வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு, சிவப்பு! (Post No.4063)

Written by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 22-29
Post No. 4063

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர். பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Image of Varuna (sea)

வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

 

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

 

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.

 

ஆண் முதலில் தோன்றினானா? பெண் முதலில் தோன்றினாளா? என்ற கேள்விக்கு விடை காண முடியாது; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண ஜோடி.

 

என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும்.

Image of Mitra (sun)

பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்:-

 

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;

உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்

கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி

உருவம் எரி கார்மேனி ஒன்று

 

நாமம்/பெயர்– சிவன், நாராயணன்

 

வாகனம் – ரிஷபம், கருடன்

நூல்கள் – ஆகமம், வேதம்

வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்)

தொழில்/கருமம் – அழித்தல், காத்தல்

ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம்

உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு

ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம் மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

 

விஞ்ஞான உண்மைகளை நாம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் அவை என்றும் இருக்கும் அழியாது— நியூடனும் ஐன்ஸ்டைனும் இல்லாவிட்டாலும் அந்த உண்மைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். வேதகால ரிஷிகள் தன் அருட் பார்வையால் மித்ர– வருணனை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் கண்டுபிடிக்காவிடிலும் வேத உண்மைகள் வானில் முழங்கிக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் வேதங்கள் சத்திய மானவை; நித்தியமானவை.

 

—சுபம்–

 

31 பொய்கை ஆழ்வார் பொன்மொழிகள் (Post No.4037)

ஜூலை 2017 நற்சிந்தனை காலண்டர்

(ஹேவிளம்பி வருடம் ஆனி- ஆடி)

 

Written by London Swaminathan
Date: 29 June 2017
Time uploaded in London- 21-47
Post No. 4037

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

விழா நாட்கள்:- விவேகாநந்தர் நினைவு தினம்-4; குரு பூர்ணிமா-8;

தட்சிணாயன புண்யகாலம்-17;  ஆடி அமாவாசை-23; ஆடிப் பூரம்-26;

நாக பஞ்சமி- 27

 

அமாவாசை-23; பௌர்ணமி-8; ஏகாதசி- 4, 19.

சுபமுகூர்த்த நாட்கள்- 3, 16

ஜூலை 1 சனிக்கிழமை

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் மாலை

இடர் ஆழி நீங்குகவே

 

ஜூலை 2 ஞாயிற்றுக் கிழமை

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?

ஒன்றும் அதனை உணரேன் நான்

 

ஜூலை 3 திங்கட் கிழமை

பார் அளவும் ஓர் அடிவைத்து, ஓர் அடியும் பார் உடுத்த

நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே

 

ஜூலை 4 செவ்வாய்க் கிழமை

ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த

ஆலம் அமர் கண்டத்து அரன்

ஜூலை 5 புதன் கிழமை

அரன் நாரணன் -நாமம்; ஆன் விடை, புள்- ஊர்தி

உரை-நூல், மறை; உறையும் கோயில் -வரை, நீர்

ஜூலை 6 வியாழக் கிழமை

கரு அரங்கத்துள் கிடந்து கை தொழுதேன், கண்டேன்

திருவரங்கம் மேயான் திசை

 

ஜூலை 7  வெள்ளிக் கிழமை

திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம் – அசைவு இல் சீர்க் கண்ணன்

 

 

ஜூலை 8 சனிக்கிழமை

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்

விண்ணும் விழுங்கியது மெய் என்பர்- உலகு அளவும் உண்டோ உன் வாய்?

 

 

ஜூலை 9 ஞாயிற்றுக் கிழமை

வாய் அவனை அல்லது வாழ்த்தாது; கை உலகம்

தாயவனை அல்லது தாம் தொழா;

 

ஜூலை 10 திங்கட் கிழமை

அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி

இவர் இவர் எம்பெருமான் என்று சுவர்மிசைச்

சார்த்தியும் வைத்தும் தொழுவர்

 

ஜூலை 11 செவ்வாய்க் கிழமை

முதல் ஆவார் மூவரே; அம்மூவருள்ளும்

முதல் ஆவான் மூரி நீர் வண்ணன்

ஜூலை 12 புதன் கிழமை

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி

அழுதேன்; அரவணைமேல் கண்டு தொழுதேன்

 

ஜூலை 13 வியாழக் கிழமை

வடி உகிரால்

ஈர்ந்தான் இரணியனது ஆகம்

 

ஜூலை 14  வெள்ளிக் கிழமை

தாமரை மலர்ச் சேவடியை வானவர் கைகூப்பி

நிரைமலர் கொண்டு ஏத்துவரால் நின்று

 

ஜூலை 15 சனிக்கிழமை

படை ஆழி; புள் ஊர்தி; பாம்பு- அணையான் பாதம்

அடை; ஆழி நெஞ்சே, அறி

ஜூலை 16 ஞாயிற்றுக் கிழமை

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு, ஆய்ச்சி

உரலோடு உறப் பிணித்த நான்று, குரல் ஓவாது ஏங்கி

 

ஜூலை 17 திங்கட் கிழமை

தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே- வானோர்

மனச் சுடரைத் தூண்டும் மலை

 

ஜூலை 18 செவ்வாய்க் கிழமை

 

மலையால் குடை கவிழ்த்து, மா வாய் பிளந்து

சிலையால் மராமரம் ஏழ் செற்று, கொலையானை

போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்

 

ஜூலை 19 புதன் கிழமை

ஆறிய அன்பு இல அடியார் தம் ஆர்வத்தால்

கூறிய குற்றமாக் கொள்ளல் நீ

 

ஜூலை 20 வியாழக் கிழமை

இரணியனைப் புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால்

நீ மண் இரந்து கொண்ட வகை

ஜூலை 21  வெள்ளிக் கிழமை

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே – வெண் சங்கம்

ஊதிய வாய் மால் உகந்த ஊர்

 

ஜூலை 22 சனிக்கிழமை

மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே – மேல் அசுரர்

கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று

 

ஜூலை 23 ஞாயிற்றுக் கிழமை

புறன் உரையே ஆயினும், பொன் ஆழிக் கையான்

திறன் உரையே சிந்தித்திரு

 

ஜூலை 24 திங்கட் கிழமை

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்

திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்?

 

ஜூலை 25 செவ்வாய்க் கிழமை

மன மாசு தீரும்; அரு வினையும் சாரா;

தனம் ஆய தானே கைகூடும்

 

ஜூலை 26 புதன் கிழமை

 

தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம்தானே

தமர் உகந்தது எப் பேர், மற்று அப்பேர்

ஜூலை 27 வியாழக் கிழமை

 

மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை

பாதம் – அத்தால் எண்ணினான் பண்பு

 

ஜூலை 28  வெள்ளிக் கிழமை

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்

சேரி திரியாமல் செந்நிறீஇ, கூரிய

மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே

 

ஜூலை 29 சனிக்கிழமை

சுழல் ஒன்று எடுத்து, ஒரு கை சுற்றி, ஓர் கைமேல்

சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்

செரு ஆ ழி ஏந்தினான்

 

ஜூலை 30 ஞாயிற்றுக் கிழமை

எண்மர், பதினொருவர், ஈர் அறுவர், ஓர் இருவர்

வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி

 

ஜூலை 31 திங்கட் கிழமை

சென்றால் குடை ஆம்; இருந்தால் சிங்காசனம் ஆம்

நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் புணையாம் (ஆதிசேடன்)

 

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; வியவேன்.

 

—Subham–