யோகாசனத்தை நமக்குக் கற்றுக் கொடுத்தது மிருகங்கள் ! (Post 10,572)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,572

Date uploaded in London – –    17 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முக்கியமான ஆசனங்களில் இருபதுக்கும் மேலான ஆசனங்களுக்கு பிராணிகள், பறவைகள், பாம்பு, தேள் முதலிய பெயர்கள் இருப்பதைக் காணலாம். மேலும் பல ஆசனங்களுக்கு மலர்களின் பெயர்கள் இருப்பதையும் காணலாம்.  அவர்களிடமிருந்து இந்த ஆசன ரஹஸ்யங்களைக் கற்றுக் கொண்டதற்காக மக்கள் நன்றியுடன் பெயரிட்டான் என்றும் சொல்லலாம்.

பிராணிகளைக் கவனித்து அவைகளிடமிருந்துதான் மனிதன் ஆசனங்களை அறிந்தான் என்று நான்கு வேதங்களை மொழிபெயர்த்த எம்.ஆர். ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் கூறுகிறார். அவர் சொல்லுவது சரியே என்பதற்கு நானும் சில காரணங்களை சொல்கிறேன்.

நான் கூறும் சில காரணங்கள்:

உலகிலேயே அதிக காலம் வாழும் பிராணி ஆமை (TORTOISE) தான் . சுமார் 300 ஆண்டுகளுக்கு ஆமை உயிர் வாழ்வதை மனிதன் பதிவு செய்து வைத்துள்ளான். இன்று ஆமைதான் அதிக காலம் வாழும் பிராணி என்று சாதனை நூல்கள் (RECORD BOOKS) சொன்னாலும் அதைக் கண்டு பிடித்தவன் இந்துதான் !

புலன் அடக்கம் பற்றிச் சொல்ல வந்த கிருஷ்ண பரமாத்மா, முதல் முதலில் இதைச் சொன்னார். அவரைத் தொடர்ந்து மனு தனது மனு ஸ்ம்ருதியில் ஆமை பற்றி பேசுகிறார். அதை அப்படியே அவருக்குப் பின் வந்த திருவள்ளுவரும் சொன்னார். காலத்தால் பிற்பட்ட திரு மூலரும் ஆமை ரஹஸ்யத்தைக் குறிப்பிடத் தவறவில்லை.

பகவத் கீதை 2-58

மனு ஸ்ம்ருதி  7-105

திருக்குறள் 126

திருமந்திரம்  2360

XXX

தவளை அதிசயம்

கரடி, பாம்பு, தவளை போன்ற சில பிராணிகள் குளிர்காலத்தில் பேருறக்க (HIBERNATION) நிலைக்குச் சென்றுவிடுகின்றன. அவை தூங்கும்போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் உடலில் குறைந்துவிடுகிறது. அவை உணவு இல்லாமலேயே 4 முதல் 6 மாதம் வரை நீண்ட உறக்கத்தில் — கும்ப கர்ணன் — நிலையை அடைந்து வசந்த காலம் வந்தவுடன் உயிர்த் துடிப்புடன் எழுந்து விடுகின்றன. ரிக் வேதத்தில் வரும் (7-103) நல்ல பிரசித்தமான பாடல் தவளைப்பாட்டு ஆகும். வேதம் ஓதும்  பிராமணர்களையும், வசந்த காலம் வந்தவுடன் சப்தம் செய்யும் தவளைகளையு ம் ஒப்பிடும் நக்கல்- நையாண்டிப் பாட்டு இது. இதில் ஒரு விஞ்ஞான உண்மையும் இருக்கிறது. வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக்கு கும்பலுக்கு அறிவியல் தெரியாது. அதுகள் இதை கிண்டல் என்று எழுதிவைத்துவிட்டன.. உண்மையில் மழைக்கால நான்கு மாதங்கள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ எனப்படும். அப்போது சன்யாசம் எடுத்த சந்யாசிகள் ஒரே இடத்தில் தங்குவர். அது முடியும் காலத்தில்  பிராமணர்கள் புதுப் பூணுல் அணிந்து மீண்டும் வேதம் கற்பத்தைத் துவங்குவர். அதாவது 4 மாத பேருறக்க நிலைக்குப் பின்னர் தவளைகளும் ஒலி எழுப்புவது போல.

இதைக் கவனித்த ரிஷி முனிவர்கள் நாமும் அப்படி இருக்கலாமே என்று மூச்சு அடக்கப் பயிற்சியைத் துவக்கினர் அப்படித் தவம் இருந்த வாலமீகி போன்ற முனிவர்கள் மீது புற்றுக்கள் கூட வளர்ந்துவிட்டன . ஆக இந்த ஹைபர் நேஷன் HIBERNATION எனப்படும் பேருறக்க நிலைஐயை மனிதர்களும் பயன்படுத்த முடியும் என்று பிராணிகளிடம் கற்றுக் கொண்டனர்..

திரு ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் சொல்லும் காரண்  ங்கள் வேறு :

ஒரு களைப்படைந்த குதிரை படுத்துக் கொண்டு ஓய்வு பெற, புத்துணர்ச்சி பெற என்னவெல்லாம் செய்கிறது எனப்தைக் காட்டுகிறார். பூனை, நாய் முதலிய பிராணிகள் எப்படி உடம்பை முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுத்து பயிற்சி செய்கின்றன என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் என்கிறார்.. குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுகையில் எந்த பயமும் இன்றி உடலை எப்படி லாவகமாக பயன்படுத்துகிறது என்றும் ஜம்பு நாதன் காட்டுகிறார்.

அவர் எழுதிய புஸ்தகத்தில் வெளியிடப்பட் ட சுமார் 50 ஆசனப்  படங்கள், செய்முறைகள், பலன்களை ஆங்கிலக் கட்டுரைகளில் வெளியிட்டேன். அவற்றை இரண்டு நாட்களுக்கு வாசித்து  பின்னர் அவற்றை யோகாசன ஆசிரியர் மூலம் கற்றுப்  பயன்படுத்தலாம்.

