Written by london swaminathan
Date: 12 April, 2016
Post No. 2715
Time uploaded in London :– 14-48
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பெண்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள்–பகுதி 3
((முதல் இரண்டு பகுதிகள் மார்ச் 26, மார்ச் 28 தேதிகளில் வெளியிடப்பட்டன.))
38.முக்தா: ஸ்வபாவாத் ப்ராயேன யோஷிதாஸ்தரல ஆசயா:
-ராமாயண மஞ்சரி
பெண்கள் இயற்கையிலேயே, இளகிய மனம் படைத்தவர்கள்
xxx
39.ய: ஸ்த்ரீணாம் குஹ்யம் ஆக்யாதி தத் அந்தம் தஸ்ய ஜீவிதம்
–ப்ருஹத் கதா கோச
பெண்களின் ரஹசியத்தை வெளியிடுபவன் கதி, சகதி!
(பெண்களின் ரகசியத்தை வெளியிடுபவர் வாழ்க்கையின் முடிவைக் காண்பர்)
xxx
40.யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
–மனு ஸ்மிருதி 3-56
எங்கே பெண்களை கொண்டாடுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
xxx
41.யோஷிதம் யத்யபி க்ருத்தா ந நிக்னந்தி இஹ வைரிண:
—-ப்ருஹத் கதா கோச
அதிபயங்கர கோபத்திலும் கூட, எவரும் பெண் கொலை புரியமாட்டார்கள் (பெண்களைக் கொல்லக் கூடாது)
xxx
42.யோஷிதாஞ்ச நதீனாம் ச புனராகமனம் குத:
—–ப்ருஹத் கதா மஞ்சரி
ஓடிப்போன நதியும், ஓடிப்போன பெண்ணும் திரும்புவது நடக்குமா? (சாத்தியமா?)
xxx
- ரஹஸ்யம் ச ந வக்தவ்யம் வந்னிதாசு
–கதாசரித் சாகரம்
பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லாதே
xxx
44.ரூப லுப்தா ஹி யோஷித:
——-ப்ருஹத் கதா மஞ்சரி
பெண்கள் மேக்-அப் போடுவதில்தான் அதிக உற்சாகம் காட்டுவர் ( பெண்கள்,தங்கள் தோற்றத்திலதிக கவனம் செலுத்துவர்)
xxxx
45.வஜ்ரலேபாத் அபித்ருடோ மானினீனாம் ஹி நிஸ்சய:
——-ப்ருஹத் கதா மஞ்சரி
பிடிவாதம்பிடித்த பெண்ணின் முடிவுகள், கான்க்ரீட்டைவிடக் கடினமானவை
(வஜ்ரலேபம் என்பது, கான்க்ரீட் போல கடினமானது)
xxx
46.வாமசீலா ஹி நார்ய:
–தூர்த்தநர்த்தக
பெண்கள், இயற்கையிலேயே, குறுக்குபுத்தி உடையவர்கள்.
xxx
47.விதக்தா அபி வஞ்சயந்தே விடவர்ணனயா ஸ்த்ரிய: —-கதாசரித் சாகரம்
பெண்கள் புத்தி கூர்மையானதுதான்; ஆனால் ஆண்களின் புகழ்ச்சியில் அது மழுங்கிவிடுகிறது(அதாவது கள்ளக் காதலனின் புகழ்ச்சியில் ஏமாந்து போவார்கள்)
xxx
48.வித்யதே ஸ்த்ரீசு சாபல்யம் வித்யதே ஞாதிதோ பயம் –வால்மீகி ராமாயணம்
பெண்களின் சபல புத்தியால், சொந்தக்காரர்களிடத்தில் பயம்!
xxx
49.வித்யுதம் க:ஸ்திரீகுர்யாத்கோ ரக்ஷேச்சபலாம் ஸ்த்ரியம் —கதாசரித் சாகரம்
மின்னலை யாராவது அசையாமல் நிறுத்த முடியுமா? பெண்களின் யாராவது மனதை சலனமில்லாமல் செய்ய முடியுமா?
xxx
50.விபரீத அர்த்தவிதோ ஹி யோஷித:
பெண்கள் எளிதில் தப்பான, அர்த்தம் செய்துவிடுவார்கள்.
xxx
to be continued………………………….
You must be logged in to post a comment.