அழுக்காறு என ஒரு  பாவி – அதர்வண வேதமும் வள்ளுவனும் (Post 10,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,408

Date uploaded in London – –   4 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!

வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்

அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண  வேதத்துக்குள் நுழைவோம்.

வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

XXXX

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்

மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION  ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.

அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே  இல்லை.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்து மத அறிஞர்கள்  மகாநாடு கூட்டி மந்திரங்களை தலைப்பு/ விஷயம்/ சப்ஜெக்ட்/ டாபிக் வாரியாக பகுத்து ஆராய்ந்தால் மிக நல்ல விஷயங்கள் கிடைக்கும்.

TWO STORIES ON JEALOUSY

வள்ளுவன் கதை: அழுக்காறு என ஒரு பாவி (Post No …

https://tamilandvedas.com › வள்…

15 Feb 2018 — அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்துவிடும் – குறள் 168.

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும் – Tamil …

https://tamilandvedas.com › எனக்…

5 Sept 2015 — ஒரு வேண்டுகோள்: எனது கட்டுரைகளை உடனே “ரீபிளாக்: – செய்யாதீர்கள்.

–SUBHAM—

TAGS-  அதர்வண வேதம் , நிம்பிரி, பொறாமை, அழுக்காறு, அவ்வியம் , பாவி, மூ தேவி

படித்தவனுக்கு பொறாமை, பணக்காரனுக்கு அகந்தை- பர்த்ருஹரி வருத்தம் (Post No.5436)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 September 2018

 

Time uploaded in London – 10-56 am (British Summer Time)

 

Post No. 5436

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பர்த்ருஹரி நீதி சதகம்- 2

 

இந்தப்பகுதியில் நீதி சதகம் பாடல் 2, 3 ஆகியவைகளை பிற நூல்களுடன் ஒப்பிடுவோம்.

 

बोद्धारो मत्सरग्रस्ताः
प्रभवः स्मयदूषिताः ।
अबोधोपहताः चान्ये
जीर्णम् अङ्गे सुभाषितम् ॥ 1.2 ॥

 

போத்தாரோ மத்சரக்ரஸ்தாஹா ப்ரபவஹ ஸ்மயதூஷிதாஹா

அபோதோபஹதாஸ்சான்யே ஜீர்ணமங்கே சுபாஷிதம்- 1-2

 

படித்தவர்களுக்கோ பொறாமை அதிகம்;

 

பணக்காரர்களோ அகந்தை  மிக்கவர்கள்;

ஆகையால் என் பொன்மொழிகள் பலமிழந்து விட்டன.

படித்தவர்களுக்கு கர்வமும் பொறாமையும் அதிகம்.

இதனால்தான் வள்ளுவர் சொன்னார்,

 

கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 130

 

கடும் சினத்தை விடுத்து, கற்பன கற்று அதற்குத் தக்க அடக்கமும் உடையவனை, அடைவதற்கு தரும தேவதை காத்திருப்பாளாம். அதாவது அவன் வழியில் நின்று கொண்டு காத்திருப்பாள் என்கிறார்.

 

‘வித்யா விநயன்ன சம்பதே’ என்று ஸம்ஸ்க்ருத்தில் சொல்லுவர். படித்தவர்களுக்கு அகந்தை வந்து விடும் என்பதால்தான் இதைச் சொல்லுகின்றனர்.

 

வள்ளுவர் வாழ்விலேயே இது நடந்தது. அவர் மீது பொறாமை கொண்டோர் அவருடைய திருக்குறளை ஏற்காமல் வாதாடியபோது சங்கப் பலகையானது பொறாமை கொண்ட புலவர் அத்தனை பேரையும் வெளியே தள்ளியது.

வில்லிப்புத்தூரார்க்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் வில்லிபுத்தூரார் தோற்றதை நாம் அறிவோம். அகந்தையாலும் பொறாமையாலும், போகும் வரும் புலவரை எல்லாம் வாதுக்கு அழைத்து அவர்கள் தோற்றுவிட்டதால் கையில் வைத்துள்ள குறடால் எதிரியின் காதுகளை அறுப்பது வில்லிப்புத்தூரார் வழக்கம். அருணகிரி நாதரிடமும் வாலாட்ட முயன்றபோது, அவருடைய கந்தரந்தாதிக்குப் பொருள் தெரியாமல் விழிக்கவே வில்லிப்புத்தூராரின் காதை அருணகிரி நாதர் அறுத்தார்.

