800 சம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் (Post No.6739)

sent by Lalgudi Veda

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 6 AUGUST 2019  


British Summer Time uploaded in London –17-
34

Post No. 6739

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

முன்னர் எழுதிய 3 கட்டுரைகளின் தொடர்ச்சி..

கோப்பெருஞ்சிங்கன்

பதிமூன்றாம் நூற்றாண்டு- பல்லவர் தலைவன் சோழ மன்னனைச் சிறைப்பிடித்தான். இவனே புலவர் என்று சொல்லும்படி இவனது பெயரில் சம்ஸ்க்ருதப் பகுதி அமைந்துள்ளது -வயலூர் (Vailur Inscription) கல்வெட்டு.

கங்காதர என்ற புலவர் தன்னுடைய குடும்பத்தின் புகழைப்பாடும் கல்வெட்டு ஆறு புலவர்களின் பெயரையும் அவர்கள் பணி செய்த மன்னர்களின் பெயர்களையும் கூறுகிறது.

மனோரதனின் புதலவர் கங்காதரன் மனோரதனை வியாசனுடன் ஒப்பிடுகிறார். நவ காளிதாசன் என்று புகழ்கிறார். அவருடாய பேரன் சக்ரபாணியை வால்மீகியுடன் ஒப்பிடுகிறார். அவார் தாமோதரனின் கொள்ளுப்பேரன்.

கங்காதரன்  மனைவி பெயர் தாசலாதேவி. அவள் ஜெயபாணியின் மகள். அவரோ கௌட மன்னனின் அதிகாரி. ஜெயபாணியின் மனைவி பெயர் சுபகா. கங்காதரன் ருத்ராமான என்னும் மன்னனின் ஆலோசகர்- நண்பரும்கூட. கோவிந்தபூர் கல்வெட்டுக் கவிதையை யாத்தவர் (கி.பி.1137). அவர் ஒரு குளம் வெட்டியது பற்றிய 39 செய்யுட்கள் இதில் உள.

சகத்வீபத்திலிருந்து (ஈரான் – மெசபொடோமியா பகுதி) சம்பா கொண்டுவந்த சூரிய தேவனிடம் தோன்றியதாகப் புகழ்ந்து கொள்ளுகிறார். அத்வைத சத என்னும் நூலை இயற்றியவர் இவராக இருக்கலாம். இப்படித் தன்னையும் தன் குடும்பத்தையும் புகழ்ந்து தள்ளுவதால் ஆறு புலவர்களின் பெயர்களும் அவர்களுடன் தொடர்புடைய மகத மன்னார் பெயர்களையும் அறிய முடிகிறது. இதோ அவர் வம்சாவளி

பாரத்வாஜ கோத்ரத்தில் உதித்த தாமோதரன்;

அவர் வழி வந்தவர் சக்ரபாணி (வால்மீகிக்கு நிகரானவராம்);

அவர் மகன் மனோரதன் (வியாசனுக்கு நிகரானவராம்).;

அவரது மகன்கள் கங்காதரன்  ,  மஹிதரன்;

அவ ருத்ரமானன் மன்னுடன் இருந்தவர்.

சக்ரபாணிக்கு மனோரதனுடன் பிறந்த சகோதரர் தசரதன்;

அவர் வரனமான என்னும் மன்னனிடம் பணியாற்றினார்;

தசரதனின் இரண்டு மகன்கள் ஹரிஹரன், புருஷோத்தமன்;

புருஷோத்தமன் வழி வந்தவ்Aர்கள் – ஆசாவரன் , அவர் மகன் அபிநந்தன்  அவர் மகன் ஹரிஹரன் – அவர் மகன் புருஷோத்தமன்

1205ம் ஆண்டில் ஸ்ரீதரதேவ தொகுத்த கவிதைத் தொகுப்பில் கங்காதரன் என்ற புலவர் பெயர் ஆறு இடங்களில் வருகிறது. அவர் இந்த கங்காதரனாக இருக்கலாம்.

இந்தக் கல்வெட்டில் காணப்படும் அத்தனை பேரிலும் கவிதைகளோ கல்வெட்டுகளோ இருப்பதாலும் அவர்கள் சம காலத்தவர் என்பதாலும் கங்காதரன் புகழ் பாடியது நியாயமே. நமக்கும் வரலாறும் கிடைத்தது. வம்சாவளியும் கிடைத்தது; மன்னர்களையும் நாம் அறிய முடிகிறது.

குணபத்ர

அவர் ஒரு சமண மஹாமுனி; ம்துரா சங்கத்தை சேர்ந்தவர்; சாகமான அரசன் சோமேஸ்வரனின் பிஜ்னோலி (ராஜஸ்தான்) கல்வெட்டுக் கவிதையை யாத்தவர். (கி.பி.1169).

சமண முனி பார்ஸ்வநாதருக்குக் கோவில் எழுப்பிய செய்தியைக் காணலாம். சிலேடைச் சொற்களுடன் கவிதை புனைந்திருப்பதால் இவர் சிறந்த புலவர் என்பது தெரிகிறது. சாகம்பரியின் சாகமான வம்சத்தின் 28 இளவரசர்களின் பெயர்களை அவர் பட்டியலிடுகிறார். அவருடைய பட்டம் கவி கந்த விபூஷண. இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டு.28 வரலாற்று நாயகர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வருகிறது!

TAGS- கல்வெட்டு, கவிஞர்கள், புலவர்கள், சம்ஸ்கிருத, பிராக்ருத

–மேலும் வரும்…………………………

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —