அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல் (Post No.10,452)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,452
Date uploaded in London – – 16 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான்கு வேதங்களில் சுமார் 20,000 மந்திரங்கள் உள்ளன. வேதங்களில் உள்ள பல சொற்களின் பொருள், மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும் மார்க்ஸீயக் கும்பலுக்கும் தெரியவில்லை. அது போன்ற இடங்களில் சொந்தக் கருத்துக்களை நுழைத்துவிட்டனர். இந்தக் கும்பலில் 30 வெளிநாட்டினர் அடக்கம். சில சொற்களுக்கு எதிரும் புதிருமாக அவர்கள் அர்த்தம் கற்பிப்பது நமக்கு நல்ல ‘தமாஷ்’ GOOD JOKES ஆக இருக்கிறது. அதர்வண வேதத்தில் ஒரு துதியில் சுமார் 39 பேய்களின், துஷ்ட தேவதைகளின் (GHOSTS, EVIL SPIRITS) பெயர்கள் வருகின்றன. இவைகளை மொழி பெயர்த்தால் மிகவும் விநோதப் பெயர்கள் (FUNNY NAMES) வரும். சில பேய்களின் பெயர்களை மொழி பெயர்க்க முடியவில்லை. இவை மட்டும் மனிதர்களின் பெயர்களாக இருந்தால், உடனே அது ‘ஆரியர் அல்லாத பூர்வ குடி மக்கள்’ என்று எழுதி பிரிவினை வாதம் பேசினார்கள் மார்க்சீய- மாக் ஸ்முல்லர் கும்பல். இங்கோ பேய்கள் !! திராவிடப் பேய்களின் பெயர்கள் என்று திட்ட முடியவில்லை; திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான் !

சுமேரியாவில் காணப்படும் பேய்களின் பெயர்களை முன்னே எழுதியுள்ளேன்; ஆனால் உலகில் எந்த நாட்டு இலக்கியத்திலும் இப்படி தொடர்ந்து ஒரே துதியில் சுமார் 40 பேய்களின் பெயர்ப் பட்டியல் இல்லை.

திரைப்படம் எடுப்போருக்கும் , கதை எழுதுவோருக்கும், கார்ட்டூன் படக்கதை, VIDEO GAME வீடியோ கேம் செய்வோருக்கும் நல்ல ஒரு பட்டியல் இது!

இதோ பேய்களின் பெயர்கள் :-
சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களிலும் பெண்களைப் பிடிக்கும் – புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் தாக்கும் பேய்கள்/ தேவதைககள ள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவைகளை விரட்ட ‘ஐயவி’ என்னும் வெண்கடுகைகைப் புகைக்குமாறும் சொல்லப்பட்டுள்ளது. கீழ்கணட அதர்வண வேத துதியிலும் 12 ஆவது மந்திரம் சூரிய கிரணங்களின் சக்தி பற்றிப் பேசுகிறது ஆகையால் பாக்டீரியா- வைரஸ் கிருமிகளை அவர்களை இப்படிப் பெயர்கள் சூட்டி அழைத்தனரோ என்றும் என்ன வேண்டியுள்ளது .

அதர்வண வேதம்- காண்டம் 8- சூக்தம் 439- கருப்ப தோஷம்
அலிம்சம் , வத்சபம் , பலாலம், அனுபலாலம்
சர்க்கும், கோகம், மலிமலுசம், பலீசகம் ,
அசிரேஷம், வவிராசம், ரிஷக்ரீவம், பிரமீளினம் ,
துர்நாமம், கிஷ்கினம் , அராயம், குஸூலர் ,
குடசீலர், ககுபர், கரூமர், ஸ்ரீமங்களை ,
குருந்தர், குகூரபர், கலஜர் , சகதூமஜர் ,
உருண்டர், மட்டமகர் , நபும்சகர், கும்பமுஷ்கர் ,
சாயக்கன், நக்நதன், தங்கல்வன் , கிமீதினன் ,
ஸ்தம்பஜன், துண்டிகன், கருமன் , பலீநசன்
சுனை ரோமம் உள்ளவன் , சடைகேசன் , அரைப்பவன், அதிகம் பற்றுபவன் ,
ஆத்திரன், அருண வண்ணன், சீமுகத்தான், சாலுடன், விரல்களற்றவன்,
இது தவிர முட்டை விழுங்கி, மனித மாமிசம் புசிப்போன் , 2 வாயன், 4 கண்ணன்,
ஐந்து காலன் , இரண்டு முகத்தோன் என்றெல்லாம் மந்திரங்கள் பேசுகின்றன !!!

Ralph T H Griffith கிரிப்பித் என்ற ஒருவர் மட்டும், வேத மொழி பெயர்ப்பில், பக்கத்துக்குப் பக்கம், “எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை, விளங்கவில்லை, தெளிவில்லை, குழப்பமாக உள்ளது, விடுகதை வடிவில் பேசுகின்றனர்”– என்றெல்லாம் எழுதியுள்ளார். இது போல யூத மத, ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளிலும் சில பெயர்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரும் மற்ற ஐரோப்பியர்களும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்களை யூகத்தின் பேரில் மொழிபெயர்த்துள்ளனர்.

நாம் கூட பள்ளிக்கூடங்களில் வாத்தியாருக்கும் , மாணவர்களுக்கும் வினோதமான பட்டப் பெயர்களை இன்றும் வைக்கிறோம். திரைப்படங்களில் 007, ஜேம்ஸ்பாண்ட் என்றெல்லாம் பெயர்களைப் பார்க்கிறோம். சீன வைரஸ், பறவைக் காய்ச்சல் என்றெல்லாம் பெயர் சூட்டுகிறோம்.

இதோ சில ஸம்ஸ்க்ருதப் பேய்களின் தமிழ் மொழி பெயர்ப்பு :
வைக்கோல் அரக்கன், அவனைப் பின்தொடர்வோன், இம்சிப்பவன், குயில்/ஓநாய், கள்வன், பலிதன், உஷ்ணன் , ரூபம் அழிப்பவன் , கரடிக் கழுத்தன் , இமைப்பவன், தீமை, குதிர் வயிறன் , குண்டு வயிறன் , கூன முதுகன், கீச்சுக் குரலன் , கலக்கன் , நெல் குத்துவோர் முலையில் இருப்பவன், விராட்டிப் (cow dung) புகையில் வருவோன் வாயால் கடிப்பவன், அம்மண ஆள் .ஈட்டி மூக்கன், குரங்கு மூஞ்சி .
26 மந்திரங்கள் உள்ள இந்தப் பாடலில் பெரும்பாலும் குழந்தைகள், தாய்மார்களைத் தாக்கும் நோய்கள் பற்றியும் அவைகளை ‘பஜம்’, ‘பிங்கம்’ என்ற இரண்டு மூலிகைகள் போக்கி விடும் என்றும் ரிஷி முனிவர் பாடுகிறார்

கிமீதின் KIMIDIN என்ற பெயரையும் அ ராயி ARAYI என்ற பெயரையும் இப்பட்டியலில் காண்கிறோம். அந்த இரண்டு பெயர்களும் உலகின் மிகப் பழமையான புஸ்தகமான ரிக் வேதத்தில் வருகின்றன; கிமீதின் என்ற பெயரைக் கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து பொருள் காண முயன்றனர். அதை இரண்டு வகையாக மொழி பெயர்த்து , ‘இப்பொழுது என்ன’ ‘இப்பொழுது எப்படி’ என்றெல்லாம் மொழிபெயர்த்து இது உளவாளியாக (Spy) இருக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளனர். இனி துப்பறியும் கதை எழுதுவோர் 007 ஜேம்ஸ்பாண்ட், ஷெர்லாக் ஹோம்ஸ் என்று எழுதாமல், கிம் இதானீம் என்று எழுதலாம் !
–subham–
Tgas- அதர்வண வேதம், பேய்கள் ,பட்டியல், கர்ப்ப தோஷம்,

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-Part 4 (Post No.10,212)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,212

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!- Part 4

நதிகள் துதி 10-75-5

இதுதான் ரிக் வேதத்தின் புகழ்பெற்ற நதிகள் துதி. இதில் கங்கை நதியில் துவங்கி வரிசைக் கிரமத்தில் யமுனை ,சரஸ்வதி,சுதுத்ரி, பருஷ்ணி என்று மேற்கு நோக்கிச் செல்கின்றனர். இதனால்  இந்து நாகரீகம் கங்கையில் துவங்கியது உறுதியாகிறது. அதை 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழரின் 2500 பாடல்களும் உறுதி செய்கின்றன. ஏனெனில் தமிழர்களுக்கு கங்கை, யமுனை தெரியும், இமயம், முனிவர்கள் தெரியும்; அமிர்தம், இந்திரன் தெரியும்; அருந்ததி, சப்தரிஷிகள் தெரியும். இவை அனைத்தும் புறநானூறு அகநாநூறு முதலிய நூல்களில் வருகின்றன. ஆனால் சிந்து, சரஸ்வதி, சோம ரசம் பற்றிய குறிப்புகளே இல்லை; ஆகவே கங்கைதான் முதலில் வந்தது என்பது புலனாகிறது

இதை   ஒத்துக் கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிடினும் ஆப்கானிஸ்தான் முதல் டில்லி, மேற்கு வங்கம் வரை ஓடும் நதிகளைக் குறிப்பிடுவதால், இந்து மகா சாம்ராஜ்யத்தை வேதங்கள் குறிப்பிடுவதால் வேத கால பூகோள எல்லையும் விளங்கும் .

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த நதிகள் பட்டியலில் உள்ள  சில நதிகளைக்  கூட நாம் அடையாளம் காண இயலவில்லை; வேதங்கள் அவ்வளவு பழமை உடைத்து .

ஆர்ஜீகீ, சுஸோமா , என்பன விபாஸா , சிந்து நதிகள் என்று யாஸ்கர் கூறுவதை வெள்ளைக்காரர்கள் சாத்தியமற்றது என்கின்றனர்.

எட்டாவது மந்திரத்தில் சிலாமாவதி ஊர்ணாவதி என்பன நதிகள் என்று சொல்லும் சாயனர் அவை சிந்து நதியின் காரணப் பெயர்கள் என்கிறார் . சிலாமா செடிகள் வளர்ந்து இருப்பதாலும் கம்பளி கிடைப்பதாலும் இப்படிப் பெயர்கள் என்கிறார். அவைகளுக்கும் ஆதாரம் இப்போது கிடைக்கவில்லை.

