மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி! (Post No.10,580)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,580
Date uploaded in London – – 20 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி!

ச.நாகராஜன்

பலபட்டடைச் சொக்கநாதர் சிறந்த மீனாக்ஷி பக்தர். அம்மனின் மீது எல்லையில்லா பக்தி கொண்ட அவர் மீனாக்ஷி அம்மனை தரிசித்தால் என்ன பேறு கிடைக்கும் என்பதை ஒரு பாடலில் தெரிவிக்கிறார் இப்படி:

முக்கட் பராபரை சொக்கப் பிரானெனு முன்னவனோ
டொக்கச் சிறந்த கயற்கண்ணி சந்நிதி யுற்றுமிகச்
செக்கச் சிவந்தபொற் றாமரைப் பாததெரிசனைக்கே
பக்கத் தடுத்தவர் சொர்க்கத் தினை யெட்டிப் பார்ப்பவரே

இதன் பொருள் : முக்கண் பராபரை – மூன்று கண்களையுடைய பராபரை (ஆகிய மீனாக்ஷி அம்மன்)
சொக்கப்ப்பிரான் எனும் முன்னவனோடு ஒக்க – சொக்கநாதன் என்னும் முதல்வனோடு சமமாக
சிறந்த – மேன்மை அடைந்திருக்கின்ற
கயல்கண்ணி = மீனாக்ஷியம்மையின் (அவளது)
சந்நிதி உற்று – சந்நிதிக்குச் சென்று
மிகச் செக்கச் சிவந்த – மிகுந்து செக்கச் செவேலென்று சிவப்பாக இருக்கும்
பொன் தாம்ரை – பொற்றாமரை போன்ற
பாதம் – திருவடிகளின்
தெரிசனைக்கும் – தரிசனம் செய்யும் பொருட்டு
பக்கத்து அடுத்தவர் – (அங்கு வந்து) பக்கத்து அடுத்தவர்
சொர்க்கத்தினை எட்டி பார்ப்பவர் – சொர்க்க லோகத்தை எட்டிப் பார்ப்பவராவர்!

இன்னொரு பாடலால் தன் கருத்தை வலியுறுத்துகிறார் புலவர்.

மைக்கார் குழற்பெண் வடிவாளைத் தென்னவன் மாமகளை
அக்காளை யோன் பங்கிலாத் தாளை மாறங்கை யானவளைத்
திக்கார் தொழுங்கயற் கண்ணாளை ஓர்தினஞ் சேவை செய்தால்
எக்காலமு மவர் சொர்க்காதி போகத் திருப்பவரே

ஒரே ஒரு தினம் மீனாக்ஷி சந்நிதி சென்று சேவை செய்தால் கூடப் போதும், எக்காலமும் சொர்க்க போகம் தான் என்று அறுதி இட்டு உறுதி கூறுகிறார் புலவர்.
பாடலின் பொருள்:
மை – மேகம் போன்ற
கார் – கருமை நிறமுள்ள
குழல் – கூந்தலை உடைய
பெண் வடிவாளை – பெண் உருவம் கொண்டவளை
தென்னவன் மாமகளை – பாண்டியனின் சிறந்த மகளை
அக்காளையோன் பங்கில் ஆத்தாளை – அந்த ரிஷப வாகனனாகிய சிவபிரானின் ஒரு பாகத்தில் உள்ள உலக மாதாவை
மால் தங்கை ஆனவளை – திருமாலுக்குத் தங்கையானவளை
திக்கார் தொழும் கயல் கண்ணாளை – திக்கிலுள்ளோர் அனைவரும் தொழும் மீன் போன்ற கண்களை உடையவளை
ஓர் தினம் சேவை செய்தால் – ஒரே ஒரு தினம் சேவித்தால்
எக்காலமும் – எந்தக் காலத்திலும்
அவர் – அப்படிச் சேவித்தவர்
சொர்க்காதி போகத்து இருப்பவரே – சொர்க்க முதலாகிய போக பூமிகளில் இருப்பவர் ஆவார்.
தேவியின் பெருமை, தேவியைத் துதிப்பதால் ஏற்படும் நற்பயன் ஆகியவற்றைச் சொல்லும் பலபட்டடைச் சொக்கநாதரின் பக்தியின் ஆழம் வெளிப்படும் பாடல்கள் இவை.
மீனாக்ஷி அம்மனைத் துதிப்போம்; சொர்க்க போகம் அனுபவிப்போம்!

