பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது ! எப்போது?! (PostNo.10,190)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,190

Date uploaded in London – 9 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது ! எப்போது?!

ச.நாகராஜன்

அருமையான நூறு சுபாஷிதங்களை சரோஜா பட் தொகுத்து ‘சுபாஷித சதகம்’ என்ற ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு ரத்தினமே. அவற்றில் ஐந்தைத் தமிழில் பார்ப்போம் :

ஷட்கர்ணோ பித்யதே மந்த்ர சதுஷ்கர்ண: ஸ்திரோ பவேத் |

த்வி கர்ணஸ்ய து மந்த்ரஸ்ய ப்ரஹ்மாப்யந்தம் ந கச்சதி ||

ஆறு காதுகளில் கேட்கப்பட்ட ரகசிய திட்டமானது வெளியில் கசிந்து விடும். நான்கு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியம் அப்படியே இருக்கும். என்ற போதிலும், இரண்டு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியமானது பிரம்மாவினால் கூட கேட்கப்பட மாட்டாது.

Secret plan (delibertions) heard by six ears leak out. Secrets heard by four ears remain stable. However, even the creator cannot penetrate into the secret  which remains in two ears.

*

ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாமபி |

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்துசக்தித: ||

நீரில் இடப்பட்ட எண்ணெய், துஷ்டன் காதில் விழுந்த ரகசியம், சரியான தகுதியுள்ளவனுக்குக் கொடுக்கப்பட்ட தானம், நல்ல புத்திசாலிக்குக் கொடுக்கப்பட்ட சாஸ்த்ரம் ஆகிய இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிறியதாக இருப்பினும் கூட தனது உள்ளார்ந்த சக்தியால் பெரிதாகப் பரவி விடும்.

Oil (put) in water, a secret (divulged to) a wicked person, gift (given to) a proper person and knowledge (imparted to an) intelleigent person, these things spread on their own due to the inherent power in each object although they are small (in the beginning).

*

ஜலசேகேன வர்தந்தே தரவோ நாஷ்மஸஞ்சயா: |

பவ்யோ ஹி த்ரவ்யதாமேதி க்ரியாம் பார்ப்ய ததாவித்யாம் ||

கற்குவியல் அல்ல, மரங்களே தண்ணீர் விடும் போது தளிர்த்து வளர்கின்றன. நல்ல தரமுள்ள பொருளே அப்படி ஒரு செயலைச் செய்யும் போது தகுதி உடையதாக ஆகிறது.

Trees and not heaps of stones grow by the sprinkling of water. An object of good quality alone becomes a worthy object when it is processed in that (specific) manner.

*

ஜாத்யுத்க்ருஷ்டஸ்ய ஹி மணேனோர்சிதம் ஷாணகர்ஷணம் |

ஆதர்ஷே சித்ரகாரை: கிம் லிக்யதே ப்ரதிபிம்பத்வம் ||

ஒரு நல்ல தரம் வாய்ந்த அசல் நவரத்தின மணியை பளபளப்பாக்கும் கல்லில் தேய்ப்பது உகந்ததல்ல; ஒரு கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பம் ஓவியர் வரைந்ததாகி விடுமா என்ன?

Rubbing on a polishing stone is not desirable for a gem which is originally of high quality. Is the reflection in a mirror drawn by an artist?

*

ஆத்மாதீனசரீராணாம் ஸ்வபதாம் நித்ரயா ஸ்வயா |

கதன்னமபி மத்யார்நாமம்ருதத்வாய கல்பதே ||

தனது கட்டுப்பாட்டில் உடலை வைத்திருப்பவர்களுக்கும், தானாகவே தூங்க முடிபவர்களுக்கும் தகுதியற்ற உணவும் கூட அமிர்தமாகும்!

Even the worthless food is nectar for them who have a control over their body and who sleep their own sleep.

(English translation by Saroja Bhate)

***

நன்றி : சரோஜா பட்

 tags- பிரம்மா, ரகசியம், 

அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி-சுவையான சம்பவங்கள் (Post No.7121)

WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com

Date: 21 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-19
Post No. 7121

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கடவுள் கண்டெடுத்த முத்து! (Post No.4071)

Translated by London Swaminathan
Date: 11 July 2017
Time uploaded in London- 10-15 am
Post No. 4071

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேதம் என்பது சம்ஹிதை (துதிப்பாடல் பகுதி), பிராமணம் (யாகம் செய்யும் வழிமுறைகள்), ஆரண்யகம், உபநிஷத் (தத்துவ விளக்கங்கள்) நிறைந்தது.