நதிகள் பற்றிய துதியிலும் கிரிப்பித் GRIFFITH விஷமம் நன்றாக புலப்படும்; கங்கை என்பது தொலைதூர நதி என்பதால் அதை முதலில் சொன்னார் என்று சொல்லிவிட்டு மேலும் அது ஒரு பெண்ணின் பெயர் என்றும் சொல்கிறார். உண்மையில் அதில் உள்ள எல்லா நதிகளின் பெயர்களையும்  இன்றுவரை பெண்கள் சூட்டி வருகின்றனர் . தமிழ்ப் பெண்கள் கூட கோமதி, சிந்து, கங்கா, ஜமுனா என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்

Xxx

கல்யாண மந்திரங்கள் 10-85-6 ரைபி, நாராஸம்சீ, காதா

இன்றும் கூட பிராமணர் வீட்டுக் கல்யாணங்களிலும் , சம்பிரதாய முறைக் கல்யாணங்களிலும் ரிக்வேத கல்யாண மந்திரத்தின் பெரும்பகுதி பயன்படுகிறது. ஆயினும் இவைகளில் உள்ள சில சொற்களின் பொருள் விவாதத்துக்கு உரியனவாக இருக்கின்றன. அதாவது உறுதியான பொருள் எவருக்கும் தெரியவில்லை. வேத காலத்துக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சாயனாரின் உரையை ஓரளவு நம்பலாம் ; ஆயினும் அவர் சம்பிரதாயத்தை உடைத்து வேதத்துக்குப் பொருள் கண்டதால் பழ மைவாதிகள் அதை ஏற்பதில்லை.

“ரைபீ ,  அவளுடைய (கல்யாணப் பெண்ணின் ) தோழி; நாராசம்சீ அவளுடைய தாசீ; சூரியையுடைய அழகான ஆடை ‘காதை’யால் அலங்கரிக்கப்பட்டிருந்தது”- 10-85-6

 இவை பெண்களின் பெயர்கள் ; இவைகளை உருவக வருணனை என்று கருதுகின்றனர்.  ஏன் இந்தப் பெயர்கள்?  விளங்கவில்லை. இவை விளங்காததால், இவைகளை வேதத்துக்குப் புறம்பானவை என்றும் எழுதிவிட்டனர்!!!

‘தனக்குப் புரியாவிட்டால் அது எல்லாம் திராவிட செல்வாக்கு! என்பன அடி முட்டாள்களின், விஷமிகளின் வாதம்’

xxxx

கோசம் 10-85-7

இது மணப் பெண்ணின் பெட்டியா, ஆடையா, தேரின் பாகமா என்று பல்வேறு கருத்துக்கள்!! என்ன வினோதம் !

“அவளுடைய மஞ்சனையில் எண்ணமே தலையணை; அவள் காணும் காட்சியே கண்ணுக்கு மை ; அவள் கணவனிடம் சென்றபோது வானமும் பூமியும் அவள் பொக்கிஷம் /கோசம்” — இது மந்திரம்

Xxxx

10-85-28 கிருத்யை

ஒரு பெண் தேவதை அல்லது பேய்    அல்லது துஷ்ட  தேவதை

XXX

10-85-35 ஆசசனம், விசசனம் , அதிவிகர்த்தனம்

இவை பல வகை ஆடைகளாக இருக்கலாம் என்பது ஒரு விளக்கம் ; ஆ னால் அகராதியில் காணும் பொருள்:– கொல்லுதல் , வெட்டுதல், துண்டு போடுதல்; இந்த அகராதியே சர்ச்சைக்குரியது ; கோல்ட்ஸ்டக்கர் GOLDSTUCKER இதை கிழி , கிழி என்று கிழித்து விடுகிறார். பசுக்கொலை செய்து தினமும் பிளேட்டில் பரிமாறுவோர் செய்த St Petersburg Dictionary செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி அது. மேலும் இந்துக்கள் கோவில்களிலோ, கல்யாண விருந்துகளிலோ இன்று வரை மாமிசம் படைக்க மாட்டார்கள் ; சீக்கியர்கள் கூட இதைப் பின்பற்றுகின்றனர்.

பேராசிரியர் வில்சன் இவைகளை ‘சுற்றி அணியும் துணி’, ‘தலையில் அணியும் துணி’, ‘பிரிவுகள் உள்ள பாவாடை’ என்கிறார்.

xxxx

சிறைச் சாலையில் நான்

ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிட்டுக் கட்டுரையை முடிக்கிறேன். பிரிட்டிஷ் சிறைச் சாலைகளில் உள்ள இந்துக் கைதிகளைக் கண்டு  அவர்களுக்குப் பிரார்த்தனை முதலியவற்றை வழங்கும் பணியையும் பகுதி நேர வேலையாகச் (Part Time Prison Chaplain) செய்துவந்தேன். மிகக் குறைவான இந்துக்களே சிறையில் அடைக்கப்படுகின்றனர் ஆனால் முஸ்லிம்களோ 25 சதவிகிதத்துக்கு மேல் ! அதாவது அவர்களுடைய ஜனத் தொகை விகிதாசாரத்தைவிட மிக மிக அதிகம்.

ஒரு சிறையில், இந்துக் கைதிகள், விசாரணைக் கைதிகள், என்னைக் கண்டவுடன் ஒடி ஒளிந்தனர். பெரும்பாலும் மாமிசம் சாப்பிடும் இலங்கைத் தமிழர்கள்; ஏனப்பா இப்படி எல்லோரும் மறைந்து மறைத்து போகிறார்கள் என்று ஒருவரைப் பிடித்து விசாரித்தேன். அவர் உண்மையைக் கக்கிவிட்டார். “ஐயா நாங்கள் எல்லோரும் இன்று லஞ்ச் Non Vegetarian Lunch  நேரத்தில் மாமிசம் சாப்பிட்டுவிட்டோம். ‘அது’ சாப்பிட்டுவிட்டால் பிரார்த்தனை செய்யக்கூடாது; சுத்தம் இல்லையே என்றார் .

“அடப் பாவி மகன்களா ! இதை வாய் திறந்து முன்னமே சொல்லி இருந்தால், நான் வரும் தினத்தை அல்லது நேரத்தை மாற்றி இருப்பேனே” என்றேன். பின்னர் இதை அதிகாரிகளுடன் விவாதித்து நேரத்தை மாற்றிக்கொண்டேன் . மாமிசம் சாப்பிட்டால் சீக்கியர்கள் கூட பிரார்த்தனைக்கு வரமாட்டார்களாம். லண்டனில் மாமிசம் சாப்பிடும் சீக்கியர்கள், குருத்வராவில் கல்யாணம், பிரார்த்தனை வைத்துக்கொண்டாலும் அங்கே மாமிச விருந்து தர மாட்டார்கள். இதே போல சம்பிரதாய முறையில் கல்யாணம் செய்யும் எந்த ஜாதியினரும் மாமிச விருந்து கொடுப்பதில்லை. இப்போது காலம் கெட்டுவிட்டது எப்படி நடக்கிறதோ யாம் அறியோம் பராபரமே.

இதனால்தான் நம் சம்பிரதாயங்களை அறியாத, பின்பற்றாத, நம்பாத வெளியார்கள் எழுதும் வியாக்கியானங்களை நம்பக் கூடாது.இந்துவான எனக்கே சிறைக் கைதிகள் நழுவிச் சென்றபோதுதான் ஒரு ‘பாடம்’ lesson கிடைத்தது!

பத்தாவது மண்டலத்தில்  (துதிகள் 1 முதல் 85 வரை) நான் கண்ட புரியாத சொற்களைத் தந்தேன் மேலும் பின்னர் காண்போம்.

–சுபம் —

Tags-  ரிக் வேதத்தில் ,பேய்கள், தேவதைகள்,

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part 3 (Post No.10,209)

Jungle babblers , mostly fly in a group of Seven

Research article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,209

Date uploaded in London – 14 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ம்ருகய  10-49-5

காற்றில் வசிக்கும் ஒரு அரக்கன்

4-16-13 மந்திரத்திலும், 8-3-19 மந்திரத்திலும் இச் சொல் வருகிறது

நாலாவது மண்டலத்தில் பிப்ரு என்னும் மற் றொரு அரக்கனுடன் சேர்த்துப் படுகின்றனர் ரிஷிகள்; அதே மந்திரத்தில் 50,000 கருப்பு அரக்கர்களை அழித்தான் என்பதில் வெளிநாட்டார் விஷம் கலந்து எழுதுகின்றனர். அவர்களை பூர்வ குடி மக்கள் என்று வருணிக்கின்றனர். உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் போர்கள் நடந்து வருகின்றன. வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகில் எப்போதும் குறைந்தது 50 இடங்களில் போர்கள் அல்லது மோதல்கள் நடப்பதைக் காட்டுகின்றன. அவர்களுக்கு ஆயுதங்களை விற்பதில்தான் மேலை நாடுகள் உயிர் வாழ்கின்றன. எந்த சண்டையிலும் ஒருவர் எதிரி என்னும் பெயரில் இருப்பர். ரிக் வேதத்தில் வரும் எதிரிகள் அனைவரையும் பூர்வ குடி மக்கள் , கறுப்பர் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்திவிடுகின்றனர்!!

நல்ல வேளை ! வெள்ளைக்காரன் முதலில் தமிழைப் படிக்கவில்லை. கால்டுவெல்கள் முதலிய பேர்வழிகள் மதத்தைப் பரப்ப மட்டுமே படித்தனர் . நம் தமிழ் இலக்கியத்தில் சேர, சோழர் ,பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதும் பல்லாயிரம் பேரைக் கொன்றதையும் புலவர்கள் பாடி வைத்துள்ளனர். அவர்களையும் ஒரு பகுதி ஆரியர் மற்றோரு தரப்பு திராவிடர் என்று முத்திரை குத்தி இருப்பார்கள்!! 1400 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்தார்கள்; உலகில் ஒரே இனத்தில் இப்படி ஒரு பூசலை வேறு எங்கும் காண முடியாது ! மேலும் எப்போதும் எதிரியையோ , தீமை யையோ ‘கருப்பு’ என்று வருணிப்பது இந்திய இலக்கிய மரபு. தீமையை இருளுக்கு ஒப்பிட்டு தீபாவளி கொண்டாடுவர். மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்ல வந்த தமிழனை- முத்தநாதனை – ‘மனதினுள் கருப்பு வைத்து’ என்றே சேக்கிழார் பெருமான் படுகிறார். ஆக கருப்பு (கிருஷ்ண) என்று இம்மந்திரத்தில் சொல்லப்படுவது கறுப்பர் அல்லர்; தீயோர் என்றே பொருள் கொள்ள வேண்டும் .

Xxx

கவி 10-49-3

உசன கவியின் தந்தை ; இது கோத்திரப் பெயர்; ஆதலால் சுக்ராச்சார்யார் வரை இதே பெயர் பலருக்கும் உண்டு .  மேல் விவரம் உசனன் என்ற தலைப்பில் முன்னரே கொடுத்துள்ளேன்.