tags – பலபட்டடைச் சொக்கநாதர், புலவர், பக்தர், மீனாக்ஷி


ஏழை விவசாயி புலவர் ஆன கதை: ராபர்ட் பர்ன்ஸ் (Post No.10076)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,076

Date uploaded in London – 10 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்காட்லாந்து தேசீய புலவர் (National Poet of Scotland)  ராபர்ட் பர்ன்ஸ் (ROBERT BURNS)

ஒரு ஏழை விவசாயி கவிஞர் ஆன வரலாறு ஸ்காட்லாந்தில் இருக்கிறது. ராபர்ட் பர்ன்ஸ் என்பவர் ஸ்காட் மக்கள் வரலாற்றைப் போற்றி, அந்த பிரதேச மொழி வழக்கில் ( SCOTTISH DIALECT ) கவிதைகளை இயற்றியதால் அவர் ஸ்காட்லாந்தின் தேசீய கவிஞராகக் கருதப்படுகிறார்.

ஆங்கில கலாசாரம் ஸ்காட்லாந்துக்கே உரிய கலாசாரத்தை விழுங்கி ஏப்பம் விடக்கூடிய தருணத்தில் ஒரு ஏழை விவசாயியின் மகன் அந்த கலாசாரத்தைக் காப்பாற்றினார். ராபர்ட் பர்ன்ஸ் ஒரு ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். ஆயினும் அவருடைய தந்தை, தன் மகன்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தார். மேற்கு ஸ்காட்லாந்தில் அல்லோவே ALLOWAY என்னும் இடத்தில் ராபர்ட் பர்ன்ஸ் பிறந்தார்

ராபர்ட்டும் ROBERT அவருடைய சகோதரர் கில்பெர்ட்டும் GILBERT  சேர்ந்து குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யத் துவங்கினர். ஆனால் அந்த நிலம் வளமான நிலம் இல்லாததால் விளைச்சல் இல்லை. தந்தை பாராத நேரத்தில் பல பெண்களையும்  கவிதைகளையும் ராபர்ட் காதலித்தார். பல கவிதைகளை இயற்றியது போல பல குழந்தைகளையும் பெற்றெடுத்தார் பல பெண்கள் மூலம்!

பல காதலிகளில் ஒருவரான ஜீன் ஆர்மர் JEAN ARMOUR  என்பவரைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் பெண்ணின்  தாயும் தந்தையும் சம்மதிக்கவில்லை. அந்தக்காலத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களை அவர் கற்றபோதும் ஸ்காட்லாந்தின் வட்டார மொழியில் (Scottish dialect) கவிதைகளை எழுத அவர் துணிந்தார். அத்தோடு ஸ்காட்டிஷ் சர்ச்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

வட்டார ஆங்கில மொழி வழக்கில் அவர் எழுதியதை ஸ்காட்லாந்து மக்கள் வரவேற்றனர் . 27 வயதானபோது தான் எழுதியவற்றை POEMS ‘’கவிதைகள் என்ற தலைப்பில் புஸ்தகமாக வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் எடின்பரோ நகருக்குக் குடியேறினார் . அங்கு உயர்குல மக்களுடன் கலந்து பேசி மகிழ்ந்தார். இவர் பெயரும் புகழும் பெற்றவுடன் ஜீனின் பெற்றோர்கள் கல்யாணத்துக்கு பச்சைக் கொடி காட்டினார்கள் .

மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் பிறக்கவே முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை.

அதிர்ஷ்டவசமாக, வரி வசூல் அதிகாரி வேலை கிடைத்தது.

1784 முதல் 1786 வரையான காலத்தில் நீண்ட கவிதைகளை எழுதினார். பின்னர் கவிதைகளை விட்டுப் பாடல்களை எழுத ஆரம்பித்தார். சிவப்பு ரோஜா A RED, RED ROSE என்ற இவரது பாடல் மிகவும் பிரபலமானது நூற்றுக் கணக்கான பாடல்களை எழுதியதோடு பிறர் எழுதிய பாடல்களையும் திருத்தி(Edit) மேம்படுத்தினார். அவருடைய யாப்பிலக்கண கவிதைகளைவிட மெல்லிசைப் பாடல்களே அவருக்குப் புகழ் சேர்த்தது. அவருக்கு இருதய நோய் இருந்ததால் இளம் வயதிலேயே உயிர் துறந்தார். கல்யாணம் கட்டிய எட்டே ஆண்டுகளில் அவர் ஆவி பிரிந்தது.

