ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512)

IMG_2594

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2512

 

Time uploaded in London :– 4-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2597

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் – சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் – கடலோரமாகப் பொங்கும் நீரூற்று இருக்கிறது. இந்த ஊருக்கு கியாம என்று பெயர். இது ஒரு இயற்கை அதிசயம். கடலோரத்தில் குகைகள் இருந்து, அதன் ஒரு வாய் கடலிலும், மற்றொரு வாய் (திறப்பு) நிலத்திலும் இருக்கையில் இதுபோன்ற இயற்கை அதிசயம் உருவாகும் இதை BLOW HOLE என்பர்.

 

கடலின் அலை வீச்சு, காற்றோட்டம் முதலியவற்றைப் பொறுத்து சில நேரங்களில் 60 அடி உயரத்துக்கு வானில் நீர்த்திவலைகள் பீச்சி அடிக்கும். நாங்கள் சென்றபோது சுமார் 20 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் பொங்கியது. இது காணக் கண் கொள்ளாத காட்சி. அருகில் நின்றால், நம் மீது நீர்த்திவலைகள் பட்டு நம்மை நனைத்துவிடும். இதை இரவு நேரத்தில் வண்ண ஒலியில் காண மின் விளக்குகளும் போட்டிருக்கிறார்கள். அருகில் ஒரு அழகான கலங்கரை விளக்கு உள்ளது. ஆண்டுக்கு ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த இடத்தில் அழகான கடற்கரை, படகு சவாரி ஆகியனவும் உண்டு. தொலைதூர பாரைகளில் கடற்பறவைகள் அணிவகுத்து நிற்பதையும் கண்டு களிக்கலாம்.

IMG_2600

 

IMG_2595

 

IMG_9229

 

IMG_3099

 

IMG_2604

 

IMG_9224

(படங்கள்:- லண்டன் சுவாமிநாதன்)