Xxx

ஸ்ருத வர்ணன் , பட்கிரிபி  10-49-5

ஸ்ருத வர்ணன் என்பவனை வாரி வழங்கும் மன்னன் என்று சொல்லிவிட்டு பட்கிரிபி என்பவன் ஏ தோ ஒரு அரக்கனாக இருக்கலாம் என்று சொல்லி முடித்து விடுகின்றனர். அந்தப் பெயர் வேறு எங்கும் வரவில்லை. இவ்வாறு பல புதிர்கள், புரியாத விஷயங்கள் ரிக் வேதம் நெடுகிலும் உளது !

xxxx

10-56-2 வாஜினன்

இந்தச் சொல்லுக்கு பொதுவாக குதிரை  என்று பொருள்.ஆனால் இங்கே  கவி பாடிய புலவரின்  மகனான வாஜிநன் என்பவனாக இருக்கலாம் என்று எழுதுகின்றனர்

xxx

அசு நீதி, அனுமதி, உசீனராணி 10-59-5, 10-59-10

இவை எல்லாம் ஈமச் சடங்கு விஷயங்களில் வரும் பெயர்கள். மரணச் சடங்குகள் பற்றிய எல்லாம் புதிராகவே உள்ளன . எதற்கெடுத்தாலும் ஐரோப்பாவில் உள்ள சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொடர்புபடுத்தி ஆரியர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்று கதைக்கும் வெள்ளைத் தோல்கள் , நூற்றுக் கணக்கான விஷயங்களில் ஒன்றையும் காட்ட முடிவதில்லை. குறிப்பாக சோம ரசம் பற்றி சுமார் ஆயிரம் இடங்களில் வேதம் பேசுகிறது ; மரணம் , கல்யாணம் பற்றி பல விஷயங்களைச் சொல்கிறது; அவற்றைப்பற்றி எதையுமே ஐரோப்பாவுடன் தொடர்பு படுத்தமுடிவதில்லை.

அசுநீதி என்பவர் யமனா அல்லது மரணச்  சடங்குகளின் அதி தேவதையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.. ஆனால் இந்துக்களின் ‘மரணச்  சடங்கு தேவதை’ என்பது உறுதி. வாழ்க்கைக்கான வழி , வாழ்க்கைக்கான வழிகாட்டி என்பது இதன் பொருள். இது போல எகிப்தின் மரணச் சடங்குகளிலும் உண்டு.

அனுமதி என்பதை தமிழில்கூட நாம் இப்போது permission பெர்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். ‘அவி’ (Havis) களை விருப்பத்துடன் ஏற்று கடவுளுக்கு அனுமதிக்கும் தேவதை இது. கருணை மிக்க தேவதை என்பது இதன் பொருள். வெள்ளைக்காரர்கள் இவ்விருவரையும் தேவதைகளாக காணாமல் (personification) உருவகம் என்று நினைக்கின்றனர். இதே துதியின் முதல் மந்திரத்திலேயே மரண தேவதை நிர்ருதியின் பெயர் வந்துவிடுகிறது. அதை அவர்கள் கவனிக்கத்  வறிவிட்டனர்

உசீனராணியை உசீரநா என்பவனின் மனைவியாக்கி அவர்கள் இப்போதும் மத்திய தேசத்தில் வாழ்வதாக அடிக்குறிப்பில் எழுதுகின்றனர். அத்தோடு இது புரியாத மந்திரம் என்ற வழக்கமான பல்லவியையும் சேர்த்துவிட்டனர்! உண்மையில் சொல்லப்போன்னால் அர்த்தம் தெரியாத ஆராய்ச்சிக்குரிய சொல் இது . பிற்காலத்தில் மத்திய தேச மக்களுக்கு இந்தச் சொல் இருப்பதாக எழுதுவது எப்படி ரிக்வேத காலத்துடன் பொருந்தும்?

இதுவும் ஈமச் சடங்கு தொடர்பானது என்றே நான் கருதுகிறேன்; காரணம் முதல் மந்திரமும் மரணம் தொடர்பான தேவதை. இந்தக் கடைசி மந்திரமும் மரணம் தொடர்பானது. இடையிலும் மரண விஷயங்களையே பேசுகின்றனர்

Xxxx

அசமாதி , பஜேரத வம்சம் ,10-60-2

பஜேரத என்பது இளவரசன் பெயரா, நாட்டின் பெயரா என்றே தெரியவில்லை என்று அடிக்குறிப்பில் எழுதிவிட்டனர்!!!!

அசமாதி என்பவரை அரசர் என்கிறார் சாயனர். ஆனால் இதன் பொருள் ‘சமம் இல்லாத’ என்பதாகும். ஆக இங்கும் வெள்ளைக்காரன் கணக்குப் படி பொருள் தெரியவில்லை! ஆனால் பெயர்களில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. சாயனர் சொல்லுவது அக்காலத்தில் கிடைத்த, நமக்கு இப்போது கிடைக்காத, ஆதாரத்தை வைத்து எழுந்ததே. ஒரு பிரபல ரிஷியின் பெயர் ‘மான் கொம்பன்’= ரிஷ்ய ச்ருங்கன் = கலைக்கோட்டு முனிவன் என்பது கம்ப ராமாயண  மொழிபெயர்ப்பு.

இன்னொரு முனிவரின் பெயர் எட்டு கோணல் = அஷ்டாவக்ரன் ; அப்பா, தப்பாக வேதத்தை உச்சரித்ததால் கர்ப்பப்பையிலேயே உடலை சுருக்கி கோணல் மாணலாகப் பிறந்த ரிஷி . (இதுபற்றி ஏற்கனவே வேத ஒலிகளின் சக்தி பற்றிய கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)

Xxx

SEVEN BIRDS, SEVEN SISTERS, JUNGLE BABBLERS.

10-67-7 காட்டுப் பன்றி BOAR- 10-67-7

உஷ்ணத்தினால் வியர்த்து, பிருஹஸ்பதி, வலிமையும் வீரமும் உள்ள காட்டுப் பன்றிகளுடன் ஏராளமான செல்வத்தைக் கைப்பற்றினான் .

இந்த மந்திரத்தில் காட்டுப் பன்றிகள் என்பன பலம் வாய்ந்த மருத் தேவர்கள் அல்லது நல்ல நீரைக் கொண்டு வருபவர்கள் என்று அடிக்குறிப்பு கூறுகிறது. சாயனர் ‘நல்ல நீரைக் கொண்டு வருவோர்’ என்றே எழுதுகிறார். ஏன் காட்டுப் பன்றி உவமை என்று வினவத் தோன்றுகிறது .

Xxxx

ஏழு பறவைப் பாடகர்கள் 10-71-3

இங்கு 7 பறவைகள் பாடகர்கள் என்ற குறிப்புக்கு பறவை இயல் வல்லுநர் Mr Dave தவே இது வங்காளத்தில் உள்ள ஏழு சகோதரிகள் என்ற பாடும் பறவை வகை என்கிறார். மர்றவர்கள் காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண சந்தங்கள் என்பர்.

இந்தப் பாட்டே  வினோதமானது  ‘ஞானம்’ என்ற தலைப்பில் அமைந்த ஒரே துதி இதுதான். இதை பிரம்ம ஞானம் என்று சாயனர் கூறுகிறார் . அவ்வகையில் பார்த்தாலும் ஞானிகளை பரம ஹம்சத்துடன் (அன்னம் என்னும் பறவை) ஒப்பிடுவதால் பறவை என்பதே சரி என்று துணியலாம்.

Xxx

To be continued………………………..

TAGS – பேய்கள், தேவதைகள், PART 3

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-1 (Post.10,202)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,202

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-1

ரிக் வேதம் உலகின் பழமையான நூல், உலகின் முதல் கவிதைத் தொகுப்பு (ANTHOLOGY)  , இன்றும் பயன்படுத்தப்படும் உலகின் ஒரே பழைய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெளிநாட்டு மண்டுகளும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. ஆனால் , வேடிக்கை என்னவென்றால், இப்போது இந்துக்களின் கல்யாணங்களில் பயன்படுத்தப்படும் மந்திரங்களில் உள்ள பல  சொற்களுக்குக் கூட  நமக்கு அர்த்தம் தெரியவில்லை. சிலர் அவைகளை ஆடைகள் என்பர்; சிலர் அவைகளை தேரின் பாகங்கள் என்பர். தினமும் மாட்டு மாமிசம் சாப்பிடும் பசுக்கொலை பாதகர்கள், அவை கல்யாண விருந்தில் வெட்டப்பட்ட மாமிசத் துண்டுகள் என்பர் . அதாவது ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்வர்.

இந்துக்களைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு அர்த்தமே தேவை இல்லை ; மனித குலம் வாழும் வரை இவைகள் ஒலிக்கட்டும்; நன்மைகள் வந்தெய்தும்; தீமைகள் எல்லாம் நலியும் என்பதே. இந்தக் கொள்கையை அவர்கள் கடைப்பிடித்திராவிடில் இன்று நம் கைகளில் வேதம் தவழாது ; வாய்களில் வேதம் முழங்காது.

குறிப்பாக ஒருவர் இறந்த பின்னர் 12 நாட்களில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் முழுதுமாக புரிவதில்லை. வெள்ளைக்காரர்கள் 30 பேர், ஆளுக்கு ஒரு கருத்து எழுதி இருக்கின்றனர். இன்று விக்கி பீடியாவில் கிடைக்கும் RALPH T H GRIFFITH கிரிப்பித் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் (FOOT NOTES) ‘எனக்கு அர்த்தம் புரியவில்லை’ என்று பக்கத்துப் பக்கம் எழுதியிருக்கிறார். வேதத்தை முழுதும் படிப்போருக்கு இது விளங்கும்.

நான் ரிக்வேதத்தைக் கரைத்துக் குடித்த கூத்தனுர் ஸ்ரீ சிங்கார சுப்ர மண்ய சாஸ்திரிகளுக்கு ‘உபந்யாச செக்ரடரி’யாக’ இருந்தேன். மதுரை வரும்போதெல்லாம் அவரது உபன்யாசத்துக்கு டி.வி.எஸ். (T V S) நிறுவனத்தார் கார் அனுப்புவார்கள். என் வீட்டிலிருந்து அவருடன் கூடவே சென்று அவர் உபன்யாசத்தைக் குறிப்பு எடுத்து தினமணிப் பத்திரிகையில் பிரசுரிப்பேன்.