Jean Armour Burns

ராபர்ட் பர்ன்ஸ்

பிறந்த தேதி – ஜனவரி 251759

இறந்த தேதி – ஜூலை 211796

வாழ்ந்த ஆண்டுகள் – 37

அவருடைய நூல்கள்-

1786 – POEMS , CHIEFLY IN THE SCOTTISH DIALECT

***

PUBLISHED AFTER HE DIED

1834-1886 – THE WORKS OF ROBERT BURNS

1938 – ROBERT BURN’S COMMONPLACE BOOK 1783-85

–SUBHAM–tags- ஸ்காட்லாந்து, தேசீய புலவர்,   ராபர்ட் பர்ன்ஸ் ,ROBERT BURNS,ஏழை

 விவசாயி, புலவர்

கிரேக்க நாட்டுப் புலவர் பிண்டார் (கி.மு.2500) Post No.9914

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9914

Date uploaded in London –31 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராதன கிரேக்க நாட்டின் புகழ்மிகு புலவர் பிண்டா (ர்) (PINDAR).

அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழப்பட்டார். அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பாராட்டப்பட்டார்.

பிண்டா (ர்),  (THEBES) தீப்ஸ் என்னும் நகருக்கு அருகில் பிறந்தார். அவர் பிறந்த குடும்பம் பிரபுக்களின் குடும்பம். அவர்கள் பழங்கால புராணப் பெருமையுடைய குலத்தின்  வழி  வந்தவர்கள். நாம் பாண்டியர், சோழ மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று  சொல்லிக்கொள்வது போல.

இளமைப் பருவத்தில் அவர் ஏதென்ஸ் மாநகரத்தில் சங்கீதம் பயின்றார்.ஒரு இசைப் போட்டியில் கோரின்னா (CORINNA) என்ற பெண்மணியிடம் அவர் தோற்றுப் போனார் . அவர், பிண்டாருடைய ஆசிரியர் என்றும் சொல்லுவர்.

அவர் வாழ்ந்த காலத்தில் தனி பாடகர் யாழ் ( LYRE)  போன்ற இசைக்கருவியை வைத்துக் கொண்டு வாசிப்பார்கள். அல்லது ஒரு அணியாக நின்று கூட்டாகவும் (கோரஸ் CHORUS ) இசைப்பார்கள். பிண்டார், கோரஸ் பாடுவோருக்கு பாடல்களை எழுதினார். 20 வயது முதலே அவர் இவ்வாறு கீர்த்தனைகளை எழுதத் துவங்கினார்  இவைகளை ஓட்ஸ் (Odes) என்று அழைப்பர். கிரேக்க மொழியில் (Ode= to sing) ‘பாடு’ என்று பொருள். இசையுடன் கூடிய உணர்ச்சிமிகு பாடல்கள் (Lyrics) அவை.

புராதன கிரேக்க நாட்டில் நான்கு விளையாட்டுப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. ஒலிம்பியன், நேமியன், பிதியன் , இஷ்த்மியன் என்பன அவை. கிரேக்க நாட்டின் எப்பகுதியில் வசித்தாலும் பங்கேற்கக்கூடியது ஒலிம்பிக் (Olympian) விளையாட்டுகள். இன்று நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளும் அதே பெயரைக் கொண்டனவாகும்  பழங்கால ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற  விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பிண்டார் பாடினார். அவற்றுக்கு ட்ரயம்பல் ஓட்ஸ் / வெற்றி கீதங்கள்(Triumphal Odes) என்று பெயர்.

புலவரின் புகழ் கிரேக்க நாடு முழுதும் பரவவே, பல மன்னர்களும் பணக்கார குடும்பங்களும் எங்களையும் வாழ்த்திப் பாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்காக அவர் நீண்ட தொலைவு பயணம் செய்து நாட்டை வலம் வந்தார். சென்ற இடமெல்லாம் புகழ் மொண்டுவந்தார். அவருடைய பாடல்களைக் கேட்க ஆங்காங்கே மக்கள் காத்து நின்றனர்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவருடைய 44 பாடல்கள் நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளன.

பிறந்த ஆண்டு- கி.மு.518

இறந்த ஆண்டு – கி.மு.438

வாழ்ந்த ஆண்டுகள் – 80

அவர் எழுதிய  பாடல்கள்:-

FIFTH CENTURY BCE

TRIUMPHAL ODES – 44 IN TOTAL

xxx

SURVIVING FRAGMENTS

பல பாடல்கள் முழுமையாக இல்லை.

