து நாட்டின் வடபகுதியிலும் நிலவியது.

 

**14.என் அம்மா சொன்ன பேய்: சிறு வயதில் என் அம்மா என் எழுத்தைப் பார்த்துவிட்டு, ‘’ இப்படி பேச்சக்காலும் பேச்சக்கையுமா எழுதாத. வாத்தியார் மார்க் போடமாட்டார் என்று சொல்லுவார். இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது. காரைக்கால் அம்மையார் (பேயார்) பதிகங்களைப் படித்த பின்னர்தான், அவர் பேய் பற்றி வருணித்தவைகலைப் படித்தபின்னர் தான், இதற்கு அர்த்தம் புரிந்தது.

பேய்ச்சியின் கால் போலும், பேய்ச்சியின் கை போலும், கோரமாக எழுதாதே, அழகாக எழுது என்பதே உதன் பொருள்.

 

**15.கலிங்கத்துப் பரணி, கந்தசஷ்டிக் கவசத்திலும் பேய்கள் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றின் விளக்க உரையில் காண்க.

ghosts1

**16.இறந்த உறவினரின் ஆவிகள் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததாகவும் ஒரு முறை கோவிலில் கடுமையான பிரார்த்தனை செய்தபின்னர் அவை வரவே இல்லை என்றும் சுவாமி விவேகநந்தர் அவரது சம்பாஷணைகள் புத்தகத்தில் கூறியுள்ளார்.

 

**17.பரணர் பாடிய பேய்கள்:

பரணர் என்னும் சங்கப் புலவர் பாடிய பாடல்களில், ‘’பேய்கள் பிணம் தின்னும்’’, ‘’நடு இரவில் இயங்கும்’’, ‘’பலி கொடுத்தால் பணி செய்யும்’’, ‘’பேய்மகள் பற்றிய பிணம்’’ ‘,’கழுது வழங்கு யாமம்’’, ‘’ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்’’ என்ற கருத்துக்கள் வருவதையும் காண்க.

பரணர் சொல்லும் மிஞிலி கதையிலும் பேய் வருகிறது. ஆய் எயினனுக்கும் மிஞிலிக்கும் மோதல் மூண்டது. எயினனோடு நடக்கும் போரில் எனக்கு வெற்றி தேடித் தருவையின் நினக்கு பெரும்பலி தருவேன் எனப் பாழி நகர்ப் பேயைப் பரவிப் போர்க்களம் புகுந்தான். மிஞிலி  வென்றான் என்ற செய்தியைப் பரணர் பாடுகிறார்.

 

திருக்குறளில் பேய்கள்

திருக்குறளிலும் பேய்கள் உண்டு. ஏற்கனவே திருவள்ளுவரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’ கதையை எழுதியுள்ளேன்.

 

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து (565)

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (650)

அலகை=பேய்

 

Please read the following articles in English or Tamil: நான் முன்னர் எழுதி வெளியிட்ட பேய்க் கட்டுரைகளையும் படிக்கவும்:

1.வள்ளுவர் சொன்ன பேய்க்கதை 2). தமிழ்நாட்டை உலுக்கிய பேய்  3.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி 4.Indus Seals: Gods or Ghosts? 5..சிந்து சமவெளியில் பேய் முத்திரை 6. Tamil Ghost that killed 72 people 7.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 8.டெல்பி ஆரூடமும் குறிசொல்வோரும்

 

உதவிய நூல்கள்: 1.பரணர்—கா.கோவிந்தன் 2.தமிழர் நாகரீகமும் பண்பாடும் –ஆ.தட்சிணாமூர்த்தி 3.தமிழ் சொற்றொடர் அகராதி —வீ.ஜே.செல்வராசு 4.சங்க இலக்கியம் 5.திருக்குறள்

swami_48@yahoo.com