 

இதில் ரஹசிய மொழியில்தான் விஷயங்களைச் சொல்லுவர். இதில் ரிஷிகளுக்குள் ஒரு போட்டி! பேரானந்தம்!

 

ஆங்கிலம் மட்டுமே படித்த, இந்து கலாசாரமே தெரியாத– புரியாத – அறிவிலிகள் இது பற்றி ஏராளமாகப் பிதற்றியுள்ளன. வெளிநாட்டாருடன் போட்டி போட்டுக் கொண்டு மார்கஸீய அரை வேக்காடுகளும் குட்டையைக் குழப்பியுள்ளன.

 

யார் சொல்லுவதை நம்பலாம்?

காஞ்சி, சிருங்கேரி சங்கராசார்யார்கள் போன்ற சந்யாசிகள் சொல்லுவதை நம்பலாம். இந்து மதத்தில் நம்பிக்கை உடையோர் சொல்லுவதை நம்பலாம்.

 

யார் சொல்லுவதை நம்பக் கூடாது?

ஒழுக்கங் கெட்ட, வாழ்க்கையில் சத்தியத்தை, நேர்மையைக் கடைப்பிடிக்காத அதுகளையும் இதுகளையும் நம்பக்கூடாது. வெளிநாட்டிலிருந்து வந்து வேதத்தை மொழி பெயர்த்த பல அதுகளும் இதுகளும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் மாதிரித்தான். அதாவது ஒரு சாரார் இடமிருந்து காசு வாங்கி மற்றவர்களைத் திட்டுவது,

‘ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல’ என்று வீட்டில் பேசுவது இவர்களுடைய வாடிக்கை. நிற்க. நல்ல விஷயங்களுக்கு வருவோம்.

பிராமண நூல்களில் கிடைக்கும் சில அற்புதமான மேற்கோள்களைப் பார்ப்போம்

 

“சமுத்ரே த்வா மதனே சாதயாமி இதி.

மனோ வை சமுத்ர:

மனஸோ வை சமுத்ராத் வாசா அ ப்ரயா தேவாஸ் த்ரயீம் வித்யாம் நிரகனன்”

 

“மனம் தான் கடல்;

வாக்குதான் மண்வெட்டி (கரண்டி).

தேவர்கள் அந்த மூன்று வேதங்களையும் தோண்டி எடுத்தனர்”– சதபத பிராமணம் (7-5-2-52)

 

நாம் தமிழில் “கடலில் மூழ்கி முத்து எடுப்போம்” வாருங்கள் -என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். அந்த இடத்தில், படிப்போருக்கு நாம் அரிய விஷயங்களை ஆழ்ந்து இறங்கி கண்டு பிடிப்போம் வாருங்கள், என்பது புரியும். அதைப் போல வேதங்கள் என்பது தேவர்கள்  — அல்லது அவர்களைப் போன்ற ரிஷிகள் — கண்டவை — மனக் கண்ணில் கண்டவை –என்பது தெளிவாகத் தெரியும். இதை அறியாத ஆங்கில மாக்கள் ” பாருங்கள் வேதங்கள் என்பவை பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன– ஆகவே அவைகளும் கவிஞர்களால் இயற்றப் ப ட்டவையே’’ என்று வாதிப்பர்.

ஆனால் நம்முடைய நூல்கள் ரிஷிகளை ‘மந்த்ர த்ருஷ்டா’ — மறை மொழிகளைக் ‘கண்டவர்கள்’ என்று சொல்லுகின்றன. ‘இயற்றியவர்கள்’ என்று எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக ‘அபௌருஷேயம்’ (மனிதர்களால் இயற்றப்படாதவை) என்றும் தெளிவாகச் செப்புகின்றன.

 

இப்போது நீங்களே தெரிந்து கொள்ளலாம். வேத வாழ்வைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டினர் சொல்லுவது சரியா? அல்லது நம்முடைய மூதாதையர்கள் சொல்லுவது சரியா என்று.

 

இங்கு அப்பர் தேவாரப் பாடலை ஒப்பிடுவது சாலப் பொருந்தும்

 

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

xxx

 

பிரஜாபதியின் தாடி

பிரஜாபதியின் (பிரம்மா) தாடி முடிதான் வேதங்கள்!