–SUBHAM–

tags- யோகாசனம், பிராணிகள் , உறக்க நிலை, புலன் அடக்கம்

பிராணிகள் கண்டுபிடித்த மூலிகைகள் ; வேதம் சொல்லும் அதிசயச் செய்தி (Post No.10,456)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,456
Date uploaded in London – – 17 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேத கால முனிவர்கள் எப்படி மூலிகைகள் பற்றி அறிந்தனர்? சில விஷயங்களை உள்ளுணர்வினால், மந்திர சக்தியால் அறிந்திருக்கலாம்; இன்னும் சில வகைகளின் சக்தியை சோதனை முறையில் அறிந்திருக்கலாம். மேலும் சில மூலிகைகைகளை பிராணிகளின் செயல்பாட்டைப் பார்த்து அறிந்தனர். இந்த அதிசய விஷயத்தை அதர்வண வேத மந்திரத்தில் காண முடிகிறது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு .
‘ஆயிரம் பேரைக் கண்டவனே வைத்தியன்’; அதாவது அனுபவம் மூலம் அறிவது. இதை ஆங்கிலத்தில் TRIAL AND ERROR METHOD என்பர். இன்றும் கூட உலகப் புகழ் பெற்ற மருந்துக் கம்பெனிகள் முதலில் எலி களுக்கும் பின்னர் குரங்குகளுக்கும் புதிய மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டுபி பின்னர் மனிதர்களுக்கு, அவர்கள் அனுமதியுடன் சோ தனை முறையில் கொடுத்துப் பரீட்சித்துப் பார்கின்றனர். வெற்றி பெற்றால்தான் பின்னர் மருந்துக்கு கடைகளில் விற்கிறார்கள். இதற்கு அனுமதி தருவதற்கு பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன .
அந்தக் காலத்தில் இப்படி வசதிகள் இல்லாவிடினும் நம் முனிவர்களும் சித்தர்களும் பறவைகளையும் மிருகங்களையும் பார்த்தனர். மயில், கருடன், கீரி ஆகியன விஷப் பாம்பைக் கடித்துக் குதறிய பின்னரும் எப்படி உயிர் வாழ்கின்றன என்று கண்டனர்; அவை விசேஷ மூலிகைகளை உண்ணுவதைக் கண்டுபிடித்தனர். அதை நமக்கும் எழுதிவிட்டுப் பாடிவிட்டுச் சென்றனர். ரிக் வேத சூக்தம் ஒன்று 107 மூலிகைகள் என்று ஒரு எண்ணைக் குறிப்பிடுகிறது. துரதிருஷ்டவசமாக அந்த மூலிகைகளின் பட்டியலைக் கொடுக்கவில்லை. ஆனால் அதர்வண வேதத்தில் நிறைய மூலிகைகளின் பெயர்கள் வருகின்றன. அவற்றைத் தொகுத்துப் பிற்கால சரகர், சுஸ்ருதர் போன்றோரின் நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தல் அவசியம் .
பாம்பு- கீரி சண்டையில் , கீரி வெற்றி பெற அருகம்புல் எப்படி உதவுகிறது என்று ஏற்கனவே எழுதியுள்ளேன் (கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க)

அதர்வண வேத சூக்தம் ஒன்று பாம்பு, கீரி , காட்டுப் பன்றி ஆகியன எப்படி மூலிகைகளை கண்டு பிடிக்கின்றன என்று பாடியுள்ளார். இயற்கையை நன்கு கவனித்த அவர்கள் பல மூலிகைகளுக்கு கருட கிழங்கு போன்ற பெயர்களையும் சூட்டியுள்ளனர்.
xxx


அதர்வண எட்டாம் காண்டம் சூக்தம் 440 ல் உள்ள அதிசய விஷ்யங்களைக் காண்போம்

இந்த சூக்தத்தின் தலைப்பே ஒளஷதங்கள் !
இந்த துதியில் 28 மந்திரங்கள் உள்ளன.
28 மந்திர துதியில் ,23ஆவது மந்திரம்

“வராஹம் (பன்றி) செடியை அறியும் ; கீரி சிகிச்சைச் செடியை அறியும் ; கந்தர்வர்களும், சர்ப்பங்களும் அறியும் மூலிகைகளை நான், இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்”

24 ஆவது மந்திரம் “கருடன் அறியும் ஆங்கிரஸ ஒளஷதிகளையும் , சுபர்ணன் அறியும் தேவ சிகிச்சைகளையும் பறவைகள், ஹம்ஸங்கள் (அன்னம்), வன விலங்குகள் அறியும் அனைத்தையும் இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்” .
25 ஆவது மந்திரம் ,
“ஆடு மாடுகள் புசிக்கும் மூலிகைகளை துணைக்கு அழைக்கிறேன்” —
என்று சொல்வதிலிருந்து ரிஷி முனிவர் எந்த அளவுக்கு பறவைகள், மிருக்கங்களைக் கவனித்து இருக்கிறார்கள் என்பது புலப்படும்.
இது நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் காப்பதற்காக பாடப்பட்டது போலத் தோன்றினாலும் மூலிகைகைகளின் பெருமையையே அதிகமாகப் பேசுகிறது!
xxx


முதல் மந்திரத்தில் ரிஷி, பல வண்ண மூலிகைகளைச் செப்புகிறார்- பழுப்பு, சிவப்பு, பிங்களம் , அழகான , பிரகாசமான மூலிகைகள் – நல்ல பாசிட்டிவ் சொற்கள் Positive Words!
இரண்டாவது மந்திரம், வானத்தை மூலிகையின் தந்தை யாகவும் பூமியைத் தாயாகவும் கடலை (Samudra= Ocean) வேர் ROOT ஆகவும் பாடுகிறது

கடல் என்று வரும் இடம் எல்லாம் அதே நீல நிறம் கொண்ட ஆகாயம் என்று விமர்சகர்கள் சொல்லுகிறார்கள் ; ஆனால் உண்மையான கடல் ஆகவும் இருக்கலாம். ஆராய்வது அவசியம் .
சமுத்ரோ மூலம் = கடல் வேர்
மூன்றாவது மந்திரம், நீரே மருந்து (Water is Medicine) என்று புகழ்கிறது. தினமும் தண்ணீரைப் புகழ்ந்து மூன்று வேளைகளிலும் பிராமணர்கள சந்தியா வந்தனம் செய்கின்றனர். இன்று வரை நீரை அமிர்தம் என்று சொல்லி குடித்து காலை, மதியம் மலையில் கிரியை செய்கிறார்கள். சாப்பட்டைச் சுற்றி மந்திரம் சொல்லி இது அமிர்தமாகட்டும் என்று சாப்பிடுகிறார்கள். திருவள்ளுவரும் இதை அப்படியே அமிர்தம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைச் சொல்லிப் போற்றுகிறார் .
நாலாவது மந்திரம், மூலிகைகளின் தோற்றம் குணத்தைச் சொல்லி புகழ்கிறது
ஐந்தாவது மந்திரம், உங்கள் சக்தியால் நான் இவனைக் குணப்படுத்தப் போகிறேன் என்று அறிவிக்கிறது ; இன்றும் கூட டாக்டர்கள் கொடுக்கும் மருந்தைவிட அவர் சொல்லும் வாசகங்களையே நாம் நம்புகிறோம்; அவை நமக்கு நம்பிக்கை அளிக்கிறது அது போல இங்கும் டாக்டர் பாடுகிறார்.
ஆறாவது மந்திரம், தேன் மிகுந்த மலர்களை உடைய ‘அருந்ததி’ என்ற மூலிகையைக் குறிப்பிடுகிறது; இதன் அடிக்குறிப்பு இதை சிலாசி SILACHI என்ற பெயர் கொண்டபடரும் கொ டி வகைத் தாவரம் என்று சொல்லுகிறது. முந்திய துதிகளிலும் இது ப ற்றி வந் துள்ளது
முதல் முதலில் நாலாவது காண்டத்தில் ‘அருந்ததி’ பற்றி வருகிறது; இது உடைந்த எலும்பைக் குணப்படுத்த உதவக்கூடியது. இது கொடி வகைத் தாவரம் .ஆனால் என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று எழுதியுள்ளனர்