 

இதே போல வட நாட்டிலும் பண்டி என்ற புலவர் செய்தார். மஹாபாரதத்தில் வன பர்வத்தில் ஒரு சம்பவம் உள்ளது. ஜனகரின் அவையிலிருந்த பண்டி என்ற புலவர் வாதத்தில் தோற்ற பிராஹ்மணர்களை எல்லாம் நதியில்  தூக்கி எறிந்தார். கஹோதர் என்பவருக்கும் இந்த கதி ஏற்பட்டது. அவருடைய புதல்வன் அஷ்டாவக்ரர் வந்து, பண்டியை வாதத்தில் தோற்கடித்து நதியில் வீசி எறிந்தார். படித்தவர்களின் பொறாமை பற்றி நமது நூல்களில் இது போலப் பல கதைகள் உண்டு.

 

பணக்காரர்களின் அகந்தை பற்றி பல கதைகள் உண்டு.

இதனால்தான் செல்வந்தர்களுக்கு அடக்கம் அவஸியம் என்று வள்ளுவர் மொழிந்தார்.

 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 125

 

பணிவும், அடக்கமும் எல்லோருக்கும் இருக்க வேண்டும்தான்; ஆயினும் பணம் படைத்தவர்கள் அகந்தையின்றி இருந்தால், அவருக்குக் கூடுதல் செல்வம் வந்தது போல ஆகும் என்பார் வள்ளுவர்.

 

xxxx

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  சொல்கிறார்:-

 

பணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.

ஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்க்த் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.

 

படகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,

‘என்ன, ஸ்வாமி, சௌக்கியமா? ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா? என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேலும் சொல்கிறார்:-

 

பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் நல்ல உண்மையான மனிதன். பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்

 

ஆக பணத்துக்கு அடிமையானவன் மிருகம்; பணம், ஒருவனுக்கு அடிமையாகிவிட்டால் அவன் நல்ல மனிதன்.

அந்தக் காலத்தில் வேதத்தைக் கற்கச் சென்ற மாணவர்களுக்கு மாடு மேய்த்தல், பிச்சை எடுத்தல்,குருவுக்கு துணி தோய்த்துப் போடல், கொட்டில்களில் உள்ள மாடுகளைக் கவனித்து கொட்டிலை சுத்தமாக வைத்தல், குரு உறங்கும் போது விசிறி வீசல், மிகவும் தஒண்டுக் கிழவனாக குரு இருந்தால் கை, கால் பிடித்து விடல் போன்ற பல செயல் முறைப் பயிற்சிகளால் அடக்கத்தைப் போதித்து, அகந்தையைக் களைந்தெடுத்து, மாணவனைப் பக்குவபடுத்தி கல்வி கற்பித்தது பயனளித்தது என்பதை உபநிஷத்துக்களிலிருந்து அறிகிறோம்.

 

பணமும் பதவியும் வந்த பின்னர் ஆட்டம் போட்ட துருபதன் போன்ற மாணவர்களை மன்னன் ஆனபிறகு, துரோணர் தண்டித்த கதையை நாம் அறிவோம். துரோணரும் துருபதனும் அக்னிவேஷ் என்ற ரிஷியின் மாணவர்கள். படிப்பு முடிந்த பின்னர் துரோணர் ஏழ்மையில் வாடினார். துருபதனோ பஞ்சால நாட்டின் மன்னன் ஆனான். துரோணர் அவனிடம் உதவி நாடிச் சென்ற போது அவரை உதாசீனப் படுத்தினான். அவமானம் தாங்காத துரோணர் வாய்ப்பு கிடைத்த போது அவனுடைய அகந்தைக்குப் பாடம் கற்பித்தார். பஞ்ச பாண்டவர்கள், வில்வித்தை கற்று முடிந்தவுடன் துரோணரிடம் என்ன குருதட்சிணை வேண்டுமென்று கேட்டனர். உடனே துரோணர், தன்னை அவமத்தித்த துருபதனை இழுத்துவரச் சொன்னவுடன் அதை அர்ஜுனன்  செய்து முடித்தான். தோற்றுப்ப்போன துருபதன், பாதி ராஜ்யத்தைத் துரோணருக்கு அளிக்க ஒப்புக் கொண்டவுடன் அவன் விடுதலை ஆனான்.

