பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்) -Post No.10093

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,093

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)

அலெக்ஸாண்டர் தூமா(ஸ் ) ALEXANDRE DUMAS 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர். அவர் எழுதிய இரண்டு துணிகர நாவல்களைப் பலரும் படித்திருப்பார்கள் – த்ரீ மஸ்கிடீர்ஸ் THREE MUSKETEERS /மூன்று துப்பாக்கி வீரர்கள் ; THE COUNT OF MONTE CRISTO தி கவுன்ட் ஆப் மா ண்டி கிறிஸ்டோ

தூமா,  பிரான்ஸ் நாட்டில் கிராப்புறத்தில் பிறந்தார். தந்தை ஒரு ராணுவ அதிகாரி; தாய் சத்திரத்தை நடத்தும் ஒரு பெண்மணி.அவருடைய தந்தை நெப்போலியன் போனபர்ட் படையில் பணிபுரிந்தார். சண்டையில் உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி தூமா , தலைநகர் பாரிசுக்கு வந்தார். அப்போதுதான் எழுதத் துவங்கினார்.

27 வயதில் மூன்றாவது ஹென்றி Henry III என்ற வரலாற்று நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து, இடைவிடாது புதிய கதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதி வந்தார். எப்போதாவது ஒய்வு வேண்டுமென்றால் கிராப்புறத்திற்குச் சென்று ஓய்வு எடுப்பார்.

பிரான்ஸ் நாட்டின் முழு வரலாற்றையும் எழுத வேண்டும் எனது அவருடைய ஆசை. அதன் காரணமாக எழுந்ததுதான் முன்னர் குறிப்பிட்ட இரண்டு நாவல்கள் .

நாவல் , கதைகள் எழுதுவதில் எவ்வளவு வேகம் இருந்ததோ அவ்வளவு வேகம் செலவு செய்வதிலும் இருந்தது. இதனால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன்காரனானாகி விடுவார். மீண்டும் உழைத்து கடனை அடைப்பார்.

தூமாவுக்கும் அவருடைய காதலிக்கும் பிறந்த மகனின் பெயரும் அலெக்சாண்டர்தான் . அவரும் தந்தை போலவே நாவல் எழுதி புகழ் பெற்றார். அவர் எழுதிய கமீய் Camille என்ற சோகமான காதல்கதை அவரைப் புகழ் பெற வைத்தது. அது 1852-ம் ஆண்டிலேயே பிரான்சில் நடித்து காண்பிக்கப்பட்டது.

தூமா பிறந்த தேதி – ஜூலை 24, 1802

இறந்த தேதி – டிசம்பர் 5, 1870

வாழ்ந்த ஆண்டுகள் – 68

எழுதிய நாவல்கள், நாடகங்கள் –

1829 – HENRY III

1830- CHRISTINE

1831 – NAPOLEON BONAPARTE

1831 – ANTONY

1832 – THE TOWER OF NESLE

1836- KEAN

1844 – THE THREE MUSKETEERS

1844 – THE COUNT OF MONTE CRISTO

1845 – TWENTY YEARS AFTER

1850- THE BLACK TULIP

***

எனது பிளாக்கில் 2015 அக்டோபர் 9ம் தேதி எழுதியது இதோ:-

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–subham—

Tags –  பிரெஞ்சு, நாவல், ஆசிரியர், அலெக்ஸாண்டர் தூமா(ஸ்), Alexandre Dumas

இந்துக்களைப் புகழ்ந்த பிரெஞ்சு நாவல் ஆசிரியர் ரோமைன் ரோலண்ட் (Post. 9982)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9982

Date uploaded in London – 16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நோபல் பரிசு வென்றவர். பிரெஞ்ச் மொழி எழுத்தாளர். நாவல்களையும், நாடகங்களையும்  கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர். காந்திஜியின் நண்பர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரைப் போற்றி புஸ்தகம் எழுதியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமைன் ரோலண்ட் ROMAIN ROLLAND (பிரெஞ்ச் மொழியில் இதை உச்சரிக்கும் போது ரொமான் ரோலான்  என்ற ஒலியே வரும்); பிரான்ஸ் நாட்டின் அறிஞர்; ரஷ்யாவின் நண்பர் .