அவர் காஞ்சி பராமசாரிய சுவாமிகள் வைத்த ரிக் வேத பரீட்சையில் தேறி, ஒரு வீடு, பசு மாடு, சால்வை, தங்கக் காசு பெற்றவர். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த நிலவுலகில் எவ்வளவு காலம் வாழப்போகிறார் என்பதைச் சொன்னவர். “ஏய் சிங்காரம் !என் கைகளில் அக்ஷதையைப் போடு என்று சொல்லி, அதில் கைகளில் தங்கியதை மட்டும் எண்ணிப் பார்த்து ‘ஓ நான் இவ்வளவு ஆண்டுகள் இருப்பேனா’ என்று வியந்தாராம். சாஸ்திரிகளுக்கே தெரிந்திருக்காது எதற்காக அக்ஷதையைப் போடச் சொன்னார் என்று; பின்னர்தான் தெரிந்திருக்கும் . நான் ஆர்வத்துடன் எத்தனை ஆண்டுகள்? என்று சாஸ்திரிகளைக் கேட்டபோது ‘அதல்லாம் சொல்லப்படாது’ என்று பிராமண  பாஷையில்  பதில் சொல்லிவிட்டார்.

ராமாயண உபன்யாசத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேத மந்திரங்களை முழங்குவார். வீட்டிற்கு வரும்போது இரவு 10 மணி ஆகிவிடும். முதல் நாள் உபன்யாசத்தில் சொன்ன வேத மந்திரங்களை மறுநாள் காலையில் கேட்டு எழுதி இயன்றவரையில் மதுரை தினமணியில் வெளியிட்டோம்.

வீட்டில் என் அம்மா சாப்பாடு பரிமாறும்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கோ அதை இரவு போஜனத்துக்கு செய்து வைக்கிறேன் என்பார். நாங்கள் எல்லோரும் ஏதோ அரிசி உப்புமா அல்லது இட்டிலி, தோசை என்று சொல்லுவாரோ என்று ஆர்வத்தோடு காது கொடுத்து நிற்போம். அவரோ “நீங்கள் எல்லோரும் பரம க்ஷேமமாக இருக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளுவார். அப்பேற்பட்ட வேத விற்பன்னர்களுக்கும் கூட வேதத்தின் ‘அர்த்தம்’ பெரிதல்ல.

நேரடியாக சப்ஜெக்டுக்கு வருகிறேன்.

பத்தாவது மண்டலத்திலுள்ள மந்திரங்களை முதலில் எடுத்துக் கொள்வோம் .

குளத்தின் நடுவில் பறவை வசிக்கிறது

10-5-1

‘பறவை சுனையின் நடுவே வசிக்கிறது’

ஆஹா, ஒரு கொக்கு அல்லது நாரை , வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில்  உள்ளது போல  ஏரியின் நடுவில் மரத்தில் கூட்டு கட்டி வசிக்கிறது என்று நம் நினைப்போம்; ஆனால் விமர்சகர்களெழுதியது : ‘சூரியன் (பறவை) கிழக்கே (சுனையில்) உதிக்கிறான்’ என்பதாகும். ஆகையால் ரிக் வேத விஷயத்தில் வெள்ளைக்காரன் போல அவசரப்பட்டு மந்திரங்களை எடைபோடக் கூடாது.

Xxx

10-5-5

ஏழு சிவப்பு சகோதரிகள்

ஏழு என்ற எண் , ஏராளமான இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. சிந்து சமவெளியும் இந்த எண்ணையும் மூன்றையும் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளது .

‘ஏழு சிவப்பு சகோதரிகள்’ என்பதை அக்கினி தேவனின் 7 சிவப்பு நாக்குகள்’ தீக் கொழுந்துகள் என்று விமர்சித்து காளி , கராளி முதலிய 7 பெயர்களை அடுக்குகிறார் சாயன ர்.

சாயனரின் உரையை நோக்குமிடத்து புராணக் கதைகளுக்கான விதைகள் ரிக் வேதத்திலேயே ஊன்றப்பட்டது  தெளிவாகும்.

வேறு ஒரு இடத்தில் ‘ஏழு சகோதரிகள்’ என்பதற்கு பறவையியல் அறிஞர் தவே (Mr Dave) என்பவர் வங்காளத்தில் பெரும்பாலும் ஏழு ஏழாகப் பறக்கும் ஒருவகைப் பறவைகளை அவர்கள் இன்றும் ஏழு சகோதரிகள் என்று அழைப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .

இவ்வாறு எந்த ஒரு விஷயத்துக்கும் வேதமே மூலமாக இருப்பதால்தான் மநு போன்ற பேரறிஞர்கள் உலகத்துக்கும் தர்மத்துக்கும் வேதமே மூலம் (வேர்) என்கின்றனர்.

Xxxx

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ Manu 2-6

தருமத்தின் ஆணிவேர் வேதங்கள்; அவைதான் புனித சட்ட திட்டங்கள் ; இதற்கு அடுத்தபடியாக வருவது பாரபர்யமாகப் பின்பற்றப்படும் நடை முறைகள்; அதாவது அவரவர் குலத்தின், குடும்பத்தின் ஆசாரம் . இதற்கும் பின்னர் ஏதேனும் சந்தேகம் வருகிறதா; அந்தக்காலத்தில் வாழும் ஒழுக்க சீலர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சட்டம் ; இதற் கெல்லாம் அடுத்ததாக மனச் சாட்சி என்று ஒன்றுள்ளது. அதுவே சொல்லும் எது தப்பு; எது சரி என்று.- மனு தர்ம சாஸ்திரம் 2-6

 “The whole Veda is the (first) root of the righteousness/ dharma/ reli-gion and sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction”- MANU 2-6

पितृदेवमनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं चाप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥ Manu12-94॥

 “The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Vedas are impossible to master and impossible to measure; this is an established fact”- Manu 12-94

வேதங்கள் என்பன நம்முடைய மூதாதையர்களின் , கடவுளரின், மனிதர்களின் சாச்வதமான கண்கள்; வேதங்களின் அறிவுரைகளை எவரும் முழுதும் படித்தறியமுடியாது . அதன் ஆழத்தையும் எவராலும் அளக்கமுடியாது ; இது ஆதாரம் உடைய சத்தியம்/ உண்மை–  மநு ஸ்ம்ருதி 12-94

Xxx

பகவத் கீதையில் கடல் பற்றிய வருணனை வருகிறது ‘அசலப் பிரதிஷ்டம், ஆபுர்யமானம்’  என்பது அந்தவரிகள் ; அதாவது எங்கும் நிறைந்தது ;அசைக்கவெண்ணாதது .

இந்த வரிகள் வேதத்துக்கும் பொருந்தும்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவை வருணிக்கையில் ‘அப்ரமேயம்’ என்பர்; அதாவது இவ்வளவு என்று அளவிட முடியாதவர். அதுதான் வேதம். சஹஸ்ரநாமத்தின் முதல் வரியே இறைவனை பூத , பவ்ய, பவத் பிரபு என்று போற்றும்; கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் எல்லாம் இறைவன்; அதாவது அவன் காலத்தைக் கடந்தவன்; அவ்வாறே வானிலிருந்து ரிஷிகளால் ரேடியோ அலைகளைப் போல கேட்கப்பட்ட பேருண்மைகளே வேதங்கள்.

இதனால்தான் இன்று விக்கி பீடியாவில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் ரிக் வேதத்தின் 10,000 மந்திரங்களை மொழிபெயர்த்த ரால்ப் டி .எச். கிரிப்பித் Griffith , பக்கத்துக்குப் பக்கம், ‘அர்த்தம் விளங்கவில்லை; தெளிவில்லாமல் இருக்கிறது;  ஒருவேளை இப்படி இருக்குமோ; Ludwick லுத்விக் இப்படி நினைக்கிறார்; Wilson வில்சன் இப்படி எழுதியுள்ளார்; சாயனர் இப்படிச் சொல்கிறார் என்றெல்லாம் அடிக்குறிப்பில் சேர்த்து வருகிறார்.  அதாவது அவரே  குழம்பி, நம்மையும் குழப்புகிறார்.

Xxx

கந்தர்வி 10-11-2

தட்சனின் மகள் சுரபி ; சுரபியின் மகள் கந்தர்வீ; அவள் ஒரு அப்சரஸ்; குதிரை இனத்தின் தாய் !! இங்கேயே புராணக்கதை வந்து விடுகிறது ஜொனாதன் ஸ்விப்ட் Jonathan Swift’s Gulliver’s Travels எழுதிய கல்லிவரின் யாத்திரை கதையை எல்லா சிறுவர்களும் படித்திருப்பார்கள். அது அரசியல் நையாண்டி ; லில்லிபுட் என்ற ஊரில் எல்லா மக்களும் கட்டை விரல் அளவுடைய மக்கள்; ஆகையால் மனித உருவமுள்ள கல்லிவரைக் கண்டு ஆச்கார்யமடைவர். இதற்கு அடுத்தபடியாக அவர் அறிவுள்ள குதிரைகள் வாழும் ஓரித்துக்குச் செல்வார். அந்தப் பெயர் ஆங்கிலேயர்களால்கூட உச்சரிக்க முடியாது. அதாவது குதிரை கணைக்கும் ஒலியைச் சேர்த்து எழுதிய பெயர்

Houyhnhnm . இந்தக் கதையை நினைவுபடுத்துகிறது  கந்தர்வீ கதை.

Xxx

 மாதலி – கவ்யர்கள்

10-14-3

மாதலி – இந்திரனின் தேரோட்டி;

கவ்யர்கள் – இறந்து போன (manes) முன்னோர்களின் ஒரு வகை.

மாதலி/ ரி பற்றிய சுவையான விஷயம்  மஹா பாரதத்தின் வன பர்வத்தில் உள்ளது ; பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விண்கலத்தின் பைலட் மாதரி; அவன் அர்ஜுனனை ஏற்றிக் கொண்டு இந்திரலோகம் செல்லும் போது, புண்ய ஆத்மாக்கள் ஒளி ரூபத்தில் வானவெளியில் நட்சத்திரங்களாக ஒளி வீசுவதைக் காண்கிறான். பின்னர் பூமிக்குத் திரும்புகிறான்.

ஆக மஹாபாரத மாதரியும் ரிக்வேதத்தில் வருகிறான். வியாசர் என்ற மஹாபாரத கால வரலாற்று ஆசிரியர்; முனிவர் நான்கு வேதங்களை தொகுத்ததால் மஹாபாரத, ராமாயண கதாபாத்திரங்கள் சிலரை நாம் ரிக் வேதத்தில் காண்கிறோம். அதாவது கி.மு. 3150-க்கு முன்னர் வாழ்ந்தோர் .