HYMNS

PAENS

CHORAL DITHYRAMBS

PROCESSIONAL SONGS

CHORAL SONGS FOR MAIDENS

CHORAL DANCE SONGS

LAUDATORY ODES

பிற்காலப் புலவர்களும் எழுத்தாளர்களும் இவருடைய கவிதைகளை மேற்கோள் காட்டியதால் நமக்குத் துண்டுக் கவிதைகள் கிடைத்தன. இன்னும் சில துண்டுகள், எகிப்தில் பேபைரஸ் (Papyrus)  காகிதத் துண்டுகளில் கிடைத்தன.

xxxxx

தமிழர்கள், அவர்களுக்கும் முன்னால் , கவிதைகள் எழுதிப்  புகழ்பெற்ற சம்ஸ்க்ருத, கிரேக்க, எபிரேய (ஹீப்ரு), லத்தீன், சீன மொழிப்  புலவர்கள் பற்றியும் அவர்களுடைய இலக்கியப்படைப்புகள் பற்றியும் அறிதல் வேண்டும் . பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்த்தல் வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் சொன்னார். இதுவரை  நாம் மொழிபெயர்த்தது எள் அளவுக்கே உளது. அதுவும் பழைய கால மொழிபெயர்ப்புகள்; படிப்பதற்கு இனியனவாக இல்லை .

 ஜம்புநாதன் , ரிக்வேதம் முதலிய 4 வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து அற்புதமான பணியைச் செய்தார். ஆனால் அது செம்மையான தமிழில் அமையவில்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை இன்னும் நாம் வரிக்கு வரி (Verbatim) அதே வேகத்தில் மொழிபெயர்க்கவில்லை. ஹோமரின் இலியட், ஆடிசி (ஒடிஸி ) ஆங்கியவற்றின் மொழிபெயர்ப்புகளும் கடனுக்குச் செய்த மொழிபெயர்ப்புகளாகவே உள .

பழங் காலத்தை விட்டு, 100, 200 ஆண்டுகளுக்கு முன் பார்த்தால் பல்லாயிரம் பல்லாயிரம் நூல்கள் மொழி பெயர்க்கப்படாமல் உள்ளன . இவற்றுக்காக தனித்துறை அமைத்து மொழிபெயர்க்கும் தனியார்களை அரசு ஊக்குவிக்கவேண்டும் ; இதைப் பல்கலைக்கழகங்களிடையே விடக் கூடாது. அவர்கள் மெத்த காசு வாங்கிக்கொண்டு, ஒரு நாளைக்கு பத்து வரிகள் மொழிபெயர்ப்பார்கள். அதுவும் ‘எழவுத் தமிழில்’ இருக்கும். படிக்கும் நடையில் இராது. தனியார் செய்த மொழி பெயர்ப்புக்களுக்கு அரசு உதவி அளித்தல் நல்லது .

புகழ்பெற்ற பிரெஞ்சு , லத்தீன் , ஜெர்மானிய, ஆங்கில நூல்களை முதலில் மொழிபெயர்த்தல் வேண்டும். அம் மொழி ஆசிரியர்கள் எழுதிய கடிதங்களையும், சொன்ன பொன்மொழிகளையும் மொழிபெயர்த்தாலே பல்லாயிரம் பக்கங்களுக்கு வரும். கதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்தால் கோடிக் கணக்கான பக்கங்களுக்கு வந்துவிடும்!!!

tags- கிரேக்க , புலவர், பிண்டார் ,

–ssubham-

கவிஞர், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.5850)

2019 ஜனவரி ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post N.5850)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 December 2018
GMT Time uploaded in London –10-14 am
Post No. 5850


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

விளம்பி வருஷம்- மார்கழி- தை மாதம்

அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

முஹூர்த்த தினங்கள்—23, 27, 30

அமாவாசை- 5

பௌர்ணமி- 20

ஏகாதஸி விரத நாட்கள்-1/2, 17, 31

பண்டிகை நாட்கள்

ஜனவரி 1- புத்தாண்டு தினம், ஜனவரி 12- சுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம்- தேசீய இளைஞர் தினம், 14-போகிப் பண்டிகை, 15-மகர சங்கராந்தி- பொங்கல், உத்தராயண புண்ய காலம் , 16- மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், 21- தைப்பூசம், 25- தியாகப் பிரம்ம ஆராதனை, 26- குடியரசு தினம்.