1915ம் ஆண்டில் ரொமான் லோனாவுக்கு / ரோமைன் ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் பலருடைய வாழ்க்கைச் சரிதங்களையும் இயற்றினார். அவருடைய நாவல்களின் தனிச் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனை பிறப்பு முதல் இறப்பு வரை — தொட்டில் முதல் சுடுகாடு வரை – காட்டுவதாகும்

பிரான்சில், க்ளமெசி CLAMECY  என்ற ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். பாரிசிலும் ரோம் நகரிலும் பயின்ற அவருக்கு 1895ல் டாக்டர் பட்டம் Ph.D. கிடைத்தது. பாரிஸ் நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ECOLE NORMALE 29 வயதிலேயே கலைகளின் வரலாறு கற்பிக்கும் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புகழ்பெற்ற சார்போன் SORBONNE பல்கலைக் கழகத்தில் வேலை கிடைத்தது.

வேலையில் இருக்கும்போதே நாடகங்களை எழுதத்  துவங்கினார் . பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவரெழுதிய நாடகங்கள் 1930ம் ஆண்டுகளில் புகழ்க் கொடி நாட்டின.

ரோமைன் ரோலண்ட் எழுதிய புகழ்பெற்ற புஸ்தகம் பல தொகுதிகளாக வெளிவந்த ஷான் கிறிஸ்டோப் JEAN CHRISTOPHE  ஆகும். அவர் ஷான் JEAN என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்த கதாபாத்திரம் ஒரு இசை மேதை மட்டும் அல்ல; அறநெறி வாழ்க்கை வாழும் ஒரு புனிதரும் கூட. அந்த நாவலுக்கு வரவேற்பும் எதிர்தரப்பு விமர்சனங்களும் வந்தன . அதே நேரத்தில் அவர் புகழ்பெற்ற இசை உலக மேதை பீதோவன் BEETHOVEN போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி பதிப்பித்ததார்.

‘புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்ற கருத்துப்பட ABOVE THE BATTLE ‘அபவ் தி பேட்டில்’ என்ற நூலை எழுதினார். இதற்கு முதல் உலகப் போர் காலத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது. ரோமைன் ரோலண்டை சமாதான தூதுவராக அனைவரும் கண்டனர். ஆனால் சொந்த நாடான பிரான்சில் அது எதிர்ப்புப் புயலையும் தோற்றுவித்தது.

பின்னர் மீண்டும் பல தொகுதிகளாக வெளிவரும் THE ENCHANTED SOUL ‘தி என்சான்டட் சோல்’ என்ற நாவலை எழுதினார். இது கம்யூனிச சித்ததந்தத்தின் மீது அதிக ஆர்வம்/ கவர்ச்சி  ஏற்படுவது பற்றிய நாவல். கதையில் ஒரு கதாநாயகி சுதந்திர சிந்தனை படைத்த பெண்மணி. அவருக்கு சொத்து உடைமைகளை வைத்துக் கொள்வதன் மீது வெறுப்பு வருகிறது.

இதற்குப் பின்னர் அவர் ஹிட்லர் தலைமையில் உருவான பாசிஸ கொள்கைகளை எதிர்த்தார். இரண்டாவது யுத்த காலத்தில் பாசிசத்தை எதிர்த்து எழுதினார். இவ்வாறு சமாதான ஆதரவு, பாசிஸ எதிர்ப்பு, ஆன்மீகத்துக்கு ஆதரவு என்ற பலவகை முகங்கள் அவருக்கு இருந்தன. இந்து  மதத்தின் பேரில் பெரு மதிப்பு கொண்டிருந்த அவர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் , அவருடைய சீடரான சுவாமி விவேகானந்தர்  மற்றும் மஹாத்மா காந்தி பற்றி நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். இதனால் அவருடைய பெயரும் புகழும் இந்தியாவிலும் பரவியது .

பிறந்த தேதி – ஜனவரி 29, 1866

இறந்த தேதி–டிசம்பர் 30, 1944

வாழ்ந்த ஆண்டுகள் – 78

எழுதிய நூல்கள் (நாவல் , நாடகம், வாழ்க்கை வரலாறு)

1900- DANTON

1902 – THE FORTEENTH OF JULY

1902 – LIFE OF BEETHOVEN

1904 – LIFE OF MICHELANGELO

1904- 1912 – JEAN CHRISTOPHE ; 10 VOLS

1910- HANDEL

1911 – LIFE OF TOLSTOY

1914-1919 – JOURNAL OF THE WAR YEARS

1915- ABOVE THE BATTLE

1922- 1933 – THE ENCHANTED SOUL; 6 VOLS

1924 – MAHATMA GANDHI

1929 – LIFE OF  RAMAKRISHNA; ESSAYS

1930-  LIFE OF VIVEKANANDA; ESSAYS

–SUBHAM–

 tags -இந்து, பிரெஞ்சு, நாவல் ஆசிரியர் , ரோமைன் ரோலண்ட் , Romain Rolland,