அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா? (Post No.3682)

Written by S NAGARAJAN

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-  5-53 am

 

 

Post No.3682

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

24-2-2017  பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

 

ச.நாகராஜன்

 

தமிழ் நாட்டுப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள். அதிலும் கொங்கு நாட்டுப் பெண்க்ள் அறிவில் சிறந்திருப்பதோடு தாங்கள் சிறந்திருப்பதை தக்க விதமாக எடுத்துக் காட்டுவதிலும் சிறந்தவர்கள். எளிதில் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி ஆணுக்கு அறிவு அதிகமா அல்லது பெண்ணுக்கு அதிகமா என்பது.

 

 

இதற்கு தக்க விதமாக விடையளித்த கொங்கு நாட்டுப் பூங்கோதையின் சரித்திரம் சுவையானது.

தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பூங்கோதை அறிவில் சிறந்தவர். கவி பாட வல்லவர். அடக்கத்திற்கும் பெயர் பெற்றவர்.

 

 

ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவ்ருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.

 

திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.

 

 

வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

 

ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

 

 

அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

அறிவில்  முதிஞரே ஆவர் – அறிகரியோ

தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

தான் கொண்ட சூல் அறியார் தான்

 

 

இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். பேச முடியாமல் திகைத்திருந்த புலவர்களைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டு நடந்ததை அறிந்தார் எம்பிரான் கவிராயர்.

புலவர்கள் அவரது மனைவியார் எழுதிய பாடலை கவிராயரிடம் கொடுக்கவே அதைப் படித்துப் பார்த்துச் சிரித்த அவர் தன் மனைவியாரிடம் விளக்கம் கேட்டார்.

 

 

ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே  ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவ்ர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கற்பமுற்றி சிசு பிறக்கிறது. இதை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் விளக்கவில்லையா, என்ன? ஆகவே தங்கள் கர்ப்பதைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.

 

உயிர்கள் பிறத்தலைப் பற்றி பிரம்மசூத்திரம் மூன்றாம் அத்தியாயம் முதல் பாதம் முதல் சூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள் அருளிய விளக்கவுரையையும் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்தில் உள்ள விளக்கவுரையையும் பூங்கோதை வீட்டின் உள்ளிருந்தபடியே நன்கு விளக்கினார்.

 

மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

சொர்க்கம் சென்ற ஆன்மா,  மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலைத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

 

 

விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

விஷயம் கொங்கு  மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

 

 

இந்த் சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

கொங்கு மண்டல சதகத்தில் 45வது பாடலாக மலர்ந்துள்ள பாடலைப் பார்ப்போம்:

 

 

குறுமுனி நேர்  தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

 

பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

****

 

 

 

பெண்கள் குரங்குகள்! மஹாபாரதம் விசித்திர தகவல்! (Post No.3647)

Written by London swaminathan

 

Date: 18 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 5-38 am

 

Post No. 3647

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பெண்களே அவசரப்பட்டு, கோபப்படாதீர்கள்!

திரவுபதியின் அழகை ஒப்பிடும்போது, நீங்கள் எல்லோரும் ……………….

 

திரவுபதியின் அழகை வருணிக்க வந்த வியாசர் மற்ற எல்லாப் பெண்களையும் குரங்கு ஆக்கிவிட்டார்!

 

“அழகான திரவுபதியைப் பார்க்கும்போது மற்ற எல்லாப் பெண்களும், பெண் குரங்குகள் (மந்தி) போலத் தெரிகின்றனர்”-மஹாபாரதம் 3-251-3

 

ஏதாம் த்ருஷ்ட்வா ஸ்த்ரியோ மேந்யா யதா சாகாம்ருகஸ்த்ரியஹ

 

திரவுபதி எல்லோரையும் விடப் பேரழகி என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். ஆனால் வியாசர் ஒருபடி மேலே சென்றுவிட்டார். ஒருவேளை இது அந்தக் கால தமாஷாக இருந்திருக்கலாம். ஏனெனில் கம்ப ராமாயணத்திலும் இப்படி கொஞ்சம் தமாஷ் வருகிறது.

 

சூர்ப்பநகை ராமனை மயக்கப் பார்க்கிறாள். ராக்ஷசியான சீதையை ஒதுக்கிவிட்டு என்னைத் திருமணம் செய்துகொள் என்கிறாள். இராமனுக்கு ஒரே சிரிப்பு! இது என்னடா? ஈயம் பித்தளையைப் பார்த்து இளித்த கதையாக இருக்கிறதே! என்று எண்ணி, அவர் என் தம்பியிடம் போய்க் கேள் என்று சூர்ப்பநகையை அனுப்பிவிடுகிறார். லெட்சுமணனோ கோபக்காரர். ஒரே வெட்டாக மூக்கை வெட்டி விடுகிறான். அப்பொழுதும் சூர்ப்பநகை விடுவதாக இல்லை. ஏ, ராம! உன் தம்பியிடம் எனக்காக கொஞ்சம் சிபாரிசு செய்யக்கூடாதா?

“எனக்கு மூக்கு இல்லையே என்று நீ நினைக்கலாம். அட இடையே இல்லாத பெண்ணுடன் நீ வசிக்கவில்லையா! அது போல உன் தம்பியும் மூக்கே இல்லாத பெண்ணுடன் வசித்தால் என்னவாம்!”