XXX

 

अज्ञः सुखम् आराध्यः
सुखतरम् आराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं
ब्रह्मापि तं नरं न रञ्जयति ॥ 1.3 ॥

 

 

 

அக்ஞஹ சுகமாராத்ய சுகதரமாராத்யதே விஷேஷக்ஞஹ

ஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி தம் நரம் ந ரஞ்சயதி- 2-3

 

அறியாதவனுக்குச் சொல்லிதருவது எளிது;

புத்திசாலிக்கும் விஷயம் தெரிந்தவனுக்கும் கற்பிப்பது மேலும் எளிது;

கொஞ்சம் படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல உலவுகிறானே அவனுக்கு பிரம்மாவும் கூட சொல்லித் தரமுடியாது; அவனை திருப்தி செய்யவும் முடியாது.

 

An ancient saying from the Middle East says:

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

 

 

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா- என்பது தமிழ்ப் பழமொழி. அதாவது அவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதிடுவர். எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ அதைப் போல அவர்கலைத் திருத்த முடியாது. இதையெல்லாம் கருதிதான் ஒரு அராபிய பழமொழியும் சொல்கிறது.

 

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.

He who knows not, and knows that he knows not, is simple. Teach him.

He who knows, and knows not he knows, is asleep. Wake him.

He who knows, and knows that he knows is wise. Follow him.

 

எவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியவில்லையோ அவன் முட்டாள்; அவனை ஒதுக்கி விடு

 

எவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரிந்திருக்கிறதோ அவன் எளியவன்; அவனுக்கு சொல்லிக்கொடு.

 

எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ ஆனால் அவனுக்கு தான் அறிந்தவன் என்பது தெரியாமல் இருக்கிறானே அவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பு.

 

 

எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ  அவனும் தனக்கு எல்லாம் தெரியும் என்று அறிந்திருக்கிறானோ  அவன் புத்திசாலி; அவனைப் பின்பற்று.

 

 

ஆக முட்டாள்களுக்கு உபதேசம் செய்வது வீண்; அவர்களாக அடிபட்டு, அடிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்

 

–சுபம்–

வள்ளுவன் கதை: அழுக்காறு என ஒரு பாவி (Post No.4747)

Date:15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-12

 

Written by London swaminathan

 

Post No. 4747

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

பொறாமை பற்றிய ஒரு சுவையான கதையைப் படியுங்கள்.

 

வள்ளுவன் பத்து குறட்பாக்களில் அவ்வியம் பற்றிப் பாடுகிறான். பொறாமை எனப்படும் தீய குணத்தினால் செல்வம் அழியும் என்கிறான். அழுக்காறு இல்லாதவனுக்கு அது ஒரு பெரிய வரம் என்கிறான்

 

இதோ சில வரிகள்:

 

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

 

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

 

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 

பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

 

ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி ஜோடி. கணவனுக்கு வேலை இல்லை. குடும்பம் வறுமையில் வாடியது. மனைவியின் நச்சரிப்பு தாங்கவில்லை. திரை கடலோடியும் திரவியம் தேடு என்கிறார்களே. நீங்கள் கடல் தாண்டிக் கூட செல்ல வேண்டாம்; அடுத்த ஊருக்காவது போய் வேலை தேடுங்கள் என்றாள்; அவனும் நச்சரிப்பு தாங்காமல் சரி என்றான்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அவளுக்கு ஏக சந்தோஷம்; அறு சுவை உண்டி சமைத்தாள். பெரிய பித்தளை பாத்திரத்தில் (சம்புடம்) கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தாள். அவனும் வழி நடந்தான். மாலை நெருங்குகையில் களைப்பு மேலிடவே ஒரு மரத்தடியின் கீழ்ப் படுத்தான். அதற்கு முன் உணவு சம்படத்தை ஒரு மரக்கிளையில் கட்டித் தொங்கவிட்டான்.

 

களைப்பில் நன்றாகக் கண் அயர்ந்தான். இவனது அதிர்ஷ்டம் அந்தப் பக்கமாகப் பார்வதி பரமேஸ்வரன் பூமி வலம் வந்தார்கள்.

