WRITTEN BY S NAGARAJAN Post No. 10,580 Date uploaded in London – – 20 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி!
ச.நாகராஜன்
பலபட்டடைச் சொக்கநாதர் சிறந்த மீனாக்ஷி பக்தர். அம்மனின் மீது எல்லையில்லா பக்தி கொண்ட அவர் மீனாக்ஷி அம்மனை தரிசித்தால் என்ன பேறு கிடைக்கும் என்பதை ஒரு பாடலில் தெரிவிக்கிறார் இப்படி:
ஒரே ஒரு தினம் மீனாக்ஷி சந்நிதி சென்று சேவை செய்தால் கூடப் போதும், எக்காலமும் சொர்க்க போகம் தான் என்று அறுதி இட்டு உறுதி கூறுகிறார் புலவர். பாடலின் பொருள்: மை – மேகம் போன்ற கார் – கருமை நிறமுள்ள குழல் – கூந்தலை உடைய பெண் வடிவாளை – பெண் உருவம் கொண்டவளை தென்னவன் மாமகளை – பாண்டியனின் சிறந்த மகளை அக்காளையோன் பங்கில் ஆத்தாளை – அந்த ரிஷப வாகனனாகிய சிவபிரானின் ஒரு பாகத்தில் உள்ள உலக மாதாவை மால் தங்கை ஆனவளை – திருமாலுக்குத் தங்கையானவளை திக்கார் தொழும் கயல் கண்ணாளை – திக்கிலுள்ளோர் அனைவரும் தொழும் மீன் போன்ற கண்களை உடையவளை ஓர் தினம் சேவை செய்தால் – ஒரே ஒரு தினம் சேவித்தால் எக்காலமும் – எந்தக் காலத்திலும் அவர் – அப்படிச் சேவித்தவர் சொர்க்காதி போகத்து இருப்பவரே – சொர்க்க முதலாகிய போக பூமிகளில் இருப்பவர் ஆவார். தேவியின் பெருமை, தேவியைத் துதிப்பதால் ஏற்படும் நற்பயன் ஆகியவற்றைச் சொல்லும் பலபட்டடைச் சொக்கநாதரின் பக்தியின் ஆழம் வெளிப்படும் பாடல்கள் இவை. மீனாக்ஷி அம்மனைத் துதிப்போம்; சொர்க்க போகம் அனுபவிப்போம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்காட்லாந்து தேசீய புலவர் (National Poet of Scotland) ராபர்ட் பர்ன்ஸ் (ROBERT BURNS)
ஒரு ஏழை விவசாயி கவிஞர் ஆன வரலாறு ஸ்காட்லாந்தில் இருக்கிறது. ராபர்ட் பர்ன்ஸ் என்பவர் ஸ்காட் மக்கள் வரலாற்றைப் போற்றி, அந்த பிரதேச மொழி வழக்கில் ( SCOTTISH DIALECT ) கவிதைகளை இயற்றியதால் அவர் ஸ்காட்லாந்தின் தேசீய கவிஞராகக் கருதப்படுகிறார்.
ஆங்கில கலாசாரம் ஸ்காட்லாந்துக்கே உரிய கலாசாரத்தை விழுங்கி ஏப்பம் விடக்கூடிய தருணத்தில் ஒரு ஏழை விவசாயியின் மகன் அந்த கலாசாரத்தைக் காப்பாற்றினார். ராபர்ட் பர்ன்ஸ் ஒரு ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். ஆயினும் அவருடைய தந்தை, தன் மகன்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தார். மேற்கு ஸ்காட்லாந்தில் அல்லோவே ALLOWAY என்னும் இடத்தில் ராபர்ட் பர்ன்ஸ் பிறந்தார்
ராபர்ட்டும் ROBERT அவருடைய சகோதரர் கில்பெர்ட்டும் GILBERT சேர்ந்து குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யத் துவங்கினர். ஆனால் அந்த நிலம் வளமான நிலம் இல்லாததால் விளைச்சல் இல்லை. தந்தை பாராத நேரத்தில் பல பெண்களையும் கவிதைகளையும் ராபர்ட் காதலித்தார். பல கவிதைகளை இயற்றியது போல பல குழந்தைகளையும் பெற்றெடுத்தார் பல பெண்கள் மூலம்!