ப்ரஜாபதேர் வை ஏதானி ஸ்மஸ்ரூணி யத் வேத:

–தைத்ரீய பிராமணம் 3-39-1

xxx

சொற்களே வேதங்களின் தாய்!

“வாக் அக்ஷரம் ப்ரதமஜா ருதஸ்ய வேதானாம் மாதா அம்ருதஸ்ய நாபி:”

–தைத்ரீய பிராமணம் 2-8-85

“சொல் என்பது அழியாதது, முதலில் பிறந்தது, வேதங்களின் தாய், மரணமிலாப் பெருவாழ்வின் அச்சு (மூலாதாரம்)”

xxx

சரஸ்வதி

வாக், வாக் தேவி என்பதெல்லாம் சரஸ்வதியையும் குறிக்கும். சாதாரண மக்களுக்கு — பாமர மக்களுக்கு — இப்படி தத்துவ விஷயங்களைச் சொன்னால் புரியாதே என்பதற்காக பிற்காலத்தில் சரஸ்வதி முதலிய உருவங்களைப் படைத்து விளக்கினர். அதாவது எப்படி ரஹஸிய மொழி மூலம் அரிய கருத்துக்ளைத் தந்தனரோ, அதே போல சாதாரண கற்சிலை- விக்ரஹ — உருவங்கள் மூலம் அரிய– பெரிய கருத்துக்களை மனதில் பதிய வைத்தனர்.

xxx

பாகவத புராணம் சொல்லும்:

நான்முகனிடமிருந்து வேதங்கள் தோன்றின; “முன்போல எப்படி சொல் தொகுப்பை உண்டாக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு முகங்களில் இருந்து ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கையும் படைத்தார். அத்தோடு யாக யக்ஞங்கள், துதிகள் ஆகியவற்றையும் உருவாக்கினார்” — பாகவதம் 3-12-34)

(விஷ்ணு புராணமும் இதைச் சொல்கிறது).

xxxx

 

காயத்ரியிலிருந்து உண்டானது வேதம்

ஹரிவம்சம் சொல்கிறது–

“உலகைப் படைத்த பிரம்மா, மூன்றே வரிகள் உள்ள காயத்ரீயைப் படைத்தார் – அதுதான் வேதங்களின் தாய் – அந்த காயத்ரீயில் இருந்து நான்கு வேதங்களும் உருவாயின”

(இதன் உட்பொருள்- நான்கு வேதங்களில் காணப்படும் காயத்ரீ மந்திரம் முழு வேதங்களுக்கும் சமம் ஆனவை.

xxxx

மஹாபாரதம் சாந்தி பர்வதத்திலும்

“வேதானாம் மாதரம் பஸ்ய மஸ்தாம் தேவீம் சரஸ்வதீம், அதாவது, வேதங்களின் தாயான சரஸ்வதி என்னிடம் வசிக்கிறாள்” என்று சொல்லும்.

 

இவ்வாறு வேத, இதிஹாச, புராணம் மூலம் இழையோடும் கருத்துக்களை நாம் நுணுகி ஆராய்ந்தால் என்றுமுள – சாஸ்வதமான-  சத்தியத்தையே வேதங்கள் உரைக்கின்றன என்பது தெளிவுபடும்.

 

 

சுபம்–

பிரம்மாவின் 29 பெயர்கள்!

brahma stamp
Stamp for Brahma issued by France

Research paper written by London Swaminathan
Research article No.1424; Dated 21 November 2014.

“பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்” என்ற தலைப்பில் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.
அமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு

சிவனுக்கு 52 பெயர்களும்
விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்
பலராமனுக்கு 17 பெயர்களும்
அம்பாளுக்கு 21 பெயர்களும்
லெட்சுமிக்கு 14 பெயர்களும்
கணபதிக்கு 8 பெயர்களும்
முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்
இந்திரனுக்கு 35 பெயர்களும்
அக்னிக்கு 34 பெயர்களும்
யமனுக்கு 14 பெயர்களும்
வருணனுக்கு 5 பெயர்களும்
வாயுவுக்கு 20 பெயர்களும்
குபேரனுக்கு 17 பெயர்களும்
சூரியனுக்கு 37 பெயர்களும்
மன்மதனுக்கு 19 பெயர்களும்
ஜினதேவனுக்கு 18 பெயர்களும்
புத்தபகவனுக்கு 7 பெயர்களும்

கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தை யும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.

museum brahma

பிரம்மாவின் பெயர்களை மட்டும் இன்று காண்போம்:

1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்
2.ஆத்மபூ= தான் தோன்றி
3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்
4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.
5.பிதாமஹர்= பாட்டனார்
6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)
7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்
8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)
9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )
10.தாதா = உயர் தலைவன்
11.த்ருஹினஹ= படைப்போன்
12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்
13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்

14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்
15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்
16.வேதா= வேதம் உடையோன்
17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)
18.விதாதா= உயர் தலவன்
19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்
20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்
21.பூர்வ= முன்னோன்
22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்
23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்
24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)
25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்
26.சத்யக = உண்மை விளம்பி
27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்
28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்
29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்

guimet-brahma-from-cambodia
Brahma from Cambodia, Museum Guimet, Paris

அமரகோஷம் போன்ற நிகண்டுகள் பெரிய விஷயங்களையும் அழகாக மனப்பாடம் செய்யும் வகையில் பாடலாக எல்லாவற்றையும் கொடுத்து விடும். இதோ பிரம்மாவின் 29 பெயர்களும் அடங்கிய அமரகோச ஸ்லோகம்:

பிரம்மாத்மபூ: ஸூரஜ்யேஷ்ட: ப்ரமேஷ்டி பிதாமஹ:
ஹிரண்யகர்ப்போ லோகேஸ: ஸ்வயம்பூஸ் சதுரானன

தாதா அப்ஜயோனி த்ருஹிர்ணோ விரிஞ்சி கமலாசன:
ஸ்ரஷ்டோ ப்ரஜாபதிர் வேதா விதாதா விஸ்வஸ்ருத் விதி:

நாபிஜன்மாண்டஜ: பூர்வோநிதன: கமலோத்பவ:
ஸதானந்தோ ரஜோமூர்த்தி சத்யகோ ஹம்சவாஹன

இந்தப் பெயர்களைத் தவிர அவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. உலகம் முழுதும் பிரம்மா வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் இடத்தில் பூஜிக்கப்படுகிறார். மற்ற எல்லாக் கோவில்களிலும் சிலை உண்டு. தென் கிழக்காசிய நாடுகள் முழுதும்— குறிப்பாக கம்போடியா, இந்தோ நேசியாவில் நிறைய சிலைகள் உள்ளன. பால்டிக் நாடுகளில் இவர் ‘’ஸ்வேதோவித்’’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். இவருடைய நாலு முகங்கள் நால்திசைகளையும் பார்ப்பதால் இப்பெயர். வெள்ளை நிறத்தவர் என்ற பொருளும் உண்டு. இந்தியாவில் எல்லாப் பெரிய கோவில்களிலும் பிரம்மா இருக்கிறார். எகிப்தில் ‘’பிதா’’ என்ற பெயரில் பிரம்மா இருக்கிறார் (மாதா பிதா இன் ஈஜிப்ட் என்ற என் ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

brahma-temple7
Brahma’s Temple at Pushkar, Rajasthan

பிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனால் கிள்ளி எறியப்பட்டது. நான்கு கைகளில் ஜபமாலை, வேதப் புத்தகம், கமண்டலம், யாகக் கரண்டி வைத்திருப்பார். மனைவி சரஸ்வதி — இவருக்கு அன்ன வாகனம். அவர் உடல் செந்நிறம். ஆயினும் வெள்ளை வஸ்திரம் தரித்து இருப்பார். வரம் கொடுப்பதில் தயாள குணம். ராமனுக்கு மட்டுமின்றி, பலி, ராவணன் ஆகிய ராக்ஷசர்களுக்கும் வரம் கொடுத்தவர்.

சதபத பிராமணம் என்னும் நூலில் பல அடையாளபூர்வ கதைகள் உள்ளன. பிரம்மா — ‘’பூர்’’ என்று சொன்னவுடன் பூமியும் ‘’புவர்’’ – என்று சொன்னவுடன், காற்றும், ‘’ஸ்வர்’’ என்று சொன்னவுடன் வானமும் உருவானதாக சதபதப் பிராமணம் கூறும்.

படைப்புத் தொழில் செய்தபின் அவர் அலுப்பால் படுக்கவே எலும்புகள் விலகி மூட்டு வலி ஏற்பட்டது ஆயினும் பின்னர் சரியானது. அக்னிஹோத்ரம் என்னும் யாகத்தால் அவர் மூட்டுகள் ஒன்று சேர்ந்து அவர் பலம் பெற்றார் என்றும் சதபதம் கூறும். இந்த விலகிப்போன மூட்டுகள் எலும்புகள் ஆகியன ‘’காலம்—பருவங்கள்’’ எனப் பொருள்படும். சங்கேத மொழியில் பேசுவது ரிஷிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று வேதமே சொல்லுகிறது

prambanan
Brahma’s Temple ta Prambhanan, Indonesia

பிரம்மன், பிராமணன், பிரம்மா

பிரம்மன், பிராமணன், பிரம்மா ஆகிய மூன்றும் வெவ்வேறு பொருள் உடையவை. பிரம்மம் என்பது கடவுள்; பிராமணன் என்பது ஜாதிப் பெயர்-பிரம்மத்தை நாடுவதே அவன் வாழ்க்கையின் லட்சியம்., பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர். இது தவிர ‘’பிராமணம்’’ என்ற நூல் வேத இலக்கியத்தில் சம்ஹிதைகளைத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்.

பிரம்மாவுக்கு தனி வழிபாடு, பூஜை- புனஸ்காரங்கள் இல்லாவிடினும் துதிப்பாடல்களிலும், பஜனைப்பாடல்களிலும் திரி மூர்த்திகளின் பெயர்களில் அவர் பெயரும் சேர்ந்தே வரும். சுசீந்திரம் போன்ற இடங்களில் தான்+மால்+ அயன் என்ற பெயரில் கடவுள் வணங்கப் படுகிறார். பிரம்மாவின் வாய் — இடைவேளை இன்றி வேதத்தை ஒலிபரப்பும் வேத ஒலிபரப்பு ரேடியோ ஸ்டேஷன் — ஆகும். அவர் எப்போதும் வேதமுழக்கம் செய்தவண்ணம் இருப்பார்.

வேதத்தில் இவர் பெயர் பிரஜாபதி, வால்மீகி ராமாயணத்தில் பிரம்மா என்ற பெயருடன் வலம் வருகிறார். சிவனுடைய அடி முடி தேடிய படலத்தில் பொய் சொன்னதால் வழிபாடு இல்லாமற் போனது என்பர்.

யசோதர்மன் என்பவன் கி.பி. 533ல் வெளியிட்ட மாண்டசோர் கல்வெட்டில் படைப்போன், காப்போன், அழிப்போன் ஆகிய மூவரும் பிரம்மாவே என்று சொல்லி இருக்கிறார்.
பிரம்மா வாழ்க! பிரம்மம் வாழ்க! பிரம்மத்தை நாடும் பிராமணர்கள் வாழ்க! பிராமணம் என்னும் நூல்கள் வெல்க!!
brahma (1)halebedu
Brahma at Halebedu, Karnataka.

Except my Brahma stamp photo all other pictures are taken from different websites; thanks.

-சுபம்-

பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

brahma-

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.

இந்துமதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science) இருப்பதை உலகம் வெகு வேகமாக உணர்ந்து வருகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் — என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது.

சிவபெருமானின் நடனத்தில்– பிரபஞ்சத்தின் தாள லயங்கள் (Dance of Shiva) இருப்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஆங்கிலத்தில் புத்தகம் வாயிலாக வெளியிட்டனர். அதை நடராஜர் என்னும் அற்புதமான பஞ்சலோக சிலையாக வடித்த தமிழ் ஸ்பதிகளின் பெருமையை இன்றும் உலகமே வியந்து பாராட்டி வருகிறது. நடராஜர் சிலை இல்லாத மியூசியம் உலகில் இல்லை. நடராஜர் படமோ விக்ரகமோ இல்லாத வெளி நாட்டு இந்தியவியல் அறிஞர் எவரும் இல்லை.

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார்.

