விக்கிபீடியா படம்; நன்றி
Article No. 2052
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 8 August 2015
Time uploaded in London : – 10-37 am
மேலும் சில சம்ஸ்கிருதப் பொன்மொழிகளும், அவைகளுக்கிணையான தமிழ்ப் பழமொழிகளும்:–
1.யதா ராஜா ததா ப்ரஜா:- சாணக்ய நீதி தர்பணம்
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி
2.ப்ரஷ்டவ்யா: சத்பதம் வ்ருத்தா:
நல்வழியை பெரியோரிடம் கேட்க வேண்டும்
(பெரியார் சொல் கேள்)
3.பந்தனமாயாந்தி சுகா யதேஷ்ட சஞ்சாரிண: காகா:
கிளிகள் கூண்டில் அடைபட்டுள்ளன; காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.
(பழுத்த மரம் தான் கல் அடிபடும்)
4.பாந்த்யா நைவ விஜானாதி குர்வீம் ப்ரசவ வேதனாம் – குவலயானந்த:
மலடிக்குத் தெரியுமா பிரசவ வேதனை?
(முன்னப்பின்ன செத்தாத்தான் சுடுகாடு தெரியும்)
5.பஹுப்ரஜா: க்ருச்ர மாபத்யத இதி பரிவ்ராஜகா:
அதிக குழந்தைகள் இருந்தால் கஷ்டம் என்று பரிவ்ராஜகர்கள் சொல்கிறார்கள்.
6.பஜேதவஸ்தோசிதாம் வ்ருத்திம்
தகுதிக்கு ஏற்ற வேலை செய்
((ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை;
விரலுக்கு ஏற்ற வீக்கம்/மோதிரம்))
7.க: ப்ராக்ஞோ வாஞ்சதி ஸ்நேஹம் வேஸ்யாசு சிகதாசு ச –கதாசரித் சாகரம்
எந்த அறிவாளி தவசிகளிடமிருந்து அன்பையும், மண்ணிலிருந்து எண்ணையையும் எதிர்பார்ப்பான்?
8.பின்னருசிர் ஹி லோக: – ரகுவம்சம்
உலகம் பலவிதம்
Variety is the spice of life
9.மத்ஸ்ய ஏவ மத்ஸ்யம் கிலதி – சதபத ப்ராம்மணம்
மீனை மீனே விழுங்கும்
(சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்)
10.முஹூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ ந ச தூமாயிதம் சிரம் – மஹாபாரதம்
நிரந்தர இருளை விட ஒரு முகூர்த்தம் ஒளிவிட்டாலும் போதும்
11.முகூர்த்தமபி ஜீவேத் நர: சுக்லேன கர்மணா
கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்
12.ம்ருகா ம்ருகை: சங்கமனுவ்ரஜந்தி
மான்கள் மான்களோடு கூடும்
(இனம் இனத்தோடு சேரும்)
-subham–
You must be logged in to post a comment.