 

 

பெருங்குலா உறு நகர்க்கே பெயரும் நாள்

வேண்டும் உருப்பிடிப்பேன் அன்றேல்

அருங்கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம்

இளையவந்தான் அரிந்த நாசி

ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ

என்பானேல் இறைவ ஒன்றும்

மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ

நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்

–ஆரண்ய காண்டம், சூர்ப்பநகைப் படலம்

 

பொருள்:

பெரிய கொண்டாட்டம் மிக்க அயோத்தி நகருக்கு நீங்கள் திரும்பிச் செல்லும்போது, நீ ங்கள் விரும்பும் உருவத்தை நான் எடுத்துக்கொள்வேன். இப்போது உன் தம்பி தணிக்க முடியாத கோபம் கொண்டவனாக இருந்தாலும், அறுக்கப்பட்ட மூக்கு உடைய இவளோடு நான் வாழ்வேனா என்று கூறலாம். அப்படிச் சொன்னால், தலைவனே (ராமா) நீ இடையே இல்லாத பெண்ணொடு  நீண்டகாலம் வாழ்ந்து வருகிறாய்; அதை அவனுக்கு எடுத்துச் சொல்லி அமைதி அடையச் செய்!”

 

மெல்லிடையாள் என்று பெண்களைப் புகழ்வதை இந்திய இலக்கியத்தில் மட்டுமே காணலாம். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும்– இமயம் முதல் குமரி வரை, பெண்கள் வருணனை ஒரே மாதிரியாக இருக்கும் ஏனேனில் இது ஒரே பண்பாடு.

 

உன் மனைவிக்கு இடையே இல்லை என்பதை புகழ்ச்சியாகவே கொள்வர். எந்தப் பெண்ணையாவது பார்த்து நீ குண்டாக — பருமனாக — இருக்கிறாய் என்று சொன்னால் அவருக்குக் கோபம் வருவதோடு நம் மீது வெறுப்பும் வந்துவிடும். ஆனால் இங்கே இடையில்லாத சீதையுடன் மூக்கறுந்த சூர்ப்பநகை தன்னை ஒப்பிடுவது அந்தக் கால ஜோக் (தமாஷ்)

வால்மீகி நகைச்சுவை

கம்ப ராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் சூர்ப்பநகை படலம் முழுதும் நகைச்சுவை அதிகம் இருக்கும். இதோ வால்மீகியிலிருந்து ஒரு பகுதி மட்டும்:-

 

ராமன் சூர்பநகையை நிராகரிக்கும்போது நான் ஏற்கனவே கல்யாணமானவன். உன்னையும் கட்டிக்கொண்டால் சக்களத்தி சண்டையை என்னால் தாங்க முடியாது! என் தம்பிதான், உனக்குச் சரியான ஆள். இன்னும் திருமண சுகம் அனுபவிக்காதவன்! என்று தமாஷ் செய்கிறான். லெட்சுமணன் சொல்லுகிறான்: நானோ என் அண்ணனைச் சார்ந்து வாழும் “அடிமை”. என்னிடத்தில் என்ன சுகம் காணப்போகிறாய். கொள்ளை அழகு பிடித்தவளே என் அண்ணன் இராமனிடமே செல் என்று தள்ளிவிடுகிறான்.

 

இவ்வாறு சூர்ப்பநகைப் படலத்தை கிண்டலும் கேலியும் நிறைந்ததாக, உலகின் இரு பெரும் புலவர்கள் வருணித்துள்ளனர். அந்தப் பகுதிகளை நகைச்சுவை உணர்வுடன் படிக்க வேண்டும்!

 

–சுபம்–

பெண்கள் அழிவது எதனாலே? பிராமணர் அழிவது எதனாலே? (Post No.3546)

3be97-brahmin2

Written by London swaminathan

 

Date: 15 January 2017

 

Time uploaded in London:- 11-55 am

 

Post No.3546

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

அந்தக் காலத்தில் அனுபவ அறிவு மூலம் பழமொழிகளையும் பாடல்களையும் எழுதி எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றனர். அவைகளில் சில:-

ஸ்த்ரீ ரூபம் = அழகினால் பெண்களுக்கு ஆபத்து

பிராமண ராஜ சேவா= அரசர்களிடத்தில் பணிபுரிவதால் அந்தணர்களுக்கு ஆபத்து

காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து

ஹிரண்ய லோபலிப்சா = பேராசையினால் தங்கத்துக்கு அழிவு

 

 

சில எடுத்துக்காட்டுகள்:

 

உலகப் பேரழகி சித்தூர் ராணி பத்மினியால் அவள் மீது ஆசைகொண்ட அலாவுதீன் கில்ஜி ரஜபுத்ர ராஜ்யத்தை அழித்தான்.

பிராமணர்களுக்கும் நவநந்தர்களுக்கும் மோதல் வலுத்து, சாணக்கியனை நந்த வம்சம் அவமானப்படுத்தியது. இறுதியில் நந்த வம்சத்தை வேருடன் கலைந்தார் சாணக்கியர்.

பசுக்கள் வேறு நிலத்தில் மேய்வதால் கிராமங்களில் கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. அல்லது புலி சிங்கம் முதலிய மிருகங்களால் கொல்லப்படுகிறது.

தங்கத்தின் (செல்வத்தின்) மீது ஆசை கொண்டு சிறைக் கம்பிகளை எண்ணியோர் உலகம் முழுதும் உண்டு

 

இது போன்ற ஏராளமான எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

ஸ்த்ரீ விநஸ்யதி ரூபேண ப்ராஹ்மணோ ராஜசேவயா

காவோ தூரப்ரசாரேண ஹிரண்யம் லோபலிப்சயா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 153/19

xxx

2feaa-beauty2blong2bhair2bbaack

கருட புராணம் (115-7) இதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லும்:

 

ஸ்த்ரியோ நஸ்யந்தி ரூபேண தபஹ க்ரோதேன நஸ்யதி

காவோ தூரப்ரசாரேண க்ஷுத்ரான்னேன த்விஜோத்தமாஹா

பொருள்:-

ரூபேண ஸ்த்ரி = அழகினால் பெண்களுக்கு ஆபத்து

 

க்ரோதேன தபஹ = கோபத்தினால் தவத்துக்கு அழிவு (விஸ்வாமித்ரரும் துர்வாசரும்  சிறந்த எடுத்துக்காட்டுகள்)

 

க்ஷுத்ரான்னேன திவிஜோத்தமாஹா= ஆரோக்கியமற்ற, சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுவதால் அந்தணர்களுக்கு ஆபத்து.

காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து

xxx

 

பிராமணர்கள் பற்றி மனு தர்ம சாஸ்திரம் சொல்வதும் முக்கியமானது:-

 

அனப்யாஸேன வேதானாமாசரஸ்ய ச வர்ஜனாத்

ஆலஸ்யாதன்னதோஷாச்ச ம்ருத்யுர் விப்ராஞ்சிதாம்சதி

மனு 5-4

 

 

பொருள்:-

வேத அனப்யாசேன = வேதங்களைக் கற்காததாலும்

ஆசாரவர்ஜன = ஆசார விதிகளைப் பின்பற்றாததாலும்

ஆலஸ்ய = சோம்பேறித்தனத்தாலும்

அன்னதோஷ = சாப்பிடக்கூடாத உணவைச் சாப்பிடுவதாலும்

 

பிராமணர்களுக்கு விரைவில் மரணம் சம்பவிக்கிறது.

 

எல்லோரும் விதி முறைகளைப் பின்பற்றி நூறாண்டுக்காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

 

–subham–

 

பெண்கள் விளையாட்டுகள் (Post No.3537)

Written by London swaminathan

 

Date: 12 January 2017

 

Time uploaded in London:- 9-31

 

Post No.3537

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

பெண்கள் விளையாட்டுகள்:

 

அந்தக் காலத்தில் திருமணமாகும் வரை பெண்கள் என்ன என்ன விளையாடினர் என்று ஒரு பாட்டின் மூலம் தெரிகிறது. இது முற்றிலும் சரி என்பது சங்கத் தமிழ் பாடல்களாலும், ராமாயண, மஹாபாரத நூல்களாலும் உறுதியாகிறது:-

 

மருங்குவளர் பூங்கா மலர்வாவி யூச

றிருந்துமணி செய்குன்று தேமா- விரும்பமுத

பானங்கிளி பூவை பந்துகன்னங் கழங்கன்ன மயின்

மான்முல்லை பந்தர் வளர்ப்பு

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

72363-broken2bbest

1.பூங்காவில் பூக்கள் பறித்து விளையாடினர்.

2.பொய்கை, கிணறுகளில் நீராடிப் பொழுது போக்கினர்.

3.வீட்டிலும் மரத்தடியிலும் ஊஞ்சல் கட்டி ஆடினர்.

4.பணக்காரர் வீடுகளில் செயற்கையாக குன்று எழுப்பி அதில் ரத்தினக் கற்களைப் பதித்துவைத்து அதன் மேல் ஆடி ஓடி சாடினர்.

5.தேமாமரம் விளையாடினர் (மாமரத்தில் ஏறி அல்லது கல் விட்டெறிந்து மாங்காய், மாம்பழம் எடுத்துச் சாப்பிடுதல்) .

6.அமிர்தம் போன்ற பானங்கள் செய்து குடித்தனர்.

7.காய்களை வைத்து கழங்கு ஆடினர்;

8.பூப்பந்து ஆடினர்.

9.கிளி, பூவை (சாரிகைப் பறவை), அன்னம், மயில் ஆகிய பறவைகள் வளர்த்து பொழுது போக்கினர்.

10.முல்லைப் பூச்செடிக்கு பந்தல் கட்டி வளர்த்து அதைப் பராமரித்தனர். முல்லை என்றால் அது போன்ற பிறவகை மலர்ச் செடிகளும் அதில்  அடங்கும்.

 

ஐந்து தொழில்கள்

அம்பொற்றொடியணிமினார் தங்கைக்கைந்து தொழில்

செம்பவள மென்விரலைச் சேர்த்தெண்ணலம்பெழுதல்

பூசித்திலை கிள்ளல் பூத்தொடுத்தல் பண்ணெழில்யாழ்

வாசித்தலென்றுரை செய்வார்

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

 

பொருள்:-

அழகிய பொன்னினாற் செய்யப்பட்ட வளையலை அணிந்த மாதர் கைகளுக்கு ஐந்து தொழில்கள் உண்டு. (அவையாவையெனின்) 1.செம்பவளம் போன்ற மென்மையான விரல்களைச் சேர்த்து எண்ணுதல்,

2.அம்பின் உருவத்தை எழுதல்,

3.பூசை செய்து இலை பறித்தல்,

4.மலர் தொடுத்தல்,

5.பண்ணொடு கூடின அழகாகிய வீணை வாசித்தல் என்று சொல்வர்.

 

சங்க இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இந்த விளையாட்டுகள்வரும் இடங்களை தனியே எழுதுகிறேன்

–Subahm–

 

 

 

 

தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை! (Post No.3203)

ammami

Written by London Swaminathan

 

Date: 30 September 2016

 

Time uploaded in London:10- 39 AM

 

Post No.3203

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

தொல்காப்பியர்—  தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து  வெளிநாடு செல்லக்கூடாது என்கிறார். மனுவோ,  பிராமணர்கள் வெளிநாட்டிற்குச் செல்லாக் கூடாதென்கிறார்.