இப்பொழுது கருந்துளைகள் (Black Holes) பற்றி உலக விஞ்ஞானிகள் எழுதி வியந்து வருகின்றனர். வானவியலின் புதிய அதிசயங்கள் இவை. யாராவது ஒருவர் நியூ ஸைன்டிஸ்ட் (New Scientist or Scietific American) அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் போன்ற அறிவியல் இதழ்களை வாசித்துவிட்டு பகவத் கீதையைப் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். பிளாக் ஹோல் என்னும் கருந்துளைகள் பற்றிய செய்திகள் அதில் (11ஆவது அத்தியாயத்தில்) உள்ளன!!
ஆனால் பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகளை யாருமே அறிந்து எழுதவில்லை. ஒரு சில அறிவியல் உண்மைகளை மட்டும் பட்டிய லிடுகிறேன்:–

அறிவியல் உண்மை 1
கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களும் அதைச் சுற்றி மில்லியன் கணக்கில் பூமி போன்ற கிரகங்களும் இருப்பதை உலகம் அறியும். அதில் பல்லயிரம் கிரகங்களில் வெளி உலகவாசிகள் (Extra Terrestrials) வசிக்க உள்ள வாய்ப்புகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சத்ய லோகத்தில் வசிப்பதாகக் கருதப்படும் பிரம்மா பற்றிப் படிக்கையில் அவர் ஒரு வெளி உலகவாசியோ என்று வியக்கத் தோன்றும். அவருடைய வாழ்நாளின் காலம் நாம் இந்தப் பக்கத்தில் எழுத முடியாத அளவு பெரிய எண்ணிக்கை. மற்ற கலாசாரங்களுக்கு 1000, 10,000 என்ற எண்கள் கூடத் தெரியாத காலத்ததி , நாம் உலகமே வியக்கும் ஆயுளை பிரம்மாவுக்குக் கொடுத்தோம் அது மட்டுமல்ல இது ஒரு பிரம்மாவின் ஆயுள். அவர் போன பின், அடுத்த ப்ரம்மா வருவார் என்றும் சொன்னோம். இன்னும் விஞ்ஞானிகளுக்கு — காலம் என்பது சுழற்சி உடையது— Cyclical வட்டமானது என்று கூடத்தெரியாது. இப்பொழுது கருந்துளை ஆய்வுகள் நிறைய நடப்பதால் நமது கொள்கையை வெகு விரைவில் உலகம் ஏற்கும்.

hindu-gods-brahma

பிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320,000,000 ஆண்டுகள். இது போல அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் புது பிரம்மா வருவார். இப்பொழுதுள்ள பிரம்மாவுக்கு வயது 51. ஏதோ அறிவியல் புனைக்கதை (Science Fiction) படிப்பது போலத் தோன்றும்.. இது கதை என்று யாராவது நினைத்தாலும் முதலில் அறிவியல் புனைக் கதை எழுதிய பெருமை நமக்கே கிடைக்கும்.

அது மட்டுமல்ல. யுகம் பற்றிய எதைக் கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். இதை சுமேரியர்கள் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு பிரளயத்துக்கு முந்தைய சுமேரிய மன்னர்களுக்கு இப்படி ஆட்சி ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர்!!

அறிவியல் உண்மை 2
பிரம்மாவுக்கு ஒரு பெயர் ஹிரண்ய கர்பன். அதாவது தங்க முட்டை! உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் ஒரு கலீலியோ, ஒரு கோப்பர்நிகஸ் தோன்றும் வரை காத்திருந்தது. ஆனால் நாமோ துவக்க காலம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோள வடிவானவை என்பதை அறிந்து, அண்டம் ( முட்டை வடிவானது), பிரம்மாண்டம், பூகோளம் (புவியியல்) என்று பெயரிட்டோம்.
அதுமட்டுமல்ல. அந்த ஹிரண்யகர்ப்பன் ஒரு நாள் திடீரென வெடித்து வானமும் பூமியுமாகப் பிளந்ததென புராணங்கள் பகரும் இதையே இப்பொழுது மாபெரும் வெடிப்பு Big Bang Theory — பிக் பேங் – என்று சொல்லுகின்றனர். இது ஏன் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. நமது சாத்திரங்கள் மட்டுமே கடவுள் ஒரு சொல்லை நினைத்தார் — அதைச் சொன்னார்- உலகம் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறது. இதை பைபிள் அப்படியே நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது. ஆனால் அதற்கு மேல் விளக்கவில்லை.

நாம் அதற்கும் மேலாக ஒரு படி சென்று மாபெரும் வெடிப்பு —ஒரு நாளைக்கு பலூன் போல ஊதிக்கொண்டே போய் பின்னர் முடிவில் வெடிக்கும் —அப்பொழுது காற்றுப் போன பலூன் போல பிரபஞ்சம் சுருங்கும் Big Crunch — மீண்டும் பலூன் போல ஊதும் — என்று – ஸைக்ளீகல் Cyclical —வட்டமான சுழற்சி உடையது என்று சொல்லியிருக்கிறோம். இந்த பிக் க்ரஞ்ச்Big Crunch – கொள்கையை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் ஏற்கின்றனர்.

அறிவியல் உண்மை 3
தசாவதாரத்தில் முதலில் மீன், பிறகு ஆமை, பிறகு பன்றி, பிறகு பாதி மனிதன் –பாதி சிங்கம் என்பதெல்லாம் டார்வீன் சொன்ன பரிணாமக் (Theory of Evolution) கொள்கையை ஒட்டி இருப்பதை நாம் அறிவோம் ஆனால் முதல் மூன்று அவதாரங்களும் உண்மையில் ஆதி நூல்களில் பிரம்மாவின் பெயரிலேயே (பிரஜாபதி) உள்ளன. ஆக அவரே படைப்புக் கடவுள்—பரிணாம வளர்ச்சிக் கடவுள். இதை சதபத பிராமணம் (Satapata Brahmana) முதலிய நுல்கள் விளக்கும். பின்னர் இதை விஷ்ணுவின் அவதாரங்களாக புராணங்கள் எழுதின. இதை இன்னொன்றாலும் அறியலாம்.

four faced Sumer
Four faced God of Sumer (Brahma?)

அறிவியல் உண்மை 4
வெளிநாட்டுக்காரர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் ஒரு விஷயம் நம் இலக்கியங்களில் உண்டு. அதை எழுதி, எழுதி நம்மை நக்கல் செய்வது—பகடி செய்வது—கிண்டல் செய்வது அவர்களுக்குப் பொழுதுபோக்கு. அது என்ன ‘’பலான’’ கதை என்கிறீர்களா?

பிரம்மா ஒரு மக:ளைப் பெற்றார். அவள் பெயர் சதரூபா (நூறு உருவம்)—அவல் அழகைக் கண்டு பிரம்மா அவளையே உற்று நோக்கினார். அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது- வேறு திசையில் ஓடி ஒளிந்தாள் அங்கேயும் பிரம்மா திரும்பினார். ஒவ்வொரு திசையிலும் ஒரு முகம் வரவே அவருக்கு நாலு முகம் தோன்றி அவர் நான்முகன் ஆனார். அவளோ வெட்கப்பட்டுக் கொண்டு மேலே போனாள். அங்கு ஐந்தாவது முகம் உதித்தது. அவளுடன் ஒன்று கூடிப் (Incestual Intercourse) பின்னர் உலகத்தைப் படைத்தார். இதைச் சொல்லிச் சொல்லி வெளிநாட்டினர் மகிழ்வர். உண்மையில் இந்தக் கதையை நம்மிடமிருந்து பைபிளும் இரவல் வாங்கி முதல் அத்தியாயத்திலேயே எழுதிவிட்டது. ஆதாம் என்பவரின் இடுப்பு எலும்பை கடவுள் முறித்து ஏவாள் என்ற பெண்ணை உருவாக்கவும், ஆதாம் அவளுடன் கூடி (Incest?) மனித இனத்தை உருவாக்கினார் என்பது அக்கதை. ஒரே உடலில் இருந்து ஒருவரைப் படைத்தால் அந்த ஏவாளும் சதரூபா போல ஆதாமின் மகள்தானே!!

இதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் முதலில் பாக்டீரீயா போல இருந்த உயிரினம் ஒரு செல் உயிரினங்களாக மாறி நீரில் நீந்தி பிறகு ஒரே உடலில் ஆண் பெண் உறுப்புகளுடன் பிறந்தன (ஹெர்மாப்ரோடைட் Hermaphrodite). பின்னர்தான் ஆண், பெண் என தனித்தனி உயிர் இனங்கள் தோன்றின. இதை அர்த்தநாரீஸ்வரர் என்னும் சிவனின் வடிவத்துடன் ஒப்பிடலாம்.

முதலில் ஆண் தோன்றினானா? பெண் தோன்றினாளா? முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? (Chicken and Egg question) என்ற கேள்விக்கு விடை கூறும் கதை இது. பெரிய விஞ்ஞான உண்மைகளை, சுவையான கதைகளாகத் தருபவை நம் புராணங்கள்!

Svetovid-Statue-Ruyan-Island-
Four faced Slavic God (Svetonvid)

அறிவியல் உண்மை 5
பிரம்மாவின் தோற்றம் பற்றிய கதை பெரிய பூகர்ப்பவியல் ( Geology ஜியாலஜி) கதையாகும். அவர் நீரில் படுத்து இருந்த நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்து உதித்த தாமரை மலரில் இருந்து தோன்றியதாக ஒரு கதை உண்டு. இது காண்டினென்டல் ட்ரிப்ட் Continental Drift எனப்படும் கண்டங்கள் நகர்ந்த கதை ஆகும். முதலில் பூமி என்பது ஒரே நிலப்பரப்பாக இருந்தது பின்னர் அது தாமரை மலர்வது போல மெதுவாக நகர்ந்து இன்றுள்ளது போல ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பிரிந்தது. இதையே தாமரையில் பிரம்மா தோன்றி உலகைப் படைத்தார் என்போம். புராணத்தில் கூட பிரம்மாண்டம் என்று இருப்பதைக் காணலாம். ‘ப்ரு’ என்னும் வடமொழி வேர்ச் சொல் மூலமே ‘’பெருகுதல், பிரிதல், பெரிய, ப்ருஹத், ப்ரம்ம’’ — முதலிய சொற்கள் வந்தன.

கிரேக்க மொழியில், முதலில் இருந்த சூப்பர் கான்டினென்ட்டை ‘’பங்கேயா’’ Panagaea என்பர். பங்கய என்றால் தாமரை எனப் பொருள். இது பங்கஜம் என்ற வடமொழிச் சொல். பிற்காலத்தில் இந்தப் பொருள் அறியாதோர் கிரேக்க மொழியில் புதுப் பொருள் கண்டனர் ( பேன்+ கயா ). பெண்கள் குழந்தை பெறுவதையும் தாமரை மலரில் இருந்து குழந்தை வந்ததாக வடமொழி இலக்கியங்கள் வருணிக்கும்.

அறிவியல் உண்மை 6
கணித விஷயத்தில், ஒன்பது என்ற எண்ணின் வியப்புறு குணங்களில் பல ஆராய்ச்சி செய்து அதன் பெயரில் பிரம்மாண்டமான எண்களைக் க(ல்)ற்பித்து (கல்பம் என்பதே பிரம்மாவின் ஒரு நாள், பரம் என்பது அவரது 100 ஆண்டு) உலகம் அறியாத புதுமைகளைச் செய்தனர் இந்துக்கள். ஒன்பது என்ற எண்ணின் பரிபூரணத் தன்மையை மனதிற் கொண்டே 108, 1008 என்ற அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றைப் படைத்தார்கள் இது பற்றி நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய எண்கள் 18, 108, 1008 பற்றிய கட்டுரையில் விரிவாகக் கொடுத்து இருக்கிறேன்.

brahma-statue

அறிவியல் உண்மை 7
நாரா (நீரா) அயனன்= நாராயணன், பிரம்மா மற்றும் முதல் இரண்டு அவதாரங்கள் எல்லாம் — நீரில்தான் உயிரினங்கள் தோன்ற முடியும், பரிணாம வளர்ச்சி பெற முடியும் —- என்று காட்டுகின்றன. இன்று வெளி கிரகங்களிலும் நீரின் மூலக்கூறுகள் (water molecules) இரு கின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

அறிவியல் உண்மை 8
உலகின் முதல் அகராதி (Thesaurus/ Dictionary நூலான அமரகோசம் வழங்கும் பிரம்மாவின் 29 வடமொழிப் பெயர்களை மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.

பிரம்மா என்பவர்
வானவியலை (Astronomy/ Cosmology) விளக்கும் கடவுள்
பூகர்ப்பவியலை (Geology) விளக்கும் கடவுள்
உயிரியல், பரிணாம வளர்ச்சியை (Biology / Theory of Evolution) விளக்கும் கடவுள்
கணிதம், பிரம்மாண்ட எண்களை (Mathematics and Amazing Numbers) விளக்கும் கடவுள்
பிக் பேங், பிக் க்ரஞ்ச்(Big Bang and Big Crunch) முதலிய அதி நவீன கொள்கைகளை (Ultra Modern Theories) விளக்கும் கடவுள்!!

—-சுபம்—