கவ்யர்கள் என்னும் பிதுருக்கள் (manes) பற்றி விளக்கம் இல்லை

Xxx

10-14-9 Ghosts

இப்பாடல் மயானத்தைச் சுற்றி வரும் பிசாசுகளை நோக்கி கூறப்படுவதாக சாயன பாஷ்யம் / உரை விளம்புகிறது

புறநாநூற்றில் மயானப் பேய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுடுகாட்டில் திரும்பிப் பார்க்கக்கூடாது  என்ற கருத்தும் புற நானூற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது ( பாடல்கள் 369-372)

To be continued………………………….

tags- ரிக் வேதத்தில் , புரியாத , பேய்கள், தேவதைகள்

கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா? (Post No.5051)

கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா? (Post No.5051)

 

Written by London Swaminathan 

 

Date: 27 May 2018

 

Time uploaded in London – 17–35

 

Post No. 5051

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

கம்பனுக்குக் கணக்குத் தெரியாது. கம்ப ராமாயணத்தில் ஆயிரம் கோடி, நூறு கோடி என்றெல்லாம் படைகளின் எண்ணிக்கைக்குப் பயன்படுத்துவார். அந்தக் காலத்தில்– ராமாயண காலத்தில்– அல்லது அதற்குச்  சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த கம்பன் காலத்தில் ஜனத் தொகை மிகவும் குறைவு. ஆயினும் கவிஞர்கள் எதுகை மோனைக்காக இஷ்டப்பட்ட எண்களைப் பயன் படுத்துவர். ரிக் வேதம் முழுதும் இந்திரன் அழித்த அசுர படை எண்ணிக்கை ஆயிரக் கணக்கிலேயே இருக்கும்; அக்காலத்திலும் அவ்வளவு ஜனத்தொகை கிடையாது. ஆனால் கவிஞர்களுக்கே உரித்தான  உரிமை அது. புத்த மத நூல்களில் 500 அல்லது ஆயிரம் என்ற எண்ணை சர்வ சாதாரணமாகப் பிரயோகிப்பர். இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் கம்பன் சில பாடல்களில் பேய்கள் பற்றிச் சொல்லும் போதும் ஆயிரம் பேய்கள் பற்றிப் பேசுகிறான்!

 

 

 

பல பாடல்களில் ராவணன் படையில் இருந்த பேய்கள் பற்றிப் பாடுகிறான். இதோ ஒரு பாடல்

 

பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினைப் பழித்த தோளான்

வெய்யன் என்று உரக்க சாலத் திண்ணியான்  வில்லின் செல்வன்

பெய்கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழப் பிறக்கு பல் பேய்

ஐ இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலாம்

யுத்த காண்டம்

 

பொருள்:

 

“வயமத்தன் என்ற ஆள் பொய்யைக் காட்டிலும் பெரிய உடலைக் கொண்டவன்; மலையினை விடப் பெரிய தோள்கள் உடையவன்;  கொடியவன் என்று சொல்லத்தக்க தோற்றம் கொண்டவன்;  வில் வீரன்;  வீரக் கழல் அணிந்த ராவணன் சேனை ஆரவாரம் செய்து கிளம்புமாறு ஆயிரம் பேய்கள் பூட்டிய பல சக்கரத் தேரில் வருபவன்.”

இதில் பேய்கள் என்பது நாம் சாதரணமகப் பயன்படுத்தும் பேய்=பூத= பிசாசு என்னும் பொருளுடைத்தா அல்லது வேறா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். இந்தப் பாட்டுக்குப் பொருள் எழுதிய பழைய உரைகாரர்   களும் பேய்களை அப்படியே ‘பேய்’ என்று எழுதிவிட்டுப் போய் விட்டனர்.

 

 

நாமோ ஒரு பேய்க்கே மக்கள் பயந்து ஓடுவர் என்று கதைகளில் படிக்கையில் 1000 பேய்கள் தேரில் பூட்டப்பட்டது என்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்திரஜித்தின் கொடி பேய்க் கொடி என்பதைப் பின்னொரு பாடலில் கம்பன் பகர்வான்.

 

பேய்கள் என்பது வேடம் அணிந்த விசேஷப் படை என்று நான் ஊகிக்கிறேன். தற்காலத்தில் பெருந்  தலைவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க ‘கருஞ் சிறுத்தைகள்’ (BLACK PANTHERS) ‘கருப்புப் பூனைகள்’ (BLACK CATS) என்ற கமாண்டோகளைப் பயன் படுத்துகிறோம். காலப்போக்கில் இவர்களின் பெயர்கள் மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு, செய்திப் பத்திரிக்கைகளைப் படிப்போருக்கு நாம் விளக்கம் சொன்னால்தான் அவர்களுக்கு அர்த்தம் புரியும். ஆனால் கம்ப  ராமாயண உரைகாரர்கள் விளக்கமே சொல்லாமல் போய்விட்டனர்.

 

இப்பொது நாம் Commando கமாண்டோ படைகள் என்று சொல்லும் சிறப்புப் படையினர் போல அக்காலத்திலும் இந்திரஜித் மற்றும் ராவணன் படையில் கருப்பு உடை அணிந்த  வீரர்கள் இருந்திருப்பர். அவர்கள் தேரை இழுக்காமல் தேருக்கு இரு புறமும் பாதுகாப்புக்காக  வந்திருப்பர்!!!

–SUBHAM–

 

டெலிபோனுக்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு (Post No.4724)

Date: 10 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-11 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4724

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

எந்த ஒரு புதுத் திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கும்பல் இருக்கும்; அதற்குப் பின்னுள்ள காரணம் என்னவென்றால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்திருக்கும்.

 

சவூதி அரேபியாவில் டெலிபோன் அமைப்பது, ‘சாத்தான் வேலை’ என்று குரல் கொடுத்த முஸ்லீம் மதத் தலைவர்களை அந்த நாட்டு மன்னர் எப்படிச் சமாளித்தார் என்ற சுவையான சம்பவம் ஒரு பழைய ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது.

 

அச்சுக்கூடங்களை கூடன்பர்க் நிறுவியவுடன் கிறிஸ்தவப் பாதிரிகள், இது ‘சாத்தான் வேலை’ என்று பயங்கரக் கூச்சல் போட்டார்கள். ஏனெனில் அதுவரை பைபிள் கையினால் எழுதப்பட்டு விற்கப்பட்டது. அதில் பாதிரிகளுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்கள் அனுமதி இல்லாமல் பைபிளை யாரும் வாங்கவும் முடியாது; வைத்துக்கொள்ளவும் முடியாது — ஒரு போப்பாண்டவர் பைபிள் எந்த வீட்டிலும் இருக்கக்கூடாது. அது சர்ச்சில் மட்டுமே இருக்கலாம என்று தடையும் விதித்து இருந்தார்!

 

மதுரையில் நான் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் வாரத்துக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் ( மார்கஸீய மூடர்கள்) யூனியன்கள் வங்கி (BANK) வாசலில், எல்.ஐ.சி (L.I.C) அலுவலக வாசலில் கூச்சல் போடுவார்கள்– கம்யூட்டர்களை எதிர்த்து! ——அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை லண்டனில் உள்ள அவர்களுடைய மகன்கள் (COMPUTER PERSONNEL) இப்போதும் சொல்கிறார்கள்.

சவூதி அரேபிய மன்னர் அரண்மனையில் புதிய டெலிபோன் அமைப்பு வேலைகள் துவங்கியவுடன் செய்தி காட்டுத் தீ போல பரவியது. உடனே முஸ்லீம் மதத் தலைவர்கள் ‘’ஹராம் ஹராம்! அபச்சாரம், அபச்சாரம்’’: சாத்தான்களை அரண்மனக்குள் நுழையவிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்பினர். மன்னரும் யோசித்தார்; இந்த மூடர்களுக்கு எப்படி அறிவு புகட்டுவது என்று ஆலோசித்தார். எல்லா மதத்திலும் சாணக்கியர் போன்ற அறிவாளிகள் உண்டு அல்லவா?

 

நல்ல யோஜனை பிறந்தது! மதத் தலைவர்களை சவூதி மன்னர் அழைத்தார். “அன்பர்களே! நண்பர்களே! தோழர்களே; காம்ரேட்களே!

ஒரு மௌல்வி டெலிபோனின் ஒரு புறத்தில் இருந்து குரானை ஓதட்டும். டெலிபோனின் மறு புறம் மற்றொரு மௌல்வி காது வைத்துக் குரானைக் கேட்கட்டும். அப்படியே பிழை இன்றிக் கேட்டால், புனித குரான் வந்த டெலிபோன் சாத்தானின் வேலையாக இருக்காதல்லவா?” என்றார். மௌல்விகள் பலமாக தலையை ஆட்டினர். அவ்வாறே குரானும் ஓதப்பட்டது; அது மறுபுறமும் ஒலித்தது. எல்லோருக்கும் பரம திருப்தி; பஹு சந்தோஷம்.

 

XXXXX

பேய்கள் இருக்கிறதா?

ஆங்கிலக் கவிஞர், தத்துவ வித்தகர், இலக்கிய விமர்சகர் காலரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE).

 

அவரிடம் ஒரு பெண்மணி வந்தார்.

“ஐயா, பேய்கள் இருக்கிறதா? உங்களுக்குப் பேய்கள் மீது நம்பிக்கை உண்டா?”

 

காலரிட்ஜ் செப்பினார்_

“அம்மணி! அதை ஏன் கேட்கிறீர்கள்; எங்கு  பார்த்தாலும், ஏராளமான பேய்களைப் பார்ப்பதால் எப்படி நம்புவது என்றே புரியவில்லை!”

 

xxxxxx

 

ஏசு கிறிஸ்து சக்தி வாய்ந்தவரா?

லூயிஸ் நெப்போலியன் (LOUIS LITTLE NAPOLEON)  சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. இவர் நெப்போலியன் போனபர்ட்டின் வாரிசு. பிரான்ஸில் தேர்தலில் வெற்றி பெற்று முதல் ஜனாதிபதியாக இருந்தார்- அதுவும் மிகவும் இளம் வயதிலேயே!

 

பள்ளிக்கூடடத்தில் பாடம் நடந்தது. வாத்தியார் மிகவும் உருக்கமாக ஏசு கிறிஸ்துவின் துயரங்களை வருணித்தார். மக்களுக்காக உயிர் நீத்த மஹான் அவர் என்றார். அவர் பட்ட துன்பம் கொஞ்சமா, நஞ்சமா என்றார். அவர் ஏசு பிரானின் கஷ்டங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் சொன்னபோது எல்லா மாணவர் முகத்திலும் சோகமே ததும்பியது; சிலர் கண்களில் கண்ணீரும் உருண்டோடியது.