மந்திரம் 9-ல், அவகா AVAKAA என்ற தாவரம் பற்றிய குறிப்பு வருகிறது . இது சதுப்பு நிலத்தில் வளரும் புல் வகை. தாவரவியல் பெயர் ப்ளிக்ஸ்சா ஆக்டன்ட்ரா BLYXA OCTANDRA.
மந்திரம் 12, ஒரு தாவரத்தின் எல்லாப் பகுதிகளும் தேன் மயமானது என்று வருணிக்கிறது ;

மந்திரம் 13ல் ஆயிரம் இலைகளுள்ள தாவரம் என்னைக் காக்கட்டும் என்று சொல்லுவது பலவகை மூலிகைகள் பயன்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது .
TIGER AMULET
மந்திரம் 14, புலி தாயத்து பற்றியது (PLEASE READ MY ARTICLE POSTED EARLIER TODAY)
மந்திரம் 15, சிங்கத்தின் கர்ஜனையால் நோய்கள் நடுங்கும் என்பது ஒரு உவமை ஆகும். அடுத்த வரியே நோய்கள் மெழுகு போல கரையும் என்கிறது.

மந்திரம் 20, தர்ப்பைப் புல் , அஸ்வத்தம் என்னும் அரச மரம், தாவர அரசன் ஆன சோமம் ஆகியன பற்றிப் பாடுகிறது ; அரச மரக் குச்சிகளையும், தர்ப்பை புல்லையும் இன்று வரை பிராமணர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
28ஆவது மந்திரத்தை கற்பனை எண்கள் என்று வெளிநாட்டார் ஒதுக்கிவிட்டனர். அவர்களுக்கு அர்த்தம் தெரியாத எல்லா எண்களுக்கும் இப்படி கற்பனை எண்கள் (FANCIFUL NUMBERS) என்று முத்திரை குத்திவிட்டனர். 28ஆவது மந்திரம் ,
“பஞ்ச சரம், பத்து சரத்தினின்றும் நான் உன்னை விடுதலை செய்துள்ளேன். யமனது பாசத்தினின்றும், தேவர்களின் எல்லாக் குற்றத்தினின்றும் உன்னை நீக்கியுள்ளேன்” என்று முடிகிறது. ஏதோ ஒரு ஜுரத்தை இப்படி பத்து அம்பு, ஐந்து அம்பு என்று அழைக்கிறார்கள் என்று வியாக்கியானம் செய்வது சரியில்லை என்றே தோன்றுகிறது.
சரக , சுஸ்ருத சம்ஹிதைகளில் வல்லோர் அமர்ந்து ஆராய வேண்டிய விஷயம் இது. 90 நதிகள், 99 நதிகள் என்று வந்த இடங்களுக்கும் இப்படி கற்பனை எண்கள் என்று வெள்ளைக்காரர்கள் சொல்லுவார்கள். 101 என்ற எண்ணை மட்டும், வேதங்கள் துரதிருஷ்ட எண் என்று சொல்லுவதாக எழுதியுளளனர். அங்கு கற்பனை என்ற பதம் வரவில்லை !!!

XXX


MY OLD ARTICLES ON SAME THEME

அருகம்புல் ரகசியங்கள் | Tamil and Vedashttps://tamilandvedas.com › அரு…· Translate this page12 Jul 2013 — அருகம் புல் ரகசியங்களை இந்துக்கள் ஆதியிலேயே அறிந்திருந்தனர். நெல்லும் …You visited this page on 17/12/21.

வையாக்ரோ மணி | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page7 hours ago — வேங்கை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ… … Tamil children were given talismans made up of tiger nails or tiger ..

—subham—

tags- பிராணிகள், மூலிகை, கண்டுபிடிப்பு, அதர்வண வேதம், கீரி , பாம்பு, பன்றி

அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம் -2 (Post.10,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,398

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் ஒரு புலவர் நான்கே வரிகளில் 22 பிராணிகள், பொருட்களை பட்டியலிட்டு, அதிதி தேவியே எனக்கு  பலம் தருக என்று வேண்டியதைக் கண்டோம் . அவர் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்களின் சிறப்பு என்ன என்பதை நான் என் வியாக்கியா னத்தில் விளக்க முன்வந்தேன். இதோ மற்ற பொருட்களையும் , பிராணிகளையு ம்  புலவர் குறிப்பிட்ட தன் காரணம்  என்ன என்பதைக் காண்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம் , துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு –‘பலம்’

பட்டியல்  இதோ:

4.நெருப்பு

தீ (FIRE) என்பதை புகழ்ந்து வேதங்களில் ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் உள்ளன . பிராமணர்கள் வீட்டில் ஒரு காலத்தில் மூன்று யாக குண்டங்கள் இருந்தன என்று சங்கத் தமிழ் நூல்கள் சொல்லும் ; ‘முத்தீ அந்தணர்’ என்று சங்க நூல்கள் பிராமணர்களை புகழ்ந்து பாடும் . அதில் கார்ஹபத்யம் என்னும் அக்கினி அணையவே அணையாது. அதிலிருந்துதான் அவர்கள் யாக யக்ஞங்களுக்கு அக்கினி எடுப்பார்கள். ஒருவரின் இறுதிச் சடங்கின் போது அந்த அக்கினியால் சிதைக்கு தீ மூட்டுவர். அதற்கு முன்னர்  அவருடைய மகன், பேரக்குழந்தைகளுக்கு திருமணம் ஆகி இருந்தால் அதிலிருந்து அவர்களும் ஒரு சட்டிப்பானையில் ஒரு அக்கினி மூட்டி இருப்பர். இது அணையவே அணையாது. அதாவது பல நூறு தலைமுறைகளுக்கு வாழையடி வாழையாக அக்கினி தொடரும். மின்சார விளக்கும், தீப்பெட்டிகளும் இல்லாத காலத்தில் அடுப்பெரிக்கவும் இந்த அக்கினியே உதவியது. அது மட்டுமல்ல. பிராமணச்   சிறுவர்கள் தினமும் காலையில் அக்கினி மூட்டி ஸமிதாதானம் செய்கையில் எனக்கு ‘ஓஜஸ், தேஜஸ், வர்ச்சஸ் , மேதை போன்ற புத்தி’ தா என்று சொல்லி உடலில் பல இடங்களில் ஹோம சாம்பலை இட்டுக்கொண்டனர் . சுருக்கமாகச் சொல்லின் அக்கினி போல வாழ்வில் ஒளி நிரம்ப வேண்டினர்.