பல காதலிகளில் ஒருவரான ஜீன் ஆர்மர் JEAN ARMOUR என்பவரைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் பெண்ணின் தாயும் தந்தையும் சம்மதிக்கவில்லை. அந்தக்காலத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களை அவர் கற்றபோதும் ஸ்காட்லாந்தின் வட்டார மொழியில் (Scottish dialect) கவிதைகளை எழுத அவர் துணிந்தார். அத்தோடு ஸ்காட்டிஷ் சர்ச்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
வட்டார ஆங்கில மொழி வழக்கில் அவர் எழுதியதை ஸ்காட்லாந்து மக்கள் வரவேற்றனர் . 27 வயதானபோது தான் எழுதியவற்றை POEMS ‘’கவிதைகள் என்ற தலைப்பில் புஸ்தகமாக வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் எடின்பரோ நகருக்குக் குடியேறினார் . அங்கு உயர்குல மக்களுடன் கலந்து பேசி மகிழ்ந்தார். இவர் பெயரும் புகழும் பெற்றவுடன் ஜீனின் பெற்றோர்கள் கல்யாணத்துக்கு பச்சைக் கொடி காட்டினார்கள் .
மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் பிறக்கவே முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக, வரி வசூல் அதிகாரி வேலை கிடைத்தது.
1784 முதல் 1786 வரையான காலத்தில் நீண்ட கவிதைகளை எழுதினார். பின்னர் கவிதைகளை விட்டுப் பாடல்களை எழுத ஆரம்பித்தார். சிவப்பு ரோஜா A RED, RED ROSE என்ற இவரது பாடல் மிகவும் பிரபலமானது நூற்றுக் கணக்கான பாடல்களை எழுதியதோடு பிறர் எழுதிய பாடல்களையும் திருத்தி(Edit) மேம்படுத்தினார். அவருடைய யாப்பிலக்கண கவிதைகளைவிட மெல்லிசைப் பாடல்களே அவருக்குப் புகழ் சேர்த்தது. அவருக்கு இருதய நோய் இருந்ததால் இளம் வயதிலேயே உயிர் துறந்தார். கல்யாணம் கட்டிய எட்டே ஆண்டுகளில் அவர் ஆவி பிரிந்தது.
Jean Armour Burns
ராபர்ட் பர்ன்ஸ்
பிறந்த தேதி – ஜனவரி 25, 1759
இறந்த தேதி – ஜூலை 21, 1796
வாழ்ந்த ஆண்டுகள் – 37
அவருடைய நூல்கள்-
1786 – POEMS , CHIEFLY IN THE SCOTTISH DIALECT
***
PUBLISHED AFTER HE DIED
1834-1886 – THE WORKS OF ROBERT BURNS
1938 – ROBERT BURN’S COMMONPLACE BOOK 1783-85
–SUBHAM–tags- ஸ்காட்லாந்து, தேசீய புலவர், ராபர்ட் பர்ன்ஸ் ,ROBERT BURNS,ஏழை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராதன கிரேக்க நாட்டின் புகழ்மிகு புலவர் பிண்டா (ர்) (PINDAR).
அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழப்பட்டார். அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பாராட்டப்பட்டார்.
பிண்டா (ர்), (THEBES) தீப்ஸ் என்னும் நகருக்கு அருகில் பிறந்தார். அவர் பிறந்த குடும்பம் பிரபுக்களின் குடும்பம். அவர்கள் பழங்கால புராணப் பெருமையுடைய குலத்தின் வழி வந்தவர்கள். நாம் பாண்டியர், சோழ மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று சொல்லிக்கொள்வது போல.
இளமைப் பருவத்தில் அவர் ஏதென்ஸ் மாநகரத்தில் சங்கீதம் பயின்றார்.ஒரு இசைப் போட்டியில் கோரின்னா (CORINNA) என்ற பெண்மணியிடம் அவர் தோற்றுப் போனார் . அவர், பிண்டாருடைய ஆசிரியர் என்றும் சொல்லுவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் தனி பாடகர் யாழ் ( LYRE) போன்ற இசைக்கருவியை வைத்துக் கொண்டு வாசிப்பார்கள். அல்லது ஒரு அணியாக நின்று கூட்டாகவும் (கோரஸ் CHORUS ) இசைப்பார்கள். பிண்டார், கோரஸ் பாடுவோருக்கு பாடல்களை எழுதினார். 20 வயது முதலே அவர் இவ்வாறு கீர்த்தனைகளை எழுதத் துவங்கினார் இவைகளை ஓட்ஸ் (Odes) என்று அழைப்பர். கிரேக்க மொழியில் (Ode= to sing) ‘பாடு’ என்று பொருள். இசையுடன் கூடிய உணர்ச்சிமிகு பாடல்கள் (Lyrics) அவை.
புராதன கிரேக்க நாட்டில் நான்கு விளையாட்டுப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. ஒலிம்பியன், நேமியன், பிதியன் , இஷ்த்மியன் என்பன அவை. கிரேக்க நாட்டின் எப்பகுதியில் வசித்தாலும் பங்கேற்கக்கூடியது ஒலிம்பிக் (Olympian) விளையாட்டுகள். இன்று நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளும் அதே பெயரைக் கொண்டனவாகும் பழங்கால ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பிண்டார் பாடினார். அவற்றுக்கு ட்ரயம்பல் ஓட்ஸ் / வெற்றி கீதங்கள்(Triumphal Odes) என்று பெயர்.
புலவரின் புகழ் கிரேக்க நாடு முழுதும் பரவவே, பல மன்னர்களும் பணக்கார குடும்பங்களும் எங்களையும் வாழ்த்திப் பாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்காக அவர் நீண்ட தொலைவு பயணம் செய்து நாட்டை வலம் வந்தார். சென்ற இடமெல்லாம் புகழ் மொண்டுவந்தார். அவருடைய பாடல்களைக் கேட்க ஆங்காங்கே மக்கள் காத்து நின்றனர்.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவருடைய 44 பாடல்கள் நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளன.
பிறந்த ஆண்டு- கி.மு.518
இறந்த ஆண்டு – கி.மு.438
வாழ்ந்த ஆண்டுகள் – 80
அவர் எழுதிய பாடல்கள்:-
FIFTH CENTURY BCE
TRIUMPHAL ODES – 44 IN TOTAL
xxx
SURVIVING FRAGMENTS
பல பாடல்கள் முழுமையாக இல்லை.
HYMNS
PAENS
CHORAL DITHYRAMBS
PROCESSIONAL SONGS
CHORAL SONGS FOR MAIDENS
CHORAL DANCE SONGS
LAUDATORY ODES
பிற்காலப் புலவர்களும் எழுத்தாளர்களும் இவருடைய கவிதைகளை மேற்கோள் காட்டியதால் நமக்குத் துண்டுக் கவிதைகள் கிடைத்தன. இன்னும் சில துண்டுகள், எகிப்தில் பேபைரஸ் (Papyrus) காகிதத் துண்டுகளில் கிடைத்தன.
xxxxx
தமிழர்கள், அவர்களுக்கும் முன்னால் , கவிதைகள் எழுதிப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத, கிரேக்க, எபிரேய (ஹீப்ரு), லத்தீன், சீன மொழிப் புலவர்கள் பற்றியும் அவர்களுடைய இலக்கியப்படைப்புகள் பற்றியும் அறிதல் வேண்டும் . பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்த்தல் வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் சொன்னார். இதுவரை நாம் மொழிபெயர்த்தது எள் அளவுக்கே உளது. அதுவும் பழைய கால மொழிபெயர்ப்புகள்; படிப்பதற்கு இனியனவாக இல்லை .
ஜம்புநாதன் , ரிக்வேதம் முதலிய 4 வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து அற்புதமான பணியைச் செய்தார். ஆனால் அது செம்மையான தமிழில் அமையவில்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை இன்னும் நாம் வரிக்கு வரி (Verbatim) அதே வேகத்தில் மொழிபெயர்க்கவில்லை. ஹோமரின் இலியட், ஆடிசி (ஒடிஸி ) ஆங்கியவற்றின் மொழிபெயர்ப்புகளும் கடனுக்குச் செய்த மொழிபெயர்ப்புகளாகவே உள .
பழங் காலத்தை விட்டு, 100, 200 ஆண்டுகளுக்கு முன் பார்த்தால் பல்லாயிரம் பல்லாயிரம் நூல்கள் மொழி பெயர்க்கப்படாமல் உள்ளன . இவற்றுக்காக தனித்துறை அமைத்து மொழிபெயர்க்கும் தனியார்களை அரசு ஊக்குவிக்கவேண்டும் ; இதைப் பல்கலைக்கழகங்களிடையே விடக் கூடாது. அவர்கள் மெத்த காசு வாங்கிக்கொண்டு, ஒரு நாளைக்கு பத்து வரிகள் மொழிபெயர்ப்பார்கள். அதுவும் ‘எழவுத் தமிழில்’ இருக்கும். படிக்கும் நடையில் இராது. தனியார் செய்த மொழி பெயர்ப்புக்களுக்கு அரசு உதவி அளித்தல் நல்லது .