 

 

லூயிஸ் நெப்போலியனின் முகத்தை ஆசிரியர் கவனித்தார்; அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் இல்லை; அன்றலர்ந்த தாமரைபோல அவர் முகம் பிரஸன்ன வதனமாய் இருந்தது. என்ன லூயிஸ், நான் சொன்னதை கேட்டாயா? உனக்குக் கொஞ்சமும் வருத்தமே இல்லையா?

 

லூயிஸ் சொன்னான்:

அதானே கேட்டேன்! நீங்கள் சொல்லுவது போல ஏசு பிரான் சக்தி வாய்ந்தவராக இருந்தால், அவரால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை?

 

வாத்தியார் ஐயா வாயடைத்துப் போனார். ‘’அம்மாடி! நாய் வாலை நிமிர்த்த முடியாது’’ என்று எண்ணினார்!

 

XXXXX

 

நாத்தீகம் பற்றிக் கதைப்போமா?

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவ ஞானி அறையில் அறிஞர்கள் குழுமி இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விவாதம், நாத்திகத்தை நோக்கித் திரும்பியது.

 

‘’சரி, நாத்திகம் பற்றி இப்போது கதைப்போம்’’ என்றனர்.

 

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வால்டேர் திடீரெனப் பாய்ந்தார்; எல்லார் காதிலும் கிசுகிசுத்தார்.

 

‘’ஐயா வாயை மூடுங்கள்; என் வேலைக் காரர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்ம். அவர்கள் இந்தப் பேச்சைக் கேட்டால், உங்களை இங்கே அனுமதித்ததற்காக இன்றிரவு நான் தூங்கும் போது என் குரல்வளையை நெறித்து விடுவார்கள்! — என்று.

 

 

(பிரான்ஸில் அவ்வளவு மத நம்பிக்கை இருந்த காலம் அது!)

 

(இது ஆங்கிலத்திலும் பதிவு இடப்பட்டுள்ளது)

 

-சுபம்–

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி (Post No 2563)

la-parapsicologa-y-sus-pr

Written by S Nagarajan

 

Date: 22  February 2016

 

Post No. 2563

 

Time uploaded in London :–  8-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

19-2-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

.நாகராஜன்

 

 

hans-bender-2

சந்தேகப் பேர்வழிகள் ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கவில்லையே அதனால் தான்!

                                 – ஜேஸன் ஹாஸ்

சாதாரணமாக இயற்பியல், இரசாயனம்,உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்திய விஞ்ஞானிகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஆனால் பேய்கள், ஆவிகள் உலகம் போன்றவற்றை ஆராயும் விஞ்ஞானிகளுக்கு விளம்ப்ரமும் கிடைக்காது, பரிசுகளும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை. என்றாலும் பல விஞ்ஞானிகள் தங்கள் ஆர்வம் காரண்மாக இப்படிப்பட்டவற்றை ஆராய்வது உண்டு.

 

அப்படிப்பட்டவர்களுள் பேயை முறைப்படி ஆராய்ந்து ஏராளமான ஆவணங்களை உருவாக்கிய ஒரே விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுபவர் ஹான்ஸ் பெண்டர் (Hans Bender) என்ற  ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 5-2-1907 மறைவு 7-5-1991). ஜோதிடத்திலும் இவருக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. அவரது நண்பரான தாமஸ் ரிங்குடன் ஜோதிடம் கேட்காமல் இவர் எந்த விஞ்ஞான மற்றும் சொந்தக் காரியங்களில் ஈடுபடுவதில்லை.

 

இவர் ஆராய்ந்த பேய் கேஸ்களில் உலகப் புகழ் பெற்ற ஒரு கேஸுக்கு ரோஸென்ஹெய்ம் கேஸ் என்று பெயர்.

 

 

பவேரியாவின் தெற்குப் பகுதியில் ரோஸென்ஹெய்ம் என்ற நகரில் சிக்மண்ட் ஆடம் என்ற ஒரு வக்கீல் வாழ்ந்து வந்தார். அவர் அலுவலகத்தில் 1967ஆம் ஆண்டு திடீரென்று அமானுஷ்யமான பல காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.

அரண்டு போன அவர் விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டரை நாடினார்.

 

அலுவலகம் வந்த பெண்டர் என்ன நடக்கிறது என்று கேட்டார். அந்த அலுவலகத்தில் நான்கு போன்கள் உண்டு. திடீர் திடீரென போன் அழைப்புகள் ஒலிக்கும். ஆனால் போனை எடுத்தால் மறுமுனையில் பதிலே வராது.  போனில் ஏதோ பழுது இருக்கிறதென்று நினைத்து ஆடம் எல்லா போன்களையும் புதிதாக மாற்றினார். ஆனால் மர்மமான போன் அழைப்புகள் தொடர்ந்தன. உடனே டெலிபோன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்த எஞ்ஜினியர்கள் வந்து எல்லா வயர்களையும் ஆராய்ந்து அனைத்தும் சரியாகவே இருக்கின்றன என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

 

ஜெர்மனியில் 0119 என்ற நம்பர் அனைத்து அழைப்புகளையும் துல்லியமாகக் குறித்து எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும், இதை டாக்கிங் க்ளாக் (TALING CLOCK)  என்று அழைப்பர்.

 

இந்த பேச்சைக் குறிக்கும் கடிகாரத்தின் படி ஆடம்ஸுக்கு பில் அனுப்பப்பட்டது. அவர் அரண்டு போனார். அதாவது ஒரு நிமிடத்திற்கு அவர் 6 ‘கால்’களைப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது! யாராலும் செய்ய முடியாத ஒரு அரிய காரியம் இது! ஒரு எண்ணை டயல் செய்து அடுத்தவர் மறுமுனையில் எடுக்கும் காலத்தைச் சற்று கவனித்தாலே நிமிடத்திற்கு ஆறு கால்களை யாராலும் பேச முடியாது.

1967 அக்டோபரில் கட்டிடத்தில் உள்ள பல்புகளும் பல்புகள் பொருத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகளும் ஆட ஆரம்பித்தன. திடீரென 90 டிகிரிகள் அவை திரும்பும்!

 

உடனே மீண்டும் மின் இணைப்பு சரி பார்க்கப்பட்டது. ஒரு வோல்டேஜ் மீட்டரும் புதிதாக பொருத்தப்பட்டது. பெரிய அளவிலான வோல்டேஜ் மாறுதல்கள் ப்யூஸை போக்கி விடும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை!  அங்கிருந்த போட்டோகாப்பி மெஷினிலிருந்து மின்சாரம் கசிய ஆரம்பிக்கவே மின் இணைப்பையே துண்டித்து விட்டு ஜெனரேட்டர் மூலமாக மின் சக்தி பெறப்பட்டது. ஆனால் அப்போதும் இவை தொடர்ந்தன.

 

அனைத்தும் விசித்திரமாக இருந்தன. இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெண்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவை நிகழ்வதை அவரது குறிப்பேடுகள் சுட்டிக் காட்டின.  தற்செயல் ஒற்றுமை போல ஆன்னி மேரி என்ற இளம் பெண் அங்கிருக்கும் போது மட்டுமே இவை நிகழ்ந்தன.

 

அவள் உள்ளே வந்தவுடன் இந்த அமானுஷ்ய செயல்கள் ஆரம்பிக்கும். அவள் சென்ற பின்னர் இவையும் நின்று விடும். ஆன்னியை விசாரிக்க ஆரம்பித்தார் பெண்டர். அவள் ஒரு உணர்ச்சிகரமான பெண் என்பதையும் தனது எஜமானனைக் கண்டால் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதையும் அறிந்தார் பெண்டர்.

 

1967 டிசம்பர் மற்றும் 1968 ஜனவரியில் இந்த அமானுஷ்ய செயல்கள் தீவிரமாக அதிகரித்தன. சுவரில் தொங்கும் காலண்டரின் பக்கங்கள் தாமாக டர்ரென்று கிழிந்து விழுந்தன! சுவரிலே தொங்கும் வண்ண ஓவியங்கள் தாமாகவே திரும்பிக் கொண்டன. 400 பவுண்டு எடையுள்ள ஓக் மரத்திலான ஒரு அலமாரி – சாதாரணமாக யாராலும் அசைக்கக் கூட முடியாதது –  சில அடிகள் தானாகவே நகர்ந்தது. ஆனால் கீழே பொருத்தப்பட்டிருந்த லினோலியம் சேதமடையாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது. மேஜை டிராயர்கள் தாமாகவே திறந்து கொண்டன. பின்னர் டப்பென்று சத்தத்துடன் மூடிக் கொண்டன!

 

இதெயெல்லாம் படமாகவும் பிடித்தார் பெண்டர். அன்னி மேரி அந்த வேலையிலிருந்து நின்றவுடன் அனைத்து அமானுஷ்ய செயல்களும் நின்றன!

 

தான் சேகரித்த ஏராளமான ஆவணங்கள் மூலமாக இந்த அமானுஷ்ய செயல்கள் அனைத்தும் மர்மமான ஒரு ஆவியின் வேலை தான் என்று பெண்டர் கூறினார்.  அன்னி மேரியின் வெறுப்பும் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் அவர் இருக்கும் போது அவர் மூலமாக இந்த சக்திகள் தூண்டப்பட்டன என்றும் அவர் கூறினார்.

 

இந்த கேஸைப் போல அறிவியல் ரீதியிலான ஆவணங்களுடன் கூடிய கேஸ் வேறொன்றும் இல்லை என்ற புகழுடன் படமாக பிடிக்கப்பட்ட கேஸும் இது தான் என்பதும் ஹான்ஸ் பெண்டருக்கு புகழை அள்ளித் தந்தது. 84 வயது வரை வாழ்ந்த பெண்டர் தன் வாழ்நாள் இறுதி வரை இந்த பேய் ஆராய்ச்சியை விடவில்லை!

IMG_3431

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

ஆங்கிலேய பிரபுக்கள் பலர் கூடியிருந்த கூட்டம் ஒன்றில் ஒரு விஷயத்தின் மீது அலர்ஜியாக கடும் வெறுப்பைக் கொண்டிருக்க முடியுமா என்பதைப் பற்றிய பேச்சு வந்தது. இயற்பில விஞ்ஞானியான ஜிம்மர்மேன் (Zimmermann)  அப்படி இருப்பது ஒரு வகையான வியாதி என்று கூறினார். அங்கிருந்த பார்படோஸ் என்ற நகரின் கவர்னரின் மகனான வில்லியம் மாத்யூஸ் அப்படிப்பட்ட ஒரு வியாதி கொண்டிருப்பவர். அவருக்கு சிலந்தி என்றாலே அலர்ஜி. ஜிம்மர்மேன் அதைச் சுட்டிக் காட்டிய போது அனைவரும் சிரித்தனர. அதெல்லாம் ஒரு வியாதியே கிடையாது என்றனர். உடனே அதை நிரூபித்துக் காட்ட விஞ்ஞானி விழைந்தார். மனதில் எழும் இந்த வெறுப்பை ஒரு இயந்திர விளைவால் நிரூபிக்க முடியும் என்பது அவர் முடிவு.