5.பிராமணன்

நெருப்புக்கு அடுத்தாற்போல் பிராமணனை வைத்திருப்பது சிறப்புடைத்து. ஏனெனில் பிராமணன், க்கும் சக்தி, அழிக்கும் சக்தி, இரண்டும் படைத்தவன் ; அகலாது அணுகாது தீக்காய்வார் போல அவர்களிடம் இருக்க வேண்டும். இதையே ஒரு தமிழ்ப் புலவர் ‘பழகினும் பார்ப்பாரை தீப்போல் ஒழுகு’ என்பார். எவரேனும் ஏதேனும் குற்றம் செய்தால் சபித்து விடுவார்கள்; அது பலித்துவிடும் ; நான் சொல்லுவது புத்தர் தம்ம பதத்தில் 26 ஆவது அதிகாரத்தில் சொல்லும் உண்மைப் பார்ப்பனரை ! பிராமணன் கொலை செய்தாலும் அரசனையே வீழ்த்தினாலும் அவனுக்கு தண்டனையை கிடையாது என்கிறார் புத்தர் தம்மபதத்தில்; இதையே மநுவும் செப்புவான். இது எல்லாம் ‘நடமாடும் தேவர்’= ‘பூசுரர்’ என்று ஸ்ம்ருதிகள் சொல்லும் உண்மைப் பார்ப்பனர் பற்றியது. சாணாக்கியன் போன்ற பலம் கொண்ட பார்ப்பனர் பற்றியது ; பிராமண விரோத நந்த வம்சத்தை வேரொடு பிடுங்கி எறியும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சாணக்கிய சபதம் செய்த பார்ப்பனனைப் போல பலம் தா! என்கிறார் புலவர்

(எச்சரிக்கை :– மது பான விடுதி , மாதர் கேளிக்கை விடுதி, மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடைக்குச் செல்லும் சென்னை பார்ப்பனர்களை ஒப்பிட்டு நொந்து போய் விடவேண்டாம்!)

6.சூரியன்

சூரியனைப் பற்றி அதிகம் எழுதத் தேவையே இல்லை ; அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் 12 முறை கீழே விழுந்து வணங்கி சூர்ய நமஸ்காரம் செய்ததால் கண் ஒளி கிடைத்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. மூன்று வருணத்தினர் பூணுல் அணிந்து, நாள் தோறும் 3 முறை சூரியனை வணங்கி காயத்ரீ மந்திரம் சொல்லி வணங் கினர் ; இதனால் எல்லோரும் மேதாவியாக இருந்தனர் . சூரியன் இருந்தால்தான் மழை பெய்யும்; தாவரங்கள் வளரும்; உணவு கிடைக்கும் ; கிருமிகள் அழியும் என்று வேத மந்திரங்களே விஞ்ஞான உண்மையையும் பேசுகின்றன .

7.யானை

யானையின் மகத்தான பலம் , நினைவு ஆற்றல் ஆகியன உலகப் பிரஸித்தம் . அது மட்டுமல்ல. “யானையால் யானையாத்தற்று” = ‘யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடி’ என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னதை வள்ளுவரும் குறளில் சொல்லுவதை காணலாம் .தமிழர்களின் ‘சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடி’ என்பதற்கு சமம் இது; கணபதியின் உருவத்தை யானையில் காண்பது இந்துக்களின் சிறப்பு

8.சிறுத்தை (Cheetah)

புலிக்கு உள்ள வீரம் சிறுத்தைக்கும் உண்டு. ஆயினும், புலியை விட சிறுத்தை ஒரு படி மேல்; இப்பொழுது ‘என்சைக்ளோபீடியா’, ‘கின்னஸ் புஸ்தக’த்தைத் திறந்து பார்த்தால் உலகிலேயே அதி வேகம் உடைய பிராணி சிறுத்தை என்பதை (Fastest Animal on Earth – Cheetah) அறிவோம். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர் இந்துக்கள். ஆகவே சிறுத்தை (Panther, leopard, Cheetah)  போல எனக்கு பலம் தா என்று அதிதி தேவியை வேண்டுகிறார் புலவர்/கவி/ ரிஷி/முனிவர்.

சிறுத்தைக்கு சீட்டா cheetah என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் . இதுவே சம்ஸ்க்ருத, அல்லது தமிழ் சொல்லின் அடிப்படையில் பிறந்தது போலும் ; சித்ரக அல்லது சீறுவது என்ற இரண்டு வேர்ச் சொல்லுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

9.தங்கம்

தங்கம் என்ற உலோகம் இல்லாத பழைய கலாசாரம் உலகில் இல்லை. மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த உலோகங்களில் ஒன்று இது ;  தங்க பஸ்பம் சாப்பிட்டு 100 ஆண்டு வாழும் முறையையும் மனிதன் கண்டான். பெண்களும்  அதை அணிந்து மகிழ்ந்தனர்; மற்றவர்களை மகிழ்வித்தனர். சுடச் சுடரும் ஒளிரும் பொன் போல என்பதிலிருந்து இதன் சிறப்பு விளங்கும். ஞானிகளைப் பொறுத்தவரையில் காமினி ,காஞ்சனம் (பெண்ணும், பொன்னும் ) எதிரிகள் என்பதை ராமகிருஷ்ண பரமஹம்சர் பல கதைகள் மூலம் விளக்குவார்; முனிவர்கள் ‘ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ என்று கீதையிலும் (6-8; 14-24)தாயுமானவர், சேக்கிழார் பாடல்களிலும் (பெரிய புராணம்) காண்கிறோம். ஆகவே தங்கமும் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது. அது வீட்டில் இருந்தால் பலம் (asset)  என்பதை அறிந்தே அதை பெண்களின் உடலிலும் பூட்டினர்.

10.தண்ணீர்

உலகில் தண்ணீரைப் போற்றும் மந்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு. தண்ணீரைப்  பற்றியும் அதன் அற்புத குணங்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான மந்திரங்கள் வேதங்களில் உள்ளன. தண்ணீரை ‘அமிர்தம்’ என்று வேதம் தொடர்ந்து புகழ்கிறது. அதை அப்படியே திருவள்ளுவரும் ‘அமிழ்தம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினால் பாடுகிறார். இந்துக்கள் பனி மூடிய இடங்களிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று சொல்லும் ஆட்களுக்கு ‘செமையடி, மிதியடி, தடாலடி’ கொடுக்கும் பாடல்கள் இவை. பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரே இனம் இந்துக்கள். நீரின்றி அமையாது உலகு என்ற வேதக் கொள்கையை அப்படியே வள்ளுவனும் சொன்னான். இன்றும் பிராமணர்கள், தினமும் மூன்று முறை தண்ணீரை வைத்து சந்தியாவந்தனம் செய்கின்றனர். வேதத்தில் உள்ள ஹோமியோபதி ஹைட்ரோதெரபி (Homeopathy and Hydrotherapy) பற்றி இதே ‘பிளாக்’கில் கட்டுரைகள் உள .