ஜனவரி 1 செவ்வாய்க்கிழமை

கவீனாம் ப்ரதிபா சக்ஷஹு சாஸ்த்ரம் சக்ஷுர் விபஸ்சிதாம்-ராமாயண மஞ்சரி

புலவர்களுக்கு கண்கள்-நெடுநோக்கு ; அறிவாளிக்குக் கண்கள் -அறிவு

ஜனவரி 2 புதன் கிழமை

காவ்யேஷு நாடகம் ரம்யம்,தத்ர சாகுந்தலம் மதம்- பழமொழி

கவிஞர்களின் படைப்புகளில் சிறந்தது நாடகம்தான், அதிலும் சிறந்தது சாகுந்தலமே (காளிதாஸன் எழுதியது).

ஜனவரி 3 வியாழக்கிழமை

கவீஸ்வராணாம் வசஸாம்வினோதைர் நந்தந்தி வித்யாவித்யோ  ந சான்யே- கஹாவத்ரத்னாகரம்

 கவிஞர்களின் சொற் சிலம்பத்தை அறிஞர்கள் மட்டுமே ரஸிக்க முடியும்; மற்றவர்களால் முடியாது

ஜனவரி 4 வெள்ளிக் கிழமை

கத்யம் கவீனாம் நிகாஷம் வதந்தி- பழமொழி

‘உரை நடையே படைப்பாளிகளின் உரைகல்’ என்று பகர்வர்

ஜனவரி 5 சனிக்கிழமை

மதி தர்ப்பணே  கவீனாம் விஸ்வம் ப்ரதிஃபலதி- காவ்ய மீமாம்ஸா

கவிகளின் அறிவுக் கண்ணாடியில் உலகம் பிரதிபலிக்கிறது

(இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி)

ஜனவரி 6 ஞாயிற்றுக் கிழமை

நான்ருஷிஹி குருதே காவ்யம்- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

 தொலை நோக்கு இல்லை என்றால் கவிதையும் இல்லை

ஜனவரி 7 திங்கட் கிழமை

கவயஹ கிம் ந பஸ்யந்தி –சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கவிகள் கண்களுக்கு புலப்படாததும் உண்டோ!

ஜனவரி 8 செவ்வாய்க்கிழமை

நாடகாந்தம் கவித்வம் – பழமொழி

ஒரு கவிஞனின் திறமை, நாடகத்தில் உச்சத்தைத் தொடுகிறது

ஜனவரி 9 புதன் கிழமை

கஸ்மை ந ரோசதேநவ்யா நவோதேவ கதாசுதா- கஹாவத்ரத்னாகரம்

புதிய சுவையான கதையும் புதுமனைவியும் யாருக்குத்தான் இன்பம் தராது?

ஜனவரி 10 வியாழக்கிழமை

வாதாதிஹா ஹி புருஷாஹா கவயோ பவந்தி – சூக்திமுக்தாவளி

புதிய எண்ண அலைகளே கவிஞனை உருவாக்குகிறது

ஜனவரி 11 வெள்ளிக் கிழமை

வான் கலந்த மாணிக்க வாசக! நின்வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.-

இராமலிங்க சுவாமிகள்

ஜனவரி 12 சனிக்கிழமை

க வித்யா கவிதாம் விநா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கவிதை இல்லாமல் அறிவா?

ஜனவரி 13 ஞாயிற்றுக் கிழமை

சப்தாயந்தே ந கலு கவயஹ  ஸன்னிதௌ துர்ஜனானாம்-ஹம்ஸ ஸந்தேச

தீயோர் ஆட்சியில் புலவர்கள் எழுப்பும் குரல் வெற்று வேட்டு அல்ல

ஜனவரி 14 திங்கட் கிழமை

கம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:

“சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி”
(ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலம்,1)

ஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.

ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை“-பாரதி

ஜனவரி 16 புதன் கிழமை

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை- பாரதி

ஜனவரி 17 வியாழக்கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்- பாரதி

ஜனவரி 18 வெள்ளிக் கிழமை

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்- குறள் 394

ஓரிடத்தில் சந்தித்து, மனமகிழ்ச்சி தருமாறு உரையாடி, இப்படி மீண்டும் என்று சந்திப்போம் என்று ஏங்குவது புலவரின் செயல் ஆகும் (புலவர்= கற்றோர்)

ஜனவரி 19 சனிக்கிழமை

கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவி கொள்ளார்க்கு அவகீர்த்தி- தமிழ்ப்பழமொழி

ஜனவரி 20 ஞாயிற்றுக் கிழமை

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்– தமிழ்ப்பழமொழி

ஜனவரி 21 திங்கட் கிழமை

கவி கொண்டார்க்கும் கீர்த்தி, கலைப்பார்க்கும் கீர்த்தியா?

ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை

கவீந்திராணாம் கஜேந்திராணாம்- பழமொழி (கவிகள், வழி நடத்திச் செல்லும் தலைவர்கள்)

ஜனவரி 23 புதன் கிழமை

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.- கவிமணி தேசிக விநாயகம்

ஜனவரி 24 வியாழக்கிழமை

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! – அவன்

பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! – கவி

துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !

கல்லும் கனிந்துகனி யாகுமே,அடா ! – பசுங்

கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!- கவிமணி தேசிக விநாயகம்

ஜனவரி 25 வெள்ளிக் கிழமை

“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு

தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு

வையம் தரும் இவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ”

(உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை ((கம்பன் பெயரை இணைத்து)) தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்)

ஜனவரி 26 சனிக்கிழமை

வாங்க அரும்பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீம் கவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் – வால்மீகி பற்றி கம்பன் சொன்னது; பால காண்டம், கம்பராமாயணம்

ஜனவரி 27 ஞாயிற்றுக் கிழமை

புலவர் போற்றிய நாணில் பெருமரம்- அகம்.273 அவ்வையார்

‘புலவர்கள் புகழ்ந்த நாணம்’ இல்லாமற் போயிற்று

ஜனவரி 28 திங்கட் கிழமை

முது மொழி நீரா, புலன் நா உழவர்

புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர- மருதன் இளநாகன், மருதக்கலி, கலித்தொகை பாடல் 68

அறிவுரை வழங்கும் அமைச்சர் போல, செந்தமிழ் என்னும் பழைய மொழியால், நாக்கு என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவர் சொன்ன சொற்கள்  பாண்டிய மன்னனின் செவி என்னும் நிலத்திற்குப் பாய்ச்சிய நீர் ஆகும்; புலவர்களுடைய புதிய கவிதைகளை கேட்டு உண்ணும் (மகிழும்) நீர் சூழ்ந்த மதுரை நகரத்தை உடையன் அவனே!

ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்- புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்

புலவர்கள் படும் அளவுக்கு புகழ்பெற்றவர்கள், பைலட்/விமானி இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் செல்லுவர்; அவர்கள் ‘செய்யவேண்டிய செயல்களை எல்லாம் செய்து முடித்தவர்கள்’ என்று சான்றோர் கூறுவர்

ஜனவரி 30 புதன் கிழமை

கவீனாம் உசனா கவிஹி (பகவத் கீதை 10-37)

‘முக்காலமும் உணர்ந்த கவிகளுள் நான் உசனா கவி’ (கண்ணன் கூறியது).

ஜனவரி 31 வியாழக்கிழமை

‘அருஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்’– அவ்வையார், புறம்.235

Tags- ஜனவரி 2019 காலண்டர், கவிஞர், கவிகள், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்

–SUBHAM–

கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா? ( Post No.4243)

Written by S.NAGARAJAN

 

 

Date: 26 September 2017

 

Time uploaded in London- 5-16 am

 

Post No. 4243

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

 

13-9-20̀17 அன்று வெளியான கட்டுரை எண் 4207இல் கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடலை இயற்றிய நமச்சிவாயப் புலவரைப் பற்றிப் பார்த்தோம். அவரது இன்னொரு பாடல்!

கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா?

 

.நாகராஜன்

 

கண்ணழகை வியந்து சொல்லழகு ததும்பிய நமச்சிவாயப் புலவரின் பாடலைப் பார்த்தோம்.

 

அவரது இன்னொரு பாடல்.

 

ஒரு நாள் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்றார் புலவர்.

அங்கே அவர் பாண்டியன் கோ துரத்தும் வேலையைச் செய்திருப்பதைக் கண்டார்

 

கோ என்ற வார்த்தை அரசர்களையும் குறிக்கும்; பசுக்களையும் குறிக்கும்.

 

மன்னன் பகை அரசரையும், பசுக்களையும் துரத்திக் கொண்டிருப்பதைக் கண்ட புலவர் உடனே ஒரு பாடலைப் பாடினார் இப்படி:

 

கோலெடுத்துக் கோத்துரத்துங் கோப்பாண்டி மன்னன் வடி

வேலெடுத்துக் கோத்துரத்தல் விட்டிலனே! – சால்படுத்த

பூபால னானாலும் போமோ புராணத்திற்

கோபால னான குணம்.

 

 

போட்டார் ஒரு போடு.

புராண காலத்தில் கிருஷணனாக இருந்தவன் நீ; உன் பிறவிக் குணம் போகுமா என்று.

கவிதையின் பொருளைப் பார்ப்போம்.

கோல் எடுத்து – செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு

கோ துரத்தும் – பகை அரசர்களை  ஓட்டுகின்ற

கோப் பாண்டி  மன்னன் – அழகிய பாண்டிய ராஜன்

வடிவேல் எடுத்து – வடிவேலைத் தாங்கி

கோ துரத்தல் விட்டிலனே – பசுக்களைத் துரத்தும் தொழிலை விடவில்லையே

சால்பு அடுத்த – பெருமை பொருந்திய

பூபாலன் ஆனாலும்- பூமியை ஆளும் பூபதி என்றாலும் கூட

புராணத்தில் – முன்பொரு காலத்தில்

கோபாலன் ஆன குணம் – கோபாலன் என்ற கிருஷ்ணராக இருந்த குணம்

போமோ – நீங்குமோ?!

 

 

 

கோபாலன் -பசுக்களைக் காப்பவன் ; கிருஷ்ண பகவான்

 

பாண்டிய ராஜனை கிருஷ்ணனுக்கு நிகர் என்று கூறிய கவிஞருக்குப் பரிசு கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

***

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (Post No. 2844)

தருமி1

ஜூன் 2016 காலண்டர் (துர்முகி வைகாசி/ஆனி)

 

Compiled by london swaminathan

Date: 27 May ,2016

 

Post No. 2844

 

Time uploaded in London :–  10-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

“இனியவை நாற்பது” நூலிலிருந்து  – முக்கிய 30 இனிமையான பொன்மொழிகள்

 

முகூர்த்த நாட்கள்:- 8, 9, 16, 23, 26

அமாவாசை:- 5

பௌர்ணமி:- 20

ஏகாதசி:- 1,16

 

 

சிவ சிவ

 

ஜூன் 1 புதன் கிழமை

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே (முக்கண் உடைய சிவபெருமானின் பாதகமலங்களை இடையறாது சிந்தித்தல் இனிமையானது)

 

ஜூன் 2 வியாழக் கிழமை

பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே (வங்கியில் கடன் வாங்கியாவது படி)

 

ஜூன் 3 வெள்ளிக் கிழமை

உடையான் வழக்கு இனிது ( செல்வம் உடையவர்கள், அதை வறியவர்க்கு அளித்தல் இனிது)

 

ஜூன் 4 சனிக் கிழமை

ஏர் உடையான் வேளாண்மை தான் இனிது

 

ஜூன் 5 ஞாயிற்றுக் கிழமை.

ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே (வெஜிட்டேரியன்ஸ் – வாழ்க)

 

 hare krishna food 2

ஜூன் 6 திங்கட் கிழமை

கோல்கோடி மாராயம் செய்யாமை முன் இனிது (நடுவு நிலைமை தவறி பாராட்டி பரிசு வழங்காதிருத்தல் இனிது)

 

ஜூன் 7 செவ்வாய்க் கிழமை

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே (சான்றோரின் நல்ல மொழிகளைக் கேட்பது இனிது)

 

ஜூன் 8 புதன் கிழமை

அந்தணர் ஒத்து உடைமை ஆற்ற மிக இனிதே (அந்தணர்கள், வேதங்களை மறவாது ஓதுதல் இனிது)

ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே (வேதம் ஓதும் பார்ப்பனர்க்கு பசுவையும் தங்கக் காசுகளையும் தானம் செய்; உன் குலம் செழிக்கும்; ஊர் தழைக்கும்)

 

ஜூன் 9 வியாழக் கிழமை

ஊரும் கலிமா உரன் உடைமை முன் இனிதே (நீ செல்லும் குதிரை வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்; அதாவது காரில் செல்லும் முன் அதில் பெட்ரோல், டயரில் காற்று முதலியவற்றை சரி பார்)

 

ஜூன் 10 வெள்ளிக் கிழமை

அங்கண் விசும்பில் அகல்நிலாக்  காண்பு இனிதே (ஆயிரம் பிறை காண்; அதாவது 100 ஆண்டு வாழ்)

 நிலவு, சந்திரன், மூன்

ஜூன் 11 சனிக் கிழமை

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே ( கடன் வாங்கிச் சாப்பிடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 12 ஞாயிற்றுக் கிழமை.

குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே ( பழைய உரைகாரர் எழுதியதை விட்டுவிட்டு, நூல்களுக்கு குதர்க்கமான பொருள் காணாமை இனிது)

 

ஜூன் 13 திங்கட் கிழமை

கிளைஞர் மாட்டு அச்சு இனிமை கேட்டல் இனிதே ( சுற்றத்தார் சுகமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இனிமையானது)

 

ஜூன் 14 செவ்வாய்க் கிழமை

தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே (தன் கையே தனக்குதவி; சோம்பேறித் தனமில்லாமல், மற்றவர்களை ஏவாமல், அவரவர் காரியத்தை அவரவர் செய்தல் இனிது)

 

ஜூன் 15 புதன் கிழமை

குழவி தளர் நடை காண்டல் இனிதே;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (குழவி=குழந்தை)

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (குழந்தைகள் நோயில்லாமல் வாழ வகை செய்ய வேண்டும்; அதுவே இனிது)

குழந்தை சுட்டி

ஜூன் 16 வியாழக் கிழமை

பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது (அயலான் மனைவியை காம எண்ணத்துடன் திரும்பிக்கூட பார்க்காமை இனிது)

 

ஜூன் 17 வெள்ளிக் கிழமை

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே ( நன்கு படித்தவர் அறையில் அமர்ந்து நல்ல விஷயங்களை விவாதி; அப்பொழுது நீ படித்த விஷயங்களைச் சொல்லி, மகிழவைப்பது இனிது)

 

ஜூன் 18 சனிக் கிழமை

நட்டார்க்கு நல்ல செயல் இனிது (நண்பர்களுக்கு நல்ல உதவி செய்)

 

ஜூன் 19 ஞாயிற்றுக் கிழமை.

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே ( தந்திர நூல்களைக் கற்ற தவ முனிவர்கள் பெருமையைப் பேசுவது, காண்பது இனிது)

 

ஜூன் 20 திங்கட் கிழமை

சலவரைச் சாரா விடுதல் இனிதே (வஞ்சகருடன் சேராமல் இருப்பது இனிது)

 

தருமி2

ஜூன் 21 செவ்வாய்க் கிழமை

புலவர்தம் வாய்மொழி  போற்றல் இனிதே (கற்றறிந்தோரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடத்தல் இனிது)

 

ஜூன் 22 புதன் கிழமை

பிறன் கைப்பொருள் வௌவான் வாழ்தல் இனிதே (மற்றவர்களுடைய பொருளைத் திருடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 23 வியாழக் கிழமை

ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே ( வேண்டியவர்க்கு சலுகை காட்டாத நடு நிலை இனிது)

 

ஜூன் 24 வெள்ளிக் கிழமை

 

காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே (மரத்தை வளர்; சோலைகளை உருவாக்கு; குளங்களை உருவாக்கு; கோவில்களில் இவையிருந்தால் அதைப் பாதுகார்)

 சுசீந்திரம் கோவில்குளம்

 

ஜூன் 25 சனிக் கிழமை

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே (இரவு நேரத்தில் துணையில்லாமல் செல்லாதே)

 

ஜூன் 26 ஞாயிற்றுக் கிழமை.

நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பு இனிதே ( உன்னிடம் ஒரு பொருளை நாடி வந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றல் இனிது)

 

ஜூன் 27 திங்கட் கிழமை

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே ( ஒரு காரியத்தைச் செய்ய இயலாதவனிடம் போய், இதைச் செய், இதைச் செய் என்று நச்சரித்து, உன் சக்தியை எல்லாம் வீணடிக்காமல் இருப்பது இனிது)

 

ஜூன் 28 செவ்வாய்க் கிழமை

உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே (உயர்ந்த குறிக்கோளை முன் வை; ஊக்கத்துடன் அதை அடை; உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராப்யவான் நிபோதத)

 

ஜூன் 29 புதன் கிழமை

மன்றம் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே ( பொது மன்றத்தில் ஏறிப் பொய் சாட்சி சொல்லாதே; அ ந்தப் பாவம் உன்னை சும்மா விடாது)

 

ஜூன் 30 வியாழக் கிழமை

பத்துக் கொடுத்தும் பதி இருந்து வாழ்வது இனிதே ( பத்துப் பொருட்களைக் கொடுத்தாவது, சொந்த ஊரில் சுற்றத்தாருடன் வாழ்வதே இனிது).

 

school village

-சுபம்-