அங்கிருந்தவர்களில் ஒருவரான லார்ட் ஜான் மர்ரே என்பவரை கறுப்பு நிற மெழுகில் ஒரு சிலந்தியைச் செய்யச் செய்தார். அந்தச் சிலந்தியை அனைவரும் பார்க்கும் படி செய்து விட்டு அவர் வெளியே சென்றார்.

 

பின்னர் திரும்பி வருகையில் தன் கையில் மெழுகிலான சிலந்தியை வைத்துக் கொண்டு கையை மூடியவாறே உள்ளே நுழைந்தார்.

 

அவரது மூடிய கையைப் பார்த்தவுடன் வில்லியம் மாத்யூஸின் கண்கள் சிவந்தன. நரம்புகள் புடைத்தன. மிகுந்த கோபத்துடன் ஆவேசமாக தன் இடையிலிருந்த கத்தியை உருவினார். அந்த சிலந்தியை அவர் கொண்டு வருவதாக எண்ணிய மாத்யூஸ்  மர்ரே மீது பாயப் போனார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அனைவரும் அவர் மீது பாய்ந்து கத்தியைப் பிடுங்கினர்.

 

மாத்யூஸிடம் அவர் பார்த்தது மெழுகிலான ஒரு பொம்மை சிலந்தி தான் என்பதையும் மேஜை மீது வைக்கப்பட்ட சிலந்தியை அவரே தொட்டுப் பார்க்கலாம் என்றும் அனைவரும் கூறினர்.

வேகமாகத் துடித்த அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீரானது. சுயநிலைக்கு அவர் மெதுவாகத் திரும்பினார். ஆனால் சிலந்தியைத் தொட மறுத்து விட்டார்.சிலர் இன்னும் கொஞ்சம் மெழுகை எடுத்து அவர் முன்னாலேயே சிலந்தியைச் செய்து காட்டினர்.

 

இது போல அவரும் பொம்மையினால் சிலந்தியைச் சிறிது சிறிதாச் செய்து பார்த்து பின்னர் நிஜ சிலந்தியைப் பார்த்தால் அவரது அருவருப்பு போய் விடும் என்று ஜிம்மர்மேன் ஆலோசனை கூறினார்.

நமது ஊரில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அருவறுப்பு அடையாத பெண்கள் உண்டா என்ன?

******

 

 

 

ஔவையாரை மிரட்டிய பேய் !

ghost4

By London Swaminathan; Post No. 751 dated 19th December 2013.

தமிழ் உலகம் அறிந்த மூதாட்டி ஔவை. சங்க காலம் முதல் 16, 17 ஆம் நூற்றாண்டு வரை பல ஔவையார்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தது அவர்களின் மொழி நடையிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். பேயால் மிரட்டப்பட்ட ஔவைப் பாட்டி சமீப காலத்தில் வாழ்ந்த புலவர் என்பது அவரது பாடல்களில் தெரிகிறது. ஒருவேளை அவர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பிற்காலப் புலவர்கள் ஔவையாரின் பெயரில் எழுதியிருந்தாலும் வியப்பதற்கில்லை.

எது எவ்வாறாகிலும் ‘நெருப்பு இல்லாமல் புகையாது’, ஏதோ ஒரு ஔவையார் பேயைக் கண்டதால்தான் இந்தக் கதை இன்றுவரை நீடிக்கிறது. மேலும் ஔவை என்று சொன்னவுடன் தமிழ் மொழிப்பற்றும், தெய்வ பக்தியும் பளிச்சென மின்னுவதையும் காண்கிறோம். ஏற்கனவே சிந்து சமவெளியில் சில முத்திரைகளில் பேய் இருப்பதையும், நீலி என்ற பெண்பேய் 72 தமிழர்களைக் கொன்றதையும், விவேகானந்தர், பேய்கள் பற்றி சொன்னதையும் தனித் தனியே எழுதிவிட்டேன். இதே பிளாக்—கில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இதோ மற்றும் ஒரு சுவையான உண்மைக் கதை:

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குப் பிறந்த பிள்ளையோ மஹா மூடன். எவ்வளவோ வாத்தியார்கள் வந்தும் அவனுக்கு அரிச்சுவடி கூட கற்பிக்க முடியவில்லை ஆனால் உடல்வாகில் ஆண் அழகன். மனம் உடைந்த ராஜா, இவனிடம் அரசாட்சி போய்விடக்கூடாது என்று கருதி அவனை நாடு கடத்தினார்.

பக்கத்து நாட்டுக்குப் போன ராஜ குமாரன், தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த நாட்டு இளவரசி ‘தமிழறியும் பெருமாள் ஏலவார்குழலி’ உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்தபோது இந்த இளவரசன்- ஆண் அழகனைக் கண்டு காதல் வசப்பட்டாள். ஒரு ஓலையில் காதல் கடிதம் எழுதி அதை அவனிடம் சேர்ப்பிக்க தோழியை அனுப்பினாள். கடிதம் மூலம் இரவில் ஊரின் வடக்குப் புற சத்திரத்துக்கு வரும்படி அழைத்தாள்.

ghost-3

எழுதறிவில்லாத அந்த இளவரசன் ரோட்டில் பிச்சை எடுதுக் கொண்டிருந்த குஷ்டரோஹி ஒருவனிடம் ஓலையைக் காண்பித்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். சரியான ஏமாளி என்பதை உணர்ந்து, அந்தக் கடித வாசகத்தை மாற்றிச் சொன்னான். அந்த இளவரசன் ஒரு குற்றவாளி என்று ராஜா கருதுவதால் அவன் உயிர்பிழைக்க உடனே தலைநகரை விட்டு வேறிடத்துக்குப் போகவேண்டும் என்று கடித ஓலையில் இருப்பதாகப் பொய் சொன்னான்.

இளவரசன் ஓலையை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குஷ்டரோஹி அன்று இரவில் சத்திரத்துக்குச் சென்று இருட்டில் காத்திருந்தான். ராஜகுமாரி வந்தவுடன் அவளுடன் காதல் மொழி பேசிக் கட்டித் தழுவி இரவைக் கழித்தான். பொழுது புலர்ந்தது. உண்மையை அறிந்த ராஜகுமாரி மனம் உடைந்து அங்கேயே தற்கொலை செய்துகொண்டாள்.

இதற்குள் ராஜகுமாரன், வேறு ஒருவனிடம் ஓலையைக் காண்பிக்க, அவன உண்மையைக் கூறினான். இளவரசன் ஓடோடி சத்திரத்துக்கு வந்தான். ராஜகுமாரி சடலத்தைக் கண்டு அவனும் தற்கொலை செய்துகொண்டான். இருவரும் இளமையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதால் பேயாகி சத்திரத்தில் அலைந்தார்கள். வருவோர் போவோருக்கு எல்லாம் தொல்லையும் கொடுத்தார்கள்.

ஒருநாள் நமது தமிழ் மூதாட்டி ஔவையாரும் அந்தப் பக்கம் வந்து சத்திரத்தில் இரவில் ஓய்வெடுக்கப் போனார். அதைப் பார்த்த பொது மக்கள் அங்கே அலையும் பேய்களின் சேட்டைகளை எடுத்துரைத்தனர். அவரோ ‘என்னை ஒரு பேயும் ஒன்றும் செய்யமுடியாது’ என்று துணிச்சலாக பாயை விரித்துப் படுத்தார்.

முதல் ஜாம முடிவில் ஒரு பெண் பேய் அலறிக்கொண்டு வந்தது. ஔவையாரை ‘எற்று எற்று’ என்று சொல்லிக்கொண்டு எற்ற வந்தது. ஔவையார் ஒரு வெண்பாப் பாடலைப் பாடியவுடன் அது ஓட்டம் பிடித்தது.
Ghosts-spirits2

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப்—பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை என்பது முதல் பாட்டின் பொருள்.

மீண்டும் இரண்டாம் ஜாம முடிவில் இதே போல நடந்தது. ஔவையார் மீண்டும் ஒரு வெண்பா ஆயுதத்தைப் பிரயோகித்தார். பெண் பேய் ஒட்டம் பிடித்தது.

கருங்குளவி சூளுரைத்து ஈச்சங்கனி போல்
வருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே
இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

விஷக் குளவி வசிக்கும் ஈச்ச மரம் யார்க்கும் உதவாதது போல, வருந்தியவர்களுக்கு தானம் செய்யாதவன் வைத்திருக்கும் பொருள், இறுதியில் சுற்றத்தார்க்குப் போய்ச் சேரும். அத்தகைய கருமிகளை எட்டி உதை என்பது இரண்டாம் பாட்டின் பொருள்.

மூன்றாம் ஜாம முடிவிலும் இதே கதை. மேலும் ஒரு வெண்பா குண்டு!! பேய் ஓட்டம்!!

வானம் உளதால் மழையுளதால் மண்ணூலகில்
தானம் உளதால் தயை உளதால்—ஆனபொழுது
எய்த்தோம் இளைத்தோம் என்றே ஏமாந்திருப்பாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வானமும் தானமும், மழையும் இவ்வுலகில் உண்டு. இதனை எண்ணி சோம்பித் திரிவாரை எத்தி உதை என்பது மூன்றாம் பாட்டின் பொருள்.

நான்காம் ஜாம முடிவிலும் மேலும் ஒரு வெண்பாவை வீசவே பேய் அவர் காலில் விழுந்து விமோசனம் வேண்டவே, அடுத்த ஜன்மத்தில் நீ புலவனாகப் போவாய் என்று வாழ்த்தினார்.

எண்ணாயிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையே போல் – பெண்ணாவாள்
பொற்றொடி மாதர் புணர்முலை மேல் சேராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

எட்டாயிரம் ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரப்பசையே ஏறாத நெட்டிமரம் போல சிலர் உள்ளனர். மாதர் இன்பம் என்பதையே அனுபவியாத அத்தகைய மரக்கட்டை போன்றோரை போய் எத்தி உதை என்று சொல்லவே, பேய் ஔவையார் காலில் விழுந்தது.
ghost 1

பேய்கள் எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
2.சிந்து சமவெளியில் பேய் முத்திரை
3.வள்ளுவன் சொன்ன பேய்க்கதை
4.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

எனது பிளாக்—கில் ஆங்கிலத்திலும் இக்கட்டுரைகள் கிடைக்கும்.
தொடர்பு முகவரி swami_48@yahoo.com

தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!

ghost

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி நிறையவே செய்திகள் உள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயம் எப்படி இருக்க முடியுமோ அப்படித்தான் தமிழ் சமுதாயமும் இருந்ததது. கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை வேறுவதற்கு முன்னால் மறக்காமல் தனது மதக் காணிக்கையைச் செலுத்தும்படி உயிர்த் தோழனிடம் வேண்டிக்கொண்டார். ஒரு கோழி அடித்துக் கும்பிட அனுப்பினார் ஆருயிர்த் தோழனை!! சாக்ரடீஸ் பெயரில் அதிக அன்பு பூண்ட நமது பகுத்தறிவுகளும் திராவிடங்களும் கவனிக்க வேண்டிய விஷயம் இது!