11. பசு

மனித இனத்துக்கு இந்துக்கள் கண்டுபிடித்துக் கொடுத்த மாபெரும் கண்டுபிடிப்புகள்:–

பசுமாடு, குதிரை, இரும்பு,  டெசிமல் சிஸ்டம் /தசாம்ச எண்கள் , யோகம், ஆயுர்வேதம்

இவை அனைத்துக்கும் சான்று உலகிலேயே பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் உளது. எகிப்திய, பாபிலோனிய,சீன, மாயா நாகரீகங்களில் அவை இல்லை. இருந்தாலும் போற்றும் அளவுக்கும் இல்லை; அவை போற்றப்படுவதும் இல்லை. கோ மாதாவும் பசும் பாலும் இந்துக்கள் உலகிற்கு அளித்த மாபெரும் கொடை

 12.ஆண்மகன்

ஆண்மை என்றால் என்ன, பெண்மை என்றால் என்ன என்பதை விளக்கத் தேவையே இல்லை. ரிக் வேதம் முழுதும் எனக்கு ‘வீர மகன்’ பிறக்க வேண்டும் என்று பாடுகின்றனர். இன்றும் உலகில் மிகப்பெரிய தொழில் ராணுவம் ஏன் ? வீர மகன்கள் இருந்தால்தான் நல்லோர் வாழ முடியும். போர் புரிய மறுத்த அர்ஜுனனை உன் ஆண்மையை இழந்து பேடியாக மாறிவிட்டாயா? என்கிறார் கிருஷ்ணன். ஆக, புலவர் 22 டாபிக் topics குகளில் ஆண் மகன் (புருஷன் = பெர்சன் person is derived from purusha என்ற சொல்லின் மூலம்) என்பதையும் சேர்த்தத்தில் வியப்பில்லை

13.ரதத்தின் அச்சு

‘உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்று வள்ளுவன் சொன்ன வாக்கு இந்த வேத மந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதே; ‘அச்சு’ என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல். அதிலிருந்து பிறந்ததே ஆக்சிஸ் Axis என்னும் English  சொல். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்ற வாமன அவதாரக் கதையை விளக்குவதே ‘அச்சு’ உவமை. ‘தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே’; சிலர் அமைதியாக இருந்து பெரும்பணி ஆற்றுவார்கள் என்பதே இதன் பொருள். பெரிய தேருக்கு –திருவாரூர்த் தேருக்கு அச்சு கழன்றால் என்ன ஆகும்? ஆக. அச்சு போல என்னை ஆக்கு என்கிறார் புலவர். அச்சு போன்ற பலம்!

,14.எருது

சிந்து சமவெளியில் அதிகம் காணப்படும் முத்திரை எருது (BULL) . வேதம் முழுவதும் இந்திரனை எருது, காளை என்றே புலவர்கள் பாடுகின்றனர். காட்டு மிருகங்களில் சிங்கம் எப்படியோ ப்படி நாட்டு மிருகங்களில் எருது. இதனால்தான் கிருஷ்ணர் காளை அடக்கியதை சங்கத் தமிழ் நூலான கலித்தொகை பாடுகிறது ; மஞ்சு விரட்டு ,ஜல்லிக்கட்டு என்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இது பாகவத புராணத்தில் உளது; யாதவ குல மக்கள் இன்று வரை நமக்கு காத்து அளிக்கின்றனர். ‘காளை போல பலம் தா’ என்று புலவர் பாடுவதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையா?

15.வாயு

வாயு வேகம், மனோ வேகம் என்பன  வேதம் முழுதும் வரும் உவமைகள். தமிழனும் இதே உவமையைக் கையாளுகிறான் புயற்காற்றைக் கண்டவர் களுக்கு இதன் பொருள் நன்கு புரியும் ; ஆக , காற்று போல பலம் தா என்பது ஒரு பொருள்; சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல (ஆக்சிஜன் ) நான் இருக்க வேண்டும் என்பது இன்னொரு பொருள்; ஏனெனில் பிராணாயாமம் என்னும் ஆயுளை அதிகரிக்கும் டெக்னீக்கைக் கண்டுபிடித்து நாம்தான்;  தினமும் அதை பிராமணர்களும் மூன்று வேளைகளில்  விதித்தது இந்து மதம்; அந்தக் காலத்தில் 3 வருணத்தாரும் செய்தது ‘சந்தியா வந்தனம்- பிராணாயாமம்’; இந்தக் காலத்தில் பிராமணர்களும் மறந்து வருவது கலியுகத்தின் தாக்கம். ‘மருத் தேவர்கள்’ பற்றிய பாடல்களில் மாருதியின் (காற்று தேவன்) புகழைக் காணலாம் .

16.மழை – .

மழையின் சிறப்பு, பலம், முக்கியத்துவத்தை வேதம், ‘பர்ஜன்யன்’, ‘மருத்’ பாடல்களில் வலியுறுத்துகிறது . வள்ளுவன், ‘வான் சிறப்பு’ என்ற பத்து குறள்களில் விளக்குகிறான். கபிலர் என்ற பிராமண புலவரோ அங்கதச் செய்யுளில்  .மழையை புகழ்கிறார் ; எல்லோரும் பாரி, பாரி என்று என் இப்படி பாரியையே பாடுகிறார்கள் ? உலகில் மாரியும் (மழை ) உளதே! என்பார்; ஆக, முனிவர் வேண்டுவது மழை போல சிறப்பு!

To be continued……………………………..

tags – அதர்வண வேதம், பிராணிகள் , பகுதி 2, பாடம்

அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம்-1 (10,396)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,396

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகத்தில் ஈசாப் (Aesop)என்னும் கிரேக்கநாட்டு அடிமை எகிப்தில் இருந்தபோது இந்துக்கள் சொன்ன கதைகளை பிராணிகள், பட்சிகள் பற்றிய சிறுவர் கதைப் புஸ்தகமாக (Animal Fables) வெளியிட்டதை நாம் அறிவோம். அதற்கு முன்னரே மஹாபாரதத்தில் புறாக்கள், ஒரு அகதிக்காக, தீயில் விழுந்து தியாகம் செய்த கதை மஹாபாரதத்தில் உள்ளது . தர்ம புத்திரன் செய்த யாகத்தில் பாதிப் பொன்னிறத் தோலுடைய கீரிப்பிள்ளை (Mongoose) வந்து எல்லோரையும் அசத்தியதையும் நாம் அறிவோம். இலங்காபுரி ‘கிரிமினல்’ ராவணனை ஒழிக்க ஒரு அணிலும் மண் போட்டு அணை கட்டியதை ஆழ்வார் பாடல் மூலம் நாம் அறிவோம்.  அந்த .ராமாயணத்தில் பல பறவைகள், கரடி, குரங்குகள் அணை கட்ட உதவியதையும் நாம் அறிவோம். சிபிச் சக்ரவர்த்தியின் புகழை உலகிற்கு நிலை நாட்ட இந்திரனும் அக்கினியும் கழுகு , புறா வடிவில் வந்த கதையை நாம் சங்க இலக்கிய புறநானுற்றிலும், பிற்கால சிலப்பதிகாரத்திலும் பயிலுகிறோம். மனு நீதிச் சோழனிடம் நீதி கேட்ட பசுவின் கதையையும் அறிவோம். ஊருக்கு ஊர் யானையும் பசுவும் பாம்புகளும் சம்பந்தப்பட்ட கோவில்கள் இருப்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால் இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது.

பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மகரிஷி பறவை, பாம்பு முதல் பரத்தை ( Prostitute)  வரையுள்ள ஒவ்வொருவரிடமும் தான் கற்ற பாடத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன . நான் இதுவரை சொன்ன எல்லா விஷயங்களும் இந்த ‘பிளாக்’கிலேயே பத்து ஆண்டுகளாக வந்துள்ளன. இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இன்று காண்போம்.

முதலில் இதில் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்கள் பட்டியலைப் பாருங்கள்; பின்னர் இதை ஒரு பள்ளிக்கூட மாணவனிடம் கொடுத்து ஒவ்வொரு விஷயம் பற்றியும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதுக  என்று சொல்லுங்கள். அதே நேரத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு பதிவு செய்துகொண்ட ஒரு இளைஞனிடம் ஒரு ஆராய்சசிப் புஸ்தகம் எழுதுக என்று சொல்லி 22 பேரிடம் கொடுங்கள். ஆனால் எல்லாம் இந்துமதம் சம்பந்தப்பட்ட சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து மட்டுமே, வேத இதிஹாச புராணங்களில் இருந்து மட்டுமே கதைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் . அதிசயப்படும் அளவுக்கு விஷயங்களைப் படிப்பீர்கள் .

பட்டியல்  இதோ:

சிங்கம் , புலி, பாம்பு, நெருப்பு,

பிராமணன், சூரியன், யானை, சிறுத்தை ,

தங்கம், தண்ணீர், பசு, ஆண்மகன்,

ரதத்தின் அச்சு, எருது, வாயு ,மழை

வருணன்  , அரச குமாரன், முரசு ,அம்பு,

குதிரை, மன்னன் சூளுரை 

இதில் சிலர் ரதம், அச்சு ஆகியவற்றை தனித்தனியேயும் பிரிப்பர். ஆயினும் 20க்கு மேலான விஷயங்களை சொல்லி அந்த பலம் அல்லது குணம், அல்லது புகழ் எனக்கு வரவேண்டும் என்று ஒரு ரிஷி பாடுகிறார்.

இதோ துதியும் அதிலுள்ள 4 மந்திரங்களும்

XXX

அதர்வண வேதம் ஆறாவது காண்டம்  துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு -பலம்

1.சிங்கம், புலி ,நெருப்பு, பாம்பு, பிராமணன், சூரியனில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

2.யானை, சிறுத்தை, பொன், புனல், பசு ,புருஷர்களில், எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

3.இரதம் , அச்சு, எருதின் பலம், வாயு, மழை  வருணனது  உக்கிரத்தில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

4.இராஜன்யன் துந்துபி சரம் அஸ்வ பலம் புருஷ கர்ஜனையில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

கருத்து- பலம், சக்தி ஆகியவற்றைப் பெற;

சுபகை யான தேவி – அதீதி

Xxx

எனது கருத்துக்கள்

முதலில் நாலு மந்திரங்களிலும் ‘பல்லவி’ (refrain) இருப்பதைக் காணுங்கள். ஆகையால் இது எல்லோரும் கூடி, கோஷ்டியாக (chorus)  பாடிய பாடல் என்று தெரிகிறது. அதாவது எழுத்து வடிவில் இலக்கியங்கள் வருவதற்கு முன்னர் இருந்த வாய் மொழி (oral literature)  இலக்கியம். அதர்வண வேதத்தை ‘தள்ளிப்போன, கோணல் பார்வை, காமாலைக் கண் உடைய’ வெள்ளைக்காரர்களும் கூட கி,மு 1000 என்று முத்திரை குத்தியுள்ளர். நாமோ கி.மு 3150ல் வியாசர் பிரித்த நாலு வேதத்தில் ஒன்று என்று நம்புகிறோம். எப்படியாகிலும் இப்படி 22 பொருட்கள் மூலம் பாடம் கற்பிப்பது உலகில், மனித வரலாற்றில் இதுவே முதல் தடவை .

இன்றும் கூட பஜனைப் பாடல்களிலும், கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிழும் ‘பல்லவி’ வருவதை பார்க்கிறோம்; வெள்ளைக்ககாரர்களுக்கு நோட்டு புஸ்தகம் இல்லாமல் பாட முடியாது. நம்மவரோ குரு -சிஷ்ய பாவத்தில் கற்றுக்கொண்டதை அப்படியே மனப்பாடமாக மேடையில் பாடுவதை இன்றும் காணலாம். அதாவது இது வாய் மொழி  இலக்கியம்

மேலும் சாதாரணமாக “எனக்கு  பலத்தைக் கொடு , புகழைக் கொடு , சக்தியைக் கொடு” என்று கேட்கும் பாடல்களும் வேதத்தில் நிறையவே உள்ளன. இந்தப் புலவர் மட்டும் சிங்கம், புலி, யானை, சிறுத்தை, தங்கம் தண்ணீர், குதிரை பசு தேர் என்றெல்லாம் பாடுகிறார் !!

மிக முக்கியமான விஷயம் வெள்ளைக்காரர்கள் (male chauvinists) ஆண் ஆதிக்க வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய மதங்களில் பெண்களுக்கு இடமே இல்லை. ஆனால் நாமோ பெரிய மனிதர்களைப் பெற்றெடுத்த தாயைத்தான் முதலில் வணங்குவோம். எல்லா கடவுளையும் பெ  றெடுத்த அதிதி தேவியை வணங்கும் பாடல் இது. உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதம் முழுதும் ‘கடவுளரின் தாய்’ என்று அதிதி பாடப்படுகிறாள் .

இன்னும் ஒரு விந்தை, பழங்கால எகிப்திய, கிரேக்க, பாபிலோனிய மதங்களில் இருந்த அன்னைத் தெய்வங்களை இப்பொழுது மியூசியங்களில் மட்டுமே காணலாம். ஆனால் ‘அதிதி’ பெயரை எங்கள் லண்டனில் உள்ள பெண்களிடமும் காணலாம். அதாவது இந்து மதம் பெண்களை வணங்கும்  மதம்; வாழும் மதம்!. அதிதியை மியூசியத்துக்கு அனுப்பாத மதம்!

