Article written by London swaminathan
Date: 22 June 2016
Post No. 2913
Time uploaded in London :– 8-33 AM
(Pictures are taken from various sources; thanks)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
மனிதனுக்கு இழிவை ஏற்படுத்தும் 6, பெருமை தரும் 4, விஷயங்கள்
பால சகித்வம் = சிறுவர்களுடன் நட்பு (பக்குவம் அடையாதோருடன் நட்பு)
அகாரண ஹாஸ்யம் = காரணமில்லாமல் தனக்குத் தானே சிரித்தல் (மொபைல் போன், ஐ பேட் – இவைகளைப் பார்த்து பொது இடங்களில் சிரித்தல்)
ஸ்த்ரீஷு விவாதோ= பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் (மனைவி, சஹோதரிகளுடனோ, அடுத்தவீட்டுப் பெண்களுடனோ சண்டை போடுதல்)
அசஜ்ஜன சேவா = கெட்டவர்களுக்குச் செய்யும் உதவி (லஞ்சம் கொடுத்தல்)
கார்தப யானம் = கழுதை சவாரி (ஓட்டை காரில் சவாரி செய்தல்)
அசம்ஸ்க்ருதவாணி = கொச்சை மொழியில் பேசுதல் (பண்பற்ற மொழி; கீழ்மக்கள் பயன்படுத்தும் மொழி)
ஷட்சு = இந்த ஆறில்
நர: – மனிதன்
லகுதாம் = சிறுமையை
உபயாதி = அடைகிறான்.
பாலசகித்வமகாரணஹாஸ்யம் ஸ்த்ரீஷு விவாதோ(அ)சஜ்ஜனசேவா
கார்தபயானமசம்ஸ்க்ருதவாணீ ஷட்சு நரோ லகுதாமுபயாதி
Xxxx
பெருமை தரும் நான்கு விஷயங்கள்
एको धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा।
विद्यैका परमा दृष्टिरहिंसैका सुखावहा॥
ஏகோ தர்ம: பரம்ஸ்ரேய: க்ஷமைகா சாந்திருத்தமா
வித்யைகா பரமா த்ருஷ்டிரஹிம்சைகா சுகாவஹா
தர்மம் (என்ற ‘ஒன்று’ ) மாபெரும் மேன்மையைத் தரும்
பொறுமை (என்ற ‘ஒன்று’ ) சிறந்த அமைதியைத் தரும்
கல்வி (என்ற ‘ஒன்று’ ) அளவற்ற நிறைவைத் தரும்
அஹிம்ஸை (என்ற ‘ஒன்று’ ) தொடர்ந்து சுகத்தைத் தரும்.
–உத்யோக பர்வம், மஹாபாரதம்
–subam–
You must be logged in to post a comment.