புகழ்பெற்ற பிரெஞ்சு , லத்தீன் , ஜெர்மானிய, ஆங்கில நூல்களை முதலில் மொழிபெயர்த்தல் வேண்டும். அம் மொழி ஆசிரியர்கள் எழுதிய கடிதங்களையும், சொன்ன பொன்மொழிகளையும் மொழிபெயர்த்தாலே பல்லாயிரம் பக்கங்களுக்கு வரும். கதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்தால் கோடிக் கணக்கான பக்கங்களுக்கு வந்துவிடும்!!!
புலவர் போற்றிய நாணில் பெருமரம்- அகம்.273 அவ்வையார்
‘புலவர்கள் புகழ்ந்த நாணம்’ இல்லாமற் போயிற்று
ஜனவரி 28 திங்கட் கிழமை
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர- மருதன் இளநாகன், மருதக்கலி, கலித்தொகை பாடல் 68
அறிவுரை வழங்கும் அமைச்சர் போல, செந்தமிழ் என்னும் பழைய மொழியால், நாக்கு என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவர் சொன்ன சொற்கள் பாண்டிய மன்னனின் செவி என்னும் நிலத்திற்குப் பாய்ச்சிய நீர் ஆகும்; புலவர்களுடைய புதிய கவிதைகளை கேட்டு உண்ணும் (மகிழும்) நீர் சூழ்ந்த மதுரை நகரத்தை உடையன் அவனே!
ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்- புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்
புலவர்கள் படும் அளவுக்கு புகழ்பெற்றவர்கள், பைலட்/விமானி இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் செல்லுவர்; அவர்கள் ‘செய்யவேண்டிய செயல்களை எல்லாம் செய்து முடித்தவர்கள்’ என்று சான்றோர் கூறுவர்
ஜனவரி 30 புதன் கிழமை
கவீனாம் உசனா கவிஹி (பகவத் கீதை 10-37)
‘முக்காலமும் உணர்ந்த கவிகளுள் நான் உசனா கவி’ (கண்ணன் கூறியது).
ஜனவரி 31 வியாழக்கிழமை
‘அருஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்’– அவ்வையார், புறம்.235
Tags- ஜனவரி 2019 காலண்டர், கவிஞர், கவிகள், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
13-9-20̀17 அன்று வெளியான கட்டுரை எண் 4207இல் கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடலை இயற்றிய நமச்சிவாயப் புலவரைப் பற்றிப் பார்த்தோம். அவரது இன்னொரு பாடல்!
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
“இனியவை நாற்பது” நூலிலிருந்து – முக்கிய 30 இனிமையான பொன்மொழிகள்
முகூர்த்த நாட்கள்:- 8, 9, 16, 23, 26
அமாவாசை:- 5
பௌர்ணமி:- 20
ஏகாதசி:- 1,16
ஜூன் 1 புதன் கிழமை
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே (முக்கண் உடைய சிவபெருமானின் பாதகமலங்களை இடையறாது சிந்தித்தல் இனிமையானது)
ஜூன் 2 வியாழக் கிழமை
பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே (வங்கியில் கடன் வாங்கியாவது படி)
ஜூன் 3 வெள்ளிக் கிழமை
உடையான் வழக்கு இனிது ( செல்வம் உடையவர்கள், அதை வறியவர்க்கு அளித்தல் இனிது)
ஜூன் 4 சனிக் கிழமை
ஏர் உடையான் வேளாண்மை தான் இனிது
ஜூன் 5 ஞாயிற்றுக் கிழமை.
ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே (வெஜிட்டேரியன்ஸ் – வாழ்க)
ஜூன் 6 திங்கட் கிழமை
கோல்கோடி மாராயம் செய்யாமை முன் இனிது (நடுவு நிலைமை தவறி பாராட்டி பரிசு வழங்காதிருத்தல் இனிது)
ஜூன் 7 செவ்வாய்க் கிழமை
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே (சான்றோரின் நல்ல மொழிகளைக் கேட்பது இனிது)
ஜூன் 8 புதன் கிழமை
அந்தணர் ஒத்து உடைமை ஆற்ற மிக இனிதே (அந்தணர்கள், வேதங்களை மறவாது ஓதுதல் இனிது)
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே (வேதம் ஓதும் பார்ப்பனர்க்கு பசுவையும் தங்கக் காசுகளையும் தானம் செய்; உன் குலம் செழிக்கும்; ஊர் தழைக்கும்)
ஜூன் 9 வியாழக் கிழமை
ஊரும் கலிமா உரன் உடைமை முன் இனிதே (நீ செல்லும் குதிரை வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்; அதாவது காரில் செல்லும் முன் அதில் பெட்ரோல், டயரில் காற்று முதலியவற்றை சரி பார்)
ஜூன் 10 வெள்ளிக் கிழமை
அங்கண் விசும்பில் அகல்நிலாக் காண்பு இனிதே (ஆயிரம் பிறை காண்; அதாவது 100 ஆண்டு வாழ்)
ஜூன் 11 சனிக் கிழமை
கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே ( கடன் வாங்கிச் சாப்பிடாமல் வாழ்வது இனிது)
ஜூன் 12 ஞாயிற்றுக் கிழமை.
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே ( பழைய உரைகாரர் எழுதியதை விட்டுவிட்டு, நூல்களுக்கு குதர்க்கமான பொருள் காணாமை இனிது)
ஜூன் 13 திங்கட் கிழமை
கிளைஞர் மாட்டு அச்சு இனிமை கேட்டல் இனிதே ( சுற்றத்தார் சுகமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இனிமையானது)
ஜூன் 14 செவ்வாய்க் கிழமை
தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே (தன் கையே தனக்குதவி; சோம்பேறித் தனமில்லாமல், மற்றவர்களை ஏவாமல், அவரவர் காரியத்தை அவரவர் செய்தல் இனிது)
ஜூன் 15 புதன் கிழமை
குழவி தளர் நடை காண்டல் இனிதே;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (குழவி=குழந்தை)
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (குழந்தைகள் நோயில்லாமல் வாழ வகை செய்ய வேண்டும்; அதுவே இனிது)
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே ( நன்கு படித்தவர் அறையில் அமர்ந்து நல்ல விஷயங்களை விவாதி; அப்பொழுது நீ படித்த விஷயங்களைச் சொல்லி, மகிழவைப்பது இனிது)
ஜூன் 18 சனிக் கிழமை
நட்டார்க்கு நல்ல செயல் இனிது (நண்பர்களுக்கு நல்ல உதவி செய்)
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே ( வேண்டியவர்க்கு சலுகை காட்டாத நடு நிலை இனிது)
ஜூன் 24 வெள்ளிக் கிழமை
காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே (மரத்தை வளர்; சோலைகளை உருவாக்கு; குளங்களை உருவாக்கு; கோவில்களில் இவையிருந்தால் அதைப் பாதுகார்)
ஜூன் 25 சனிக் கிழமை
எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே (இரவு நேரத்தில் துணையில்லாமல் செல்லாதே)
ஜூன் 26 ஞாயிற்றுக் கிழமை.
நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பு இனிதே ( உன்னிடம் ஒரு பொருளை நாடி வந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றல் இனிது)
ஜூன் 27 திங்கட் கிழமை
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே ( ஒரு காரியத்தைச் செய்ய இயலாதவனிடம் போய், இதைச் செய், இதைச் செய் என்று நச்சரித்து, உன் சக்தியை எல்லாம் வீணடிக்காமல் இருப்பது இனிது)
ஜூன் 28 செவ்வாய்க் கிழமை
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே (உயர்ந்த குறிக்கோளை முன் வை; ஊக்கத்துடன் அதை அடை; உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராப்யவான் நிபோதத)
ஜூன் 29 புதன் கிழமை
மன்றம் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே ( பொது மன்றத்தில் ஏறிப் பொய் சாட்சி சொல்லாதே; அ ந்தப் பாவம் உன்னை சும்மா விடாது)
ஜூன் 30 வியாழக் கிழமை
பத்துக் கொடுத்தும் பதி இருந்து வாழ்வது இனிதே ( பத்துப் பொருட்களைக் கொடுத்தாவது, சொந்த ஊரில் சுற்றத்தாருடன் வாழ்வதே இனிது).
You must be logged in to post a comment.