இப்பொழுது ‘சப்ஜெக்’டுக்கு வருகிறேன் ; ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு சில எடுத்துக் காட்டுகளைத் தொட்டுக் காட்டுவேன் வள்ளுவர் காப்பி அடித்த தேர் ‘அச்சு’ உவமையும் பின்னே வருகிறது !

xxxx

சிங்கம் Lion

1.சிங்கம் – ஸ்வயமேவ ம்ருகேந்திரதா – என்பது ஸம்ஸ்க்ருதப் பழமொழி. ‘மிருகங்களின் இந்திரன் (ராஜா) நீயேதான்’ என்பது இதன் பொருள். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பது இந்துக்களின் கண்டுபிடிப்பு. சிம்மாசனம்= அரியணை என்பது நமது சொற்றொடர் . கேஸ் +அரி கேசரி= ‘மயிர் மிருகம்’ என்பதை ரோமானியர் சீசர் என்று பயன்படுத்தினர் (கே =சே சர் ). நான் ரோம் நகரிலுள்ள வத்திக்கான் மியூசியத்தில் கல்லாலான மிகப்பெரிய சிம்மாசனத்தைக் கண்டேன். ‘அரிமா நோக்கு’ என்பதும் ஸம்ஸ்க்ருதப் பழ மொழி . அப்படித் திரும்பி ஒரு கம்பீரமான LOOK ‘லுக்’ விடுமாம் !அது போல எனக்கு பலம் தா என்று புலவர் வேண்டுகிறார்.

xxx

புலி Tiger

புலியைப் பற்றி இந்துக்கள் பாடியது போல வேறு எவரும் பாடவில்லை . வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் “புலி போன்ற வீரம் உடைய சின்னப் பையா! ராமா! எழுந்திருடா! என்று விசுவாமித்திரர் பாடுகிறார்- உத்திஷ்ட ! ‘நர’ ‘சார்தூல’ = ஆண்களில் புலி போன்றவனே! எழுந்திரடா மகனே! என்பது பொருள். புறநானூற்றிலும் புலி , வலப்பக்கம் விழுந்த உணவை மட்டுமே சாப்பிடும் என்று புலவர்கள் பாடுகின்றனர் ( இது உண்மையா என்று இயற்கை சம்பந்தப்பட்ட டாக்குமெண்டரிகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்துவருகிறேன் ); புலியின் வீரத்தை உணர்ந்த இந்துக்கள் குழந்தைகளுக்கு ‘புலிப்பல் தாலி’ அணிவித்தனர். கடவுளருக்கு புலியை வாகனமாகக் கொடுத்தனர் . சிந்து வெளி முத்திரைகளில் புலி தேவதை டான்ஸ் (dancing tigress in Indus valley Seals )ஆடுவதையும் பார்க்கிறோம்.

xxx

பாம்பு Snake

பாம்பு பற்றி பத்து புஸ்தகம் எழுதும் அளவுக்கு இந்துமதத்தில், தல புராணங்களில் கதைகள் உள்ளன. நல்லதற்கும் பாம்பு; கெட்டதற்கும் பாம்பு உவமை வரும்; குண்டலினி சக்தியை எழுப்புவதைக் கூட பாம்பை சுருண்ட நிலையில் இருந்து எழுப்புவது என்ற உவமை மூலம் விளக்குவார்கள். அந்த பாம்பினை எழுப்பிவிட்டாலோ பத்து ‘பாபா’ அளவுக்கு அற்புதங்கள் செய்து காட்டலாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையில் கூட பாம்பினை நல்ல உதாரணத்துக்குப் பயன்படுத்துவார். காளீயன் போல ஒரு பாம்பு அட்டஹாசம் செய்துவந்தது  . ஒரு முனிவர் அதை ‘அடங்கி ந’ட என்று அதட்டினார். அதுவும் அப்படியே வாழ்ந்தது. அடுத்த முறை அதே முனிவர் அந்தப் பாம்பினைக் கண்டபோது அது குற்றுயிரும் கொலையுசிருமாக கிடந்தது. ஏ பாம்பே ! என்ன ஆயிற்று  உனக்கு? என்று வினவினார் முனிவர். “அட போங்க முனிவரே; எல்லாம் உம்மால் வந்ததுதான் ; நீங்கதான் ‘அ டங்கி இரு’ என்று சொன்னீங்க; இந்தப் பாவிப்பயங்க போற வரும்போதெல்லாம் என் மீது கற்களை வீசி அடிக்கிறாங்க”.

முனிவர் சொன்னார்- நான் உன்னை கடிக்காமல் அடங்கி இரு என்றுதான் சொன்னேன். உனது குணமான சீற்றத்தைக் காட்டி உன்னைப் பாதுகாத்துக்கொள்ளாதது உன் தவறு என்றார் முனிவர். ஆக பாம்பு போல எதிரிகளைப் பயமுறுத்தும் குணத்தை எனக்குத் தா என்கிறார் இந்த மந்திரத்தில் . அதுமட்டுமல்ல ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. ‘நல்லார் அவையில் புகுந்த பாம்பினைக் கூட நல்லோர் கொல்ல மாட்டார்கள்’ என்ற சங்க இலக்கியப்  பாடல் , ரிக் வேதத்தின் கடைசி மண்டலத்திலுள்ள ‘பாம்பு ராணி’ பற்றி எல்லாம் இந்த பிளாக்கில் ஏராளமான கட்டுரைகள் உள ; படித்து  மகிழ்க

To be continued…..

Tags-  அதர்வண வேதம்,         பிராணிகள், கற்பிக்கும் பாடம், 

அருகி வரும் அரிய உயிரினங்களைக் காப்போம்! (Post No.2689)

Sem-título-15

Written by S NAGARAJAN (for AIR talk)
Date: 3 April 2016

 

Post No. 2689

 

Time uploaded in London :–  11-33  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 endangered_animals72

 

அருகிவரும் – உயிரினங்களின் படங்கள்

 

சுறுசுறுப்பான தேனீக்களிலிருந்து மனிதரைப் பயப்பட வைக்கும் புலிகள் வரை பல்வேறு பூமி வாழ் உயிரினங்கள் வெகு வேகமாக அருகி வரும் உயிரினங்களில் பட்டியலில் சேருவது கவலை தரும் ஒரு விஷயம்!

பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என இப்படிப் பல்வேறு படைப்புகளைக் காப்பது மனிதனின் கடமை.

 

இவற்றைப் பற்றி முதலில் நன்கு அறிவது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். நமது பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய முழுச் செய்திகளையும் அறிதல் அவை எவ்வளவு இன்றியமையாதன் என்பதை நமக்குப் புரிய வைக்கும். தேசீய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றிற்கு ஒரு முறை சென்றாலேயே போதும், அவை பற்றிய செய்திகள் நம் உள்ளத்தைக் கவரும்.

 

நமது இல்லங்களை மிகவும் சுத்தமாக இருக்கும்படி செய்தால் பூச்சிகளின் தொல்லை இருக்காது, வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் தொந்தரவு இருக்காது.

 

உர வகைகளை அளவுக்கு மீறி நமது தோட்டங்களில் பயன்படுத்தும் போது உடனடிப் பலன்கள் ஏற்படுவது போலத் தோன்றினாலும் நீண்டகாலத் தொலைநோக்கில் பார்த்தால் அவை மண்ணின் வளத்தை அரிப்பவை என்பது தெரியவரும். இவை விலங்குகளையும் அழிக்கக் கூடியவை என்பதால் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தல் நலம்.

 

விலங்குகள் அதிகமுள்ள பகுதியில் வாகனங்களை ஓட்டுவோர் மெதுவாகவும் கவனமாகவும் வண்டியை ஓட்டுதல் வேண்டும். அதிவேக வாகனங்களால் அழிந்துபடும் விலங்குகள் அதிகம் என்பது கவலை அளிக்கும் ஒரு செய்தி.

         

மழைக்காடுகளை அழித்துச் செய்யப்படும் மரச் சாமான்களை வாங்க மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்து மரங்களை அழிப்பதை நிறுத்தினால் எதிர்கால சமுதாயம் வளம் பெற வழி வகுத்தவர்களாவோம்.

 

புதிய பொருள்களை வாங்கும் போது இவற்றால் அருகி வரும் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா எனப் பார்த்து வாங்குதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் அனைத்து உயிரினங்களின் தோழன் என்ற நிலையில் வாழ்ந்தால் உயிரினங்கள் அருகிப் போகாது. வளமுடன் செழித்து வாழும்.

 

-Subham-

 

பாரதி பாடலில் மிருகங்கள்!

bharati boat

Written by London swaminathan

Date : 10 September  2015

Post No. 2144

Time uploaded in London: –  காலை 8-38

சின்னஞ் சிறு குருவி போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

kuruvi

கொத்தித் திரியும் அந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு

இரக்கப்பட வேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா- அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

pasuvum kandrum, fb

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!

என்று பாடி, சின்னக் குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே அன்பை, அஹிம்சையைப் போதிக்கிறான். இப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொடுத்துவிட்டால் உலகம் முழுதும் அஹிம்சை, கொல்லாமை பரவும் என்பது அவ்னது கணிப்பு.

இயற்கையைப் பாடாத கவிஞன் இல்லை. நேரடியாக இயற்கையை ரசித்துப் பாடுவது ஒரு வகை. அந்த இயற்கை மூலம் மனிதன் கற்க வேண்டியது என்ன என்பதை உணர்த்தும்வகையில் பாடுவது இன்னொரு முறை. இந்த இரண்டு வகைப் பாடல்களையும் பாரதி பாடல்களில் காணலாம்.

ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டில் பிரணிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று போதிக்கும் பாரதி, காக்கைச் சிறகினிலே நந்த லாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்ற பாடலில் பெரிய தத்துவத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான்.

eagle-and-seagull

குயில் பாட்டு, குருவிப்பாட்டு, கிளிக்கண்ணி என்று அவன் பாடாதே பறவையே இல்லை. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே என்று பாடி ஆன்மீக விடுதலை, நாட்டு விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற எல்லா வகை விடுதலை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறான்.

ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்ற குரு கோவிந்த சிம்ம்ன் பாடல் வரிகள் மூலம் எதையும் சாதிக்கும் குணத்தை, பாஸிட்டிவ் வைப்ரேஷனைப் பரப்புகிறான்.

திட்ட வேண்டிய இடங்களில் நரியின் சிறுமைக் குணத்தைப் பாடுகிறான். நாயை ஒப்பிடுகிறான்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று ஏசுகிறான். சகுந்தலை பெற்ற பிள்ளை ஓர் சிங்கத்தினை தட்டி விளையாடி என்ற வரிகள்மூலம் இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரை ஈந்த பரதனைப் பாடுகிறான்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்று பாடி தாவர ஜங்கமப் பொருட்கள் அனைத்தும் நாமே—இறைவனின் வடிவமே – என்ற பகவத் கீதை விபூதி யோக கருத்துக்களை உரைக்கிறான்.

kakak close up

வேள்வித்தீ பாட்டில் காட்டில் மேயுங் காளை, வெங்கடேசு ரெட்டப்ப பூபதி பாட்டில் எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ? என்று இடபம் (ரிஷபம்=காளை), கிளிப்பாட்டில் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடீ – கிளியே – அன்புக்கு அழிவில்லை காண் என்ற உயர்ந்த கருத்துரை – இப்பை பட்டியல் நீளும்

குயில் பாட்டு என்று சிறிய கவிதை நூலே எழுதி குயிலுக்கு அழியாத இடம் தருகிறான்.

நரிவகுத்த வலையினிலே சிங்கம் நழுவி

விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;

Snakes-

வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் – என்று பாஞ்சாலி சபதம் பாடி விதியின் வலிமையைக் காட்டுகிறான்.

பக்தி எனும் பாட்டில் பொய்ப் பாம்பு மடியும் என்று பாம்பையும் பாடுகிறான்.ஜயபேரிகை பாட்டிலும் பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் என்று முழக்கம் இடுகிறான்.

அன்பு என்று வந்துவிட்டால் சந்யாசியைப் போல தின்ன வரும் புலியிடத்திலும் அன்பைக் காட்டசொல்கிறான்:-

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தயிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே என்பான்

கடலில் வாழும் முத்துச் சிப்பிகளும் , பவளமும் அவன் பாட்டில் இடம்பெறுகின்றன.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ – நன்னெஞ்சே – என்று பகைவனூகருள்வாய் பாட்டில் பாடுகிறான்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்………………….

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை

பேருக்கொரு நிறமாகும்

என்று பல வண்ணப் பூனைகளைச் சொல்லி

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை இல்லை

cats

என்ற அரிய- பெரிய நிற வேற்றுமை எதிர்ப்புக் கொள்கையை பிரசாரம் செய்கிறான். தென் ஆப்பிரிக்க மண்டேலாவுக்கும் முன்னதாக, ஐநா. சபைக்கும் முன்னதாக நிற வேற்றுமை எதிர்ப்புப் பிராசரத்தைப் பூணைகள் மூலம் விளக்கிவீட்டவன் பாரதி!

பாரதி பாடிய அளவுக்கு ஒரு கவிஞன் இத்தனை பறவைகள், மிருகங்களைப் பாடி ஒரு தத்துவத்தைக் கற்பித்து இருப்பானா என்பது சந்தேகமே. வால்மீகியும், காளிதாசனும் எத்தனையோ இயற்கை வருணனைகளில் எத்தனையோ பறவைகள், மிருகங்களைக் குறிப்பிடுகிறார்கள்; அவை எல்லாம் இயற்கை ரசனை. ஆனால் பாரதியோ ஒவ்வொன்றிலும் ஒரு குனத்தை, தத்துவத்தைக் காண்கிறான்!

முருகன் பாடல்களில் மான், மயில் ஆகியவற்றையும், விநாயகர் பால்களில் யானையையும் பாடத் தவறவில்லை.

mayil2yanai nama srirangam

பாரதி பாடிய எறும்பு முதல் யானை வரை, எலி முதல் – புலி வரை அத்தனை வைகலையும் ஆராய்ந்தால் அது பிஎச். டி. ஆய்வுரை போல ஆகிவிடும். பாரதியின் பரந்த மனப்பான்மையைத் தொட்டுக் காடுவதே இக்கட்டுரையின் நோக்கம். அது இனிதே நிறைவேறுக!

dog,monkey3

—சுபம்–