 

முந்நீர் வழக்கம் மகடூ உ வோடு இல்லை – 980

—-பொருளதிகாரம், அகத்திணையியல், தொல்காப்பியம்

 

கடல் வழிப்பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை– 980

 

“காலில் பிரிவு, கலத்தில் பிரிவு இரண்டனுள் கலத்திற் பிரிவு தலை மகளுடன் இல்லை.

முந்நீர் = கடல், கலம் = கப்பல்

beauty-long-hair-baack

கப்பல் ஏறிக் கடல் பயணம் செய்ய மகளிர் உரிமை பெறார். எனவே தலைவன், தலைமகளை உடன் கொண்டு கால்களால் நடந்து செல்லும் பிரிவு மட்டுமே மகளிர்க்கு உண்டு.

முந்நீர் வழக்கம் = ஓதலும் தூதும் பொருளும் ஆகிய மூன்று நீர்மையால் செல்லும் செலவு என்பார் நச்சினார்க்கினியர் (ம்துரை பாரத்வாஜ கோத்ரப் பார்ப்பனன் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியன்)

.

 

காளிதாசனும் மற்ற சம்ஸ்கிருதப் புலவர்களும் கூட இப்படித்தான் எழுதுகின்றனர். வியாபாரம், போர், அரசியல், தூது ஆகியவற்றுக்காக வெளி நாட்டிற்குச் சென்றவர்கள் திரும்பிவரும் வரை பெண்கள் சிகை அலங்காரம் செய்யக்கூடாதென்று எழுதி வைத்துள்ளனர். பிரிவு குறித்து ஏங்குவது பற்றியும் பருவ காலம் மாறுவதால் கணவன் வரும் அறிகுறிகள் தென்படுவதாகவும் எழுதி வைத்துள்ளனர்.

 

தொல்காப்பியர் மிகத் தெளிவாகவே சொல்லுகிறார்:–

பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று.

 

சீதை போன்றவர்கள் ‘கடத்தப்பட்டதால்’, கடல் கடக்க வேண்டி இருந்தது. அதற்கும் கூட ஒரு வண்ணா ன் சொன்னான் என்பதற்காக தீப்புகுந்து தன் தூய்மையையும் நாணயத்தையும் நிரூபிக்க வேண்டி இருந்தது.

 

ஆண்கள் வெளி நாடு சென்றாலேயே கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பெண்களும் போய், அவர்களும் தன் பண்பாட்டை விட்டு விட்டால், இப்பொழுது அமெரிக்கா, பிரிட்டனில் பிறந்த குழந்தைகள் போல ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று வாழ்க்கை நடத்துவர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கோ “மம்மி, டாடி” –யயைத் தவிர அம்மா, அப்பா என்பதும் தெரியாது. அம்மா, அப்பாவின் பாசமும் பற்றும் புரியாது.

 

girls-painting

பிராமணர் மீது மனு விதித்த தடை மிகப் பொருத்தமானதே. தருமத்தை காக்கவேண்டிய அவனே தர்மத்தைப் பின்பற்ற முடியாத ஓரிடத்தில் சென்றால், வசித்தால் அமாவாசையும் கிடையாது பவுர்ணமியும் கிடையாது. தீபாவளி, பொங்கல் எல்லாம் காலண்டரில் மட்டுமே. அல்லது சங்கங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே.

 

ஆக தொல் காப்பியர் சொன்னது, மனு சொன்னது முதலியவற்றை அந்தக்காலத்தில் வைத்து அதன் பின்னணியில் பார்க்க வேண்டும்.

 

தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே!

 

இதோ பெண்கள் பற்றி அவர் சொன்னது:–

 

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும்நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும்சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல்  முகைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய – தொல்காப்பியம் 1098

 

 

பொருள்:-

உயிரினும் மேலாகக் கற்பு நெறியைப் போற்றலும், தலைவன் மீது மிகுந்த அன்பு காட்டுதலும், சான்றோர் கூறிய நல்லொழுக்கம் பேணலும், மென்மையான தன்மையுடைய சொற்களால் பிறர் கூறும் கடுஞ் சொற்களைப் பொறுத்தலும், ரகசியம் வெளிப்படாத வாறு மனதில் வைத்துக் கொள்ளலும், விருந்தினரை வரவேற்று உணவு படைத்தலும், சுற்றத்தாரைக் காத்தலும் — இவை போன்ற பிற பண்புகளும்  தலைவியிடம் அமைந்துள்ள நல்ல குணங்களாம்  . அவளுடைய செயல்களை முகம் மகிழ்ந்து  கேட்கும் நிலையில்  தலைவனிடம் உரைத்தல், மனைக்கண் பழகும் பாணர் , பாங்கர் போன்றோர் கூற்றுகளாக அமையும்.

 

azaki-with-metal-pot

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான – 981

 

எந்த நிலத்திலும் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை அது சிறப்புடைய ஒழுக்கம் இல்லாததால்.

 

(ஆண்கள் மட்டும் பனை மர மடலால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊரறிய, காதலை வெளிப்படுத் துவது தமிழரின் தனி வழக்கம்)

 

–subham–

 

பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக! (Post No.2945)

assorted-coloured-gemstones-1

Written by London swaminathan

Date: 5 July 2016

Post No. 2945

Time uploaded in London :– 9-24 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்

விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:

–மனு ஸ்மிருதி 2-240

 

எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-

பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)

தூய்மை (விதிகள், உணவு),  நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)

மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்

 

நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:–

 

 

வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)

 

மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-

 

விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;

குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;

எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;

அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்

மனு 2- 239

 

இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.

ms garland making

மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.

 

2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது.  க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)

 

வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.

 

ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.

 

–Subham–

மாப்பிள்ளை உள்பட 5 பேருக்கு பணத்தின் அருமை தெரியாது ! (Post No.2942)

IMG_4371

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2942

Time uploaded in London :– 10-09 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐந்து பேருக்கு பணத்தின் அருமையோ, பணக் கஷ்டமோ தெரியாது. யார் அந்த ஐந்து பேர் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாகச் சொல்கிறது:

 

விருந்தாளி (அதிதி)

சிறுவர், சிறுமியர் (பாலக:)

பெண்கள் (ஸ்த்ரீ ஜன:)

அரசன் (ந்ருபதி:)

மாப்பிள்ளை (ஜாமாதா)

 

அதிதிர் பாலகஸ்சைவ ஸ்த்ரீஜனோ ந்ருபதிஸ் ததா

ஏதே வித்தம் ந ஜானந்தி ஜாமாதா சைவ பஞ்சம:

 

IMG_4496 (2)

சோறுகண்ட இடம் சொர்கம் — என்று உட்கார்ந்து சாப்பிடும் விருந்தாளிகளுக்கு பணக் கஷ்டம் பற்றி என்ன கவலை? விருந்து அளிப்பவன் , பாவம், கடன் வாங்கி விருந்து கொடுத்துக் கொண்டிருப்பான்!

 

சின்னக் குழந்தைகள் யானையையும், காரையும் கூடப் பார்த்து எனக்கு அதை வாங்கிக்கொடு – என்று அடம் பிடிக்கும். வீட்டில் நாய், பூனை, மீன் வளர்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும். அவர்களுக்குப் பணக் கஷ்டம் தெரியுமா?

 

பெண்களுக்கு ஆசை அதிகம். வைர நெக்லஸ், தங்க அட்டிகை, பெரிய பங்களா, சொகுசான கார் – என்று பெரிய பட்டியல் வைத்திருப்பர். அந்தக் கலத்தில் அவர்கள் வேலைக்குப் போகாததால் பணத்தின் அருமை தெரியாது. இப்பொழுது அவர்களும் வேலைக்குப் போவதால், “கொஞ்சம்” தெரிந்திருக்கிறது.

 

அரசனுக்கும், ஆளுவோருக்கும் மக்கள் கஷ்டம் தெரியாது என்பதை விளக்கத் தேவையே இல்லை. மக்கள் மீது வரி மேல் வரி போட்டு வாட்டி வதைப்பர். தாங்கள் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிப்பர்.

 

கடைசியாக மாப்பிள்ளை! பெண் வீட்டுக்குப் போய் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று அதிகாரம் செய்வர். அவர்களோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் கஷ்டப்படுவர்.

IMG_4545

எவ்வளவு அனுபவபூர்வமான கண்டுபிடிப்புகள்!

 

-சுபம்-

 

‘வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை’—வால்மீகி (Post No 2744)

IMG_4384

Compiled  by London swaminathan

Date: 21 April 2016

 

Post No. 2744

 

Time uploaded in London :– 13-51

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி- பார்யா பற்றிய பொன்மொழிகள்

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 5

dance in shade

67.அடுத்தவன் மனைவி பற்றி விமர்சிப்பது பண்புடையாளர் செயலன்று

-சாகுந்தலம், காளிதாசன்

அநார்ய: பரதார வ்யவஹார:

Xxxx

68.மற்றவர் மனைவியை கூர்ந்து கவனிப்பது தவிர்க்கப்பட வேண்டியது

-சாகுந்தலம், காளிதாசன்

அநிர் வர்ணனீயம் பர  களத்ரம்

Xxxx

69.மனைவி என்பவள் அணுசரணையாக இருக்க வேண்டும்.

–க்ரந்தஸ்தகாதகாகு

அனுகூல ரசா பார்யா

Xxxx

70.மனைவி இல்லாத வீடு சூன்யமானது

(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)

–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)

அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்

Xxxx

 

bob painting 5

71.கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)

அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய

Xxxx

72.மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)

-சாணக்ய நீதி சாஸ்த்ரம்

அலோஹமயம்  நிகடம் களத்ரம்

Xxxx

73.கட்டுபடாத மனைவி  எதிரி

-சாணக்ய நீதி

அவிநீதா ரிபு: பார்யா

Xxxx

74.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்

–பாரத மஞ்சரி

காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:

Xxxx

75.க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்

–குமாரசம்பவம், காளிதாசன்

அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.

Xxxx

 

IMG_4360

76.கணவனுடைய அன்பினால், உறவினர்களையும் விட்டுவிடுவர் பெண்கள்.

த்ருணம் பாந்தவபக்ஷோ ஹி பர்த்ருஸ்நேஹேன யோஷிதாம்

—-பாரத மஞ்சரி

Xxxx

77.இல்லாள் இருப்பதால்தான் அதை இல்லம் என்கிறோம்.

ந க்ருஹம் க்ருஹம் இதி ஆஹு: க்ருஹீணீ க்ருஹம் உச்யதே

–பஞ்சதந்திரம்

Xxxx

78.மனிதனுடைய மனைவி ராக்ஷசன் மனைவியாக இருக்க் வாய்ப்பில்லை

ந மானுஷீ ராக்ஷசஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி

–வால்மீகி ராமாயணம், 5-24-8

Xxxx

79.அடுத்தவன் மனைவியைப் பார்ப்பது (உற்று நோக்குவது) அறநெறியன்று.