இவனுடைய உணவுப் பாத்திரத்தில் இருந்து புறப்பட்ட நறுமணம் ஈரேழு உலகங்களையும் வியாபித்து  நின்றது.

பார்வதி: நாதா! வாசனை மூக்கைத் துளைக்கிறது; நாக்கில் ஜலம் ஊறுகிறது. அங்கே படுத்திருப்பவன் சாப்பாட்டைக் கொஞ்சம் ருசிப்போமே என்றாள்.

சிவனும் அப்படியே ஆகட்டும் என்றார். சுவைக்கப்போன இருவரும் முழு உணவையும் சாப்பிட்டு முடித்தனர். மரத்தடியில் தூங்கினவன் எழுந்தால் ஏமாறக்கூடாதென்பதற்காக பித்தளை சம்புடத்தை தங்கமாக மாற்றி நினைத்த போதெல்லாம் உணவளிக்கும் அக்ஷய பாத்திரமாகச் செய்து மரத்தின் கிளையில் தொங்க விட்டனர்.

 

அவன் தூங்கி எழுந்ததபோது பசி  வயிற்றைக் கிள்ளியது.  இலையை விரித்தான்,பாத்திரத்தைத் திறந்தான். ஒன்றுமில்லை. அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பருக்கைகளாவது கிடைக்கட்டும் என்று அதை கவிழ்த்தான். என்ன அற்புதம்? அறு சுவை உணவு இலையில் விழுந்தது சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிராமத்துக்கு ஓடினான். உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து தனது கதைகளை விஸ்தாரமாய்ச் சொல்லி சாப்பாடு போட்டான்.

 

அப்படிச் சாப்பிடவர்களில் அடுத்த வீட்டுக் காரியும் இருந்தாள்; அவளோ பொறாமையின் ஒட்டுமொத்த வடிவம்; அவளும் இரவோடு இரவாகத் திட்டம் போட்டாள். கணவனுக்கு தலையணை மந்திரோபதேசம் செய்து அவனை மறு நாளே அயலூருக்கு அனுப்பிவைத்தாள்; மந்திரோபதேசத்தின் முக்கிய அம்சம்—அடுத்த வீட்டுக்காரன் செய்தது போலவே எல்லாம் செய்யவேண்டும். இவனும் நடைவழிப் பயணத்தின் பாதியில் ஓய்வு எடுத்தான்; மரக்கிளையில் பித்தளைப் பாத்திர உணவைத் தொங்கவிட்டான். கண்ணயர்ந்து எழுந்தபோது சம்படம் மாறி இருந்தது. ஆயினும் இருட்டு நேரம் ஆதலால்     அ ப்படியே வீட்டுக்கு ஓடி வந்த மனைவியிடம் கொடுத்தான்.

 

அவளோ அவசரக்காரி; ஆத்திரக்காரி; பாத்திரத்தில் என்ன இருக்கிறது, என்ன பாத்திரம் என்பதைப் பார்க்காமல் ஊரையே அழைத்தாள் விருந்துக்கு.

உண்மையில் நடந்தது என்ன வென்றால் அவன் உறங்கியபோது பார்வதி பரமேஸ்வரனுக்குப் பதிலாக ஒரு பிரம்ம ராக்ஷஸ் (பேய்) தம்பதியினர் அந்தப் பக்கம் வந்து அவனுடைய அறுசுவைச் சாப்பாடு எல்லாவற்றையூம் சாப்பிட்டுவிட்டு, அவனது தீய எண்ணத்தை உணர்ந்து அந்த பாத்திரத்தில் ஒரு மூக்கறுப்பு கருவியை வைத்துச் சென்றனர்.

 

ஊரே கூடியபோது மனைவி அதைத் திறக்கவே, அதனுள்ளே இருந்த பேய் அவளுடைய மூக்கையும் அருகில் சாப்பிட உட்கார்ந்த எல்லோருடைய மூக்கையும் அறுத்துத் தள்ளியது.

ஆக ‘அழுக்காறு என்னும் பாவி’, அந்த பொறாமைக்கார மனைவியையும் அவளுடன் சேர்ந்தோரையும் தண்டித்தது.

நீதி- அவ்வியம் பேசேல்

 

–சுபம்–