 

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெருமளவு நேரத்தைச் செலவிட்டு செய்திகளைச் சேகரித்து எனது ஆரய்ச்சியையும் சேர்த்து வெளியிடும் கட்டுரைகளை வேறு இடத்தில் பயன் படுத்துவோர் எனது பெயரையும் சேர்த்துப் போட்டால் தமிழ் மொழி வளரும். தமிழ்த்தாய் உங்களை நெஞ்சார வாழ்த்துவாள்.))

 

**1.பேய்க்குப் பலியிடுதல்—

’பெருங் களிற்று யானையொடு அருங்கலம் தராஅர்

மெய்பனி கூரா அணங்கெனப் பராவலின்

பலிகொண்டு பெயரும் பாசம் போலத்’’–(பதிற்று.71-23);

பொருள்: தனக்கிடும் பலியினை ஏற்றுக்கொண்டு பலியிட்டவரின் உயிரைக் கவராது செல்லும் பேய் போல, நீயும் நினக்கிடும் திறையைப் பெற்றுக்கொண்டு பகைவரின் உயிரைக் கவராது செல்கிறாய். (பாசம்=பேய்)

 

 

**2.சுடுகாட்டில் கண்ணுக்குத் தெரியாத பேய்கள் உலவியதாக நம்பினர்:

வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்

பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு (புறம்.238)

நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களை உண்டன: (புறம்.373)

பிணம் தின்னும் பேய்கள்: (புறம்.369) பதிற்று.67

 

ghost 2

**3.போர்க்களத்தின் நடுவே சில பேய்கள் ஆட, அதனைக் காணும் பொருட்டுப் பல பேய்கள் ஆங்கே நிறைந்திருக்கும்– பதிற்று.35

 

**4. பேய் மகள்— (சிறுபாண்.196-197)

எரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக், கருமறிக்காதிற் கவையடிப் பேய்மக, ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப், பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா, ளண்ணல் யானை

பொருள்: மேல் நோக்கி எரிகின்ற நெருப்புச் சாய்ந்தாலொத்த நாவினையும், வெள்யாட்டுமறிகளை அணிந்த காதினையும், கவைத்த அடியினுமுடைய பேய்மகள்

 

**5.பேய் மகளிர்— (மதுரை.25-28, 162-163)

பலியை பேய் ஏற்றல்— மதுரை.க்க்காஞ்சி & மணி. 7-84

னிணம்வாய்ப்பெய்த பேய்மளி

ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்

பொருள்: பிணங்களையுடைய கொம்புகளையுடையனவாய்ப் பட்ட ஆனையினுடைய திரளின் நிணத்தைத்தின்ற பேய்மகளிருடைய துணங்கை

பொருள் : வரிகள் 161-163: சான்றோர் இருந்த பெரிய அம்பலங்களில் இரட்டையான அடிகளையும் கடிய பார்வைகளையும் உடைய பேயாகிய மகளிர் உலவியாட.

 

**6. இறந்த வீரரின் குருதியைத் தலையில் தடவித் தலைவாரும் பேய்: புறம்.62

‘’பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு,

குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,

நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்’’

 

**7. பேய்கள் சவாரி: பேய் மகள் கழுதூர்தல்— பதிற்று.13-15— கழுது என்னும் வகைப்பேய் மீது இன்னொரு பெண் பேய் சவாரி செய்யும்—பேயின் தலை முடி பிளவு பட்டிருக்கும்—தலை விரித்தாடும் பேய்கள்

கவைத் தலை பேய்மகள் கழுதூர்ந்து இயங்க

ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை

 

ghost_council_of_orzhova_by_velinov-d5moyq4

**8.கொல்லன் பட்டறையில்/தெருவில் ஊசி விற்றது போல என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு (To carry coals to Newcastle). இதற்கு இணையாக பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்று ஒரு பழமொழியும் உண்டு. அதாவது எல்லாம் தெரிந்த காட்டில் இருக்கும் தெய்வமான கொற்றவைக்கு பேய் என்ன சொல்லிக் கொடுக்க முடியும்? இந்த பேய் பற்றிய பழமொழியை கலித்தொகையில் காணலாம்.

பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.86-8)

**9. சங்க இலக்கிய கலைக்களஞ்சியம் புறநானூறு. பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நூல். இதில் பேய் பற்றி 62-4, 238-4, 356-3, 359-4, 369-15, 370-25, 371-26 பாடல்களில் வருகிறது.

 

**10.சங்க இலக்கிய காலத்துக்குப் பின் வந்த மணிமேகலையில் ஆறு வகை உயிரினங்களில் ஒன்றாக பேயும் கூறப்படுகிறது.

 

**11. நற்றிணையில் பேய்கள்: போரில் பெரும் புண்ணுற்று இறவாது கிடப்போரை நரி முதலியன தீண்டாவண்ணம் பேய் காத்து நிற்றலாகிய  புறப்பொருட் கருத்தும் நற்றிணை உவமையில் வைதுக் கூறப்பட்டுள்ளது.

நள்ளிரவில் பேய்கள் உலாவும் என்ற தமிழர் நம்பிக்கையை பாடல்கள்  319, 255 ல் படிக்கலாம்:

கழுதுகால் கிளர ஊர்மடிந்தற்றே (255)

அணங்கு கால் கிளறும் (319)

கழுது, அணங்கு=பேய்

 

 

**12.நள்ளிரவில் பேய்கூடத் தூங்கும் என்ற கருத்து பிற்காகால இலக்கியமான திருவிளையாடல் புராணத்திலும் நளவெண்பாவில் வருகிறது.

அணங்கு என்பதை பேய் என்பதைவிட மரம், நீர்நிலைகள், மலை ஆகியவற்றில் உறையும் பெண் தேவதை (யக்ஷி) என்றே சொல்லவேண்டும்.

 

**13.Ghost , Ghoul என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்களுக்கு மிகவும் நெருங்கியவை. கூளி= ஆங்கிலம் Ghoul , கழுது= ஆங்கிலம் Ghost

 

**13. ஐயவி என்னும் வெண் கடுகை புகைத்தால் பேய் முதலிய தீய சக்திகள் நெருங்கா என்ற கருத்து நாடு முழுதும் இருந்ததை அறிகிறோம் ( ஐயவி புகைத்தல் புறம் 98-15, 281-4, 296-2,342-9.இந்தக் கருத்து நாட்டின் வடபகுதியிலும் நிலவியது.

 

**14.என் அம்மா சொன்ன பேய்: சிறு வயதில் என் அம்மா என் எழுத்தைப் பார்த்துவிட்டு, ‘’ இப்படி பேச்சக்காலும் பேச்சக்கையுமா எழுதாத. வாத்தியார் மார்க் போடமாட்டார் என்று சொல்லுவார். இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது. காரைக்கால் அம்மையார் (பேயார்) பதிகங்களைப் படித்த பின்னர்தான், அவர் பேய் பற்றி வருணித்தவைகலைப் படித்தபின்னர் தான், இதற்கு அர்த்தம் புரிந்தது.

பேய்ச்சியின் கால் போலும், பேய்ச்சியின் கை போலும், கோரமாக எழுதாதே, அழகாக எழுது என்பதே உதன் பொருள்.

 

**15.கலிங்கத்துப் பரணி, கந்தசஷ்டிக் கவசத்திலும் பேய்கள் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றின் விளக்க உரையில் காண்க.

ghosts1

**16.இறந்த உறவினரின் ஆவிகள் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததாகவும் ஒரு முறை கோவிலில் கடுமையான பிரார்த்தனை செய்தபின்னர் அவை வரவே இல்லை என்றும் சுவாமி விவேகநந்தர் அவரது சம்பாஷணைகள் புத்தகத்தில் கூறியுள்ளார்.

 

**17.பரணர் பாடிய பேய்கள்:

பரணர் என்னும் சங்கப் புலவர் பாடிய பாடல்களில், ‘’பேய்கள் பிணம் தின்னும்’’, ‘’நடு இரவில் இயங்கும்’’, ‘’பலி கொடுத்தால் பணி செய்யும்’’, ‘’பேய்மகள் பற்றிய பிணம்’’ ‘,’கழுது வழங்கு யாமம்’’, ‘’ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்’’ என்ற கருத்துக்கள் வருவதையும் காண்க.

பரணர் சொல்லும் மிஞிலி கதையிலும் பேய் வருகிறது. ஆய் எயினனுக்கும் மிஞிலிக்கும் மோதல் மூண்டது. எயினனோடு நடக்கும் போரில் எனக்கு வெற்றி தேடித் தருவையின் நினக்கு பெரும்பலி தருவேன் எனப் பாழி நகர்ப் பேயைப் பரவிப் போர்க்களம் புகுந்தான். மிஞிலி  வென்றான் என்ற செய்தியைப் பரணர் பாடுகிறார்.

 

திருக்குறளில் பேய்கள்

திருக்குறளிலும் பேய்கள் உண்டு. ஏற்கனவே திருவள்ளுவரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’ கதையை எழுதியுள்ளேன்.

 

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து (565)

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (650)

அலகை=பேய்

 

Please read the following articles in English or Tamil: நான் முன்னர் எழுதி வெளியிட்ட பேய்க் கட்டுரைகளையும் படிக்கவும்:

1.வள்ளுவர் சொன்ன பேய்க்கதை 2). தமிழ்நாட்டை உலுக்கிய பேய்  3.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி 4.Indus Seals: Gods or Ghosts? 5..சிந்து சமவெளியில் பேய் முத்திரை 6. Tamil Ghost that killed 72 people 7.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 8.டெல்பி ஆரூடமும் குறிசொல்வோரும்

 

உதவிய நூல்கள்: 1.பரணர்—கா.கோவிந்தன் 2.தமிழர் நாகரீகமும் பண்பாடும் –ஆ.தட்சிணாமூர்த்தி 3.தமிழ் சொற்றொடர் அகராதி —வீ.ஜே.செல்வராசு 4.சங்க இலக்கியம் 5.திருக்குறள்

swami_48@yahoo.com