–ம்ருச்சகடிக, சூத்ரகர்

ந யுக்தம் பர களத்ர தர்சனம்

Xxxx

80.காதலனைக் காணப் போகும் பெண்ணை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ந சக்யாஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி

—-ம்ருச்சகடிக, சூத்ரகர்

 

Xxxx

 

 

81.வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை

–வால்மீகி ராமாயணம் 4-24-43

ந சூர பத்ன்ய:பரிதேவயந்தி

Xxxx

82.சுயமரியாதையுள்ள பெண்கள், தனது கணவன், மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதில்லை

ந சஹந்தே ஹி மானின்ய: பத்யுர் அன்யா சமாகமம்

-ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

 

IMG_4508

83.கணவன் மீது பற்றுடைய பெண்கள், அவர்களின் கணவரின் அன்புவலைக்குள் வேறு யாரும் வருவதை சகிப்பதில்லை.

ந சஹந்தே ஹி  ராகிண்யோ பர்து: ப்ரேமபதம் ஜனம்

—ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

84.சக்களத்திகளுடன் பெண்கள் போட்டி போடுவது நிரூபிக்கப்பட்ட உண்மையே

–கதா சரித் சாகரம்

நிசர்கசித்தோ நாரீணாம் சபத்னீஷு ஹி மத்சர:

Xxxx

 

85.கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது மிகவும் கடினம்

–வால்மீகி ராமாயணம், 2-29-7

பதிஹீனா து யா நாரீ ந, சாசக்ஷ்யதி ஜீவிதும்.

Xxxx

86.கடும் கஷ்டத்திலும் மனைவியை யார் கைவிடுவான்?

பராபவே அபி டாராணாம் உபேக்ஷாம்க்ஷமதே நு க:?

–பாரத மஞ்சரி

IMG_4885 (2)

 

–சுபம்–

 

 

பெண்கள் வைரங்களை அணியலாமா வராஹமிகிரர் கருத்து என்ன?

diamonds-loose-certified-1

ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக்கட்டுரை எண்:–1642; தேதி 11 பிப்ரவரி 2015

கடந்த சில நாட்களில் எழுதிய கட்டுரையில் 1500 ஆண்டுகளுக்கு முன் வராகமிகிரர் என்ற மாமேதை யாத்த பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத நூல் பற்றிக் கண்டோம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒரு கலைக் களஞ்சியம் என்றும் அவர் பேசும் 106 தலைப்புகள் பற்றியும் கண்டோம். இன்று வைரங்கள், ரத்தினக் கற்கள் பற்றி அவர் சொன்ன சில சுவையான விஷயங்களைக் காண்போம்.

22 வகை ரத்தினக் கற்கள்

மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம் என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது  அறிஞர்கள் இருந்ததை நவரத்தினங்கள் என்று அழைக்கிறோம். இதே போல பெண்கள், குதிரை, யானையில் சிறந்த ஜாதிகளை ரத்தினம் என்பர். சிறந்த பெண்ணை நாரீரத்னம் என்பர். இதை வராகமிகிரரும் அமரகோசம் நிகண்டு எழுதிய அமரசிம்மனும் பகர்வர்:

ரத்னம் ஸ்வ ஜாதி ஷ்ரேஷ்டேயி – என்று செப்புகிறது அமரம்.

ரத்னக் கற்கள் எங்கே தோன்றுகின்றன?

இது குறித்து தனது காலத்துக்கு முன் ஆயிரக்கணக்கான, ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கைகளை எழுதிவிட்டு தனது அறிவியல் பூர்வ கருத்தையும் மொழிகிறார் வராகமிகிரர்:

பலன் என்னும் அசுரனின் எலும்புகளில் இருந்து ரத்தினக் கற்கள் உற்பத்தியானதாகச் சிலரும், ததீசி முனிவர் இடமிருந்து உற்பத்தியானதாகச் சிலரும், பூமியின் குணங்கள் மூலம் உற்பத்தியானதாகச் சிலரும் கூறுவர். இதற்கு வியாக்கியானம் எழுதிய உத்பலர் என்பவர் சில புராண ஸ்லோகங்களை முன்வைத்து பூமியின் நிலையே காரணம் என்பார். தற்கால அறிவியலும் பூகர்ப்ப இயலின் ஒரு பகுதியாகவே ஜெம்மாலஜி (ரத்ன பரீக்ஷா) சாஸ்திரத்தை வைத்துள்ளது.

a_pair_of_diamonds

22 வகை ரத்தினக் கற்களை இரு ஸ்லோகங்களில் தருகிறார் வராக மிகிரர்:

வஜ்ரேந்திர நீலசரகதககர்தே பத்மராகருதிராக்யா:

வைடூர்யபுலகவிமலக ராஜமணிஸ்படிக ஸஸிகாந்தா:

சௌகந்திககோமேதகசங்ரவ மஹாநீல புஷ்பராகாக்யா:

ப்ரஹ்மணிஜ்யோதிரஸஸஸ்யகமுக்தாப்ராவாலானி

(இந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சந்தி பிரித்துப் படித்தால் பல ரத்னக் கற்கள் நமக்கு முன்னரே தெரிந்தவை என்பதை உணர்வீர்கள்)

வைரம், நீலம், மரகதம், பச்சைக்கல் (அகேட்), மாணிக்கம், சிவப்புக்கல் (பிளட் ஸ்டோன்),வைடூர்யம், அமெதிஸ்ட், விமலக, ராஜமணி (க்வார்ட்ஸ்), ஸ்படிகம், சந்திரகாந்தம், சௌகந்திகம், ஓபல், சங்கு, நீலநிறக் கல், புஷ்பராகம், பிரம மணி, ஜோதிரஸ, சஸ்யக, முத்து, பவளம்

ஒவ்வொரு ரத்தினக் கல்லுக்கும் யார் அதிதாவதை என்றும் வராஹமிகிரின் பிருஹத் சம்ஹிதா சொல்கிறது:

வெள்ளை நிற அறுகோண வைரம்= இந்திரன்

பாம்பின் வாய் போன்ற கறுப்புநிற வைரம்=யமன்

வாழைத் தண்டு நிறம்= விஷ்ணு

கர்ணிகார பூவின் நிறம்=வருணன்

நீலம்,சிவப்பு கலந்தது= அக்னி

அசோக மலர் வர்ணம்= வாயு

வைரம் கிடைக்கும் இடங்களை இன்னும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

வேணா நதிக் கரை, கோசலம், சௌராஷ்ட்ரம்,சௌர்பார தேசம், இமயமலை, மதங்க, கலிங்க, பௌண்டிர தேசங்கள்.

diamonds-1

ஜாதியும் வைரமும்

பிராமணர்கள் வெள்ளை நிற வைரங்களை அணியலாம்; சிவப்பு, மஞ்சள் நிறம் க்ஷத்ரியர்களுக்கும், வெள்ளை-மஞ்சள் (சீரிச மலர்) வைரம் வைஸ்யர்களுக்கும், வாளின் நிறம் உடைய வைரம் சூத்திரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லுவார்.

வைரங்களின் எடை, அதன் விலைகள் ஆகியவற்றையும் பட்டியல் இடுகிறார் (என் ஆங்கிலக் கட்டுரையில் விவரம் காண்க)

பெண்கள் வைரம் அணிவது பற்றி அவர் சொல்கிறார்: குழந்தைகளை வேண்டும் பெண்கள் வைரங்களை அணியக்கூடாது என்று சிலர் சொல்லுவர். ஆனால் என் கருத்து, ஆண் குழந்தைகளை விரும்பும் பெண்கள் முக்கோண வடிவுள்ள அல்லது, கொத்தமல்லி விதை வடிவமுள்ள வைரங்களை அணியலாம்.

இன்னும் ஒரு ஸ்லோகத்தில் வராஹமிகிரர் செப்புவது யாதெனில்: குறையுள்ள வைரங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்; செல்வம், குழந்தை, குடும்பத்தையே பாதிக்கும்; நல்ல வைரங்களோவெனில் எதிரிகளை அழித்து வெற்றிக்கொடி நாட்டவைக்கும்; விஷம், இடி, மின்னல் கூட அவர்களைப் பாதிக்காது. மன்னர்கள் அணிந்தால் கூடுதல் சுகபோகங்கள் கிட்டும்.

Good-Type-of-Diamond-Investment

பிருஹத் சம்ஹிதா கூறும் முத்து, நீலம், மரகத விஷயங்களை இன்னும் ஒரு கட்டுரையில் சுருக்கி வரைவேன்.

தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா?

bankura in WBRiya,Raima,Moon

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1420; தேதி 19 நவம்பர், 2014.

இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் — குறள் 822

பொருள்:– தம் இனத்தைச் சேர்ந்தவர் போல நடிப்பர்; ஆனால் உள்ளன்பு இராது. அத்தகையோர் நட்பு, பொது மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறு படும்.

இதில் மகளிர் மனம் போல மாறுபடும் என்பதைப் பார்க்கையில் பெண்களின் சஞ்சல புத்தியைக் குறை கூறுவது போலத் தோன்றும். ஆயினும் பொது மகளிரைப் பற்றி சொல்கிறார் என்றவுடன் அந்த ஐயப்பாடு நீங்கிவிடும். எதையும் அது எங்கே, என்ன காரணத்துக்காக சொல்லப்பட்டது என்பதை காணல் வேண்டும்.

கூடா நட்பு என்னும் இதே அதிகாரத்தில் இன்னும் ஒரு குறளில் வள்ளுவர் கூறுவதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம்:

_HY29BONALU-festival,s'bad, hindu

ராஜீவ் காந்தி படுகொலை

தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து— குறள் 827
பொருள்:- உள்ளுக்குள் பகை வைத்திருப்போர் வணங்குபோதும் கைக்குள்ளும் கொலைக் கருவி வைத்திருப்பர். அவர்கள் விடும் போலிக் கண்ணீரும் அத்தகையதே.

நமது காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் செய்த படுகொலையையும் நாம் கண்டோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை வணங்குவது போலக் குனிந்து வெடிகுண்டை வெடித்துப் படுகொலை புரிந்தவளும் ஒரு பெண்ணே. இதை மேற்கூறிய குறளில் கண்டோம்.

நாடக அரங்கில் படுகொலை

இதே போல நாடக அரங்கில் நடந்த ஒரு படுகொலையும் வரலாற்றில் உள்ளது. சுங்க வம்சத்து கடைசி அரசனான தேவபூதி மிகவும் மோசமான ,பலவீனமான ஒரு பேர்வழி. அவனை ஒரு அடிமைப் பெண், — படுக்கை அறையிலே கொலை செய்தாள். அவள், அவனது ராணி போல வேஷம் போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று அவனைக் கொன்றாள். அவளும் ஒரு பெண்தான்.

வரலாற்றில் இப்படிப் பெண்கள் மூலம் படுக்கை அறையில் நடந்த படுகொலைகள் பல உள. ஆக பெண்களிலும் “நீலாம்பரிகள்” உண்டு. ராமாயணத்தில் பெண் என்ற காரணத்தால் தாடகையைக் கொல்ல ராமன் மறுக்கிறான். அவள் பெண் அல்ல, பேய் என்கிறான் விசுவாமித்திரன். ஆகவே எந்த சூழ்நிலையில் யாரைச் சொல்கிறார் என்பதை அறிந்த பின்னரே ஒருவரைக் குறைகூறுதல் பொருந்தும்.

பெண்கள் மட்டுமே கொலை செய்தனர் என்பதும் உண்மையல்ல. ‘’மனதிலே கருப்பு வைத்து’’ – விபூதி பூசி வந்த — முத்த நாதன் என்பான் உடைக்குள் இருந்த வாளினை உருவி, மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றதும், இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காவலர்களே கொன்றதும் வரலாற்று உண்மைகள்.

Belur1mirror lady

தொல்காப்பியத்தில்…

தொல்காப்பியத்தில் முதல் சூத்திரம்:–
‘’எழுத்து எனப்படுப
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே’’

பொருள்:– தமிழ் எழுத்துக்கள் அ முதல் ன வரை முப்பது என்பர். மூன்று சார்பு எழுத்துக்களைச் சேர்க்காமல்.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ‘’ன’’ — என்பதை கடைசியில் வைத்ததற்கு என்ன காரனம் என்று வியாக்கியானம் செய்கின்றனர். னகரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்று எழுதியுள்ளனர்.

சேனாவரையர் எழுதிய உரையிலும், “அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமை யின் ஆடூஉவறிச் சொல் முற்கூறப்பட்டது என்பர். தொல்காப்பியருக்கு முன்னரே தமிழ் மொழி எழுத்துக்கள் அ-வில் துவங்கி ன-வில் முடிந்திருக்கலாம். ஆயினும் அவர் நூல்தான் நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் மிகப் பழையது என்பதால் மூன்று உரையாசிரியர்களும் தங்களுடைய அல்லது அவர்களது காலத்தினுடைய ‘’ஆண் ஆதிக்கக் கொள்கையை’’ தொல்காப்பியர் மேல் போட்டுவிட்டனர்!! அதாவது ன-கரம் ஆண்பால் பெயர்களில் வருவதால் அது உயர்வான எழுத்து என்றும் அதனால்தான் அதைத் தமிழ் மொழியின் கடைசி எழுத்தாக வைத்துச் சிறப்பித்தார் தொல்காப்பியர் என்றும் பொருள்படும்படி எழுதிவிட்டனர்.

இது போலவே மனு எழுதிய ஒரு ஸ்லோகத்தையும் காட்டி மனு பெண்களின் எதிரி என்பர் வெளிநாட்டினர் — ஆனால் மனுவோ பெண்களுக்கு மகத்தான ஆதரவு கொடுத்தவர் — “எந்த இடத்தில் பெண்கள் பூஜிக்கப்பட வில்லையோ அந்தக் குடும்பம் வேரொடு அழியும் என்றும், பெண்கள் விடும் கண்ணீர் குடும்பத்தையே துடைத்து ஒழித்துவிடும்” என்றும் சொல்லி இருக்கிறார். பெண்கள் வாழ்க என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க. அது மட்டுமல்ல. பெண்களுக்கு கணவனும் சகோதரர்களும் நகைகளையும் புத்தாடைகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட வேண்டும் என்றும் எழுதி வைத்திருக்கிறார்– (கேட்பது பெண்கள் குணம், வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க) ஆக உரைகாரர்களையோ வெளிநாட்டு ‘’அறிஞர்’’ களையோ நம்பி அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கி விடக்கூடாது.

026maruthi

பகவத் கீதையிலும், ஆதி சங்கரரின் விவேக சூடாமணியிலும் ஆண்களுக்குச் சார்பான ஸ்லோகங்கள் இருப்பது உண்மையே. ஆனால் அவர்கள். தாய் என்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு கடவுளுக்கும் மேலான இடத்தைக் கொடுத்துப் பாடி இருக்கின்றனர்.

மனைவி என்ற நிலையில் உள்ள பெண்களுக்கு சிவ பெருமான் போல 50—50 கொடுக்கின்றனர். உடலில் பாதி மட்டுமல்ல- உரிமையிலும் அர்த்த நாரீ என்ற முறையில் ‘’சஹ தர்மசாரினி’’ என்பர்.

இழி தொழில் செய்யும் பெண்கள் மீதே அவர்கள் வசைமாரி பொழிந்தனர்.
தனித்தனியாக எடுத்துப் பார்க்கையில் கம்பன், பட்டினத்தார், அருணகிரி நாதர் ஆகியோர் பெண்களின் எதிரிகள் போலக் காட்சிதருவர்.!

இதோ சில கம்பன் பாடல்கள்:

‘’அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கொவ்வா
நன்னுதல் மகளிர் சிந்தை’’

‘’மன்றலங் கோதை மாதர் மனம் என போயிற்றம்மா’’

வருமுலை விலைக்கென மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனமெனக் கறங்கெனத் திரிந்தான்’’ – கம்ப ராமாயணம்.

afrohairstylecmpetion-5

வரைவின் மகளிர் என்ற அதிகாரம் முழுதும் வள்ளுவனும் பெண்களைச் சாடுகிறான்.
இது போல ஷேக்ஸ்பியர் உள்பட எந்த நாட்டு இலக்கியத்திலும் காணலாம்.
ஆக, எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் கண்டு தெளிக.
பாரதியின் சொற்களுடன் முடிக்கிறேன்:–
பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்கள் வெல்கவென்று கூத்திடுவோமடா!
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலி அழிப்பது பெண்களின் அறமடா!
கைகள் கோத்து களித்து நின்றாடுவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா!

-சுபம்-

Pictures are taken from various sites; not related to the article;thanks.